Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

`வானத்தைப் போல, புலன் விசாரணை!' -விஜயகாந்துக்கு ஆளுநர் தமிழிசையின் வித்தியாச வாழ்த்து

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களின் பெயர்களைக் கொண்டு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள, வாழ்த்துச் செய்தியில், ``வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: கோதாவரி - காவிரி நீர்ப்பங்கீடு... தமிழிசையால் தமிழகத்துக்கு வரப்போகும் புதுத் திட்டம்!

மேலும், விஜயகாந்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா கவர்னர் ஆன பிறகு, பாட்டு, கவிதை, ஒரு நிமிடக் கதைகள் என சமூக வலைதளங்களில் அசத்திவரும் தமிழிசை, தற்போது வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/governor-tamilisais-special-greetings-for-vijayakanths-birthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக