Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

'காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் கர்நாடக அரசு' - மென்மையாக அணுகுகிறதா திமுக அரசு?

கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இந்த அமைப்புகள், கர்நாடக அரசு காவேரியில் சரியான அளவுக்கு தண்ணீரை பங்கீட்டு தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஜனவரி வரையில் பிலிகுண்டுலு பகுதியில் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு கணக்கீடு செய்யப்படும்.

உச்சநீதிமன்றம்

அந்தவகையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கர்நாடக அரசு பங்கீட்டின் படி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடவில்லை என்பது தெரியவந்தது. அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி நிலவரப்படி பங்கீட்டின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரில் 37.971 டிஎம்சி பற்றாக்குறை இருக்கிறது. எனவே இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஆக, 10-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், "பிலிகுண்டுலு நீர் அளவைப் பகுதியில் ஆகஸ்ட் 11 முதல் அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்" எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் 11-ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. அப்போது கர்நாடக தரப்பில், "எங்களது மாநிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிட இயலாது. எனவே விநாடிக்கு 10,000 கன அடி திறந்துவிடுகிறோம்" என்றனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இதையேற்றுக்கொண்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளப்பியது.

பிலிகுண்டுலு

காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தில் திமுக அரசு அமைதியாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின. இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி புதிய மனு தாக்கல் செய்யபட்டது. அதில், "கர்நாடகவில் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய நான்கு முக்கிய அணைகள் இருக்கிறது. இவற்றில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சியில் 93.535 டிஎம்சி (82%) நீர் இருப்பு உள்ளது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

மறுபுறம் கர்நாடக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்கள், "தென்மேற்குப் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு குடிநீர்த் தேவை இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்" என வாதிடப்பட்டது. பின்னர் ஒழுங்காற்றுக்குழு கர்நாடகாவில் இருக்கும் சம்மந்தப்பட்ட அணைகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், 'கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9-ம் தேதி 42.54%, ஆகஸ்ட் 27-ம் தேதி 51.22% நீர்வரத்துப் பற்றாக்குறை இருக்கிறது' என கணக்கிட்டது.

டி.கே சிவகுமார்

இதையடுத்து, "விநாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்" என தமிழக அரசு தெரிவித்தது. இதுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார். “5,000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாதது கர்நாடகாவுக்கு பெரும் வேதனையாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு மேக்கேதாட்டுதான். அதுதான் எங்களது வேண்டுகோளும் கூட. மேகேதாட்டு என்பது கர்நாடகாவுக்கு மட்டுமல்ல... தமிழகத்துக்கும் உதவும்” என்றார். இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு சங்கச் செயலாளர் விமலநாதன். "தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் ஜூன் மாதம் முதலே கர்நாடக ஏமாற்றி வந்தது. அவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக சட்டத்தை மதிப்பதில்லை. தண்ணீர் இருந்தும் தரவில்லை. இதையடுத்து வழக்கு தொடருங்கள் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்திய பிறகு தயங்கி, தயங்கி தான் தமிழக அரசு அதை செய்தது.

சுந்தர விமலநாதன்

இதேபோல் தண்ணீர் தராததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கும் தனியாக வழக்கு தொடர வேண்டும். அதை செய்யாமல் தமிழக அரசு இருப்பது நல்லதல்ல. இதற்கிடையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 5.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வோம் என்று தஞ்சாவூரில் அறிவித்தார். ஆனால் 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்திருக்கிறது. மீதம் இருக்கும் 2.50 லட்சம் ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாக இருக்கிறது.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்ததும் முதலில் திருவையாறு பகுதிக்கு தான் வரும். அங்கேயே பெரும்பாலான வயல்வெளிகளில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துவிட்டது. நடுமடை, கடைமடையில் நிலைமை இன்னும் மோசம். செப்., முதல்வாரத்தில் கிட்டத்தட்ட 11 லட்சம் ஏக்கரில் சம்பா பயிரடப்பட வேண்டும். தண்ணீர் இல்லாததால் இதில் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

13 லட்சம் ஏக்கருக்கு மிகப்பெரிய சவால். இதில் பல லட்சம் விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என சொல்வதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டுகிறது. ஆனால் நமது உரிமையை பெற முடியவில்லை என்பதற்காக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டாமல் இருப்பது நிர்வாக தோல்வி.

அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் விவசாயிகளை அழைத்து அரசு பேச வேண்டும். ஆனால் அந்த மனநிலை நீர்வளத்துறை அமைச்சருக்கு இல்லை. அவரிடம் சொல்வதற்கு முதல்வரும் தயக்கம் காட்டி வருகிறார். இந்த தயக்கம் விவசாயிகளின் உரிமைகளுக்கு எதிராக மாறுகிறது. இவ்வாறு மவுனமாக இருப்பது எங்களுக்கு பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பலரும் கர்நாடகாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே அதில் ஆபத்து வந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். எனவே தான் அச்சப்படுகிறார்கள்.

தமிழக அரசு

காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கர்நாடகாவில் ஒரு நிலைப்பாட்டையும், தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டையும் வைத்துக்குக்கொண்டு இரட்டைவேடம் போடுகிறார்கள். காவிரி ஆணையம் நடுநிலையாக இல்லை. 20 தினங்களுக்கு முன்பு ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதில் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளை மிரட்டுவதாக சந்தீப் சக்சேனா பேட்டி கொடுக்கிறார்.

இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஆணையத்தில் தலைவர் பதவியில் நீடிப்பது அழகல்ல. எனவே அவரை அப்புறப்படுத்த வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் கேமவதி, ஹாரங்கி, கபினி ஆகிய மூன்று அணைகளை கட்டினார்கள். அப்போது தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்தது. அதனால் தான் இன்று இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேநிலை இனியும் நீடித்தால் வேடிக்கை பார்த்த தலைமுறை என்ற இழிச்சொல் நமக்கு வரும். அடுத்த தலைமுறை மன்னிக்காது. தமிழக அரசின் போக்கு சரியாக இல்லை" என கொதித்தார்.

ஜெயக்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். "காவிரி விவகாரத்தை பொறுத்தவரை அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து. குறிப்பாக ஒழுங்காற்றுக்குழு, கண்காணிப்புக்குழு ஆகியவற்றை நியமித்து பல்வேறு வெற்றிகளை நாம் பெற்றிருக்கிறோம். அதைபயன்படுத்தி சரியான அழுத்தம் கொடுத்து நமக்குறிய உரிமையை பெறுவதற்கு விடியா தி.மு.க அரசு தவறிவிட்டது. இந்திய கூட்டணியில் தான் கெஜ்ரிவால் இருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவரும் டெல்லி அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தைரியமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழக முதல்வர், கர்நாடகவில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு சென்றார். எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கும் சென்றார். அங்கெல்லாம் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. வக்கில்லாத, துப்பில்லாத அரசாக இருக்கிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. விவசாயிகளின் குமுறல் அதிகரித்திருக்கிறது" என்றார் காட்டமாக.

கௌதம சன்னா

பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா. "கர்நாடகாவில் பிரச்னையை பெரிதுபடுத்தி வருவது பாஜக தான். முன்னாள் முதல்வர் பொம்மை, காங்கிரஸ் அரசு கர்நாடக மக்களுக்கு துரோகம் செய்கிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகு தான் அடுத்த நிலைக்கு காங்கிரஸ் சென்றது. தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கைகளை தான் எடுத்து வருகிறார்கள்.

இந்த பிரச்னையை தீர்க்கும் பொறுப்பு மத்திய பாஜக அரசிடம் தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் தனது அரசியல் சுயலாபத்துக்காக இரண்டு மாநில மக்களையும் மோத விட்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இங்கிருக்கும் பா.ஜ.க-வினரும் சுமூகமாக தீர்க்க வேண்டும் என ஏன் கூறவில்லை. அதைவிட்டுவிட்டு அரசியல் செய்வதை சனாதன கட்சிகள் தொடர்ந்து செய்வது எரிச்சலாக இருக்கிறது" என கடுப்பானார்.

நாராயணன் திருப்பதி

பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு முழு நாடகம். காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பொழுதும், 'காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவு தான் இறுதியானது' என மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. அந்த ஆணையமும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து தான் வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை மதிக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

கூட்டணியில் இருப்பதால் தமிழக அரசு கண்டிக்கவில்லை. மேலும் இந்த பிரச்னையை தள்ளிபோடுவதற்காக உச்ச நீதிமன்றம் சென்றது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கூட்டணியில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது. இதன் மூலம் திமுகவின் தமிழகத்திற்கான துரோகம் வெளிப்பட்டிருக்கிறது. அரசியல் காட்சிகளை விடுங்கள். பாஜக ஆட்சியில் இருந்த பொழுது எந்த பிரச்னையும் இல்லை. நாம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று தான் சொல்கிறோம்" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

குற்றச்சாட்டுக்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். "வன்மையாக எப்படி நடக்க வேண்டும்?. படையை திரட்டிக்கொண்டு ராணி மங்கம்மாள் சென்றது போல், போய் அடித்துவிட்டு வரவேண்டும் என்கிறார்களா?. இதற்கு முன்பு எடப்பாடி முதல்வராக இருந்தார். அவர் என்ன வன்மையாக நடந்து கொண்டார். அவர் ஆட்சியில் தான் மேக்கேதாடூ அணை கட்டுவதற்கு ஒப்புதல் கொடுத்தது பாஜக அரசு.

அப்போது எடப்பாடி என்ன செய்து கொண்டிருந்தார். இப்பொழுது தான் தூங்கி விழிக்கிறார்களா?. உரிய தண்ணீரை தர வேண்டும் என முதல்வர் அறிக்கை கொடுத்திருக்கிறார். நீர் வளத்துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி, அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க செய்தோம். அவரிடம் காவிரி விவகாரத்தில் எங்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவர்கள் தொடர்ந்து அமைதியாக இருந்ததால் நீதிமன்றத்தை நாடினோம்.

அண்ணாமலை

எதிர்கட்சிகள் என்ன செய்கிறார்கள்?. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என எடப்பாடி உண்ணாவிரதம் இருந்திருக்கிறாரா?; ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறாரா?. எப்போதும் எதிர்கட்சி தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பாஜகவை எதிர்த்து செய்வாரா?. இவர்கள் ஆளும் கட்சியாக இருந்த பொழுது பேசத்தான் முடியும் என்றார்கள். பாஜகவினர் ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு போராட்டம் செய்திருக்கிறார்களா?.

எதுவும் கிடையாது. வீட்டில் சோத்தை தின்றுவிட்டு உட்காந்து இருப்பீர்கள். நாங்கள் தான் உரிமைக்கு சண்டை போட வேண்டும். அனைத்தும் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு அரசியலில் இருக்கிறீர்கள். நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருகிறோம். மென்மையாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது நாங்கள் சண்டை போடுகிறோம். பாஜக ஆட்சியில் எடப்பாடி சண்டை போட்டாரா?. பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடகாவில் இருக்கும் பாஜகவினர் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது எனக்கூறி ரோட்டில் படுத்து உருளுகிறார்கள். இங்கு அண்ணாமலை தூக்கில் தொங்கிவிட்டாரா என்ன?" என கோபப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-are-dissatisfied-with-dmk-on-the-cauvery-issue-what-dmk-says

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ - மும்பை கூட்டமும் அரசியல் நகர்வுகளும்!

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் 1) என்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்தும், மத்திய அரசு திடீரென எந்த ஆலோசனையும் செய்யாமல் நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் இம்மாதம் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி, சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து வரும் 30-ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கூட்டம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ``இந்தியா கூட்டணிக்கு ஒரு அமைப்பாளர், ஒருங்கிணைப்பு குழு தேவை. இப்போது நடப்பது போல் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூடி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழு அடிக்கடி கூடி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேட்டதற்கு, ``பிரதம வேட்பாளரை இப்போது அறிவிக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும் பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சிவசேனா(உத்தவ்) தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ``2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு பயனளிக்கும் வகையில் மும்பை கூட்டத்தில் யுக்தி வகுக்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டியில், ``நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை வலுப்படுத்துவது அவசியம். வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் நலன் பிரச்னைக்கு தீர்வு காண மோடி அரசு தவறிவிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் குறைந்த பட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளரையும் நிறுத்துவோம்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அளித்த பேட்டியில், ``இந்தியா கூட்டணி நாட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வெற்றி பெறாத மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன. கூட்டணி என்பது எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ அல்ல. நாட்டை பாதுகாக்க...” என்றார்.

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ``பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணமான நரேந்திர மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதில் இந்தியா கூட்டணி சவாலை எதிர் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பு, கூட்டணி தலைவர்கள் அறிமுக புகைப்படம் எடுத்தல், லோகோ வெளியிடுதல் போன்றவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய கூட்டத்தில் ஒருகிணைப்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் அது பீகார் முதல்வர் நிதிஷ் குமாராக இருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாக்கொண்டு இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/seat-sharing-to-be-finalized-on-september-30-opposition-leaders-decide-in-mumbai

நட்சத்திரப் பலன்கள்: செப்டம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-september-1st-to-7th

புதன், 30 ஆகஸ்ட், 2023

உ.பி: `என்னைச் சுட்டுவிடாதீர்கள்!’ - 6 மாதமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீஸில் திடீர் சரண்டர்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, புல்டோசர் பாலிடிக்ஸ் மற்றும் என்கவுன்டர் கலாசாரம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்கிறார்கள். யோகியின் ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 183 குற்றாவளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி சரண்டர் - உத்தரப்பிரதேசம்

இவ்வாறிருக்க, கொள்ளை வழக்கில் 6 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியொருவர், நேற்று முன்தினம் பதாகையுடன், `என்னைச் சுட்டுவிடாதீர்கள்' என போலீஸில் சரணடைந்திருக்கிறார்.

முன்னதாக, மஹுலி கோரி கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் சவுகான் என்பவர், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி கல்லூரியிலிருந்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பிப்ராஹி பாலம் அருகே இரண்டு பேர் தன்னைத் தடுத்து நிறுத்தி, துப்பாக்கி முனையில் பைக், செல்போன், பர்ஸ் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

அதையடுத்து போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்ததில், அங்கித் வர்மா உட்பட இரண்டு பேர் இதில் ஈடுபட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அங்கித் வர்மாவைக் கைதுசெய்தால், இருபதாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

குற்றவாளி சரண்டர்

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அங்கித் வர்மா, செவ்வாய் கிழமையன்று சாபியா காவல் நிலையத்தில் `நான் சரணடைய வந்திருக்கிறேன். என்னைச் சுடாதீர்கள்' என்று கத்தியபடி, அதே வாசகத்தை எழுதியிருக்கும் பதாகையுடன் போலீஸார் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார்.

இதுகுறித்து நேற்று பேசிய அதிகாரி நவீனா சுக்லா, ``போலீஸார் மீதான பயத்தின் விளைவாக குற்றவாளிகள் இவ்வாறு சரணடைகிறார்கள்" என்று தெரிவித்தார். அதோடு, `முதல்வர் யோகி இங்கு வருவதற்கு முன்பாகவே குற்றவாளி சரணடைந்தது பெரிய சாதனை' என்று போலீஸார் கூறிவருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/do-not-shoot-me-6-months-abscond-accused-surrendered-police-with-placard

விநாயகர் அகவல்: மூலமும் விளக்கமும்! நினைத்ததை நடத்தி வைக்கும் அதிசயப் பாடல்!

ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் - ஔவையார் அருளியது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

விநாயகர்!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

அரசமரத்தடி விநாயகர்

இடைபிங் கலையின் எழுத்தறி வித்து

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

விநாயகர்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

விநாயகர் அகவல் ஏன் உருவானது!

ஈசன் அளித்த வெள்ளை யானையின் மீதேறி சுந்தரமூர்த்தி நாயனாரும், வெள்ளைக் குதிரை மீதேறி சேரமான்பெருமான் நாயனாரும் தங்கள் பிறவியை முடித்துக் கொண்டு வான்வழியே திருக்கயிலைக்குச் சென்றார்கள். அப்போது திருக்கோவலூரில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் கணபதியை பூஜித்துக் கொண்டிருந்தார் ஒளவையார். இருவரும் கயிலைக்குச் செல்வதைக் கண்ட ஒளவையாருக்கும் திருக்கயிலைக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. கயிலைக்குச் செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரார்த்தனையாக்கி, விநாயகருக்குத் துதிப்பாடல் ஒன்றையும் சமர்ப்பித்தார். அதுவே விநாயகர் அகவல். இந்தப் பாடலை அவர் பாடி முடித்ததும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஒளவையின் பூஜையாலும் பாடலாலும் மகிழ்ந்த விநாயகர், தன் துதிக்கையால் அவரைத் தூக்கி, ஒரே க்ஷணத்தில் கயிலையில் சேர்த்தார். அதன் பிறகே சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். இருவரும் ‘இது எப்படி சாத்தியம்’ என்று வினவ, அதற்கு ஔவையார்

‘மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை

முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி

அதிரநடந்தும் யானையும் தேரும் அதன் பின்வருங்

குதிரையுங் காதங் கிழவியும் காதங்குல மன்னரே!’

என்றாராம். அதாவது, `மதுர மொழி கொண்ட உமையின் புதல்வனான விநாயகரைத் துதித்ததால், அவரருளாலேயே யானைக்கும், குதிரைக்கும் முன்பாகவே என்னால் கயிலையை வந்தடைய முடிந்தது' என்றார். ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

விநாயகர்

பாடலின் எளிய விளக்கம்:

அகவல் என்றால் அழைத்தல் என்று பொருள். விநாயகர் அகவல் என்னும் இப்பாடல், விநாயகப் பெருமானின் அருள்வேண்டி அழைத்துப் போற்றித் துதிக்க, ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டது. விநாயகப்பெருமானை பல்வேறாகத் துதித்து, அவரது பெருமைகளைப் போற்றி வியக்கும் இந்த பாடல், வெறும் ஸ்தோத்திரப் பாடலாக மட்டுமின்றி, ஞானத்தை விளக்கும் சாஸ்திரப் பாடலாகவும் இருப்பது சிறப்பு. அளவில்லாத ஆனந்தத்தை அளித்து, துன்பங்கள் அகற்றி, அருள் வழி காட்டி, உள்ளும், புறமும் ஈசனைக் காட்டி அருள்பவன் விநாயகன். அளவில்லாத ஞானத்தை உள்ளேயே காட்டி, உண்மையான தொண்டர்களுடன் நம்மைச் சேர்த்து, உண்மையான பொருளை நம் நெஞ்சிலே அறிவித்து, நம்மை ஆட்கொண்ட ஞான வடிவான விநாயகப் பெருமானே, பரிமள சுகந்தமான உமது பாதார விந்தங்களுக்கு சரணம் என்கிறது இந்த பாடல்.

இந்தப் பாடலின் பயன்:

விநாயகர் அகவலை அன்றாடம் பாராயணம் செய்துவந்தால் காரியத் தடைகள் அகலும். விருப்பங்கள் நிறைவேறும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆண்கள் தொழிலிலும் வேலையிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்கள் மங்கல வாழ்வு பெற்று நிறைவோடு வாழ்வார்கள். சுருங்கச் சொல்லின் எண்ணியவை யாவும் நிறைவேற்றும் புண்ணியப் பாடல் இது.



source https://www.vikatan.com/spiritual/vinayagar-agaval-lord-ganapathy-worship-and-spiritual-slogans