Ad

வெள்ளி, 31 மார்ச், 2023

GT v CSK: "எனக்கு 5 பௌலர்களே போதும்!"- தோல்வி குறித்து தோனி சொல்வது என்ன?

16 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி தோற்றது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டிக்குப் பிறகு தோனி பேசியிருக்கிறார்.
Dhoni

"இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். நாங்கள் அதற்கேற்றார் போல இன்னும் 15-20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். ஒரு பேட்டிங் யூனிட்டாக இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அதேநேரத்தில்,

ருத்துராஜ் கெய்க்வாட் அற்புதமாக ஆடியிருந்தார். நல்ல டைமிங்கில் அவர் தேர்வு செய்து ஆடும் ஷாட்களையெல்லாம் பார்க்க அலாதியாக இருக்கிறது.
ருத்துராஜ் கெய்க்வாட்

என்றவரிடம் கமென்ட்டேட்டர் சைமன் டூலி, பந்துவீச்சு சொதப்பல்கள் பற்றிய கேள்விகளை வீசினார். அதற்கு தோனி, "இளம் பந்துவீச்சாளர்கள் தாமாக முன்வந்து பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஹங்கர்கேக்கர் நல்ல வேகத்தில் வீசுகிறார். நாள்கள் செல்ல செல்ல இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன்" என்றார்.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் எக்கச்சக்கமான ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும், பந்துவீச தோனி வெறும் 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தார். சென்னை அணியின் தோல்விக்கு இதுவுமே ஒரு முக்கிய காரணமாக மாறிப்போனது. துஷார் தேஷ்பாண்டேவின் எக்கானமியெல்லாம் 15க்கும் மேல் இருந்தது. அவரிடம் ஒரு ஓவரை கட் செய்திருந்தால் கூட போட்டி இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும். எக்ஸ்ட்ரா பௌலர்களை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்கு, "மொயீன் அலியும் சிவம் துபேவும்தான் எக்ஸ்ட்ரா ஆப்சன்களாக இருந்தனர். இரண்டு இடதுகை ஸ்பின்னர்களே சரியான தேர்வாக இருப்பார்கள் என நினைத்தேன். அதனால்தான் சாண்டனர், ஜடேஜா இருவரும் மட்டும் வீசினார்கள். சிவம் துபேவும் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் கையிலிருந்த பௌலர்களே எனக்குச் சௌகரியமாகத் தெரிந்தனர்" என்றார் தோனி!

சேப்பாக்கம்
அடுத்த போட்டியில் சென்னை அணி, லக்னோ அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


source https://sports.vikatan.com/cricket/ipl-2023-gt-v-csk-dhonis-post-match-presentation-speech

ஃபார்மஸி டு டிரைவிங் - கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா!

பரபரப்பான கோவை மாவட்டத்தில், போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அருகே யார் செல்கிறார், எதிரில் யார் வருகிறார் என்று பார்க்கக் கூட நேரமில்லாமல் மக்கள் சாலைகளில் வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை பெண் பேருந்து ஓட்டுநர்

இந்நிலையில், சமீபத்தில் ஓர் இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் இப்போது அவர்தான் ட்ரெண்டிங்.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. வயது 24. டிப்ளோமா இன் ஃபார்மஸி படிப்பை முடித்துள்ளார். ஆனால் டிரைவிங் மீதுள்ள ஆர்வத்தால் அந்தத் துறையை உதறித் தள்ளிவிட்டு, டிரைவிங்கில் கவனம் செலுத்தினார். முறையாக டிரைவிங் கற்ற ஷர்மிளா, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றார்.

கோவை பெண் பேருந்து ஓட்டுநர்

பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது அவரின் கனவு. இருப்பினும் அந்த வாய்ப்பு அவருக்கு உடனடியாகக் கிடைக்காததால், தந்தை மகேஸின் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் அவருக்கு ஓட்டுநராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது. காந்திபுரம் டு சோமனூர் வழித்தடத்தில், அவர் முதல் நாள் ஓட்டுநராகக் களத்தில் இறங்க, மக்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்து, பாராட்டி, செஃல்பி எடுத்து வருகின்றனர்.

கோவை பெண் பேருந்து ஓட்டுநர்

கோவை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஷர்மிளா கூறுகையில், ``எனக்கு 7-ம் வகுப்பில் இருந்தே டிரைவிங் மீதுதான் விருப்பம். நேரம் கிடைக்கும்போது அப்பாவின் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

கோவை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. ஏளனமாகப் பேசியவர்கள் கூட இன்று ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். தண்ணீர், பழச்சாறு வாங்கிக் கொடுத்து, ’கவனமாகச் செல்லுங்கள்’ என்று வாழ்த்திச் செல்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது.

கோவை பெண் பேருந்து ஓட்டுநர்

டிரைவிங் என்றாலே ஆண்கள் கோலோச்சும் துறை இது. இதில் ஒரு பெண்ணாக ஓட்டுநர் ஆனதையே பெரிய விஷயமாக பார்க்கிறேன். எல்லோரும் நன்றாக பார்த்துக் கொள்வதால் எந்தக் கடினமும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/gender/empowerment/coimbatore-s-first-woman-driver-goes-viral

GT v CSK: கெய்க்வாட்டின் அதிரடியை வீணாக்கிய படு வீக்கான பௌலிங் படை; சென்னையின் சிக்கல் இதுதான்!

ஐ.பி.எல்லில் சென்னை அணியின் பேட்டிங் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி போல. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் நிற்காது ஓடிக்கொண்டிருக்கும். டெத் ஓவரும் பௌலிங்கும் என்பது எடப்பாடி - ஓ.பி.எஸ் மாதிரி. எவ்வளவு முயன்றாலும் அந்தக் கூட்டணி இணையாது. அது இந்த ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்திலும் நிரூபணமானது.

கடந்த முறை ஜாம்பவானாய் இருந்துகொண்டு புது டீம் குஜராத்திடம் அடிவாங்கியதால் கடுப்பிலிருந்தார்கள் ரசிகர்கள். இந்த முறை முதல் ஆட்டத்திலேயே ஜெயித்து அந்தக் கடுப்பில் தண்ணீர் ஊற்றி அணைப்பார்கள் எனப் பார்த்தால் மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிப் பற்றியெரிய விட்டிருக்கிறது தோனி அண்ட் கோ.

GT v CSK

மூன்றாண்டுகளுக்கு பிறகான ஹோம் - அவே முறை, இம்பேக்ட் பிளேயர் உட்படப் புதிய விதிமுறைகள், தோனியின் கடைசி சீசன் என ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன அகமதாபாத்தில் நடந்த இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தைப் பார்க்க! கூட்டம் ஆர்ப்பரிக்க, களத்தில் டாஸுக்கு நுழைந்தார் தோனி. அதிர்ந்து அடங்கியது அரங்கம். கூட்டத்தில் மஞ்சள் சொக்காக்களே அதிகம். சிஷ்யப்பிள்ளை பாண்டியா சகிதம் இந்த சீசனின் முதல் டாஸை அவர் தொடங்கி வைக்க, முடித்து வைத்தார் பாண்டியா. சேஸிங்கிற்குச் சாதகமான பிட்ச்சில் பௌலிங்கைத் தேர்வு செய்தார்.

சும்மாவே பத்து பேர் பேட்டிங் ஆடும்படிதான் டீம் எடுப்பார் தோனி. இதில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையும் இருக்கும்போது சும்மா விடுவாரா... இந்த முறை 11 பேரும் பேட்டிங் ஆடக்கூடியவர்கள். கான்வே, கெய்க்வாட், மொயின், ஸ்டோக்ஸ், ராயுடு, ஜடேஜா, தோனி, தூபே, சான்ட்னர், தீபக் சஹார், அப்புறம் போன சீசன் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்த ஹங்கர்கேக்கர். குஜராத்தில் கேன் வில்லியம்சன், ரஷித், ஜோஸ் லிட்டில், அல்ஸாரி ஜோசப் ஆகிய வெளிநாட்டு வீரர்களோடு போன சீசனில் ஆடிய அதே உள்ளூர் வீரர்கள்.

பவர்ப்ளே முழுக்க நிதானமாய் ஆடிவிட்டு மிடில் ஓவர்களில் இறங்கி அடிப்பது கெய்க்வாட் - கான்வே இணையின் ஸ்டைல். அதேபோலத்தான் முதல் ஓவரை இரண்டு ரன்களோடு தொடங்கினார்கள். ஆனால் அடுத்த ஓவரிலேயே, 'இதெல்லாம் சரிப்படாது' என பவுண்டரிகள் வெளுத்தார் கெய்க்வாட். பாண்டியாவின் அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள்.
GT v CSK

பவர்ப்ளேயில் ஷமியை எதிர்த்து ஆடும்போது நீங்கள் ஸ்டம்ப்பை மறைத்து சுவரே கட்டினாலும் சரி, அதன் தக்களூண்டு விரிசல் வழியே கசியும் நீரைப் போலச் சட்டென ஸ்டம்ப்பைத் தகர்த்துவிடுவார். அடுத்த ஓவரில் கான்வேவுக்கு அதுதான் நடந்தது. போன வருடம் சி.எஸ்.கேவின் நெட் பௌலராக இருந்த ஜோஸ் லிட்டில்தான் இப்போது எதிரணியில். அவரின் முதல் ஐ,பி.எல் பந்தையே ஷார்ட் பைன் லெக் பக்கம் சிக்ஸுக்குத் தூக்கினார் கெய்க்வாட். அடுத்த பந்து பவுண்டரிக்கு. 'வயசுல மூத்தவன் நான் அடிக்கலன்னா நல்லா இருக்காதுல' என மொயினும் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள்.

கான்வேயைப் பந்தாடிய ஷமியை ஐந்தாவது ஓவரில் பழிக்குப் பழி தீர்த்தார் மொயின். 17 ரன்கள். ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் பறப்பதைப் பார்த்து ரஷித் கானைக் கொண்டுவந்தார் பாண்டியா. பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் மொயின் அவுட். எல்லாரும் எதிர்பார்த்த பென் மச்சான் இறங்கும் நேரம். ஆனால் அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் விரட்டி விரட்டி அடித்துக்கொண்டிருந்தார் கெய்க்வாட். கடைசியில், ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்துவிட்டு நடையைக் கட்டினார் ஸ்டோக்ஸ். உபயம்: ரஷித் தான்.

அல்ஸாரி ஜோசப் வீசிய 9வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸ்கள். 23 பந்துகளில் அரைசதம் கடந்து காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார் கெய்க்வாட். ராயுடு ஒருபக்கம், 'இவர்கள் பந்தை நிஜமாகவே வீசுகிறார்களா இல்லை ஹோலோக்ராமா' என தன் பேட்டில் படாததுக்குக் காரணம் யோசித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் சிக்ஸ்களை மட்டுமே பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் கெய்க்வாட். ரன்ரேட்டும் 9க்கு குறையாமலேயே இருந்தது.

GT v CSK
13வது ஓவரில் ஜோஸ் லிட்டில் ராயுடுவின் பரிதாபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உள்ளே வந்தார் தூபே. பிஸியான பீக் ஹவரில் வாங்கிய டிக்கெட்டைத் தொலைத்துவிட்டுத் தேடும் பஸ் பயணி போல பிட்ச்சில் ரொம்ப நேரம் பந்தைத் தேடியபடியே இருந்தார். இதுவும் கெய்க்வாட்டைப் பாதிக்கவில்லை. `என் வழி தனி வழி' என அவர் புயல் வேகத்தில் மற்றொரு ட்ராக்கில் போய்க்கொண்டிருந்தார்.

18வது ஓவரில் அல்ஸாரி வீசிய ஃபுல் டாஸில் அவுட்டாகி போகும்போது கெய்க்வாட்டின் ஸ்கோர் 50 பந்துகளில் 92 ரன்கள். சென்னையின் ஸ்கோர் 151/5. அதே ஓவரில் ஜடேஜாவும் நடையைக் கட்ட நிகழ்ந்தது தல தரிசனம். கடைசி ஓவரில் ஜோஸ் லிட்டில் ஸ்லாட்டில் வீசிய பந்தை தூக்க்க்க்....கி அடித்தபோது விண்ணைத் தொட்டது கரகோஷம். அவரின் குட்டி கேமியோ புண்ணியத்தில் 179 ரன்களை இலக்காக வைத்தது சென்னை.

GT v CSK

சஹாரின் அற்புதமான முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள். இரண்டாவது ஓவர் வீச ஐ.பி.எல்லின் முதல் இம்பேக்ட் பிளேயரான துஷார் தேஷ்பாண்டே வந்தார். 15 ரன்கள் விளாசி அவருக்கு பொக்கே கொடுத்தார்கள் பேட்ஸ்மேன்கள். நான்காவது ஓவரில் ஹங்கர்கேக்கர் சாஹாவை பெவிலியனுக்கு அனுப்பி வைக்க, இப்போது குஜராத்தின் இம்பேக்ட் பிளேயர் சாய் சுதர்சன் களத்தில். முதல் இன்னிங்ஸின்போது காயம்பட்ட வில்லியம்சனுக்குப் பதிலாக தன் சொந்த ஊரான சென்னையைப் பெயரில் தாங்கிய அணியாச்சே என்கிற பாவம் கூட பார்க்காமல் பந்தைப் பறக்கவிட்டார். மறுபக்கம் கில்லும் கியர் மாற்றாமல் பயணிக்க பவர்ப்ளே முடிவில் 65 ரன்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு.

இந்த இணையை மீண்டும் ஹங்கர்கேக்கர் வந்தே பிரிக்க வேண்டியதாக இருந்தது. சாய் சுதர்சன் நடையைக் கட்டினார். கேப்டன் பாண்டியாவை ஜடேஜா பார்த்துக்கொள்ள, இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் பவுண்டரி அடிக்கத் தவறவில்லை கில். ஒருவழியாய் 15வது ஓவரில் துஷார் கைவண்ணத்தில் அவர் கிளம்பும்போது அவரின் ஸ்கோர் 36 பந்துகளில் 63 ரன்கள். அணியின் ஸ்கோர் 138/4. அதன்பின் நடந்தது சம்பிரதாயமான சேஸிங்தான். பிரஷர் ஏற்றிக்கொள்ளாமல் கூலாய் ஆடி வெற்றிக்கோட்டைத் தொட்டார்கள் திவேதியாவும் ரஷித் கானும். ஆட்ட நாயகன் ரஷித்தே!

GT v CSK

கோப்பையைக் காத்துக்கொள்ளும் பயணத்தில் குஜராத்திற்கு இதுவொரு நல்ல தொடக்கம். சென்னையின் பௌலிங் வீக்காக இருக்கிறது என்பது தெரிந்ததுதான். ஆனால் எந்தளவிற்கு என்பது இம்பேக்ட் பிளேயர்களுக்காக தோனி கொடுத்த லிஸ்ட்டைப் பார்க்கும்போது தெரிந்தது. பரிச்சயமான அனுபவம் வாய்ந்த பௌலர் என ஒருவர்கூட இல்லை. தீக்‌ஷனா, பதிரானா, மகலா எல்லாரும் இங்கே வந்து தரையிறங்கும்வரை சி.எஸ்.கேவின் பாடு திண்டாட்டம்தான்.

சேப்பாக்கம் மிகச் சாதகமான மைதானமென்பதால் அடுத்த ஆட்டத்தில் அதைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வார்கள். சென்னை சாதிக்குமா?!


source https://sports.vikatan.com/cricket/ipl-2023-ruturaj-gaikwads-heroic-display-in-vain-as-chennai-fails-in-bowling-against-gujarat

Doctor Vikatan: வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, உடல் எடையைக் குறைக்குமா நெல்லிச்சாறு?

Doctor Vikatan: உடல் பருமனைக் குறைக்க ஆலோசனை மையங்களில் நெல்லிச்சாறு தருகிறார்கள். அதைப் பருகுவதால், தொடர்ச்சியான வயிற்றுப்போக்குடன், நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

நெல்லிக்காய் என்பது அற்புதமான, அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் கொண்டது. வைட்டமின் சி அதிமுள்ள நெல்லிக்காய், நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக்கூடியது. உடல் பருமனைக் குறைப்பதற்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

நெல்லிச்சாறு குடிப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அந்தச் சாற்றில் வேறு ஏதோ கலந்துகொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஓர் ஆண் 90 மில்லிகிராம் அளவும், பெண் 75 மில்லிகிராம் அளவும் எடுத்துக்கொண்டால் போதும். ஒரு நெல்லிக்காய் என்பது 200 முதல் 950 மில்லிகிராம் வரை இருக்கும். அதில் அவரவர் உடல் தன்மைக்கேற்ப சத்து உட்கிரகிக்கப்படும். உதாரணத்துக்கு 200 மில்லிகிராம் அளவுள்ள நெல்லிக்காயில் 100 மில்லிகிராம் அளவு வைட்டமின் சி சத்து உடலில் சேரலாம்.

செயற்கையான சப்ளிமென்ட்டுகள் எடுத்துக் கொள்ளும்போது தான் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் தீவிரமாகும். தவிர வைட்டமின் சி அதிகம் வேண்டும் என்ற எண்ணத்தில் சப்ளிமென்ட், கூடவே அதிக எண்ணிக்கையிலான நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது வயிறு பாதிக்கப்படும். வயிற்றுப்போக்கு வரலாம். மற்றபடி நீர்வறட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை. வைட்டமின் சி அதிகமிருக்கும்போது வயிற்று பாதிப்பு ஏற்படுவது இயல்புதான்.

ஒருவரது உடல் வாதம், பித்தம், கபம் என எந்தத் தன்மையோடு இருந்தாலும் நெல்லிக்காயானது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதால் உடல் பருமனையும், ஊளைச் சதையையும் குறைக்கும். மற்றபடி இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது.

மோனோ டயட் சிகிச்சையின்போது 60 முதல் 90 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் தருவார்கள். அதன் மூலம் பருமன் குறையும். அதற்காக ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைவது போன்ற மேஜிக் எல்லாம் இதில் சாத்தியமில்லை.

உடல் பருமன்

நெல்லிக்காய் சாறு சிகிச்சையில் உடலிலுள்ள தேவையற்ற நீர்ச்சத்து வெளியேறும். நெல்லிக்காய் என்பது காயகற்ப மூலிகை. பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் ஏ, சி போன்றவை இதில் அதிகம். கல்லீரலுக்கான மருந்து, முடி வளர்ச்சிக்கான மருந்து, உடலை டீடாக்ஸ் செய்யும் சிகிச்சை போன்றவற்றில் நெல்லிக்காய் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மிகையும் குறையும் நோய் செய்யும் என்பதற்கேற்ப, அமிர்தம் என்றாலும் அளவு முக்கியம். எனவே நெல்லிக்காய் நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடுவதும் சரியானதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-gooseberry-juice-cause-diarrhea-and-lose-weight

Tamil News Today Live: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது! - இன்று முதல் அமல்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது!

காஸ் சிலிண்டர்

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வணிக காஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 2,268 ஆக இருந்தது, இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்த பிறகு ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2,192 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-01-04-2023

பணத்தை இழக்காதீர்கள் மக்களே..!

ஆழ்வார்பேட்டை பெனிஃபிட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கான பணத்தைத் திருப்பித் தர சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘பணத்தைத் திருப்பித் தரும் பணியை நிர்வகிக்கும் நிபுணத்துவம் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குக் கிடையாது. எனவே, தமிழ்நாடு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 23 ஆண்டுகளாக நடந்துவந்தது. ஆழ்வார்பேட்டை பெனிஃபிட் நிறுவனத்துக்குச் சொந்தமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை நிர்வாகம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவர் வெவ்வேறு காலத்தில் நியமிக்கப்பட்ட பின்னும், அவர்களால் முதலீட்டாளர்களுக்கான பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை. இந்த நிலையில், ‘‘ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை எல்லாம் உயர் நீதிமன்றம் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது’’ என்று சொல்லி, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்றம் சொல்லி இருக்கும் இந்தக் கருத்துகளை முதலீட்டாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், அதிக வருமானத்துக்கு ஆசைப் பட்டு, பணத்தைக் கட்டி இழக்கிறவர்கள், பிற்பாடு அந்தப் பணத்தைப் பெற எவ்வளவுதான் அலைந்தாலும் யாராலும் உதவ முடியாது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு, மோசடித் திட்டங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும்.

அதிக வட்டி, அதிக வருமானம் என ஆசை காட்டும் மோசடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிய உடனே அந்த நிறுவனங்களை முடக்கும் வேலையைக் காவல்துறை செய்ய வேண்டும். ஆனால், இந்த மோசடி நிறுவனங்களை நடத்துபவர் களே அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருப்பதால், காவல்துறையினரால் கறாரான நடவடிக்கையை எடுக்க முடிவதில்லை. அந்த நிலையில், அவர்களும் மோசடி நிறுவனத்தின் பார்ட்னர்களாக மாறி, பெரும் பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்கிவிடுகின்றனர். இதற்கு வேலூர் ஐ.எஃப்.எஸ் நிறுவனமும் ஆருத்ரா நிறுவனமும் சிறந்த உதாரணங்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

இன்னும் உதாரணம் சொல்லவேண்டுமென்றால், சஹாரா குழும கூட்டுறவு சங்கங்களைச் சொல்லலாம். அதில் பணத்தை டெபாசிட் செய்திருந்த மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், 10 கோடி பேருக்கு, 5000 கோடி ரூபாய் அடுத்த ஒன்பது மாதங்களில் திருப்பித் தரப்படும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்கள் இந்த நிறுவனத்தில் கட்டிய பணம் ரூ.24,000 கோடிக்குமேல் என்கிறபோது, அவர்கள் கட்டிய முழுப் பணமும் திரும்ப வர இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டுமோ! பி.ஏ.சி.எல் நிறுவனத்திலும் பணம் கட்டியவர்கள் அதைத் திரும்பப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்!

ஆகவே, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதை இனியும் தொடரவேண்டாம் மக்களே! உங்கள் பணம்… உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும் பயன்படும் வகையில் மட்டுமே உஷாராக முதலீடு செய்யுங்கள் மக்களே!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/fraud-schemes-for-carefull-tips

01.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April - 01 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01042023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வியாழன், 30 மார்ச், 2023

நெல்லை: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம்: நான்காம் நாள் விசாரணையில் நடந்தது என்ன?!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் உதவி காவல் கண்காணிப்பாராகப் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணைக்கு வருபவர்களின் பற்களை உடைத்து கொடூரமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

பற்கள் பிடுங்கப்பட்டவர்கள்

இது தொடர்பாக கல்லிடைகுறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இரு பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், சூரியா என்பவரும் நேரில் ஆஜராகி தான் கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகவும், காவல்துறைக்கும் தனது பல் உடைந்ததற்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார். அத்துடன் சுபாஷ் என்பவர் தனது பற்களை ஏ.எஸ்.பி பிடுங்கியதாக சப்-கலெக்டரிடம் எழுத்து மூலம் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று முன்தினம் (29-ம் தேதி) நடந்த விசாரணையின்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் தாங்களாக முன்வந்து சாட்சியம் அளிக்க இருப்பதாகத் தெரிவித்தனர். வழக்கறிஞர் மகாராஜனுடன் வந்திருந்த அவர்கள் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்த நிலையில், அவர்களில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரை மட்டும் விசாரணைக்கு அழைத்த சப்-கலெக்டர், மற்றவர்களிடம் விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

காக்க வைக்கப்பட்ட சாட்சிகள்

விசாரணைக்கு வருபவர்கள், பற்களை இழந்தவர்களை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் சிலரிடம் பேரம் நடப்பதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில், விசாரணைக்கு வந்தவர்களை சப்-கலெக்டர் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையானது. அவரது நடவடிக்கை காவல்துறையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,விசாரணையின் நான்காம் நாளான நேற்று (30-ம் தேதி) கல்லிடைக்குறிச்சி காவல்துறை அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த வெங்கடேஷ் என்பவர் மட்டும் ஆஜராகி சாட்சியம் அளித்துவிட்டுச் சென்றார். அவர் காவல்துறையினருக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்ததாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

சார் ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

காவல்துறையினரின் நெருக்கடிகளை மீறி ஏற்கெனவே சாட்சியம் அளிக்க வந்த ஆறு பேரை சப்-கலெக்டர் சந்திக்காத விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று விசாரணை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், விசாரணைக்கு வந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தியது தொடர்பாக ஏதாவது தெரிவிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 10-ம் தேதி வரை ஆஜராகி தங்கள் கருத்துகளை மனுவாக எழுதிக் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏ.எஸ்.பி பல்வீர் சிங் நடவடிக்கையால் பற்கள் பிடுங்கப்பட்ட மேலும் பலர் சாட்சியம் அளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. அவர்களை காவல்துறையினர் தடுத்த போதிலும், அதையும் மீறி சாட்சியம் அளிக்க இருப்பதால் இந்த விவகாரம் சாத்தான்குளம் பிரச்னை போன்று காவல்துறையினருக்கு தலைவலியாக மாறும் ஆபத்து இருப்பதாக அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/crime/this-is-what-happened-in-the-fourth-day-of-enquiry-against-asp-of-ambasamudram

Tamil News Today Live : கோயில் கிணறு சுவர் இடிந்து 35 பேர் பலி! - மபி-யில் சோகம்

கோயில் கிணறு சுவர் இடிந்து 35 பேர் பலி! - மபி-யில் சோகம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் படேல் நகரில் பழைமையான கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணறு சிமென்ட் சிலாப் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு நேற்றைய தினம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், பாரம் தாங்காமல், சிமென்ட் சிலாப்பும், கிணற்றின் சுற்றுசுவரும் இடிந்து விழுந்தன. இதில் அதன் மேல் நின்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர். அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 35 பேர் இந்த விபத்தில் பலியாகியிருப்பதாகவும், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-31-03-2023

ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள்!

திசைகளெங்கும் இருக்கும் திறமைக்காரர்களைக் கொண்டாடவும், பரவசப்படுத்தவும் வைப்பவை ‘விகடன் விருதுகள்.’ மரியாதைக்குரிய, மகத்தான மனிதர்களை அங்கீகரித்தும், மதிக்கப்படவேண்டிய சாதனையாளர்களைச் சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதாலும்தான் விகடன் விருதுகளை நாங்கள் ‘திறமைக்கு மரியாதை’ என்ற அழகிய அடைமொழியுடன் அழைக்கிறோம். 2020-21, 2022-ம் ஆண்டுகளுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா சென்னை வர்த்தக மையத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஒரே மேடையில் சங்கமித்திருக்கும் பிரமாண்ட நிகழ்வாக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடந்துகொண்டிருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஆளுமைகள் ஒரே மேடையில் தோன்ற... அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. திரைப் பிரபலங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடியதில், தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் 5-வது இடத்தில் டிரெண்ட்டாகிவருகிறது ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா!



source https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-twitter-trends

`இது மாஸ் இல்ல... பக்கா மாஸ்!' அதிர்ந்தது அரங்கம்... ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - Album - Part 3

உலகநாயகன் கமல்ஹாசன் | Actor Kamal Haasan
உலகநாயகன் கமல்ஹாசன் | Actor Kamal Haasan
உலகநாயகன் கமல்ஹாசன் | Actor Kamal Haasan
இயக்குநர் ஷங்கர் | Director Shankar
நடிகர் சூர்யா | Actor Suriya
நடிகர் சிவகார்த்திகேயன் | Actor Sivakarthikeyan
Eshwari Shankar, Aditi Shankar, Shankar
Aditi Shankar
நடிகை சாய் பல்லவி | Actress Sai Pallavi
Johny Master
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் | Director Logesh Kanagaraj
நடிகர் வினய்
நடிகர் யோகி பாபு | Actor Yogi babu
Madone Ashwin
Preetha Hari and Director Hari
ஸ்டண்ட் சில்வா | Stunt Silva
நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் இயக்குநர் நெல்சன் | Actor Redin Kingsley and Director Nelson
நடிகர் நரேன் | Actor Naren
நடிகை குஷ்பூ | Actress Kushboo
Justice K. Chandru


source https://cinema.vikatan.com/kollywood/ananda-vikatan-cinema-awards-celebrities-photos-album-part-three

புதன், 29 மார்ச், 2023

புனே: தற்கொலை செய்துகொள்ள மருந்து தேடிய மாணவர்: அலர்ட் கொடுத்த அமெரிக்க அதிகாரிகள்; நடந்தது என்ன?

இணைய தேவை அதிகரித்தப் பிறகு எது தேவையென்றாலும் அதனை இண்டர்நெட்டில் தேடுவதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திருடுவது எப்படி, வெடிகுண்டு செய்வது எப்படி, தற்கொலை செய்வது எப்படி என்பது உட்பட அனைத்து தகவல்களும் இணையத்தளத்தில் தேடப்படுகிறது. கடந்த மாதம் மும்பை வாலிபர் ஒருவர் எப்படி தற்கொலை செய்வது என்று இண்டர்நெட்டில் தேடிய போது அதனை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்து உடனே இண்டர்போல் மூலம் மும்பை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இண்டர்போல்

இதனால் அந்த வாலிபரின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அமெரிக்காவின் உதவியால் புனேயை சேர்ந்த மேலும் ஒரு மாணவரின் தற்கொலையை போலீஸார் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அமெரிக்க வெப்சைட் ஒன்றில் புனேயை சேர்ந்த ஒருவர் அமைதியான முறையில் தற்கொலை செய்வது எப்படி என்றும், அதற்கான மருந்து எது என்பது குறித்தும் தேடிக்கொண்டிருந்தார். உடனே அந்த வெப்சைட் உரிமையாளர் இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த அதிகாரிகள் இந்தத் தகவலை இண்டர்போலுக்கு தெரிவித்தனர்.

அமெரிக்க இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்து புனே இண்டர்போல் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனே மும்பை போலீஸாருக்கு இந்த தகவலைப் பகிர்ந்தனர். உடனே மும்பை போலீஸார் தற்கொலைக்கு முயன்றது யார் என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் தேடினர். குற்றப்பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர் புனேயில் உள்ள மருத்துவ கல்லூரியில் பி.எச்.எம்.எஸ் படித்து வருவதை கண்டுபிடித்தனர். உடனே குற்றப்பிரிவு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற போது மாணவர் பிராக்டிக்கல் தேர்வில் இருந்தார். மருத்துவ கல்லூரியின் உதவியோடு மாணவரிடம் போலீஸார் பேசினர். அவருக்கு 2 மணி நேரத்திற்கும் மேல் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. சொந்தப் பிரச்னை, படிப்பில் பிரச்னை போன்ற காரணங்களால் தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. தனக்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டரிடம் கூட அமைதியான முறையில் தற்கொலை செய்ய மருந்து எது என்று கேட்டார். மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இணையம்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக போராடியதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். படிப்பிலும் சிக்கலை சந்தித்து வந்ததால் மாணவர் மன அழுத்தத்தில் இருந்தது சக மாணவர்களிடம் விசாரித்த போது தெரியவந்தது. அமெரிக்காவிலிருந்து தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் விரைந்து செயல்பட்டு மாணவரின் தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.



source https://www.vikatan.com/crime/cops-avert-suicide-of-a-student-in-pune-thanks-to-interpol-alert

பழைய சோறு: அபார ருசி, ஆரோக்கியம் தரும் அசத்தலான பலன்கள்!

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலுக்கு உடலுக்குக் குளிர்ச்சியான நீராகாரம் சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ’அட... பீட்சா, பர்கர் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிடும் இன்றைய காலக்கட்டத்தில் நீராகாரம், பழைய சோறு இதெல்லாம் சரிவருமா’ என்றுதானே கேட்கிறீர்கள்?!

பழைய சோற்றின் பலன்களை, மகத்துவத்தை உணர்ந்து இன்று அதன்மீது பலரின் பார்வை திரும்பியுள்ளது. பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில், ``சில ஆண்டுக்காலமாக எனது காலை உணவாக பழைய சோறு மாறியிருக்கிறது. எனது பாம்பர்ய முறையில் இந்த உணவை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்குப் பல காலமாக குடல் பிரச்னை (இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்) நோய் இருந்தது. ஆனால் அந்த நோய் தற்போது குணமடைந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு

இன்று, 60 வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங்களிதான்' என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு.

சில வருடங்களுக்கு முன், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, அவை உறுதிசெய்யப்பட்டன. விளைவாக, இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர்... அந்த நீராகாரம் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.

பழையசோறு

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது.

ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணம் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம்.

உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு.

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்ட பழைய சோற்றின் நன்மைகள்...

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.

* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

குடல் புண்

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம், பழைய சோற்றின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்!

- பாலு சத்யா



source https://www.vikatan.com/health/diet/benefits-of-soaked-rice

மக்கள் போராட்டம்; பைடனின் கருத்துக்கு `கறார்' பதிலளித்த பிரதமர்! - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?!

இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்தங்களை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இஸ்ரேல் போராட்டம் குறித்தும், அந்த நாட்டு பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். பைடனின் இத்தகைய கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், ஜோ பைடனின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி கொடுத்திருப்பதுதான் `டாக் அஃப் தி டவுன்'.

நீதித்துறையில் சீர்திருத்தம்

- நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம்.

- நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசு பிரதிநிதிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

- அரசு தலைமை வழக்கறிஞரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.

மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதால், இஸ்ரேல் அரசு விரும்பும் நபர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. அதில் அரசு வழக்கறிஞர் அதிகார குறைப்பு நடவடிக்கை அமலுக்கே வந்துவிட்டது. இதற்கு, சாமான்ய மக்கள் முதல் இஸ்ரேலின் மேல்மட்டத் தலைவர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவ மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்த அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் இஸ்ரேல் பிரதமர்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின்

வலியுறுத்தும் அதிபர் - போராடும் மக்கள்

மக்களுக்கு இதில் ஏற்பில்லை என்பதால் நீதித்துறை சீர்திருத்தங்களைக்கைவிட வலியுறுத்தியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக். மக்கள் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டு மக்களைப் பொறுத்தவரை நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைப்பதோடு, இது ஜனநாயகத்தை நசுக்கிவிடும் எனக் கருதுகிறார்கள்.

தலைநகர் டெல் அவிவ்வில் போராடத் தொடங்கிய மக்கள், தற்போது இஸ்ரேல் முழுக்க தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் நாடாளுமன்ற வாயிலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில், சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். `பிரதமர் பதவி விலக வேண்டும், நீதித்துறை சீர்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராடும் மக்களை, காவல்துறையைவைத்து அரசு அடக்க நினைத்தாலும், போராட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் சிலரும் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிளம்பவே, தற்போதைக்கு நீதித்துறை சட்ட திருத்தங்களை ஒத்திவைப்பதாக தெரிவித்திருக்கிறார் நெதன்யாஹு, ஆனால் முழுமையாக கைவிடுவதாக அவர் அறிவிக்கவில்லை.

ஜோ பைடன் கருத்து - பென்ஞமின் நெதன்யாஹு எதிர்ப்பு

அமெரிக்காவும், இஸ்ரேலும் பல தசாப்தங்களாக நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் கொண்டுவரவிருக்கும் நீதித்துறை சட்டத்திருத்தம் குறித்தும் மக்களின் போராட்டம் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கருத்துக் கேட்டபோது, ``இஸ்ரேலில் நடப்பவை வருத்தமளிப்பதாக இருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் அவரது முடிவை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் “இது எங்கள் நாட்டு விவகாரம், இஸ்ரேல் ஓர் இறையாண்மை கொண்ட நாடு, அது அதன் மக்களின் விருப்பப்படி முடிவுகளை எடுக்கிறதே தவிர வெளிநாட்டிலிருந்து வரும் அழுத்தங்களின் அடிப்படையில் அல்ல" எனப் பதில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் போராட்டம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இந்தப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா அமைதியான முறையில் முயன்றதாகவும், அனால் எந்தவித பயனையும் அளிக்கவில்லை என்பதால் ஜோ பைடன் பொதுவெளியில் இப்படி பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்க அதிபர் தலையிடுவது இதுவே முதன் முறை. மேலும் ஜோ பைடனின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்மீது, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. `பல தசாப்தங்களாக நெருங்கிய நாடுகளாக இருக்கின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும். அதில், பெஞ்சமின் பிளவை ஏற்படுத்தி வருகிறார்' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

இஸ்ரேலில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசு ஊழியர்கள், ராணுவ ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்திருப்பதால் இஸ்ரேல் அதிபரும் இந்த சீர்திருத்தங்களைக் கைவிடக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருப்பதால் இந்த விவகாரத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/israeli-pm-joe-biden-exchange-frosty-words-over-legal-overhaul