Ad

சனி, 31 அக்டோபர், 2020

சென்னை: இந்த வருடம் வெள்ளம் உறுதியா... உண்மை நிலவரம் என்ன?

சென்னை பெருவெள்ளம்

கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைச் சென்னை மக்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள யாருமே அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற காயம் அப்படிப்பட்டது. அதன் வடு பல இடங்களில் இன்னும் மறையவே இல்லை. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் பிரதான காரணமாகக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில், ``தண்ணீர் திறந்துவிடப்பட்டது உண்மைதான். இல்லையென்றால், அணை மொத்தமும் உடைத்திருக்கும்'' என்று கூறப்பட்டது. அதோடு, ``ஏரியில் தண்ணீர் திறந்துவிட்டது வெள்ளத்துக்குக் காரணம் இல்லை. திறந்துவிடப்பட்ட தண்ணீரோடு பெய்த மழைநீரும் ஒன்றாகச் சேர்ந்து வெள்ளமாக மாறியது'' என்று ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

சென்னை பெருவெள்ளம்

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உண்ண உணவில்லாமல், உறங்க இடமில்லாமல், உடுத்த உடையில்லாமல் அவதிப்பட்டனர். அது நடந்து முடித்த கதை. தவிர, அது குறித்து நிறைய பேசிவிட்டோம். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழையில், சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை உட்பட பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றது.

Also Read: சென்னை மழை: வெள்ளக்காடான சாலைகள்.. மூழ்கிய மைதானம்.. மிதந்த வாகனங்கள்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே இந்தநிலையென்றால், தொடர்ச்சியாக மழை பெய்தால் சென்னை என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்துவரும் சென்னை மக்களுக்கு மற்றுமொரு அபாயத்தைச் சந்திக்கும் வலிமை இல்லை. மழைக்காலம் வருவதை முன்கூட்டியே சிந்தித்து, இந்நேரம் அரசு மழைநீர் வடிகால்கள் திட்டத்தைச் செயல்படுத்தி முடித்திருக்க வேண்டும். தாமதத்துக்கு, `கொரோனா பேரிடர் காரணம்’ என்று சொல்வார்கள் அரசு அதிகாரிகள்.

சென்னை அண்ணா சாலை

ஆனால், 2015-ம் ஆண்டு ஒரு பெரும் வெள்ளத்தைச் சந்தித்த பின்னர் அது போன்று இன்னொரு நிகழ்வு தலைநகரில் நடக்கக் கூடாது என்று 12-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கொண்ட குழுவை உருவாக்கினார்கள். வெள்ள பாதிப்பு , வெள்ளத்துக்கான காரணம் என அனைத்தும் கண்டறியப்பட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தது அந்தக் குழு. அதில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததும், இருக்கும் கால்வாய்களும் செயலிழந்திருப்பதும் கண்டறியப்பட்டது. செயலிழந்துள்ள கால்வாய்களைச் சீரமைக்கவும். அதோடு, சென்னையில் புதிதாக 334 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டவும் அரசுக்குப் பரிந்துரை செய்தது அந்தக் குழு. அதன்படி, 290 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக 200 இடங்களிலும், அதற்குப் பின்னர் மீதமுள்ள இடங்களிலும் என 2019-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் நிறைவடையும் என்று கூறப்பட்டது.

அதன்படி பார்த்தால் தற்போது சென்னை முழுவதும் புதிதாக மழைநீர் வடிகால்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கட்டியிருந்தால், மழை பெய்தபோது அந்த வடிகால்கள் மூலம் மழைநீர் வடிந்து ஓடியிருக்கும். ஆனால், நடந்தது என்னவோ அதற்குத் தலைகீழாக. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிந்திருக்க வேண்டிய பணி, தற்போதுவரை நடந்துகொண்டேயிருக்கிறது. எப்போது நிறைவடையும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சென்னை வெள்ளம்

மேலும் 2015-ம் ஆண்டு அந்தக் குழுஅளித்த அறிக்கையில் முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது, 'நீர்நிலை ஆக்கிரமிப்புகள்.’ அவைதான் வெள்ளத்துக்கான முக்கியமான காரணமாகக் கூறப்பட்டது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி, அடிப்படையிலேயே ஒரு நீர் பிடித்தமுள்ள பகுதி. சென்னையில் மட்டும் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என எண்ணற்ற நீர்நிலைகள் இருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீரோட்டப் பாதைகளும் உள்ளன. ஒரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும்போது அங்கிருக்கும் எந்த நீர்நிலையையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், சென்னையின் பெரும்பாலான விரிவாக்கம் அனைத்துமே நீர்நிலைகளின் மீதுதான் செய்யப்பட்டிருக்கின்றன. `ஹவுஸிங் போர்டு' என்ற பெயரில் நீர்நிலைகளின் மீது அரசே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

முன்பிருந்த சென்னை மாநகரத்தின் நீர்நிலைகளும், தற்போதிருக்கும் அதன் அளவையும் கீழே உள்ள படத்தில் காணலாம். நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் கோட்டை முன்னும் பின்னும் இழுத்தால், அன்றிருந்த நிலைமையையும், இன்றிருக்கும் நிலைமையையும் நீங்கள் காணலாம்.

வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரி

கொன்னூர் குளம்

கொடுங்கையூர் ஏரி

கட்டேரி

வியாசர்பாடி

பெரிய ஏரி

கொரட்டூர் ஏரியின் பரப்பளவு 900 ஏக்கருக்கும் அதிகம். தற்போது, அதில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ராமாபுரம் ஏரியின் பரப்பளவு 27 ஏக்கர். இப்போதிருப்பது ஒரு ஏக்கருக்கும் குறைவு. வில்லிவாக்கம் ஏரியின் அளவு 214 ஏக்கர். தற்போது இருப்பது 30 ஏக்கருக்கும் குறைவு. சிட்லபாக்கம் ஏரியின் பரப்பளவு 80 ஏக்கர், இப்போது இருப்பது 40 ஏக்கர். மதுரவாயல் ஏரி 120 ஏக்கர். தற்போது 25 ஏக்கர் மட்டுமே இருக்கிறது. இவை தவிர ஏரிகள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் கட்டடங்களாக மாறியிருக்கின்றன.

ஐஐடி-யின் வெள்ள அபாய எச்சரிக்கை:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கார்பன் வாயு வெளியேற்றம் அதிகரிப்பதால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையைவிட அதி தீவிரமான மழை இந்த ஆண்டு பொழிய வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதாவது 2015-ம் ஆண்டு பெய்த மழையைவிட 17.37 சதவிகிதம் மழை அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

நீர் மேலாண்மை:

பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று வகைப்படுத்தி நீர் மேலாண்மையைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள் அவர்கள். ஆனால், இன்று நாம் செய்வது என்ன?

புதிதாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உருவாக்கவில்லையென்றாலும் சரி. ஏற்கெனவே இருக்கும் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். கால்வாய்களைக் கழிவுநீர் கால்வாய்களாக மாற்றிவிட்டோம். ரசாயனக் கழிவுகளைவிட்டு நீர்நிலைகளையும், ஏரிகளையும், ஆறுகளையும் நாசம் செய்துகொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் நீர் நிலைகள்

இதற்குத் தீர்வு, சரியான நீர்நிலை மேலாண்மை மட்டுமே. மழைநீர் வடிகால்களைச் சரியாகக் கட்டி முடித்து அவற்றைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய்களைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அது நிரம்பியதும் உபரிநீர் அதுவாகவே வடிந்து வெளியேறிவிடும். இவை அனைத்தையுமே நாம் புதிதாகச் செய்யப்போவதில்லை, ஏற்கெனவே செய்திருந்ததை மீண்டும் இன்றைய தொழில்நுட்பங்களைக் கொண்டு செயல்படுத்தப்போகிறோம். இந்த அனைத்தையும் சரியாகப் பின்பற்றினால், சென்னையில் வெள்ளமும் வராது; வறட்சியும் வராது. இது சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொருந்தும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-real-situation-in-chennai-about-flood

`77 முறை விதிமீறல்; ரூ.42,500 அபராதம்!’ - டூவீலரை போலீஸாரிடமே விட்டுச் சென்ற பெங்களூரு இளைஞர்

பெங்களூருவில் தொடர்ச்சியாகப் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை 42,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டநிலையில், வண்டியை போலீஸாரிடமே விட்டுச் சென்றார் அந்த இளைஞர்.

பெங்களூரு, மடிவாலா போக்குவரத்து போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் அந்த வழியே வந்த அருண்குமார் என்பவரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

மேப்

அருண்குமாரின் டூவீலர் நம்பரை காவல்துறையின் `ஸ்பாட் பைன்’ (spot fine) இயந்திரத்தில் சோதித்து பார்த்தபோது, கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, போக்குவரத்து சிக்னல்களை மீறியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதான 75 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று, பிடிபட்டபோது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் சேர்த்து, மொத்தம் 77 வழக்குகள் அருண்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா விதிமீறல்: போலீஸாரும் இனி அபராதம் விதிக்கலாம்! - தமிழக அரசின் அவசரச் சட்டம் சொல்வது என்ன?

இதையடுத்து, அருண்குமாரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு 42,500 ரூபாய் அபராதத்திற்காண ரசீதை, போக்குவரத்து காவல்துறை அதிகாரி கொடுத்துள்ளார்.

அருண்குமார்

ரசீதைப் பெற்றுக்கொண்ட அருண்குமார், தனது டூவீலரின் மதிப்பு 30,000-த்துக்கும் குறைவே என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தனது டூவீலரை போலீஸாரிடமே விட்டுவிட்டு அருண்குமார் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அபராதம் செலுத்த மறுத்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



source https://www.vikatan.com/news/india/bangalore-man-fined-42500-for-traffic-violation

மனு விவாதங்கள்: `கூக்குரல் எழுப்புவோர் முதலில் அரசமைப்புச் சட்டத்தைப் படிக்கவேண்டும்... ஏன்?'

இன்று தமிழகம் முழுவதும் மனு சாஸ்திரம் பற்றிய விவாதங்கள் சூடுபறக்கின்றன.

`மனு' என்று உண்மையிலேயே ஒருவர் இருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் எழுதியதாகக் கூறப்படும் தர்ம நூலுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. தவிர அறிஞர்கள் பலரும், 'மனு சாஸ்திரம் என்ற பெயரில் பல இடைச்செருகல்கள் உள்ளன; மனு சாஸ்திரம் என்பது சில அறங்களின் கோட்பாடு என்பதைத் தவிர அதற்கு எவ்விதப் புனிதமும் கற்பிக்கத் தேவையில்லை' என்கிறார்கள்.

`இந்துப் பெண்களை திருமாவளவன் அவமதித்துவிட்டார்' என்று கூக்குரல் எழுப்பும் சிலர், முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் படிக்க வேண்டும்.

என்றைக்கு அந்தச் சட்டம் உருவானதோ, அன்றிலிருந்து நம்மை வழிநடத்திச் செல்வது அரசமைப்புச் சட்டம் ஒன்றுதானே ஒழிய வேறு எந்த சாஸ்திரங்களோ புனித நூல்களோ அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மதங்கள் எவையாக இருப்பினும், அவை பெண்களை ஒரு ஜடப்பொருளாகத்தான் நடத்தி வந்திருக்கின்றன. 'சூத்திரர்களையும், பெண்களையும், விலங்கினங்களையும் தொடர்ந்து மத்தளத்தை அடிப்பதுபோல் அடித்துவைத்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லும் மனு சாஸ்திரத்தை, இன்று கலகக்குரல் எழுப்புபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

'சமயம் என்ற பெயரில் ருதுவான பெண்களை சபரிமலை வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியாது' என்ற நடைமுறையை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'பெண்களை வழிபாட்டுத்தலத்திலிருந்து ஒதுக்கிவைப்பது தீண்டாமைக்கு ஒப்பானதே' என்று குறிப்பிட்டுள்ளது.

பிறன் மனை விழைதலைத் தடுக்கும்விதமாக இயற்றப்பட்ட 1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497-ஐ, 2018-ம் ஆண்டு ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், 'பெண்களை ஜடப்பொருளாகவும், சொத்துகளாகவும் நடத்த முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி ஒரு பெண்ணின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறது...

- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவின் இந்த லாஜிக் பார்வையை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3effZpJ > அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா? https://bit.ly/3effZpJ

தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?

அரசியல் மேடையிலிருந்து இறங்கி, இலக்கிய மேடையேறிய நாஞ்சில் சம்பத், மறுபடியும் தி.மு.க ஆதரவாளராக முழங்க ஆரம்பித்திருக்கிறார். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்!

"நீங்கள் சொல்வதுபோல் 'வகுப்புவாத சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுக்கிற' தி.மு.க-வே சமீபகாலமாக இந்து மத ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறதே..?''

"தி.மு.க., மக்களைச் சார்ந்து இருக்கக்கூடிய வெகுஜன இயக்கம். 'நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்' என்று சொன்ன அறிஞர் அண்ணா, பிறகு ஓரடி இறங்கிவந்து 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற நிலைப்பாட்டுடன்தான் மக்களைச் சந்தித்தார். அந்தவகையில் மக்களின் கடவுள் நம்பிக்கையில், வழிபாட்டு அணுகுமுறையில் எந்தவித அத்துமீறலையும் செய்வதற்கு தி.மு.க விரும்பவில்லை."

நாஞ்சில் சம்பத்

"ஆனால், தி.மு.க கூட்டணியிலுள்ள திருமாவளவன், 'மனுஸ்மிருதி' குறித்துப் பேசிய பேச்சு, சர்ச்சையாக்கப்பட்டிருப்பது கூட்டணிக்குப் பாதகம்தானே..?''

"அப்படியில்லை... 1971 சட்டமன்றத் தேர்தலின்போது, 'ராமர் சிலையை செருப்பால் அடித்தார்கள்' என்று கூறி, தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால், அந்தத் தேர்தலில்தான் தி.மு.க 184 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே, மக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். 'நமது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருபவர்கள் யார், உரிமைகளை மீட்டெடுப்பவர்கள் யார்?' என்பதில் மட்டும்தான் மக்களின் கவனம் இருக்கும்.''

> "திருமாவளவன், 'மனுஸ்மிருதி'யைப் பற்றி தற்போதும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?''

> "இந்த விஷயத்தில், திருமாவளவன் மீதான வழக்கைக் கண்டித்துக் குரல் கொடுக்கிற தி.மு.க., மனு ஸ்மிருதிக்கு எதிராக பெரியதாகவோ, நேரடியாகவோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லையே... ஒருவேளை இந்துக்களின் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயமா?''

> "இந்து சமயத்தின் மீதான ஆதரவு நிலைப்பாடு மட்டுமல்ல... சமீபத்தில் '800' திரைப்பட சர்ச்சையின்போதும் ஈழம் விவகாரம் தொடர்பாக எந்தவிதக் கருத்தும் சொல்லாமல் தி.மு.க ஒதுங்கிக்கொண்டதே..?"

> "ஆனால், 'ஈழம் விவகாரத்தில், தி.மு.க அரசு துரோகம் செய்துவிட்டது' என்று கடந்த காலங்களில் நீங்களே பேசியிருக்கிறீர்களே..?''

- இத்துடன் மேலும் சில கேள்விகளுக்கும் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பதில்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mFA0bQ > "மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!" - நாஞ்சில் சம்பத் விளக்கம் https://bit.ly/3mFA0bQ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/general-news/justice-chandru-writes-about-manusmriti-issue-

பா.ம.க-வுடன் தி.மு.க மறைமுகப் பேச்சு...? மனு விவகாரம் மூலம் அதிர்வைக் கிளப்பும் திருமா!

''ஒருநாள் மழைக்கே சென்னை மிதந்துவிட்டதே!'' - ரெயின் கோட்டைக் கழற்றியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

''திருமாவளவன் பேச்சால் தி.மு.க தரப்பு கடும் அப்செட் என்கிறார்களே..?''

''தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து காட்டமாகக் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் விவாதித்திருக்கிறார்கள். 'தேர்தல் நேரத்துல தேவையில்லாம எதுக்காக மனு தர்ம விவகாரத்தை திருமா கையிலெடுக்கணும்... அவர்களைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடலாம்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க' என்று கோபித்திருக்கிறார்கள்.

அவர்களிடம், 'திருமா பேச்சுக்கு நாம் ஆதரவு கொடுக்காவிட்டால், பா.ஜ.க-வுக்கு நாம் பணிந்துவிட்டோம் என்று தகவல் பரப்புவார்கள்' என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். திருமாவின் கொந்தளிப்புக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.''

''என்னவாம்?''

''பா.ம.க-வுடன் தி.மு.க நடத்தும் மறைமுகப் பேச்சுவார்த்தை திருமாவுக்குப் பிடிக்கவில்லை. தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வன்னியர் சமூக தி.மு.க பிரமுகர் ஒருவரிடம், 60 தொகுதிகளில் பேரத்தை ஆரம்பித்து 48 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறதாம் பா.ம.க தரப்பு. தி.மு.க தரப்பில் 15 தொகுதிகளிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 'அதிகம்போனால் தைலாபுரத்துக்கு 20 தொகுதிகளுக்கு மேல் தரக் கூடாது' என்பதிலும் தெளிவாக இருக்கிறது அறிவாலயம்.

பா.ம.க-வைக் கூட்டணிக்குள் இழுத்தால், விடுதலைச் சிறுத்தைகளால் அந்தக் கூட்டணியில் தொடர முடியாது. 'இந்தக் கணக்குகள் தெரிந்ததால்தான் மனுதர்ம விவகாரம் மூலமாகக் கூட்டணிக்குள் அதிர்வைக் கிளப்பி, ஸ்டாலின் வாயாலேயே தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படியான சூழலை உருவாக்கிவிட்டார்' என்கிறார்கள் திருமாவுக்கு நெருக்கமானவர்கள்.''

''ஓஹோ... 'தி.மு.க-வுடன் உறவா?' என்று சின்ன மருத்துவர் கோபித்திருப்பாரே?''

''அவர் கோபத்தை யார் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்குப் போனபோதும், இதேபோலத்தான் முறுக்கிக்கொண்டு நின்றார் அன்புமணி. முடிவில் ராமதாஸின் கட்டளையை ஏற்கவில்லையா? அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வர் பதவியும், 60 சீட்டும் பா.ம.க எதிர்பார்க்கிறது. இதற்கு ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டாராம் எடப்பாடி. இதைத் தொடர்ந்துதான் தி.மு.க முகாமிடமும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

முடிவாக, `தி.மு.க என்ன ஒதுக்குகிறதோ, அதை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம்' என்று மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம் ராமதாஸ்.''

''சரிதான்!''

> ரஜினி அறிக்கையின் பின்னணி என்ன?

> ஆளும்கட்சித் தரப்பில் தேர்தல் செலவுகளுக்கான திட்டங்கள் என்னென்ன?

- இவற்றுடன் கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் முழுவதையும் ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2TDLeB9 > மிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம்! - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி... https://bit.ly/2TDLeB9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/politics/dmk-secretly-talks-with-pmk-for-an-alliance-

`வெற்றிவேல்' யாத்திரையின் பின்புலம்: `யுத்தம்' செய்யப்போகிறதா பா.ஜ.க?

நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நாளான டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் வகையில் இந்த யாத்திரையின் பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், 'இதில் பா.ஜ.க முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்' என வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை தொடர்பாக, கடந்த வாரம் பெருந்துறையில் நடந்த 12 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. 'தி.மு.க-வை மையமாகவைத்து விமர்சனங்கள் இருக்க வேண்டும். யாத்திரைப் பயணத்தின் நடுவே தி.மு.க-விலிருந்து ஏராளமானோரை பா.ஜ.க-வில் சேர்க்க வேண்டும்' என்று கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

யாத்திரையின்போது திருமாவளவனின் மனு சாஸ்திரம் தொடர்பான பேச்சை முன்வைத்து, 'இந்துப் பெண்களை இழிவுப்படுத்திவிட்டார் திருமாவளவன். தி.மு.க-வும் இதற்கு உடந்தை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தில் மானமுள்ள இந்துக்கள் கைகோக்க வேண்டும்' என்கிறரீதியில் வார்த்தைத் தீயைப் பற்றவைத்து, பெரும் யுத்தத்தையே நடத்தத் தீர்மானித்திருக்கிறதாம் முருகன் தரப்பு.

ஆனால், தமிழக பா.ஜ.க-விலேயே மூத்த தலைவர்கள் சிலரோ, "யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்துதான் பா.ஜ.க வளர்ச்சி அடைந்தது. அதை மறுப்பதற்கில்லை. 1990, செப்டம்பரில் அத்வானி முன்னெடுத்த ராமர் ரத யாத்திரையே இதற்கு உதாரணம். அதுமட்டுமல்ல... 2011-ல் காஷ்மீர் - ஸ்ரீநகரில் 'ராஷ்ட்ரிய ஏக்தா' யாத்திரையை மேற்கொள்ள முயன்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் காஷ்மீர் எல்லையிலேயே தடுக்கப்பட்டு, கைதாகினர். 2017-ல் கேரளாவில் அமிஷ் ஷா தொடங்கிவைத்த 'ஜன ரக்‌ஷா' யாத்திரையில் உத்தரப்பிரதேச முதல்வர் உட்பட ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டார்கள்.

அதுபோன்ற யாத்திரைகளின்போது மக்களின் மத உணர்வை முன்வைத்து பிரசாரம் செய்யும் யுக்தி வடமாநிலங்களில் வேண்டுமானால் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் களநிலவரமே வேறு. இங்கு மதம், கலாசாரம், மொழி, கடவுளர்கள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, யாத்திரைகளை முன்வைத்து அரசியல் செய்வது இங்கு எடுபடாது. அந்த விஷயத்தில் மக்கள் ஏமாறமாட்டார்கள். முருகன் இதை உணர வேண்டும்" என்கிறார்கள்.

யாத்திரையை முன்வைத்துப் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, "ரத யாத்திரையை நிறைவு செய்ய இவர்கள் திட்டமிட்டிருக்கும் டிசம்பர் 6-ம் தேதியே பிரச்னைக்குரிய நாளாக இருக்கிறது. போதாக்குறைக்கு, 'யாத்திரையில் பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது' என்று அறிவுறுத்தியிருப்பதிலும் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம்.

தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு, வேலையிழப்பு என வாழ்வாதாரங்கள் நசிந்துபோயிருக்கும் சூழலில், அது சார்ந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல், மதத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் இது போன்ற யாத்திரைகளின்போது மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்கள் எச்சரிக்கும் தொனியில்.

> ரெய்டு அஸ்திரம்... தூக்கம் தொலைத்த அ.தி.மு.க!

> எம்.ஜி.ஆர் அரசியல்!

> தி.மு.க-வில் பூசலைத் தீர்க்குமா பதவி மாற்றம்?

> "எவன் பார்த்த வேலைடா இது..." - கிரேட் எஸ்கேப் ரஜினி!

- இவை குறித்த விரிவான அம்சங்களுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3ebDH6a > ரெய்டு... யாத்திரை... கலகம்... எஸ்கேப்... சூடாகும் ஆடுகளம்! https://bit.ly/3ebDH6a

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/politics/-the-reason-behind-tn-bjp-vel-yatra

MOTOR VIKATAN Jointly presents...

online Advanced Car Design Workshop

இன்டர்நெட் வழியாகக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்ய இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும். https://bit.ly/37rzKZT



source https://www.vikatan.com/news/announcements/2-days-online-advanced-car-design-workshop

தங்கம் முதல் மியூச்சுவல் ஃபண்ட் வரை... உங்களுக்கான சரியான முதலீடு எது? - ஒரு வழிகாட்டி

ருவர் செய்திருக்கும் முதலீடுகளை அலசி ஆராய்ந்தால், அவற்றில் பல அவருக்குத் தேவையில்லாததாக இருக்கும். காரணம், அந்த முதலீடுகள் பற்றி அவர் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், யாரோ சொன்னார் என்பதற்காகச் செய்யப்பட்டவையாக இருக்கும். இந்த ஆபத்தினைத் தவிர்க்க, உங்கள் தேவைக்கு எந்த முதலீடு சரியாக இருக்கும் என்பதை நீங்களே தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும். இந்த முடிவினை எடுப்பதற்கு சில முதலீட்டு வழிகளும், டிப்ஸ்களும் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். 

money

பொதுவாக, முதலீடுகளைப் பொறுத்தவரை சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல வகையான சொத்துகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. 

பங்கு சார்ந்த திட்டங்கள் என்பது நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த ஃபண்டுகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதாகும். அதேபோல, கடன் சார்ந்த திட்டங்கள் என்பது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த ஃபண்ட் போன்ற குறிப்பிட்ட முதிர்வுக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் தொடர்புடைய முதலீடுகளாகும். 

இனி, பிரதான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களைப் பார்ப்போம். 

பி.பி.எஃப் (Public Provident Fund)

பி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஒவ்வோர் ஆண்டும், கடன் பத்திரங்களுக்கான அரசாங்கத்தின் நடப்பு வட்டி விகிதம் எவ்வளவோ, அதற்கு ஈடான வட்டி விகிதம் வழங்கப்படும்.  ஓர் ஆண்டுக்கு ரூ.1,50,000 என்ற அதிகபட்ச வரம்புடன், சிறு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் உள்ளது. இதில் செய்யப்படும் முதலீடு, 15 ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டதாகவும், 80-சி பிரிவின்கீழ் வரி விலக்கு பெறும் தகுதிகொண்டதாகவும் இருக்கும்.

பி.பி.எஃப்-க்கான தற்போதைய வட்டி விகிதம், ஆண்டுக்கு 7.1 சதவிகிதமாக உள்ளது. இ.பி.எஃப் (Employee Provident Fund) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியும் பி.பி.எஃப் போன்றதே.

சாதகங்கள்: நீண்ட கால லாக்இன் பீரியட் உடன், உங்கள் பணம் ஒரு பக்கத்தில் நீண்ட காலத்துக்குப் பத்திரமாக இருப்பதை பி.பி.எஃப் உறுதி செய்கிறது. முதலீட்டுக்கு வரிச் சலுகை இருப்பதுடன், இதன்மூலமான வட்டிக்கும் வரி விலக்கு உள்ளது.
 
பாதகங்கள்:
  இது ஒரு கடன் பத்திர முதலீட்டு வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், அதன் வருவாய் குறிப்பிட்ட அளவுக்குள்தான் இருக்கும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் அதில் செய்யப்படும் அதிகபட்ச முதலீடுகூட, உங்களது ஓய்வுக்கால நிதிக்கு (கார்பஸ்) போதுமானதாக இருக்காது.

Money

ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)

வங்கிகள் வழங்கும் நிரந்தர ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் (எஃப்.டி-க்கள்) பொதுவானவையாகத்தான் உள்ளன. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் நன்றாகவும், கூடுதல் வட்டி விகிதத்துடனும் இருக்கின்றன. பொதுவாக, எஃப்.டி-க்கள், குறைந்தபட்சம் 7 தினங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரைகூட பலவிதமான நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக் காலம் கொண்டவையாக உள்ளன.

ஒரு சில வங்கி எஃப்டி-க்கள், முதிர்வுக் காலத்துக்கு முன்னரே வெளியேற அனுமதிக்கக் கூடியவையாக உள்ளன. ஆனால், பெரும்பாலானவை முதிர்வுக் காலம் வரை லாக்இன் கொண்டவையாகத்தான் உள்ளன. 

சாதகங்கள்:  எஃப்.டி-க்கள் பொதுவாக, ரிஸ்க் குறைவானவை என்பதுடன், உத்தரவாதமான வருவாயைத் தரக்கூடியவை. ரெக்கரிங் டெபாசிட்டுகளை (RD) ஆரம்பித்து, வங்கிகள் வழங்கும் டெபாசிட்டாக தானே மாறிக் கொள்ளும் வசதிகளை முற்றிலும் பயன்படுத்துவதுதான், முதலீடுகளை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும்.

எஃப்டி-க்கள், உங்கள் பணம் சேமிப்புக் கணக்கில் சும்மா கிடக்காமல், குறைந்தபட்ச வட்டியையாவது சம்பாதித்துக் கொடுப்பதை உறுதிசெய்யும்.

பாதகங்கள்: நீண்ட கால முதலீட்டுக்கு எஃப்.டி-க்கள் சிறந்த தேர்வல்ல. முதலீட்டு வரலாற்றில், பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை அவை கொடுத்ததில்லை. இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கும் வரி கட்ட வேண்டி வரும். உங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் எஃப்.டி-க்களை மட்டும் நம்பியிருந்தால், நீங்கள் மிகப் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது உங்கள் இலக்கை நீங்கள் தவறவிட நேரிடும்.

அஷ்வினி அருள்ராஜன்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்)

என்.பி.எஸ் என்பது நிறுவனப் பங்குகள், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் செய்யப்படும் கலவையான முதலீடுகளைக் கொண்ட ஓய்வூதியத் திட்டமாகும். 

இதில், ஒவ்வொன்றுக்குமான முதலீட்டு ஒதுக்கீடு எவ்வளவு என்பதை நீங்களே முடிவு செய்யலாம் அல்லது உங்களுக்கான முதலீட்டு ஒதுக்கீட்டைத் தேர்வு செய்யவும் அனுமதிக்கலாம்.

நீங்கள் 60 வயதை அடையும்போதோ அல்லது கணக்குத் தொடங்கியதிலிருந்து 10 ஆண்டுகள் ஆகும்போதோ, எது முன்கூட்டி வருகிறதோ அப்போது உங்கள் ஓய்வூதியத் திட்டம் முதிர்வடையும். அந்தச் சமயத்தில், நீங்கள்  செலுத்திய மொத்தத் தொகையிலிருந்து 60% வரை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள  தொகை கட்டாய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். முதிர்வுக் காலத்துக்கு முன்னரே குறிப்பிட்ட ஒரு தொகையை எடுப்பது சாத்தியம்தான் என்றாலும், அதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

சாதகங்கள்: என்.பி.எஸ் முதலீட்டுக்கு 80 சிசிடி பிரிவின்கீழ் ரூ.50,000 கூடுதலான வரிக்கழிவு உண்டு. பி.பி.எஃப்-ஐ போன்றே, நீண்ட கால லாக்இன் பீரியடைக் கொண்டிருப்பதால், ஓய்வூதிய நிதி ஓரிடத்தில் இருக்கும்.

பங்குகளுக்கான முதலீட்டு ஒதுக்கீட்டைக் கூடுதலாக்கினால்,  பி.பி.எஃப் அல்லது இ.பி.எஃப் உடன் ஒப்பிடுகையில், உங்கள் வருவாயை அதிகப்படுத்த அது உதவும்.

பாதகங்கள்: முதலீட்டு ஒழுக்கம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை என்பதால்,  என்.பி.எஸ் திட்டம்கூட சற்று கடினமானதுதான்.

இந்தத் திட்டத்தில் சேர்த்த பணமானது முதிர்வுக் காலத்தில் கட்டாயமாக ஓய்வூதியத்துக்கு மாற்றப்படும். முதலீட்டின் 40% தொகைக்கு வரிச் சலுகையோ அல்லது கவர்ச்சிகரமான வருவாயோ கிடையாது.

தங்கம்

தங்கம், சேமிப்புக்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகக் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பிசிக்கலாக தங்கம் வாங்குவது என்பது ஒரு முதலீடே அல்ல. ஏனெனில், அதன் தரம், பாதுகாப்பாக வைப்பதற்கான செலவுகள், சேதாரம் மற்றும் பணமாக்குதல் போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளன. எனவே, தங்கப் பத்திரத் திட்டம் மிகவும் நல்லது. விலை ஏறும்போது அதைப் பணமாக்க விரும்பினால், எளிதில் பணமாக்கிக்கொள்ள முடியும். தங்கத்தைப் பொருளாக வைத்திருக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தங்கப் பத்திரத் திட்டத்தில் இருக்காது.

கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளும் இதில் அடங்கும். அரசாங்கம் வெளியிடும் தங்கக் கடன் பத்திரம்கூட (சாவரின் கோல்டு பாண்டு), தங்கத்தில் முதலீடு செய்வதற்கான இன்னொரு வழியாகும். கூடவே அதில் ஒரு சிறிய வட்டியும் (ஆண்டுக்கு 2.5%), நீண்ட காலத்தில் வரிச் சலுகை பயன்களும் கிடைக்கும். 

gold

சாதகங்கள்: நிறுவனப் பங்குகள் விலைகளுடன் மிகக் குறைந்த அளவிலான தொடர்பே உள்ளது. அத்துடன் பணவீக்கத்துக்கு எதிரான அதன் செயல்பாடு, சந்தை அபாயத்துக்கு எதிரான ஒரு நல்ல பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

பாதகங்கள்: ஒரு முதலீடாக, உங்களுடைய ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் தங்கம் சிறிய அளவிலேயே வருவாயைக் கொடுக்கும். அதன் விலையானது சர்வதேச பங்குச்சந்தை சென்டிமென்ட்கள் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் மட்டுமே நகரும். தங்கத்தின் விலையானது நீண்ட காலத்துக்கு அப்படியே தேக்க நிலையில்கூட இருக்கக்கூடும்.

நிறுவனப் பங்குகள்

ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதன்மூலம், நீங்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரராகி விடுகிறீர்கள். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் அதன் பங்கு விலையின் உயர்வுக்கேற்ப, உங்கள் வருவாய் அதிகரிக்கும். இந்த வருவாய்க்கு உச்சவரம்பு எதுவும் இருக்காது என்பதுடன், பங்கு விலைகளும் பல மடங்கு அதிகரிக்கலாம். எனவே, ஒரு சிறிய தொகை, மிகப் பெரிய தொகையாக வளரும். இந்தப் பங்கு  முதலீட்டில் ஈடுபட டீமேட் கணக்கு இருப்பது அவசியம்.
 
சாதகங்கள்: இந்திய மற்றும் உலக முதலீட்டு வரலாற்றில், பங்குகள்தான் மிக அதிக வருவாயைக் கொடுத்த சொத்து வகையாக உள்ளது. அதிக வருவாய் என்பதன் அர்த்தம், நீங்கள் குறைந்த அளவிலான தொகையை முதலீடு செய்தாலும், உங்கள் சேமிப்புத் திறன் குறைவாக இருந்தாலும் கூட, ஒரு மிகப் பெரிய கார்ப்பஸ் (தொகுப்பு நிதி) இலக்கை உங்களால் அடைய முடியும்.

பாதகங்கள்: முதலீட்டுக்கான சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது என்பது அதிக ரிஸ்க்கான விஷயம். அதற்குச் சந்தை குறித்த நிபுணத்துவம் தேவை. பங்குகள் விலை மிகவும் ஏற்ற இறக்கம் கொண்டது என்பதால், அதன் விலை, சமயங்களில் வயிற்றைக் கலக்கும் வகையில் இறக்கத்துக்கு உள்ளாகலாம். எனவே, ரிஸ்க் எடுக்கும் மனோபாவமும், பங்குகளை விற்று விடாமல் அதைத் தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய மனஉறுதியும் தேவை.

Share Market Doubts

மியூச்சுவல் ஃபண்டுகள்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யக்கூடிய ஒரு தொகுப்பு முதலீட்டு வாகனம் ஆகும். இதை முதலீட்டு நிபுணர்கள் நிர்வகிக்கின்றனர். முதலீடுகளுக்கான தேர்வையும், அவற்றை நிர்வகிப்பதையும் ஃபண்ட் மேனேஜர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வாங்குகின்றன. கடைசியில், எந்த வகையான சொத்தில் நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்களோ, அதுதான் வருவாயைத் தீர்மானிக்கிறது.  

பொதுவாக, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது சந்தையுடன் தொடர்புடையதாக இருக்கும். அதே சமயம், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்மூலமான வருவாய், வைப்பு நிதி வருவாயைக் காட்டிலும் சிறிது அதிகமாக இருக்கும்.

சாதகங்கள்: மியூச்சுவல் ஃபண்டுகள், பங்கு மற்றும் கடன் சார்ந்த சந்தைகளின் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் என்பதன் அர்த்தம், உங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கேற்ற ஒரு நிதித் திட்டத்தை நீங்கள் கண்டறிய முடியும் என்பதுதான்.

ஓப்பன் எண்டட் ஃபண்டுகளானது நீங்கள் எந்த நேரத்திலும் அதிலிருந்து வெளியேறக்கூடிய  வசதியைக் கொண்டுள்ளதுடன், தேவைக்கேற்றவாறு முதலீட்டு உத்திகளை மாற்றிக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. வங்கி அல்லது கார்ப்பரேட் எஃப்.டி-க்களைக்காட்டிலும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரி குறைவாகவே உள்ளது.

பாதகங்கள்: அதேசமயம், முதலீடுகளை இப்படி விருப்பத்துக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாவிட்டால், அது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். 

எளிதாக வெளியேறுதல், லாக்இன் பீரியட் இல்லாத மியூச்சுவல் ஃபண்டுகளை,  ஒருவேளை சரியான நோக்கத்துக்குப் பயன்படுத்தாவிட்டால், அது நீண்ட கால வருவாயில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மியூச்சுவல் ஃபண்டுகள், நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா  என்பதை உறுதி செய்துகொள்ள, நீங்கள் அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும்.

நீங்கள் எதைப் பரிசீலிக்க வேண்டும்?

தற்போது பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அம்சங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பதால், உங்களுக்குப் பொருத்தமான முதலீடு எதுவாக இருக்கும் என்பதை நீங்களே கண்டறியலாம். இதற்கு உங்களது தேவைகள் மற்றும் உங்களது ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகிய இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலில், ரிஸ்க் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வோம். வருவாய் உத்தரவாதமின்மையும், இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் கொண்டதுதான் ரிஸ்க். உதாரணமாக, எந்தவொரு பங்கு சார்ந்த முதலீட்டின் வருவாயும் ஏற்ற இறக்கத்துடனேயே  இருக்கும். அதுகுறித்து முன்கூட்டியே எதுவும் சொல்ல முடியாது. அதேசமயம், பி.பி.எஃப் மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்ற கடன் சார்ந்த திட்டங்கள், ரிஸ்க் குறைவானதாகவும், வருவாயை முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும் உள்ளன.

Investment Options

இவையெல்லாவற்றையும்விட, வருவாய் ஏற்ற இறக்கத்தின் போதும், அதிக ரிஸ்க் மற்றும் இழப்புகளின்போதும் மனஉறுதியுடன் இருக்கும் திறன் கொண்டவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால், அதிக ரிஸ்க்கை நீங்கள் ஏன் எடுக்க வேண்டும்? 

ஏனெனில், அதிக ரிஸ்க் கொண்ட வர்த்தகப் பரிமாற்றம், அதிக வருவாயையும் கொடுக்கும். ஆகவே, பங்கு சார்ந்த (பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு ரிஸ்க்கானது. அதேசமயம், நீண்ட காலத்தில் கிடைக்கும் வருவாய் அந்த ரிஸ்க்கை ஈடுசெய்துவிடும். அதே சமயம், கடன் சார்ந்த (எஃப்.டி-க்கள், பி.பி.எஃப், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு ரிஸ்க் குறைவானது என்பதால், வருவாயும் குறைவாகவே இருக்கும். 

இரண்டாவதாக, உங்களது தேவைகள். உங்கள் பணத் தேவைக்கான நோக்கத்தின் அடிப்படையில் உங்களுடைய தேவைகள் குறித்து நீங்கள் முடிவெடுக்கலாம். குறுகிய காலத்துக்கானது, நீண்ட காலத்துக்கானது என இதை இரண்டு வகைகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம்.

இதை எளிதாகச் சொல்வதானால், ஏழு ஆண்டுகளுக்கு மேலானதை நீண்ட கால முதலீடாகக் கருதலாம். நோக்கம் எதுவுமில்லாமல், உங்கள் தேவைகள் போக உபரியாக உள்ள பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் எனில், அந்தப் பணம் உடனடிப் பயன்பாட்டுக்கானது இல்லை எனலாம்; நீண்ட கால முதலீடாகவே அதைக் கருதலாம். 

உங்கள் விருப்பத்துக்குரிய முதலீட்டை எப்படித் தேர்வு செய்வது?

இதற்கு இரண்டே எளிய விதிமுறைகள்தான் உள்ளன. ஒன்று, நீண்ட காலத்துக்கானது; அதிக ரிஸ்க் எடுத்தால் அதற்கேற்ற வருவாய் கிடைக்கும். இரண்டு, இன்னும் அதிக ரிஸ்க் எடுத்து, ஈக்விட்டி முதலீடுகளை அதிகப்படுத்தினால் அதற்கேற்ற வருவாய் கிடைக்கும்.

இங்கே சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். குறுகிய காலத் தேவைகள் மற்றும் அவசரகால நிதிக்கு, உங்களுக்கு நிலையான வருவாய் அவசியம் என்பதுடன், எளிதில் பணமாக மாற்றத்தக்கதாகவும் மற்றும் குறைந்த ரிஸ்க் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு வங்கி எஃப்.டி-க்கள் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றை நீங்கள் பரிசீலிக்கலாம்.

Investment (Representational Image)

நீண்ட கால லாக்இன் கொண்டது என்பதால் பி.பி.எஃப் சரிப்பட்டு வராது. ஆனால், குறுகிய காலத் தேவைகளுக்கு, அது ஓராண்டுக்கோ அல்லது மூன்றாண்டுகளுக்கோ, வருவாய் எவ்வளவு கவர்ச்சிகரமாக தெரிந்தாலும் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

நீண்ட கால அல்லது ஐந்தாண்டு கால வரையறை அடிப்படையில் சொத்து உருவாக்குவதில், அதிக வருவாய் தரக்கூடிய பங்கு சார்ந்த முதலீடுகளையும் சேர்த்துக்கொண்டால், உங்களால் அதிக சொத்துகளைச் சேர்க்க முடியும். அது என்.பி.எஸ் மூலமாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது நேரடிப் பங்குகள் மூலமாகவோ இருக்கலாம்.

அதேசமயம், பங்கு சார்ந்த முதலீடுகளை, நீண்ட கால அடிப்படையிலும், சந்தைக்கு வசதியாகவும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஐந்தாண்டு காலத்துக்கு மேற்பட்ட முதலீடுகளில், உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, 60% - 80% வரை பங்கு சார்ந்த முதலீடுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதேசமயம், உங்கள் அனைத்து முதலீடுகளையும் பங்குகளில் முதலீடு செய்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், அது உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவையும் மிக அதிக ரிஸ்க் கொண்டதாகவும், கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கம் கொண்டதாகவும் ஆக்கிவிடும்.

முதலீட்டு நோக்கத்திலான இன்ஷூரன்ஸ் திட்டங்களில் பெரிய வருவாய் எதுவும் இருக்காது என்பதால், இந்தப் பட்டியலிலிருந்து அவற்றை நீங்கள் நீக்கிவிடலாம். அதற்குப் பதிலாக போதுமான அளவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் ( உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 மடங்கு தொகையை காப்பீடாக எடுக்க வேண்டும்) மற்றும் மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள  முதலீட்டுத் திட்டங்களில், எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டால், இந்தத் திட்டங்களில்  எவ்வளவு வருவாய் கிடைக்கிறது, எந்த அளவுக்கு ரிஸ்க் உள்ளது, முதலீட்டின்மூலம் சிறப்பான வருமானம் பெற எவ்வளவு காலம் முதலீடு செய்ய முடியும் எனப் பல விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

அதற்குப் பிறகு, உங்களுக்கென ஒரு அஸெட் அலோகேஷனை உருவாக்கி,  உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றபடி போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம்!
 
தமிழில்: பா.முகிலன்

- அஷ்வினி அருள்ராஜன், பங்குச் சந்தை பகுப்பாளர்


source https://www.vikatan.com/business/investment/how-to-choose-perfect-investment-option-to-attain-your-goal

பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-november-2nd-to-8th

`நேர்மையாக இருப்பதால் ஏற்பட்ட வெறுப்பா?' - சகாயத்தின் `விருப்ப ஓய்வு' பின்னணி!

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ். ` கடந்த 6 ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தோடு அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இனியும் அவர் பணியில் நீடிக்க விரும்பவில்லை' என்கின்றனர் சகாயம் தரப்பினர்.

`சகாயம் ஐ.ஏ.எஸ் ராஜினாமா?' என்ற தலைப்பில் கடந்த ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைத் தொடர்ந்து, அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு சகாயம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு அரசிடம் இருந்து இன்னமும் பதில் வரவில்லை.

Also Read: “நேர்மையான அதிகாரிகளுக்கு நெருக்கடி!” - ராஜினாமா முடிவில் சகாயம் ஐ.ஏ.எஸ்

``இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?" என சகாயம் ஆதரவாளர்களிடம் கேட்டோம். `` கடந்த 2014 செப்டம்பர் மாதம் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக, கோ-ஆப்டெக்ஸில் பணியாற்றினார். அப்போது 11.5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய கோஆப்டெக்ஸுக்கு, ஒரே ஆண்டில் 13.5 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தார். இதன்மூலம், நிகர லாபமாக முதல்முறையாக 2 கோடி ரூபாய் கிடைத்தது. கோ-ஆப்டெக்ஸ் என்பது தலைமைச் சங்கம். இங்கிருந்து நெசவாளர்களுக்கு எந்தவித சலுகைகளையும் கொடுக்கும் வழக்கமில்லை. அதனை மாற்றி, 80 ஆண்டுகால வரலாற்றில் ஏழை நெசவாளிகளுக்கு ஒரு கோடி ரூபாயை போனஸாகக் கொடுத்தார். நெசவாளர்கள், திருநங்கைகள் ஆகியோரை வைத்து பேஷன் ஷோ நடத்தியது, வேட்டி தினம், தங்கமழை பரிசுத் திட்டம் என்றெல்லாம் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்தநேரத்தில், கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒன்று சகாயத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது. அங்கு 50 ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸின் கடை ஒன்று இயங்கி வந்தது. அந்தக் கடைகளை எடுத்துவிட்டு, புதிய வளாகம் கட்டப்பட்டதால், அங்கு இடம் கேட்டுச் சென்றார் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சோமசுந்தரம். `உனக்கெதுக்கு கடை?' எனக் கேட்டு உள்ளூர் அ.தி.மு.க சேர்மனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதுகுறித்து சகாயத்தின் கவனத்துக்குத் தகவல் வந்ததும், காவல்நிலைத்தில் புகார் கொடுக்க வைத்தார். கள்ளக்குறிச்சி மேலாளரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த விவகாரத்தில் சேர்மன் மீதான புகாரை வாபஸ் பெறச் சொல்லி, தலைமைச் செயலகத்தில் வைத்தே அழுத்தம் கொடுத்தனர் அமைச்சர்கள் சிலர். `இது எங்க அரசாங்கம்... அம்மா போலீஸ்' என அமைச்சர் ஒருவரே நேரடியாகப் பேசியது சகாயத்துக்கு வேதனையை ஏற்படுத்தியது.

சகாயம் ஐ.ஏ.எஸ்

இதுகுறித்து தலைமைச் செயலாளருக்கு அவர் அளித்த மனுவில், ` ''அந்த அமைச்சர் மீது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுங்கள்'' எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அடுத்து வந்த நாள்களில் இந்திய மருந்துக் கழகத்துக்கு அவரை இடமாற்றம் செய்தனர். இதனால் பதறிப் போன அமைச்சர் ஒருவர், `என்னுடைய துறைக்கு அவர் வேண்டாம். தயவு செய்து மாற்றிவிடுங்கள்' எனக் கோரிக்கை வைத்ததால், அடுத்த 24 மணிநேரத்தில் அறிவியல் நகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்" என விவரித்தவர்கள்,

`` வேளாண்மைத்துறையின் உதவி இயக்குநருக்கு உண்டான வசதிகள்கூட அறிவியல் நகரத்தில் இல்லை. ஆண்டுக்கு 1.30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 9 ஊழியர்களைக் கொண்டு இயங்கக்கூடிய சிறிய அலுவலகம் இது. இருப்பினும், கண்காட்சிகளை நடத்துவது, மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது எனத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அவருடைய பொறுமையைச் சோதிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர்.

`இப்படியொரு சிறிய துறைக்கு அரசு செயலர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தேவையில்லை. இதே கட்டடத்தில் உள்ள மற்ற 2 துறைகளையும் இணைத்து ஒரே துறையாக மாற்றிவிடலாம்' என அரசுக்குப் பரிந்துரை கடிதமும் அனுப்பினார் சகாயம். அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. சம்பளக் குறைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், பிரான்ஸ் தமிழ் மன்றத்தில் அவர் பேசுவதற்காகச் செல்ல இருந்த வாய்ப்பையும் அதிகாரிகள் கெடுத்துவிட்டனர்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

இதனால் மிகுந்த வேதனையோடு தலைமைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், `பிரான்ஸ் தமிழ் கலாசார மன்றம், 15-வது ஆண்டு விழாவுக்கு என்னை (14.4.2020) என்னை அழைத்துள்ளனர். எஃப்சிஆர்ஆர் விதி 7-ன்படி, `நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை அனுப்பினால் போதும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நான் செல்கிற விமானச் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றுக்கான விபரங்களை இப்போதே கேட்பது வியப்பை அளிக்கிறது. விமான செலவு என்பது மாறிக் கொண்டே இருக்கும். அரசிடம் இருந்து அனுமதி பெற்று பிரான்ஸ் தமிழ் அமைப்பிடம் தெரிவித்த பிறகுதான் அவர்கள் பயணச் சீட்டையே எடுப்பார்கள். அதற்கு முன்பே கேட்பது விந்தையிலும் விந்தை.

எனக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர்கள் வீட்டில் விருந்தோம்பல் நடக்குமா அல்லது உணவகத்தில் நடக்குமா எனக் கேட்பது கடினமான ஒன்று. இது அரசுக்கும் நன்றாகத் தெரியும். அப்படியிருக்கையில், ஏன் கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தச் செலவுகளை மத்திய அரசோ, மாநில அரசோ கொடுக்கப் போவதில்லை. இதுபோன்ற தேவையற்ற தரவுகளைக் கேட்பதன் மூலம் எனக்கு அனுமதி கொடுப்பதை தாமதிக்கும் எண்ணம், கோப்புகளை நகர்த்துபவர்களுக்கு இருக்கிறது. இதில் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கக் கூடும். இன்றைய தினம், தமிழக அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் ஒருவித நெருக்கடிக்கு உள்ளாவதை ஆழ்ந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்' எனக் குறிப்பிட்டவர்,

Also Read: `குஜராத்தில் இருந்து வருத்தத்தோடு திரும்பி வந்தேன்!' - தேர்தல் அனுபவத்தை விவரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்.

`` தமிழ் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அனுமதி கேட்கும்போது, என் போன்ற அதிகாரிகளுக்கு உடனடியாக மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசு அனுமதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். அப்படி பெற்றுத் தராதது, வேதனையை அளிக்கிறது. இதுபோன்று தேவையற்ற தகவல்களைக் கேட்பது என்பது, காலம் கடத்துபவர்களின் உயர்ந்த யுக்தியாகவே நான் கருதுகிறேன். இதை தமிழ் மொழியின் மீதான வெறுப்பின் செயலாகப் பார்ப்பதா அல்லது நேர்மையாகப் பணியாற்றும் என் போன்ற அதிகாரிகளின் மீது கொண்டுள்ள வெறுப்பா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நாட்டில் ஐ.ஏ.எஸ் பதவி என்பது இளைஞர்களின் உச்சபட்ச கனவு. என்னைப் பொறுத்தவரையில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதித்தான் இந்தப் பணிக்கு வந்திருக்கிறேன். அத்தகைய ஐ.ஏ.எஸ் பணியில் நேர்மையாக இருந்து செயலாற்றியதில் எனக்கு அளப்பரிய பங்கு உண்டு. அதேநேரத்தில் என் தமிழ்மொழிக்குப் பங்களிப்பு செய்வதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இந்தச் சூழலில் ஐ.ஏ.எஸ் பதவியா என்னுடைய தமிழ் மொழியா என்று எவராவது என்னிடம் கேட்டால், என் மொழிதான் எனக்குப் பெரிது என்பேன். அதுவே, ஐ.ஏ.எஸ் உள்பட அனைத்தையும் விட பெரிது என்பேன்' எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை தலைமைச் செயலருக்கு அனுப்பியிருக்கிறார். விரைவில் அரசுப் பணியில் இருந்து வெளியேற இருக்கிறார். இதுதொடர்பாக, கட்டாய விருப்ப ஓய்வு கேட்டு தலைமைச் செயலருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அரசிடம் இருந்து விருப்ப ஓய்வுக்கு அனுமதி கிடைத்த பிறகு, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கூட்டங்களை நடத்த இருக்கிறார்" என்றனர் விரிவாக.

Also Read: "20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே, `நல்ல சிந்தனை' என்றார்!" - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'

விருப்ப ஓய்வு முடிவு குறித்து சகாயத்திடம் பேசினோம். `` அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றுவது என்பது வலிகளும் வேதனைகளும் நிரம்பிய ஒன்று. என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/sagayam-ias-wrote-letter-to-chief-secretary-regarding-his-vrs

Today's episode of BIGG BOSS TAMIL Season 4, DAY 26 Highlights: Aari Anitha in jail

In Today’s Bigg Boss episode, the major role played by....... CHAPATHI! Aari broke the truth about prevailing groupism and favouritism inside the Bigg Boss House! Suresh and Archana, best pair!

What happened inside the Bigg Boss House today, Let's take a tour:

Today's Bigg boss Episode opened with the song ’Ennama pannalam, discovuku pogalam, where is the party’. Since it was raining, Everyone danced in the corridor. Well, not really danced, more like shook their body! Morning warm-up exercise! Shivani was dancing in the open holding an umbrella. Today's song was apt for today’s programme in Bigg Boss House, as it was party time for the contestants. A fashion parade, followed by gifts and gift vouchers from the sponsors were provided to House Mates today!

Serving food:

Aari was serving food to the House Mates. While he was serving Ajeedh, he asked him if he (Ajeedh) wanted more. Archana didn't like Aari asking if someone wanted more (as in her opinion, it would make people conscious and eat lesser than they normally would), and started serving the food herself. Aari didn't like Archana taking over. He didn’t say anything then, but it all came out later.

Anita, Sanam and Aari were talking while sitting in the corridor. Anita said she spoke less than Rio the previous day when each of the HMs had to talk about whom they missed the most. Sanam said what Samyuktha did (interrupting Anitha) was wrong. Anita expressed her displeasure that no one supported her when Samyuktha interrupted. Sanam said that she would have supported, others were already branding her someone who pokes her nose into everything. But Sanam apparently asked Sanyuktha about this afterwards. Samyuktha heard this, and told the other contestants that though Anitha was silent, Sanam was 'triggering' her. Waste of time and waste of energy, she said.

Best Bigg Boss performers:

Bigg Boss asked the contestants to select the best performer from the ’Thanga Surangam Task’. The House Mates selected Bala as he collected more quantity of gold, and Nisha who put the most efforts in the task. Then BB asked the HMs to select The best performer for the week (in tasks and household work). Somu won this! The three winners - Balaji, Nisha, and Somu are the contestants for captaincy next week.

Latest updates on Bigg Boss

Least performers in Bigg Boss:

Bigg Boss then asked the contestants to select two House Mates who performed the worst in tasks & overall house hold activities this week. Almost all the contestants voted for Anitha as the least performer, for two reasons: a) Being the kitchen team captain, she didn't involve at all (zilch, nada) in the kitchen work, b) she didn't do the anchor job with enthusiasm during Dusshera celebs. Ayyoyo, because of this, will she again cry!?

My mind voice: Anitha thought she got less space to talk, when she was the anchor of the celebrations! With that less space, she created the whole Amagali problem with Suresh. What would have happened if she got even more space to talk!?

After Anitha, most of the House Mates named Aari as the least and boring performer (as he collected the least quantity of gold, and also as in Rajangam task, his contribution was less). Sanam nominated Balaji as boring and least performer, as he slept without doing his cleaning work. But Archana objected to this, because he had already been selected as the best performer. Sanam started arguing, but BB interfered and said Balaji’s name cannot be nominated for least performer. Balaji teased Sanam, and Sanam casually told him to not behave like a child. I wonder, if Archana and Balaji had not compromised, would he (Balaji) have been voted the best performer or worst performer? I am fairly certain Archana herself would have nominated Balaji as the least performer. Naturally, Archana's gang would have followed Archana's lead in this.

So Archana being the captain of the house, informed BB that Anitha and Aari were selected as a the boring performers. BB then asked both of them to go to jail. This is the second jail term for Aari.

Samyuktha became a candidate for captain instead of Nisha:

As a surprise, Bigg Boss announced that since Ramya got the first place in the ranking task, special power was given to her. Ramya could change one or two candidates selected for captainship, based on her wish. Ramya wisely selected Samyuktha in place of Nisha since Sam can take firm decisions on her own without any biases. And also because Nisha belong to Rio's group, I am assuming. Bold and Good move!

Before going to jail, Aari raised Anitha’s issue to the other House Mates. Which issue, you may wonder, as there are several issued going on with Anitha. He raised the issue of Sam interrupting Anitha yesterday, when she was talking about whom she missed the most. But Anitha didn't want to discuss it, so he dropped it, but firmly mentioned how groupism and favouritism exists still, in the house. He said that if it keeps continuing, he will detail it out next week, and bring out names. Rio and Archana asked him to say give details then and there.

Latest updates on Bigg Boss

Balaji interfered and asked if Aari was giving them a warning. Aari asked him to take it however he likes. And then there was some random to and fro convo on diplomacy and being diplomatic. It went for awhile. After 'quarantine', the other word that I have heard the most this week is 'diplomatic'. Its becoming the new 'trigger'. Sigh!

Archana was telling her group she wanted to clarify with Aari, the groupism and favoritism issue. Balaji instigated Archana by quoting the other incident which Aari shared with him. Balaji said to Archana that Aari complained to him that Archana and Nisha each gave one additional chapathi to Rio. And that they did not not openly, but with eye signal.

Aari was asking Ramya the reason for nominating Balaji as the best performer, when he was reluctant to do cleaning work and slept. Ramya said that the best performer ought to be selected based on the performance in the task as informed by the BB, and since Balaji did the task well, she nominated him. Fair enough!

Archana was in full form, to fight with Aari, and went to the jail. Aari and Anitha were inside the jail. Suresh, and Somu were also there with Archana. When questioned, Aari said he was offended when Archana took over the serving when Aari was serving Ajeedh. Archana said you asked Ajeedh if he wanted "some more food, which she didn’t like, as it was rude to ask someone that. Balaji again instigated Archana to ask about the 'chapathi' matter also. Payyan Ammakku eduthu kudukran! Aari said that Archana and Nisha gave additional chapatis to Rio when others got less. Archana said Nisha and herself gave their share to Rio, and didn’t take from the common pool. Adhukku, Aari said that they could have done this openly, and didn’t have to give a signal.

They were fighting for the two chapatis given extra for Rio. But seriously. Why is Bigg Boss giving such less food to people? I understand they want to make living in the BB House tough, and prone to fights. But at least saapadu ozhunga kudukkalame? Looks like Rio, who is not a very big person, requires 2 additional rotis than what is allocated to him. The women (his friends) are sacrificing their rotis. Sabbah... Konjum adhigama ration kodunga Bigg Boss!

Also, Aari felt that Archana was interfering in everyone's work, and was not a good leader. In my opinion, leading can be done in two forms, he said - first way is to extract work from others by ordering - being bossy. Second way is doing all the work onself, in the name of affection - it could be mother, sister, friend whatever! Anball kattipoduvadhu! I think Archana is following the second one. As Aari pointed out to Anitha, it could be Thaimai also. Or maybe it is just her game strategy?! Kalam than Padilla sollum!

Latest updates on Bigg Boss

Captainship task:

Later, Bigg Boss announced the captainship task. Three baskets with smile balls were kept in the garden area. Balaji, Samyuktha and Somu were the three contestants. The other HMs would throw the balls. Whomever collects the maximum balls, was to be the winner.

Balaji gave whatever balls he collected to Samyuktha. Suresh, Nisha and Archana objected to this. Balaji coolly said there were no rules and that he can share what he collected with whomever he liked. Samyuktha become the captain!

Aari and Anitha asked why he gave his collections to Samyuktha and made her the captain. He said it was not the time for him to become captain, and he will, when the time is appropriate. Wow, he is talking like someone offered him the CM post!

This captionship task is like Halwa to Kamal. Tomorrow Kamal poondhu vilaiyadvar with regard to current politics.

Fashion show:

'Sponsored apparels' were provided to the HMs for the fashion show as HMs danced to the song ‘kalasa kalasala “ from Osthi. First Archana and Suresh danced for the topic ‘Prisma happiness across generation‘. It was good. Balaji and Shivani later gave a romantic dance. Only these two pairs had given notable performance.

First place went to Archana and Suresh. Prismatic supplied cake to the winners.They cut the cake and celebrated with their house mates. Next a sponsor gifted loungewear to all the HMs in addition to Rs. 5000/- per head.

Sanam showed the gift to Anitha and Aari who were still in jail. After she left, Aari was commenting to Anitha that Sanam actually good hearted. But that sometimes, her behavior is weird. Anitha said Sanam is like a comedy piece, and she doesn;t know how to express. Uhm..., Yaaru Yaara Solradhu? Anitha is talking about how to express things.

Latest updates on Bigg Boss

Bigg Boss announced the release of Aari and Anitha from the Jail. All the HMs went to jail to receive them except, Suresh and Bala. Suresh said they both are rude, and he didn't want to receive them. When Archana was opening the jail gate, only Anitha came out. Aari was in meditation and he didn’t open his eyes, despite Anitha calling out to him. With this today's episode got over.

Tomorrow Ulaganayagan is coming on stage. So many incidents happened this week right from Anitha’s transition to Suresh in the confession area, Archana's and Bala's mother son bonding, Samyuktha earning her captainship and Aari's note on groupism/favoritism!



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/todays-episode-bigg-boss-tamil-season-4-day-26-highlights

`திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது!’ - அலகாபாத் உயர் நீதிமன்றம்

லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர், இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறி, அதன் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, `திருமண நோக்கத்துக்காக மட்டுமே மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார்.

அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், ``மனுவைத் தாக்கல் செய்த பெண் பிறப்பால் ஓர் இஸ்லாமியர். ஆனால், இந்து ஆணுடன் திருமணம் செய்துகொள்வதற்காக, திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார். பதிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, மனுதாரர் 29.6.2020 அன்று மதம் மாறியிருக்கிறார். ஒரு மாதத்துக்குப் பிறகு, அவர்கள் 31.7.2020 அன்று தங்கள் திருமணத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மதமாற்றம், திருமணத்துக்காக மட்டுமே என்று நீதிமன்றத்துக்குத் தெளிவாகத் தெரிகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Also Read: கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்!

கடந்த 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் இதே போன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவை நீதிபதி, தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நூர்ஜஹான் பேகம், அஞ்சலி மிஸ்ரா வழக்கில், நூர்ஜஹான் பேகம் என்ற பெண், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் பாதுகாப்பு கேட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொள்ள இந்துப் பெண் ஒருவர், இஸ்லாம் குறித்த எந்தக் கொள்கையையும் தெரிந்துகொள்ளாமல், திருமணத்துக்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

தீர்ப்பு

மேலும், `இவ்வாறு மதத்தை இஸ்லாமுக்கு மாற்றுவது, திருமண நோக்கத்துக்காக மட்டுமே என்பது இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு சரியான காரணமாக இருக்காது. இந்தத் திருமணங்கள் புனித குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் கட்டளைக்கு எதிரானது’ என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

நூர்ஜகான் பேகம் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி மகேஷ்சந்திர திரிபாதி, `அந்தப் பெண் பிறப்பால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், கடந்த ஜூன் மாதம், தனது திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக் முன்னர் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார். இதுபோல் திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/social-affairs/judiciary/conversion-for-sake-of-marriage-not-acceptable-allahabad-high-court

நாமக்கல்: சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு; திடீர் தீ! - விபத்தில் இருவர் பலி

தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிக்கி, இருவர் உடல் கருகி பலியான சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

நாமக்கல் தீ விபத்து

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி தீபாவளி சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் பணியினை வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.

Also Read: இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்க்ரீட் தளம்! - நாமக்கல் அதிர்ச்சி

சிலர் பட்டாசு உள்ளிட்டப் பொருள்களை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யும் நிலையும் தொடர்கிறது. அப்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி, மாதேஸ்வரன் கோயில் பகுதியில், ஒரு வீட்டில் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கிக் குவித்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் திடீரென பட்டாசுகள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தீப்பற்றி வெடித்துச் சிதறியிருக்கிறது.

தீ விபத்தில் இறந்த இருவர்

தீ வீடு முழுவதும் பரவியிருக்கிறது. அப்போது, சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் வெடித்ததால், வீட்டுக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதனால், பதறிய அப்பகுதி மக்கள் எரியும் தீயை அணைக்க முயன்றனர். அந்த முயற்சி வீணானதால், குமாரபாளையம் தீயணைப்புத்துறை வீரர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து, ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையாகப் போராடி, தீயை அணைத்தனர்.

Also Read: விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம்! - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து

இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்த தங்கராஜ், ராஜகணபதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அதோடு, விபத்து நடைபெற்ற வீட்டின் அருகில் இருந்த சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு, பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரனை நடத்தினார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை

அவர், அந்த வீட்டின் அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தினார். தீபாவளிக்காக வீட்டில் பட்டாசுகளை அதிகளவு வாங்கி இருப்பு வைத்ததால், விபத்து நேரிட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/two-died-in-namakkal-fire-accident

`சர்ச்சைக் கருத்து; சாலைகளில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபர் படம்!’ - மும்பையில் எதிர்ப்புப் போராட்டம்

எற்பிரான்ஸ் பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூனை மாணவர்களிடம் காட்டி பாடம் நடத்தியதால், சாமுவேல் பேட்டி என்னும் ஆசிரியர் கொல்லப்பட்டார். அதனையொட்டி அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்லாம் மதம் குறித்து தெரிவித்த கருத்து உலக அளவில் சர்ச்சைக்கு விதை போட்டது. இதனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக உலக அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்து மும்பையிலும் அவர் உருவப் படத்தை சாலையில் ஒட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையான சார்லி ஹெப்டோவில் (Charlie Hebdo)வெளிவந்த முகமது நபியின் கார்ட்டூன் ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி அந்த கார்ட்டூனை வகுப்பறையி,ல் தனது மாணவர்களுக்கு காட்டி பாடம் நடத்தியதற்காக சாமுவேல் பேட்டி என்னும் பாரிஸைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். இதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இஸ்லாமிய மதம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

போராட்டம்

இதனால், உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் உருவப்படத்தை மும்பையின் நாக்பாதா மற்றும் பெண்டி பஜார் நகரின் சாலைகளில் ஒட்டி அதனை காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பினை இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த மும்பை மாநகர போலீஸார், சாலையில் ஒட்டப்பட்டிருந்த படங்களை உடனடியாக நீக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: `இதோடு நிற்கப்போவதில்லை; தாக்குதல்கள் தொடரலாம்!’ - எச்சரிக்கும் பிரான்ஸ் அமைச்சர்

பாரிஸ் நகரின் தேவாலயத்தில் கடந்த 29-ம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற அசாதாரணமான சூழலில் பிரான்ஸுக்கு உரிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

போராட்டம்

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில், ``பாரிஸ் நகரில் நிகழ்ந்துள்ள கொடூரமான சம்பவத்துகுப் பிறகு, பிரான்ஸ் நாட்டுக்கு உரிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில், இதுபோன்ற செயல்களின் மூலம் பிரான்ஸ் அதிபரை அவமதிக்கப்படுவத்தை கண்டுகொள்ளாமல் அம்மாநில அரசாங்கம் என்ன செய்து வருகிறது?” என்று மகாராஷ்டிராவை ஆளும் உத்தவ் தாக்கரே அரசை விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ``ராசா (Raza)” என்னும் இஸ்லாமிய அமைப்பு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், தனது செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/protest/protest-against-french-president-grows-in-india

திருச்செந்தூர்:`ரஜினி பேச்சில் உண்மை இருக்கிறது; நியாயம் இருக்கிறது!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், அரசு இந்த இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எங்களின் போராட்டம்தான் காரணம் எனக்கூறி தனக்கு விளம்பரம் தேடியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.

Also Read: `அறிக்கை என்னுடையது அல்ல; தகவல்கள் உண்மை!’ - மௌனம் கலைத்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சித் துவக்கம் குறித்து வெளிப்படைத் தன்மையுடன்தான் பேசியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அடுத்து, உண்மை நிலையை வெளிப்படுத்தவே கருத்துச் சொல்லியுள்ளார். சூப்பர் ஸ்டார் 70 வயதைக் கடந்த பின்னரும், கதாநாயகனாக நடிக்ககூடிய அளவுக்கு திகழ்ந்து வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இன்றைய இளம் நாயகிகள் கூட அவருடன் நடிக்க ஆவலாக உள்ளனர். ரஜினியின் பேச்சில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. திடீரென கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றிவர அவரது உடல் நிலை ஒத்துவருமா என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அவருக்குக் கூறிய அறிவுரைகள் குறித்த தகவல் அனைத்தும் உண்மை எனச் சொல்லியுள்ளார். அதன் வெளிப்பாடுதான் அவரது அறிக்கையாக வந்துள்ளது. கொரோனா காலத்தில் புதிய கட்சி துவக்கி, அரசியலைச் சந்திக்க வேண்டுமென்றால், மாநிலம் முழுவதும் சுற்றிவந்து மக்களைச் சந்திப்பது என்பது கடினம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதற்கு அவரின் உடல்நிலை ஒத்து வருமா என்பது அவருக்குதான் தெரியும். அதற்காக ரஜினி கட்சி துவக்கப் பயப்படுகிறார் என்ற அர்த்தமல்ல. மொத்தத்தில் ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். அவர் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்; வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு அவர் கட்சி துவக்கினால் நல்லாட்சி கொடுப்பவர்களை மட்டுமே ஆதரிப்பார்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/there-is-truth-in-rajinis-speech-there-is-justice-says-minister-rajendra-balaji

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மதன்குமார் (28). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மதன்குமார் ஆன்லைனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி

Also Read: ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர்கிரைம் அதிகாரி

ஆரம்பத்தில் பணம் நிறைய சம்பாதித்த மதன், பிறகு தோற்றிருக்கிறார். முக்கியமாக, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையே ஆகிவிட்டார். இதனால், ஆன்லைனில் விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக கடன் வாங்கி விளையாடி இருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த, மதன்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து, மதன்குமார் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன்குமார் தற்கொலை சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: “ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

கடந்த 10 நாள்களில் ஆன்லைன் ரம்மியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து, மேற்கொண்டு தற்கொலைகள் நடக்காத வண்ணம் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

மதன்குமார் சடலமாக

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என ஏற்கெனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-youth-commits-suicide-after-losing-money-in-online-rummy

``எங்க அண்ணன் முகத்தைப் பார்க்க ஆசையா இருக்கு!" பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் சிறார்கள்

பேராவூரணி அருகே, பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் ஆதரவுக்கு யாரும் இல்லாததால் அண்ணன், தங்கை இருவரும் வறுமையின் பிடியில் தவித்து வருகின்றனர். அதுவும் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான சிறுமி படும் துயரங்கள் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை என அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு கிராமம் முனியாண்டி தெருவைச் சேர்ந்தவர்கள் அமுதா - பெத்தபெருமாள் தம்பதி. பெத்தபெருமாள் 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு பத்தாம் வகுப்புப் படிக்கும் காளிதாசன் என்ற மகனும் ஏழாம் வகுப்புப் படிக்கும் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். கணவர் இறந்த பிறகு அமுதா விவசாயக் கூலி வேலைக்குச் சென்று பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுமி

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகவே அமுதாவின் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் போனதுடன் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இதனால் அமுதாவால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நிலையான வருமானமும் இல்லை. தாய், பிள்ளைகளை வளர்க்கும் நிலை மாறி, கார்த்திகாவும் காளிதாசனும் தாயாக மாறி தன் அம்மா அமுதாவை பராமரித்து வந்தனர்.

ஏதோ கிடைப்பதை வைத்து தங்களுடைய வயிற்றை நிரப்பி பசியறியாமல் பார்த்துக்கொண்டனர். பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான கார்த்திகா தன் அம்மா அமுதாவுக்கு எல்லாமுமாக மாறினார். அதே நேரத்தில் தங்கள் படிப்புக்கு எந்தத் தடையும் வராமல் இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களாகவே அமுதாவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்து எப்படியாவது அம்மாவைக் காப்பாற்றிவிட வேண்டும் என அண்ணன், தங்கை இருவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை.

'என்னால எழுந்து நடக்க முடியலைன்னாலும் உங்களுக்கு ஒரு உசுரா நான் இருக்கேன்ங்கிற நெனப்பாச்சும் நிம்மதிய தருது. ஆனா, எனக்கு அப்புறம் உங்களை யார் கவனிப்பானு நினைச்சா அந்தக் கவலை என்னை நொறுக்குது' என்று கடந்த வாரம் தன் பிள்ளைகளைக் கட்டியணைத்துக் கலங்கியிருக்கிறார் அமுதா.

அம்மா மற்றும் பிள்ளைகள்

இறுதியாக, அந்தத் துயரம் நடந்தேவிட்டது. அமுதா தன் மூச்சை நிறுத்திக்கொள்ள, இப்போது அந்தப் பிள்ளைகளைப் பெரும் துயரம் சூழ்ந்துள்ளது. தற்போது வயதான தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் இருந்தாலும் வறுமை எனும் கொடுமை அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

கார்த்திகாவிடம் பேசினோம். ''இந்தச் சின்ன குடிசை வீட்டுல நான், அம்மா, அண்ணன் இருந்தோம். எங்கம்மாவால தனியா எந்த வேலையும் செய்ய முடியாது. எனக்கும் பார்வைக்குறைபாடு இருக்கு. ஒரு கண்ணு மட்டும்தான் லேசா தெரியும். ஒரு கண்ணு சுத்தமா தெரியாது. அம்மா எனக்காக உதவி கேட்டு எவ்வளவு அலைஞ்சும் பயனில்ல. ஆஸ்பத்திரியில நெறைய பணம் செலவாகும்னு எங்களால அதுக்கு மேல எதுவும் செய்ய முடியல.

சாப்பாட்டுக்கே காசு போதலை. இதுல கண்ணுக்கு எப்படி செலவுசெய்ய முடியும்? என் குறையை விட்டுத்தள்ளிட்டு, நானும் அண்ணனும் அம்மாவை பார்த்துக்கிட்டு வந்தோம். நான் சோறு வடிச்சு அம்மா பக்கத்துல வெச்சுட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவேன்.

'நாம நல்லா படிச்சாதான் அம்மாவ பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்து குணமாக்கலாம், உன் கண்ணையும் சரிசெய்யலாம்'னு அண்ணன் அடிக்கடி சொல்வான். அதனாலேயே ஒரு நாள்கூட லீவு போடாம பள்ளிகூடத்துக்குப் போயிருவேன்.

அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைன்னாலும், அது எங்க கூட இருந்ததே பெரிய நம்பிக்கை தந்துச்சு. 'நடக்குற நிலையில இருந்தா உன் கண்ண எப்படியாச்சும் சரி செய்திருப்பேன்'னு அடிக்கடி கலங்கும்.

அண்ணன் தங்கை

ஒரு நாள் அண்ணன் வேலைக்குப் போயிட்டான். அம்மாவுக்கு நான் சோறு ஊட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப வீட்டுக்குள்ள பாம்பு வந்துட்டு. அம்மா 'பாம்பு பாம்பு'னு கத்துது. எனக்கு சுத்தமா எதுவுமே தெரியலை. அம்மா ரொம்ப தவிச்சுப்போய் கத்தி கத்தி அந்தப் பாம்பை விரட்டுச்சு. ஆனாலும், என் நெலமைய நெனச்சு அப்போ ரொம்ப கலங்குச்சு.

இப்ப எங்கள தவிக்க விட்டுட்டு போய்ட்டு. எங்க தாத்தா, பாட்டியோட இப்ப இதே வீட்டுல இருக்கோம். அவங்களுக்கு வயசாகிட்டதால வேலைக்குப் போக முடியலை. அம்மா இருந்தப்போ சின்னச் சின்ன உதவி கிடைச்சது. அதைவெச்சே ஒவ்வொரு நாளா ஓட்டினோம். இப்ப அதுக்கும் வழியில்ல. இந்தச் சின்ன வயசுல என்ன செய்யுறதுனு தெரியாம அண்ணன் தவிச்சு நிக்குறான்.

'பாப்பா, நமக்கு இருக்க ஒரு பாதுகாப்பான வீடு, உன் கண்ணுக்கு சிகிச்சை, இதுமட்டும் கிடைச்சுட்டா போதும் நாம நிம்மதியா வாழலாம்'னு அண்ணன் சொல்வான். இத்தனை வருஷத்துல அதுக்கு ஒரு வழி கிடைக்கல. அம்மா செத்ததுக்கு அப்புறம் இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் போச்சு.

வீடு

கண்ணு தெரியலைங்கிற வலியைவிட, நம்மள ஒரு விதத்துலகூட ஆண்டவன் நல்லா படைக்கலையேங்கிற வலிதான் மனசை ரணமாக்குது. அந்த நேரத்துல என்னையும் அறியாம வழியுற கண்ணீரை, எங்கண்ணன்தான் துடைச்சுவிட்டு சமாதானப்படுத்துவான்.

எங்கம்மா முகத்தை நான் முழுசா பார்த்ததில்ல. ஆனா, எனக்கு இன்னொரு அம்மாவா இருக்குற எங்கண்ணன் முகத்தை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எங்க கஷ்டம் தீர வழிகிடைக்குமா?'' - நம்பிக்கையின் விளிம்பில் நின்று கேட்கிறார் கார்த்திகா.



source https://www.vikatan.com/lifestyle/thanjavur-village-student-kalidasan-and-his-sister-karthika-fights-with-poverty