Ad

வியாழன், 31 மார்ச், 2022

வன்னியர் உள் இட ஒதுக்கீடு: ``அடிப்படைத் தரவுகள் சரியாக இல்லாததால்தான்..!" - துரைமுருகன் விளக்கம்

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, ``உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், உள் இட ஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல, சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்தச் சிறப்பு ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால்தான் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ரத்துசெய்திருக்கிறது. திமுக ஆட்சியில் அருந்ததியினர், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டன. சரியான ஆதாரங்கள் அடிப்படையில் திமுக கொண்டுவந்த ஒதுக்கீடுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசு முழு மூச்சுடன் முயற்சி மேற்கொண்டும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்'' என்று அதில் துரைமுருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் இது குறித்து தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் பேசிய அவர், ``உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இது முடிவு அல்ல... தொடர்ச்சிதான். தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து, புள்ளிவிவரங்களைத் திரட்டி மீண்டும் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய ஏழு காரணங்களில் ஆறு காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-duraimurugan-slams-admk-government-regarding-vanniyar-reservation

கும்பகோணம் பட்டறையில் தொன்மையான நடராஜர் சிலை பறிமுதல் சிலை திருட்டு தடுப்பு போலீஸார் அதிரடி

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில், சாமி சிலைகள் வடிக்கும் பட்டறை ஒன்றில் 5 அடி உயரம்கொண்ட தொன்மையான நடராஜர் சிலையை, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் அந்தச் சிலை எந்தக் கோயிலுக்கு சொந்தமானது, அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொன்மையான நடராஜர் சிலை

கும்பகோணம், சுவாமிமலை அருகேயுள்ள டி.மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சிலை வடிக்கும் பட்டறை நடத்திவருகிறார். சதீஷ்குமார் தன் பட்டறையில் தொன்மையான சாமி சிலைகளைப் பதுக்கிவைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார் சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்தினர். இதில் சுமார் 5 அடி உயரம், 4 அடி அகலம்கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட தொன்மையான நடராஜர் சிலை பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சதீஷ்குமாரிடம் நடராஜர் சிலை குறித்து ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிலைக்குரிய முறையான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி நடராஜர் சிலையுடன்

இதையடுத்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் தொன்மையான நடராஜர் சிலையைப் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் சாமி சிலைகள் வடிப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதுக்கிவைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை மீட்ட சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் டீமை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிலை வடிக்கும் பட்டறையில் தொன்மையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பட்டறையில் சோதனை நடத்தியதுடன், மிகவும் தொன்மையான நடராஜர் சிலையைப் பறிமுதல் செய்தோம்.

நடராஜர் சிலை

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் அந்தச் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதா என்றும், அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/statue-found-in-kumbakonam-police-investigating

டெல்லி: திடீரென வேகமெடுத்த ஜீப்... கொல்லப்பட்ட பாதசாரி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

மத்திய டெல்லி பகுதியிலுள்ள பிரதான சாலைகளில் ஒன்று ஜன்பத் சாலை. இந்த சாலையில் கிரிதரன் (39) என்பவர் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குக் கடந்து சென்றுகொண்டிருந்தார். பரபரப்பாகக் காணப்படும் சாலையில் சம்பவம் அடைந்த அன்று ஒருசில வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. கிரிதரன் கிட்டத்தட்ட நடைபாதையில் ஏறிவிட்டார். அப்போது அந்தச் சாலையில் மெதுவாக வந்துகொண்டிருந்த ஒரு சிவப்பு நிற ஜீப் திடீரென்று வேகமெடுத்தது.

ஜீப் விபத்து

சாலையில் சென்றுகொண்டிருந்த ஜீப் திடீரென்று நடைபாதையில் ஏறிக்கொண்டிருந்த கிரிதரனின் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ஜீப் ஏறியதால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள வாகன ஓட்டுநரைத் தேடிவருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சியடையவைத்திருக்கின்றன.



source https://www.vikatan.com/news/crime/delhi-a-pedestrian-killed-by-a-speeding-jeep-cctv-footage-of-the-incident

வேலூர்: 6-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறல்! - சுமைதூக்கும் தொழிலாளி சிறையிலடைப்பு

வேலூர், ஓட்டேரி சிவில் சப்ளை குடோன் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். 41 வயதாகும் இந்த நபர் சுமைதூக்கும் வேலை செய்கிறார். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவருக்கு செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ‘இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது; வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ எனவும் அவர் மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில், மாணவி படித்துவரும் பள்ளியில், சமீபத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய போலீஸார், குட் டச்... பேட் டச் குறித்தும், காவலன் செயலி மற்றும் சைல்டு லைன் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாலியல் தொல்லை

‘‘யாராவது பின்தொடர்ந்து வந்தாலும், பாலியல் தொல்லை கொடுத்தாலும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றும் தெரிவித்தனர். அதைக் கேட்டுகொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவி, வீடு திரும்பியவுடன் செல்வகுமார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததை பெற்றோரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து செல்வகுமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/6th-class-student-sexually-harassed-in-vellore-worker-arrested

ஏ.டி.எம்-ல் ரூ.77 லட்சம் கொள்ளை; வழக்கை திசைதிருப்ப ஏ.டி.எம் சென்டருக்கு தீ! - பதறவைத்த ஊழியர்கள்

மும்பை கோரேகாவ் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கிக்கு மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏ.டி.எம் சென்டர் ஒன்று இருக்கிறது. இந்த ஏ.டி.எம் சென்டரில் தீடீரென தீப்பிடித்துக்கொண்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து சென்றனர். ஆனால் இதில் ஏ.டி.எம் சென்டர் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. வங்கி அதிகாரிகள் இது குறித்து விசாரித்துவந்தனர். ஏ.டி.எம் சென்டரில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் சென்டருக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் மட்டும் மாயமாகியிருந்தன.

தீப்பிடித்து எரியும் ஏ.டி.எம்

அதோடு ஏ.டி.எம் மெஷினுக்குள் பணம் வைக்கும் அறை தீ விபத்துகளால் பாதிக்கப்படாத பகுதியாகும். அந்த அறையை டெக்னீஷியன் மூலம் திறந்து பார்த்தபோது ஒரு சில ரூபாய் நோட்டுகள் மட்டும் எரிந்த நிலையில் கிடந்தன. எஞ்சிய நோட்டுகள் எரிந்ததற்கான அடையாளமோ அல்லது அவற்றின் சாம்பலோ அங்கு கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் ஏ.டி.எம் மெஷினைப் பராமரிக்கும் ஊழியர்களைத் தேடியபோது அவர்கள் கிடைக்கவில்லை. பிரவின், ரிதிக், ராகுல் ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர்.

ஏ.டி.எம் மெஷினில் எவ்வளவு பணம் நிரப்பப்பட்டது என்ற விவரம் மெஷினில் பதிவாகியிருக்காது. ஆனால் அதில் பணம் நிரப்புபவரிடம் அத்தகவல் இருக்கும். ஏ.டி.எம் மெஷினில் எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள மெஷினில் பணம் நிரப்பும் ராகுலை வங்கி அதிகாரிகள் தேடியபோது அவரும் தலைமறைவாகியிருந்தார். அவருக்கு ஏ.டி.எம் பாஸ்வேர்டு தெரியும். அதைப் பயன்படுத்தி ராகுல் மற்ற இருவருடன் சேர்ந்து ஏ.டி.எம் மெஷினில் இருந்த ரூ.77 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையை திசைதிருப்ப ஏ.டி.எம் சென்டருக்கு தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து மூன்று பேர் மீதும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து மூன்று பேரையும் தேடிவருகின்றனர். இந்தக் கொள்ளையில் வேறு ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/rs-77-lakh-robbery-at-mumbai-atm-atm-set-on-fire-to-divert-police-attention

ஆம்பூர்: நேரக் கட்டுப்பாட்டு? ; தறிகெட்டு ஓடிய வேன், லாரிமீது மோதியதில் 4 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பலர் வேலை செய்கிறார்கள். இந்தப் பெண்களை தினந்தோறும் காலையில் பணிக்கு அழைத்து வந்து, மாலையில் அவரவர் பகுதியில் கொண்டு சென்றுவிடுவதற்காக தொழிற்சாலைத் தரப்பில் வேன்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை வழக்கம்போல், வாணியம்பாடி மார்க்கத்திலிருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் தொழிற்சாலையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. 9 மணிக்குள் தொழிற்சாலைக்குள் வேன் வந்துவிட வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓட்டுநர் அதிவேகமாக வேனை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் நொறுங்கிய வேன்

சோலூர் என்றப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தறிகெட்டு ஓடி தடுப்புகளை உடைத்துகொண்டு எதிர்த்திசையில் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியில் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், வேனின் முகப்புப் பகுதி நொறுங்கியது. வேன் ஓட்டுநர் ராமன் மற்றும் வேனுக்குள் இருந்த பெண் தொழிலாளர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 15 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். லாரி ஓட்டுநரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்தில் எஸ்.பி பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து, வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்களைச் சந்தித்து, விசாரணை மேற்கொண்டார். இந்தச் சம்பவம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/road-accident-in-ambur-4-persons-died

LSG vs CSK: பேட்டிங் ஆர்டர், பிளேயிங் லெவன் மாறினது ஓகே! ஆனா பௌலர்களின் மைண்ட்செட்? மீழுமா சிஎஸ்கே?

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும், பவர்பிளே ஓவரில் வரும் ரன்களும்தான் ஒரு அணியின் கை போட்டியின் தொடக்கத்திலேயே ஓங்குவதை உறுதிசெய்யும். சிஎஸ்கேயின் கடந்தாண்டு வெற்றி மந்திரமும் இதுதான். இந்த சீசனில் கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் கெய்க்வாட்டின் சறுக்கல், திணறிய கான்வேயின் செயல்பாடுகள், 2020 நினைவுகளை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே குழுமத்திற்கே ஓடவிட்டிருக்கும். சுதாரித்துக் கொண்ட சிஎஸ்கே, இம்முறை ஓப்பனிங் ஸ்லாட்டை உத்தப்பாவைக் கொண்டு நிரப்பியது.
உத்தப்பா | LSG vs CSK

ராஜஸ்தான், கேகேஆர் என பல அணிகளுக்காக ஆடியிருந்தாலும், சிஎஸ்கேவில் இணைந்த பிறகுதான், அவரது ஆட்டத்தில் அனல் பறக்கிறது. ராஜஸ்தானில் லோயர் ஆர்டரில் இறக்கப்பட்டு சொதப்பிய உத்தப்பா, சிஎஸ்கேயில் அவருக்கான டாப் ஆர்டரில் சோபிக்கிறார். பவர்பிளேயில் 2021-ம் ஆண்டுக்குப் பிந்தைய போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக்ரேட் 140.74. அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 152.08. இதுதான் சிஎஸ்கேவை உத்தப்பாவை ஓப்பனிங்கில் துணிவாக இறங்க வைத்தது. 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு, அரைசதத்தைப் பூர்த்தி செய்து 100 சதவிகிதம் அதற்கு நியாயமும் கற்பித்துவிட்டார்.

LSG vs CSK

குஜராத்துக்கு எதிராகக் கோட்டைவிட்ட அந்தக் கடைசி ஓவரில்தான் கேஎல் ராகுலும், அவேஷும் நிகழ்காலத்திலும் நின்று கொண்டிருந்தார்கள் போலும். மூன்று பவுண்டரிகள் வந்து அந்நாளில் லக்னோவின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்ததென்றால், இப்போட்டியில் அதுவே சிஎஸ்கேயின் பேட்டிங்கிற்கு வெற்றிக்குறியீடாக ஆனது. ஷமீராவின் கடந்த போட்டி சாயலையும் மறக்கடித்து, அவரையும் உத்தப்பா நையப்புடைக்க, 2018-ம் ஆண்டில் பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றிய ஆண்ட்ரூ டையிடம் லக்னோ சரண் புகுந்தது. அவரது பந்தில் எல்பிடபிள்யூவில் தப்பித்த கெய்க்வாட்டால் ரவி பிஷ்னாயின் அற்புத டைரக்ட் ஹிட்டுக்குத் தப்ப முடியவில்லை. ஒரு ரன்னோடு வெளியேறினார். லக்னோவுக்கு பவர்பிளேயில் நடந்த ஒரே நல்ல விஷயம் இதுமட்டும்தான்.

அடுத்து இணைந்த உத்தப்பா - மொயின் கூட்டணி, என்ன செய்வதென்றே தெரியாத க்ளூலெஸ் கேப்டனாக ராகுலை மாற்றி விட்டது. பந்து எந்த லெந்த்தில் வந்தாலும் சரி, எந்த லைனில் வந்தாலும் சரி, ஃபீல்டர்களுக்கு இடைடேயான கேப்பில் பந்தை பவுண்டரிக்கு அனுப்புவேன் என ஆடிக் கொண்டிருந்தார் உத்தப்பா. டையின் ஓவரில் நான்கு பவுண்டரிகளை உத்தப்பா மட்டுமே விளாசினார். பவர்பிளேவுக்கு உள்ளாகவே நான்கு பௌலர்களை ராகுல் பயன்படுத்திவிட்டார். அதிலும் 'அடிவாங்குவது சர்வநிச்சயம்' எனத் தெரிந்தும் க்ருணால் பாண்டியாவை வீசவைக்க அதிலும் 16 ரன்கள் வந்து சேர்ந்தது. பவர்பிளே ரன்கள் 73-க்கு சென்றது. 'நல்ல தொடக்கமே, பாதி வெற்றி' என உறுதியானதும் இங்கேதான். 25 பந்துகளில், தனது 26-வது அரைசதத்தை மின்னல் வேகத்தில் அடித்துவிட்டார் உத்தப்பா. ரவி பிஷ்னாய், வேகத்தைக்கூட்டி, அவரைச் சிக்கவைத்து அனுப்பி இருந்தாலும், 'லாபம்' என பவர்பிளே ஓவர்களிலேயே எழுதிவிட்டார் உத்தப்பா. அடுத்ததாக, மொயின் அலியும் வெளியேற, இரண்டு செட்டில் ஆன பேட்ஸ்மேன்களை வெளியேற்றியிருந்தது லக்னோ.

தூபே - ராயுடு | LSG vs CSK

இதன்பிறகும்கூட அதே தாக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற அந்த இன்டென்டில் கவனமாக இருந்தன சிஎஸ்கே பேட்டர்களுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்கள். குறிப்பாக, ஷிவம் துபே - ராயுடுவுக்கு இடையேயான கூட்டணி, 37 பந்துகள் நீடித்து 60 ரன்களைக் குவித்து, மிடில் ஓவர்களில் ரன்கள் வருவதையும் உறுதி செய்தது. அந்தக் குறிப்பிட்ட ஆறு ஓவர்களில் சுழல், வேகம் என மாற்றி மாற்றி ஆறு பௌலர்களைச் சளைக்காமல் ராகுல் வீசவைத்து விட்டார். ஆனாலும் இவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. குறிப்பாக, அரைசதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட ஷிவம் துபே, சிஎஸ்கேவுக்கான அடுத்த தலைமுறை வீரராக உருவாகி வருவதை உறுதி செய்துவிட்டார்.

தோனி | LSG vs CSK

கடைசி 4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொண்டாலும், "பெரிதிலும் பெரிது கேள்!" என 48 ரன்களை வாரிக்குவித்து, 200+ என்னும் இலக்கத்தை உறுதிசெய்தது சிஎஸ்கே. தோனியின் அந்த முதல் பால் சிக்ஸ், 2019 நினைவலைகளை எழுப்பியிருந்தது. தோனி இப்போட்டியில் 7000 டி20 ரன்களைக் கடந்ததோடு சிஎஸ்கேவிற்கு 300-வது பவுண்டரியையும் அடித்தார் என்பதும் உபரித்தகவல். சிஎஸ்கே தரப்பில் டாப் 7-ல் கெய்க்வாட் தவிர, எந்த வீரரின் ஸ்ட்ரைக்ரேட்டும் 135-க்குக் கீழ் இறங்கவில்லை என்பது அவர்களது டீம் மீட்டில் விவாதிக்கப்பட்ட நோக்கத்துக்கான செயல்முறை விளக்கமாக இருந்தது. லக்னோவுக்கு ரவி பிஷ்னாயின் 2/24 என்னும் ஸ்பெல் மட்டுமே ஸ்பெஷலாக அமைய, மிஸ் ஃபீல்டுகள், கேட்ச் டிராப்கள் புடைசூழ மற்ற அத்தனை பேரின் எக்கானமியும் 10-ஐ தொட்டோ, தாண்டியோ இருந்தன.

211 என்பது நல்ல இலக்காகத் தோன்றினாலும், சின்ன மைதானம் மற்றும் பனிப்பொழிவைக் கணக்கில் கொண்டால், 15 ரன்கள் குறைவாகவே சிஎஸ்கே எடுத்திருந்தது எனலாம்.
LSG vs CSK

போட்டி தொடங்குவதற்கு முந்தைய தரவுகள் தந்த தகவலில், இக்களம் என்னதான் புற்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும் சுழல்பந்து வீச்சாளர்களோடு நட்புப் பாராட்டும் என்று கூறப்பட்டிருந்தது. மும்பை - டெல்லிக்கு இடையே இங்கே நடந்த போட்டியில் குல்தீப், முருகன் அஷ்வின் செயல்பாடுகளும் அதை உறுதி செய்திருந்தன என்பதால் ஜடேஜா மற்றும் மொயின் அலிக்கு இன்று விக்கெட் படையல் காத்திருக்கிறது என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் எல்லாமே கண்ணாடி பிம்பமாக தலைகீழாக நடந்தேறியது.

சர்வதேச தரமுடைய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இது என்பதை நிருபித்தது ராகுல் - டீ காக் கூட்டணி. எக்ஸ் மும்பை வாலாவாக டீ காக்கும், நிலைப்புத்தன்மைக்கு பெயர் போன ராகுலும் பழைய பாதைக்குத் திரும்பி உள்ளனர். ஒருபக்கம், தீபக் சஹார் இல்லாத குறையை சிஎஸ்கேயின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கெனவே உணர வைக்கத் தொடங்கி விட்டனர் என்றால் பனிப்பொழிவும் இன்னொரு பக்கம் நெருக்கடி தந்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டணியை முறிக்கக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை கேட்ச் டிராப்கள் என்னும் மகாகுற்றங்கள் தட்டிப் பறித்தன. பிராவோ வீசிய பந்தை டீ காக் அடிக்க, அது மொயின் அலியைத் தேடிச் சென்றது. கண்டிப்பாக பிடித்திருக்கக் கூடிய அந்தக் கேட்சை அவர் விட்டதுதான் சிஎஸ்கே சறுக்கிய இடம். அதுதவிர மொயின் பந்தில் விடப்பட்ட கேட்சும் சகலத்தையும் சிஎஸ்கேவிற்கு எதிராகத் திருப்பி விட்டது.

ராகுல் - டீ காக் | LSG vs CSK
சிஎஸ்கேவும் பவர்பிளேயிலேயே, மொயின் மற்றும் பிராவோவைக் கொண்டு வந்தும் பார்த்தது, ஆனால், உண்மையில் மரணபயம் காட்டியது இந்த ஜோடி. 1×10=10, 2×10=20 என பத்தாவது வாய்ப்பாடு கற்றுத் தருவது போல், எட்டு ஓவருக்கு 80, 9 ஓவருக்கு 90 என வந்து நின்றுவிட்டது லக்னோவின் ஸ்கோர். பவர் பிளேவுக்கு வெளியேகூட அதே அதிர்வலைகளைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

சிஎஸ்கேவுக்கான முதல் விடியலாக ப்ரிடோரியஸின் முதல் ஓவரே அமைந்தது‌. தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்த ரன்மீட்டரை சற்றே நிறுத்தி அதற்கு முந்தைய ஓவரை பிராவோ வீசி பெரிய ஷாட் எதுவும் போகாமல் செய்திருந்தார். அது ராகுலோடு மைண்ட்கேம் ஆட, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த ஷார்ட் பாலில் புல் ஷாட் ஆடுகிறேன் என விக்கெட்டைப் பறிகொடுத்தார் ராகுல். அதற்கடுத்த ஓவரும் சிஎஸ்கேவுக்குச் சாதகமானது. மணீஷ் பாண்டே போன போட்டியில் ஃபுட் வொர்க்கின் விலை கேட்டு ஷமியிடம் விக்கெட்டை தாரைவார்த்ததைப் போலவே இம்முறையும் துஷர் வீசி, ஸ்லாட்டில் விழுந்த பந்தை பெரிய ஷாட்டாக்க முயன்று, சரியாக அதைச் செயல்படுத்தாமல் வெறும் 5 ரன்களுக்கு வெளியேறினார். இன்னொரு ஓப்பனரான டீ காக்கினையும் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பந்துவீசி கீப்பர் கேட்ச் ஆக்க வைத்து ப்ரிடோரியஸ் அனுப்பி வைத்தார்.

ப்ரிடோரியஸ் | LSG vs CSK

அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி, அதிர்ச்சி தந்தாலும் 32 பந்துகளில் 71 ரன்கள் வேண்டும் என இலக்கு தள்ளியே இருந்தாலும், ஏழு விக்கெட் கையிருப்பும், இறுதியில் பின்ச் ஹிட்டர்கள் அணிவகுப்பும் லக்னோவுக்கு கொஞ்சம் தெம்பு தந்தது என்றே சொல்ல வேண்டும். சிஎஸ்கேயின் பார்வையிலோ இன்னமும் மூன்று க்ளீன் ஓவர்கள் முடிவைத் தங்களுக்கு ஆதரவாக்கும் என்ற தைரியம் இருந்தது. ஆனால், இருபக்க ரசிகர்கள்தான், முந்தைய போட்டிகளின் முடிவுகளைக் காட்சிகளாய் ஓட்டிப்பார்த்து, கதிகலங்கிப் போய் இருந்தனர்.

டீ காக் | LSG vs CSK
முதல் இரு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த பிராவோ தனது இறுதி இரண்டு ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்துவிட்டார். அப்படி இருந்தாலும் ப்ரிடோரியஸ், பிராவோவின் ஓவர்கள் முடிய முடிய, மொயின் - ஜடேஜா ஸ்பின் கூட்டணி எடுபடாத பட்சத்தில் இறுதி ஓவர்களை முகேஷ் வீசினால் சீனியர் வீரர்கள் அளவு சிறப்பாக அவரால் வீசமுடியுமா, சிஎஸ்கேவின் தலைதப்புமா என்பதே ரசிகர்களின் கவலையாக இருந்தது. லூயிஸ் வெறித்தனமான ரன்பசியோடு காத்திருந்தார்.
மாற்று யோசனையாக, பேட்டிங்கில் கலக்கிய ஷிவம் துபே இறக்கப்பட, அதுவே நாளின் மிக மோசமான முடிவாக மாறியது. முதல் பந்து சிக்ஸருக்கு டீப் பேக்வேர்ட் லெக்கிற்கு பறந்தது. அங்கிருந்து சிஎஸ்கே ரசிகர்களின் இதயங்களை சில்லுச்சில்லாக நொறுக்குவது போலவே ஒவ்வோரு பந்தின் முடிவுகளும் இருந்தன. அந்த ஒற்றை ஒவரில் 25 ரன்களை ஷிவம் துபே பௌலிங்கில் கொடுக்க, வெறும் 23 பந்துகளில் இந்த சீசனின் அதிவேக அரை சதத்தை லூயிஸ் அடித்தார்.
ப்ரிடோரியஸ், தோனி | LSG vs CSK

அந்த ஓவரின் தொடக்கத்தில், தேவைப்படும் ரன்கள் 34 ஆக இருக்க, அந்த ஓவரிலேயே, 25 ரன்கள் வந்து, இறுதி ஓவரில் வெல்ல 9 ரன்கள் போதும் என இலக்கை எளிதாக்கி விட்டது. பதற்றத்தில் அனுபவமில்லாத முகேஷால் அதனைத் தடுக்க முடியாமல் போக, மூன்று பந்துகள் எஞ்சியிருக்கும் போதே வெற்றி பெற்றுவிட்டது லக்னோ.

இன்னமும் இருபது ரன்கள் சிஎஸ்கேயின் தரப்பிலிருந்து வந்திருந்தால் போட்டியின் முடிவு கைமாறியிருக்கலாம் என்பது ஒருதரப்பு வாதம் என்றாலும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கிட்டத்தட்ட 99 ரன்கள் தாக்குப்பிடிக்க விட்டதும், கேட்ச் டிராப்களும், ஷிவம் துபே வீசிய அந்த 19-வது ஓவரும்தான், வீழ்ச்சிப் பாதையில் சிஎஸ்கேவை நகர்த்தியது.

டாஸில் இருந்து எதுவுமே சிஎஸ்கேவிற்கு இருபோட்டிகளாகக் கைகொடுக்கவில்லை. மொயின் அலி உள்ளே வந்தும், வழமை மாறி பிளேயிங் லெவனை மாற்றி ஆடியும்கூட பலனில்லை. பிரிட்டோரியஸின் வருகை மற்றும் மலிங்காவின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ள பிராவோவை விலக்கி வைத்துப் பார்த்தால், பௌலிங் டிபார்ட்மெண்டும் மொத்தமாகத் தள்ளாடுகிறது. ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பிலும் துடிப்பு இல்லை. கேப்டனாக மட்டுமல்ல, பேட்ஸ்மேனாகவும் பழைய ஜடேஜாவைப் பார்க்க முடியவில்லை.

சாம்பியனாக மறுபடி வாகை சூட ஆசைப்பட்டால் இதை எல்லாம் சிஎஸ்கே சடுதியில் சரிசெய்ய வேண்டும்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-chennai-lost-to-lucknow-even-after-setting-a-big-target

இன்றைய ராசி பலன் | 01/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/01042022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

புதன், 30 மார்ச், 2022

நாற்றமெடுக்கும் சாக்கடையிலிருந்து நதியாகுமா கூவம்?

லண்டனின் தேம்ஸ் நதி 1858-ம் ஆண்டில், இன்றைய சென்னையின் கூவம் நதியைவிடக் கடுமையாக மாசுபட்டிருந்தது. `பெரிய துர்நாற்றம்' (Great Stink) என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வால் பிரிட்டிஷ் பாராளுமன்ற அமர்வையே ரத்து செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1957-ம் ஆண்டில் தேம்ஸ் நதி உயிரியல்ரீதியாக ‘இறந்த நதி’யாக அறிவிக்கப்பட்டது. இதை அவமானமாகக் கருதிய அரசு, நதியை மீட்கும் முயற்சியில் இறங்கியது.

ஒரு நதியில் நீர்வாழ் உயிரினங்களின் மீள்வருகையே, உயிரியல்ரீதியாக இறந்த நதி மீண்டும் உயிர் பெறுவதற்கு ஆதாரம். இன்று 346 கி.மீ நீளத்துக்கு ஓடும் தேம்ஸ் நதி, உலகின் தூய்மையான நகர்ப்புற நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 125 வகையான மீன்கள், 400-க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள், நீர்ப் பறவைகள், கடல்நாய்கள், டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் அதில் வாழ்கின்றன. சிறந்த நதி மறுசீரமைப்புச் சாதனைக்கான உலகின் முதன்மை விருதான சர்வதேச தீயஸ் நதிப் பரிசை தேம்ஸ் நதி 2010-ம் ஆண்டில் வென்றது.

தேம்ஸ் நதியுடன் ஒப்பிடும்போது, சென்னை நகரின் மூன்று முக்கிய நீர்வழிகளும் சிறியவை. 72 கி.மீ நீளமுள்ள கூவம் ஆறு சென்னை நகர எல்லையில் 18 கி.மீ தூரமே ஓடுகிறது. 42.5 கி.மீ நீளமுள்ள அடையாறு ஆறு, நகர எல்லையில் 15 கி.மீ தூரமே செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் தமிழ்நாட்டில் 163 கி.மீ நீளம் செல்கிறது. சென்னை நகர எல்லையில் 31 கி.மீ தூரத்துக்கு இருக்கிறது. நகருக்குள் இந்த நீர்நிலைகள் கடுமையாக மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழமுடியாத, நாற்றமெடுக்கும் சாக்கடைகளாக மாறியுள்ளன.

லண்டன் தேம்ஸ் நதி

தமிழ்நாட்டில் 1967-ல் தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, ரூ.2.2 கோடி செலவில் கூவம் நதியைத் தூய்மையாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 55 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அமைந்த அரசுகள் நல்லெண்ணத்துடன் இதற்காக சில ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தும், சென்னையின் நதிகள் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கே போயின. நதிகளை மீட்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க 2006-ல் உருவாக்கப்பட்ட சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (Chennai Rivers Restoration Trust or CRRT) எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய தேதியில், ரூ.2,484 கோடி மதிப்பிலான நதி மறுசீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன (கூவம்: ரூ.647 கோடி, அடையாறு: ரூ.555 கோடி, பக்கிங்ஹாம் கால்வாய் ரூ.1,282 கோடி).

‘ஒரே விஷயத்தையே ஒரே மாதிரி திரும்பத் திரும்பச் செய்துவிட்டு, வேறுவிதமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மடமை' என்று சொல்வார்கள். சென்னை தன் கடந்த காலத் தவறுகளிலிருந்தும், தேம்ஸ் நதி மற்றும் பிற நதிகளின் மறுசீரமைப்பு நடைமுறைகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நதிகளை மாசுபடுத்தும் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிப்பதிலேயே சென்னை கவனம் செலுத்திவருகிறது. மைய நகரப் பகுதியில் போதிய கொள்ளளவு இல்லாத, பழைய, சிதைந்த கழிவுநீர்க் குழாய்கள்... விரிவாக்கப் பகுதிகள் சிலவற்றில் முறையாகக் கழிவுநீர்க் குழாய்கள் இல்லாதது... இப்படி நிறைய சிக்கல்களைச் சென்னை எதிர்கொள்கிறது. பல வீடுகளின் கழிவுநீரை மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக வெளியேற்றுவதால் அது இறுதியில் ஆறுகளில் கலந்துவிடுகிறது. செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அந்தக் கழிவுகளை சிறிதளவு கட்டணம் செலுத்திக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்கலாம். அவர்களோ சட்டவிரோதமாக அவற்றை நதிகளில் கொட்டுகின்றனர். இதையெல்லாம் முறைப்படுத்த சரியான நடைமுறை இல்லை.

சென்னை நகருக்குள் வருவதற்கு முன்பே இந்த நதிகளில் விவசாயக் கழிவுகளும் கலக்கின்றன. மழைக்காலங்களில் குப்பைகள், கழிவுகள், எண்ணெய் என்று ஏராளமான அசுத்தங்கள் மழைநீரில் கலந்துவந்து நதியில் சேர்கின்றன. நதிகளை மாசுபடுத்துவதில் இதற்கு 40 சதவிகிதப் பங்கு உள்ளது. இதைத் தடுக்க சென்னை இதுவரை பெரிதாக எதையும் செய்ததில்லை. பசுமைக் கூரைகள், பசுமைச் சுவர்கள், பசுமை அகழிகள், மழைத் தோட்டங்கள், மரங்கள், பூங்காக்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். இவை மழைநீரை சேமிக்கும்; வடிகட்டும்; மழைநீரில் கழிவுகள் கலந்து நதிகளில் வந்து விழுவதைத் தடுக்கும்.

கூவம் மற்றும் அடையாறு நதிகளில் ஊரகப்பகுதிகளில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலந்து மாசுபடுத்துகின்றன. அங்கிருந்து ஆரம்பித்து முழுமையாக மறுசீரமைப்பு செய்வதே சரியான அணுகுமுறை. நகர்ப்புறத்தில் மட்டுமே மாசடைந்த நதியை மீட்டெடுப்பது பயனற்றது.

கூவம் ஆறு

நதிகளைப் பாதுகாக்க முக்கியமாகச் செய்ய வேண்டியது, அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த ஆற்றங்கரைப் பகுதியை உருவாக்குவதுதான். இயற்கையான அல்லது உருவாக்கப்பட்ட ஈரநிலங்களைக் கொண்டதாக இது இருக்க வேண்டும். ஈர நிலங்களே இயற்கையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களாகச் செயல்படுகின்றன. கழிவுகள், உலோகங்கள் மற்றும் பிற நச்சுகள் உள்ளிட்ட மாசுக்களை உயிரியக்க முறை வாயிலாக இவை தூய்மைப்படுத்துகின்றன. எனவே, ஆற்றுப் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது அவசியம். ‘நதியோர இடையகம்’ எனப்படும் இது, போதுமான அகலத்துடன் இருக்க வேண்டும். இதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய, தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்துவது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அர்த்தமுள்ளது என ஆய்வுகள் காட்டுகின்றன. CRRT மேற்கொண்ட நதியோர இடையகம் உருவாக்கும் திட்டம் போதுமானதாக இல்லை.

சுற்றுச்சூழல் உறவுகள் சிக்கலான தன்மை கொண்டவை. பெரிய அணைகள், சிறிய தடுப்பணைகள், வலுவூட்டப்பட்ட ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் போன்ற செயற்கைத் தடைகள் தாவர விதைகளின் பரவலைத் தடுக்கின்றன. பல வகையான நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச்சுழற்சியையும் சீர்குலைக்கின்றன. குறிப்பாக, முட்டையிடுவதற்காக நீரோட்டத்துக்கு எதிராக இடம்பெயர்கின்ற மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்ற பலவகை நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச்சுழற்சி சீர்குலைகிறது. ஆற்றங்கரைத் தாவரங்களும் நீர்வாழ் உயிரிகளுக்கு வாழ்வாதாரம் வழங்குகின்றன. அவை இல்லாமல்போவது, நதியின் உயிர்ச்சூழலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஓர் ஆற்றின் மேற்பரப்பு நீருக்கும் நிலத்தடி நீருக்கும் இடைப்பட்ட மண்டலம், ஆற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதுவே தண்ணீரை வடிகட்டக்கூடிய நுண்ணுயிரிகள் மற்றும் பிற தனித்துவமான விலங்கினங்களைக் காக்கிறது. அவற்றின் முட்டைகளுக்கு அடை காப்பகமாகச் செயல்படுகிறது. அறிவியல்சாரா முறையில் தூர்வாருவதும், மணல் மற்றும் சரளை மண்ணை அள்ளுவதும் இந்த முக்கியமான மண்டலத்தையும் அதனுடன் சேர்ந்து நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத வரை, என்னதான் நீரின் தரம் மேம்பட்டாலும் சென்னையின் ஆறுகளில் செழிப்பான நீர்வாழ் உயிரினங்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமாகாது.

அணைகள், தடுப்பணைகள், செயற்கையான ஆற்றங்கரைகள் மற்றும் வெள்ளத் தடுப்புச்சுவர்கள் போன்ற எந்தவித செயற்கையான தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக நதி ஓட வேண்டும். அதன் கரைப்பகுதியில் பசுமை மற்றும் ஈரநிலங்கள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், நதி இயல்பாகவே தன்னை சுத்தம் செய்துகொள்ளும்.

இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால், நதிகளை உயிர்ப் பிப்பது என்பது தொழில் நுட்பத்தை மையப்படுத்தியதாக இல்லாமல் சுற்றுச்சூழலை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். ஆனால், சென்னை நதிநீர் மறுசீரமைப்பு இப்போதும் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய மனநிலையில்தான் தேங்கியிருக்கிறது. மேலும் பல தடுப்பணைகள், வெள்ளத்தடுப்புச் சுவர்கள், மாற்றுக் கால்வாய்கள் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

சமூக நெருக்கடிகள் இருப்பதால், நாம் சுற்றுச்சூழலை மையப்படுத்திய அணுகுமுறையை எல்லா இடங்களிலும் சாத்தியப்படுத்த முடியாது. அதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தடுப்பணைகளை அகற்றி விவசாயிகளின் பாசன உரிமைகளைப் பறிப்பது நியாயமற்றதாகத் தோன்றலாம். அதைச் செய்யாவிட்டால், இந்த நதிகள் மாசுபட்ட நீரினைச் சென்னைக்குச் சுமந்துவருவதை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

சென்னையின் நதிகளை வெற்றிகரமாக மீட்க, சில நிர்வாக நடவடிக்கைகள் அவசியம். முதலில், நதிகளின் ஆரோக்கியம் குறித்த மதிப்பீட்டை CRRT அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். நதியின் பாதை முழுக்க குறிப்பிட்ட இடங்களில் நீரின் தரம், உயிரினங்களின் ஆரோக்கியம், நீரோட்டத்தின் தரம், நதிக்கு அடுத்துள்ள சமதளப்பரப்பின் வளமை போன்ற பல்வேறு அளவீடுகளை வைத்து இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்தால்தான் ஆற்றின் மிகவும் சீரழிந்த பகுதிகள் எவை, அதற்கான காரணங்கள் என்னென்ன, நதியின் ஆரோக்கியம் மேம்படுகிறதா அல்லது மோசமடைகிறதா என்றெல்லாம் கண்டறிய முடியும். கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழிச்சாலைகளின் ஆரோக்கியம் குறித்த ஆண்டறிக்கை ஒன்றை CRRT வெளியிட்டு, மறுசீரமைப்புப் பணியின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.

இரண்டாவது விஷயம், நதிகளை மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான திட்டமாகும். இதைச் சிறப்பாகச் செய்ய, மிகச் சிறந்த அதிகாரிகளை CRRT-யில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்குப் போதுமான பதவிக்காலத்தையும் (5 ஆண்டுகள்) முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

மூன்றாவதாக, நதிகளைக் காப்பது சமூகக்கடமை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நதிகளுக்கும் மக்களுக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட வேண்டும். நதிக்கரையில் நடைபாதை, சைக்கிள் ஓடுபாதை போன்றவற்றை உருவாக்கி, மக்களுக்கும் நதிகளுக்கும் நெருக்கம் ஏற்படுத்த வேண்டும்.

நதி மறுசீரமைப்புக்கு நீடித்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதி மற்றும் நல்ல நிர்வாகம் ஆகியவை தேவைப்படும் ஒரு நீண்ட காலச் செயல்முறை. உடனடித் தீர்வுகள் இதில் சாத்தியமில்லை. சிங்கப்பூரிலுள்ள சிங்கப்பூர் நதியையும் (வெறும் 3.2 கி.மீ நீளம்) கல்லாங் நதியையும் (10 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்கு 10 ஆண்டுகள் ஆயின. ஷாங்காயில் உள்ள சுசோ க்ரீக் நதியை (125 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்குச் சுமார் 25 ஆண்டுகள் ஆயின. மேற்கு ஐரோப்பாவின் பல நகரங்கள் வழியே பாயும் ரைன் நதியினை (1,233 கி.மீ நீளம்) மறுசீரமைப்பதற்குச் சுமார் 40 ஆண்டுகள் ஆயின. உயிரியல்ரீதியாக இறந்துபோன நதிகள் என்று சொல்லப்பட்ட இவற்றில் இன்று நன்னீர் ஓடி, உயிர்கள் செழித்து வளர்கின்றன.

எனது கணிப்பின்படி, சென்னை நீர்வழிப் பாதைகளின் மறுசீரமைப்பு முயற்சிகள் 40 சதவிகிதம்கூட நிறைவடையவில்லை. சரியான அறிவியல் முறைகளைப் பின்பற்றினால், இதை முழுமையாகச் செய்துமுடிக்க இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம். இதற்கு நிதி என்பது உண்மையில் ஒரு தடையல்ல. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்காக சுமார் ரூ.85,000 கோடியைத் திரட்டக்கூடிய ஒரு நகரத்தினால், நதிகளை மறுசீரமைக்கத் தேவைப்படும் மிகக் குறைவான நிதியை நிச்சயமாகத் திரட்டவியலும். இதுபோன்ற பசுமை முயற்சிகளுக்கு, பல நிறுவனங்களிடமிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது.

சென்னை ஓர் உலகளாவிய நகரமாக மாற வேண்டுமென விரும்பினால், அதன் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற கூவத்துக்கும் அடையாற்றுக்கும் பக்கிங்காம் கால்வாய்க்கும் உயிர் கொடுக்க வேண்டும்.



source https://www.vikatan.com/news/general-news/special-story-about-cooum-river

Solar Storm: பூமியைத் தாக்க உள்ள சூரிய புயல்... பாதிக்கப்படுமா இன்டர்நெட் மற்றும் GPS சேவை?

'Solar Storm' எனப்படும் சூரிய புயல் நேரடியாக பூமியின் வளிமண்டலத்தை ஓரிரு நாள்களுக்குள், அதாவது இன்று (மார்ச் 31) தாக்க நேரிடும் என்று அமெரிக்காவின் நாசா (NASA) எச்சரித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் வெளிப்படுவதால் இந்நிகழ்வு சூரியப்புயல் எனப்படுகிறது.

குறிப்பாக பூமியில் இங்கிலாந்து பகுதி அருகே வலுவான சூரியப் புயல் மோதும் அபாயம் இருப்பதாக நாசா (NASA) எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வின் துல்லியமான நேரம் குறித்து சரியான தகவலில்லை. ஆனால், இதன் தாக்கம் மார்ச் 31 வரை இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் சில பகுதிகளில் இந்தப் புயல் வலுப்பெறும்போது 'பிரகாசமான ஒளி' தென்படுமாம்.

Solar Storm | சூரிய புயல்

சூரியப் புயலின் தாக்கம் மற்றும் பாதிப்புகள்:

சூரியனின் coronal mass ejection மற்றும் solar flares போன்ற நிகழ்வுகளால் பூமியில் ஏற்படும் வளிமண்டல விளைவுகளால் இது போன்ற சூரியப்புயல் ஏற்படுகிறது. அதே போல, சூரிய காற்று (Solar Winds) பூமியின் காந்தப்புலம் அல்லது வளிமண்டலத்தில் நுழையும்போது அது வளிமண்டலத்தை வண்ணமயமாக ஒளிரச் செய்கிறது. இதையே aurora polaris என்கின்றனர்.

இந்நிகழ்வு வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் போது 'Northern lights' என்றும் தெற்கு அரைக் கோளத்தில் நிகழும் போது 'Southern lights' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் இந்தச் சூரிய புயலால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆனால், இதை வெகுசில இடங்களில் மட்டுமே காணமுடியும்.
Aurora polaris | Northern lights

இதனால், உலகில் பல இடங்களில் இன்டர்நெட் மற்றும் GPS சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். புயலின் தாக்கத்தால் high frequency ரேடியோ அலைகள் மற்றும் அதன் இணைப்பு பாதிக்கப்படலாம். மின்சார கட்டுமானங்களையும் இந்தப் புயல் பாதிக்கக்கூடும்!

Aurora polaris | Northern lights
இது முதல்முறை இல்லை. சமீபகாலங்களில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் 40 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் இப்படி ஒரு புயலால் செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


source https://www.vikatan.com/science/astronomy/solar-storms-likely-to-hit-the-earth-today-what-are-their-effects

How To Remove Stretch Marks Easily At Home? | DIY Home Remedies | Vasundhara Tips | Say Swag



source https://www.vikatan.com/fashion/beauty-tips/home-remedy-to-get-rid-of-stretch-marks

``அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் திட்டியிருக்கிறார்” - தஞ்சையில் ஆளுநர் தமிழிசை வேதனை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ``அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைதளத்தில் என்னை, `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார். திட்டுவதைக்கூட அழகு தமிழில் மரியாதையாகக் திட்டுங்கள்” எனக் கண்கலங்க வேதனையுடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று நடைபெற்றது.

இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

பின்னர் தமிழிசை செளந்தரராஜன், ``இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு பணிகளுக்கு இடையில் தெலங்கானாவிலிருந்து வந்துள்ளேன். நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவி என்பதும் அதற்கு முக்கியக் காரணம். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர தமிழும் வளரும். மரக்கன்றுகள் நடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இங்கு பலா மரக்கன்றை நடுவதற்காகக் கொடுத்தார்கள். எட்டயபுரம், திருவல்லிக்கேணி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து மண் கொண்டு வந்திருந்தார்கள். அந்த மண்ணில் மரக்கன்றை நட்டுவைத்தேன்.

பாரதியாரின் பாடல்கள் குறித்து நாம் நிறைய அறிந்திருப்போம். அவரின் உரைநடைப் புத்தகங்களையும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். உடல் நலன் பெறுவது குறித்து பாரதியார் தனது உரைநடையில் தெரிவித்துள்ளார். உடல்நலம் பேணுவது மிகவும் முக்கியம். நாம் சங்க காலம் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், கொரோனா காலம் என்பதை இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் நமது உணவு முறை அதை மாற்றிவிட்டது. உடல்நலமும் மனநலமும் பெற்றால் எல்லா நலமும் பெறலாம் என பாரதியார் கூறியுள்ளார்.

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

பெண்கள் உயர்வுக்காக பாரதியார் மிகவும் பாடுபட்டுள்ளார். நிமிர்ந்த நடையும், நேர்க்கொண்ட பார்வையும் வேண்டும் என்று தெரிவித்த அவருக்கு பெண்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். சமூக இணையதளங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதைக் கண்டால் பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். எனவே இணையத்தில் தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்துங்கள். திட்டுவதைக்கூட அழகு தமிழில் மரியாதையுடன் திட்டுங்கள். விமர்சனத்துக்கும் மரியாதையான சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை சமூக வலைதளத்தில், `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என்று ஒருமையான வார்த்தையைப் பயன்படுத்தித் திட்டியிருக்கிறார். திட்டுவதைக்கூட தமிழ் மொழியில் உள்ள அழகான வார்த்தையில் மரியாதையுடன் பயன்படுத்தித் திட்டுங்கள்” எனக் கண்கலங்கத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilisai-soundararajan-talks-about-social-media-issues

கரூர்: 3 இளைஞர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்! - பதறவைத்த சம்பவம்

கரூரில் சினிமா பட பாணியில் மூன்று இளைஞர்களை வாகனத்தில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (22), தர்மன் (23), வல்லரசு (23) மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் வழக்கம்போல் கரூர் - கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் அருகில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், வாகனத்தில் வந்த ஐந்து பேர்கொண்ட மர்மக் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக்கொண்டு, அந்த மூன்று இளைஞர்களையும் ஓட ஓட சரமாரியாக விரட்டி விரட்டி வெட்டியுள்ளது.

சினிமா பட பாணியில் ஓட ஓட இளைஞர்களை வெட்டிய அந்தக் கும்பல் திடீரென்று தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தலைமறைவாகிவிட்டது. மேலும், அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டது.

சம்பவம் நடைபெற்ற இடம்

இந்தச் சம்பவத்தைப் பார்த்துப் பதறிய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், வெட்டுகாயங்களுடன் துடித்த அந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். வசந்த், தர்மன், வல்லரசு ஆகிய மூன்று இளைஞர்களுக்கும் தலை, கை கால்கள் எனப் பல இடங்களில் அரிவாள் மூலம் வெட்டுக்காயம் ஏற்பட்டு, பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அந்த மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் நகர காவல் நிலைய காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய மர்மக் கும்பல் குறித்தும், இளைஞர்களுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/in-karur-three-person-where-attacked-by-gang

கர்நாடகா: `ஹலால் உணவு... பொருளாதார ஜிஹாத்!’ - பாஜக-வின் சி.டி.ரவி சர்ச்சைக் கருத்து

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து,பண்டிகை சமயங்களில் இந்து கோயில்களைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடை போட இஸ்லாமியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது சர்ச்சையானது. இதையொட்டி தற்போது ஹலால் பற்றி பாஜக தேசிய பொதுச்செயலாளர் தெரிவித்திருக்கும் கருத்து புது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சி.டி.ரவி

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக-வின் சி.டி.ரவி, ``ஹலால் இறைச்சி உணவை இந்துக்களும் பயன்படுத்த வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைக்கும்போது, அந்த உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது? முஸ்லிம்கள் ஹலால் இல்லாத இறைச்சியைப் பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியைப் பயன்படுத்துவார்கள். முஸ்லிம்கள் மற்ற மதத்தினரிடம் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.

இவரின் சர்ச்சைப் பேச்சை கண்டித்த, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, '' இந்தப் பிரசாரம் மாற்று மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. மேலும் மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjps-ct-ravi-equates-halal-meat-to-economic-jihad

RCB vs KKR: ஆரஞ்சும் எங்களுதுதான், பர்ப்பிளும் எங்களுதுதான்... எப்படி எப்படியோ போராடி வென்ற ஆர்சிபி!

தோனியின் அணி என்பது சாதாரண ஸ்கோராக இருந்தாலும், இருபது ஓவர் வரை விளையாடி விட்டுத்தான் அந்த இலக்கை எட்டும். கோலியின் ஆர்சிபியின் (யார் கேப்டன் என்றாலும் அது கோலியின் அணி தான்) ஃபார்முலாவே வேறு. பெரிய டார்கெட்டை அடித்துவிட்டு எளிதாகத் தோற்கும். சின்ன டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல் தோற்கும். தோற்பதற்காக ஃபார்முலா எழுதி விளையாடுகிறார்களோ என ஆர்சிபி ரசிகர்களே சிந்திக்கும் அளவு பல போட்டிகளில் அவர்களின் பெர்பாமன்ஸ் இருக்கும்.
RCB vs KKR

கொல்கத்தா வெர்சஸ் பெங்களூரு போட்டியில் கொல்கத்தா அடித்ததே 128 ரன்கள் தான். அட, அப்ப ஆர்சிபி ஜெயிச்சுடும் போல என மற்ற அணி ரசிகர்கள் எல்லாம் கேசுவலாக இருக்க, உச்சபட்ச பயத்தில் இருந்தார்கள் ஆர்சிபி ரசிகர்கள். கடைசியாக கொல்கத்தாவுக்கு விளையாடிய தினேஷ் கார்த்திக் புண்ணியத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸிக்குக் கடந்த போட்டியின் ஞாபகம் வந்திருக்கும். எவ்ளோ அடிச்சாலும் போயிடுமோ என்கிற பீதியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆர்சிபி அதே அணியுடன் களமிறங்கியது. ஷிவம் மவிக்குப் பதிலாக டிம் சௌத்தியுடன் களமிறங்கியது கொல்கத்தா.

Akash Deep | RCB vs KKR

வெங்கடேஷும், ரஹானேவும் ஓப்பனிங் இறங்க, மூன்றாம் ஓவர் வரை எந்தப் பாதிப்பும் இல்லாமல் 14 ரன்கள் அடித்திருந்தனர். சிராஜுக்குப் பதிலாக பந்துவீச வந்த ஆகாஷ் தீப், முதல் பந்திலேயே வெங்கடேஷை C&B முறையில் அவுட்டாக்கினார். சிராஜ் ரஹானேவுக்கு ஒரு ஷார்ட் போல் போட, அதில் ஷபாஷ் அஹமதிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரஹானே. முதல் மூன்று விக்கெட்களையும் ஷார்ட் பாலில் எடுத்து அசத்தியது ஆர்சிபி. பவர்பிளே இறுதியில் மூன்று விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அணியின் சூழ்நிலையைப் புரிந்து வந்து விளையாடியிருக்க வேண்டிய ஸ்ரேயாஸும் லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த டு ப்ளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ரைட்டு நெக்ஸ்ட் என ரிமோட்டைத் தேட ஆரம்பித்தனர் கொல்கத்தா ரசிகர்கள்.

அடுத்ததாக வந்தார் சுனில் நரைன். ஒரு காலத்தில் திடீரென ஓப்பனிங் இறங்கி, அதிரடியாக ஆடியவர். பின்பு அது பெரிதாக செல்ஃப் எடுக்காததால், அந்த ரிஸ்க்கை கொல்கத்தா எடுப்பதில்லை. ஆனாலும் இந்தப் போட்டியில் வேறு வழியில்லை. ஆகாஷ் வீசிய பந்தில் மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி, மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் எனப் பழைய நினைவுகளைக் கிளப்பினார். அடுத்த ஓவரில் பில்லிங்ஸும் ஒரு சிக்ஸ் அடிக்க, மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அது எப்படி சூடு பிடிக்கலாம் எனப் பற்ற ஆரம்பித்த நெருப்பில் தண்ணீரை ஊற்றி அணைப்பது போல அதே ஓவரில் நரைனும், அவருக்குப் பின்னால் வந்த ஜேக்சனும் அவுட். 67 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக நின்றது கொல்கத்தா.

ரஸல் | RCB vs KKR

டி20 போட்டிகளில் தன் 400வது போட்டியை ஆட வந்தார் ரஸல். இந்தப் போட்டியில் கொல்கத்தாவை இதற்கு மேல் காப்பாற்ற முடியும் என்றால், அது ரஸலால் மட்டும்தான் முடியும். ஓவருக்கு ஒருமுறை ரோப்பைத் தொட்டுக்கொண்டிருந்தது ரஸல் அடிக்கும் பந்து. 'இதெல்லாம் பத்தாது வீ வான்ட் மோர்' என்பது போல் டக் அவுட்டில் விழி பிதுங்கி நின்றது கொல்கத்தா. நாமளும் அடிப்போம் என பில்லிங்ஸ் லாங் ஆன் திசையில் ஓங்கி அடிக்க, அதைச் சுலபமாக கேட்ச் பிடித்தார் கோலி. ஷபாஷ் அஹமது ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து நூறை நோக்கி ஸ்கோரை நகர்த்தினார் ரஸல். ஹர்ஷல் ஓவரில் ரஸல்லும் அவுட்டாக, எல்லாம் முடிந்தது என நினைத்தால், வருண் ஆரோன் இரண்டு பவுண்டரி, உமேஷ் யாதவ் சிக்ஸர், பவுண்டரி எல்லாம் அடித்து 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா.

உமேஷ் யாதவின் பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே கீப்பர் ஷெல்டன் ஜாக்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ராவத். 128 ரன்களை எவ்வளவு விரைவாக அடிக்க முடியுமோ அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஒன் டவுனில் வந்தார் கோலி. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். 'நைஷ்ல' என கிளாப் தட்டி முடிப்பதற்குள் ஆரஞ்சு கேப் நாயகனும், ஆர்சிபியின் தற்போதைய விடிவெள்ளியுமான டுப்ளெஸ்ஸி அவுட். இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட். அடுத்த பந்திலேயே கோலியும் ஸ்டம்பிங் முறையில் அவுட். 128 ரன்கள் டார்கெட் என்பதிலிருந்து சட்டென பழைய 49 ரன்கள் வரலாறு ஆர்சிபிக்கு நினைவுக்கு வந்தது.

RCB vs KKR

49ஐக் கடக்க வேண்டும், வெற்றியும் பெற வேண்டும் என்கிற மிகப்பெரிய பொறுப்புடன் ஆடத் தொடங்கினர் ரூதர்ஃபோர்டும், வில்லியும். சவுத்தி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் எல்லாம் பந்தைத் தொடக்கூட முயலவில்லை ரூதர்ஃபோர்டு. பவர்பிளே முடிவதற்குள் இனியொரு விக்கெட் விழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

ஆட்டத்தின் முதல் திருப்புமுனை ரஸல் ரூபத்தில் வந்தது. ஷபாஷ் அஹமதுக்கு ஒரு நோபால் வீசினார். ஃப்ரீஹிட்டில் கூட சிங்கிள்தான் தட்டுவேன் என்கிற நிலைப்பாட்டில் இருந்த ரூதர்ஃபோர்டு அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் சிங்கிள் தட்டினார். ஷபாஷுக்கு ரஸல் ஷார்ட் பால் வீச, இடது கை பேட்ஸ்மேனான அவர் அதை மிக எளிதாக சிக்ஸருக்கு விளாசினார். மீண்டும் ஒரு ஷார்ட் பால் , ஈஸியாய் இருக்கிறதே என மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் ஷபாஷ். வந்த வேலை முடிந்துவிட்டதென ஸ்டம்பிங் ஆகி ஷபாஷ் கிளம்ப, போட்டியை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தத்துடன் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக்.

Umesh Yadav | RCB vs KKR

சவுத்தி வீசிய பந்து இன்சைட் எட்ஜாக உள்ளே செல்ல, அதை அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் ஜாக்சன். ஸ்டம்பிங், கேட்ச் என மின்னல் வேகக் கீப்பராக உருவெடுத்து வருகிறார் ஜாக்சன். ஹசரங்கா ஒரு பவுண்டரி அடிக்க, அது போதும் என நினைத்து அவுட்டாக, 12 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பெங்களூரு.

வெங்கடேஷ் வீசிய பந்தில் சிங்கிளுக்குத் தட்டிவிட முயன்றார் கார்த்திக். ஆனால், மோசமான ஜட்ஜ்மென்ட் காரணமாக இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நின்றுவிட்டனர். எதிர்பாராத விதமாக ரன்அவுட் செய்யும் தருணத்தில் சொதப்பல் ஃபீல்டிங் செய்தது கொல்கத்தா. தப்பிப்பிழைத்த தினேஷ், ரஸல் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து தன் முந்தைய அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
Tim Southee | RCB vs KKR

கடைசி ஐந்து ஓவர்களில் தோனியின் அமைதியை தினேஷ் கார்த்திக்கிடம் காண்கிறேன் என எமோஷனலாய் பேசினார் டுப்ளெஸ்ஸி. பாஸ் பாஸ் ஒரு போட்டிதான் ஜெயிச்சிருக்கோம். ஃபீலிங்கஸ் கண்ட்ரோல் பண்ணுங்க, அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு யாருக்கும் தெரியாது என ஆர்சிபி ரசிகர்களே அலறியிருக்கக்கூடும்.

நான்கு விக்கெட்டுகளை கைபற்றிய ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் இரண்டுமே பெங்களூரு அணியிடம்தான் இருக்கிறது என்பதைவிடவா பெங்களூரு ரசிகர்களுக்குச் சிறப்பான செய்தி ஒன்று இருக்கிறது.


source https://sports.vikatan.com/ipl/royal-challengers-bangalore-somehow-managed-to-win-against-kolkata-knight-riders

இன்றைய ராசி பலன் | 31/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/31032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 29 மார்ச், 2022

ஜூனியர் வாக்கி டாக்கி

“யோவ்... கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி!” - உத்தரவிட்ட உயரதிகாரி...

மேற்கு மாவட்ட மூவர் கூட்டணியில் நம்பர் டூ அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதில் மாவட்டத்தின் சக காக்கிகளே உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக அந்த ஏரியாவின் பெரிய அதிகாரி, மாவட்ட அதிகாரி, இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரின் வசூல் வேட்டையைக் கண்டு ஆளுங்கட்சியினரே மிரண்டுபோயிருந்தார்கள். தவிர, அந்த இன்ஸ்பெக்டர் சீனியாரிட்டியை மீறி முக்கியமான இடத்தில் அமரவைக்கப்பட்டதிலும் சக காக்கிகள் அதிருப்தியில் இருந்தார்கள். இந்த நிலையில்தான், பெரிய அதிகாரிக்குச் சகலமுமாக இருந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டர் “ஐயா, அவர் பார்த்த வேலை எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்... பொறுப்பை என்கிட்ட கொடுத்துடுங்க” என்று மேலதிகாரியிடம் தூதுவிட, “யோவ்... ஏகப்பட்ட புகார் நம்ம மேல போயிருக்கு. கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசி...” என்று உத்தரவு வந்திருக்கிறதாம்!

கடலை மிட்டாய் ஊரில் கள் விற்பனை! - தனிப்படை விசாரணையில் அம்பலமான டீல்...

தூத்துக்குடி மாவட்டத்தின் ‘கடலை மிட்டாய்’ ஊர் உட்கோட்டத்தில் கள் விற்பனை கனஜோராக நடந்ததை அடுத்து, விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் ஒரே நாளில் நான்கைந்து கள் விற்பனை கும்பல்களைத் தனிப்படையினர் பிடித்தனர். அப்போது கள் விற்பனையாளர்களோ, “சார், மாசம் பத்தாயிரம் ரூபாயும், ஒரு கேஸும் கொடுக்குறோம்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டுதானே தொழில் செய்யுறோம். அப்புறமும் எங்களைப் பிடிக்குறது நியாயமா?” என்று கேட்டிருக்கிறார்கள். இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில், அந்த ஏரியாவில் பனைமரம் அதிகமுள்ள காவல் நிலையத்தினர் இவர்களிடம் டீல் போட்டுள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விரைவில் நடவடிக்கை பாயும் என்கிறார்கள் காக்கிகள்!

“ஐ.ஜி எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்!” - சவடால்விடும் வசூல் அதிகாரி...

அரியலூர் மாவட்டத்தில் ‘வெற்றிபெற்ற’ ஏரியா அதிகாரியின் வசூல் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று பல்வேறு தரப்பினரும் புலம்புகிறார்கள். அவரது எல்லைக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை நேரடியாக விசாரிக்கிறேன் என்று சொல்பவர், இரு தரப்பினரிடமும் கட்டப்பஞ்சாயத்து செய்து, லட்சங்களைக் கறந்துவிடுகிறாராம். இப்படித்தான் சமீபத்தில் கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் பெரும் தொகையை வசூலித்தவர், அவர்மீது புகார் கொடுத்தவரை கடுமையாக மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, அந்தப் புகார்தாரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். அப்படியிருந்தும் அதிகாரி மீது நடவடிக்கை இல்லை. கேட்டால், “ஐ.ஜி எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட். என்னை அசைக்க முடியாது!” என்று சவடால்விடுகிறாராம் அதிகாரி!

டிரான்ஸ்ஃபர்... டிரான்ஸ்ஃபர்... டிரான்ஸ்ஃபர்... - மாவட்டத்தை ரவுண்ட் அடித்த எஸ்.ஐ!

விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடி காவல் நிலையத்தின் எஸ்.ஐ அவர். மணல் கொள்ளை, சட்டவிரோத லாட்டரி, ரெளடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட விஷயங்களில் கரைதேர்ந்த இந்த எஸ்.ஐ மீது புகார் வராத நாளே இல்லை என்கிறார்கள் சக காக்கிகள். பல ஆண்டுகளாக இவர் இதே வேலையைச் செய்ய... ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் இவரை ஒவ்வொரு காவல் நிலையமாகத் தூக்கியடித்திருக்கிறார்கள். இப்படியே கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான காவல் நிலையங்களுக்கும் அந்த எஸ்.ஐ ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார். தற்போது கடைக்கோடி காவல் நிலையத்திலும் மணல் கொள்ளை வசூல் விவகாரத்தில் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆக... “சார்... எத்தனை முறைதான் அவரை டிரான்ஸ்ஃபர் செய்வீங்க... சஸ்பெண்ட் பண்ணிடுங்க” என்று காக்கிகள் சிலர் பரிந்துரைத்தனர். அதற்கு, “சஸ்பெண்ட் செய்யறதா இருந்தா, முதல்லயே செஞ்சுருக்க மாட்டோமா... பங்கெல்லாம் சரியா கொடுத்துடுறார். ஆனா, அடக்கி வாசிங்கனு சொன்னா மட்டும் கேட்க மாட்டேங்குறாரு” என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள் தரப்பில்!

கமிஷன் சீஸன்... - கொண்டாடும் ஊத்தங்கரை காக்கிகள்!

பங்குனி மாதம் என்பதால், பல்வேறு கிராமங்களிலும் திருவிழா சீஸன் களைகட்டிவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காக்கிகள் இதை ‘கமிஷன் சீஸன்’ என்று சொல்லி கொண்டாடுகிறார்கள். கிராமத் திருவிழாக்களில் பெரும்பாலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் நடனமாடுவதை அனுமதிக்க நிகழ்ச்சிக்கு ஏற்ப ஊத்தங்கரை காக்கிகள் பத்தாயிரம் ரூபாய் வரை வசூலித்துவிடுகிறார்கள். இதையடுத்து, கோயில் திருவிழா கமிட்டியினர், தங்களது விழா பட்ஜெட்டில் காவல்துறைக்கு என்றே தனியாக ஒரு பட்ஜெட்டை ஒதுக்கிவிடுகிறார்களாம். சமீபத்தில், ஒரு கிராமத்தில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு இப்படிப் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்த காக்கிகள், மஃப்டியில் முதல் வரிசையில் உட்கார்ந்து முழு நிகழ்ச்சியையும் ரசித்துவிட்டே சென்றிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/junior-walkie-talkie-police-atrocities-56

`தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பு!’ - எழும் கோரிக்கைகள்... என்ன காரணம்?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான நீ.குமார் கடந்த ஆண்டு பணி ஓய்வுபெற்றார். அடுத்த துணைவேந்தர் நியமனத்திற்கான அறிவிப்பை நவம்பர் 21-ம் தேதி பல்கலைக்கழகத் தேர்வு கமிட்டி வெளியிட்டது. தமிழக அரசின் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தகுதியுடையவர்களைத் தேர்வுசெய்து, அதில் மூன்று பேராசியர்கள் பட்டியலை ஆளுநருக்கு தேர்வு கமிட்டி அனுப்ப வேண்டும். அதிலிருந்து தமிழக ஆளுநர் தேர்வுசெய்யும் நபரே துணைவேந்தராக நியமிக்கப்படுவார்.

துணைவேந்தர் நியமனத்திற்கான அரசாணை அறிவிப்பை 2018-ம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், ஒரு பேராசிரியர் குறைந்தது ஐந்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேல் வழிநடத்தியிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 19 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

வேளாண் பல்கலைக்கழகம்

அவற்றில் கோயம்புத்தூர், மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டும்தான் ஆராய்ச்சிப் படிப்பு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு இல்லை. முதுகலைப் பட்டப்படிப்பு வரை மட்டுமே கொண்டுள்ள இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் துணைவேந்தர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை உருவானது. அதனால், திருச்சியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அடுத்த துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்வை நடத்தி முடித்து, தற்போது துணைவேந்தரையும் நியமித்துவிட்டது பல்கலைக்கழகம். அது ஒரு சார்பாக இருப்பதாக வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் குமுறல் எழுந்துள்ளது. அரசாணை எண் 135-ல் ஒரு பேராசிரியர் பத்து ஆய்வுக் கட்டுரைகள் தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (National Academy of Agricultural Sciences) பதிப்பித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பதிப்பிக்க, குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும். எனவே, தற்போது பத்து ஆய்வு கட்டுரைகளைப் பதிப்பித்திருக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை மாற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.

இது குறித்து திருச்சியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர், ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "2018-ல் வெளியிட்ட அரசாணை எண் 135 படி பார்த்தால், ஐந்து முனைவர் படிப்பு மாணவர்களை வழிநடத்தியிருக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், திருச்சியில் முனைவர் படிப்பே இல்லை. கோயம்புத்தூர், மதுரையில் உள்ள கல்லூரிகளில் தான் உள்ளது. எங்கள் அனுபவத்தை வைத்தோ, தகுதியை வைத்தோ மதிப்பீடு செய்து அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்கான வேலைகளை அரசு தொடங்கிவிட்டது. இது மற்ற பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் பல்கலைக்கழகம்

இது குறித்து கோவை வேளாண் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரிடம் பேசியபோது, "என்னதான் நாங்கள் கோவையிலேயே பணியாற்றினாலும், நிர்வாகத்திற்கு நெருக்கமான விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு மட்டுமே முனைவர் பட்ட மாணவர்களை வழிகாட்ட வாய்ப்பு வழங்கப்படும். ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை பதிப்பிப்பதற்கு குறைந்தது ஆறு முதல் ஏழு வருடங்களாவது ஆகும். முன்பெல்லாம் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பித்திருந்தாலே போதுமானது. தற்போது அதை பத்து என உயர்த்தியது எங்களுக்கு பாதகமாக இருக்கிறது" என்று கூறினார்.

இது தவிர விருப்ப ஓய்வுபெறும் பேராசிரியர்களின் மாணவர்களை தமது ஆராய்ச்சி மாணவர்களாக அபகரித்து, தமது தகுதிகளை அதிகரித்துக்கொள்வதாக மதுரை வேளாண் கல்லூரி உழவியல் துறையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தங்கள் நாஸ் ( NAAS) மதிப்பெண்களை உயர்த்துவதற்காக மாணவர்களின் படிப்பை அவர்கள் நீட்டிப்பது நடந்துள்ளது. இதனால், மூன்று வருட ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க, அந்த மாணவர்களுக்கு நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகின்றன. இதில் பல மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். சிலர் விருப்பப்பட்டு முனைவர் படிப்பில் சேர்ந்து, இந்தக் காரணத்தால் படிப்பின் மீதுள்ள ஆர்வம் போய், போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயாராகி, படிப்பை முடிப்பதற்குள் வேறு வேலை வாங்கிச்சென்று விடுகின்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 90 விழுக்காடு மாணவர்களுக்கு தேர்வில் ஃபெயில் போட்டதிலிருந்து, பல துறைகளை ஆரம்பித்து அதை நடத்த முடியாமல் இறுதியில் கைவிட்டது வரை பல சர்ச்சைகளை பல்கலைக்கழகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. தற்போது துணைவேந்தர் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவசர அவசரமாக துணைவேந்தரை நியமிக்கும் பல்கலைக்கழகம், கடந்த 10 வருடங்களாக ஓர் ஆசிரியரைக்கூட நியமிக்கவில்லை. கடைசியாக காலிப் பணியிடங்களில் நியமனம் நடைபெற்றது 2014-ம் ஆண்டில்தான். பின்னர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆறு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவச் சேர்க்கையும் நடைபெற்றுவிட்டது. ஆராய்ச்சிப் படிப்பு முடித்து தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற வேளாண் பட்டதாரிகளே 800 பேர் அரசுப் பணிக்காகக் காத்திருக்கிறார்கள்.

வேளாண்மையில் பள்ளிக்கல்வி முடித்தவுடன் முனைவர் பட்டம் பெற குறைந்தது ஒன்பது வருடங்களாவது ஆகும். அதிலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தகுதித்தேர்வு மற்றும் யூ.ஜி.சி நடத்தும் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றால் தான் துணைப் பேராசிரியர் பணிக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும். இவற்றை பூர்த்தி செய்ய ஒருவருக்கு 27 வயது வரை ஆகும். கடந்த பத்து வருடங்களாக காலிப்பணியிடங்களை நிரப்பாதது, அந்த மாணவர்களின் ஒன்பது வருடக் கல்லூரி வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

இன்னொரு பிரச்னை. 2020 கோவிட் தொற்று காரணமாக வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற்றது. அப்போது ஒரு சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிர்வாகம் நிறுத்திவைத்திருந்தது. காரணம், ஆன்லைன் தேர்வில் அவர்கள் முறைகேடு செய்ததாகவும், அதனால் அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழகம்

அதே சமயத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் முதுகலைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வும் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற பல மாணவர்களால், தங்களால் விரும்பிய கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கச் செல்ல முடியவில்லை. காரணம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் மாணவி ஒருவர், "பூச்சியியல் துறையில் ஆல் இந்தியா ரேங்க் எடுத்து நாக்பூரில் எனக்கு இடம் கிடைத்தது. ஆனால், எங்க யுனிவர்சிட்டியில் மார்க் ஷீட் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தாங்க. இதனால், என்னுடைய சீட்டை அங்கு கேன்சல் செய்துட்டாங்க. இதுபோல, பத்துப் பேருக்கு சீட் கிடைத்தும் படிக்கமுடியாமல் போய்விட்டது" என்றார் வேதனையுடன்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடங்கள் மட்டுமே மற்ற மாநிலங்களின் நுழைவு தேர்வுகளில் கேட்கப்படும். ஆனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கணக்கு, பொது அறிவு போன்ற பாடங்களும் இருக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைத்திந்திய வேளாண் நுழைவுத் தேர்வுக்காக தனியாகவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்காக தனியாகவும் படிக்க வேண்டிய சிரமமும் உள்ளது. தேர்வு எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டிலும், தேர்வு எப்போது நடத்தப்படுகிறது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது என்கிறார்கள் மாணவர்கள். அனைத்து இந்திய வேளாண் நுழைவுத்தேர்வு நடந்து, அதன் முடிவுகள் வெளியாகி, கவுன்சிலிங் நடந்த பின்னர்தான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வுகளே வைக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய நுழைவு தேர்வின் போதே தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

வேளாண் பல்கலைக்கழகம்

இதனால், மற்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், பாதியிலேயே அங்கு படிப்பை விட்டுவிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படிச் சென்று சேர்ந்தாலும் கூட ஆரம்பத்தில் சேர்ந்த கல்லூரியில் செலுத்திய கட்டணமும் திருப்பி கிடைப்பதில்லை. இதனால், பல மாணவர்களால் மேற்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடர முடியவில்லை.

இது குறித்து கோவை வேளாண் கல்லூரியில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "எனக்கு ஆரம்பத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் துறையில் இடம் கிடைத்தது. ஆனால், எனக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமென்பது விருப்பம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழித்து, கோவை வேளாண் கல்லூரியில் நுழைவுத்தேர்வுகள் நடைபெற்றன. அதில் எனக்கு கோவையிலேயே நான் விரும்பிய துறையில் இடம் கிடைத்தது. ஆனால், நான் ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 70,000 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டேன். அந்தப் பணம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், அதை எதிர்பார்க்காமல் அங்கிருந்து விலகி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் வசதியான குடும்பம் என்பதால் எனக்குப் பிரச்னை இல்லை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்ன செய்வார்கள்?” என்று கேள்வியெழுப்பினார் அந்த மாணவர்.

மேலும், நுழைவுத்தேர்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றனர் என்பது தேர்வு முடிவுகள் வரும்போது தெரிவிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், எந்தெந்த மாணவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள் என்பது மட்டுமே தெரியவரும். மதிப்பெண், ரேங்க் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.

வேளாண் பல்கலைக்கழகம்

இப்படியாக ஏராளமான பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும்... மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வேளாண் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு செயல்படுவதைப் போல, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் ஓர் அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/teachers-and-students-demand-state-government-to-create-a-body-to-control-tnau

Wedding-ல நீங்க தனியா தெரியணுமா? Affordable Party Outfits | Grand Function Dresses | Shopping Vlog



source https://www.vikatan.com/lifestyle/fashion/affordable-party-outfits-shopping-vlog

திண்டிவனம்: பத்திரப்பதிவு செய்ய ரூ.50,000 லஞ்சம்; பொறுப்பு சார்பதிவாளர் உட்பட இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் அருகே செயல்பட்டு வருகிறது இணை சார்பதிவாளர் அலுவலகம். திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தன்னுடைய தந்தை தேவதாஸ் பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக இந்த அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, பொறுப்பு சார் பதிவாளர் சங்கரலிங்கம், பத்திரப்பதிவு செய்யவதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் - விழுப்புரம்

இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நேற்றைய தினம் (29.03.2022) திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார் பிரகாஷ்.

பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சமாக கேட்கப்பட்டதாக கூறப்படும் 50,000 ரூபாய் பணத்தை பொறுப்பு சார் பதிவாளர் சங்கரலிங்கத்திடம், பிரகாஷ் கொடுத்த போது, பத்திர எழுத்தர் சரவணனிடம் கொடுக்கும்படி கூறினாராம். அதன்படி, சரவணன் மூலமாக பொறுப்பு சார் பதிவாளருக்கு அந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பொறுப்பு சார்பதிவாளர் சங்கரலிங்கத்தையும், உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர் சரவணனையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லஞ்சம்

இந்த விசாரணை, மாலை நேரம் வரை நீடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவ்விருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். இந்த அதிரடி நடவடிக்கையால், நேற்றைய தினம் அந்த அலுவலகத்தில் நடைபெற இருந்த பத்திரப்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களிலேயே பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் சங்கரலிங்கம், லஞ்சம் பெற்று, லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/social-affairs/crime/two-persons-arrested-for-bribery-in-tindivanam

SRH vs RR: பவர்ப்ளேயிலேயே ஆட்டத்தை முடித்த ராஜஸ்தான்; கடந்த சீசனின் ஹேங்ஓவரோடு தள்ளாடும் சன்ரைசர்ஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஒன்சைடு மேட்ச்சாக முடிந்திருக்கிறது. சகலவிதத்திலும் சன்ரைசர்ஸை புரட்டியெடுத்த ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானுக்கு இவ்வளவு பெரிய வெற்றி எப்படிக் கிடைத்தது? சன்ரைசர்ஸ் எங்கே சறுக்கியது?

சமீபத்திய டி20 மற்றும் இந்த ஐ.பி.எல் தொடரின் ட்ரெண்ட்படி டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான வில்லியம்சன் பந்துவீச்சையே தேர்வு செய்தார். இன்றைய நாளில் சன்ரைசர்ஸுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்த டாஸ் வெற்றிதான். அதன்பிறகு அத்தனையும் சோகங்களே.

புவனேஷ்வர் குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் பட்லரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். சன்ரைசர்ஸ் சார்பில் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசியிருந்தார். 'பார்ப்பதற்கு நியூசிலாந்து விக்கெட்டை போன்றே இருக்கிறதா கேன்?' என டாஸின் போது பிட்ச் குறித்து வில்லியம்சனிடம் டேனி மோரிஸன் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கான பதிலாக புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவர் அமைந்தது. தொடர்ந்து அவுட் ஸ்விங்குகளாக வீசி செட் செய்துவிட்டு ஒரு இன்ஸ்விங்கை புவி வீசியிருப்பார். அந்த முதல் நான்கு பந்துகளில் 2013-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகமான இளம் புவனேஷ்வர் குமாரின் கைகளிலிருந்து சீறி வந்ததை போன்று இருந்தது. அந்த நான்கு பந்துகளிலுமே பட்லர் Beaten ஆனார். அடுத்த 5 வது பந்து, அது ஒரு அவுட் ஸ்விங்கர். அடித்தே தீருவேன் என பட்லர் பேட்டை விட எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அற்புதமான செட்டப், அற்புதமான ஸ்விங், அற்புதமான விக்கெட். அற்புதம் நிகழ்ந்து முடிப்பதற்குள்ளேயே அந்த ட்விஸ்ட்டும் நிகழ்ந்து முடித்தது. அது ஒரு நோ-பால்! பட்லர் மீண்டும் க்ரீஸுக்குள் வந்துவிட்டார். மிகப்பெரிய விக்கெட் மிஸ் ஆனது. இதன்பிறகு, ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

புவனேஷ்வர் குமார் ஒரு நோபாலோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரிலும் ஒரு நோபால் வீசினார். புவி மட்டுமில்லை. உம்ரான் மாலிக், ஏன் வாஷிங்டன் சுந்தர் கூட நோ-பால் வீசியிருந்தார்.
Butler

'ஸ்பின்னர்கள் நோ-பால் வீசுவெதெல்லாம் மாபெரும் குற்றம்' என கமென்ட்ரி பாக்ஸில் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணனும் டேனி மோரிஸனும் கண்டனக்குரல்களை எழுப்பியிருந்தனர். பௌலர்கள் இப்படிச் சொதப்பினால் கேப்டன் வில்லியம்சன் இன்னும் அதிகமாக சொதப்பினார். பவர்ப்ளேயின் 6 ஓவர்களில் மட்டும் 5 பௌலர்களை பயன்படுத்திவிட்டார். 2வது ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்துவிட்டு, குறிப்பாக நோ-பால் எதையும் வீசாமலிருந்த செஃப்பர்ட்டை அந்த ஒரே ஓவரோடு கட் செய்ததற்கான காரணமே புரியவில்லை. 7வது ஓவரில் மீண்டும் வந்து முதல் பந்திலேயே ராஜஸ்தானின் முதல் விக்கெட்டை அவர்தான் வீழ்த்திக் கொடுத்திருந்தார்.

சன்ரைசர்ஸின் இந்தக் களேபரங்களை பட்லரும் யாஷஸ்வியும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். முதல் 2 ஓவர்கள் தடுமாற்றத்திற்குப் பிறகு தடையே இல்லாமல் அடித்து வெளுத்தனர். உம்ரான் மாலிக் 150+ கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளிலெல்லாம் பட்லர் அசால்ட்டாக ரேம்ப் ஷாட் ஆடியிருந்தார். உம்ரான் மாலிக்கின் ஒரே ஓவரில் 21 ரன்களும், பவர்ப்ளேயில் நன்றாக வீசும் வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 18 ரன்களையும் எடுத்து சரமாரியாகத் தாக்கியிருந்தனர்.

பவர்ப்ளேக்குப் பிறகு, 35 ரன்களில் பட்லரும் 20 ரன்களில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அவுட் ஆகி வெளியேறினர். இவர்கள் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை அடுத்தடுத்த வீரர்கள் அப்படியே சிறப்பாகத் தொடர ராஜஸ்தானின் ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. சீசனின் தொடக்கத்தில் நடக்கும் போட்டிகளில் அடித்து வெளுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் இங்கேயும் பிரித்து மேய்ந்தார். குறிப்பாக, ஸ்பின்னர்களைக் குறிவைத்து அடித்தார். நிதானமின்றி வந்த வேகத்தில் பெரிய ஷாட்களை ஆடி அவுட் ஆகிறார் என்கிற குற்றச்சாட்டு சாம்சனின் மீது நீண்டகாலமாக உண்டு. இதை சரி செய்யும் வகையில் கடந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் முதல் 10 பந்துகளில் பெரிதாக அட்டாக் செய்யாமல் நின்று ஆடி செட்டில் ஆகிவிட்டு அதன்பிறகு அதிரடி காட்டுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டார். இது அவருக்கு நல்ல ரிசல்ட்டையும் கொடுத்தது. அவருடைய கரியரின் சிறப்பானதொரு தொடராக கடந்த சீசன் மாறியது. அதே பாணியை இந்த முறையும் தொடர்வாரா எனும் எதிர்பார்ப்பு இருந்தது.

Samson

அந்தப் பாணியை சாம்சன் தொடரக்கூடாது என்பதில் எதிரணி கேப்டன் வில்லியம்சன் உறுதியாக இருந்தாரோ என்னவோ, பவர்ப்ளேயில் 5 பௌலர்களை பயன்படுத்திவிட்டு பவர்ப்ளே முடிந்தவுடனேயே பார்ட் டைமரான அபிஷேக் சர்மாவையும் அழைத்து வந்தார். இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்த சாம்சன் அந்த 10 பந்து பாலிசியையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு இறங்கியடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் வந்திருந்தன. ஸ்பின்னர்களைக் குறிவைத்து அடித்தார். வாஷிங்டன் சுந்தரையும் விட்டு வைக்கவில்லை. அவர் ஓவரில் 10 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்திருந்தார். இதில் 3 சிக்சர்களும் அடக்கம். வாஷிங்டன் ஓவரில் அடித்த சிக்சரோடுதான் அரைசதத்தையும் கடந்தார்.

சாம்சன் அடித்த ஷாட்களில் 81% ஷாட்களைத் துல்லியமாக அடித்திருந்தார். ஒரு பந்தில் எஜ்ஜோ மிஸ்டைம் ஷாட்டோ அடித்திருக்கவில்லை, அவுட் ஆன அந்த ஒரு பந்தை தவிர!

இன்னொரு முனையில் சாம்சனுக்கு ஆதரவாக படிக்கலும் நன்றாக ஆடினார். பெங்களூரு அணிக்காக ஓப்பனிங்கிலேயே இறங்கி பழக்கப்பட்ட படிக்கல் இங்கே மிடில் ஆர்டரில் இறங்கினார். எப்படி ஆடுவாரோ என்னும் சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் போக்கும் வகையில் மிகச்சிறப்பாகவே ஆடியிருந்தார். சாம்சன் ஸ்பின்னர்களை பறக்கவிட, படிக்கல் வேகப்பந்து வீச்சாளர்களை பறக்கவிட்டார். செஃப்பர்டின் ஒரே ஓவரில் மட்டும் 17 ரன்களை அடித்திருந்தார். ஓப்பனிங்கில் பட்லர், ஜெய்ஸ்வால் அடித்து வெளுக்க மிடில் ஓவர்களில் அந்த பணியை அப்படியே தொய்வில்லாமல் சாம்சனும் படிக்கலும் செய்திருந்தனர். டெத் ஓவர்களில் இந்த பேட்டன் ஹெட்மயரின் கைக்குச் சென்றது. அவரும் எந்தவித தடுமாற்றமும் இன்றி அத்தனை பௌலர்களையுமே சிறப்பாக எதிர்கொண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.

ஒரு பேட்டிங் யுனிட்டாகவே ராஜஸ்தான் மொத்தமாகச் சிறப்பாக செயல்பட அந்த அணி 20 ஓவர்களில் 210 ரன்களை எட்டியிருந்தது.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸின் பேட்டிங் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தாலும் பௌலிங் ஓரளவுக்கு டீசண்ட்டாகவே இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் பௌலிங்கிலும் எக்கச்சக்க ஓட்டைகள். அடிப்படையான விஷயத்தில் கூட சரியாக இல்லாமல் நோ-பாலாக வீசி தள்ளினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இருவருமே சொதப்பவே செய்தனர். நடராஜன் கடைசி ஓவரில் ஸ்டம்புகள் சிதற வீசிய யார்க்கரிலிருந்த துல்லியம் அவரது ஸ்பெல் முழுவதும் இருந்திருக்க வேண்டும்.

போல்ட்

இந்த சீசனில் இதுவரை நடந்திருக்கும் போட்டிகளில் சேஸிங் செய்திருக்கும் அணிகளே வென்றிருக்கின்றனர். அந்த வழியில் சன்ரைசர்ஸும் எதாவது மேஜிக் செய்து சேஸிங்கில் பட்டையை கிளப்புமோ என்ற எதிர்பார்ப்பெல்லாம் இருந்தது. ஆனால், அதற்கெல்லாம் அப்படியே தலைகீழாக நடந்தது. கடந்த சீசனில் பேட்டிங்கில் எப்படியிருந்தார்களோ அதை அப்படியே இங்கேயும் தொடர்ந்ததை போல இருந்தது.

211 ரன்களை சேஸ் செய்த போது பவர்ப்ளேயில் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். மூன்று முக்கிய விக்கெட்டுகளையுமே இழந்திருந்தனர். கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் முறையே 2, 0, 0 என சொற்ப ரன்களில் அவுட் ஆகியிருந்தனர். அங்கேயே சன்ரைசர்ஸின் தோல்வி உறுதி செய்யபட்டுவிட்டது.

சன்ரைசர்ஸுக்கும் ராஜஸ்தானுக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்தது அவற்றின் பவர்ப்ளே பௌலிங் பெர்ஃபார்மென்ஸ்களே. சன்ரைசர்ஸின் பௌலர்கள் அடிப்படை விஷயத்தில் கூட கோட்டை விட்டிருந்தனர். பௌலர்களைச் சரியாகக் கையாளாமல் வில்லியம்சன் ஏமாற்றியிருந்தார். அதேநேரத்தில், ராஜஸ்தானின் பவர்ப்ளே பெர்ஃபார்மென்ஸோ நூற்றுக்கு நூறு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சன்ரைசர்ஸை போல பவர்ப்ளேயில் எந்த பௌலரை வீச வைக்க வேண்டும் என்ற குழப்பம் ராஜஸ்தானுக்கு இருந்திருக்கவில்லை. ட்ரெண்ட் போல்ட் 3 ஓவர்கள், பிரஷித் கிருஷ்ணா 3 ஓவர்கள் என இரண்டே இரண்டு பௌலர்கள் மட்டுமே பவர்ப்ளேயில் வீசியிருந்தனர். இரண்டு பேருமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். குட் லெந்த்தில் ஒரு லைனைப் பிடித்துக் கொண்டு தொடர்ச்சியாக அதிலேயே வீசிக்கொண்டிருந்தனர். பிரஷித் கிருஷ்ணாவெல்லாம் ஒரு பந்தை கூட ஸ்லாட்டில் வீசியிருக்கவில்லை. போல்ட் நல்ல குட் லெந்தில் வீசி செட் செய்துவிட்டு ஃபுல் லெந்த்தில் இறக்கியிருந்தார்.

பிரசித் கிருஷ்ணா
பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டையும் பவர்ப்ளேயில் வீழ்த்தியிருந்தனர். விக்கெட்டுகள் அளவுக்கு எக்கானமிக்கலாகவும் வீசியிருந்தனர். அதுதான் பவர்ப்ளேயிலேயே ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்று ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பிரசித் கிருஷ்ணா வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். போல்ட் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

ராஜஸ்தான் இதன்பிறகு வீசிய ஓவர்களெல்லாம் வெறும் சம்பிரதாயத்துக்குதான். சன்ரைசர்ஸ் அடித்த ரன்கள் வெறும் ஆறுதலுக்குத்தான். எய்டன் மார்க்ரம் அரைசதம் அடித்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் வெறியாட்டம் ஆடியிருந்தார். ஆனால், இதெல்லாம் தோல்வி உறுதி எனத் தெரிந்தபிறகு அரங்கேறியதுதான் சோகமே!

ஒரு அணியாக ஒட்டுமொத்தமாகவே சிறப்பாகச் செயல்பட்டு ராஜஸ்தான் மிரட்டியிருக்கிறது. சன்ரைசர்ஸ் இன்னமும் கடந்த சீசனின் ஹேங்ஓவரிலிருந்தே மீளவில்லை. சீக்கிரமே விழித்துக் கொண்டால் சேதாரங்கள் குறையலாம்!


source https://sports.vikatan.com/ipl/rajasthan-royals-outplayed-sunrisers-hyderabad-with-their-complete-performance