Ad

சனி, 31 டிசம்பர், 2022

சென்னை திமுக கவுன்சிலரின் கணவர் மாமூல் கேட்டு மிரட்டல்; மதுரையில் கைது - நடந்தது என்ன?!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

`கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று மிரட்டி மாமூல் வசூல் செய்திருக்கிறார். இதேபோல, அந்த பகுதியில் கடை வைத்துள்ள மோகனாவிடம் ஜெகதீசன் மாமூல் கேட்டிருக்கிறார். அதற்கு மோகனா பணம் கொடுக்க மறுக்கவே, ஜெகதீசன் தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், இரண்டு தினங்களுக்கு முன்பாக ஜெகதீசனின் ஆள் ஒருவர் மோகனாவின் கடைக்கு சென்று அண்ணன் பணம் வாங்கி வர சொன்னார் என்று கேட்டிருக்கிறார். மோகனாவும் பணம் தரமுடியாது என்று மறுத்துள்ளார். வந்த நபர் ஜெகதீசனுக்கு போன் செய்து மோகனவிடம் கொடுத்திருக்கிறார். அவர் மோகனவை தகாத வார்த்தைகளால் வசை பாடியதாக சொல்லப்படுகிறது.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

மேலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி மோகனா கடை உட்பட அங்கிருந்த நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஜெகதீசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். ஒரு வழியாக மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் அகற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, மோகனா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசனுக்கு எதிராக மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீஸார் தலைமறைவாக இருந்த ஜெகதீசனை தீவிரமாக தேடி வந்தனர். மதுரையில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் தான் கடந்த மார்ச் மாதம் இரவு நேரத்தில் ரோந்தில் ஈடுபட காவலர்களை தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாக குற்றசாட்டு எழுந்தது. அதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீசன், கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/chennai-councilors-husband-arrested-for-asking-bribery-from-roadside-shopkeepers

வைகுண்ட ஏகாதசி கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்; துவாதசி பாரனை நாள், நேரம் என்ன?

ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது ஆன்றோர்கள் கருத்து. மற்ற நாள்களிலெல்லாம் நம் உடலும் மனமும் உலகியல் ரீதியில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும். அப்படி இயங்கும் இந்திரியங்களுக்கு ஓய்வு வழங்கும் விதமாக ஏகாதசி திதியைத் தேர்வு செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஏகாதசி அன்று உண்ணா நோன்பிருந்து விரதம் இருக்கும்போது உடல் உள்ளூர தூய்மை செய்துகொள்கிறது. உடலை மட்டும் தூய்மை செய்துகொண்டு புத்துணர்வு கொண்டால் போதுமா... உடல் இயங்காதபோது கூட இயங்கிக்கொண்டிருப்பது மனம் அல்லவா... எனவே அதற்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் வேண்டுமல்லவா... அதற்கு நம்முன்னோர்கள் செய்த ஏற்பாடுதான் வழிபாடு.

மகா விஷ்ணுவைப் போற்றும் ஏகாதசி விரதம்
நம்மைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை தியானம் செய்திருந்தால் அவனருள் நிறைந்து மனம் புத்துணர்ச்சி கொள்ளும். மேலும் ஏகாதசி நாளில் நாம் வழிபாடு செய்தால் நம் மனதின் விருப்பங்கள் நிறைவேறும் என்கின்றன புராணங்கள்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

கிருதயுகத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அகந்தையால் அக்கிரமம் செய்துகொண்டிருந்த அவனை அழிக்க மகா விஷ்ணு முரனை புறப்பட்டார். மாபெரும் யுத்தம் நிகழ்ந்தது. முரனின் படைகள் எல்லாம் அழிந்தன. அவன் மனம் மாற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த விஷ்ணு பத்ரிகாசிரமத்தில் உள்ள குகை ஒன்றில் போய் யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

இறைவனுக்கு ஏது உறக்கமும் விழிப்பும். அது ஒரு பாவனை. ஆனால் அசுரன் அதை அறியவில்லை. மகாவிஷ்ணு உறங்குகிறார். இப்போது அவரைத் தாக்கினால் அழித்துவிடலாம் என்று நினைத்து வாளை ஓங்கினான்.

அப்போது விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகிய பெண் வெளிப்பட்டாள். அவள் அசுரனை நோக்கி ஓர் ஓங்காரம் எழுப்பினாள். அந்த ஓங்கார ஒலியில் எழுந்த அக்னி அசுரனை பொசுக்கியது. அப்போது கண் விழித்த விஷ்ணு அந்தப் பெண்ணைக் கண்டு, ‘நீ யார்... நடந்தது என்ன?’ என்று கேட்க அவள் பணிவோடு, ‘நான் தங்களிடம் இருந்து தோன்றியவள். என் சப்தத்தால் அசுரன் அழிந்தான்’ என்று கூறினாள். இதைக் கேட்டு மகிழ்ந்த விஷ்ணு,

“நான் உனக்கு ஏகாதசி என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்தத் திதி மிகவும் புண்ணியம் நிறைந்ததாகக் கருதப்படும். அந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். அன்று முதல் பெருமாளை வழிபட உகந்த நாளாக ஏகாதசி திதி மாறியது. ஏகாதசி உற்பத்தியான நாள் என்பதால் மார்கழி மாதம் வரும் ஏகாதசி உத்பன்ன ஏகாதசி என்று போற்றப்படுகிறது.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படும். மது, கைடபர்கள் ஆகிய அசுரர்கள் பகவான் விஷ்ணுவோடு யுத்தம் செய்து முடிவில் அவரின் பராக்கிரமத்தை அறிந்து அவரைச் சரணடைந்து தங்களுக்கு வைகுண்டப் பதவி வேண்டும் என்று கேட்டனர். விஷ்ணுவும் மகிழ்ந்து சொர்க்க வாசலைத் திறந்து அவர்களை வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார்.

அப்போது, ''பகவானே! மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியான இந்த நாளில் எங்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து அருளியதுபோன்று யாரெல்லாம் தங்களின் ஆலயத்துக்கு வந்து உங்களை வணங்குகிறார்களோ அவர்களுக்கும் சொர்க்க வாசலைத் திறந்து வைகுண்டப் பதவியை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர். மகாவிஷ்ணுவும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் தந்தார். அதன் சாட்சியாகவே இன்றும் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட வாசல் திறக்கும் வைபவம் ஒவ்வொரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்றும் நடைபெறுகிறது. இந்த நாளில் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து சென்று பெருமாளை வைகுண்டவாசனாகக் கண்டு தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது ஐதிகம்.

கடைப்பிடிக்க 5 விஷயங்கள்

வைகுண்ட ஏகாதசி என்றாலே இரவு விழித்திருப்பது என்பது பிரசித்தம். உறங்காமல் இருந்தால் மட்டும் போதாது. பெருமாளை நினைத்து பஜனை செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசி வைபவமே தமிழ் மறைகளான நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். அப்படிப்பட்ட அந்த வைபவத்தில் நாம் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாடிப் பெருமாளை வழிபடுவது விசேஷம். பாசுரங்கள் பாடத் தெரியாது என்பவர்கள் ராமா, கிருஷ்ணா, நாராயணா என்று தெய்வ நாமங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. அதிகாலை வேளையில் ஹரிநாம ஜபம் செய்வதன் மூலம் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி நாளில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். பொதுவாக தசமி நாளில் இருந்தே விரதம் தொடங்கிவிடும். தசமி இரவு உணவைத் தவிர்த்துவிடவேண்டும். மறுநாள் ஏகாதசி நாளில் முற்றிலும் ஆகாரம் இல்லாமல் இருப்பது உத்தமம். துளசித் தீர்த்தம் சாப்பிடலாம். முடியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் அரிசியை பின்னம் செய்து தயாரிக்கப்படும் கஞ்சி, உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம். பழங்கள், பால் ஆகியவற்றை பெருமாளுக்கு நிவேதனமாக சமர்ப்பித்து அதை எடுத்துக்கொள்வது விசேஷம். மறுநாள் துவாதசி அன்று காலை பெருமாளை தரிசனம் செய்து பின் துளசி தீர்த்தம் அருந்தி உணவெடுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். இதற்குப் பாரனை என்று பெயர்.

வைகுண்ட ஏகாதசி அன்று கட்டாயம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு. இதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்ச்சி கொள்ளும். அவ்வாறு பெருமாள் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டில் அதிகாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளுக்கு துளசி சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும்.

பகலில் உறக்கம் கூடவேகூடாது. இரவெல்லாம் விழித்திருந்தோமே என்று சொல்லிப் பகலில் உறங்குவது முறையல்ல. பகலிலும் இறைவழிபாட்டிலேயே செலவிட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பலரும் அலுவல் காரணமாகப் பணிக்குப் போக வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே முழு நேரமும் இறைவழிபாடு செய்துகொண்டிருக்க முடியாது. ஆனால் தவறாமல் சந்தி வேளைகளான நண்பகல், பிரதோஷ வேளைகளில் இறைவனை நினைத்து மனதுக்குள் வழிபட வேண்டியது அவசியம். மனம் ஒன்றிச் செய்யும் சில நிமிட வழிபாடு நமக்குப் பெரும்பலனைத் தரும்.

வைகுண்ட ஏகாதசி உற்சவம்

மறுநாள் துவாதசி அன்று பாரனை முடிந்து உணவருந்தும் முன்பாக தானம் செய்வது சிறப்பு. துவாதசி அன்று தன் வீட்டு வாசலுக்கு வந்து பிக்ஷை கேட்ட ஆதிசங்கரருக்குக் கொடுக்க ஏதும் இல்லையே அன்று வருந்தித் தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை தானம் செய்தாள் ஒரு பெண். அந்தப் பெண்ணின் வறுமையை உணர்ந்த சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னை மகாலட்சுமி பொன்மாரிப் பொழிந்தாள். இது உணர்த்தும் செய்தி, துவாதசி அன்று கட்டாயம் தேவையிருப்போருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதுதான். அவ்வாறு செய்யும்போது இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் உரியவர்களாக நாம் ஆவோம்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி 2.1.23 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது இன்று இரவு (1.1.23) 10.50 நிமிடத்திலிருந்து ஏகாதசி தொடங்குகிறது. எனவே இன்று இரவுதான் நாம் கண் விழிக்க வேண்டும். நாளைக்காலை (2.1.23) ஆலயத்துக்குச் சென்று சொர்க்க வாசல் வழியாகச் சென்று பெருமாளை வழிபட வேண்டும்.
துவாதசி பாரனை நேரம்: 3.1.2023 காலை 7:14 முதல் 9:19 மணிக்குள்


source https://www.vikatan.com/spiritual/functions/vaikunda-ekadasi-these-five-things-should-be-followed

கிருஷ்ணகிரி: கத்தி முனையில் ரூ.4.5 லட்சம் கொள்ளை - முதலாளியிடமே கைவரிசை காட்டிய மூவர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கலுராம் (34), இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே, எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். தரைத்தளத்தில் கடை உள்ளதுடன், இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த, 21-ம் தேதி கலுராம் கடைக்குச்சென்றிருந்த வேளையில், வீட்டில் அவரது மனைவி யசோதா மற்றும் குழந்தைகள் மீனா, கிருத்திகா ஆகியோர் இருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், கத்திகளை காட்டி மிரட்டி குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி, அவர்களது பீரோ சாவியை வாங்கயுள்ளனர். அதிலிருந்த, 4.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸாரிடம் கலுராம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர்.

கைது

இந்த நிலையில், பணம் கொள்ளையடித்துச் சென்ற, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, சங்கர் சிங் (19), சுரேந்தர் சிங் (19) மற்றும் லட்சுமணராம் (34) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை எஸ்.ஐ சுகுமாரிடம் பேசினோம், ‘‘லட்சுமணராம் மற்றும் சங்கர் சிங் ஆகியோர், கலுராம் கடையில் ஏற்கனவே வேலை செய்தவர்கள். இவர்கள், இருவரும் சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அதிகப்படியான பணத்தை இழந்து கடனில் சிக்கியுள்ளனர். கடனிலிருந்து தப்பிப்பதற்காக, மூவரும் இணைந்து கலுராம் வீட்டில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். திருடப்பட்ட பணத்தை முழுவதுமாக பறிமுதல் செய்துள்ளோம்,’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/krishnagiri-robbery-of-rs-45-lakh-three-people-arrested

``மணல் கொள்ளையால் கல்லணைக்கு ஆபத்து” - கொள்ளிடம் ஆற்றுக்குள் போராட்டம் நடத்திய விவசாயிகள்

கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளில் விதிகளை மீறி மணல் எடுப்பதால் கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது என்றும் கொள்ளிடம் ஆற்றை பாதுக்காக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சாத்தனூர், மருவூர், வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய நான்கு ஊர்களில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. கொள்ளிடம் திருச்சென்னம்பூண்டியில் ஏற்கெனவே மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் வரை அதன் உரிமம் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட இடம் மற்றும் அளவையும் தாண்டி விதியை மீறி மணல் கொள்ளை நடப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதரமாக திகழும் கல்லணையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலையில் உள்ள கோவிலடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுக்கப்படுகிறது. இதனைஅதிகாரிகள் துளியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் சோழர்களின் அடையாளமான கல்லணையின் பாதுகாப்பு கேள்வி குறியாகியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜீவக்குமார்

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விளாங்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்கவும், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து காவிரி பாதுகாப்பு சமூக செயற்பாட்டாளர் ஜீவக்குமார் என்பவரிடம் பேசினோம், ``கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றிலிருந்து எட்டு மாவட்டங்களுக்கு குடிநீர் செல்கிறது. தமிழகத்தில் வேறு எந்த ஆறுகளில் இல்லாத அளவிற்கு இரு கரைகளுக்குமிடையே அதிக அகலம் கொண்டதாக கொள்ளிடம் இருந்து வருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஐந்து குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கொள்ளை நடக்கிறது.

கொள்ளிடம் ஆறு

ஆற்றுக்குள்ளேயே சாலை அமைத்து இரவு, பகலாக மணல் எடுத்து வருகின்றனர். மணல் எடுக்க கூடிய பகுதிகளுக்கு வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் எடுக்கப்படுவதால் கொள்ளிடம் ஆறு சதையில்லாத எலும்பு கூடாக மாறி விட்டது. கல்லணைக்கு அருகாமையில் அணைக்கு வரப்போகுதும் ஆபத்தை உணராமல் மணல் எடுத்து வருகின்றனர்.இதனை கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை தமிழர்களின் பெருமையை உலகம் முழுக்க பறைச்சாற்றி கொண்டிருக்கிறது. கல்லணைக்கு பிறகு கல்லணையை மாதிரியாக வைத்து பல அணைகள் உருவாகியிருக்கிறது என்பது வரலாறு.

கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள்

இந்நிலையில் கல்லணைக்கு அருகிலேயே தொடர்ச்சியாக மணல் எடுத்து வருவதால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என பலரும் எச்சரித்து வரும் நிலையிலும் மணல் கொள்ளை நடப்பதை தடுக்க அரசு தவறியிருப்பது வேதனை. இதே போல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் பாதிப்பு உண்டாகும் நிலை உருவாகும். எனவே டெல்டாவை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல் கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து ஆற்றையும் விவசாயிகளின் உயிர் நாடியான கல்லணையையும் காக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/sand-theft-in-cauvery-river-near-kallanai-dam-farmers-protest

கர்நாடகா: ``கூட்டணியின்றி நிற்போம்; ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸை வெல்வோம்” - அமித் ஷா

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க., ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை நடத்தி, மக்களை சந்தித்து வாக்குக்களை சேகரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முந்தினம் முதல், உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். நேற்று முந்தினம் காலையில், மாண்டியா மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கி, மாலையில் பெங்களூரு வந்தார். மாண்டியா பால் விற்பனை யூனியன் லிமிடெட் நிறுவனம் சார்பில், 260.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, ‘மெகா டெய்ரி’ மையத்தை தொடங்கி வைத்தார். பெங்களூருவில், கர்நாடக கூட்டுறவு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, சென்டரல் டிடெக்டிவ் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (CDTI) மையத்தை தொடங்கி வைத்தார்.

CDTI மையத்தை துவங்கி வைத்த அமித் ஷா

விழாவில் பேசிய அமித் ஷா, ‘‘2023 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக பரவலாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

வருகின்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ.க வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், பா.ஜ.க தனித்து நின்று இரண்டில் ஒரு பங்கு வாக்குக்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். சமீபத்தில், 7 மாநிலங்களில் நடந்த தேர்தலில், 5 மாநிலங்களில் நாங்கள் வென்றுள்ளோம். ஆனால், மறு புறமோ காங்கிரஸ் கட்சியினர், 6 மாநிலங்களில் கடுமை சரிவை சந்தித்துள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா

மக்களே... வளர்ச்சிக்கான, பாதுகாப்பான நாட்டை உருவாக்கிய பா.ஜ.காவுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது, ஊழலில் திளைத்த, ‘துக்டே துக்டே கேங்க்’ ஆன காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். செய்தியாளர்கள், கர்நாடகத்தில் முன்முனை போட்டி நிலவுவதாக கூறுவதை நான் மறுக்கிறேன். ஏனெனில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம்; இரு கட்சியும் ஒன்றுதான். அதனால், கர்நாடகத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நேரடியான போட்டி மட்டும் தான். வரும் தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) தனித்து நிற்போம், காங்கிரஸ் கட்சியை நிச்சயம் வென்று ஆட்சியமைப்போம். ‘துக்டே துக்டே கேங்க்’ காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை கைவிட்டு, தேச நலனுக்காக பா.ஜ.கவுக்கு வாக்களியுங்கள்,’’ என, காங்கிரஸ், ஜனதா தளத்தை கடுமையாக சாடினார்.

``அமித் ஷா தனியாக நிற்பதாக அறிவித்துள்ளதால், வரும் தேர்தலில் ஜனதா தளம் கட்சி பா.ஜ.கவுடன் இணைவது வாய்ப்பில்லை. மாறாக, ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-says-we-will-win-without-alliance-in-karnataka-elections

Formula One 2022: Pros and Cons

It didn't end as dramatically as 2021, but the 2022 Formula 1 season delivered many incredible moments. From Max Verstappen's record breaking 15 wins to Kevin Magnussen's historic pole; Ferrari's struggles to Mercedes' comeback; The retirement of a quadruple champion to the goodbye of an 8-time GP winner, it was a season that gave us everything. Let's go back into the racing lane...

The Regulations made an instant impact!

The regulation changes made ahead of the 2022 season, played a huge part in the title race and in the standings all through the table. Red Bull & Ferrari were the only teams to manage the 'Porpoising effect' and extract the performance out of the car. Defending Champions Mercedes struggled and they couldn't even get back to the title race midway through the season. Teams like McLaren, Alpha Tauri had poor seasons compared to 2021.

In the 2021 Formula 1 World Championship, a total of 6 teams stood on the podium, whereas only 4 sides got that opportunity this time. Mercedes achieved the podium 9 times lesser than the championship winning 2021 season. McLaren's count came from 4 to 1, courtesy of Lando Norris' brilliant drive in Emilia Romagna GP. The retirements of Max Verstappen & Carlos Sainz helped his cause too! Alpha Tauri endured a season to forget as they finished ninth with just 35 points. In 2021, they ended up sixth with a whopping 142 points.

Number of Podiums: 2021 & 2022

Mercedes 28 & 17

Red Bull 23 & 28

Ferrari 5 & 20

McLaren 4 & 1

Alpine 2 & 0

Alpha Tauri 1 & 0

Verstappen's domination

The 2022 Formula 1 season wasn't hard for Max Verstappen who won the 2021 title in the very last lap of the last race. Right from the start, it was considered the battle between him and Charles Leclerc. The two title contenders went neck to neck in the very first race making fans' expectations go sky high! But his unfortunate retirement at the end and that of his teammate Sergio Perez's raised questions about the reliability of the RBPT power unit.

Even though he won the second race in Saudi Arabia, the same power unit issue happened in Australia and he had to retire again. Leclerc on the other hand won in Bahrain & Australia to increase his lead from the Dutch driver to 46 points. When everyone thought that was going to be a competitive season, Verstappen raised the bar to a whole new level!

His incredible run of results started at the fourth race in Emilia Romagna. Starting from there, he won 5 of the next 6 races. He stood on the podium (3rd place) in the other race too! When he started winning, Ferrari and Leclerc started losing the plot and the points. And by the end of race no 9, Verstappen went 49 points ahead of Leclerc. The 2021 champion finished 7th in the Great Britain GP, but went back to his winning spree. He won 5 of the next 6 races again and by the end of the Italian Grand Prix, he led Leclerc by 116 points. Even after that, he won 4 races and finished the season with a record breaking 15 victories!

Beyond his incredible driving, Max has shown better composure than in the previous seasons. He preferred saving his tyres instead of overtaking the frontrunner. That's the reason, this season became easy for him.

Max Verstappen 2022 season

Races 22

Points 454

Wins 15

Podiums 17

Poles 7

Fastest Laps 5

Retirements 2

The Struggling Horse and the Prancing Bull

Ferrari started the season so well but managed to find different ways to screw things up. This season from Ferrari could be documented as the most messed up season. In France, Carlos Sainz was penalised 5 seconds for Unsafe Release. Because of that, he lost 5 positions and ended the race fifth. The mistake they made in Hungary was so juvenile. They fitted medium tyres to Charles Leclerc after the pit in a race where the Monegasque started with mediums. Since FIA rules state that a driver should use at least 2 tyre compounds in a dry complete race, Ferrari had to call him in for an extra pit stop. Because of that Leclerc finished sixth and clearly lost a podium place!

In Belgium, the Ferrari pit crew wasn't even ready with the tyres when Sainz came into the pits. Also, he got his second penalty of the season for Unsafe release. This time he lost 3 places. Ferrari stacked the two drivers in the pit back-to-back in Monaco and the home boy lost some valuable time there.

The entire season went on like this and even midway Leclerc has to concede the World Championship title to Max. If not for Max's reluctance to let his teammate Perez go past him in the last race, Leclerc would've lost even second place in the overall driver standings!

Meanwhile, Red Bull was in complete control of their season. They were right with the majority of their calls from the pit timings to the tyre compounds. They knew what they were doing! That's why Verstappen could win races even when he was starting from P7, P10 and even P14. Their strategy calls were recognised by the entire Formula 1 World as their Senior Strategy Engineer Hannah Schmitz became an internet sensation overnight. Despite Verstappen being incredible on wheels, its Red Bull's outstanding decision making that made life easy for the Dutchman!

Red Bull vs Ferrari

Rank 1 & 2

Points 759 & 554

Wins 17 & 4

Podiums 28 & 20

Pole positions 8 & 12

Fastest Laps 8 & 5

Retirements 5 & 9

Mercedes was struggling to cope with the regulation changes at the start of the season. After starting the season as defending champions, they stood on the podium only thrice after 7 races. But once the season progressed, they were consistent with their performance and they started standing on the podium regularly. In back-to-back races in France & Hungary, both Hamilton & Russell stood on the podium. In the team's favourite circuit in Sao Paolo, they finished 1-2. The initial struggle meant Mercedes were the third best team all through the season and it was seen in a simple fact that their drivers came third in 10 of the 22 races!

George Russell started his first season as a Mercedes driver very well. He was even outperforming Lewis Hamilton in some of the races. He finished in the top 5 in 19 of the 22 races. He won his first Formula 1 race in Sao Paolo and stood on the podium 7 other times. He also came fourth in the driver's championship after overtaking Carlos Sainz.

George Russell vs Lewis Hamilton

Rank 4 & 6

Points 275 & 240

Wins 1 & 0

Podiums 8 & 9

Pole Positions 0 &0

Fastest Laps 2 & 4

Retirements 1 & 2

The Departures & Changes

Four-time World Champion Sebastian Vettel brought an end to his Formula 1 career at the end of this season. He finished his last season as an Aston Martin driver in 12th place after collecting 37 points in 22 races. His very last race came to a dramatic end with a 10th place finish and a point. In his 300 Formula 1 race entries, Vettel registered 53 victories and snatched 3098 points. He stood on the podium a staggering 122 times.

This season ended being the last one for Williams' Nicholas Latifi too. The Canadian got just 2 points in his last season and will be replaced by Logan Sargeant in 2023. Oscar Piastri will replace 8-time race winner Daniel Ricciardo in McLaren. Ricciardo, who didn't get a race seat for 2023 joined Red Bull as a reserve driver. Like him, Mick Schumacher who lost his Haas seat to Nick Hulkenburg, signed as Mercedes' reserve driver.

Aston Martin replaced Vettel's seat with another multiple World Champion Fernando Alonso. The Spaniard's seat in Alpine will be taken by Pierre Gasly and Nick de Vries will take over his Alpha Tauri duties.



source https://www.vikatan.com/automobile/motor/formula-one-2022-pros-and-cons

Daily Horoscope | Today Rasi Palan | January - 01 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் | 01.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01012023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வெள்ளி, 30 டிசம்பர், 2022

Ariyippu, The Teacher, Jaya Jaya Jaya Jaya Hey: மூன்று படங்கள் நமக்குச் சொல்லும் நான்கு பாடங்கள்!

பெண்கள் சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட ஒற்றைச் சரடில் இணையும் மூன்று மலையாளப் படங்கள் சமீபத்தில் ஓ.டி.டி தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஸ்பாய்லர்கள் கொண்ட அலசல் என்பதால் படம் பார்க்காதவர்கள், பார்க்க நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைத் தவிர்த்துவிடவும்.

படம் ஒன்று: Ariyippu | Declaration

நொய்டாவில் ரப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தம்பதிகள் அரபு நாட்டில் வேலைக்குச் செல்வதை லட்சியமாகக் கொண்டு அதற்கான முயற்சிகள் செய்கின்றனர். அதன் ஒரு அங்கமாக நாயகியிடம் வேலை செய்யும் திறனை வெளிப்படுத்தும் 'Skill Video' ஒன்றை ஏஜென்ட் கேட்கிறார். செல்போன் பயன்படுத்தத் தடை உள்ள தொழிற்சாலையில் யாருக்கும் தெரியாமல் வேலைநேரம் முடிந்தபிறகு நாயகன் தன் மனைவி வேலை செய்வதைப் படமாக்குகிறான். சில நாள்களுக்குப் பிறகு அந்த காணொலியின் இறுதியில் அதே தொழிற்சாலை சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணும் ஆணும் பாலியல் செயலில் ஈடுபட்டிருக்கும் காட்சியும் இணைக்கப்பட்டு தொழிற்சாலை முழுவதும் வாட்ஸ்அப்பில் பரவுகிறது.

Ariyippu | Declaration

காணொலியில் இருப்பது தன் மனைவி அல்ல என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொலி பரவாமல் தடுக்குமாறும் கணவன் காவல்துறையில் புகார் அளிக்கிறான். ஆனால் காவல்துறை அதிகார வர்க்கத்தின் கையாளாகச் செயல்பட்டு பிரச்னையை அவன்மீதே திருப்புகிறது. அவமானத்தால் முடங்கிப்போகும் மனைவி இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு ஊருக்கே சென்றுவிடலாம் எனக் கணவனிடம் சொல்ல, அவன் போராடி நீதி கிடைக்கச் செய்வேன் என்கிறான்.

பிறகொரு நாள் வேறு சில ஆதாரங்களை வைத்து காணொலியில் இருப்பது தன் மனைவிதான் எனச் சந்தேகப்பட்டு அவளை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். இதற்கிடையில் புகாரைத் திரும்பப் பெற்றால் அவர்கள் விரும்பியதுபோல வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்புவதாக நிர்வாகம் சமரசம் பேசுகிறது. அதேசமயம் அந்த காணொலியில் இருக்கும் இளம்பெண் வீடியோ வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்துகொண்ட உண்மை நாயகிக்குத் தெரிய வருகிறது. உடனே அவர் நிர்வாகத்திடம் காணொலியில் இருப்பது தான் அல்ல என்று நிர்வாகம் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும் (Declaration) மற்றும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிற பெண்ணின் குடும்பத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என இரண்டு நிபந்தனைகள் வைக்கிறாள். இறந்த பெண்ணின் தாயாரை நேரில் சென்று பார்க்கும் நாயகி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள். இறந்தவளின் உயிருக்கான விலைதான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு என்பதை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். ஆனால் அவள் கணவன் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தான் மட்டும் வெளிநாடு செல்கிறான். நாயகி கேட்டதுபோல் தகவல் பலகையில் அறிவிப்பு #Declaration வெளியிடப்படுகிறது என்பதாகப் படம் முடிகிறது.

தன் மனைவி சம்பந்தப்பட்ட ஒரு தவறான காணொலி வெளிவந்தால் அது மானப்பிரச்சினை என்று அவசரமாக மனைவியைப் பிரிகிறவர்களுக்கு மத்தியில் தன் மனைவிக்கு நியாயம் கிடைக்கக் காவல்நிலையம் செல்லும் 'அறியிப்பு' படத்தின் நாயகன் நம்பிக்கை அளிக்கிறான். ஆனால் அவ்வளவு உறுதியாக இருந்தவன் ஒரு சிறு ஆதாரத்தைக் கண்டவுடன் விசாரிக்காமலேயே குற்றவாளி என முடிவு செய்து அவளை வீட்டைவிட்டுத் துரத்துகிறான். இந்தத் தடுமாற்றம் தவறு என்றாலும் இதுதான் இங்கு யதார்த்தம்.

Ariyippu | Declaration

சமூகத்தை எதிர்கொள்ள அச்சப்பட்டு முதலில் தனக்காகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் நாயகி, அதுவே இன்னொரு பெண்ணின் மரணத்தை மறைப்பதற்குப் பரிசாக தனக்கு வெளிநாட்டு வேலை வரும்போது அதை ஏற்க மறுக்கிறாள். தனக்கு முன் அறிமுகமில்லாத பெண்ணின் மரணத்திற்காக தன்னுடைய கனவை அடையும் நல்வாய்ப்பைத் தவறவிடுவது என்பதும்கூட நீதியின் பக்கம் நிற்பதுதான்.

ஆண்கள் பெண்களைவிட ’ப்ராக்டிகலானவர்கள்’ என்று சொல்லிக்கொள்வார்கள். அதற்கு எல்லாவற்றையும் ‘கன்வின்ஸ்’ செய்துகொண்டு நிர்வாகம் கொடுக்கும் ‘ஆஃபரை’ ஏற்று வெளிநாடு செல்லும் நாயகனே சாட்சி.

படம் இரண்டு: The Teacher

கொல்லத்தில் ஒரு தனியார்ப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கும் நாயகி. அவளுடைய கணவன் பொது மருத்துவமனையில் வேலை பார்க்கிறான். முதல் நாள் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடத்திய களைப்பால் அசந்து தூங்கி எழும் நாயகி, உடலில் அதீத களைப்பு, வலி, ஏதோ மாற்றம் இருப்பதாக உணர்கிறாள். எவ்வளவு யோசித்தும் முதல்நாள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என நினைவில்லை. மனதில் இந்தக் குழப்பத்துடனே அவளது அன்றாட வேலைகளைத் தொடர்ந்தாலும் உள்ளுக்குள் தன்னுடைய மாற்றத்திற்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டே இருக்கிறாள். இதனிடையே நான்கு ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நாயகி கர்ப்பமாகிறாள். அந்த கர்ப்பம் அவளை அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. தன்னை யாரோ மயக்கமருந்து கொடுத்து வன்புணர்வு செய்திருக்கலாம் என சந்தேகமுற்று கருவைக் கலைக்க நினைக்கிறாள்.

The Teacher

கணவரிடம் உண்மையைச் சொல்ல, அவன் அவள்மீதே குற்றம் சுமத்துகிறான் (Victim Blaming). சந்தேகத்தின் நுனியைப் பற்றிக்கொண்டே போனவள், போட்டியில் கலந்துகொள்ள வந்த வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்தான் தன்னை வன்புணர்வு செய்தவர்கள் எனும் உண்மை தெரிந்து உடைந்துபோகிறாள். கணவன் எதிர்த்தாலும் தன் மாமியாரிடம் தனக்கு நேர்ந்த பாதிப்பைக் கூறுகிறாள். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த களப்போராளியான மாமியாரின் உதவியுடன் மாணவர்களைப் பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை.

பொதுவாக பாலியல் குற்றங்கள் நிகழும்போதெல்லாம் சமூகம் அவசரமாகக் குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும் எனக் கொதித்தெழும். அதன் பின்னணியில் போலி என்கவுன்ட்டர்களும் சிறை மரணங்களும் நிகழும். பொதுமக்களின் இந்தக் கும்பல் மனநிலையும், அரசு மற்றும் காவல்துறையின் அவசர எதிர்வினையும் மிகவும் தவறானவை என சமூகத்தில் பல உண்மைச் சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.

ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் யார் வேண்டுமானாலும் சட்டத்தைக் கையில் எடுக்கலாம் என்கிற தவறான போதனையை முன்வைக்கின்றன. மாணவர்களுக்கு சமூகத்தையும் சட்டத்தையும் மதிக்கச் சொல்லித் தரும் மாபெரும் பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது. சாலை விதிகள் முதல் வாக்குரிமை வரை சட்ட விதிகளைச் சொல்லித்தந்தவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் ஒரு ஆசிரியர் தனக்குத் தீங்கிழைத்த மாணவர்களைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் தனிப்பட்ட உதவியுடன் தானே பழிவாங்குகிறார் என்பதைப் பார்க்க மனம் பதைபதைக்கிறது. எமோஷனல் மோடிலிருந்து வெளியே வந்து இதன் அறத்தை ஆராய்ந்தால்தான் இதிலிருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள முடியும்.

மாணவர்கள் ஆசிரியரை வன்புணர்வு செய்யும் சம்பவங்கள் எங்காவது ஒன்றிரண்டு நடந்திருக்கலாம். சமூகத்தில் நடப்பதைத்தான் திரைப்படமாக எடுக்கிறோம் எனச் சொல்லி பதின்பருவ மாணவர்கள் மீது ஒட்டு மொத்தமாக அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் திரைப்படம் ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது. அதேபோல் மாணவர்களைப் பழிவாங்கத் தனியாக விடுதிக்கு வரவைப்பதற்காக ஆசிரியரான நாயகி மாணவனை ஆசை வார்த்தைகள் கூறி மயக்குவது, இறுதிக்காட்சியில் மாணவர்கள் ஆசிரியரிடம் தவறாகப் பேசுவது, நெருக்கமாக நடந்துகொள்வது போன்ற காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.

The Teacher

’எனது முதல் காதல் என்னுடைய ஆசிரியர்தான்’ என்பதில் தொடங்கி, ஆசிரியர்களை நேரடியாக ’க்ரஷ்’ எனச் சொல்வதுவரை எல்லாவற்றையும் விளையாட்டாக “நார்மலைஸ்” ஆக்கி வைத்திருப்பதன் நீட்சிதான் மாணவர்கள் ஆசிரியர்மீது மோகம் கொண்டு வல்லுறவுக்கு உட்படுத்துவதாகத் திரைப்படங்கள் எடுப்பது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழும்போது முதலில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். படம் இந்த இரண்டு அடிப்படை விஷயங்களுக்கும் எதிராக இருக்கிறது.

படம் மூன்று: Jaya Jaya Jaya Jaya Hey

ஏற்பாட்டுத் திருமணத்தில் இணையும் சராசரி ஆண் - பெண் வாழ்வில் உள்ள புரிதலின்மைதான் கதைக்களம். தனக்கும் தன் அண்ணனுக்கும் இடையில் பெற்றோர்கள் பெண், ஆண் பாகுபாடு பார்ப்பது குறித்த புகாரை நாயகி தன் தோழியிடம் சொல்லும்போது, இது சாதாரணம்தானே, ஏன் பெரிதுபடுத்துகிறாய் எனத் தோழி கேட்பதில் படம் தொடங்குகிறது. இந்த ஆண் - பெண் பாரபட்சம் நாயகிக்குக் கணவன் வீட்டிலும் தொடர்கிறது.

Jaya Jaya Jaya Jaya Hey
மனைவி வீட்டில் ’சும்மா’ இருப்பதாகவும், தான் குடும்பத்திற்காகக் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பதாகவும் எண்ணிக்கொண்டு அவளைத் தனது அடிமையாக நடத்தும் சராசரி கணவன்தான் நாயகன். அவனுக்குக் கோபம் வரும்போதெல்லாம் தன் இருப்பையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மனைவியை அறைந்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு வெளியே அழைத்துச் சென்று சமாதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அதேசமயம் சமாதானத்திற்காக உணவகம் செல்லும்போதுகூட அவளுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்ய அனுமதிக்கமாட்டான்.

“நான்தான் சாரி கேட்டுவிட்டேனே, இன்னும் ஏன் கோபமாய் இருக்கிறாய்?” எனக் கணவன் கேட்கும் மன்னிப்பு என்பது குற்றத்தை ஒப்புக்கொண்ட புரிதலினால் வெளிப்படுவது அல்ல. மனைவி ’உம்மென்று’ இருப்பது தன்மேலுள்ள கோபத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து, அந்தக் குற்றவுணர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தனது ஈகோவை விட்டுக்கொடுக்க முடியாமலும் ஆதங்கத்தில் சொல்லும் “சாரி”. இந்த கணவன்தான் பெரும்பான்மை சராசரி இந்திய ஆண்களின் பிரதிநிதி.

நாயகி அவனது அடியைத் தாங்க முடியாமல் மாமியார் மற்றும் பெற்றோரிடம் சொல்கிறாள். ஆனால் அவர்களோ ”குடும்ப வாழ்க்கையில் இது சகஜம், பொறுத்துப் போ” என அறிவுரை சொல்கிறார்கள். எவ்வளவு பொறுத்துக்கொண்டாலும் தன்னுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றானபின் ஒருநாள் தைரியமாக அவனைத் திருப்பி அடிக்கிறாள். அதற்கான தற்காப்புக் கலை பயிற்சியை யூடியூப்பில் பார்த்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி எடுக்கிறாள். அவள் தன் கணவனைத் திருப்பி அடிக்கிற காட்சியின் பின்னணியில் ஒலிபரப்பாகும் கமென்ட்ரி யதார்த்த வாழ்விலிருந்து சினிமாவாக ஃபேன்டஸிக்குள் விரிகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தன்னை நாயகி ஜெயாவின் உருவத்தில் பொருந்திப் பார்க்கும் இடம் அது. படத்தின் இந்தக் காட்சிகள் நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டிருப்பதுகூட ஆண்கள் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்கோ எனச் சந்தேகமும் வருகிறது.

மனைவியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவளைக் கர்ப்பமாக்கினால் போதும் என நாயகனின் நண்பன் திட்டம் வகுத்துத்தர, அதன்படி நாயகி கர்ப்பமாகிறாள். நாயகியின் படிப்பைப் பாதியில் நிறுத்தி திருமணம் செய்துவைத்த பெற்றோரே அவளுக்குக் கல்வியும் வருமானமும் இல்லாத காரணத்தைச் சொல்லி அச்சமூட்டி அவளைக் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இறுதியில் அவள் தாலியைக் கழட்டிக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

Jaya Jaya Jaya Jaya Hey

மனைவி தன்னை அடிப்பதைக் காரணமாக வைத்து கணவன் விவாகரத்து கோருகிறான். தனக்குத் திருமணமானதிலிருந்து கணவன் ஒருமுறைகூட தன்னிடம் சரியாக உரையாடவில்லை, தன்மீது அன்பில்லை, மொத்தத்தில் சகமனுசியாக பார்க்காமல் சமைக்கவும் வீட்டு வேலை செய்யவும் வாங்கி வந்த அடிமையாக நடத்துகிறான் என நாயகி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கிறாள். தான் தன்னுடைய மனைவிக்குச் சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் ஆனால் அவள் தனக்கு அடங்கி நடப்பதில்லை என்றும் நாயகன் நீதிமன்றத்தில் பதில் சொல்கிறான். இந்தக் காட்சி நமக்குச் சிரிப்பு வரும்படி படமாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 99.% இந்திய ஆண்கள் திருமண வாழ்க்கையை இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளார்கள்.

`தி க்ரேட் இண்டியன் கிச்சன்' திரைப்படம் வந்தபோது சொன்னதைப் போலவே இந்தப் படத்தைப் பார்க்கும் ஆண்கள், `இப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லை, இது 1980களின் கதை’ என்று பதற்றத்தில் புலம்புகிறார்கள். நம் சமூகத்தில் கணவன் மனைவியை அடிப்பது இன்றும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால் நாளிதழ், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் மனைவி கணவரை அடிப்பதுபோல் நகைச்சுவையாகச் சித்திரிக்கின்றன. அதுவும் சில குடும்பங்களில் நடக்கலாம். ஆனால் இந்தக் குறைந்த சதவிகித சம்பவங்களை வைத்து பெரும்பான்மையாக நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீர்த்துப்போகச் செய்கின்றனர்.

பெரும் நகரங்களில் பெண்கள் ஓரளவு தைரியமாக மாறியிருக்கலாம். சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் கல்வி, சுயவருமானம் இல்லாமல், தங்கள் பிறந்த வீட்டினராலும் கைவிடப்பட்டு குடும்ப வன்முறைகளைப் பொறுத்துக்கொண்டு வாழும் பெண்களே இங்கு ஏராளம். அதுபோக சுயமாகச் சம்பாதிக்கும் பெண்களைக்கூட குடும்ப அமைப்பிலிருந்து வெளியேற விடாமல் குழந்தைகள் மற்றும் கௌரவத்தைக் காரணம் காட்டி பெற்றோர்களே குடும்ப வன்முறைகளுக்குள் உழலச் செய்கின்றனர்.

Jaya Jaya Jaya Jaya Hey

ஆணை கைநீட்டி அடிப்பது தவறில்லையா, பெண்கள் திருப்பி அடிப்பது சாத்தியமா, இப்படிச் செய்வதனால் குடும்ப அமைப்பு உடைந்துவிடாதா என்றெல்லாம் கேட்கின்றனர். யார் யாரை அடித்தாலும் தவறுதான் என்றாலும் ஒரு பெண் தன் வலியைக் காலங்காலமாகப் புரிந்துகொள்ளாத சமூகத்துக்கு உணர்த்தத் திருப்பி அடிப்பதைவிட வேறு என்ன வழி இருந்துவிட முடியும்?

`அறியிப்பு' படத்தில் முதலாளியாக வரும் பெண் தன் வீட்டு ஆண்களின் தவற்றை மறைக்க, ஒரு பெண் தொழிலாளியின் உயிரைப் பலி கொடுக்கிறாள்.
`தி டீச்சர்' படத்தில் நாயகியின் தோழி நாயகியை பிரச்னையில் இருந்து ஒதுங்கி வாழ அறிவுறுத்துகிறாள். குற்றம் செய்த ஒரு மாணவனின் சகோதரியும் தன் வீட்டு ஆண்களின் தவற்றை மறைத்துப் பாதிக்கப்பட்ட பெண்மீதே குற்றம் சுமத்துகிறாள்.
`ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் அம்மா, மாமியார், நாத்தனார் என அனைவரும் ஆண் அடிப்பதை “நார்மலைஸ்” செய்து அவனுக்கு அடங்கிப்போகச் சொல்கின்றனர்.

வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள் முதல் குடும்பத்தில் நடக்கும் கணவன் மனைவி பிரச்னைவரை பெண்கள் பெண்களையே அடங்கிப்போகச் சொல்வதற்குக் காரணம் நாம் இன்னமும் ஆண்-மைய சமூக அமைப்பில் இருப்பதும் அதைப் பெண்களே தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்வதும்தான் (Patriarchy). பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கிடைக்கவிடாமல் தடுக்கும் முதல் காரணி பெண்கள் அவர்களுக்குள் அணியாய், அமைப்பாய் திரளாமல் இருப்பது. ஓர் ஆணின் புரட்சியில் பாலின பேதமில்லாமல் எல்லோரும் சட்டென ஒன்றுகூடுவது போலப் பெண்கள் போராட்டங்களுக்கு அழைக்கும்போது சகபெண்களே முழு நம்பிக்கையுடன் ஒன்று கூடுவதில்லை.

காரணம் ஆண்களின் உலகில் அங்கீகாரம் வேண்டி பெண்கள் நிற்கிறார்களே தவிர தாங்கள் தங்களுடைய உலகை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள் அல்லது காலங்காலமாக இந்த சமூக அமைப்பு அதை மறக்கும்படி செய்திருக்கிறது.
Ariyippu | Declaration

பெண்களை ஒன்று சேராமல் தடுக்கும் சிறு ஆயுதம், “நீ அவளைப்போல் இல்லை” என்றும் குடும்பப் பெண்கள் வேறு, போராளிகள் வேறு என்றும் மிகத் தெளிவாகப் பிரித்து வைக்கும் சூழ்ச்சி. ஆண்கள் கொடுக்கும் 'குடும்பப்பெண்' அங்கிகாரம் இல்லை என்றால் இந்தச் சமூகத்தில் வாழமுடியாது என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மிக அடிப்படையான கல்வி, சுயவருமானம் முதலான விஷயங்களுக்கே பெண்கள் இன்னமும் குடும்பங்களில் போராட வேண்டிய சூழலுள்ள நாட்டில் தங்களுக்குப் புதிது புதிதாக உருவாகும் பிரச்னைகளை, குறிப்பாகப் பெண்கள் வேலை செய்யும் இடங்களில், இணையத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தனித்து எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் படித்து, வேலை பார்க்கும் வாய்ப்பிருந்தும் பல பெண்கள் மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

சமூகம் மீண்டும் மீண்டும் பொதுவெளியை ஆண்களுக்கானதாக கட்டமைப்பதில் உறுதியாக இருக்கிறது. சாதாரண நாள்கூலி வேலையிலிருந்து அரசியல்வரை பெண்களைப் பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தத் தொடர்ந்து பாலியல் ரீதியான பிரச்னைகளையே ஆண்-மைய சமூகம் கையில் எடுக்கிறது என்பதற்குச் சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களே சாட்சி.

டெல்லி நிர்பயா வழக்கில் முதன்மை குற்றவாளி முகேஷ் வன்கொலை செய்தது பற்றித் துளியும் குற்றவுணர்வு இன்றி, ”பெண்களின் இடம் அடுப்படிதான், அதைக் கடந்து வெளியே வரும் பெண்களை வன்புணர்வு செய்வது தவறில்லை" என்று தண்டனை பெற்றபின்னும் கூறியிருப்பான். பத்தாண்டுகள் கடந்தும், இன்றும் ஆண்கள் சமூகவலைதளங்களிலும் மற்ற ஊடகங்களிலும் இதே மனநிலையில்தான் இயங்குகின்றனர்.

கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் நடக்கும்போது தவறு செய்த ஆண்களை சட்டப்படி தண்டனையிலிருந்து காப்பாற்ற அவர்கள் குடும்பம் நீதிமன்றங்களில் போராடுவதைப் பார்த்திருக்கிறோம். கொலை செய்யும் ஆண்களை வாரிசு என்கிற காரணத்தால் சொத்தை விற்றுக் காப்பாற்றும் சமூகம் தங்கள் வீட்டுப் பெண்களின் போலியாகச் சித்திரிக்கப்பட்ட (Morphing) படங்கள் வெளியானால்கூட முதல் வேளையாக அந்தப் பெண்களைத்தான் குற்றம் சாட்டுகிறது. வீட்டுக்குள் முடக்கி, ஒதுக்கி வைக்கிறது.

The Teacher

இதிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டுமானால், முதலில் தங்கள் உடல் புனிதமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய படத்தையோ அல்லது நம்முடைய படத்தை வைத்துச் சித்திரிக்கப்பட்ட படங்களையோ ஒருவர் இணையத்தில் நமது அனுமதியில்லாமல் பகிர்வது சட்டப்படி குற்றம் என்கிற விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இந்த மூன்று படங்களும் உணர்த்தும் பொதுவான விஷயங்கள் நான்கு.

- பெண்கள் தங்கள் பிரச்னைகளை முதலில் வெளிப்படையாகக் குடும்பத்தில் பேசவேண்டும் (Transparency).

- குடும்பம் உடன் நிற்காவிட்டாலும் தீர்வு அல்லது நீதியை நோக்கி தனியாகப் போராடும் மனதைரியம் கொள்ள வேண்டும் (Courage).

- குடும்பம், நட்பு வட்டம் மட்டுமல்லாமல் அறிமுகமில்லாத பெண்களுக்குப் பிரச்னை என வரும்போதும் துணிச்சலுடன் உடன் நிற்க வேண்டும் (Solidarity).

- கல்வி, சுயவருமானம் இவற்றோடு தற்காப்புக் கலையும் பெண்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் (Self Defense). இது ஒருவகை வற்புறுத்தல்தான் என்றாலும், ஆண்-மைய உலகம் சுழலும்வரை இது காலத்தின் கட்டாயமாகிப் போகிறது.



source https://cinema.vikatan.com/women/a-few-lessons-to-learn-from-ariyippu-the-teacher-and-jaya-jaya-jaya-jaya-hey-movies

பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல தடை... சேலத்தில் அதிரடி காட்டிய அதிகாரிகள்!

சேலம், மேட்டூர் அருகே பழங்கோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் எனும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முற்பட்டபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அவர்களை கோயிலுக்குள் நுழைய தடை விதித்திருந்தனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அப்போது பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

பின்னர் கடந்த 25-ம் தேதி 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. அப்போது பட்டியலின மக்கள் மீண்டும் கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, அந்த குறிப்பிட்ட சமூக மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசலம், இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ராஜா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் சீல் அகற்றப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை அடுத்து பட்டியல் இன மக்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர். மேலும் கிராமத்தைச் சுற்றி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/scheduled-caste-people-are-prohibited-from-entering-the-temple-officials-took-action-in-salem

ஆங்கிலப் புத்தாண்டு 2023 ராசிபலன்கள்: ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கணித்த பலன்கள் சொல்வது என்ன?

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - ரிஷபம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - மிதுனம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - கடகம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - சிம்மம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - கன்னி
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - துலாம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - விருச்சிகம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - தனுசு
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - மகரம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - கும்பம்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023 - மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/new-year-astrological-predictions-for-all-12-astro-signs-by-kp-vidhyadharan

வேட்டி, சேலை திட்டம்: ``பதில் வந்ததே தவிர, பலன் கிடைக்கவில்லை" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், "கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எம்ஜிஆர்-ஆல் 1983-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்குகிற திட்டம் தொடங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்

அதைத்தொடர்ந்து அம்மா ஆட்சியில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டது.   எடப்பாடியார் ஆட்சியில் 2021- ஆம் ஆண்டு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தற்போது வேட்டி சேலைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதை எடப்பாடியார் அறிக்கை மூலம் அரசுக்கு கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். வரும் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நெசவு செய்யும் பணியில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் முடங்கிப் போயுள்ளது. இதனால் நெசவாளர்களுக்கும் கூட்டுறவு சொசைட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலவச வேட்டி- சேலை!

90 சதவிகித நெசவாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தரமில்லாத நூல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால்தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை எடப்பாடியார் ஆணித்தரமாக அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தார். 

இதன் காரணமாக தைப்பொங்கலுக்கு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெசவாளர் குடும்பங்கள் வேலை இழந்து தவிப்பதை கண்டித்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று  எடப்பாடியார் கூறிய குற்றச்சாட்டுக்கு கைத்தறி துறை அமைச்சரின் பதிலில் உண்மை இல்லை. 

கடந்த ஆண்டும் இதுகுறித்து சட்டமன்றத்தில் கேட்கப்பட்டபோது பதில் வந்ததே தவிர மக்களுக்கு  பலன் கிடைக்கவில்லை. பதில் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம், ஆனால், மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்திருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியார் மக்களுக்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை  நடத்திக் கொண்டிருக்கிறார். உரிமைக்குரல் எழுப்பி கரும்பை மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து அரசுக்கு முன்வைத்து வருகிறார். வேட்டி, சேலை திட்டம் குறித்து எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருக்கிற பதில் கழுவுற மீனில் நழுவுகிற மீனாக உள்ளதே தவிர, உள்ளபடி உண்மையை எடுத்துச் சொல்கிற அறிக்கையாக அமையவில்லை. பதில் தந்து  நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/r-b-udhayakumar-attacks-dmk-minister-gandhi-over-the-dhothi-saree-scheme

ஒன் பை டூ

இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், நா.த.க

``உண்மையைச் சொல்லியிருக்கிறார். வெறும் பேச்சளவில் பா.ஜ.க எதிர்ப்பு என்கிறது தி.மு.க. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே முழுநேர வேலையாகச் செய்துகொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி பேசிய வாய்கள், இப்போது மாநிலத்துக்குள் என்.ஐ.ஏ அலுவலகம் திறக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. கோவை வெடி விபத்து வழக்கை முதல் நிலையிலேயே என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கிறார்கள். சிறைக் கொட்டடியில் அடைபட்டுக்கிடக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க ஒப்புக்கு ஒரு குழு அமைத்தார்கள். பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தந்த மாநில வரம்பில் விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் ரத்து செய்திருக்கின்றன. தி.மு.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் கூறுகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்துவதும் இதே திமுக-தான். தெலங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்கள். அப்படி தமிழக ஆளுநரை இவர்களால் புறக்கணிக்க முடியுமா?’’

இடும்பாவனம் கார்த்திக் - எம்.எம்.அப்துல்லா

எம்.எம்.அப்துல்லா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க

``சீமான் உளறுவதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நாம் தமிழர் கட்சி என்பது பா.ஜ.க-வின் ‘பி’ டீம். இது ஊரறிந்த விஷயம். எதையெல்லாம் தங்களால் நேரடியாகச் செய்ய முடியாதோ, அதையெல்லாம் தங்கள் ‘பி’ டீமை வைத்து சாதித்துக்கொள்வது காவிகளின் வாடிக்கை. என்.ஐ.ஏ என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பு. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ இருக்கிறது. கொள்கைகள் வெவ்வேறாக இருந்தபோதும், இந்தியாவின் பாதுகாப்பில் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்காமலிருக்க முடியாது. நாம் தமிழர் கட்சியினர் நம்புவதுபோல தமிழகம் ஒன்றும் தனி நாடு அல்ல. தமிழக அரசு என்ன செய்தாலும், பா.ஜ.க அரசு அதில் குற்றம் காணக் காத்துக்கிடப்பதாலேயே கோவை வெடி விபத்து வழக்கை முதலிலேயே என்.ஐ.ஏ-விடம் வழங்கினோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல கூறுகளையே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதைக் கூறு இல்லாத நாம் தமிழர் கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆளுநரைச் சட்டரீதியாகப் புறக்கணிக்க முடியாததால்தான் மாநில சுயாட்சி கேட்கிறோம்!’’



source https://www.vikatan.com/news/politics/discussion-about-seeman-comments-on-dmk-and-rss

Daily Horoscope | Today Rasi Palan | December - 31 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் | 31.12.22

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31122022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வியாழன், 29 டிசம்பர், 2022

புதுக்கோட்டை: பைக்கில் சென்ற இளைஞர் வெட்டிப் படுகொலை! - மர்ம கும்பல் வெறிச்செயல்

புதுக்கோட்டை தொண்டைமான் நகரைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் நகர் மன்ற உறுப்பினர் சின்னையாவின் தம்பி மகன் ஆவார். நேற்று மாலை கலையரசன் தனது வீட்டிலிருந்து, டூவீலரில் புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து சற்று தொலைவிலேயே, அவரை வேகமாகப் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று பைக்கில் சென்ற கலையரசனை, கண் இமைக்கும் நேரத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதில், படுகாயமடைந்த கலையரசன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கலையரசன்

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நகர் போலீஸார், கலையரசனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான கலையரசன் குடும்பத்துக்கும், அவரின் உறவினர்கள் குடும்பத்தினருக்கும், குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், உறவினர்களாலே கலையரசன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை

சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரௌடி இளவரசன் புதுக்கோட்டையில் பட்டப் பகலிலேயே கொடூரமான முறையில் பெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இதேபோல், பொன்னமராவதியிலும் கடந்த வாரம் வீட்டிலேயே வைத்து தாயையும், மகனையும் கொலைசெய்துவிட்டு, மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கின்றனர். கடந்த வாரம், இநத வாரம் என அடுத்தடுத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் புதுக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/youth-murdered-in-pudukottai-police-investigation-goes-on

Doctor Vikatan: பேருந்து இருக்கையில் மோதி உடைந்த பற்கள்... பழையபடி சீராக்க வாய்ப்பிருக்கிறதா?

Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு வயது 30. இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையின் கம்பியில் மோதி பற்களில் அடிபட்டது. சில பற்கள் உதிர்ந்துவிட்டன. இன்னும் சில பற்கள் ஆடுகின்றன. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய நிலையைப் பார்த்து என் தோழி மிகவும் வருந்துகிறாள். அவனுக்கு பற்களை முன்பு போல சீராக்க முடியுமா? அதிக செலவாகுமா?

- அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

மரியம் சஃபி | நாகர்கோவில்

முதல் வேலையாக உங்கள் தோழியின் மகனை பல் மருத்துவரை அணுகச் சொல்லுங்கள். மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு, பற்களின் நிலை அறிந்து தேவைப்பட்டால் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைப்பார். எலும்புகளின் அடர்த்தி, பற்கள் தவிர வேறு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்.

இவற்றை வைத்துதான் அடுத்து சிகிச்சை பற்றி யோசிக்க முடியும். உடைந்த பற்களை சீராக்க இன்று நிறையவிதமான நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. செயற்கைப் பல் பொருத்துவதிலிருந்து, இம்ப்ளான்ட் வரை நவீனமான பல சிகிச்சைகள் இருக்கின்றன. இம்ப்ளான்ட் சிகிச்சையில் ஸ்க்ரூ பொருத்தி, அதன் மேல் நிரந்தரமாக செயற்கைப் பல்லைப் பொருத்த முடியும்.

பல் சிகிச்சை

எனவே இந்த விஷயம் குறித்து உங்கள் தோழி கவலைப்படவே தேவையில்லை. சரியான மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியதுதான் இதில் முக்கியம். செலவு பற்றிக் கேட்டிருக்கிறீர்கள்... அது உங்கள் தோழியின் மகனுக்கு கொடுக்கப்படுகிற சிகிச்சையைப் பொறுத்து மாறும். அரசு மருத்துவமனையிலா, தனியார் மருத்துவமனையிலா.... எதில் சிகிச்சை எடுக்கிறார் என்பதைப் பொறுத்தும் அது வேறுபடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-broken-teeth-is-there-a-chance-to-fix-them

`அம்மா, பாட்டியின் குணம் கலந்த பெண் வேண்டும்' - இணை குறித்த விருப்பம் தெரிவித்த ராகுல் காந்தி!

தனக்கு வரவிருக்கும் வாழ்க்கைத்துணையை குறித்து பலருக்கும்  எதிர்பார்ப்புகள் இருக்கும். காலம் முழுவதும் தன்னுடன் வாழப் போகும் இணை, இப்படிதான் இருக்க வேண்டும் சில நெறிகளை விதித்து, அதற்கேற்றாற்போல இணையைத் தேடுபவர்கள் அநேகம். இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல.

Marriage (Representational Image)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வயது 52. அவர் `பாரத் ஜோடோ யாத்ரா’ பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். அவரிடம் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணல் செய்தது. அதில் `உங்களைப் போன்ற ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் செட்டில் ஆவீர்களா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ``இது சுவாரஸ்யமான கேள்வி. நான் ஒரு பெண்ணை விரும்பலாம். அது விஷயமல்ல. அவரிடம் என்னுடைய அம்மா மற்றும் பாட்டியின் குணங்கள் கலந்த கலவை இருந்தால் நன்றாக இருக்கும். 

என் வாழ்வின் அன்பு மற்றும் என் இரண்டாவது தாய் என்னுடைய பாட்டி’’ என்று கூறியுள்ளார்.

இந்திரா காந்தி-சோனியா காந்தி

தன்னுடைய அம்மா சோனியா காந்தியின் குணங்களும், தன்னுடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் குணங்களும் தன்னுடைய வருங்கால இணைக்கு இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளது, அனைவரின் கவனத்தையும் பெற்று பேசுபொருளாகி இருக்கிறது.



source https://www.vikatan.com/news/india/rahul-gandhi-expects-life-partner-with-mixed-qualities-of-mother-and-grandmother