Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

பாலியல் தொல்லை; பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! - ஆத்தூர் மாணவி விவகாரத்தில் நடந்ததென்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியில் உள்ளது அந்த தனியார் பள்ளி. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி வீட்டில் இருந்தபோது பிளேடால் கையை அறுத்துக் கொண்டதோடு, தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறிப்போன பெற்றோர், உடனே அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெற்றோர்கள் எவ்வளவோ கேட்டும் தற்கொலைக்கான காரணத்தைச் சொல்லாமல் மெளனமாக இருந்துவந்த மாணவி, மருத்துவர்களின் கவுன்சிலிங்கின் போது ஆசிரியர் ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களைச் சொல்லி வெடித்து அழுதுள்ளார். அதனையடுத்து போலீஸார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

கராத்தே மாஸ்டர் ராஜா

விசாரணயில், பள்ளியின் கராத்தே மாஸ்டரான ராஜா (46), சம்பந்தப்பட்ட மாணவி 8-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் இது மாணவிக்கு புரியாயமல் போக, ஒருகட்டத்தில் மாஸ்டரின் தொல்லை எல்லை மீறியிருக்கிறது. அப்போதே பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீபன் தேவராஜிடம் மாணவி புகாரளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகும் கராத்தே மாஸ்டரின் அத்துமீறல் அதிகமாகியிருக்கிறது. இதில் உடைந்துபோன மாணவி, விஷயத்தை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

போலீஸார் விசாரித்து வந்த அதேவேளையில், இந்த விஷயம் காட்டூத்தீயாய் ஊர்மக்களிடம் பரவ, கராத்தே மாஸ்டர் ராஜாவை அடித்து துவைத்தெடுத்து ஊர்மக்களே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை போக்சோ சட்ட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே மாணவி சொல்லியிருந்தபோதும், கராத்தே மாஸ்டர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக பள்ளியின் முதல்வர் ஸ்டீபன் தேவராஜையும் போலீஸார் கைது செய்தனர்.

Also Read: ஈரோடு: `1098’ சைல்டு ஹெல்ப்லைனுக்கு வந்த அழைப்பு! - பாலியல் புகாரால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

இந்நிலையில், கராத்தே மாஸ்டர் ராஜாவை போலீஸார் கைது செய்வதற்கு முன், நவம்பர் 27-ம் தேதி காலை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜாவை புத்திரகவுண்டன்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த ராஜாவை அந்தக் கும்பல் மிளகாய்ப்பொடித் தூவி காரில் கடத்திச் சென்று, வெள்ளிமலை பகுதியில் வைத்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த விஷயத்தை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கராத்தே மாஸ்டர் ராஜா சொல்லியுள்ளார். அதையடுத்து கராத்தே மாஸ்டரை கடத்திச்சென்று தாக்கிய 8 பேர் கொண்ட கும்பல் மீது ஏத்தாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை

இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “நாலு வருஷத்துக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட அந்த கராத்தே மாஸ்டர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துருக்காரு. ‘கோயமுத்தூர் மாணவிக்கு நடந்த கொடுமைக்குப் பின்னாடி, எனக்கு நேர்ந்த தொந்தரவுகளையும் சொல்லணும்’னு சொல்லி மாணவி புகார் கொடுத்தாங்க. நாங்க என்னன்னு விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் மன அழுத்தத்தில் மாணவி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுட்டாங்க. சம்பந்தப்பட்ட கராத்தே மாஸ்டரை மாணவிக்கு வேண்டப்பட்ட உறவினர்கள் சிலர் அடிச்சி, இழுத்துவந்து ஸ்டேஷன்ல ஒப்படைச்சாங்க. மத்தபடி இந்த விவகாரத்துல பணம் கேட்டு மிரட்டுனதா எதுவும் இல்லை. இருந்தாலும், கராத்தே மாஸ்டரை எதுக்காக அடிச்சீங்கன்னு 8 பேர் மேல கேஸ் போட்ருக்கோம். இனிமேல் தான் கராத்தே மாஸ்டர் போனுக்கு யார் நம்பர்ல இருந்து போன் வந்துச்சி, யார் யாரெல்லாம் அடிச்சாங்க!... என்ன காரணம் என விசாரிக்கணும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/karate-master-who-sexually-harassed-a-student-got-arrested

இந்த ஒரு ஆப் போதும்! 'நீட்' தேர்வில் ஜெயிக்கலாம்! #NEETly

எந்தத் தேர்வாக இருந்தாலும் சரி, வெற்றிக்கு வழி ஒன்றுதான். தொடர்ந்து முயற்சி, பயிற்சி, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனம், சுருங்கச் சொன்னால் 'வலிதான் வெற்றியின் ரகசியமே!'...

நீட் 20222 -ஐ இலக்காக வைத்து ஏற்கெனவே வருங்கால டாக்டர்கள் தங்களின் பயிற்சிகளை ஆரம்பித்திருப்பார்கள்! இதற்கு முன் வென்ற மாணவர்கள் நீட்-ஐ எவ்வாறு எளிமையாக ஊதித் தள்ளியுள்ளார்கள் தெரியுமா? அதற்கு அறிவுப்பூர்வமான அறிவியல்பூர்வமான வழி ஒன்று இருக்கிறது, அதுதான் 'மாக் டெஸ்ட் (Mock Test)!' எனும் பயிற்சித் தேர்வு!

நீட் வருவதற்கு முன்பே பலமுறை, நீட் பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொண்டால், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். நம்மை நாம் சுய மதிப்பீடு செய்துகொள்வதன்மூலம் எந்தெந்த இடங்களில் சருக்குகிறோம் என்பதை அறிந்து நுட்பமாக நம் பயிற்சியை மாற்றியமைக்க முடியும். கடந்த கால நீட் தேர்வுகளில் வென்ற மாணவர்களின் முக்கிய சீக்ரெட் ஃபார்முலாவே இதுதான்!

180 நிமிடங்களில், கொடுக்கப்பட்ட 200 கேள்விகளில் இருந்து 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இதுதான் நீட் தேர்வு நமக்கு முன்னிறுத்தும் முக்கிய சவால்! நேரம் மட்டுமின்றி, தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க்கிங்கும் உண்டு!

பயிற்சித் தேர்வுகளில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவும், அதன் கட்டமைப்பும் புரிகிறது. நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடிவதுடன், சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நெகட்டிவ் மார்க்ஸ் விழாமல் தப்பிக்க உதவுகிறது. இதனால், தேர்வு நாளன்று தன்னம்பிக்கையுடன் கூலாக பரீட்சை எழுத முடியும்.

கடந்த 19 வருடங்களில் வெளிவந்த இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) வினாத்தாள்களை அலசி ஆராய்ந்து மாணவர்களுக்காக மாதிரி நீட் வினாத்தாள்களை வழங்குகிறது NEETly மொபைல் ஆப்.

* உங்க மொபைலில் NEETly ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோடு செய்யுங்க

* மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்யுங்க

* இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தனித்தனியாக உள்ள வினாக்களுக்கு ஃபோனிலேயே விடையளிக்க ஆரம்பிங்க!

* வாரம் ஒருமுறை வெளியிடப்படும் பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொண்டு உங்களின் மார்க்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!

பயிற்சித் தேர்வுகளில் எந்தெந்த மாநிலத்து மாணவர்கள் என்னென்ன மார்க்ஸ் வாங்கியிருக்கிறார்கள் என்பதை NEETly செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதனால் நம்முடைய செயல்திறன் எப்படியுள்ளது என்பதனை கணக்கிட முடியும்!

மேலும், NEETlyஆப்-ல் அனைத்து பாடங்களுக்கும் கேள்விகள் மட்டுமின்றி அவற்றின் பதில்களும் விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன! இதனால் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள பயிற்சிக் களமாக அமைகிறது NEETly.

ஒரு மாணவர் குறைந்தது 15-30 மாதிரி பயிற்சித் தேர்வுகளில் கலந்துகொள்வதால் சிறப்பாக நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று அனைத்து இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதனால் வருங்கால மருத்துவர்கள் தாமதம் செய்யாமல் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்களின் வாழ்க்கையை நீங்கள் நினைத்தது போல அமைத்துக்கொள்ளலாம்!

NEETly ஆப் டவுன்லோடு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்!



source https://www.vikatan.com/news/announcements/achieve-neet-with-neetly-app

நெல்லை: 6 திருமணம் முடித்த மோசடி `மாப்பிள்ளை’ - ஏழாவது பெண் பார்க்கும் படலத்தில் சிக்கியது எப்படி?

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரை கண்ணனிடம் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் ராஜ் என்பவர் புகார் அளித்தார். அதில், தன் மகள் விஜிலாராணியை திருமணம் செய்த திசையன்விளை சுவிஷேசபுரத்தை சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவர் பணம் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

காவல்துறையின் பிடியில் மோசடி கல்யாண மன்னன்

நெல்லை மாநகர மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. வின்சென்ட் பாஸ்கரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் இருக்குமிடம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். திருமணத்தின்போது, வின்சென்ட் பாஸ்கரின் தாய் எனத் தெரிவித்த பிளாரன்ஸ் சித்தியான தாமரைச்செல்வி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில், தாய், சித்தியாக இருவரும் போலியாக நடித்தது தெரியவந்தது. இந்த திருமணத்தின் புரோக்கராக செயல்பட்ட இன்பராஜ் என்பவர் தலைமறைவானார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கர் அப்பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் பிடியில் வின்சென்ட் பாஸ்கர் சிக்கினார்.

காவல் நிலையத்தில் மோசடி கும்பல்

அவரிடம் விசாரித்தபோது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் அடுத்தடுத்து ஆறு பெண்களை திருமணம் செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். ஒவ்வொரு பெண்ணிடமும் இருந்து வரதட்சணையாக பணம், நகைகளை மூன்று மாதங்களில் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக வைத்திருந்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆறாவதாக திருமணம் செய்த விஜிலாராணியிடம் 40 சவரன் நகை, மூன்று லட்சம் ரொக்கப் பணத்தை வரதட்சணையாகப் பெற்ற அவர், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வியாபாரத்துக்குத் தேவை என அவற்றை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தலைமறைவான நிலையில், ஏழாவது திருமணம் செய்வதற்கு கயத்தாறு பகுதியில் பெண் தேடிக்கொண்டிருந்தபோது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/man-who-married-six-ladies-and-try-to-marry-seventh-time-got-arrested

தேங்கிய மழை நீர்... திண்டாடும் பக்தர்கள்... உத்தரகோசமங்கை திருக்கோயில் நிலவரம்!

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கிறது புராணம்.

‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் இறைவன் அருள்மிகு மங்களநாதர் என்ற திருப் பெயர் கொண்டு அருள்கிறார். அம்பிகை மங்களநாயகி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். ராவணனுக்கும் மண்டோதரிக்கும் மங்கள வாழ்வு அருளியதால், இறைவன் மங்களநாதர் என்று திருப்பெயர் கொண்டதாகத் தலவரலாறு தெரிவிக்கிறது.

முற்காலத்தில், ஆயிரம் முனிவர்கள் தவமியற்ற விரும்பி இந்தத் தலத்துக்கு வந்தனர். அவர்களுக்கு தரிசனம் தந்ததுடன், ஆகமங்களையும் உபதேசித்தார் மங்கள நாதர்.

இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் நடராஜர் ஆதி சிதம்பரேசன் என்று போற்றப்படுகிறார். சுமார் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் மரகதக் கல்லினால் வடிக்கப்பட்டவர். நடராஜரின் மரகதத் திருமேனி மெல்லிய அதிர்வைக்கூடத் தாங்காது என்பதால், அவர் சந்நிதியில் மேள வாத்தியங்கள் இசைப்பதில்லை. மேலும் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடனேயே காட்சி தருவார். ஆருத்ரா அன்று மட்டும்தான் அவருடைய திருமேனி அழகை நாம் தரிசிக்க முடியும். அன்று மட்டும்தான் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அன்றிரவே மறுபடியும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிடும். முதலில் களையப்பட்ட சந்தனத்தை பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தில் சில நாள்களுக்கு முன்பாகப் பெய்த மழை காரணமாகக் கோயிலுக்கும் மழை நீர் புகுந்தது. இன்னும் அந்த மழை நீர் வடியாத நிலையில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். ஆலயத்துக்குள் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதோடு பல பகுதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் நடக்கும்போது வழுக்கிக் கீழே விழும் சூழலும் நிலவுகிறது. கோயிலும் மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்துக் கோயில் நிர்வாகத்திடம் பேசியபோது

"பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன். இதற்கிடையே மழை காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனை எங்களால் முடிந்தவரை மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தித் . இனிவரும் காலங்களில் இச் சிரமங்கள் ஏற்படாதவாறு சரிசெய்யப்படும்” என்று கூறினர்.

எப்படியோ, தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆனந்தமாக ஆலயத்தை வலம்வர ஏதுவாக விரைவில் திருக்கோயில் சரி செய்யப்பட்டால் போதும் என்கிறார்கள் பக்தர்கள்.



source https://www.vikatan.com/spiritual/temples/rain-water-logged-uththrakosamangai-temple-devotees-finds-it-hard-to-do-darshan

திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய இளைஞர்; உயிரிழந்த பாதிக்கப்பட்ட பெண்! -12 வருடங்களுக்குப் பின் நீதி

விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே உள்ளது அந்திலி கிராமம். கடந்த 2009 -ம் ஆண்டு, இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணும், பழவியாபாரி சுரேஷ் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணிடம், "உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்" என்று ஆசை வார்த்தைகளை கூறி, நெருங்கி பழகி வந்திருக்கிறார் சுரேஷ். இந்நிலையில் கர்ப்பம் அடைந்த அந்த இளம் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுரேஷிடம் மன்றாடி கேட்டபோதும் அவர், திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அப்பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர் காவல்துறையினர். இந்நிலையில், திருக்கோயிலூர் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: தொடரும் பாலியல் குற்றங்கள்... பலியாகும் பள்ளி மாணவிகள்! - ‘‘என் மக சாவுக்கு நீதி கிடைக்கணும்!’’

இதனிடையே அந்த பெண், பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அப்பெண்ணும், ஒரு வாரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இது தொடர்பான வழக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சிகளின் விசாரணைகள் முடிந்த நிலையில், நேற்று (30.11.2021) அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளார் நீதிபதி சாந்தி. இளம் பெண்ணை ஏமாற்றிய சுரேஷூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையும், 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சுரேஷ்.



source https://www.vikatan.com/news/judiciary/villupuram-womens-court-has-sentenced-a-man-to-7-years-in-prison-for-cheating

உம்ரான் மாலிக், அப்துல் சமத், அர்ஷ்தீப்.... கோடிகளைக் கொட்டி இளம் வீரர்களை அணிகள் தக்கவைத்தது ஏன்?!

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன அணிகள். ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறார்கள் என ஏற்கனவே கணிப்புகள் வெளியாகியிருந்தன. பெரும்பாலும் இந்த கணிப்புகளை ஒத்தே அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலும் இருக்கிறது. ஆனால், இதில் குட்டி சர்ப்ரைஸ்களும் இருக்கவே செய்கின்றன. எதிர்பாராத சில இளம் வீரர்களை கோடிகளை கொட்டி அணிகள் தக்கவைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீரர்களை பற்றிய அலசல் இங்கே...

சமீபத்தில் நடந்து முடிந்த சீசனில்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார் உம்ரான் மாலிக். அதுவும் சன்ரைசர்ஸ் அணி முழுமையாக தோற்று ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு துளி கூட சாத்தியமில்லை என்ற நிலையில், பென்ச்சில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்த போதுதான் உம்ரான் மாலிக் களமிறங்கினார். வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளிலும் பெரிய ரெக்கார்ட் கிடையாது. விரல்விட்டு எண்ணும் வகையிலான உள்ளூர் போட்டிகளையே ஆடியிருக்கிறார். ஆனாலும் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து தக்க வைத்திருக்கிறது. காரணம், இவரின் வேகம்.

Umran Malik
கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே இரண்டு பந்துகளை 150+ கி.மீ வேகத்தில் வீசியிருந்தார். இந்த 2 பந்துகள்தான் அத்தனை பேரின் கவனத்தையும் உம்ரான் மாலிக்கின் பக்கம் திருப்பியது.

பெங்களூருக்கு எதிரான அடுத்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக நான்கு 150+ கி.மீ டெலிவரிக்களை வீசியிருந்தார். இந்த போட்டியில் 4 ஓவர்களில் மொத்தம் 4 பந்துகளை மட்டுமே 140 கி.மீ வேகத்துக்கு கீழ் வீசியிருந்தார். அதாவது சராசரியாக ஏறக்குறைய ஒவ்வொரு பந்தையுமே 140+ வேகத்தில் வீசும் திறனுடையவராக இருந்தார். இந்த புல்லட் வேகத்தை பல முன்னாள் வீரர்களும் புகழ்ந்து தள்ளினர். இவரின் பௌலிங் ஆக்ஷனை வக்கார் யுனிஸுடன் ஒப்பிட்டு பரபரப்பையும் கிளப்பியிருந்தனர். டி20 போட்டிகளில் இவ்வளவு வேகத்தில் வீசும் பௌலர்கள் அரிய வகையினராக மாறி வருகின்றனர். நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனிலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் ஸ்லோ பால்களே வீசுயிருந்தனர். UAE பிட்ச்களும் அதற்குதான் கைகொடுத்தன. நோர்கியா, உம்ரான் மாலிக் போன்ற ஒரு சிலர் மட்டுமே முழுக்க முழுக்க வேகமாக வீசியிருந்தனர். அந்த வேகத்திற்கான பலனாக உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பௌலராக தேர்வானார். எல்லா அணிகளுக்குமே உம்ரான் மாலிக்கின் வேகத்தின் மீது ஒரு கண் இருந்தது. இப்போது சன்ரைசர்ஸ் அணியும் அவரை ரீடெயின் செய்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

ஏன் ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படுகிறோம். ஏன் பென்ச்சில் இருக்கிறோம் என வீரருக்கே காரணம் தெரியாத அளவுக்கு குழப்பமான முடிவுகளை எடுக்கும் பஞ்சாப் அணியில் முட்டி மோதி சர்வைவ் ஆகி தனக்கான நிலையான இடத்தையும் அர்ஷ்தீப் பிடித்திருந்தார். ஒரு தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளராக பவர்ப்ளே, டெத் என எங்கேயும் வீசும் பௌலராக மிரட்டியிருந்தார்.

கடந்த சீசனில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டி ஒன்றில் டெத் ஓவரில் ஹோல்டரை க்ரீஸில் வைத்துக் கொண்டு மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தினார்.
அர்ஷ்தீப் சிங்

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏலத்தில் இருக்கும் டிமாண்டை கண் கூடாக பார்த்திருப்போம். கையிலேயே ஒரு தரமான ஆளை வைத்துக்கொண்டு ஏலம் வரை சென்று ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? என்பதை உணர்ந்து 4 கோடி கொடுத்து அர்ஷ்தீப்பை ரீடெயின் செய்திருக்கின்றனர். உள்ளூர் ஆளாகவும் இருப்பது அணிக்கு எல்லாவிதத்திலும் கூடுதல் பலமாக அமையும்.

சேத்தன் சக்காரியா, கார்த்திக் தியாகி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என திறமையான பல வீரர்கள் இதற்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் யாஷஸ்வியை மட்டும் டிக் அடித்து ரீடெயின் செய்திருக்கிறது ராஜஸ்தான். திறமையான இடதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஜொலிக்கக்கூடியவர். தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படும்பட்சத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதனாலயே ராஜஸ்தான் அணியும் 4 கோடி கொடுத்து இவரை ரீட்டெயின் செய்துள்ளது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
பட்லரையும் தக்கவைத்திருப்பதால் வலது-இடது கூட்டணியாக இருவரையும் தொடர்ந்து ஓப்பனிங் இறக்கலாம் எனும் கணக்கும் இதன் பின்னணியில் இருக்கக்கூடும்.

இந்த உருமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் வெங்கடேஷ் ஐயர். திடீரென ஓப்பனிங்கில் இறங்கி கொல்கத்தா அணியின் தலையெழுத்தையே மாற்றினார்.

10 போட்டிகளில் 370 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ் இந்திய அணியிலும் இடத்தை பெற்றுக் கொடுத்தது. பேட்டிங் மட்டுமல்லாமல் மிதவேக பந்துவீச்சாளராகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஓவர்கள் வீசியிருந்தார்.
வெங்கடேஷ் ஐயர்

சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் ஆல்ரவுண்டராக நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். இப்படி ஒரு வீரரை ஒரு அணி தக்கவைக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ஆனாலும், கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில் அல்லது வெங்கடேஷ் இந்த இருவரில் யாரை எடுப்பது என்பதில் சிறிய குழப்பம் இருந்திருக்கும். டி20 போட்டிக்கு தேவையான ஆட்ட அணுகுமுறை, பௌலிங், சமீபத்திய ஃபார்ம் இவற்றின் அடிப்படையில் வெங்கடேஷ் ஐயரை 8 கோடி கொடுத்து கொல்கத்தா தக்க வைத்துள்ளது.

காஷ்மீர் அணிக்காக பயிற்சியாளர் மற்றும் வீரராக இர்ஃபான் பதான் சென்றிருந்த போது அவரின் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர் வி.வி.எஸ்.லெக்ஷ்மணிடம் சமத் பற்றி கூறி சன்ரைசர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பார். ஃபினிஷர் ரோலில் ஆடுவதற்கு அத்தனை தகுதியும் உடைய ஹார்ட் ஹிட்டர்.

கம்மின்ஸ், பும்ரா, நோர்கியா, ரபாடா என அபாயமான வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனை பேருக்கு எதிராவும் சிக்சர்களை அடித்து மிரட்டியிருக்கிறார்.

பேட்டிங் மட்டுமில்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னராகவும் ஒன்றிரண்டு ஓவர்களை வீசி கொடுக்கக்கூடியவர். 2020 சீசனில் தோனிக்கு எதிராக கடைசி ஓவரை வீச சமத்திடம் வார்னர் பந்தை கொடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 2021 சீசனில் எக்கச்சக்க குழப்பங்களுடன் களமிறங்கிய சொதப்பிய சன்ரைசர்ஸ் சமத்தையும் சரியாக பயன்படுத்த தவறியிருந்தது. ஆனாலும், அவரின் திறமையை உணர்ந்து ரீடெயின் செய்திருப்பது சாதுர்யமான முடிவு.

இதில் எந்த இளம்வீரர் அடுத்த சீசனில் ஜொலிப்பார்? கமென்ட்டில் பதிவிடுங்கள்!


source https://sports.vikatan.com/cricket/list-of-youngsters-retained-by-ipl-franchises-for-whooping-price

வேலூர்: `லஞ்சம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து சேர்ப்பு?!’ -பெண் அதிகாரி கைது பின்னணி

பொதுப்பணித்துறையின் வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் 2019-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவந்தார். இவரின் அலுவலகம், வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் அரசுக் கல்லூரிக் கட்டுமானப் பணிகள், இந்த அலுவலகம் சார்பில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளியையொட்டி கட்டட ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரி ஷோபனா வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தன.

கைப்பற்றப்பட்ட பணம்

அதையடுத்து, ரகசியமாக அவரைக் கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார், நவம்பர் 2-ம் தேதி இரவு, ஷோபானாவின் காரை அதிரடியாகச் சோதனை செய்தனர். ஒரு துணிப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகளைக் கைப்பற்றி எண்ணிப் பார்த்தபோது, 5 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஷோபனாவிடம் இல்லாததால், அதைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பிலும் சோதனை நடத்தினர். அங்கும் உரிய ஆவணங்களின்றி இருந்த 15.85 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ரூ.3.92 லட்சத்துக்கான மூன்று காசோலைகள், 18 சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

ஷோபானாவின் சொந்த ஊரான ஓசூர் நேரு நகரிலிருக்கும் அவர் வீட்டிலும் சோதனை நடத்தியதில், 2 கோடி ரூபாய் ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், 1 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள், 28 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவை சிக்கியது. மொத்தமாக, 2.27 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஷோபனா மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஷோபனா

விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளர் பதவியிலிருந்த ஷோபனா, திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணைக் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை அவர் ஏற்காமல், மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு ஓசூரிலிருக்கும் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் ஷோபனாவை, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் ஓசூரிலிருக்கும் அவரின் வீட்டுக்கே சென்று கைது செய்தனர். வேலூர் அழைத்துவரப்பட்ட ஷோபனாவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியப் பிறகு பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுப்பணித்துறை பெண் அதிகாரி ஷோபனாவின் மொத்த சொத்து மதிப்பு மூன்றரைக் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது. இதில், வருமானத்துக்கு அதிகமாக 2,65,96,000 ரூபாயை அவர் சேர்த்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கைது செய்திருக்கிறோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/vellore-pwd-officer-arrested-what-is-the-background

நீலகிரி: பொக்லைன் இயந்திரத்துக்கு போர்வை; மலையைக் குடையும் காட்டேஜ் நிர்வாகம்! -பின்னணி என்ன?

நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலம், தென்னிந்தியாவின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அரியவகை விலங்குகள், பறவைகள் தாவரங்கள் போன்றவற்றின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரக்கூடிய இந்த மலைத்தொடர்களில் அதிகரித்துவரும் மக்கள் தொகைப் பெருக்கம், வளர்ச்சிப் பணிகள், காடழிப்பு, பெருகி வரும் கட்டுமானங்கள் போன்ற பல காரணிகளால் சூழலியலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

அதிலும் குறிப்பாக நீலகிரி மலையில் கட்டுப்பாடுகள் இன்றி இரவு பகலாக மலைகளைக் குடைந்து வந்த ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்களால் நில அமைப்பியலில் மாற்றம் செய்யப்பட்டு பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு அபாயம் ஏற்பட்டு வந்தன. இதனை கருத்தில் கொண்டே நீலகிரியின் முன்னாள் ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா, ஜே.சி.பி, பொக்லைன் இயந்திரங்களை இயக்க தடை விதித்தார். அனுமதி வழங்கும் முறைகளையும் கடுமையாக்கினார். இருப்பினும் சொகுசு விடுதிகளுக்காக மலைகளில் தனியார் சாலைகள் அமைக்க சட்டவிரோதமாக பல இடங்களில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் மினி பொக்லைன் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அதனைக் கொண்டு மலைகளைக் குடைந்து வருகின்றனர்.

Also Read: இடைவிடாத மழை; அடுத்தடுத்து விழும் மரங்கள் - நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி!

இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி நெடிகாடு பகுதியில் கட்டப்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு சாலை அமைப்பதற்காக மினி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் உள்ளூர் மக்களின் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது பிளாஸ்டிக் தார்பாலினைக் கொண்டு போர்வையைப் போல போர்த்தி மறைத்து இயக்கி வந்தனர். இந்தச் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஊட்டி ஜனார்த்தனன், "நீலகிரியின் இயற்கையை பாதுகாக்க அரசு பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும், அவற்றை மீறுவதற்கும் பேராசைக் கொண்ட சில அரசு அதிகாரிகளே தனியாருக்கு சாதகமா இருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் இந்த செயல்‌. தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டு இயற்கையை செயலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கடுமையாக்க வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினியிடம் பேசினோம், "ஒரு சில இடங்களில் மினி பொக்லைன் இயந்திரத்தை இயக்க அனுமதி கொடுத்திருக்கிறோம். குறிப்பிட்ட அந்த பகுதிக்கு அனுமதி இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விதி மீறல் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/illegal-construction-controversy-near-cunoor

புதுக்கோட்டை: முறைகேடாகப் பத்திரப்பதிவு; திடீரென சரிந்த கட்டடம்! -இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர்

புதுக்கோட்டை நகரில் தெற்கு மூன்றாம் வீதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளிக் கடை என்ற பெயரில் செயல்பட்டு வந்த இரண்டு மாடிக் கட்டடம் 10ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடந்தது. இந்தக் கட்டடத்தைச் சமீபத்தில் செந்தில்குமார் என்பவர் வாங்கியிருந்தார். இந்தக் கட்டடத்தை ஒப்பந்ததாரர் மூலம் கடந்த சில தினங்களாக இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. 20பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கம் போல் நவ.30-ம் தேதி வழக்கம் போல் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்ற போது, எதிர்பாராத விதமாக தொடர் மழையால் ஊறிப்போய் இருந்த கட்டடம் அப்படியே இடிந்து விழுந்தது.

இதில், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டைத் தீயணைப்புத் துறை மாவட்ட உதவி கோட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காவல் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய தவித்த 10 பேரைக் காயங்களுடன் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே தான், இந்தக் கட்டடத்தைச் சமீபத்தில் வாங்கிய மருத்துவர் செந்தில்குமார், தாம் வாங்கிய இந்த இடத்தைக் காலிமனை என்று பதிவு செய்திருக்கிறார். விசாரணை செய்தால், அரசுக்குக் கட்ட வேண்டிய தொகையுடன், அபராதத்தொகையும் சேர்ந்து வசூலித்துவிடுவார்கள் என்று தான் அவசர, அவசரமாக இடிக்க வைத்திருக்கிறார்.

ஆனால், விபத்து ஏற்பட்ட நிலையில், பதிவுத்துறை அலுவலகத்தை ஏமாற்றி முறைகேடாகப் பதிவு செய்திருப்பது போலீஸார் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

இதற்கிடையே தான், நகராட்சி ஆய்வாளர் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த புதுக்கோட்டை நகர போலீஸார், கட்டடத்தை வாங்கிய செந்தில்குமார், ஒப்பந்ததாரர் அரங்குளவன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: இடைவிடாத மழை; அடுத்தடுத்து விழும் மரங்கள் - நிலச்சரிவு அபாயத்தில் நீலகிரி!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "நகராட்சியின் அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடத்தை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தோம். விதிமுறைகளை மீறிக் கட்டடத்தை இடித்திருக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆய்வு

சார் பதிவாளர் கண்ணையா, "பத்திரப்பதிவு நடைபெற்ற ஒரு வாரக் காலத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தொடர்ந்து, மழை பெய்து வந்ததால், 10 நாட்களுக்கும் மேலாக அந்தப் பணி தமாதமானது. உடனடியாக ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய அபராத தொகை வசூலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, "அனுமதி இல்லாம, இது போன்ற கட்டட இடிப்பு போன்றவைகளை செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/10-people-trapped-in-building-collapse-near-puthukottai

வரிச்சுமையைக் குறைக்க அரசே தரும் வழிகள் இவைதாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 52

பர்சனல் ஃபைனான்ஸில் வரி சேமிப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

``வரியைக் குறைப்பதற்காகவாவது மக்கள் சேமிப்பின் பக்கம் திரும்புவார்கள்; அதனால் ஆரம்பிக்கும் சேமிப்புப் பழக்கம் தொடர்ந்து அவர்கள் செல்வ நிலை உயரும்; அந்த சேமிப்பினால் நாட்டுக்கும் நலம் விளையும்” என்றெண்ணி அரசு தரும் சலுகைகளைப் பார்த்து வருகிறோம்.

சென்ற அத்தியாயத்தில் பார்த்த செக்ஷன் 80 சி தவிர வேறு பல செக்ஷன்களும் வரிக்கழிவு (நாம் செய்யும் சில செலவுகளை / முதலீடுகளை வருமானத்தில் இருந்து கழிப்பது) மற்றும் வரிவிலக்கு (நமக்கு வரும் வருமானத்தில் சிலவற்றுக்கு விலக்களிப்பது) அளிக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை இன்று பார்க்கலாம்...

Tax (Representational Image)

செக்ஷன் 24

செக்.80சியின் கீழ் வீட்டுக் கடனின் அசல் தொகைக்கு வரிக்கழிவு கிடைப்பதைப் பார்த்தோம். அதேபோல இந்த செக்ஷன்24இ-ன் கீழ் வீட்டுக்கடனுக்காக நாம் கட்டும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரிக்கழிவு கிடைக்கிறது. சொத்து வாங்குவதற்காக உபயோகப் படுத்தப்பட்ட பர்சனல் லோன் வட்டிக்கும் இந்த வரிக்கழிவு உண்டு. வட்டி மட்டுமின்றி, லோன் ப்ராசசிங் ஃபீஸ், ஃபோர்க்ளோஷர் சார்ஜஸ் போன்ற வீட்டுக்கடன் சார்ந்த செலவுகளையும் இதில் சேர்க்கலாம்.

80 சிசிசி / 80 சிசிடி

சீனியர் சிட்டிசன்களின் நலம் குறித்த கவலை அரசுகளுக்கு எப்போதும் உண்டு. அனைத்து முதியோருக்கும் அரசு பென்ஷன் தர இயலாத நிலையில், அவரவர் பென்ஷன் தேவைகளுக்காக மக்கள் சேமிக்கும் பணத்திற்கு வரிக்கழிவு தந்து உதவுகிறது.

80சிசிசியில் ஆன்யுட்டி பென்ஷன் ப்ளான்களுக்காக நாம் சேமிக்கும் தொகை,

80சிசிடி (1)இல் நேஷனல் பென்ஷன் ஸ்கீமிற்கு நம் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை,

80சிசிடி(2)இல் சம்பளதாரர்களுக்காக கம்பெனிகள் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் கட்டும் தொகை ஆகியவற்றுக்கு வரிக்கழிவு உண்டு.

இவை அனைத்தும் 80சியின் ரூ.1.50 லட்சம் வரிக்கழிவின் கீழ் வரும் நிலையில் 80சிசிடி(1பி)யின் கீழ் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் கூடுதலாக சேமிப்போருக்கும், அடல் பென்ஷன் யோஜனாவில் சேமிப்போருக்கும் ரூ.50000/-க்கான வரிக்கழிவு கூடுதலாகக் கிடைக்கிறது.

Tax (Representational Image)

Also Read: வருமான வரிச்சுமையைக் குறைக்கும் இந்த வழிகள் பற்றித் தெரியுமா? - 51

80 டிடிஏ

வங்கி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்ஸ் அக்கவுன்டுகளில் இருந்து வரக்கூடிய வட்டி வருமானத்திற்கு ரூ.10,000/- வரை வரிவிலக்கு உண்டு. ஃபிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில் கிடைக்கும் வட்டி இதில் சேராது.

80டிடிபி

இது சீனியர் சிட்டிசன்களுக்கு வரக்கூடிய வட்டி வருமானத்தில் ரூ. 50,000/- வரை வரிவிலக்கு தருகிறது.

80ஜி

அரசு அல்லாத நிறுவனங்களுக்கும் (NGO) அரசின் நிவாரண நிதி ஃபண்டுகளுக்கும் நாம் வழங்கும் நன்கொடைகளுக்கு அந்த நிறுவனத்தின் தகுதியைப் பொறுத்து 50% அல்லது 100% வரிக்கழிவு கிடைக்கும். இதை நிரூபிக்க ரசீது அவசியம்.

80இ

மேற்படிப்புகளுக்காக கடன் வாங்கும் நிலையில் இருப்போருக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த விதியின் கீழ் கல்விக்கடனுக்கு நாம் கட்டும் வட்டிக்கு எட்டு வருடங்கள் வரை வரிக்கழிவு உண்டு. இதற்கு லிமிட் கிடையாது.

80டி

நாம் கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்தில் செக்.80டியின் கீழ், 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரூ.25,000/- வரை வரிக்கழிவு கிடைக்கிறது. ப்ரிவென்டிவ் ஹெல்த் செக் அப் (ரூ.5,000/-), கோவிட் செக் அப் (ரூ.5,000/) மற்றும் ஹெல்த் பாலிஸிக்குக் கட்டும் ப்ரீமியம் ஆகியவை இதன் கீழ் வருகின்றன. சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50,000/- வரை வரிக்கழிவு கிடைக்கும்.

Tax (Representational Image)

Also Read: வாழ்க்கையில் உங்களுக்கு உதவப்போகும் முக்கியமான இன்ஷூரன்ஸ்கள்தான் இவைதாம்! - 50

80ஜிஜி

இதன் கீழ், சம்பளத்தில் ஹெச் ஆர் ஏ (வீட்டு வாடகை அலவன்ஸ்) இல்லாதோரும், சுய தொழில் செய்வோரும் வருடம் ரூ.60,000/- வரை வரிக்கழிவு பெறலாம். ஆனால் குடியிருக்கும் ஊரில் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த வீடு இருப்பது கூடாது.

இன்னும் சில வரிக்கழிவுகள் / விலக்குகள்

உடல் குறைபாடுள்ளோருக்கு ரூ. 75,000/ முதல் ரூ.1.25 லட்சம் வரை வரிக்கழிவு தரும் 80யூ, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரிக்கழிவு தரும் 80ஜிஜிசி என்று பல வித வரிக்கழிவுகளும், விலக்குகளும் உள்ளன. அனைத்துக்கும் நிரூபணமாக சர்டிஃபிகேட் அளிக்கவேண்டும்.

நாட்டை முன்னேற்றும் வரிப்பணம்

வருடாவருடம் நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி நாட்டைக் கட்டமைக்கும் பல நற்பணிகளுக்கு உதவுவதாகப் பார்த்தோம். ஆகவே வரி ஏய்ப்பை விடுத்து, வரிவிலக்கு மற்றும் வரிக்கழிவுகளை முறையாகப் பயன்படுத்தி நாமும் முன்னேறி, நாட்டையும் முன்னேற்ற உறுதி கொள்வோம்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்



source https://www.vikatan.com/business/finance/few-important-sections-which-give-tax-exemptions-for-senior-citizens

Doctor Vikatan: மொபைல் உபயோகிப்பதால் கை விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன; சரிசெய்ய முடியுமா?

மொபைலை ஒரே கையில் பிடித்துக்கொண்டிருந்தால் விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்... சரிசெய்ய முடியுமா?

- சதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.

``செல்போனை பிடித்தபடி பேசும்போது அதன் ஒரு முனை மணிக்கட்டுப் பகுதியில் படும். மணிக்கட்டின் நடுப்பகுதியில் மீடியன் நரம்பு என ஒன்று இருக்கும். மொபைல்போனில் பேசும்போது அந்த நரம்பு அழுத்தப்படலாம்.

அந்தப் பகுதியின் மேல் பகுதியைப் பாதுகாக்கும்படி எலும்பு எதுவும் இருக்காது. மென்மையான திசுக்கள் மட்டுமே இருக்கும். மீடியன் நரம்பு அழுத்தப்படுவதால் கட்டைவிரல் மற்றும் அதையடுத்து மோதிரவிரல் வரைகூட இந்த இழுத்துப் பிடிக்கும் உணர்வு வரும். ஹைப்போ தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கு விரல்கள் பிடித்துக்கொள்ளும் இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

செல்போனை கையில் வைத்துப்பேசும்போது அதை விரல்களில் மட்டும் பிடித்தபடியும், மீடியன் நரம்பை அழுத்தாமலும் உபயோகிக்க வேண்டும். நீண்டநேரம் மொபைல் போனை கையில் வைத்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவும். நீண்டகாலமாக செல்போன் உபயோகித்ததன் விளைவாக, நீண்டகால வலியை அனுபவிப்பவர்களுக்கு சில டெஸ்ட்டுகள் தேவைப்படும். முதல் கட்டமாக `நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' (Nerve conduction study) என்பது மேற்கொள்ளப்படும்.

Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

கரன்ட் ஷாக் கொடுத்து, நரம்பில் அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பது பதிவுசெய்யப்படும். மணிக்கட்டின் மேல் ரிசீவர் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, அதன் மேல் கரன்ட் வைத்து தூண்டப்பட்டு இது செக் செய்யப்படும். அந்த வேகம் குறைவாக இருக்கும்பட்சத்தில்தான் விரல்களில் இதுபோன்ற வலி, இழுக்கும் உணர்வு போன்றவை வரும்.

டெஸ்ட்டில் இது உறுதிசெய்யப்பட்டால், முதலில் வாழ்வியல் மாற்றம் பரிந்துரைக்கப்படும். அதாவது எந்த வேலையைச் செய்தாலும் கை மற்றும் விரல்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது. எழுதுவது, பைக் ஓட்டுவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சமையல் வேலைகள் செய்வதால் பெண்களுக்கு இந்தப் பிரச்னை மிகவும் சகஜமாக வரலாம். அவர்களுக்கும் சமைக்கும்போது கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் விரல்களை மட்டும் உபயோகிக்கும்படி கற்றுக்கொடுக்கப்படும். இவற்றைக் கடைப்பிடித்தாலே வலி குறையத் தொடங்கும். அப்படிக் குறையாதவர்களுக்கு தற்காலிகமாக வலியைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். அதையும் தாண்டி, வலி தீவிரமாக இருந்தாலோ, நரம்பு பாதிப்பு அதிகமிருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். மீடியன் நரம்பை முடியிருக்கும் இடத்தை அறுவைசிகிச்சையின் மூலம் திறந்துவிட்டால் சரியாகிவிடும்.

gadgets in hands (Representational Image)

Also Read: Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு?

நடுத்தர வயதிலுள்ளோரையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கும். டீன் ஏஜில் மொபைல் பயன்பாடு அதிகம் என்பதால் அந்த வயதிலிருந்தே ஆரம்பிக்கும் பிரச்னை, மெள்ள மெள்ள அதிகரித்து, குறிப்பிட்ட வயதில் தீவிரமாகும். மொபைல் பயன்படுத்தும்போது கழுத்தின் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலும் கழுத்து நரம்பும் பாதிக்கப்படும். அதன் காரணமாகவும் இழுக்கும் உணர்வு ஏற்படலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-muscle-spasm-in-hands-caused-due-to-excessive-phone-usage

`போதைப்பொருள்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டுமே போதாது!’ -திருவாரூர் எஸ்.பி-யின் வேண்டுகோள்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் போதைப்பொருள்கள் விநியோகம் பரவலாக நடைபெறுவதால், இவைகளை பயன்படுத்துபவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடர்பாக, உருக்கமான வேண்கோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை புழக்கத்தை கட்டுப்படுத்த, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதோடு, சில வழிகாட்டுதல்களையும் அந்த வீடியோவில் முன் வைத்துள்ளார்.

விஜயகுமார் ஐ.பி.எஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். நீங்கள் இந்த போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் நீங்கள் மட்டுமன்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் கண்டிப்பாக போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். போதைப்பொருள்களை ஒழிக்க, காவல்துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதேசமயம், காவல்துறை எடுக்கக்கூடிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை முழுமையாக தடுத்து விட முடியாது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதேபோன்று இளைஞர்கள், சிறுவர்கள், பள்ளி செல்ல கூடிய மாணவர்கள் போன்றவர்களை அவர்களுடைய நண்பர்களும், உறவினர்களும் அவர்களுடைய நடவடிக்கைகளை சற்று கூர்ந்து கவனித்து அதில் அவர்கள் போதை பொருள்கள் ஏதேனும் பயன்படுத்துவது போன்ற மாற்றம் தெரிந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு உடனே அதனை தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இவர்கள் தான் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இருப்பினும் இதனை முற்றிலும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஒழிக்க வேண்டுமென்றால் அதில் சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம்” என என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/thiruvarur-sp-talks-over-the-narcotic-control-in-public

Tamil News Today: இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு! - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..!

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்..!

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக. செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. , அதிமுக. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உட்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-12-2021-just-in-live-updates

மேடம் ஷகிலா 43: பெண் நட்புக்கு பெண்களே அஞ்சுவது ஏன்? ஆண் - பெண் நட்பிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

பதின்வயதில் 'அன்புள்ள சிநேகிதியே' எனும் தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பானது. சித்ரா பானர்ஜி திவாகருணி எழுதிய Sister of my Heart என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட இந்த சீரியல் சிறுவயது முதல் ஒன்றாக வளரும் ஒரே வயதுடைய இரண்டு பெண்களை சுற்றி பின்னப்பட்ட முக்கோணக் காதல் கதையை போன்றது. தோழிக்கும், சகோதரிக்கும் இடையில் ஒரு மெல்லியக் கோடு இருக்கிறது என்றும் பெண்களின் நட்பு எவ்வளவு ஆத்மார்த்தமானது என்றும் உணர்த்திய முதல் நினைவு இந்தத் தொலைக்காட்சி சீரியல்தான். அப்போதிருந்தே பெண் நண்பர்கள் மீது அளவில்லாத ப்ரியம் இருந்தாலும் பதின் வயதில் தோழிகளுடன் ஏற்பட்ட சிறு பிணக்குகள் ஆண் நண்பர்களே பழகுவதற்கு எளிதானவர்கள் என்றும் யோசிக்க வைத்திருக்கிறது. சூழ்நிலையும், வயதும் மாறும்போது நட்பு பற்றிய பார்வையும், புரிதலும் மாறிக் கொண்டே இருக்கிறது.

மேடம் ஷகிலா 43

கறுப்பு – வெள்ளை திரைப்படங்கள் காலம் முதலே இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருக்கும் கதை என்றாலே இருவரும் ஒரே ஆணை காதலிப்பது போலவும் அல்லது ஒரு முக்கோண காதல் கதையாகவும் பெரும்பாலும் இருக்கும். அதே சமயம் இரண்டு ஆண்கள் நண்பர்களாக இருக்கும் திரைப்படங்கள் என்றால் நட்பை போற்றுவதாக அமையும். தமிழ்த் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், பட்டிமன்றங்கள், நம் வீடுகள் என எங்கு பார்த்தாலும் இரண்டு பெண்கள் சேர்ந்து ஓர் இடத்தில் இருக்கவே முடியாது, பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவு, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் பெண்களின் நட்பு பற்றி எண்ணற்ற கட்டுக் கதைகளை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

பெண்களின் நட்புக்கு ஆயுள் குறைவு என்கின்றனர். அது சாத்தியமில்லாமல் போவதற்கான காரணங்களில் ஒன்று, பெண்கள் எந்த முடிவையும் தன் குடும்பத்தை சார்ந்தே எடுக்க வேண்டி உள்ளது. இன்று 35 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு பள்ளி நாள்கள் முதலே தங்கள் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வரக் கூட பல குடும்பங்களில் கட்டுப்பாடுகள் இருந்தன. வீட்டிலிருந்து தொலைபேசியில் தோழிகளுடன் பேசுவதற்கு அனுமதி கிடைப்பதும் அரிது. அதேபோல் முன்பு எட்டாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும்கூட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவார்களுக்கெல்லாம் குடும்பம் மற்றும் உறவினர்களைக் கடந்து வெளியுலக நட்பு என்பது அதிக அளவு சாத்தியமில்லை. பெண்களின் நட்பைக் குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் ஆழமாக பல ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம்.

குடும்பத்தினரின் மீதும், மற்ற காரணங்கள் மீதும் பழி போடுவது சரியா? பெண்கள் தங்களுக்குள் நட்பைத் தொடர முடியாமல் போவதற்கு வேறு காரணங்கள் இல்லையா?

நல்ல தோழிகளாக இருக்கும் இருவருக்குள் சண்டை எழுவதற்கான காரணங்கள் சில சமயங்களில் மிக சாதாரண விஷயங்களாகக் கூட இருக்கும். வாய் தவறிய சில சொற்கள், காப்பாற்ற முடியாத வாக்குறுதிகள், பல சமயங்களில் பொறாமை என்று வயது மற்றும் குணத்திற்கு ஏற்றாற் போல் காரணங்கள் மாறுப்படும். தங்களது நண்பர்களிடம் சண்டை இட்டுக் கொள்வது, பொறாமைப்படுவது, பேசிக் கொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கும் உண்டு. ஆனால் ஆண்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பெண்களுக்கு இந்த வட்டம் மிகச் சிறியது. மிக நெருங்கிய தோழிகள் என்று ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அதனால் அவர்களுக்குள் பிரச்னைகள் எழும்போது அது மிகப் பெரியதாக தெரிகிறது.

மேடம் ஷகிலா
சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் குடியிருந்த பெண் மிகவும் நட்புடன் பழகினார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலையில் இருந்தார். புதிதாகக் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்திருந்த அவருக்கு நகரத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கை முறை பற்றி தெரியாது. அந்த நகரத்தில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக அவருக்கு உதவி தேவைப்பட்டது.

ஆரம்பத்தில் மிக அன்பாக இருந்தார். மிகவும் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவார். எப்போதும் உடன் இருக்க விரும்புவார். சில நாள்களிலேயே அவருக்கு பொறாமை உண்டானது. அதை வெளிக்காட்டாமல் நன்றாக பேசிக் கொண்டே வெளியே தவறாக பேச ஆரம்பித்தார். உச்சபட்சமாக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்றவர்களை பற்றி தவறாகக் கட்டுக்கதைகள் கூறிவிட்டு அவற்றையெல்லாம் என்மூலம் தெரிந்து கொண்டதாகச் சொல்லிவிட்டார். இவை எல்லாவற்றிற்கும் இளம் வயதில் திருமணம் செய்தது, கணவர் வெளிநாட்டில் இருப்பது, நகர வாழ்க்கையில் தனியாகக் குடும்பத்தையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பினால் ஏற்படும் மன அழுத்தம், இளம் வயது தனிமை எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதெல்லாம் புரிந்தாலும் அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். அதற்கு பிறகு பெண்கள் நட்புடன் நெருங்கிப் பழகினாலே இன்றுவரை அச்சம் ஏற்படுகிறது.

தோழி ஒருத்தி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த தனது அனுபவ பதிவு ஒன்றை ஒரு ஆன்லைன் பத்திரிக்கை வெளியிட்டது. அதை கண்ட நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த பெண் எழுத்தாளர் ஒருவர் தோழியின் பதிவில் குற்றம் கண்டுபிடித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தார். தோழி அதை கண்டுகொள்ளவே இல்லை. பொறாமையின் உச்சத்தில் ஒருகட்டத்தில் தோழியை ப்ளாக் செய்துவிட்டார்.

அக்கா ஒருவர் தனது பள்ளி நண்பனுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேசினார். தினமும் வாட்ஸ்அப்பில் அக்காவின் படங்களை பார்த்து அவரது உடைகள் பற்றிய பேச்சு வந்தபோது என்னுடைய தேர்வு என்று என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது நண்பர் அக்காவிடம் என்னுடைய எண்ணை வாங்கி கால் செய்தார். உடைத் தேர்வு என்பது வெறும் சாக்கு மட்டுமே. முதல் முறையாக இதுபோன்று ஒரு சம்பவம் நடக்கும்போது அதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் அக்காவின் நண்பரிடம் வேலை இருப்பதாகச் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன். அக்கா தனது நண்பருடன் மீண்டும் பேசுவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பள்ளியில் உடன் படித்த நண்பர் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருப்பார்கள் என்று நம்புவது அபத்தம். அவர் பழகுவது அவரது விருப்பம் சார்ந்தது என்றாலும் பிற பெண்களை கேட்காமல் மற்றவர்களது தொடர்பு எண்களை கொடுப்பது, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவது தவறு. இதேபோல் தோழிகள் பலரும் தங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள கணக்குகளின் பாஸ்வேர்டை தங்கள் கணவர் அல்லது காதலரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களை மட்டுமே நம்பி அவர்களுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களை அவர்களது வீட்டு ஆண்களை பார்க்கச் செய்வது பெண்கள் தங்கள் பெண் நண்பர்களுக்குச் செய்யும் துரோகம்.

சமூக வலைதளங்களின் பலனாக பெண்களுக்கு விரிவான நட்பு வட்டம் சாத்தியமாகி இருக்கின்றது. பெண்கள் தங்கள் ரசனை, அரசியல் சார்ந்து இயங்கும் பெண்களுடன் நேரடியாக நட்பு வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் சாமனிய பெண்கள் முற்போக்கு பேசும் பெண்களுடன் பழகும்போது அவர்களைச் சார்ந்தவர்கள் பயப்படுகின்றனர். தங்கள் வீட்டுப் பெண்கள் எப்போதும் தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள் சிறிது வெளிப்படையாகப் பேசும், பழகும், முற்போக்கான, சுதந்திரமான பெண்களை கண்டால் அஞ்சுகின்றனர். தங்கள் வீட்டு ஆண்களிடம் ’நல்ல பெயர்’(?!) வாங்க வேண்டும் என விரும்பும் பெண்கள், பெண்ணியவாதிகளை கேலி செய்வதாக பெண்ணியத்தையும், இத்தனை ஆண்டுகால பெண்ணுரிமை போராட்டங்களையும் அவமதிக்கின்றனர். பலர் சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே இதை செய்கின்றனர்.

மேடம் ஷகிலா
ஆண்கள் உலகில் “சர்வைவ்“ ஆவதற்கு ஆண்களுக்குப் பிடித்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது துயரம். எந்தப் பாலினமாக இருந்தாலும் அவரவர் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்துடன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆனால் பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக முதலில் விட்டுக் கொடுப்பது நட்பாக இருக்கின்றது.

இது போன்ற அனுபவங்கள் ஒன்றிரண்டு எல்லோருக்கும் ஏற்படும் என்றாலும் அவற்றால் உண்டாகும் மன உளைச்சலும், நேர விரயமும் அதிகம்.

இந்தச் சந்தர்பங்களில் ஆண்களின் நட்பில் இவ்வளவு பிரச்னைகள் இருக்காது என்று எண்ணியதுண்டு. ஆனால் வளர்ந்த சூழல் காரணமாக ஆண்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிவிட முடிந்ததில்லை. இன்னொரு பக்கம் நண்பர்களாக பழகுபவர்கள் சில நாள்களிலேயே அதை காதலாக புரிந்துக் கொண்டு அணுகுவதும் உண்டு. சகோதரராக நினைத்து பழகி, அண்ணா என்று அழைத்த நண்பர்கள் கூட அதை காதல் உறவாக நினைத்துக் கொண்ட கதைகள் கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவம். மேலும் சமூகத்தில் ஆண் – பெண் நட்பு பற்றிய புரிதல் தவறாக இருப்பதால் அதை வெளிப்படையாக தொடர வழியில்லாமல் போகிறது.

ஆண் நண்பர்களிடம் இருக்கும் பிரச்னை அவர்கள் வீட்டில் பெண் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க பெரும்பாலும் தயங்குவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள பெண்களே நன்றாகப் பழகக் கூடியவர்களாக இருந்தாலும் இவர்கள் அந்தப் பெண்கள் மேல் பழிப்போட்டு பெண்களின் நட்பு ஏதோ செய்யக்கூடாத காரியம் போல் மறைத்து வைத்துக் கொள்வார்கள். சமூகம் இத்தனை காலமும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தவறான கருத்துகள் இதற்கு ஒரு முக்கிய காரணம். இன்னொன்று இந்த வெளிப்படைத்தன்மை இல்லாத ஆண்களுக்கு தங்களுடன் நட்பாக பழகும் பெண்களிடம் ஏதோ ஒரு தருணத்தில் “அட்வாண்டேஜ்” எடுத்துக் கொள்ளலாம் என்கிற சிறு எண்ணம் மனதில் இருக்கிறது. அது தன்னுடைய பெண் நண்பர் என்று ஒருவரை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள தடையாக இருக்கிறது.

சமீபமாக பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு ஆண் நண்பர்களுடன்தான் ”கம்ஃபர்ட் ஜோன்” உருவாகிறது என்றும், பிரச்னை இல்லாத நட்பு அமைகிறது என்றும் சொல்வதை கேட்கலாம். ஆண் நண்பர்கள் அதிகமாக நம்மை பற்றி மற்றவர்களிடம் பேச மாட்டார்கள், நமது வளர்ச்சியில் பொறாமைப்பட மாட்டார்கள் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக ஒரு பெண் திடீரென்று முன்னேறினால் அவளை விட்டு விலகி நின்று பார்ப்பவர்களும், அவள் மேல் முதல் அவதூறை உருவாக்குபவர்களும் பெரும்பாலும் ஆண்கள்தான். குறிப்பாக அதுவரை அவளது நண்பர்களாக இருந்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள்.

இது ஒவ்வொருவரின் அனுபவத்தை பொருத்தும் மாறுபடலாம். ஒவ்வொரு வளர்ச்சியின்போதும் உடன் இருந்து அரவணைத்து மகிழ்ந்தவர்கள் பெண்கள்.

என் அம்மா திருமணத்திற்கு பிறகு வெளியூருக்கு வந்தபோது அவருக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தவர்கள் அவரது தோழிகள். இவ்வளவு காலமும் அந்த நட்பு மாறாமல் அந்த பெண்கள் தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். எங்கள் சிறுவயதில் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாத போது அம்மாவின் தோழிகள் வீட்டு வேலைகளில் உதவி செய்வது, பள்ளிக்கு உணவு சமைத்து கொடுத்தனப்புவது என உதவியாக இருந்தார்கள். வெவ்வேறு ஊர்கள் மாறிய பின்னும்கூட இன்றும் ஒருவருக்கொருவர் மனதளவில் உறுதுணையாக இருந்து வருவதெல்லாம் மிக அசாத்தியமாக தெரிகிறது. இன்றும் படிப்பு மற்றும் வேலை விஷயமாக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களின் தோழிகள் பொருளாதார ரீதியாகவும், இடவசதி செய்து கொடுத்தும் உதவுகின்றனர். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு பலவகையில் அவர்களது நண்பர்களே காரணமாக இருக்கின்றனர்.

நட்புக்கு பாலின பேதங்கள் கிடையாது. அவை உண்மையாக, நேர்மையாக இருக்கின்றனவா என்பது மட்டும்தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது.

பிகு : இரண்டு பெண்கள் நட்பாக பழகுவதற்கும், இரண்டு பெண்களிடையே காதல் உறவு ஏற்படுவதற்கும் உள்ள வித்தியாசம் பொது சமூகத்திற்கு புரிவதில்லை. இரண்டு பெண்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் அவர்களுக்குள் வேறு உறவுமுறை இருக்கிறது என்று சொல்லி “அவளா நீ” என்று கீழ்த்தரமாகக் கேலி செய்வது. அதேசமயம் இரண்டு பெண்கள் உண்மையில் காதலில் இருந்து அதை பொது சமூகத்தில் வெளிப்படையாக தெரிவித்தால் அவர்களால் கலாசாரத்திற்கு ஆபத்து என்று போர்க்கொடி பிடிப்பது என இன்னமும் இரண்டு ரத்த சம்பந்தம் இல்லாத பெண்களிடையே இருக்கும் உறவை ஒரு சமூகமாக சரியாக அணுகத் தெரியாமல் இருப்பது நாகரீகத்தின் அடையாளம் அல்ல.

- உரையாடுவோம்!



source https://www.vikatan.com/lifestyle/women/madam-shakeela-why-women-are-afraid-of-girl-boy-friendship

இரவு நேரத்திலும் வெளியான `நீக்கம்’ அறிவிப்பு... திமுக செல்கிறாரா அன்வர் ராஜா?!

1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியதில் இருந்து அக்கட்சியில அங்கம் வகித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர். அ.தி.மு.க என்று பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததோ அன்று முதலே கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தார் அன்வர் ராஜா. ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போதெல்லாம் தனது வருத்தத்தை பகிரங்கமாகப் பதிவு செய்யவும் அன்வர் ராஜா தவறியதில்லை. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "யாராவது பேச விரும்பினால் பேசலாம்" என்று கட்சியின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி சொல்லி முடிப்பதற்கு முன்பே எழுந்தார் அன்வர் ராஜா.

சி.வி.சண்முகம்

அன்வர் ராஜா எழுந்ததுமே சடாரென எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அன்வர் ராஜாவை ஒருமையில் பேசியதாக தகவல்கள் வெளியானது. அங்கு ஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்த அன்வர் ராஜா, ஊடகங்களில் ஒருஙகிணைப்பாளர்களை திட்டித்தீர்த்தார். இந்தச் சூழலில் டிசம்பர் ஒன்றாம் தேதி(இன்று) அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது.

Also Read: உள்ளே பன்னீர் , செங்கோட்டையன்... வெளியே பாஜக! - மிரட்டப்படுகிறாரா இபிஎஸ்? | Elangovan Explains

செயற்குழுக் கூட்டத்திலும் வேண்டாததைப் பேசிவிடுவாரோ என்று எண்ணிய அ.தி.மு.க தலைமை திடீரென நவம்பர் 30(நேற்று) இரவு 11 மணியளவில் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

அ.தி.மு.க கூட்டத்தில் சலசலப்பு!

இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, "என்னதான் கட்சித் தலைமை மீது கோபம் இருந்தாலும் மீடியாக்களில் பகிரங்கமாக ஒருஙகிணைப்பாளர்களை விமர்சித்துப் பேசுவது தவறுதான். தெரியாமல் ஒன்றும் அன்வர் ராஜா பேசவில்லை, தெரிந்தேதான் பேசி வருகிறார். தி.மு.க-வில் இணைவதற்கு பேசிக்கொண்டு இருந்த அன்வர் ராஜா, கட்சியே தன்னை நீக்கட்டும் என்று காத்திருந்தார். சமீபத்தில் தி.மு.க சென்ற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் கூட அன்வர் ராஜாவிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். இப்போது நீக்கப்பட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில், 'அ.தி.மு.க-வில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை, பாதுகாப்பில்லை' என்ற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறிவிட்டு தி.மு.க செல்வார் அன்வர் ராஜா" என்றனர்.

எடப்பாடி... பன்னீர்!

இது குறித்து அன்வர் ராஜா தரப்பில் பேசியபோது, "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோதும் கட்சிக் கட்டுப்பாடு, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மீதான விசுவாசம் காரணமாக, இஸ்லாமிய சமூகம் அன்வரை ஓரம்கட்டியபோதும் தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக கட்சித் தலைமையின் செயல்பாடு சரியில்லை என்பதைத்தான் அன்வர் ராஜா கூட்டத்தில் பேசினார். ஒருமையில் பேசி அடிக்கப்பாய்ந்த சி.வி.சண்முகத்தை நீக்காத ஒருங்கிணைப்பாளர்கள், அன்வர் ராஜாவை நீக்கியது வேதனையளிக்கிறது. அடுத்தக்கட்ட நடவைக்கை குறித்து அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அறிவிப்பார்" என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/is-anwar-raja-joining-dmk-after-expelled-from-admk

``பொண்ணு பார்க்க வந்தப்போ மணிரத்னத்துக்கு ரசம் சாதம்தான் கொடுத்தேன்!" - Actress Suhasini Opens Up



source https://cinema.vikatan.com/tamil-cinema/evergreen-actress-suhasini-s-life-story-aval-vikatan

நாளைக்கு லீவு... சார்? மாணவர்களின் ட்விட்டர் கேள்விகளும், விருதுநகர் ஆட்சியரின் கலகல பதில்களும்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியரான மேகநாத ரெட்டி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிடும் புகார்கள், சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படும் புகார்களைக்கூட கவனித்து தீர்வு கண்டு வருகிறார். அத்துடன், அதில் எழுப்பப்படும் கேள்விகளுக்குக்கூட பொறுமையாக பதில் அளித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, விஜய் சிவா விஷ்ணு என்ற மாணவர், ``மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?” என ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் இரவு 10 மணிக்கு கேள்வி எழுப்பினார்.

ஆட்சியரின் ட்விட்டர் பதிவு

அதற்கு பதிலளித்த அவர், ``இனி விடுமுறை கிடையாது. சூரியன் வெளியே தெரிகிறது. காலையில் ஸ்கூல் போ. படி, விளையாடு மகிழ்ச்சியாக இரு. விருதுநகர் மாவட்டத்தில் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்” என பதிலளித்தார். ``ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை பெய்கிறது, அதனால்தான் கேட்டேன்” என்றார் அந்த மாணவர்.

அதற்கு, ``நாளை மழை பெய்யாது. ஏற்கெனவே நேரமாகிவிட்டது, உறங்கு. நாளை பள்ளி உண்டு தம்பி. குட் நைட்” என பதிலளித்தார். சிறியவரோ, பெரியவரோ யார் கேள்வி எழுப்பினாலும் அலட்சியப்படுத்தாமல், கிண்டலான கேள்வியாக இருந்தாலும்கூட, பொறுமையாக பதிலளித்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவரின் பதில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழையின் காரணமாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை என பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆட்சியரின் ட்விட்டர் பதிவு

விருதுநகர் மாவட்டத்திற்கான விடுமுறை அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆட்சியர் அறிவித்திருந்தார். இதற்குப் பல மாணவர்கள் பதிலளித்திருந்தனர். அதில், கோகுல் என்ற மாணவர், ``விடுமுறை அறிவித்த ஆட்சியருக்கு அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். அதற்கு, ஆட்சியர் மேகநாதரெட்டி, ``தம்பிகளா.. நன்றியெல்லாம் போதும். சோஷியல் மீடியா, பேஸ்புக் பக்கங்களை மூடிவிட்டு, சோஷியல் சயின்ஸ் புத்தகத்தை திறந்து, அமர்ந்து படியுங்கள். நாளை காலையில் தேர்வு இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள்” என அறிவுரையுடன் பதிவிட்டிருந்தார்.

அதற்கு வர்கீஷ் என்ற மாணவர், ``ரொம்ப கண்டிப்பான கலெக்டரா இருப்பாரோ?” எனப் பதிவிட, சுமன் கார்த்திக் என்பவர், ``இப்படி மக்களுடன் நெருக்கமா இருந்தாலே மக்களின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆட்சியரின் ட்விட்டர் பதிவு

காவல்துறை மட்டும் நண்பன் இல்லை. நாங்களும்தான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.." எனப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, ``இன்று திரும்ப மழை பெய்தால் நாளைக்கு லீவு விடுவீங்களா… ஐயா, நான் காலை 5 மணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார். மாணவர்கள் தொடர்ச்சியாக ஆட்சியரை டேக் செய்து கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க, பொறுமையாக அனைவருக்கும் பதிலுடன் அறிவுரையும் கூறி வருகிறார் ஆட்சியர் மேகநாத ரெட்டி.

Also Read: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரம், கூரைகளில் துள்ளித் திரிந்த அரிய வகை வெள்ளை அணில் ஆல்பம்..! படங்கள் - ஆர்.எம்.முத்துராஜ்



source https://www.vikatan.com/government-and-politics/politics/virudhunagar-collector-viral-tweets-regarding-school-leave-announcement

``என் Husband Photo போடமாட்டேன்; ஏன்னா.!?" - Makeover Artist Asmitha Reveals | Nila & Surya



source https://cinema.vikatan.com/celebrity/makeover-artist-asmitha-s-interview

`1.5 ஏக்கர்; ₹2.76 லட்சம் லாபம்! - `ரெட்லேடி’ பப்பாளி சாகுபடியில் கலக்கும் பெண் | Pasumai Vikatan



source https://www.vikatan.com/news/agriculture/thoothukudi-woman-farmer-shares-her-papaya-farming-experience

இன்றைய ராசி பலன் | 01/12/2021 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam



source https://www.vikatan.com/spiritual/astrology/01122021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

IPL 2022: ஹர்திக்கை கழட்டிவிட்ட மும்பை; சிஎஸ்கேவில் தோனி... யார் யாரை தக்கவைத்திருக்கின்றன அணிகள்?!

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் ஐபிஎல்லில் இணைகின்றன. மிகப்பெரிய தொகைக்கு இந்த அணிகளை வாங்கியது RSPG மற்றும் CVC Capital நிறுவனங்கள். இந்நிலையில் 4 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை ஒரு அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியும். முடிவெடுக்க நவம்பர் 30-ம் தேதி வரை அணிகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் எட்டு அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யாரென அறிவித்திருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ்
  • ரோகித் ஷர்மா - ரூ.16 கோடி

  • ஜஸ்ப்ரீத் பும்ரா- ரூ.12 கோடி

  • சூர்யகுமார் யாதவ்- ரூ.8 கோடி

  • கெய்ரான் பொல்லார்ட்- ரூ.6 கோடி ✈️

ரஸல் - வருண் சக்ரவர்த்தி
  • ஆண்ட்ரே ரஸல்- ரூ.12 கோடி ✈️

  • வருண் சக்கரவர்த்தி- ரூ.8 கோடி

  • வெங்கடேஷ் ஐயர்- ரூ.8 கோடி

  • சுனில் நரைன்- ரூ.6 கோடி ✈️

சஞ்சு சாம்சன்
  • சஞ்சு சாம்சன்- ரூ.14 கோடி

  • ஜாஸ் பட்லர்- ரூ.10 கோடி ✈️

  • யாஷஸ்வி ஜெய்ஸ்வால்- ரூ.4 கோடி

  • மயங்க் அகர்வால்- ரூ.12 கோடி

  • அர்ஷ்தீப் சிங்- ரூ.4 கோடி

ரிஷப் பன்ட்
  • ரிஷப் பன்ட்- ரூ.16 கோடி

  • அக்ஸர் பட்டேல்- ரூ.9 கோடி

  • பிருத்வி ஷா- ரூ.7.5 கோடி

  • ஆண்ட்ரிக் நோர்க்யா- ரூ.6.5 கோடி ✈️

விராட் கோலி
  • விராட் கோலி- ரூ.15 கோடி

  • கிளென் மேக்ஸ்வெல்- ரூ.11 கோடி ✈️

  • முகமது சிராஜ்- ரூ.7 கோடி

Kane Williamson | கேன் வில்லியம்சன்
  • கேன் வில்லியம்சன்- ரூ.14 கோடி ✈️

  • அப்துல் சமாத்- ரூ.4 கோடி

  • உம்ரான் மாலிக்- ரூ.4 கோடி

MS Dhoni | தோனி
  • ரவீந்திர ஜடேஜா- ரூ.16 கோடி

  • மகேந்திர சிங் தோனி- ரூ.12 கோடி

  • மொயின் அலி- ரூ.8 கோடி ✈️

  • ருத்துராஜ் கெய்க்வாட்- ரூ.6 கோடி

எந்த அணிகள் சரியாக வீரர்களை தக்கவைத்திருக்கின்றன? கமென்ட்டில் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்!


source https://sports.vikatan.com/cricket/ipl-2022-mi-leaves-hardik-csk-retains-dhoni-retention-full-details

AKS - 71: நிறைவேறாத காதலை நினைத்துக்கொண்டே வாழ்வதுதான் பெருமையா? சுந்தரின் கோபம் நியாயமானதா?

காயத்ரியும் சிவாவும் காதலிக்கும் விஷயத்தை சுந்தரிடம் சொல்வதற்காக காயத்ரி, சிவா, புனிதா மூவரும் சுந்தரை சந்திக்கிறார்கள். சுந்தரிடம் புனிதா முதலில் பேசுகிறாள். காயத்ரி மற்றும் சிவாவின் காதலை பற்றி சொல்கிறாள். சுந்தர் முதலில் கோபப்படுகிறான். தனக்கு கமிட்மென்ட் கொடுத்துவிட்டு இன்னொருவரை எப்படி காதலிக்கலாம் என்று கேட்கிறான். வீட்டில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் சுந்தரை திருமணம் செய்துக் கொள்ள காயத்ரி சம்மதம் தெரிவித்தது பற்றி புனிதா கூறுகிறாள். சுந்தர் தனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும் ஆணாக இருந்தாலும் வீட்டில் ஒழுக்கமாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் சொகிறான். ’காயத்ரியை ஐந்து வருடமாக காதலித்து வீட்டில் முறையாக பெண் கேட்டுத்தானே திருமணம் செய்துக் கொள்ள வந்தேன்' என்று சொன்னதோடு "என்னைப் போன்ற ஒழுக்கமான பையன்களை உங்களுக்குப் பிடிப்பதில்லைதானே!" என்று கோபமாகக் கேட்கிறான்.

AKS - 71

சுந்தருக்கு தான் மட்டும்தான் இந்த சமூகத்தில் சிறந்த ஆண் என்கிற எண்ணம் இருக்கின்றது. மது, புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கமானவர்கள் என்றும் காதலித்தாலும் அதை அந்தப் பெண்ணிடம் நேராகச் சொல்லாமல் 'அந்நியன்' திரைப்படத்தில் வரும் அம்பி கதாபாத்திரம் போல பெற்றோர்களிடத்தில் சொல்லி திருமணம் செய்து கொள்வது ஒழுக்கமான காரியம் என்றும் சுந்தர் நம்பிக் கொண்டிருக்கிறான். இதில் காயத்ரியின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை பற்றி யோசிக்கவும், காயத்ரிக்கும் சுந்தரின் மேல் இயல்பான காதல் இருக்கின்றதா என்பதை பற்றியும் அவன் கவலைப்படவே இல்லை.

தான் காயத்ரியை விரும்புவது காயத்ரிக்கு இடும் தானம் என்பதைப் போல சுந்தர் நடந்து கொள்கிறான். அதேபோல இவ்வளவு ஒழுக்கமான, வசதியான ஆண் கணவனாகக் கிடைக்க காயத்ரி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் தன்னை எப்படிப் பிடிக்காமல் போகும் என்றும் சுந்தர் எண்ணுகிறான். சுந்தர் மட்டுமல்லாமல் அவனது குடும்பமும், காயத்ரியின் குடும்பமும் கூட இதே எண்ணத்தில்தான் இருக்கின்றனர். ஆனால் காயத்ரிக்கு சுந்தரின் அதீத அன்பே சித்ரவதையாக இருக்கின்றது. காரணம் காயத்ரி சொல்வதைப் போல சுந்தர் அவளை ஒரு கடையில் விலை கொடுத்து வாங்கிய பொருளை போல பயன்படுத்துகிறான். தான் சொன்னதை செய்யும் ஒரு ரோபோவாக, தனக்கு பிடித்த ஒரு பொம்மையாக காயத்ரியை சுந்தர் நடத்துகிறான். சுந்தர் காயத்ரிக்கு வேலைக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தது, தனி வீடு பார்த்துக் குடி வைத்தது... இவை அனைத்துமே காயத்ரிக்காக தான் எதையும் செய்பவன் என்றும், காயத்ரியின் கனவுக்குத் துணையிருப்பவன் என்றும் காட்டிக் கொள்ள மட்டும்தான். மற்றபடி காயத்ரியின், விருப்பம், சுதந்திரம் பற்றிய தெளிவு சுந்தரிடத்தில் இல்லை.

AKS - 71

காயத்ரி தனக்கு சுந்தருடன் இருப்பது பயமாக இருக்கிறது என்றும், சுதந்திரமே இல்லாமல் மூச்சு முட்டுவது போல் இருப்பதாகவும் சுந்தரிடம் சொல்கிறாள். அதேசமயம் காயத்ரிக்கு என்ன பிடிக்கிறது என்றும் அவளது விருப்பம் என்ன என்றும் சிவா நேரம் ஒதுக்கி கவனிப்பதாகவும் அதைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்வதாகவும் அதனால் தன்னை அறியாமல் சிவாவின் மீது தனக்கு ஈர்ப்பு வந்தது என்றும் காயத்ரி சொல்கிறாள்.

பாகற்காய் உடலுக்கு நல்லது என்று அரைமணி நேரம் பாடம் எடுத்து காயத்ரிக்குப் பிடிக்காத உணவை சுந்தர் உண்ணச் செய்கிறான். காயத்ரிக்கு மாதவிடாய் சமயத்தில் உடல் சோர்வை புரிந்து கொள்ளாமல் அவனுடைய அம்மா, அக்காவை ஒப்புமைப்படுத்தி அவர்களை போல் காயத்ரியும் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறான். பிடிக்காததை உண்ண செய்வது, உடல்நலம் இல்லை என்றாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, எப்போது தூங்க வேண்டும், எப்போது உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு சுந்தர் தீர்மானிக்கும் நேரத்தில்தான் காயத்ரி அதை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறாள்.

இவையெல்லாம் சிறிது சிறிதாக காயத்ரிக்கு தான் தானாகவே இல்லை என்கிற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது. காயத்ரிக்கு உடல்நலமில்லாமல் இருக்கும்போது அவளுக்குப் பிடித்த உணவு என்ன என்று ஞாபகம் வைத்து கேன்டீனில் வாங்கி வருவதாகச் சொல்கிறான். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரணமாக தெரிந்தாலும் நம்மோடு காலம் முழுவதும் வாழப்போகும் ஒருவருக்கு இந்த அடிப்படை அக்கறை கூட இல்லை என்றால், எப்படி நேர்மையாக மற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை ஏற்படும்?

காயத்ரி சிவாவை விரும்புவதாக சிவாவுடன் வெளிப்படையாக பேசிய அன்றே சுந்தரிடம் அதை கூறுவது பாராட்டுக்குரியது. சுந்தர், இதைத் தன்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தன்னுடையது 5 ஆண்டு காதல் என்றும், காயத்ரியை தவிர இன்னொரு பெண்ணை வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறான்.

AKS - 71

ஒருவர் தான் காதலிப்பவரை திருமணம் செய்ய முடியாவிட்டால் அதற்காக வாழ்க்கையில் வேறு யாரையுமே நினைத்துப் பார்க்க மாட்டேன் என '96' திரைப்படம் ராம் கதாபாத்திரத்தை போல் இருப்பது பெருமைக்குரிய விஷயம் இல்லை. உண்மையில் அப்படி இருப்பது அபத்தம். இந்த வாழ்க்கை மிகச் சிறியது. யாருக்கும், எதுவும், எந்த நேரமும் நிகழலாம் என்கிற சூழலில் காதலித்த ஒருவரை நினைத்துக் கொண்டே வேறு யாருடனும் சேர்ந்து வாழ மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து தனித்திருப்பது காதலுக்குச் செய்யும் மரியாதை என்று நினைத்துக் கொண்டு தமக்கு தாமே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். வாழ்க்கையையும் காதலையும் அவ்வளவு கடினமாக்கி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

Also Read: AKS 70: அலெக்ஸா உடைத்த காதல் ரகசியம்; முற்போக்கு மாயாவின் முதிர்ச்சி சராசரி சுந்தருக்கும் இருக்குமா?

காதலித்த ஒருவரை மறக்கவே முடியாமல் இன்னொருவர் பற்றி யோசிக்காமல் காதலித்தவருடன் வாழ்ந்த நாள்களை எண்ணி மகிழ்ச்சியாக வாழ முடிகிறவர்களையும் பார்த்திருக்கிறோம். அது வேறு. ஆனால் சுந்தர், காயத்ரி - சிவாவின் காதலை மனமுவந்து மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏமாற்றத்தில், துன்பத்தில்தான் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்படி இருக்கும்போது காயத்ரியை நினைத்துக்கொண்டே வாழ்வேன் என்று காயத்ரியிடம் சொல்வது கூட காயத்ரியை பிரிந்தும் அவளைச் சித்திரவதை செய்வது போலத்தான். சுந்தர் இப்படிச் சொல்வது காயத்ரிக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தலாம். அது காயத்ரியின் வாழ்க்கையையும் நிம்மதி இல்லாமல் செய்துவிடும். சுந்தருக்கு இப்போதும்கூட காதல் என்றால் என்னவென்று தெரியவில்லை. காதலின் மிக அடிப்படையான விஷயம் நாம் காதலிப்பவரை எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அல்லது குறைந்தபட்சம் அவர்கள் மகிழ்ச்சியை காதலின் பெயரால் கெடுக்காமல் இருப்பது.

AKS - 71

காயத்ரியை சுந்தர் நினைத்துக் கொண்டே இருப்பதுதான் காதல் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறான். காதலுக்கு இவ்வளவு புனிதத்தன்மை தேவையில்லை. காதல் இயற்கையானது. இயல்பாகத் தோன்றக் கூடியது. அதை கடவுள் போல ஆராதனை செய்து எங்கோ உயரத்தில் தூக்கி வைத்துவிட்டு பிறகு காதலுக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பரத் தனக்காக புனிதா ஏற்பாடு செய்திருக்கும் வங்கிக் கடனை வேண்டாம் என்று சொல்வதற்காக வங்கிக்குச் செல்கிறான். வங்கி மேலாளர் பரத்திடம் அவ்வாறு செய்ய இயலாது என்பதை சொல்கிறார். மேற்கொண்டு புனிதாவிடம் பேசிக் கொள்வதாகச் சொல்கிறார்.

புனிதா மற்றும் காயத்ரி, சுந்தரைச் சந்திக்க வந்தபோது, அவர்களிடம் ஏன் மழையில் நிற்கிறீர்கள் என்று கேட்பான். இறுதிவரை அந்தக் கேள்விக்கு யாரும் விடை சொல்லவில்லை. நமக்கும்கூட காரணம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. அடுத்த எபிசோடில் சொல்வார்களா?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-episode-71-sundars-immaturity-towards-not-accepting-gayathris-decision

பிக் பாஸ் - 58: `முடிஞ்சா அடிங்கடே' சவால்விட்ட அண்ணாச்சி; தலைவர் நிரூப்பின் கோக்குமாக்கு திட்டங்கள்!

வலுக்கட்டாய தலைவரான நிரூப், இம்சை அரசன் புலிகேசி போல ‘கோக்குமாக்கான’ திட்டங்களைப் போட்டு விட்டு மக்களின் எதிர்ப்பால் முழி பிதுங்கிக் கொண்டிக்க, “உன் கண்ல பயத்தைப் பார்த்துட்டேன். அதைக் கொஞ்சமா கொஞ்சமா உனக்கே அறிமுகப்படுத்தறேன்” என்று நிரூப்பை நோக்கி இமான் கதகளி ஆடிக் கொண்டிருந்தார்.

‘ஒரே பாம்... ஒட்டுமொத்த ஊரும் க்ளோஸ்’ என்கிற காமெடி மாதிரி "ஒரேயொரு திட்டம் அறிவிச்சான். ஒட்டுமொத்த வீடும் நாமினேஷன்ல வந்துடுச்சு” என்று ராஜூ சொன்னது போல நேற்று பிக் பாஸ் வீட்டு நாய்க்குட்டி முதல் அனைவரும் எலிமினேஷன் லிஸ்ட்டில் வந்தார்கள்.

எபிசோடு 58-ல் என்ன நடந்தது?

நிரூப் அன்று செய்யப் போகிற கலாட்டாக்களை பிக் பாஸ் முன்பே உணர்ந்திருந்தாரோ, என்னமோ ‘தப்பாத்தான் தெரியும் என்னோட ரூட்டு’ என்ற பாடலை காலையிலேயே ஒலிக்க விட்டார். “யாராவது தலைவரா வரட்டும் எனக்கென்ன?” என்று அண்ணாச்சி முனகிக் கொண்டிருந்தார். எனில் அப்போதே தெரிந்து விட்டது, அவருக்கு தலைவர் பதவி ஆசை வந்துவிட்டது என்று.

பிக் பாஸ் - 58 இமான் அண்ணாச்சி

ஆனால், ‘நான் நாணயத்தைப் பயன்படுத்தப் போகிறேன்’ என்பதை நிரூப் தெளிவாகவே அறிவித்துவிட்டார். ‘இப்போ... இல்லாட்டி எப்போ’ என்பது அவரின் பார்வை. கடந்த இரண்டு வாரங்களாக விளிம்பில் இருந்து அவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அது சார்ந்த மனஉளைச்சலும் இருக்கிறது. எனவே இந்த வாரம் தலைவர் ஆகி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிரூப் நினைப்பதில் தவறில்லை.

“நீ ஏதாவது பண்ணு... நான் போட்டில என்னோட வேகத்தைக் குறைக்க மாட்டேன். சிங்கம் மாதிரி கிளம்பி வருவேன்” என்று பன்ச் டயலாக் பேசினார் அண்ணாச்சி. கடந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட இமான், சிபி, அபிஷேக் ஆகிய மூவரும் தலைவர் போட்டிக்கு ஏற்கெனவே தகுதியாகியிருந்தார்கள். (இதில் அபிஷேக் எப்படி வந்தார் என்பது இன்னமும் கூட புரியவில்லை).

தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. கார்டன் ஏரியாவில் சின்னச் சின்ன பெட்டிகள் இருக்கும். போட்டியாளர்கள் அவற்றை சேகரித்து அடுக்க வேண்டும். பஸ்ஸர் அடித்ததும் இதர போட்டியாளர்கள் இவர்கள் அடுக்கிய பெட்டிகளின் மீது பந்துகளையும் நீர்பலூன்களையும் எறியலாம். இந்தத் தாக்குதலை போட்டியாளர்கள் தங்களின் பேச்சுத்திறமையாலும் தடுக்கலாம். இறுதியில் எவருடைய சேகரிப்பின் உயரம் அதிகமாக இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்.

இமான் அந்த வீட்டின் தலைவராக வர வேண்டும் என்பதை விடவும் சிபி, அபிஷேக் ஆகிய இருவரும் வரக்கூடாது என்று மற்றவர்கள் ஆசைப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அபிஷேக் வைல்ட்கார்டு என்ட்ரி என்பது வெளிப்படையான காரணம். சிபி ஏற்கெனவே தலைவராகி இருக்கிறார். அது கூட விஷயமில்லை. வார்டனாக அவர் நிறைய வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். எனவே அபிஷேக், சிபி ஆகியோரின் பெட்டிகளின் மீதுதான் அதிக பந்துகள் வந்து விழுந்தன. சிபியை நோக்கி உற்சாக ஆவேசத்துடன் பந்துகளை எறிந்தார் அக்ஷரா. (குறளா சொல்லச் சொல்றே?!).

அண்ணாச்சி இந்த ஆட்டத்தை இடது கையால் ஆடிக் கொண்டிருந்தார். “அடிக்காதீங்க. நான் தலைவரானா...” என்றெல்லாம் கேட்காமல் “முடிஞ்சா அடிங்கடே” என்று சவால் விட்டார். “உங்களின் பேச்சுத்திறமையை பயன்படுத்த வேண்டும்" என்று பிக் பாஸ் சொன்னதை யாரும் கேட்டது மாதிரி தெரியவில்லை. அண்ணாச்சிக்குள் ஒரு மிதமான கலகவாதி எப்போதும் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார். இந்தத் தலைவர் பதவியை நிரூப் எப்படியும் பறித்துக் கொள்ளப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே அண்ணாச்சி அலட்சியமாக ஆடியதோடு மட்டுமல்லாமல், பந்தை எறிந்தவர்களை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியது சுவாரஸ்யமான காமெடி.

பிக் பாஸ் - 58

என்றாலும் அண்ணாச்சி ஜெயிக்கவே அனைவரும் உதவினார்கள். ‘அண்ணாச்சி வெற்றி’ என்று நடுவர் அபினய் உற்சாகமாக அறிவிக்க “இருங்கடே. அதிகம் சந்தோஷப்படாதீங்க… இப்பத்தான் இன்டர்வெல் விட்டிருக்கு” என்று அவர் நகைச்சுவையாகச் சொன்னது உண்மை. இமானைத் தலைவராக அறிவித்த பிக் பாஸ், "நாணயத்தைப் பயன்படுத்தி யாராவது தலைவர் பதவியை பறிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்க “நான் விரும்புகிறேன்” என்று நிரூப் அறிவித்தார். இது வீடு முழுக்க தெரிந்த ரகசியம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் வெறுப்புற்றார்கள். “அண்ணாச்சி நீங்கதான் ரியல் வின்னர்” என்று சிபியும் அபினய்யும் இமானை வாழ்த்தினார்கள்.

“நாணயம் பயன்படுத்தாம சொந்த முயற்சிலதானே தலைவரா ஆகப் போறேன்னு சொல்லிட்டு இருந்தே?” என்று கேட்டு நிரூப்பை காண்டாக்கிக் கொண்டிருந்தார் சிபி. “என்னைப் பார்த்து உனக்கு பயம்தானே?” என்று இமான் கேட்க, வீடு முழுக்க அந்தக் கேள்வியே எதிரொலிக்க “ஆமாம்” என்று வேறு வழியில்லாமல் புன்னகையுடன் ஒப்புக் கொண்டார் நிரூப்.

நாணயத்தை உபயோகித்து தலைவர் பதவியைப் பறித்துக் கொள்பவருக்கு தண்டனை தருவது பிக் பாஸ் வீட்டின் மரபு. அதன்படி இந்த வாரம் முழுவதும் தான் பேசும் ஒவ்வொருவரிடமும் அவரின் உயரத்திற்கு ஏற்ப, Eye Level Contact அளவிற்கு குனிந்துதான் நிரூப் பேச வேண்டும். உயரமாக இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே குனிந்து பேசுவது கடினம். இது நிரூப்பிற்கு கூடுதல் சிரமம். என்றாலும் கடுமையான தண்டனையில்லை என்பதால் ஜாலியாக ஏற்றுக் கொண்டார் நிரூப்.

அணி பிரிக்கும் பணியில் ஈடுபட்டார், புதிய தலைவர். இதில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அவர் விரும்பினார். அதன்படி வீட்டில் உள்ளோர்களை நான்கு அணிகளாகப் பிரித்து சுழற்சி முறையில் அவர்கள் வீட்டுப் பணிகளை செய்ய வேண்டும் என்று புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி வாரம் முழுவதும் ஒரே வேலையை செய்யாமல் தினம் ஒரு பணி என்று செய்ய முடியும். ஆங்காங்கே எதிர்ப்பு முனகல் வந்தாலும் அரைமனதாக மக்கள் ஒப்புக் கொண்டனர். தான் செல்ல விரும்பிய அணிக்குச் செல்ல விடாமல் நிரூப் தடுத்ததால் இமான் கோபம் கொண்டு வாக்குவாதம் செய்தார். மற்றவர்களுக்கும் இதில் பிரச்னைகள் தெரிந்தன.

பிக் பாஸ் - 58

எனவே மக்கள் காண்டாகி “எங்க கண்ணு லெவலுக்கு இறங்கி வந்து பேசு” என்று நிரூப்பிடம் புகார் சொல்ல “நீங்கதானே என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. நான் யார் கிட்டயாவது போய் பேசும் போதுதான் அப்படி...” என்று சட்டவிதியின் ஓட்டையில் புகுந்த தப்பிக்க முயன்றார் நிரூப். இதற்கு பிரியங்காவின் ஆதரவும் இருந்தது. ஆனால் மக்கள் வற்புறுத்தவே Squad பொஷிஷனில் நின்று நிரூப் சிரமத்துடன் பேச, அவருக்கு காலில் அடிபட்டிருந்ததால் மக்கள் அனைவரும் எழுந்து நின்று கொண்டது, நற்பண்புடன் கூடிய ஒரு சிறந்த காட்சி.

நிரூப் முன்வைத்த முதல் திட்டம் கூட ஓகே. ஒரு புதிய மாற்றத்தை தலைவர் முயன்று பார்க்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் அடுத்து கொண்டு வந்த திட்டம்தான் குழப்பமானது. “யார் யார் காயின் வெச்சிருக்கீங்களோ அதை அவங்க விரும்பறவங்க கிட்ட தற்காலிகமா கொடுத்துடுங்க… அவங்க அந்தந்த ஏரியாவை கண்ட்ரோல் பண்ணலாம். இதை சீரியஸா பண்ண வேணாம். ஜாலியான டாஸ்க்கா பண்ணலாம்” என்று நிரூப் சொன்ன ஐடியாவைக் கேட்டு பிக் பாஸிற்கே தலை சுற்றியிருக்கும்.

இந்த கோக்குமாக்கு திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இமானும் வருணும் எழுந்து நின்று ஒரு போராட்டத்தையே நிகழ்த்திவிட்டார்கள். “தலைவர் சொல்றதையும் கேட்கணும். காயின் வெச்சிருக்கவங்க சொல்றதையும் கேட்கணும்ன்னா என்ன ரூல் இது?” என்று அவர்கள் ஆட்சேபித்ததில் நியாயமிருந்தது. நிரூப்பின் ஏற்பாட்டின்படி இரண்டு நாணயங்கள் பிரியங்காவிற்கும் அபிஷேக்கிற்கும் செல்லும். என்றால் இந்த மூவர் கூட்டணி இன்னமும் பலமாகி விடும் என்கிற சந்தேகம் யாருக்கும் எழுவதில் ஆச்சரியமில்லை. எனவே இமானுக்கும் இது எழவே “இந்த அதிகாரத்தை அவர்கள் இருவரும் துஷ்பிரயோகம் செய்யலாம்ன்ற சந்தேகம் எனக்கு இருக்கு. நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று ஆட்சேபம் தெரிவிக்க “அதெப்படி நீங்க சந்தேகப்படலாம். அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம். நீங்கதான் வீட்ல எந்த வேலையும் செய்யாம இருக்கீங்க” என்று பதிலுக்குக் காட்டமாக புகார் வைத்தார் பிரியங்கா.

பிக் பாஸ் - 58

'வெச்சு செய்யறது' என்ற ஆட்சேபகரமான சொல்லாடல் போல, எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவர்களைக் குறிக்கும் இரண்டு ஆங்கில எழுத்தை பிரியங்கா உபயோகித்தார். இதன் அர்த்தம் மக்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சில வார்த்தைப் பிரயோகங்கள் நடைமுறை உபயோகத்திற்கு வந்துவிட்டதாலேயே அதன் பின்னணி என்னவென்று தெரியாமல் பல வார்த்தைகளை இப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

“நான் எந்த இடத்துல வேலை செய்யாம இருந்தேன். ஒரு இடம் சொல்லுங்க பார்க்கலாம்” என்று பதிலுக்கு காட்டமாக சவால் விட்டார் அண்ணாச்சி. இவருக்கு ஆதரவாக ராஜூவும் பரிந்து பேசினார். அண்ணாச்சியின் கடுமையான எதிர்ப்பைக் கண்ட பிரியங்கா, தன் புகாரை ஒரு மாதிரியாக திரும்பப் பெற்றுக் கொண்டு “எங்களை எப்படி நீங்க சந்தேகப்படலாம்?” என்பதையே கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இமான் அந்த வீட்டில் பணிகளை பெரும்பாலும் செய்யாமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற புகார் நெடுங்காலமாகவே இருக்கிறது. இசைவாணி இருக்கும் சமயத்தில் இது பற்றி நிறைய புலம்பியிருக்கிறார். “இந்தத் திட்டம் தேவையில்லைன்னு நாங்களே சொல்லிட்டு இருக்கோம். அப்புறமும் எப்படி நீங்க சந்தேகப்படலாம்?” என்பது பிரியங்காவின் லாஜிக்.

தன்னிடமிருந்து தலைவர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டது, ஏடாகூடமான திட்டங்களைப் போடுவது, “நான் சொல்றதை செஞ்சாகணும்” என்று அதிகாரம் செய்வது போன்ற காரணங்களால் நிரூப்பின் மீது இமானுக்கு கோபம் ஏற்பட்டது. தன்னுடைய ஆளுமையின் போது நிரூப் தான் சொன்ன பணியைச் செய்யாமல் அழிச்சாட்டியம் செய்ததால் வருணிற்கும் கோபம். “இப்போ புரியுதா” என்று வருண் சரியான தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டது நியாயமே. “தண்ணி பாட்டிலை எடுத்துட்டு வாங்க” என்கிற வருணின் சாதாரண ஆணையை செய்யாமல் நிரூப் மல்லுக்கட்டினார். இதற்காக அவர் வேண்டுமென்றே மேஜை மீது ஏறி பேசியது நல்ல காமெடி. எனில் நிரூப் தலையை மேலே உயர்த்திதான் பேச வேண்டும்.

“மக்கள் எதிர்ப்பு அதிகமா இருக்கு. இந்தத் திட்டம் கலைக்கப்படும்-னு அறிவிச்சுடு” என்று ராஜகுரு அபிஷேக் உபதேசிக்கவே “ஓகே... இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வராது. ஆனால் புதிய விதிகள் வேறு ஏதாவது கொண்டு வந்தால் அதைப் பின்பற்றியாக வேண்டும்” என்று நிரூப் அறிவித்தாலும் கூட பிரச்னையின் சூடு தணியாமல் புகைந்து கொண்டே இருந்தது. “கொஞ்சம் தன்மையா பேசுடா” என்பதும் அபிஷேக்கின் பணிவான உபதேசம்.

பிக் பாஸ் - 58

“நான் உங்க தலைவர் பதவியை எடுத்துட்டேன்னு இப்படிப் பழிவாங்காதீங்க அண்ணாச்சி” என்று நிரூப் ஆதங்கப்பட “டேய். இப்படி நீ அதிகாரமா பேசி நான் பார்த்ததில்லை. இப்ப என்ன திடீர்னு…” என்பதுதான் இமானின் ஆதங்கம். “ஏம்ப்பா. நீதான் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கிட்டில்ல. அப்புறம் ஏன் நின்னு போன கல்யாணத்துக்கு நைட்டு வரைக்கும் மேளம் வாசிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று ராஜூ கேட்டது செமயான லாஜிக். “தண்ணி பாட்டில் பிரச்னைல நீ வருண்கிட்ட செஞ்சது தப்புன்னு உணர்ந்தியானா, நீ ஜெயிச்சிட்டே” என்று நிரூப்பிடம் சரியான ஆலோசனையை சொன்னார் அமீர். ஆனால் ஒன்று, எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நிரூப் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வாக்குவாதம் செய்யும் அந்தக் கட்டுப்பாடு வியக்க வைக்கிறது.

இந்தச் சண்டையில் தேவையான ஃபுட்டேஜ் சேர்ந்ததும் நாமினேஷன் திருவிழாவை ஆரம்பித்தார் பிக் பாஸ். பழைய பகையோடு, நிரூப் ஆரம்பித்து வைத்த புதிய பிரச்னை காரணமாக வாக்குமூல அறையில் வெறுப்பின் சூடு தகிக்க ஆரம்பித்தது. நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது. ஆனால் ‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்கிற பழைய ட்விஸ்ட்டைத் திரும்ப எடுத்தார் பிக் பாஸ்.

Also Read: பிக் பாஸ் - 57: பிரியங்காவுக்கு `ஞானகுரு' அபிஷேக்கின் உபதேசம்; தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் எப்படி?

வார்டனாக சிபி சம்பாதித்துக் கொண்ட வெறுப்பு, அதே டாஸ்க்கில் அக்ஷரா கோபத்தில் பொருள்களை விசிறியடித்து செய்த கலாட்டா, பிரியங்காவின் அன்புக்கூட்டணி, அபிஷேக்கின் ராஜதந்திரம், ராஜூவின் வில்லங்கமான கேள்வி போன்ற காரணங்கள் நாமினேஷன் சமயத்தில் இறைக்கப்பட்டன. அக்ஷராவை நாமினேட் செய்த அபிஷேக் “அவங்க உடம்புக்கு எக்சர்சைஸ் பண்றாங்க. இது போன்ற டாஸ்க்குகள் 'mind exercise’ன்றதை அவங்க புரிஞ்சுக்கலை” என்று சொன்னது ஒரு நல்ல உபதேசம். “பிரியங்கா அன்பு செலுத்துவாங்க. ஆனா அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு மட்டும்தான்” என்று பின்குறிப்பில் ஊசியைக் குத்தினார் சிபி. இமான் போட்ட சண்டையால் நிரூப்பிற்கு வெறுப்பு. நிரூப்பின் புதிய அதிகாரத்தால் வருணிற்கு கடுப்பு.

பிக் பாஸ் - 58

போட்டியாளர்கள் சொன்ன காரணங்களை மறைமுகமாக பிக் பாஸ் சபையில் போட்டுக் கொடுத்தாலும், அவை எதைக் குறிக்கின்றன என்பது போட்டியாளர்களுக்கு புரிந்து விட்டது. இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்த பாக்கியசாலிகள்: அக்ஷரா, பாவனி, சிபி, இமான், பிரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய். பள்ளியின் வருகைப்பதிவேடு மாதிரி அனைவரின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்ததைக் கண்டு மக்கள் பயத்துடன் சிரித்துக் கொண்டார்கள். ‘நாமினேஷனில் இருந்து தப்பிக்கும் சக்தியை பயன்படுத்த முடியாது’ என்று நாணயம் வைத்திருந்தவர்களுக்கு செக்மேட் வைத்தார் பிக் பாஸ்.

“ஒருத்தன் சேவ் ஆயிட்டு ஒட்டுமொத்த வீட்டையே மாட்டிவிட்டுட்டான்” என்று ராஜூ சாதாரணமாகச் சொன்னது செமயான கமெண்ட். “இப்பத்தான் அவன் கூட்டுக்குள்ள இருந்து வந்திருக்கான்” என்று நிரூப்பைப் பற்றி சொன்னார் சிபி. “பாவனி தலைவர் ஆகியிருந்தா கூட எனக்குப் பிரச்னையில்ல. தம்பி மாதிரி கூடவே இருந்துக்கிட்டு இப்படி செஞ்சிட்டானே?!” என்று இமான் ஆதங்கப்பட “அதான் எனக்கும் டவுட்டு” என்று பின்பாட்டு பாடினார் வருண்.

ஆக... நிரூப்பின் வாரம் ‘நெருப்பின்’ வாரமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இனி ரணகளம்தான்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-episode-58-niroop-becomes-the-new-leader-and-announces-strange-rules