Ad

வெள்ளி, 31 டிசம்பர், 2021

"விஜய் `ரங்கஸ்தலம்' பார்த்துட்டு, என்கூட வொர்க் பண்ணணும்னு நினைச்சார்! ஆனா..."- `புஷ்பா' சுகுமார்

டோலிவுட் சினிமாவில் 'இயக்குநர் சுகுமார்' என்ற பெயருக்கு அத்தனை ரசிகர்கள், அத்தனை மரியாதை இருக்கிறது. அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், நாக சைதன்யா என டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரை இயக்கி சூப்பர் ஹிட்டுகளை வாரி வழங்கியவர். இவர் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு தனி மேனரிஸம் இருக்கும். தற்போது மூன்றாவது முறையாக 'புஷ்பா' படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை இயக்கியிருக்கிறார். சுகுமாரின் முதல் பட ஹீரோவும் இவரே. 'புஷ்பா'வின் வெற்றி விழாவிற்காக சென்னை வந்திருந்தவரை சந்தித்துப் பேசினேன்.

'ஆர்யா', 'ஆர்யா 2' படங்களுக்குப் பிறகு, 12 வருஷம் கழிச்சு நீங்களும் அல்லு அர்ஜுனும் 'புஷ்பா' படத்துக்காக இணையும்போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எப்படி சமாளிச்சீங்க?

கணித பேராசிரியரா வேலை செஞ்சுக்கிட்டிருந்த நீங்க, இயக்குநராகி முதன்மையான இடத்துக்கு வந்திருக்கீங்க. இந்தப் பயணத்தைப் பத்தி சொல்லமுடியுமா?

இந்தக் கதைக்களம் கொண்ட படத்தை பேன் இந்தியா படமா வெளியிடலாம் என்ற எண்ணம் எப்போ தோணுச்சு?

பகத் பாசிலை இயக்கியது எப்படி இருந்தது?

இயக்குநர் சுகுமார்

நீங்க இயக்குநர் மணிரத்னத்துடைய தீவிர ரசிகர்னு கேள்விப்பட்டோம். அவரை சந்திச்ச அனுபவம் இருக்கா?

தமிழ் சினிமாவுல உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர்கள் யார்?
கோலிவுட்ல உங்களுக்குப் பிடிச்ச, உங்களைக் கவர்ந்த நடிகர் யார்?

உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் இந்த வார ஆனந்த விகடனில் இடம்பெற்றிருக்கிறது. அவை தவிர, இயக்குநர் சுகுமார் பகிர்ந்துகொண்டவை இதோ..!

Also Read: “ரஜினி எனக்கு நாற்காலி கொடுத்தார்!”

தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இவங்க ரெண்டு பேரும் உங்க கரியர்ல எவ்வளவு ஸ்பெஷல்?

’’ரெண்டு பேரும் என் கரியர்ல மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் ஸ்பெஷல்தான். 'ஆர்யா'வுல இருந்து இப்போவரை என்னுடைய எல்லா படத்துக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்தான் இசையமைப்பாளர். என் படங்கள்ல பாடல்கள் எல்லாம் ஹிட்டாகிடும். அதுக்கு முழு காரணம், தேவிதான். எனக்கு மியூசிக் பத்தி எதுவும் தெரியாது. எந்த இடத்துல பாடல் வேணும், என்ன சூழலுக்குப் பாடல் வேணும்னு மட்டும்தான் சொல்லுவேன். மத்ததெல்லாம் தேவி பார்த்துக்குவார். இதுவரை 'இல்ல வேற ட்யூன் கொடுங்க'னு நான் கேட்டதில்லை. அவர் கொடுக்கிற ட்யூனை நான் வாங்கிப்பேன். எங்களுக்குள்ள இருக்கிறது வெறும் தொழில்முறையான பழக்கம் இல்லை. அதுக்கும் மேல. தேவி என் சகோதரன் மாதிரி. அதே மாதிரி என் நண்பர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. எப்போவும் என்னுடைய முதல் சாய்ஸ் அவர்தான். அவர் வேற படத்துல பிஸியா இருந்தால் மட்டுமே வேறு ஒளிப்பதிவாளர்கிட்ட போவேன். நானும் அவரும் சேர்ந்து வேலை செய்யலைனா கூட, என் கதைகளைப் பத்தி அவர்கிட்ட ஆலோசிக்கிறதுண்டு. சினிமாவைத் தாண்டிய உறவு எங்களுக்குள்ள இருக்கு. ’புஷ்பா’ படத்துல க்யூபா சூப்பரா ஒளிப்பதிவு பண்ணி கொடுத்தார். இருந்தாலும் ஐ மிஸ் ரத்னவேலு.’’

’ஆர்யா’, ’ஆர்யா 2’ இப்போ ’புஷ்பா’, ’புஷ்பா 2’னு உங்களுடைய ரெண்டு சீக்வெல் படங்கள் அல்லு அர்ஜுன் கூட எப்படி அமைஞ்சது?

இயக்குநர் சுகுமார்

’’யதார்த்தமா அமைஞ்சதுதான். ’ஆர்யா’ ஹிட்டுக்குப் பிறகு, நான் அல்லு அர்ஜுனுக்கு இன்னொரு லவ் சப்ஜெக்ட் சொன்னேன். ஹிட் காம்போ மறுபடியும் இணையுறோம்ன்னு, ’ஆர்யா 2’-ன்னு தற்காலிகமா தலைப்பு வெச்சிருந்தோம். நான் அந்தக் கதைக்கு வெச்சிருந்த தலைப்பு ‘மிஸ்டர்.பர்ஃபெக்ட்’. ஆனா, விநியோகஸ்தர்கள் எல்லோரும் ’ஆர்யா 2’னு தலைப்பு இருந்தா, இன்னும் நல்லா பிசினஸ் ஆகும்னு சொல்லி படத்துக்கு அந்தப் பெயரே வெச்சாச்சு. நீங்க படம் பார்த்திருந்தால், நிச்சயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், ரெண்டுக்கும் தொடர்பே இருக்காது. ’புஷ்பா’ கதையை எழுதி ஒவ்வொன்னா ஷூட்டிங் போகப்போகத்தான் "இல்லை ரொம்பப் பெரிய களமா இருக்கு. அதுக்குள்ள நம்ம இதெல்லாத்தையும் சொல்லணும்னா ஒரு படத்துல முடியாதுனு தெரிஞ்சது. அப்படித்தான் ரெண்டு பாகங்களா பண்ணலாம்னு முடிவெடுத்தோம்.’’

எந்த சமயத்துல செம்மர கடத்தலை களமா வெச்சு கதை எழுதலாம்னு தோணுச்சு?

‘’நான் முதல்ல வேறொரு ஸ்கிரிப்டைதான் தயார் செஞ்சு வெச்சிருந்தேன். அதுல மகேஷ் பாபு நடிக்கிறதா இருந்தது. அந்த சமயத்துல அவர் வேற படங்கள்ல பிஸியா இருந்தார். அப்போதான், செம்மர கடத்தல் பத்தி படிச்சு அது தொடர்பா தேட ஆரம்பிச்சேன். 2015ல இருந்தே இந்தக் களம் எனக்குள்ள இருந்தது. முதல்ல வெப் சீரிஸா பண்றதுதான் பிளான். அந்தத் தளம் எப்படி இருக்குனு பார்க்கலாம்னு நினைச்சேன். இது பத்தி படிக்க படிக்க, இந்தக் கதைக்களத்தை வெச்சு ஒரு பக்கா கமர்ஷியல் படம் பண்ணலாம்னு தோணுச்சு. அப்படிதான், ’புஷ்பா’ ஆரம்பமானது.’’

’புஷ்பா’ படத்துக்காக அல்லு அர்ஜுன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கரமா மெனக்கெட வேண்டியது இருந்திருக்கும். நீங்க என்னவெல்லாம் அவர்கிட்ட சொன்னீங்க?

இயக்குநர் சுகுமார்

”புஷ்பராஜ் கேரக்டரை எழுதும்போதே அவன் எப்படியிருப்பான்னு எனக்குள்ள ஒரு உருவம் வந்திடுச்சு. அவன் எப்படி நடப்பான், எப்படிப் பேசுவான், அவன் நிறம், டிரஸ், தலைமுடி, தாடி, உடல்மொழி எல்லாம் எப்படியிருக்கும்னு யோசிச்சு வொர்க் பண்ணினோம். அதையெல்லாம் அல்லு அர்ஜுன்கிட்ட சொல்லும்போது ரொம்ப ஆர்வமா கவனிச்சு கேட்டார். ஒரு இயக்குநரா அவர்கிட்ட இப்படி வேணும் அப்படி வேணும்னு வலியுறுத்தினேன், அவ்வளவுதான். மத்ததெல்லாம் அவருடைய ஆர்வத்தால மெறுகேறினதுதான். ஒரு கமர்ஷியல் படத்துல ஹீரோ வந்து நடிச்சுட்டு போயிடலாம். மத்த விஷயங்களுக்கு எல்லாம் இவ்வளவு மெனக்கெடணும்னு அவசியமில்லை. ஆனா, என்னைவிட புஷ்பராஜ் எப்படி இருக்கணும்னு பயங்கர ஆர்வமா இருந்தார், அல்லு அர்ஜுன். அவ்வளவு உழைச்சிருக்கார். அதை வார்த்தையால சொல்லமுடியாது.’’

’புஷ்பா 2’ படத்துல நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?

’’நான் பக்கா கமர்ஷியல் டைரக்டர். எனக்கு எப்போவும் என் ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணணும். ’புஷ்பா’ முதல் பாகத்துல இருக்கிற எமோஷன்கள் எல்லாத்துக்கும் அடுத்த பாகத்துல பதில் வெச்சிருக்கேன். முதல் பாகம் எனக்கு ரொம்ப நல்ல அனுபவத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கு. ’புஷ்பா 2’ படத்துல பன்வர் சிங்கிற்கும் புஷ்பராஜுவுக்கும் இடையே நடக்கிற மோதல், புஷ்பராஜுக்கு அவன் மேலேயே இருக்கிற கேள்விகள், விருப்பு வெறுப்புகள்னு இரண்டாம் பாகம் நகரும். நிச்சயம், ட்ரீட் இருக்கு!’’

காமெடியனா நடிச்சிருந்த சுனிலுக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்திருந்தீங்க. எப்படி அவரை அந்தக் கேரக்டரா யோசிச்சீங்க?

சுனில்

’’சுனிலை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். எந்த கேரக்டரை கொடுத்தாலும் பிரமாதமா நடிக்கிற நடிகர். இவரை வேற மாதிரி காட்டணும்னு எண்ணம் இருந்தது. இதுல என்ன சிக்கல்னா, மத்த ஊர்ல சுனிலை வில்லனா ஏத்துக்குவாங்க. அவரை காமெடியனா பார்த்த தெலுங்கு மக்கள் எப்படி அவரை வில்லனா ஏத்துக்குவாங்கன்னு பெரிய தயக்கம் இருந்தது. அப்புறம்தான், லுக்கா அவரை மாத்தலாம்னு பிளான் பண்ணி அவரை கேரிகேச்சரா வரைஞ்சு வரைஞ்சு பார்த்தோம். அதுல ஓகேயாகிறதை ஆரம்பத்துல இருந்தே சுனில் வில்லனா நடிக்கிறார், சுனில் வில்லனா நடிக்கிறார்னு ப்ரொமோட் பண்ணினா, மக்கள் ட்யூனாகிடுவாங்கன்னு அல்லு அர்ஜுன் ஐடியா கொடுத்தார். அது சூப்பரா வொர்க் அவுட்டாகியிருக்கு!’’

நீங்க தயாரிச்ச ’உப்பென்னா’ படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த உங்க தயாரிப்புல என்னென்ன படங்கள் போய்க்கிட்டிருக்கு?

’’’உப்பென்னா’ இயக்குநர் புச்சிபாபு என் ஸ்டூடண்ட். நான் அவனுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்திருக்கேன். அப்புறம், சினிமா மேல ஆர்வம் வந்து என்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தான். இந்தக் கதையை என்கிட்ட சொன்னதும் ’நீயா இதை எழுதினது?’னு ஷாக்காகிட்டேன். அவனுக்குள்ள இப்படியொரு திறமை இருக்குனு எனக்கு அப்போதான் தெரிஞ்சது. உடனே, மைத்ரி மூவி மேக்கர்ஸ் டீம்கிட்ட சொல்லி நானும் அவங்களும் சேர்ந்து தயாரிச்சோம். இப்போ என்னுடைய தயாரிப்புல மூணு படங்களுக்கான வேலைகள் போய்க்கிட்டிருக்கு.’’

நேரடி தமிழ்ப் படத்தை இயக்குற ஐடியா இருக்கா?

’’நான் தெலுங்கு சினிமாவுக்குள்ள வந்த புதுசுல சுகுமார்ங்கிற என் பெயரை பார்த்துட்டு, தமிழ் பையன்னு நினைச்சு என்கிட்ட தமிழ்ல பேசுவாங்க. ’இல்லைங்க நான் தெலுங்கு பையன்தான்’னு சொல்லுவேன். காரணம், சுகுமார்ங்கிற பெயர் தமிழ்நாட்டுலயும் கேரளாவுலயும்தான் இருக்கும். ஆந்திராவுல இந்தப் பெயர் பெரும்பாலும் யாரும் இருக்காது. தவிர, என் படங்கள் தமிழ் படங்கள் மாதிரி இருக்கு, தமிழ்ல வெளியாகியிருந்தால், சூப்பர்ஹிட் ஆகியிருக்கும்னு சொல்லுவாங்க. அப்படி என்னுடைய ’புஷ்பா’ தமிழ்ல வெளியாகி நல்ல வரவேற்பு கிடைச்சது பெரிய சந்தோஷம். நேரடி தமிழ்ப் படத்தை இயக்கும் எண்ணம் நிச்சயமா இருக்கு. ’ரங்கஸ்தலம்’ பார்த்துட்டு விஜய் சார் என்கூட வொர்க் பண்ண விருப்பப்படுறார்னு ரத்னவேலு மூலமா தகவல் கிடைச்சது. ஆனா, அதுக்கு பிறகு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கலை. அவரை இயக்க வாய்ப்பு கிடைச்சா, நிச்சயமா பண்ணுவேன்.’’

ஒரு தமிழ்ப் படத்தை ரீமேக் பண்ணணும்னு சொன்னால், எந்தப் படத்தை பண்ணுவீங்க ?

’’நிறைய படங்கள் இருக்கு. ஆனா, இப்போ, குறிப்பிட்டு சொல்லணும்னா ’விக்ரம் வேதா’. அதை ரீமேக் பண்ண ஐடியா இருந்தது. இன்னொன்னு, 'ராட்சசன்'. எனக்கு த்ரில்லர் படங்கள் ரொம்பப் பிடிக்கும். இது அங்க ஏற்கெனவே ரீமேக்காகிடுச்சு. இருந்தாலும் நான் பண்ணணும்னு ஆசை!"



source https://cinema.vikatan.com/tamil-cinema/tollywood-director-sukumar-exclusive-interview-about-pushpa-and-his-career

``ஜெயிக்கிறது இல்ல; எங்களைத் தேடி வர்ற அந்தப் பாசம்தான் மோட்டிவேஷன்!" - புறா பந்தயங்களின் கதை

தஞ்சாவூர் அருகே உள்ள புற வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தில் திருவண்ணாமலையிலிருந்து 170 கிலோ மீட்டரை இரண்டு மணி நேரத்தில் புறாக்கள் பறந்து கடந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதாக அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். குழந்தையைப் பராமரிப்பது போல் பராமரித்து புறாக்களை வளர்ப்பதாகக் கூறும் அவர்கள் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போலவே புறா பந்தயமும் பாரம்பர்ய விளையாட்டுதான் என்றும், இதை ஊக்குவிக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்கின்றனர்.

புறா வளர்ப்பவர்கள்

Also Read: `பாம்புகள் இதற்காகத்தான் விஷத்தைப் பயன்படுத்துகின்றன!' - பாம்புக்கடியும் மூடநம்பிக்கைகளும்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் புறா வளர்ப்பதிலும், புறா பந்தயம் நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர்கள், பாபநாசம் ரேஸிங் பீஜியன் சொஸைட்டி என்ற பெயரில் சங்கத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு புறா பந்தய போட்டிகளை நடத்தியுள்ளனர். கடந்த 25-ம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட போட்டியில் 170 கிலோ மீட்டரை 2 மணி நேரம் 11 நிமிடத்தில் பண்டாரவாடை சென்றடைந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய வெற்றி பெற்றன இவர்களது புறாக்கள்.

ஒரு மனிதன் வாகனம் மூலம் சென்றாலே குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். ஆனால், இந்தப் புறாக்கள் 2 மணி நேரத்தில் சென்றிருக்கிறது என ஆச்சர்யம் பொங்க பேசி வருகின்றனர் புறா வளர்ப்பில் ஆர்வம் கொண்டு வளர்த்து வருபவர்கள். பாப நாசம் ரேஸிங் பீஜியன் சொஸைட்டியின் தலைவர் அபுவிடம் பேசினோம். ``எங்க சங்கத்துல 40 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. எல்லோருமே பல வருடங்களாகப் புற வளர்ப்பில் ஈடுபட்டு வருவதுடன் ஒவ்வொருவரும் 50 புறாக்கள் வரை வளர்த்து வருகின்றனர்.

புறா

சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போன்றவை பாரம்பர்ய போட்டிகளாக, கலைகளாகப் பார்க்கப்படுகின்றன. அதே போல் புறா பந்தயமும் பாரம்பர்யமாக மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. தொலை தூரம் பறந்து செல்லக்கூடிய சக்தி கொண்ட பறவையான புறாவை மன்னர்கள் தூது அனுப்புவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். போதுமான பயிற்சி கொடுத்தால் எவ்வளவு தூரத்தையும் புறா எளிதில் கடந்து விடும்" என ஆர்வமாகப் பேசத் தொடங்கினார்.

வளைய ஒன்றில் சீக்ரெட் நம்பர் இருக்கும். அந்த நம்பரை புறாவின் காலில் ஒட்டி விடுவோம். அம்பயர் எனச் சொல்லப்படுகிற கன்வேயரிடமும் சீக்ரெட் நம்பர் இருக்கும் அவர் போட்டிகளைக் கண்காணிப்பதுடன் சங்கத்துக்கு வந்து போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய புறாக்களை பேனரிங் பாக்ஸில் அடைத்து பந்தயம் நடக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு போட்டியையும் இரண்டு கன்வேயர்கள் நடத்துவார்கள்.

எந்த ஊரில் போட்டி நடக்கிறதோ அந்த ஊருக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு அந்த நேரத்தில் யங், ஓல்டு என எந்த புறா பந்தயம் நடைபெறுகிறதோ அந்த புறாக்களைத் திறந்து விடுவார்.

புறா காலில் சீக்ரெட் நம்பர்

அங்கிருந்து புறாக்கள் வளர்க்கப்படும் இடத்துக்குச் சென்று விடும். எந்தப் புறா முதலில் வருகிறதோ அந்தப் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

புறா வளர்ப்பவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள். தங்கள் புறா வந்தடைந்ததும் வளையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சீக்ரெட் நம்பரைப் பார்த்து அதை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து விடுவார்.

இதில் எந்தப் புறா முதலில் சென்றது என்பதை அறிந்து கன்வேயர் வெற்றிப் புறாவை அறிவிப்பார். வெற்றி பெற்ற புறாவுக்கு விழா நடத்தி கோப்பை, சான்றிதழ் கொடுப்படும். கார், பைக் போன்றவை பரிசாக அறிவிக்கப்படும் பந்தயங்களும் நடைபெற்றுள்ளன.

கடந்த வாரம் திருவண்ணாமலையில் நடைபெற்ற போட்டியில் யங், ஓல்டு என இரண்டு பந்தயத்திலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் புறாவை பந்தயத்தில் ஈடுபடுத்தினர். இதில் ஓல்டில் 65 புறாக்கள் போட்டியில் கலந்து கொண்டன. 170 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக இரண்டு மணி நேரம் 11 நிமிடத்தில் வந்தடைந்த புறா முதல் பரிசு பெற்றது. இதே போல் யங் புறா பந்தயத்தில் மொத்தம் 57 புறாக்கள் கலந்து கொண்டன. ஒரு நபர் மூன்று புறாவை பந்தயத்தில் ஈடுப்பட வைத்தனர். இதில் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடத்தில் பறந்து வந்த புறா வெற்றி பெற்றது.

புறா கூண்டு

அடுத்து ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களிலிருந்து போட்டியை நடத்த எங்கள் சங்கத்தினர் திட்டமிட்டு அதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். போட்டி நடக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து அந்த இடத்திலிருந்து புறா வளர்க்கக் கூடிய இடத்துக்கு வருவதற்கு புறாவுக்கு பயிற்சி கொடுப்போம். 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பயிற்சி கொடுக்கத் தொடங்கி பந்தயம் நடக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதி வரை சென்று பயிற்சி கொடுப்போம்.

பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக இரண்டு மாதத்திற்கு முன்னரே தயார் செய்ய தொடங்கிடுவோம். பல நூறு கிலோ மீட்டரில் திறந்து விடப்படும் புறா கழுகு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வளர்த்தவரை தேடி, வளர்க்கும் இடத்துக்கு பறந்து வந்து சேரும். இதில் பரிசு, பாராட்டெல்லாம் இரண்டாம் பட்சம்தான்; வளர்த்தவரை தேடி அந்தப் புறா வரும் அந்தப் பாசம்தான் எங்களைப் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் பங்கெடுக்க வைப்பதற்காக ஆர்வத்தைப் பெருக்கி வருகிறது. புறாவுக்கு பாசம் உண்டு எங்கள் மேல் புறாவும், அதன் மேல் நாங்களும் வைத்திருக்கும் பாசத்தையே இந்தப் பந்தயங்கள் உணர்த்துகின்றன" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கெளரவத் தலைவரான சையது சுல்தான் என்பவர், ``புறாக்களில் மொத்தம் 300 வகை உள்ளன. ரேஸுக்காக வளர்க்கக்கூடிய இந்தப் புறாக்களை ஹோமர் புறாக்கள் என அழைக்கிறோம். இதில் தொலை தூர பந்தயத்தில் பங்கேற்கும் புறாக்களையே மன்னர்கள் காலத்தில் தூது சொல்வதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அபு

ஒரு குழந்தையை எப்படி பராமரிப்போமோ அதே போல்தான் புறாக்களைக் கவனித்து வருகிறோம். பந்தயம் என்றால் கண்ணைக் காக்கும் இமை போல புறாவைக் காக்க வேண்டும். சோளம், கோதுமை, கம்பு உள்ளிட்ட 25 வகையான உணவுகள் புறாக்களுக்குக் கொடுக்கிறோம். அகலமான தண்ணீர் நிரப்பப்பட்ட டிரேயில் படிகாரக் கல், மஞ்சள் தூள், வசம்பு போன்றவற்றைக் கலந்து வாரம் ஒரு முறை குளிக்க வைப்போம். பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காக இதைச் செய்கிறோம்.

40 புறா வளர்க்க மாதம் ரூ. 4,000 வரை செலவாகும். ஒரு புறாவின் ஆயுள் காலம் குறைந்தது 15 வருடங்கள் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை உயிர் வாழும். ப்ளு கிராஸ், வனத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கியே புறா பந்தயங்கள் நடப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு பறக்கும் தன்மை கொண்டது புறா. பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவுக்கு குடலில் உள்ள பூச்சிகள் நீக்குவோம், ஆக்டிவாக இருக்க, பறக்க மாத்திரை உள்ளிட்ட பலவிதமான செயல்களைச் செய்வோம்.

இதற்கு முன் டெல்லியில் நடத்தப்பட்ட போட்டியில் 1,800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்து புறா வெற்றி பெற்றிருப்பது இப்போது வரை ஆச்சர்யத்துடன் பேசப்பட்டு வருகிறது. எந்தத் திசையிலும் திறந்து விட்டாலும் வளர்த்தவனை தேடி அந்தப் புறா வந்து சேரும். அப்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடேதும் இருக்காது. அதற்காகத்தான் பல சிரமங்களைக் கடந்து புறாக்களை வளர்த்து வருகிறோம். புறா பந்தயத்தையும், அதை வளர்ப்பதையும் சிலர் ஏளனமாகப் பார்ப்பதும் இருந்து வருகிறது.

புறா சங்கத்தினர்

Also Read: திருச்சி ஊர்ப்பெருமை: உழவு, ஜல்லிக்கட்டு, பந்தயவண்டி மாடுகள் - மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு ஒரு விசிட்!

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்று புறா பந்தயமும் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்றுதான். அரசு இந்த விளையாட்டின் மீது தனி கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகம் முழுவதும் உள்ள புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக முன் வைக்கிறோம். இதனால் புறாக்கள் காக்கப்படுவதுடன் பாரம்பர்யமான இந்தக் கலையும் காக்கப்படும். எங்கள் சங்கத்தின் சார்பாகப் பல்வேறு புறா பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறு தவறு கூட நடப்பதற்கு வாய்ப்பளிக்காமல் போட்டிகளை நடத்தி வருகிறோம். பந்தயம் நடத்தப்படுவதன் மூலம் புறா ஆயுள் மட்டுமல்ல அதன் மீது நாங்கள் வைத்துள்ள அன்பும் பெருகும்; புறாக்களை வளர்ப்பவர்களும் அதிகரிப்பார்கள்" என அடுத்த போட்டிக்கு தன் புறாவை தயார் செய்யத் தொடங்கச் சென்றார்.



source https://sports.vikatan.com/animals/thanjavur-pigeon-association-members-talks-about-their-emotional-bond-with-pigeons

Doctor Vikatan: சிங்கப்பூரில் இரண்டு டோஸ் ஃபைஸர்; இந்தியாவில் பூஸ்டர் டோஸாக எதை எடுத்துக்கொள்வது?

நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். கொரோனா காலத்தில் அங்கேயே ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டேன். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் எனக்கு வேலைபோய்விட்டதால், நான் இந்தியா திரும்பிவிட்டேன். இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதைப் பார்க்கிறேன். இங்கே மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் போடப்படவிருக்கிற செய்தியைக் கேள்விப்பட்டேன். முதல் இரண்டு டோஸ் ஃபைஸர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நான், மூன்றாவது டோஸாக வேறொன்றை போட்டுக்கொள்ளலாமா?

- மைக்கேல் (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. இரண்டு டோஸ் கோவாக்சின் எடுத்துக்கொண்டவர்கள், மூன்றாவதாக கோவிஷீல்டு எடுத்துக்கொள்ளலாமா, கோவிஷீல்டு எடுத்துக்கொண்டவர்கள் கோவாக்சின் எடுத்துக்கொள்ளலாமா என்பது மிக முக்கியமான சந்தேகமாகத் தொடர்கிறது.

வெளிநாடுகளில் எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், இந்தியாவில் வேறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. இப்படி தடுப்பூசிகளை மாற்றிப்போடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

Covid Vaccination

Also Read: Doctor Vikatan: ஒரே நேரத்தில் ஒருவரை இரண்டு வைரஸ் தாக்குமா?

எனவே சிங்கப்பூரில் ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டுள்ள நீங்கள், இந்தியாவில் மூன்றாவது தவணையாக கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் என எதையும் எடுத்துக்கொள்ளலாம். பிரச்னையில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/i-took-two-doses-of-pfizer-vaccine-in-singapore-which-booster-should-i-prefer

ஆங்கிலப் புத்தாண்டும், அதன் மாதங்களும் உருவான கதை! ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 1

ஹேப்பி நியூ இயர்... வெல்கம் டு 2022!

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதமா, தை மாதமாங்கிறதுல இங்கே ரெண்டு வேறு கருத்து இருக்கு. கொஞ்சம் பேர் திருவள்ளுவர் பிறந்த தினத்தை அடிப்படையா வச்சு திருவள்ளுவராண்டுன்னு காலத்தைக் கணக்கிடுறாங்க.

நமக்கு கொஞ்சம் அந்நியமா இருந்தாலும் உலகம் ஆங்கிலப்புத்தாண்டை அடிப்படையா கொண்டுதான் இயங்குது. ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு பல நாடுகளின் வரலாற்றோட பின்னிப் பிணைஞ்சிருக்கு.

கடந்த 500 வருடங்களாத்தான் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டா கொண்டாடிக்கிட்டிருக்கோம். அதுக்கு முன்னாடி ஆண்டின் முதல் நாள்ங்கிறது வேற வேற மாதிரி இருந்துச்சு.

ஆரம்பத்துல முறைப்படியான ஒரு காலண்டரை உருவாக்கி பயன்படுத்தினது மெசபடோமிய மக்கள்தான். ஆனா, அவங்க காலண்டர்ல ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்ல. ஆண்டுக்கு பத்து மாதங்கள்தான் இருந்துச்சு. மார்ச் 25ம் தேதியிலதான் வருஷமே தொடங்குச்சு.

ரோமன் காலண்டர்

ரோமானியர்களுக்கு இந்தக் காலண்டர் தப்புன்னு தோணுச்சு. மார்ச் 25ங்கிறது சூரியனோட நகர்வுக்கு முரணா இருக்கிறதை கண்டுபிடிச்சு, மார்ச் 1ம் தேதியை புத்தாண்டுன்னு அவங்க கொண்டாட ஆரம்பிச்சாங்க. ரொம்ப நாள் இது வழக்கத்துல இருந்துச்சு.

நூமா பாம்பிளியஸ்ங்கிற ரோமானிய மன்னர் இந்தக் காலண்டரை மாத்தினார். அவர் ஜனவரி, பிப்ரவரின்னு ரெண்டு மாதங்களை உருவாக்கி கடைசி ரெண்டு மாதங்களா காலண்டர்ல இணைச்சார்.

ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்தக் காலண்டர் நடைமுறையை மொத்தமா மாத்தி நிறைய சீர்திருத்தங்கள் செஞ்சார். இயேசு பிறக்கிறதுக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னாடி அவர் உருவாக்கிய காலண்டருக்கு ஜூலியன் காலண்டர்னு பேரு. அவர் ஜனவரி மாசத்தை ஆண்டின் முதல் இடத்துக்குக் கொண்டுவந்தார். ஜனவரி 1ம் தேதியே ஆண்டின் முதல்நாள்னு அறிவிச்சார்.

இந்த ஜூலியன் காலண்டரை பெரும்பாலான நாடுகள் ஏத்துக்கிட்டாங்க. ஆனா பிரிட்டன் மட்டும் ஏத்துக்கலே. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதிதான் உண்மையான புத்தாண்டு. அதைத்தான் உலகம் கொண்டாடனும்னு அவங்க அறிவிச்சாங்க.

இப்படிப் பல பிரச்னைகள் நடக்க, அந்த காலண்டர்லயே பிரச்னை இருக்குன்னு போப் 13ம் கிரிகோரி கண்டுபிடிச்சார். மெசபடோமியர்கள், ரோமானியர்கள் எல்லாருமே சூரியனை பூமி சுற்றி வர்ற காலத்தைக் கணக்கிட்டே ஆண்டை வடிவமைச்சாங்க. ஒருமுறை பூமி சூரியனைச் சுற்றிவர முன்னூற்றி அறுபத்தஞ்சே கால் நாள் ஆகும். பாம்பிளியஸ், சீசர் ரெண்டு பேருமே இந்த கால் நாளை கணக்குலயே எடுத்துக்கலே. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் தனியா நின்னுச்சு. போப் கிரிகோரி, அந்த ஒரு நாளை நாலாவது வருஷ பிப்ரவரி மாதத்துல சேர்த்து, அதுக்கு லீப் ஆண்டுன்னு பேரு கொடுத்தார். நாலு ஆண்டுக்கு ஒருமுறை வர்ற பிப்ரவரி மாதத்துக்கு மட்டும் 29 நாள் வரும்.

முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலண்டர் வடிவங்களுள் ஒன்று

இந்த அறிவியல்பூர்வமான சீர்திருத்தத்தை உலகம் முழுவதுமே ஏத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எல்லா நாடுகள்லயுமே ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டா ஏத்துக்கிற நடைமுறை தொடங்கிடுச்சு.

ஆங்கிலப் புத்தாண்டு எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டோம். இனி ஆங்கில மாதங்களோட பெயர்கள் எப்படி வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.

ரோமானியர்கள் எந்த ஒரு செயலையும் தொடங்குறதுக்கு முன்னால ஜானூஸ்-ங்கிற கடவுளை வணங்குவாங்க. ஆண்டோட தொடக்கத்துக்கும் ஜானூஸைக் குறிக்கிற மாதிரி ஜனவரின்னு பேரு வச்சுட்டாங்க. ஜானூஸ் கடவுளைப் பத்தி இன்னொரு செய்தியும் இருக்கு. கடந்த காலத்தையும் வரும் காலத்தையும் குறிக்கிற மாதிரி அவருக்கு ரெண்டு தலைகள் உண்டு.

ரோமானியர்கள் தங்கள் பகுதியை தூய்மைப்படுத்தி புதிதாக்குறதை ஒரு விழாவாவே கொண்டாடுவாங்க. அந்த விழாவுக்குப் பேரு Februa. அந்த விழா வர்ற ஆண்டோட ரெண்டாவது மாசத்துக்கு பிப்ரவரின்னு பேரு வச்சுட்டாங்க.

ரோமானியர்கள் விவசாயத்துக்கான கடவுளா வணங்கப்படுறவர் மார்ஸ். வேளாண்மைக்கான மாதமான மூன்றாம் மாதத்தை விவசாயக் கடவுளின் பெயரால மார்ச்னு அழைக்கத் தொடங்கினாங்க.

ஏப்ரிலிஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு 'திறப்பு'ன்னு பொருள். மலர்கள் மலரும் காலம் இது. ஏப்ரிலிஸ் தான் ஏப்ரல்னு மாத்தப்பட்டிருக்கு. கிரேக்க - ரோமானிய பெண் கடவுளான மையாவோட நினைவாத்தான் மேங்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கு. மையா தான், குழந்தை வரம் கொடுக்கிற தெய்வம்.

கடவுள்களின் ராணியான ஜூனோவின் நினைவா ஜூன்ங்கிற பேரும் ஜூலியன் காலண்டரை உருவாக்கின ஜூலியஸ் சீசர் நினைவா ஜூலைங்கிற பேரும் வந்துச்சு. ரோமானிய சர்வாதிகாரியான அகஸ்டஸ் சீசருக்கு மரியாதை செலுத்தும் விதமா ஆகஸ்ட்ங்கிற பேர் வைக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசரின் உருவச் சிலை

ஆரம்பத்துல ஓராண்டுங்கிறது பத்து மாதங்கள் கொண்டதாத்தான் இருந்துச்சுன்னு பாத்தோம். ரோமானிய மொழியில ஏழைக் குறிக்கிற வார்த்தை செப்டம். எட்டைக் குறிக்கிற வார்த்தை நாவெம். பத்தைக் குறிக்கிற வார்த்தை டீசெம். எட்டாவது மாதம், ஒன்பதாம் மாதம், பத்தாம் மாதங்கிறதைக் குறிக்க அதுவே செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்ன்னு மாறிடுச்சு.

காலம் அதோட தடத்துல ஒடிக்கிட்டே இருக்கு. ஆண்டுகளும் அடுத்தடுத்து வந்து போய்க்கிட்டிருக்கு. நம் வாழ்க்கையில இந்தாண்டு என்ன செஞ்சிருக்கோம்ங்கிற அளவுகோல்தான் அடுத்தாண்டுக்கான உந்துதலாவும் உற்சாகமாவும் அமையும். இனிமேல் இதைச் செய்யமாட்டேன், இதைச் செய்வேன்னு வலிமையா ஒரு உறுதிமொழி எடுத்துக்கோங்க. உறுதியா அதைக் கடைபிடிங்க.

2022 நம்பிக்கையான, மகிழ்ச்சியான ஆண்டா அமையனும். ஒருத்தருக்கொருத்தர் நம்பிக்கையா இருப்போம். நோயை, பதற்றத்தை, நெருக்கடிகளை வெல்வோம்!

Happy New Year... Welcome to 2022!


source https://www.vikatan.com/lifestyle/nostalgia/how-the-english-new-year-and-calendar-came-into-existence-new-year-special-daily-series

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை... தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

தஞ்சாவூரில் அரசு உதவிபெறும் பள்ளியின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலையினை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலை வைத்திருந்த சாமியப்பா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிப்பவர் சாமியப்பா. இவர் மகன் அருணபாஸ்கர் அதே பிளாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றினை நடத்திவருகிறார் சாமியப்பா. இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கோயிலிலிருந்த பழமையான மரகத லிங்க சிலை ஒன்று காணாமல் போனது. அந்த சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடம் பழமையான சிலைகள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாக தொடங்கினார்கள்.

சாமியப்பா பிளாட்

இதையடுத்து நேற்று முன் தினம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட போலீஸார் தஞ்சாவூரில் உள்ள சாமியப்பா பிளாட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சாமியப்பா மற்றும் அவர் மகன் அருணபாஸ்கரிடம் விசாரித்ததாக தெரிகிறது. பின்னர் பச்சை நிற மரகத லிங்கம் குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். மரகத லிங்கம் வீட்டில் இல்லை என்றும், வங்கி லாக்கரில் இருப்பதாகவும் அருணபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், நேற்றைய தினம் வங்கி லாக்கரிலிருந்த மரகத லிங்க சிலையினை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர். இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``2016-ல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் இருந்த பழமையான மரகத லிங்க சிலை திருடு போனதாக ஆதீனத்தின் கண்காணிப்பாளர் சவுரி ராஜன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடம் இருந்து பச்சை நிற மரகத லிங்க சிலை மீட்டிருக்கிறோம். சிலையினை மீட்பதற்காக சென்ற போலீஸாரிடம் குறிப்பிட்ட மரகத லிங்கம் சிலை பாரம்பர்யமாக நாங்கள் வைத்திருக்கிறோம். இது எங்களுடைய சிலை என தெரிவித்தனர். அப்படியானால் சிலைக்கான ஆவணத்தை காட்டுங்கள் என கேட்டோம்.

மீட்கப்பட்ட மரகத லிங்கம்

ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் இல்லை. அப்போது சிலை உங்களுடையதுதான் என்பதற்கான ஆவணம் இருந்தால் வரும் 5-ம் தேதிக்குள் எடுத்து சமர்ப்பியுங்கள் என்றுகூறினோம்.

அதைத் தொடர்ந்து, வங்கி லாக்கரிலிருந்த சிலை மீட்கப்பட்டு சென்னை எடுத்து செல்லப்பட்டது. ஜெர்மாலஜிட் மூலம் இது மரகத சிலைதான் என்பதை உறுதி செய்திருக்கிறோம். அதன் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் எனவும் தெரிகிறது. மீட்கப்பட்ட சிலை திருக்குவளை கோயிலில் காணாமல் போனதா? என்றும் மரகத லிங்க சிலை காணாமல் போனதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை செய்து வருகிறோம். அதன் முடிவிலேயே முழு விவரம் தெரியவரும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/emerald-lingam-statue-worth-rs-500-crores-recovered-in-tanjore

இந்தப் புத்தாண்டில் சொந்தமாகத் தொழில் தொடங்க ஆசையா? இந்த 6 விஷயங்களை கவனியுங்க!

அதிகமாகத் திட்டமிடுங்கள்

நிறைய திட்டமிட வேண்டும். இதற்கு அதிக காலம் ஆனாலும் பரவாயில்லை. பின்னர் செயல்முறையில் வேகத்தைக் கூட்டிக் கொள்ள முடியும். திட்டமிடலில் ஒரு பகுதியாக சந்தைக் கணிப்பு (மார்க்கெட் சர்வே) இருந்தாக வேண்டும். குறைந்தபட்ச தயாரிப்பு, திடீர் தேவைகள் எப்போது உருவாகும் போன்றவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

திட்டமிடல்

அருகிலிருப்பது சிறப்பு

தயாரிப்புக்கான அடிப்படைப் பொருள்கள் கிடைக்கும் இடம் அல்லது விற்பனை கூடம் ஆகிய இரண்டில் ஒன்றாவது அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போக்குவரத்துச் செலவு குறையும். தயாரிப்புத் தொழில் என்றால் உதிரி பாகங்கள் கிடைக்கும் இடம், ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை அருகில் இருப்பது நல்லது.

தவிர்ப்பது நல்லது

சில இடங்களில் அடிக்கடி போராட்டங்கள் நடைபெறும். கூட்டங்களுக்கான மைதானங்களும் அங்கு இருக்கலாம். அப்படியான பகுதிகளில் தொழில் தொடங்குவதைத் தவிர்த்துவிடுவது புத்திசாலித்தனம்.

வாக்குகள் மீறப்படுவதற்கல்ல

கொடுக்கப்படும் எந்த வாக்குறுதியையும் காப்பாற்ற வேண்டும். நம்பகத் தன்மையை இழந்துவிட்டால் வெற்றி பெற முடியாது.

பிளான் B

எல்லாவற்றிற்கும் ப்ளான் ‘பி’

மாற்றுச் சூழல்களுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் வழக்கத்தைவிட ஒரு மாதம் தாமதமாகப் பணம் கொடுத்தால்? உங்களுக்கு ஒரு மாதம் உடல்நலம் இல்லாது போனால்? இப்படிக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு முன்னதாகவே தயார் செய்து கொள்வது நல்லது.

உரிய அவகாசத்தை அளியுங்கள்

‘அக்ளி டக்ளிங்’ என்ற கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாத்துக் குஞ்சு ஒன்றுக்கு பெருத்த சோகம். அது பார்ப்பதற்கு அழகில்லாமல் இருப்பதாக அதன் நண்பர்கள் அதனுடன் விளையாட மறுத்தனர். தினமும் தண்ணீரில் தன் தோற்றத்தைப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மை கொண்டது.

வாத்து

ஒருநாள் தண்ணீரில் தன் பிம்பத்தைப் பார்த்ததும் தான் மிக அழகிய தோற்றம் கொண்ட அன்னமாக மாறிவிட்டதை அது உணர்ந்தது.

'அக்ளி டக்ளிங்' உணர்த்துவது இதைத்தான். எது குறித்தும் உடனடியாக ஒரு முடிவுக்கு வராதீர்கள். எந்தப் பலனும் உடனடியாக வந்து சேரும் என்று நி​னைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். நீங்கள் நினைக்கும் சிறப்பு வந்து சேரும்.



source https://www.vikatan.com/business/miscellaneous/keep-these-six-things-in-mind-before-starting-a-business

எப்படி இருக்கிறது நடிகர் ஜி.வி.பிரகாஷ் வீட்டித்தோட்டம் விசிட்? | Actor G V Prakash Home Garden Tour



source https://www.vikatan.com/news/agriculture/actor-g-v-prakash-home-garden-tour

Automatic Pocket Rocket: Yamaha Aerox 155

The Yamaha Aerox 155 has evolved beyond the mental image of a regular scooter. It was most evident while refuelling this Maxi scooter at the petrol station. The attendants asked, "I can’t spot the petrol tank? Is this a scooter or bike? What scooter is this?" Such questions prove that this scooter is a sure head-turner.

Design

Aerox has come up with a fresh new design, breaking all stereotypes of having a 'flat floorboard for family riding.' There is a minor intersection between the seat and handlebar, although that will affect the practicality of the scooter. It’s a new design element we welcome.

Starting with the LED headlight and sharpening of the back. Larger tyres, a slightly bulky exhaust system compared to other scooters and sporty rear twin shock absorbers. When riding the Aerox weighing 126 kg, we also got the feeling of riding a slightly larger bike. It even looks big.

The fuel tank upfront looks amazing. While refuelling, there is no need to get off the scooter. If it had been slightly flatter, it could have been used to store stuff. For taller riders, the knee gap in front will prevent them from moving back and forth.

Yamaha has given 24.5 litres of space under the Aerox seat. A large helmet can be placed under the seat, which is rather unique. But, is the 5.5-litre fuel tank enough for this performance scooter of Yamaha?

VVA - Variable Valve Actuation Technology

Features

Aerox is a premium scooter with a large engine and it needs to be equipped accordingly. In this regard it doesn’t outshine, it’s just acceptable. LED headlights and tail lights are great, nights are now bright. Indicators can also be upgraded to LEDs for an additional Rs 1,500. The fully Digitalized Instrument Cluster looks special. Trip meter, fuel consumption and tachometer details are available.

Although there is Bluetooth connectivity, there is no navigation control on the screen. Calls and SMS alerts will come if desired. The last place where the scooter was parked can be known through Yamaha Connect mobile app. Fuel cap and slip buttons are provided near the keyhole.

It also has an automatic start/ stop feature. We can turn this off if we want. When it is on, the scooter automatically shuts off, if it stops for 2 or 3 seconds at the signal. Twist the accelerator a little and the bike will turn on again. Charging port, side stand cut off features add value to the package.

Aerox, which is sold overseas, has a keyless feature. But in India, that option isn’t given. Also, in other countries, preload-adjustable gas-charged shock absorbers are provided. In case you need the shockers to be upgraded an additional Rs 17,000 will have to be spent to get gas-charged shock absorbers.

Buttons to open the seat and fuel cap
Twin shock absorbers at the rear

Engine and Performance

This is where the Aerox shows its uniqueness and true colours. Yamaha has used the same engine as the 155cc mill in the R15. It uses a 155cc liquid-cooled engine with 4 valves. The engine is so smooth that there is no vibration even at 100 kmph I was able to cruise and fly beautifully on the highways at speeds of 90 – 95 kmph. Aerox gives you the acceleration needed to overtake, even at speeds of 90 kmph. It was able to go up to a maximum speed of 115 kmph.

How is it in the city? Aerox shows inherent speed within the city. With a refined engine; the throttle response is also awesome. Great fuel efficiency cannot be expected if you ride fast. You will get less than 40 kmpl. But with the right handling at the right speed, you can get 50 kmpl. Engine Start/ Stop feature is good in urban traffic. The exhaust note could have been sportier to match the sporty nature of the scooter.

LED Headlights

Should I buy it?

Yamaha has boldly launched a performance scooter in India with such a design. With an ex-showroom price of Rs 1.29 lakh, Aerox justifies it with an excellent product. Aerox will definitely appeal to those who want a scooter, which is sporty and has superb performance. Performance aside, Aerox will struggle to impress those who want a scooter for practicality. Most scooters in India are bought for practical purposes only. It remains to be seen how the Aerox will fare in the Indian market.



source https://www.vikatan.com/automobile/motor/automatic-pocket-rocket-yamaha-aerox-155

திருவெம்பாவை - 17: அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத நம் ஆதிசிவனைப் போற்றி வணங்குவோம்!

"செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!"

ஈசன்

தேன் சிதறும் பூக்களைச் சூடிய கருங்கூந்தலைக் கொண்ட பெண்ணே, செந்தாமரைக் கண் கொண்ட திருமால், நான்முகன், மற்றும் தேவர்கள் எல்லாம் இணைந்தும் தர முடியாத பரவசத்தை; இன்பத்தை வழங்க இதோ நம் தேவாதிதேவனான ஈசன் தர வந்து கொண்டிருக்கிறான். வீதி உலா வந்து வீடுகள் தோறும் எழுந்தருள வந்து கொண்டிருக்கிறான். சிவந்த தாமரை போன்ற குஞ்சித பாதமாம் அவன் திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சப்பரம் ஏறி வருகிறான். அழகியக் கண்களை கொண்டவனும், அடியார்களுக்கு விருப்பமான அமுதமானவனுமான நம் ஈசனை வணங்கி நலன்கள் பெற விரைந்து வா பெண்ணே. ஈசனை தரிசிக்க வரும் பெண்ணே, தாமரை மலர்கள் மலர்ந்து கிடக்கும் இந்த தடாகத்தில் நீராடி ஐந்தெழுத்தை ஓதியபடி அவனுக்குக்காகக் காத்திருப்போம். அன்புக்கு மயங்கும் அவன் நமக்கு சேவகம் செய்யவும் கூடியவன். அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத நம் தலைவனைக் கூடி வழிபடுவோம் வா தோழி.

அருமையான மார்கழி அதிகாலைப் பொழுது. இது தேவர்களுக்கு ஈசனை ஆராதிக்கும் வேளை கூட! இந்த நேரத்தில் இப்படி சோம்பல் கொண்டு உறங்குகிறாயே, நமக்காக நம் ஈசன் கிளம்பி வீதி உலா வந்து கொண்டிருக்கிறான் பார். நமக்கு சேவகம் செய்யவே விரைந்து வரும் நம் தலைவனை எதிர்கொண்டு வரவேற்பது தானே முறை. அதை விடுத்து தூக்கம் எனும் வலையில் சிக்கிக் கொண்டிருக்கலாமா! எத்தனை தேவர்கள் இணைந்தாலும் தரமுடியாத அற்புத பேரானந்தத்தைத் தரக் கூடியவன் நம் ஈசன். அவனை தரிசிக்க எழுந்து வா தோழி என்கிறது பாடல்.

மதுரையம்பதி சொக்கநாதன்

ஒரு பிரம்மனின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் பிறந்து மறைந்து போகிறார்கள். திருமாலின் ஆயுளுக்குள் பல லட்சம் பிரம்மன் வாழ்ந்து மறைகிறார்கள். அதேபோல் ருத்ரனின் ஆயுளுக்கும் பல லட்சம் திருமால் மறைந்து போகிறார்கள். ருத்ரர்களும் வந்தும் மறைந்தும் போக சிவம் நிலைத்து சகலத்தையும் கவனித்து வருகிறது. என்றுமே அழிவில்லாத நம் தலைவன் தொண்டர்களின் சேவகனாக விளங்கி வருபவன். அவனுக்கு கால அளவுகள் இல்லவே இல்லை. இதையே அப்பர் சுவாமிகள்...

"நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்; ஆறு கோடி நாராயணர் அங்கனே; ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்; ஈறிலாதவன் ஈசன் ஒருவனே!' என்று வியக்கிறார்.

என்றும் எங்கும் நிறைந்திருக்கும் சிவம் அன்புக்கு ஏங்கும் தன்மை கொண்டது. காலகாலமாய் தவம் இயற்றிய ஞானிகளுக்கு வராத சிவம், பல யாகங்கள், பூசைகள் செய்த ரிஷிகளுக்கு வராத தெய்வம், தமது அடியார்களுக்குத் தொண்டு செய்த எளிய மக்களை நோக்கி ஓடிவந்துள்ளது. 'உம்மால் ஆகக் கூடிய காரியம் ஒன்று உண்டு' என்று நாயன்மார்கள் பலரின் வீடு தேடி ஓடி வந்துள்ளது. அதுதான் சிவம்! எளிய வழி வந்த நம் ஆதிசிவம் எப்போதும் அன்பு கொண்டவர்களை ஆட்கொண்டு வந்தே உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் வந்தியம்மை எனும் பிட்டு விற்ற மூதாட்டியைச் சொல்லலாம்.

ஈசன்

மாணிக்கவாசகரை சுடுமணலில் மண்டியிடச் செய்து தலையில் கல்லைச் சுமக்கச் செய்த அரிமர்த்தன பாண்டியனின் அடாத செயலுக்கு ஈசன் கோபம் கொண்டான். வைகையைக் கரைபுரண்டோடச் செய்தான். மதுரை வெள்ளத்தில் மூழ்க, வீட்டுக்கு ஒருவர் வைகை வெள்ளத்தை அடைக்க வேண்டும் என பாண்டியன் அறிவித்தான். மாணிக்க வாசகரின் பெருமையை உலகறியச் செய்யவும், அரிமர்த்தனின் அறியாமையை உணர்த்தவும் மதுரைக்கு இறங்கி வந்த தெய்வம், நேராகச் சென்றது வந்தியம்மை வீட்டுக்குத்தான். ஏன் தெரியுமா! பிள்ளைப் பேறு இல்லாத அந்த பெருமாட்டி மதுரையம்பதி சொக்கநாதனையேப் பிள்ளையாகக் கருதி வழிபட்டு வந்தாள். அவளுக்கான கடனைத் தீர்க்கவும், அவளுக்கு சேவகம் செய்ய கருணை தெய்வம் ஓடிவந்தது.

அழகான இளைஞனாக வந்தியின் வாசலுக்கு வந்த சிவம், 'கூலி கொடுத்து ஆள் கொள்வாருண்டோ!' என்று கூவியது. எத்தனையோ செல்வர்கள் இருக்க, இந்த ஏழையைத் தேடி வந்திருக்கிறாயே அப்பா, மன்னனின் ஆணைப்படி வைகையை அடைக்க எனக்கு ஆள் வேண்டும்தான். ஆனால் கூலி தர என்னிடம் பொருள் ஏதும் இல்லையே' என்றாள் வந்தியம்மை. 'சரி வேறு என்னதான் தருவாய்!' என்றது சிவம். 'நான் இன்று விற்க இருக்கும் பிட்டில் கொஞ்சம் தருவேன் சம்மதமா!' என்றாள் கிழவி. 'ஆஹா நீ வேறு ஏதேனும் பொருள் கொடுத்து அதை நான் கொண்டு போய் உணவைச் சம்பாதிப்பதை விடவும் இது எளிது. நீ அதையேக் கொடு! என்றார் ஈசன்.

வந்தியம்மை

'அதிலும் ஒரு சிக்கல், முழு பிட்டை நான் விற்றுக் கொள்ள எடுத்துக் கொள்வேன், உதிர்ந்தவைகளையே உனக்குக் கொடுப்பேன்' என்றாள் கிழவி. 'பிட்டை உதிர்க்க வேண்டிய சிரமமும் எனக்கில்லை' அப்படியே கொடு என்றது சிவம். விளையாடல்களின் தலைவனான சிவம் அந்த கிழவியிடமும் தனது லீலையைத் தொடர்ந்தது. அன்று அவித்த அத்தனை பிட்டுக்களும் உடைந்தே வந்தது. 'இன்று ஈசன் விதித்தது பட்டினி தான் போலும் என்று எண்ணிய வந்தி, அத்தனை பிட்டுக்களையும் ஈசனிடம் அளித்து விட்டாள். அந்த அன்புக்கு உருகிய ஈசன், அவளையும் தன்னுள் இணைத்துக் கொண்டார். காலம்தோறும் அவளை மறவாதிருக்க மதுரையம்பதியில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' என்ற விழாவை ஆவணி மூலத்திருவிழாவில் உருவாக்கினார். அவள் வாழ்ந்த வீடு இன்றும் 'வந்தியம்மை ஆலயமாகவும்' உள்ளது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

ஒரு வாய் பிட்டுக்கு முக்தியும் ஆராதனையும் அளித்த ஈசன் நம் எல்லோருக்கும் இனியவன், அவன் புகழைப் பாட தாமதிக்கலாமா! எல்லோரும் விரைந்து வாருங்கள்!

'வேத நாயகன் வேதியர் நாயகன்

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

ஆதி நாயக னாதிரை நாயகன்

பூத நாயகன் புண்ணியத் திருவடி பணிவோம்!



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-17-thiruvempavai-song-17-to-lord-siva-by-manickavasagar

ஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு...



source https://www.vikatan.com/events/announcements/car-design-training-event

வியாழன், 30 டிசம்பர், 2021

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வலியுறுத்தப்படும் புரத உணவு; வெஜிடேரியன்களுக்கு எதில் கிடைக்கும்?

நான் வெஜிடேரியன் உணவுப்பழக்கம் உள்ளவன். முதல் அலையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டவன். கொரோனா காலத்தில் புரதச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். சைவ உணவுகளில் போதுமான புரதம் கிடைக்காது என்கிறார்கள் சிலர். சைவ உணவுக்காரர்கள் புரதத் தேவைக்கு என்ன செய்வது? பருப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ளும்போது வாயுத் தொந்தரவு வருவதை எப்படித் தவிர்ப்பது?

- சிவகுமார் (விகடன் இணையத்திலிருந்து)

ஷைனி சுரேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

``மனிதர்களின் ஆரோக்கியத்தில் புரதச்சத்துக்கு முக்கியமான பங்குண்டு. கொரோனா காலத்தில்தான் அதன் தேவை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் புரதம் முக்கியப் பங்காற்றுகிறது. அதனால்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள். தசைகளின் வளர்ச்சிக்கும், ஆன்டிபாடி, ஹார்மோன்கள் மற்றும் என்ஸைம்களின் சுரப்புக்கும் புரதச்சத்து மிக அவசியம். பழைய செல்களைப் பழுதுபார்த்து, புதிய செல்களை உருவாக்கவும் புரதம் தேவை. சருமத்தைத் தொய்வின்றி வைத்திருக்க உதவும் கொலாஜனை சப்போர்ட் செய்து, இளமைத் தோற்றத்துக்கு உதவுவதிலும் புரதம் தேவைப்படுகிறது. இவ்வளவு ஏன்... சருமம், நகங்கள் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் புரதம் மிக மிக அவசியம். எடைக்குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு, சரியான எடையைத் தக்கவைத்து, தசைகளின் வளர்ச்சிக்கு உதவி, கொழுப்பைக் கரைப்பதில் உடலுக்கு உதவுவதும் புரதம்தான்.

சைவ உணவுக்காரர்கள் பருப்பில் மட்டும்தான் புரதம் இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டாம். சைவ உணவுக்காரர்களுக்கு பனீர், தயிர், சோயா, டோஃபு என்ற சோயா பனீர், சோயா சங்க்ஸ், உலர்ந்த சோயா பீன்ஸ் பருப்பு, நட்ஸ், நட்ஸிலிருந்து பெறப்படும் வெண்ணெய், தயிர், பால், விதைகள், பச்சைப் பட்டாணி, கீன்வா, காளான்... இப்படி இன்னும் பல உணவுகளில் புரதச்சத்து கிடைக்கும்.

Also Read: Doctor Vikatan: தடுப்பூசி போட்ட பிறகு எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள முடியுமா?

பால் உணவுகள்கூட எடுத்துக்கொள்ளாத வீகன் உணவுக்காரர்களுக்கும் பிரவுன் ரைஸ், பட்டாணி போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன.

பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது வாயுத் தொந்தரவு வருவதாகப் பலரும் சொல்லக் கேட்கிறேன். சமைப்பதற்கு முன்பாக, பருப்பை ஊறவைப்பது, முளைகட்டுவது, புளிக்கவைப்பது, ஆவியில் வேகவைப்பது போன்றவற்றின் மூலம் வாயுப் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். ஒருவேளை இப்படியெல்லாம் செய்தும் வாயுத் தொந்தரவு நீடித்தால் குறிப்பிட்ட அந்தப் பருப்பைத் தவிர்த்துவிடுங்கள்.

முளைகட்டிய பயறு

Also Read: Doctor Vikatan: தினமும் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

தினசரி உங்களுக்குத் தேவைப்படும் புரதத்தை மூன்று வேளை உணவுகளிலும் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவுடன் எடுப்பதற்கு பதில் ஒருவேளை புரதத்தை மட்டும் மாலையில் எடுத்துக்கொள்ளவும். காய்கறிகளின் அளவை அதிகரிக்கும்போது கூடவே புரதமும் சரியான அளவுக்கு எடுத்துக்கொள்கிறீர்களா என்று பாருங்கள். உடலின் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ஒரு கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கணக்கு. 50 கிலோ எடை கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உறுதிசெய்துகொள்ளுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/what-kind-of-protein-rich-food-a-vegetarian-should-take-especially-during-pandemic

``என் பையன் `நோ' சொல்லியிருந்தா நானும் மறுத்திருப்பேன்; ஆனா..!" - கம்பேக் பற்றி ஶ்ரீலேகா

`தினம்தோறும் வாங்குவேன் இதயம்...' - நல்லெண்ணெய் விளம்பரத்துக்கான இந்தப் பாடல், நடிகை ஜோதிகாவுக்கு மட்டுமல்ல, ஶ்ரீலேகாவின் குரலுக்கும் தமிழகத்தில் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

ஶ்ரீலேகா பார்த்தசாரதி

`கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?', `கொக்கு மீன திங்குமா?', `திம்சுகட்ட...', `வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல...' போன்ற ஹிட் பாடல்கள் பலவற்றைப் பாடிய பின்னணிப் பாடகி ஶ்ரீலேகா பார்த்தசாரதி, தற்போது முழு நேர நடிகையாகியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் `ரஜினி' சீரியலில் முக்கியமான ரோலில் நடிப்பவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கரியர் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

``என் பையன் பிறந்ததுக்குப் பிறகு, ஒரு கட்டம்வரை அவன் கூடவே இருக்கணும்னு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு, மறுபடியும் மீடியா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. என் பையனுக்கு இப்போ ஆறு வயசுதான். ஆனா, `ரஜினி' சீரியல்ல 50 வயதைக் கடந்த அம்மா ரோல்ல நடிக்கிற வாய்ப்பு எனக்கு வந்துச்சு. `நடிக்கலாமா, வேண்டாமா..?'னு எனக்குள் நிறைய கேள்விகள். பையனும் நானும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். அவன்கிட்ட ஒப்பீனியன் கேட்டுட்டு, அன்னிக்கே சேனல் தரப்புல ஓகே சொல்லிட்டேன். என் பையன் என்ன சொன்னான் தெரியுமா..?" - சஸ்பென்ஸுடன் உரையாடலைத் தொடங்கும் ஶ்ரீலேகா, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லியில்.

ஶ்ரீலேகா பார்த்தசாரதி

மகன் குறித்த சஸ்பென்ஸை உடைக்கும் முன்னர் தனது மீடியா அறிமுகத்தைப் பகிர்ந்தார்.

``ஸ்கூல் படிக்கும்போதே மியூசிக்ல அதிக ஆர்வம். மியூசிக் கத்துக்கிட்டு, காலேஜ் படிக்கும்போதே 14 மொழிகள்ல நிறைய விளம்பரப் படங்களுக்குப் பாடினேன். எனக்கு சினிமாவுல பாடணும்ங்கிறது பெரிய கனவு. சென்னையில நிறைய மியூசிக் டைரக்டர்களைச் சந்திச்சு, என் குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளைக் கொடுத்து வாய்ப்பு கேட்டேன். அந்த நேரத்துல வெளியான இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் என் குரலைப் பலருக்கும் தெரியப்படுத்துச்சு.

திடீர்னு ஹாரிஸ் ஜெயராஜ் சார்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. அவர் மியூசிக்ல `லேசா லேசா' படத்துல `ஏதோ ஒன்று ஏதோ ஒன்று' பாடல் பாடினேன். ஆனா, அந்தப் படம் வெளியாகுறதுல வருஷக்கணக்குல சிக்கல் ஏற்பட்டுச்சு. வாய்ப்பு தேடி சென்னை வந்து மூணு வருஷம் கடந்தும், என் குரல்ல ஒரு சினிமா பாட்டு கூட ஒலிக்கலை. சின்ன வயசுலேருந்தே முடிஞ்சவரைக்கும் பிறரைச் சாராம இயங்கணும்ங்கிறது என் கொள்கை. அதனால, சென்னையில தங்கியிருந்த காலத்துல, குடும்பத்தினரின் பண உதவியை எதிர்பார்க்காம, என் சொந்த சேமிப்பை வெச்சே காலத்தை நகர்த்தினேன். ஒருகட்டத்துல டெல்லிக்கே திரும்பி போயிட்டேன்.

எஸ்.பி.பி உடன் ஶ்ரீலேகா

அதுக்கப்புறமா `லேசா லேசா' படம் வெளியாகி, நான் பாடின பாடலுக்கு வரவேற்பு கிடைச்சது. பிறகு, முன்னணி மியூசிக் டைரக்டர்கள் பலரோட இசையிலும் பாட வாய்ப்புகள் கிடைச்சது. மெலடி உள்ளிட்ட எல்லா விதமான பாடல்களும் பாடணும்னு எனக்கும் ஆசை இருந்துச்சு. ஆனா, `கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?' பாடலோட வெற்றிக்குப் பிறகு, அதேபோல துள்ளலான பாடல் வாய்ப்புகளே எனக்கு அதிகமா கிடைச்சது. அதனால, ஆரம்பத்துல நான் வருத்தப்பட்டேன். `துள்ளலான பாடலைப் பாடவும் பல சிங்கர்ஸ் இருந்தாலும், உங்களுக்கு இதுமாதிரியான வாய்ப்புகள் அதிகமா வர்றதும் நல்லதுதானே...'ன்னு பாசிட்டிவ்வா ஊக்கம் கொடுத்தார் ஶ்ரீகாந்த் தேவா.

வெளியூர், வெளிநாட்டுக் கச்சேரிகள்ல பாடப் போகும்போது, பி.சுசீலா அம்மா, எஸ்.பி.பி சார் உட்பட பெரிய பாடகர்கள் பலருடனும் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவங்க அனுபவங்களையெல்லாம் கேட்டுப் பக்குவப்பட்டு, திரையிசை உலகத்தின் யதார்த்தத்தை முழுமையா புரிஞ்சுகிட்டேன். பாடல் வாய்ப்புக்காக, பல நேரங்கள்ல சங்கடமான பேச்சுகளை எதிர்கொண்டிருக்கேன்; நிராகரிக்கப்பட்டிருக்கேன். அதுக்காகவெல்லாம் வருத்தப்படாம, மியூசிக் டைரக்டர்களோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுற மாதிரி பாடுற என் வேலையைச் சரியா செஞ்சேன்" என்பவர், கல்லூரியில் படிக்கும்போதே கூத்துப்பட்டறையில் நடிப்புக்கான பயிற்சியும் பெற்றிருக்கிறார். `கல்யாண சமையல் சாதம்' மற்றும் `கோலமாவு கோகிலா' ஆகிய படங்களிலும், `நவரசா' (பாயசம்) வெப் சீரிஸிலும் ஶ்ரீலேகா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் ஶ்ரீலேகா

``சினிமா, சின்னத்திரைனு மீடியா இப்போ ரொம்பவே மாறிடுச்சு. ஏதாச்சும் ஒரு துறையில மட்டுமே நம்பியிருக்காம, கிடைச்ச வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கிறதுதான் சரியா இருக்கும்னு புரிஞ்சுதான், நடிக்கவும் ஆரம்பிச்சேன். இந்த நிலையிலதான் பையனுக்காக பிரேக் எடுத்தேன். ஆணோ, பெண்ணோ... சுய சம்பாத்தியம்தான் பலருக்கும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். பையன் ஓரளவுக்கு வளர்ந்துட்ட நிலையில, இனி வீட்டுக்குள்ள முடங்கியிருக்காம, பொருளாதார ஓட்டத்தைத் தொடரலாமேனு நினைச்சேன்.

அப்பதான், சன் டிவி `ராஜபார்வை' ஷோவுல மென்டாரா கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. இந்த ஷோ முடியுற நேரத்துலதான் `ரஜினி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. `நாம நடிக்கிற கேரக்டர் மக்கள் மனசுல இடம் பிடிக்கிறதுதான் முக்கியம். உனக்கு இந்த சீரியல் அப்படியோர் அடையாளத்தைக் கொடுக்கும்'னு என் கணவர் உட்பட பலரும் சொன்னாங்க. ஆனாலும், என்னால முடிவெடுக்க முடியாத நிலையிலதான் என் பையன்கிட்ட பேசினேன்.

'ரஜினி' சீரியலில் ஶ்ரீலேகா

`நான் நடிக்கிறது வயசான அம்மா ரோல். டிவி-யில நான் வரும்போது எனக்கு நரை முடி அதிகமா இருக்கும். சீரியல்ல என்னை பாட்டினுகூட சிலர் கூப்பிடுவாங்க. அதைப் பார்க்கும்போது நீ ஏத்துப்பியா... நான் நடிக்கட்டுமா?'ன்னு என் பையன் ஆருஷ்கிட்ட கேட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, `எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உன்ன எப்படிப் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான். டிவி-யில உன் நடிப்பைப் பார்க்க ஆவலா இருக்கேன்மா'னு சிரிச்சுகிட்டே சொன்னான். சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி சில தினங்கள்தான் ஆகுது. அந்த எபிசோடுகளைப் பார்த்துட்டு என் பையன் பாசிட்டிவ் ஃபீட்பேக் கொடுத்தான்" என்று புன்னகைப்பவரின் குரலில் தாய்மை பூரிப்பு.

இசைத்துறையில் நிறைவேறாத ஆசையைப் பகிரும் ஶ்ரீலேகா, ``முழு நேர ஆக்டிங் அனுபவம் நல்லாதான் இருக்கு. கொஞ்சம் டல் மேக்கப்ல, காட்டன் புடவையுடன் ரொம்பவே சிம்பிளான லுக்தான் எனக்கு. ஆனா, என்கூட நடிக்கிற பொண்ணுங்க கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணுவாங்க. அதைப் பார்க்கும்போது மட்டும் சீரியல் டீம் ஆட்கள்கிட்டயெல்லாம் தமாஷமா ஆதங்கப்படுவேன். சினிமாவுல சில பாடல்கள் பாடியிருந்தாலும், என் கணவர் ஶ்ரீராமுக்கு ஆக்டிங்லதான் அதிக விருப்பம். `சிவகாசி', `வேலையில்லா பட்டதாரி'னு பல படங்கள்ல அவர் நடிச்சிருக்கார். ஆனா, எனக்கு மியூசிக்தான் எப்போதுமே முதல் சாய்ஸ்.

'ரஜினி' சீரியல் டீமுடன்...

Also Read: "நான் தோற்கணும்னு சில போட்டியாளர்கள் பணம் செலவு செஞ்சாங்க!" - சீக்ரெட் சொல்லும் `சர்வைவர்’ விஜி

இன்னிக்கு நிறைய போட்டிகள் உருவாகிடுச்சு. அதையும் தாண்டி நமக்கான இருப்பைத் தக்க வெச்சுக்கிறது பெரிய சவால். அதைச் சமாளிக்க நம்பிக்கையோடு ஓடினாலும், என் கரியர்ல நிறைவேறாத ஆசை ஒண்ணு இருக்கு. பல்வேறு மியூசிக் டைரக்டர்கள்கிட்ட பாடியிருந்தாலும், இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட நான் இதுவரைக்கும் பாடினதில்ல. ரஹ்மான் சார்கிட்டேருந்து ரெண்டு முறை எனக்கு வாய்ப்பு கிடைச்சும், அது நிறைவேறாமலேயே போயிடுச்சு. ஒருவேளை அவர் மியூசிக்ல பாடியிருந்தா சிங்கரா இன்னும் கூடுதலான வளர்ச்சி எனக்குக் கிடைச்சிருக்கும். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் பாடுற வாய்ப்பு நிறைவேறும்னு இன்னும் உறுதியான நம்பிக்கையோடு காத்திருக்கேன்" என்று சிரித்தபடியே முடித்தார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/singer-srilekha-parthasarathy-speaks-about-her-cinema-career-and-new-serial

ஊசிப்புட்டான்: `அவரு காலடியில ஒரு பொணம் கெடக்கு’ | அத்தியாயம் - 15

வகுப்பறையினுள் விஜிலா மிஸ் நுழைந்ததுமே ரவியின் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குமாருக்கு என்னவோபோலாகிவிடும். ``மிஸ்ஸு கறுப்பா டக்கரா இருக்கால்ல மக்களே” என்பதில் ஆரம்பிக்கும் அவனது வர்ணணை, அதன் பிறகு அது எங்கு செல்லும் என்பது அவனுக்கும் தெரியாது, அவன் அருகில் அமர்ந்திருந்து கதை கேட்கும் ஏனையோருக்கும் தெரியாது. ஆனால் அவனுடைய கதை சொல்லல் என்பது அனைவரையும் கிளர்ச்சிக்கு உள்ளாக்கும். அவனது கதைகளைக் கேட்பதற்காகவே அந்தக் குறிப்பிட்ட பீரியடில் மட்டும் அவன் அருகில் அமர மாணவர்களிடையே பெரிய போட்டியே நடக்கும். ரவி இருக்கையே அவனுக்கு முன் பெஞ்ச் என்பதால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் அவனுக்கு இல்லாமல் இருந்தது.

குமாரின் கற்பனை வளம் என்பது அந்த மிஸ்ஸின் உடலோடும் உடையோடும் மட்டுமே நின்றுபோயிருந்ததை எவருமே எதிர்க்கேள்வி கேட்டதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு அதைப் பற்றிய அறிவும் இல்லாமல்தான் இருந்தது.

என்று நினைத்துக்கொள்வான். விஜிலா டீச்சரைப் பற்றிய குமாரின் வர்ணனைகள் ரவியின் மனக்கண் முன் விரியும். அவனது கண்கள் முன்னோக்கி இருந்தாலும், அவனது காதுகள் பின்னோக்கியே திரும்பியிருக்கும். விஜிலா நடத்தும் அறிவியல் பாடம் அவனுக்கு ஒவ்வாமையாக இருந்தாலும், குமார் சொல்லும் கதைக்காக விஜிலாவின் பாட நேரம் எப்போது வருமெனக் காத்திருக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

ரவியின் வகுப்பில் வலது மற்றும் இடது சுவரை ஒட்டி ஏழு வரிசைகளும், நடுவில் மூன்று வரிசைகளும் போடப்பட்டு, ‘ப’ என்கிற தமிழ் எழுத்தின் வடிவில் மாணவர்களுக்கான இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. மூன்று பேர் தாராளமாக அமரத் தோதான டெஸ்க்-பெஞ்சில் ஐந்து பேர் நெருக்கமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அதிலும் கடைசி வரிசையில் ஆறு பேர் வரைக்கும் அமர்ந்திருந்தனர். போலவே வகுப்பில் பாடமெடுக்கும் ஆசிரியர்களின் எல்லை என்பதும் முதல் நான்கு வரிசையோடே நின்றுவிட்டிருந்தது. காரணம் டெஸ்க்-பெஞ்ச் நெருக்கத்தால், கடைசி மூன்று வரிசைகளுக்குள்ளும் நுழைய அவர்களுக்கான பாதைகூட தடைப்பட்டிருந்தது. அதனால் பாடவேளையின்போதே டெஸ்க்கின் கீழே மறைந்துக்கொண்டு மதிய உணவை உண்பதற்கும், பிடிக்காதப் பாட வேளைகளில் தூங்குவதற்கும் கடைசி இரு வரிசைகளில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

ஊசிப்புட்டான்

ரவிக்கு மற்றெந்த வாத்தியார்களைவிடவும், `ஆத்மா’ என்கிற பட்டப்பெயரோடு அழைக்கப்பட்ட வில்சன் வாத்தியாரிடம்தான் அதிக பயம் இருந்தது. காரணம் வேறொன்றுமில்லை. ஆங்கில வகுப்பின் ஆசிரியர்கூட வகுப்பினுள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் வில்சன் மட்டும்தான் அவர் நடத்திய பாடம் சோஷியல் சயின்ஸாக இருந்தாலும், வகுப்பினுள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

போலவே அவர் மட்டும்தான் அந்த வகுப்பில் 80-களின் பெல்பாட்டம் பேன்ட்டையும், கழுதை காலர்வைத்த சட்டையையும் மிகவும் நேர்த்தியாக டக்-இன் செய்து அணிந்து வருவார். ரவி கிட்டத்தட்ட பத்து ரூபாய்க்கு மேல் அவரிடம் ஃபைன் கட்டியிருக்கிறான். அதனால் அவரின் பாட வகுப்பு என்றாலே அவனுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். அதாவது விஜிலா டீச்சரின் வகுப்பின்போது அவனது அடிவயிற்றில் சுரப்பது பரவச அமிலமெனில், வில்சன் சாரின் வகுப்பின்போது அவனது அடிவயிற்றில் சுரப்பது பய அமிலம்.

வில்சனைப் பார்த்ததும் அமிலம் சுரப்பதற்கு மற்றுமொரு காரணம், அவரின் நேரடிப் பார்வையில் ரவி இருந்தான் என்பதும்தான். ரவி வகுப்புக்கு வந்த முதல் நாள்

இவன் எழுந்து நிற்கவும், அவனையும் அவனது உருவத்தையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, ``ஊருக்குள்ள நீ எவ்வளவு பெரிய சட்டம்பியாவும் இருந்துக்க... இந்த காம்பவுண்டுக்குள்ள வந்துட்டன்னா நீ சட்டம்பியும் கிடையாது, சட்டாம்பியும் கிடையாது” என்று கையிலிருந்த பிரம்பை அவனது முகத்துக்கு நேராக ஆட்டிப் பேசினார். அதன் பிறகாக பாடம் நடத்துகையிலும் அவன், அதாவது ரவி அவரது ஓரக்கண் பார்வையிலேயே இருந்தான்.

வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ரவியின் உருவம் சிறிய உருவம் என்பதாலும் ரவியால் வகுப்பின் ஒரு மூலையில் தன்னை ஒளித்து வைத்துக்கொள்ளத் தோதாக இருந்தது. அவனது சிறிய உருவத்தை டெஸ்க்கின் கீழேயோ அல்லது பெஞ்ச்சின் கீழேயோ ஒளித்து வைத்துக்கொள்ளலாம் என்றாலும், அவை எப்போதுமே வேறு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டே இருந்தன.

அந்த வகுப்பில் குமார்தான் மற்ற மாணவர்களைவிடவும் ஒரு வருடம் சீனியராக இருந்தான். அவனுக்கு இந்த ஒன்பதாம் வகுப்பு என்பது இரண்டாவது வருடம். அதனால் அவனிடம் எப்போதுமே ஒரு எகத்தாளமானப் போக்கு இருந்தே வந்தது.

அது கிளர்ச்சியைத் தூண்டும் கதைகளாக இருந்தாலும் சரி, அந்த நேரத்தில் ஊருக்குள் நிகழ்ந்த ரெளடிகளின் வீரதீர பராக்கிரமக் கதைகளாக இருந்தாலும் சரி... உடன் படிக்கும் எவருக்குமே தெரியாத கதைகள் அவனிடம் இருந்தன.

ஒருநாள் மிகவும் உற்சாக மனநிலையில் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். அது வழக்கமான உற்சாகம் இல்லையென்பதால் இன்டர்வெல் வேளையில் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே கூடியிருந்தது. ரவியின் பின் பெஞ்ச்சில் அவன் இருந்ததால், அவன் பேசும் கதைகளைக் கேட்க ரவி அவனைத் தேடிப் போகவேண்டிய அவசியத்தில் இல்லாமல் இருந்தான்.

குமாரின் சுவாரஸ்யமான கதைச் சொல்லல் தொடங்கியது.

``நேத்து சாயந்திரம் வீட்டுக்கு முட்டை வாங்கப் போனப்ப, எங்க ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல ஒரே கூட்டமா இருந்துச்சு. என்னடா இது இந்த நேரத்துல இவ்ளவு கூட்டம்னு லைட்டா அந்தப் பக்கம் ஒதுங்கினேன்.”

ஊசிப்புட்டான்

கூடியிருந்த கூட்டத்தில் பொறுமையிழந்த ஒருவன், ``எதுக்காண்டி மக்கா கூட்டம்?” என்றான்.

உடனே மற்றொருவன், ``அதெ தானல அவென் சொல்லிட்டு இருக்கான்... ச்சும்மா சலம்பிட்டு கெடக்காம கதெயெ கேளுல” என்று அதட்டினான்.

நான்கு பேர் அவனிடம் அடுத்து என்ன என்று கேட்க வேண்டும், அதற்கு இன்னொரு நான்கு பேர் அவர்களைப் பேசாம்ல் இருக்கும்படி அதட்ட வேண்டும். அதேதான் அன்றும் நடந்தது.

``கூட்டத்துக்கு நடுவுல நொளைஞ்செடுத்து உள்ள போய்ப் பாத்தா…” சொல்லி முடிக்கையில் அவனுடை கண்கள் இரண்டும் அகலமாகத் திறந்திருந்தன. அவன் குரலோடு ஒன்றிப் பயணித்த சக மாணவர்களின் கண்களும் அகலமாக விரிந்திருந்தன.

``அங்க என்னல பாத்த?” கூட்டத்தில் எவனோ ஒருவன் கேள்வி கேட்டான்.

``நம்ம முத்துலிங்கம் அண்ணன் அங்க சேர் போட்டு உக்காந்திருக்காரு.

முத்துலிங்கம் பெயரைக் கேட்டதும் சட்டென ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான். குமார் சொல்லி முடிக்கவும், `அட இந்தப் பட்டிப்பய வாயெத் தெறந்தாலே பொய் பொய்யா புழுவித் தள்ளுறான்...’ என மனதினுள் நினைத்துக்கொண்டான் ரவி. அதேவேளையில் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்களோ, குமாரிடம், ``முத்துலிங்கண்ணனை உனக்குத் தெரியுமா மக்களே...” என்று ஆர்வ மிகுதியோடு விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

``முத்துலிங்கண்ணனும் எங்கண்ணனும் ரொம்ப க்ளோஸு. எப்ப கிருஷ்ணங்கோயிலுக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வராமப் போவ மாட்டாரு தெரியும்ல?”

அதெயும் இங்க வந்து கதெ கதெயா சொல்லிட்டு இருக்குவான். அதெயும் இந்த லூசுப் பயலுவ நம்பிட்டு இருக்கானுவ.’

இன்டர்வெல் முடிந்ததற்கான பெல் அடிக்க, அனைவரும் கூட்டத்திலிருந்து கலைந்து சென்று அவரவர் இடத்தில் அமர்ந்துகொள்ள விஜிலா சற்று நேரத்தில் வகுப்பறையினுள் நுழைந்தார்.

கரும்பலகையில் முந்தைய வகுப்பில் எழுதிப்போட்டிருந்தது அழிக்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ``யாருக்காச்சும் எழுதி எடுக்க வேண்டியது இருக்கா..?” என்று கேட்டார்.

எவருமே பதில் பேசாதிருக்க, விஜிலா டீச்சர் வகுப்புக்குத் தன் பின்புறத்தைக் காட்டி கரும்பலகையில் எழுதியிருந்ததை அழிக்க ஆரம்பிக்கவும், குமார் ரவியின் பின்பக்கமிருந்து தன்னுடைய கற்பனை வளத்தைத் தொடங்கினவனின் குரல் பாதியில் முடிந்துவிட, அவன் முடித்த இடத்திலிருந்து அவனுக்கு அருகிலிருந்த சுப்பிரமணி தொடர்ந்தான்.

சுப்பிரமணியின் கதை சொல்லல் குமாரின் அளவுக்குச் சுவாரஸ்யமானதாக இல்லையென்றாலும் குறை கூறும்படியாக இல்லாதிருந்தது. இருப்பினும் வழக்கமாகக் கதை சொல்லும் குமாருக்கு என்னவாயிற்று என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் ரவி தலையைத் திருப்பிப் பார்த்தான். பின்னிருக்கையில் குமாரைக் காணவில்லை. ஒருவேளை டெஸ்குக்குக் கீழே அமர்ந்து மதிய உணவைத் தின்றுகொண்டிருப்பானோ என்கிற சந்தேகத்தோடு டெஸ்க்குக்கும், ரவி அமர்ந்திருந்த பெஞ்சுக்கும் இடைப்பட்ட வெளியோடு பார்த்தான். அங்கே கால் நீட்டி அமர்ந்திருந்தான் குமார்.

(தொடரும்...)

Also Read: ஊசிப்புட்டான்: `எங்கப்பனைக் கொன்னவனோட ரத்தம்’ | அத்தியாயம் - 14



source https://www.vikatan.com/arts/literature/story-of-a-boy-nicknamed-as-oosipputtan-part-15

`வாட்ஸ்அப் லைவ் லோகேஷன்; QR ஸ்கேன்!' - புதுச்சேரி போக்குவரத்து போலீஸின் புத்தாண்டு கைடு

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் அதிகமாக வரக்கூடும் என்பதால் பொது மக்களின் வசதிக்காக வரும் 31.12.2021 மதியம் 2:00 மணி முதல் மறுநாள் (01.01.2022) காலை 3:00 மணிவரை கடற்கரை சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்குள் (White Town) வாகனங்கள் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

மேலும் சிவாஜி சிலை சந்திப்பு, அஜந்தா சந்திப்பு, பட்டாணிக்கடை சந்திப்பு, C.V.ரோடு சந்திப்பு, முதலியார்பேட்டையிலுள்ள விநாயக முருகன் டீக்கடை சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, கோரிமேடு பார்டர், காலாப்பட்டு பார்டர். மதகடிப்பட்டு பார்டர், கன்னிகோயில் பார்டர் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ரூட் கைடு மேப் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் அந்த லிங்க்கினுள் ரூட் கைடு மேப், எந்தெந்த பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது, எங்கு பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது, எந்த வழியாகச் சென்றால் கடற்கரைக்கு அருகில் செல்ல முடியும் என்பதெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் அதில் இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று WHATSAPP எண் (9489205039) இருக்கும். அந்த எண்ணுக்கு உங்களது லைவ் லொகேஷனை அனுப்பினால், உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடத்துக்கு மிக அருகிலுள்ள வாகனம் நிறுத்தும் இடத்துக்கு எளிதாகச் செல்ல முடியும். அதேபோல் 112 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டால் தங்களுக்குத் தேவையான தகவல் கொடுக்கப்படும். இந்தச் சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் பயன்படுத்திகொள்ளலாம்.

மேலும் அதிவேகமாகவும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதுவை முழுவதும் பல இடங்களில் வாகன சோதனை செய்யப்படும். மேலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்பவர்களைக் கண்காணிக்க முக்கியச் சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/puducherry-police-guide-for-new-year-celebrations

தேர்தல் ஆணையத்தைக் கலைத்த தாலிபன் அரசு... ஆப்கானிஸ்தானின் ஜனநாயகம் இனி என்னவாகும்?!

கொரோனாவுக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகத்தையும் ஒருசேரத் திரும்பிப் பார்க்கவைத்தவர்கள் தாலிபன்கள். ஆம், தெற்காசியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் நடுவே அமைந்துள்ள குட்டி நாடான ஆப்கானிஸ்தானை, துப்பாக்கிக் கரங்களோடு கைப்பற்றிய அதே தாலிபன்கள்தான். கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டு வந்த உலக நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றினார்கள் தாலிபன்கள். அமெரிக்கா, தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றதே இதற்குக் காரணம். அமெரிக்கா, தனது படைகளை மெல்ல மெல்லத் திரும்ப பெறத் தொடங்கியதும், தாலிபன்களும் ஆப்கானிஸ்தான் நகரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றத் தொடங்கினர். தாலிபன்கள் தலைநகர் காபூலை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று கைப்பற்றினர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றிய செய்தியை அறிந்ததுமே, நாட்டைவிட்டு வெளியேறினார் அப்போதைய் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி.

தாலிபன்

Also Read: வீடு வீடாகப் பெண்களைத் தேடும் தாலிபன்கள்... ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?!

அதன் பின்னர் அப்போதைய ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே நாட்டின் அரசியல் அமைப்பின்படி `நான்தான் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டார். ஆனால் அந்த அறிவிப்பு தாலிபன் அரசை எதுவும் செய்யவில்லை. இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள்மீது விதித்தனர். அந்தக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி கூட்டிச்சென்றன. மீண்டும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. தாலிபன்களாலும், இந்தக் கட்டுப்பாடுகளாலும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றனர். சிலர் வெளியேறி, பிற நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.26) அன்று தாலிபன் அரசு, ஆப்கானிஸ்தானிலுள்ள தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்திருக்கிறது. இது அந்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதால் தேர்தல் என்ற ஒன்றே இல்லாமல் சர்வாதிகாரம் தலைதூக்க வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவிக்கிறார்கள் உலக அரசியல் ஆர்வலர்கள். பல உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்குக் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுதப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளன. இந்த ஆயுதங்கள் சர்வதிகாரத்தின் கைகளில் சிக்கினால் போர்கள் மூளலாம். உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளையலாம்.

ஆப்கானிஸ்தான்

தாலிபன்களின் செயல்களால் உலக நாடுகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு அதிக அபாயம் உண்டு எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில், தாலிபன்களுடன் நெருங்கிய உறவில் இருந்துவருகிறது பாகிஸ்தான். இதனால் தாலிபன்களுடன் பாகிஸ்தான் கைகோத்துக்கொண்டு இந்தியாவில் தீவிரவாத ஊடுருவல் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஆசியக் கண்டத்தில் சீனாவின் கை வெகுவாக ஓங்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த இந்தியா கடுமையாக உழைத்துள்ளது. தாலிபன் அரசு தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதால் ஜனநாயகம் என்பது ஆப்கானிஸ்தானில் பெரிய கேள்விக்குறியாக எழும் அபாயம் உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானில் சாபஹார் துறைமுகம் கட்டவும் உதவி புரிந்திருக்கிறது. இந்தத் துறைமுகம், இந்தியாவையும் மத்திய ஆசிய நாடுகளையும் பாகிஸ்தான் வழி அல்லாமல் ஆப்கானிஸ்தான் மூலம் இணைக்கும். தாலிபன்கள் எழுச்சியால் இந்தியாவின் இந்த உதவிகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளன. தவிர, உலகின் 80 சதவிகித அபின் விதைக்கும் நிலம் தாலிபன்களின் கைகளில் இருக்கிறது. இதனால் உலகில் போதைப்பொருள் உபயோகம் அதிகமாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்றின்படி தாலிபன்களின் 60 சதவிகித ஆண்டு வருவாய் சட்டவிரோத போதைக் கடத்தல் மூலம் வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்போதே இந்தியாவில் போதைக் கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன.

தாலிபன் தலைவர்கள்

Also Read: ஆப்கானிஸ்தான் போர்: `71,344 பொதுமக்கள்; 7,792 குழந்தைகள்' - கலவர பூமியில் பழிவாங்கப்பட்ட அப்பாவிகள்!

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்துவருகின்றன. இதனால் தாலிபன்கள் சீனா பக்கம் சாயும் நிலையும் உருவாகியுள்ளது. பல ஆசிய நாடுகளில் சீனா தன் கால்தடத்தை கடன்கள் மூலமாகவும், உள்கட்டமைப்பு மூலமாகவும் பதித்துவருகிறது. அது ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டால் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும். ஆப்கானிஸ்தான் சீனாவுடன் கைகோத்தால் இந்தியாவில் வர்த்தகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் தன் இறக்குமதிகளுக்கு சீனாவையும், அதைச் சார்ந்த நாடுகளையும் அணுகக்கூடும். மேலும் இந்தியா பல்வேறு பொருள்களை ஆப்கானிஸ்தான் மூலம்தான் மத்திய ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி செய்கிறது. இவையும் பாதிக்க கணிசமான வாய்ப்புண்டு. இத்தனை அபாயங்கள் இந்தியாவைத் தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானால் சூழ்ந்திருக்கிறது. கூடிய விரைவில் மத்திய அரசு ஆப்கானிஸ்தான் குறித்து நல்ல முடிவு எடுத்து தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பல அபாயங்களைக் தடுக்கலாம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-talibans-recent-ban-on-election-commission

இடிந்து விழும் வீடுகள்; அச்சத்தில் மக்கள் - குடிசை மாற்று வாரியம் செய்யத் தவறுவது என்ன?!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கடந்த 1970-ம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதுதான் இந்த வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும். சென்னையில் மட்டும் செயல்பட்டுவந்த இந்த திட்டம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பெருநகரங்கள் தொடங்கி பேரூராட்சி வரை என்று அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

வெறும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுப்பது மட்டும் இந்த வாரியத்தின் நோக்கம் கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு, நல்ல வாழ்வியல் சூழல், நல்ல குடிநீர், மின்சாரம் தொடங்கி அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கச் செய்வதேயாகும். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

புளியந்தோப்பில் கேசவன் பிள்ளை பூங்கா பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாகக் கட்டப்பட்ட குடியிருப்பு சிதிலமடைந்த காரணத்தால், அதை இடித்து புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு ரூ.112.26 கோடியும், 2020-ம் ஆண்டு ரூ.139.13 கோடி மதிப்பில் மொத்தம் 1,056 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கித் தரப்பட்டன. அங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள், அந்த குடியிருப்பு கட்டடங்கள் விரிசல் அடைந்தும், தொட்டாலே உதிர்த்து விழும் நிலையில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் ஐ.ஐ.டி நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், தரமற்ற வகையில் குடியிருப்பு கட்டப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தைத் தடை பட்டியலில் சேர்க்கவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது.

இடிந்து விழுந்த குடியிருப்பு

சென்னை திருவெற்றியூர் அருகில் உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியதின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் நான்கு பிளாக்குகளாக மொத்தம் 336 வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகள் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இதில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த கட்டடத்தில் ஏற்கெனவே இருந்த விரிசல் திடீரென பெரிதானது. அங்குக் குடியிருந்த பலரும் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், மற்றவர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்தில், அடிக்கிவைத்த சீட்டுக்கட்டு போல மொத்த கட்டடமும் சரிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ``சமீபத்தில் நடத்திய ஆய்வில், சென்னையில் சுமார் 23,000 கட்டடங்கள் இடிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றன. இந்த கட்டடங்கள் அனைத்தும் 40 முதல் 50 வருடங்கள் பழமையான கட்டடங்கள். இந்த கட்டடங்கள் விரைவில் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும்" என்று தெரிவித்தார்.

Also Read: 'புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரம்' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்!

குடிசை வாரிய கட்டடங்களின் உறுதித்தன்மை தொடர்பாக அகில இந்தியக் கட்டுநர் வல்லுநர் சங்கம், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ராமபிரபுவிடம் பேசினோம். ``ஒரு குடியிருப்பு கட்டடம் குறைந்தபட்சம் 50 ஆண்டுக்காவாது வலுவாக இருக்க வேண்டும். தரமான பொருள்களைக் கொண்டு தான் கட்டடம் கட்டப்படுகிறதா என்பதை அப்போதே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதைவிட மிக முக்கியமான ஒன்று கட்டடத்தைப் பராமரிப்பது. ஒரு கட்டடம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முறையாக பெயிண்ட் அடிக்கப்பட்டுச் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். பராமரிப்பு சரியாக இருந்தால் தான் அந்த கட்டடம் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். ஆனால், பெரும்பாலான குடிசை மாற்றுக் குடியிருப்பு கட்டடங்கள் முறையாகப் பரராமரிக்கப்படுவதே கிடையாது" என்றார்.

ராமபிரபு

தொடர்ந்து பேசியவர், ``முன்பெல்லாம், கட்டடம் பெரும்பாலும் செங்கல் கொண்டு கட்டப்படும். தற்போது பெரும்பாலான கட்டடங்கள் சுவர் மைவான் டெக்னலாஜி மூலம் தான் கட்டப்படுகிறது. தற்போது வரும் டெண்டரில் கூட மைவான் டெக்னலாஜி சுவர்கள் வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். கே.பி பார்க்கில் கட்டப்பட்டதும் மைவான் டெக்னலாஜி சுவர்கள் தான். அங்குச் சுவர்களில் பிரச்னை இல்லை. சுவரில் செய்யப்பட்ட பிளாஸ்டிங் தான் சரியாக இல்லை. திருவொற்றியூர் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் அந்த கட்டடம் எந்த பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மட்டும் தான். அனைத்து குடியிருப்பு கட்டடங்களையும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதன் நிலையை ஆய்வு செய்யவேண்டும். குடியிருப்பு கட்டடங்களுக்குப் பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு தரமாகக் கட்டினாலும், அந்த கட்டடங்கள் வலுவிழந்து போகும் என்பது தான் உண்மை. அதே நேரத்தில், கட்டடம் கட்டும்போதே, தரமான பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் அப்போதே அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-governments-failed-to-do-in-slum-clearance-boards-constructions