Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

மதுசூதனனை எடப்பாடி சந்தித்ததன் `பின்புலம்'... ஒத்துழையாமையைத் தொடரும் பன்னீர்!

"முதல்வரை ஆர்.கே.நகருக்கு ஓடவைத்துவிட்டீரே?" என்று சூடாக மிளகாய் பஜ்ஜியுடன் கேள்வியையும் நீட்டினோம். அர்த்தம் புரிந்தவராகப் புன்னகைத்த கழுகார், "ஆர்.கே.நகரிலுள்ள அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததைத்தானே குறிப்பிடுகிறீர்" என்று பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

"மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை; புதிய அவைத்தலைவர் பதவிக்கு ரேஸ் நடப்பதாகக் கடந்த இதழில் கூறியிருந்தேன். அதன் விளைவாகத்தான் ஆகஸ்ட் 26-ம் தேதி மதுசூதனனைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி. சில வாரங்களுக்கு முன்னர் வாக்கிங் சென்றபோது மதுசூதனன் கீழே விழுந்து லேசாகக் காயம் அடைந்தாராம். அது குறித்து எடப்பாடி விசாரித்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டபோது, 'மதுசூதனன் தலைமையிலான அணிக்குத்தான் சின்னம்' என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்போது அணிகள் இணைந்திருந்தாலும், ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன் இருந்தார். கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், சின்னத்தை வைத்திருக்கும் மதுசூதனனும் தன் பிடிக்குள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி கருதுகிறாராம். இப்போதைக்குப் புதிய அவைத்தலைவர் நியமனத்தை ஓரங்கட்டிவிட்டு, மதுசூதனனைக் கையிலெடுக்க எடப்பாடி தீர்மானித்திருப்பதாகக் கூறுகிறார்கள்."

"பன்னீர் என்ன செய்கிறார்?"

"ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடரும் முடிவில் இருக்கிறார். 'எனக்கு முதல்வர் வேட்பாளர் பதவி மீதெல்லாம் பெரிய விருப்பம் இல்லை. வரும் தேர்தலில் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தினால் எப்படியிருக்கும்?' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதேவேளையில் தினகரன் தரப்பு, பன்னீரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்கிற பேச்சும் கட்சிக்குள் ஓடுகிறது.

இதை மறுக்கும் பன்னீரின் முகாம், 'இரட்டைத் தலைமையில்தானே இடைத்தேர்தல்களையும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்தோம். இடையில் தினகரன் எதற்கு? முதலில் தேர்தலைச் சந்தித்துவிட்டு, பிறகு முதல்வர் யாரென முடிவெடுக்கலாம்' என்கிறது. சமீபத்தில் பன்னீரைச் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனம்விட்டுப் பேசியிருப்பது, 'முக்குலத்தோர் ஒன்று கூடுகிறார்களோ?' என்கிற அச்சத்தை கவுண்டர் சமூகத் தரப்பில் விதைத்துள்ளது."

"சரிதான்... தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?" - கழுகார் வழங்கிய தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/34MZKNR > மிஸ்டர் கழுகு: பி.கே 'பாஷை' பஞ்சாயத்து! - சபரீசன் மீது அதிருப்தியில் சீனியர்கள் https://bit.ly/34MZKNR

மயில்மீது காட்டும் கருணையை...

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா அச்சத்தில் உறைந்திருக்கிறது. பேருந்துகள், ரயில்கள் ஓடவில்லை. மசூதிகள், சர்ச்சுகள், கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டன், சிக்கன், மீன் வாங்கினால் கொரோனா பரவும் என்று கறிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வு முதல் பல்கலைக்கழகத் தேர்வுகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அரியர் தேர்வுகளிலும் தேர்ச்சி அறிவித்து, தாராள மனதை நிரூபித்துள்ளார் தமிழ்நாட்டின் சே குவேரா எடப்பாடி பழனிசாமி.

பிரதமர் மோடியே வெளிநாட்டு சுற்றுப்பயணம் போக முடியாத விரக்தியில் 'குயிலைப்பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம், மயிலைப்பிடிச்சு காலை உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்' என்று மைண்ட் வாய்ஸில் பின்னணி இசையுடன் மயில், குயில், மைனா, கொக்கு, வாத்து என்று விதவிதமான பறவைகளுடன் வித்தியாசமான போட்டோஷூட் நடத்துகிறார்.

முழுநாடும் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் கூடுதலாக 'நீட் தேர்வை இந்த ஆண்டாவது ரத்து செய்யுங்கள்' என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'நீங்கள் போராட வேண்டியது நோயுடன்தானே தவிர, நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்யும் நீட் தேர்வுக்கு எதிராக அல்ல' என்று 'லொக் லொக்...' என இருமியபடியே பதில் சொல்கிறது மத்திய அரசு...

- முழுமையான கட்டுரையை ஜூ.வி-யில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3gMJoY9 > மயில்மீது காட்டும் கருணையைக் கொஞ்சம் மாணவர்களிடமும் காட்டுங்களேன்! https://bit.ly/3gMJoY9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/politics/reason-behind-edappadi-palanisamys-visit-to-madhusudhanan-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக