Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

Naayagi Episode 673 | நாயகி பாகம் 673 | Tamil Serial | 31/08/2020

Watch Naayagi Episode 673 here. Naayagi (Nayagi or Nayaki) is a Tamil serial with daily episode, starring Nakshatra, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. Here is today’s episode.



source https://cinema.vikatan.com/web-series/naayagi-episode-673-tamil-serial-august-31

கள்ளக்குறிச்சி: `ஆன்லைன் வகுப்பு; 3 பேருக்கும் ஒரே செல்போன்!’- விபரீத முடிவெடுத்த மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டுநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் நித்யஸ்ரீ, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ். சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த மாணவி நித்யஸ்ரீ

அதன்படி தனது மூன்று மகள்களுக்கு தனித்தனியாக செல்போன் வாங்கித் தரும் அளவுக்கு வசதியில்லாத ஆறுமுகம், ரூ.20,000 செலவில் ஒரு செல்போன் வாங்கி தனது 3 மகள்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஆனால், மூவருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டதால் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. அதனால் மற்ற இரண்டு சகோதரிகள் தங்களுக்கு தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித் தரும்படி தந்தையிடம் கேட்டிருக்கிறார்கள்.

Also Read: 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை! - பட்டுக்கோட்டை அதிர்ச்சி

ஆனால், அதற்கு வசதியில்லாத ஆறுமுகம், மற்ற இரு மகள்களுக்கும் செல்போனை கொடுத்து அனுசரித்துப் போகும்படி மூத்த மகள் நித்யஸ்ரீயிடம் கூறியிருக்கிறார். அதில் விரக்தியடைந்த நித்தியஸ்ரீ, கடந்த 29-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். வயலில் வேலை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்த ஆறுமுகம், தனது மகள் மயங்கிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் நித்யஸ்ரீயை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

Also Read: கடலூர்: `ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராததால் விரக்தி!' - பள்ளி மாணவர் தற்கொலை

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், அதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருந்த நித்யஸ்ரீ நேற்று (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போனுக்காக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/death/kallakurichi-student-commit-suicide

சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

தமிழகத்தில் கொரோனா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆட்டங்களைத் தொடங்கிவிட்டன. பெரிய கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டு ஒதுக்கலாம் என்பது முதல், தங்கள் கட்சிகளில் யாருக்கு சீட்டுக் கொடுக்கலாம் என்பதுவரை முதற்கட்ட முடிவுகளை எடுத்துவிட்டன. பெரிய கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

காங்கிரஸ், தே.மு.தி.க போன்ற கட்சிகளோ கூட்டணிக் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காண்பிக்க இப்போதே களத்தில் குதித்துவிட்டன. இதுதவிர, கமலின் மக்கள் நீதி மய்யம், ரஜினியை வைத்து மிகப்பெரிய கணக்கோடும் கனவோடும் காத்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இந்தமுறை என்ன செய்யப்போகிறது, தேர்தலையொட்டி அந்தக் கட்சியில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் பிரசாரம்

இயக்கமாகச் செயல்பட்டு வந்த நாம் தமிழர் அமைப்பு, தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பரிணமித்தது 2010-ம் ஆண்டு. தொடர்ந்து நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தல் நேரடியாகப் போட்டியிடாமல் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போட்டிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் என தேர்தல் களத்தில் சில பங்களிப்புகளைச் செய்தது. முதல்முறையாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்து தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. ஒட்டுமொத்தமாக, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சீமான். வட சென்னை தொகுதி வேட்பாளராகக் களமிறங்கிய காளியம்மாள், கட்சி தாண்டி பொதுவான செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக, 16,45,185 வாக்குகள் பெற்றது அந்தக்கட்சி. வாக்கு சதவிகிதம் 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 16 தொகுதிகளில் 50,000-த்துக்கு மேல் வாக்குகளையும் 7 இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது அந்தக்கட்சி. தொடர்ந்து, கடந்தாண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றினர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

2021 என்ன முடிவு?

கடந்த தேர்தல்களைப்போல இந்தமுறையும் தனித்துக் களமிறங்கவே முடிவு செய்திருக்கிறார் சீமான். அவர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கும்கூட தனித்துப் போட்டியிடுவதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள்,``தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டுவதைவிட இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது. தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்துகொண்டே வருவது தொண்டர்களுக்கு ஒருவித சோர்வைத் தந்துவிடும். குறைந்தது 2 எம்.எல்.ஏக்களையாவது பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம். ஒருமுறை உள்ளே நுழைந்து, நம் செயல்பாட்டை மக்கள் பார்த்துவிட்டால் அதற்குப்பிறகு வெற்றிபெறுவது சிரமமல்ல'' என சீமானுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால்,``யாரோடு கூட்டணி வைக்குறது சொல்லுங்க. கூட்டணி வச்சு ஜெயிச்சு உள்ள போயி என்ன பண்றது. சட்டை நிறைய சகதி அள்ளிப் பூசிக்கிட்டு, பிராண்டட், 2,000 ரூபாய் சட்டை ரொம்ப நல்ல சட்டைன்னு சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இங்கிருக்கும் கட்சிகளோட கூட்டணியில் சேர்ந்து ஜெயிச்சு உள்ளே போறதும். நம்ம நாட்டுல, பெரியாரியமும் மார்க்சியமும் வீழ்ந்து போனதே அந்தக் கட்சிகள் அவர்களின் தனித்துவத்தை இழந்ததாலதானே.

Also Read: ``இறைச்சிக்கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்!'' - சீமான் எச்சரிக்கை

நாட்டுல, மத்திய அரசின் எந்தக் கொடுமையான திட்டத்தையும் இன்று கம்யூனிஸ்ட்கள் எதிர்க்க முடியாத நிலையில் இருக்காங்க. இந்தியைத் திணிச்சவங்க கூடவே திராவிடக் கட்சிகள் கூட்டணி வைச்சு அவன் தடையின்றி முழுமையாகத் திணிச்சுட்டான். மாநில உரிமையைப் பறிச்சவன்கூட கூட்டணி வைச்சாங்க. அவன் மொத்தமாக அத்தனை உரிமைகளையும் பறிச்சுட்டுப் போய்ட்டான். அதுமட்டுமல்ல, நான் என் கட்சி மேடையில் பிரபாகரன் படம் வைப்பேன், என் தலைவன் பிரபாகரன்னு சொல்லுவேன், எந்தக் கட்சி அத ஏத்துக்கிட்டு என்கூட கூட்டணி வைப்பாங்க.

என்னுடைய தத்துவத்துக்கு கருத்தியலுக்கு யாரோடும் கூட்டுச் சேர முடியாது. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதே என்னுடைய முதன்மையான கொள்கை. பிறகு, நான் யாரோடு கூட்டணி வைப்பது சொல்லுங்கள். ஓட்டரசியல் எல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் கூட இல்ல, நாலாம்பட்சம்தான் உரிமை அரசியல்தான் எனக்கு முக்கியம்'' எனக் கொந்தளித்திருக்கிறார் சீமான்.

வேட்பாளர் அறிமுகம்

அதனால், இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது முடிவாகிவிட்டது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் என சரிக்கு சமமாக வேட்பாளர்கள் களம்காண இருக்கிறார்கள். வேட்பாளர் தேர்வு முடிவு பெற்று, அவர்களிடம் அந்தத் தகவலும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. பொதுவான அறிவிப்பை தேர்தலையொட்டி சீமான் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு அனைவரும் வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள். பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளர், தொகுதியில் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவரல்லாத வேட்பாளர்கள், அரசியல் ரீதியாக இதுவரை உரிய பிரதிநிதித்துவங்களைப் பெறாத சமூகங்களில் இருந்து வேட்பாளர்கள், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு திருநங்கை வேட்பாளராக நிறுத்தியதைப் போல இந்தத் தேர்தலிலும் பல அதிரடிகள் காத்திருக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

Also Read: பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியினரின் இலக்காக இருந்தது. சீமானும் நாற்பது தொகுதிகளுக்கும் சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள், ஒரேயொரு வீடியோ மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானார். அவர் வெற்றி பெறுவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது என அந்தக் கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 60,000 வாக்குகள் பெற்று நான்காவது இடத்துக்குத்தான் அவரால் வர முடிந்தது. ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சியும் நான்கு சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.

'நாம் தமிழர்' காளியம்மாள்

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வருகையினால்தான் எங்களால் 8 சதவிகித வாக்குகளைப் பெறமுடியவில்லை. அந்தக் கட்சி 4 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட்டது. கிராமங்களில் நாங்கள் அதிகம் வாக்குகள் வாங்க, நகர, மாநகரங்களில் அந்தக் கட்சிக்கு வாக்குகள் வாங்கிவிட்டது. ஆனால், கடந்தமுறை போல, இந்தமுறை விட்டுவிட மாட்டோம். 8 சதவிகித வாக்குகளை நிச்சயம் வாங்கி, அரசியல் அங்கீகாரம் பெறுவோம்.

கடந்தமுறை அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படக் கூடிய தொகுதியான கடலூரில் நின்றார். ஆனால், அங்கு அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க மற்றும் மக்கள் நலக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டியாகிவிட்டது. அதனால்தான் அண்ணனால் 12,000 வாக்குகள் மட்டுமே வாங்க முடிந்தது. இந்தமுறை, அண்ணன் தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியில்தான் நிற்கப் போகிறார். எந்தத் தொகுதியில் அவர் எம்.எல்.ஏ ஆனாலும் எங்கள் கட்சி, தமிழகம் முழுமைக்கும்தான் போராடப் போகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்தமுறை 8 சதவிகித வாக்குகளையும் எங்கள் அண்ணனை எம்.எல்.ஏ ஆக்காமலும் நிச்சயம் ஓயமாட்டோம்'' என்கிறார் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.



source https://www.vikatan.com/news/politics/naam-tamilar-partys-election-strategies-for-2021-assembly-election

`பேருந்துகள் இயக்கம், கோயில்கள் திறப்பு!' - கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ளது. ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல தளர்வுகளுடன் கூடிய எட்டாம் கட்ட ஊரடங்கு இன்று (செப்டம்பர் 1) முதல் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து சேவை

தளர்வுகள் என்னென்ன?

* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அந்தந்த மாவட்ட எல்லைக்குள்ளே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னையிலும் பேருந்துகள் இயக்கப்படும்.

* 07.09.2020 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.

* வணிக வளாகங்கள், மால்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* பூங்காக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும், வேறு மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது .

* பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படத் தடை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கும்.

திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான கட்டுப்பாடுகள்

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்துகொள்ள அனுமதி என்று முன்பிருந்த அதே நடைமுறை தொடரும்.

பூங்கா

மால்கள், பூங்காக்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்

  • பூங்கா, மால்களுக்கு வருபவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்து, உடல் வெப்பநிலை கண்டறிந்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

  • எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் மட்டுமே பூங்கா, மால்களுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவேண்டும்.

  • அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்த வண்ணமே இருக்க வேண்டும்.

  • அனைவரும் 6 அடி தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

  • கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கங்கே பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

  • குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.

  • லிப்ட் மற்றும் எக்ஸலேட்டர்களில் கட்டாயம் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • பூங்காக்களில் செயல்படும் உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

  • குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடையாது.

சினிமா படப்பிடிப்பில் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?

தயாராகும் மால்கள்
  • 75 நபர்களுக்கு மிகாமல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் .

  • பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

  • படப்பிடிப்பு பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

  • 6 அடி தனிமனித இடைவேளையைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளைச் சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.

  • அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவேண்டும். அதோடு எவ்வித அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் .

  • பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

  • நோய்க் கட்டுப்பாடு பகுதியில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது.

பேருந்துகளில் கடைப்பிடிக்க வேண்டியவை

  • பேருந்துகளைப் பொறுத்தமட்டில், ஒரு இருக்கைக்கு மற்றொரு இருக்கைக்கும் இடைவெளிகள் இருக்க வேண்டும்.

  • ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படப் பின்னரே பேருந்தில் ஏற அனுமதியளிக்கப்படும்.

  • ஒரு பேருந்தில் குறைந்த அளவான பயணிகளை மட்டுமே ஏற்றவேண்டும்.

கிருமிநாசினி தெளிக்கப்படும் பேருந்துகள்
  • பேருந்தில் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

  • பேருந்துகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

  • பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என பல்வேறு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கடந்த முறை பேருந்து இயங்க அனுமதியளித்த போது அரசு கூறியிருந்தது.

Also Read: `சொந்தக் காசில் பயணிகளுக்கு இலவச சேவை!'- நெகிழவைக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

வழிபட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நடைமுறைகள்

தஞ்சை பெரிய கோயில்
  • கோயில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே செல்லும் அனைவரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட வேண்டும். கைகளைக் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

  • உள்ளே வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். அதோடு, கட்டாயம் ஆறு அடி தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

  • பூஜை மற்றும் அபிஷேகத்தின் போது, உள்ளே அமர்ந்து தரிசனம் செய்யக் கூடாது.

  • இயல்புநிலை திரும்பும்வரை திருவிழாக்கள், ஊர்வலங்கள் ஆகியன தடை செய்யப்படுகின்றன.

  • வழிபட்டுத் தல வளாகங்களில் உட்கார்ந்து உணவருந்தத் தடை.

  • ஒரு நேரத்தில் ஒரேயொரு திருமணம் நடத்த மட்டும் அனுமதி. ஆலய வளாகத்துக்குள் நடக்கும் திருமணங்களில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்

  • தீர்த்தக் குளத்தைப் பக்தர்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

  • நோய் கட்டுப்பட்டு பகுதியில் உள்ள வழிபட்டு தலங்கள் இயங்க அனுமதி கிடையாது.

  • உள்ளே செயல்படும் கடைகள் தனிமனித இடைவெளியுடன் செயல்பட அனுமதி.

  • வளாகங்களை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

  • மசூதிக்கு வருபவர்கள் அவர்களே தொழுகை விரிப்புகளைக் கொண்டுவரவேண்டும்.

  • முடிந்தவரை வீட்டிலேயே வழிபாடுகளை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

தடை நீட்டிக்கப்பட்டவை

தடைசெய்யப்பட்ட பகுதி
  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை நீடிக்கும்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tn-governments-sops-for-temples-malls

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்...கோயில்கள் திறப்பு! #NowAtVikatan

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்...கோயில்கள் திறப்பு!

கோயில் திறப்பு

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்துகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்து சேவை தொடங்கியது. அதேபோல், தமிழகம் முழுவதும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

Also Read: `பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,91,167-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65,288-ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read: ``தீபாவளிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்!" மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்



source https://www.vikatan.com/news/general-news/01-09-2020-just-in-updates

நிரம்பி வழியும் படுக்கைகள், இரண்டாம் அலை ஆபத்து... மருத்துவர்களின் அலெர்ட்!

ஐ.பி.எல் தொடருக்காகத் துபாய் சென்றிருக்கும் சி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டதும் தமிழக ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சி. இதனால் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா இல்லையா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் வேளையில், இதன் மற்றொரு பரிமாணத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. துபாய்க்கு செல்வதற்கு முன்பாகவே, சென்னையில் தனித்திருந்து பயிற்சியையும் தயாரிப்புப் பணிகளையும் சி.எஸ்.கே அணியினர் மேற்கொண்டனர்.

துபாய்க்கும் தனி விமானத்தில் சென்றனர். அங்கு சென்ற பிறகும் தனிமைப்படுத்தப்பட்டனர். உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தும், அதிக பாதுகாப்புடன் இருக்கும் விளையாட்டு அணியிலேயே 13 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றால், நாட்டின் நிலையையும் நோய் பரவும் தீவிரத்தையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கைக் குறைவு, இறப்பு விகிதம் குறைவு, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகம் என்று மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகளே பரப்பப்பட்டு வருகின்றன.

`பொறுப்பில்லாத நபர்கள்தாம் காரணம்?!'

இதன் காரணமாக பொது முடக்கத்தில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் இருந்த பயமும் விழிப்புணர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்றுதான் கூற வேண்டும். திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. பிற அனைத்து நடவடிக்கைகளும் முழுவதுமாகவோ தளர்வுகளுடனோ செயல்படும் என ஊரடங்கு 4.0-வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``பொறுப்பில்லாத நபர்களால்தாம் இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று முன்னோக்கி உந்தப்படுகிறது. இந்த விஷயத்தில் முதியோர், இளைஞர் என்ற பேதம் இல்லை. முகக்கவசம் அணியாத, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படும் பொறுப்பில்லாத நபர்கள்தாம் இதற்குக் காரணம்" - இந்திய மருத்துவ கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா அண்மையில் தெரிவித்த கருத்து இது.

People shop for fish at a market in Kolkata, India

அண்மையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ``இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 76.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் மிகவும் குறைவாக இந்தியாவில் இறப்புவிகிதம் 1.82 சதவிகிதமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்கு, பிற நாடுகளைவிட இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. இருப்பினும், இந்தப் பெருந்தொற்றை அலட்சியமாக அணுகக் கூடாது" என்று எச்சரித்துள்ளார்.

60 சதவிகிதம் பேருக்கு பாதிப்பு!

அரசிடமிருந்து வரும் பாசிட்டிவ் தகவல்கள், ஊரடங்கில் தளர்வுகள் என அனைத்தும் நோயின் பாதிப்பு குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகின்றனவா என மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் அறத்திடம் கேட்டோம்.

``அண்மையில் மும்பை தாராவி பகுதியில் கோவிட்-19 ஆன்டிபாடி பரிசோதனை செய்யும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 56-60 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடி வந்துவிட்டது கண்டறியப்பட்டது. அதாவது, 60 சதவிகிதம் பேர் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கோவிட்-19-க்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி என்ற நிலையில், சுமார் 34 லட்சம் பேர், அதாவது வெறும் 0.2 சதவிகிதம் பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Health Worker in Delhi

ஆனால், களத்தில் நடத்தப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனைகளின் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. டெல்லியில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே 22 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் அண்மையில் இரண்டாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மும்பை நகரில் 30 சதவிகிதம், குடிசை வாழ்ப் பகுதியில் 60 சதவிகிதம் என்று அறியப்பட்டுள்ளது.

ஆன்டிபாடி பரிசோதனை செய்யப்பட்டால்தான், கோவிட்-19 பாசிட்டிவ் ஆன நபர்களைக் கண்டறிவதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும். தமிழகத்தில் ஆன்டிபாடி கண்டறியும் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர். கோவிட்-19-க்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையைப் பொறுத்தவரை 60 சதவிகம்தான் சரியான முடிவு கிடைக்கிறது. மீதம் 40 சதவிகிதம் முடிவுகள் தவறாக வருகின்றன.

Medical Activist Dr.Aram

தவறவிடும் அரசு!

அனைத்து காய்ச்சல் நோயாளிகளுக்கும் ரத்தத்தில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிக்கும் முழுமையான செல் எண்ணிக்கை (Complete Blood Count) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பரிசோதனையில் வெள்ளையணுக்களின் உட்பிரிவான லிம்போசைட்ஸ் (Lymphocytes) என்ற கூறு 20 சதவிகிதத்துக்கும் மேல் இருக்க வேண்டும். அதே போல c-reactive protein test (CRP) என்ற ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இதன் முடிவு 6-க்கு கீழ்தான் இருக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்று உள்ளவர்களுக்கு இரண்டிலும் மாறுபாடுகள் காணப்படும். பரிசோதனையில் லிம்போசைட்ஸ் 20 சதவிகித்துக்கும் கீழாகவும், சி.ஆர்.பி பரிசோதனையில் 6-க்கும் மேல் சென்றால் கொரோனாவாக இருக்கலாம் என்று சந்தேகித்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

இந்த இரண்டுப் பரிசோதனைகளையும் செய்யும் கருவி தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. தனியாரில் செய்தால்கூட சில நூறு ரூபாய் செலவில் செய்துவிட முடியும். ஆனால், எளிமையாகக் கண்டறிய உதவும் இந்தப் பரிசோதனைகளை அரசு ஊக்கப்படுத்துவதில்லை. இருமல், சளி இருக்கும் நோயாளிகளுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்து நுரையீரலில் கோவிட்-19 தொற்று உள்ளதா என்று கண்டறியலாம். இந்தப் பரிசோதனை ஆய்வக வசதி அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் உள்ளது. ஆனால், அதையும் பரிசோதனைக்காகப் பயன்படுத்தும்படி அரசு ஊக்கப்படுத்துவதில்லை.

a person waits to give nasal swab sample for a COVID- 19 antigen test inside a mobile lab in New Delhi, India

தவறான கணக்கீடுகள்

கோவிட்-19 தொற்றுள்ளவர்களைக் கண்டறிவதையே மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஆர்.டி.பி.சி.ஆர் முறை பரிசோதனையில் கண்டறியப்படும் நோயாளிகள், கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுபவர்கள், சி.டி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்படுபவர்கள். இத்துடன் சி.டி ஸ்கேன் மூலம் கண்டறிபவர்களை கிளினிக்கல் கோவிட்-19 என்று பிரிக்க வேண்டும். ஆனால், அரசு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் வருபவர்களை மட்டுமே நோயாளிகள் என்று கணக்கில் காட்டுகிறது.

மீதம் உள்ளவர்களைக் கணக்கிலும் காட்டுவதில்லை. அவர்கள் சிகிச்சைக்காகக் கண்காணிக்கப்படுகின்றனரா என்பது கேள்விக்குறியே. இறப்பு விகிதமும் இதே முறையில்தான் பதிவு செய்யப்படுகிறது. இதனால் கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இறந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு மருத்துவப் பிரச்னைகளும் இருந்து இறந்தவர்கள் யாரையும் கோவிட்-19 இறப்பாகப் பதிவு செய்வதில்லை. இதையெல்லாம் சேர்த்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்கிறார்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பேசியுள்ள ஹர்ஷ்வர்தன், ``இந்தியாவில் வரும் தீபாவளிக்குள் கோவிட்-19 கணிசமான அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தலைவர்களும் பொதுமக்களும் சிறப்பாக இணைந்து செயல்பட்டு பெருந்தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகப் போரிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறியது போன்று பெருந்தொற்றுப் பரவல் குறைந்துகொண்டு வருகிறதா என்று தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்.

``கடந்த 15 நாள்களுக்கு முன்பெல்லாம் கோவிட்-19 சிகிச்சைக்காகப் படுக்கைகள் காலியாக இருந்தன. ஆனால், தற்போது படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. முன்பெல்லாம் சில மருத்துவமனைகள் மட்டும்தான் கோவிட்-19-க்கு சிகிச்சையளித்தனர். இப்போது சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்தும்கூட படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்

Infectious disease expert Dr.Sureshkumar

ஜெர்மனி, கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் முதல்நிலையைக் கடந்துவிட்டன. அதாவது, குறிப்பிட்ட சில நாள்கள் நோய்த்தொற்று எண்ணிக்கையே இல்லாமல் இருந்தன. அதற்குப் பிறகு, இரண்டாம் அலை ஏற்பட்டு புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால், நாம் இன்னும் முதல் அலையின் உச்சநிலைக்கே இப்போதுதான் சென்றுகொண்டிருக்கிறோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். அது முதல் அலையைவிட தீவிரமானதாக இருக்கக்கூடும்.

மக்கள் பொறுப்பற்றவர்களா?

சுமார் ஐந்து மாதங்களாக பொதுமுடக்கம் செய்துவிட்டோம். இனியும் இதை நீட்டிக்க முடியாது என்பது உண்மைதான். நோய் சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டது என்று அறிவித்து, அதற்கேற்றாற்போல் எப்படி வாழ வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சமூகப் பரவல் நிலையே அடையவில்லை, தடுப்பூசி விரைவில் வந்துவிடும் என்பன போன்ற தகவல்கள்தான் பரப்பப்படுகின்றன. இறப்பு விகிதம், தொற்றாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நம்மைவிட மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுவதே தவறான விஷயம்தான்.

Migrant laborers returning to the city for work undergo COVID-19 test in New Delhi, India

Also Read: கோவிட்-19 க்ளெய்ம் பெறுவதில் என்ன சிக்கல்? - கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இதுபோன்ற தவறான ஒப்பீடுகளை வெளியிடுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் குறைக்கும். இந்த நிலையில் மக்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குச் சென்றடைய வேண்டிய தகவல்கள், ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு சரியாகச் சென்று சேரவில்லை. அதனால்தான் மக்கள் இயல்பாக இருக்க ஆரம்பித்துவிட்டனர்" என்கிறார்.

நோயின் தீவிரம் குறைந்துவிட்டது என்றோ, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றோ ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் மேலும் சரியக் கூடாது என்றுதான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதை உணர்ந்து கைகழுவுதல், முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் இந்த மூன்று விஷயங்களையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/experts-alerts-on-second-wave-of-covid-19-cases-aftermath-lockdown-relaxations

`சேதப்படுத்தப்பட்டதா பென்னிகுவிக் கல்லறை?' - லண்டனிலிருந்து ஒரு ரிப்போர்ட்

தென்மாவட்ட விவசாயிகளால் `தெய்வம்’ எனக் கொண்டாடப்படுபவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். ஆங்கிலேய அரசில் பொறியாளராகப் பணியாற்றிய பென்னிகுவிக், தன் சொத்துகளை விற்று, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியெழுப்பினார். இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்து, மனிதக் கடவுளாக இன்றளவும் போற்றப்படுகிறார்.

பென்னிகுவிக் கல்லறை; முன்பும் பின்பும்

தேனி மாவட்டம், கூடலூரில் பென்னிகுவிக்குக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு, ஆளுயர வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவரது பிறந்ததினமான ஜனவரி 15-ம் தேதியை, திருவிழாவாக தேனி மக்கள் கொண்டாடுகின்றனர். தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பென்னிகுவிக், மார்ச் 11, 1913-ல் லண்டனில் காலமானார். இவரது உடல், இங்கிலாந்தின் சர்ரே மாகாணத்தில், பிர்ம்லி நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது கல்லறையை சிலர் சேதப்படுத்திவிட்டதாகத் தகவல் பரவி, பரபரப்பானது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க தலைவர் வைகோ உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட செய்தியால், தென்மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

Also Read: பென்னி குயிக் கல்லறையைப் பாதுகாக்க ஒரு பொங்கல் விழா!

எம்.ஜி.ஆர் மக்கள் மன்றத் தலைவர், எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தற்சமயம் லண்டனில் இருக்கிறார். பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட செய்தியை அறிந்தவுடன், அக்கல்லறைக்கு நேரடி விசிட் அடித்துள்ளார். `உண்மையிலேயே பென்னிகுவிக் கல்லறை எந்த நிலையில் இருக்கிறது?’ என்று புகழேந்தியிடம் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாகப் பேசினோம்.

பென்னிகுவிக் கல்லறையில் புகழேந்தி

``செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறை தோட்டத்தில்தான் பென்னிகுவிக்கின் கல்லறை இருக்கிறது. கல்லறைத் தோட்டத்துக்குள் அனுமதியின்றி யாரும் நுழைந்துவிட முடியாது. பென்னிகுவிக்கின் கல்லறையை, சுண்ணாம்பு கலந்த கல்லால் கட்டியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இங்கு கடும் மழை பெய்துவருகிறது. 100 வருடங்கள் பழைமையான கல்லறை என்பதால், இயற்கையாகவே கல்லறையின் தூண் உடைந்து சரிந்திருப்பதைக் காண முடிகிறது. கல்லறைத் தோட்ட காவலாளிகளிடமும், தேவாலயத்தில் வசிப்பவர்களிடமும் பேசினேன். `யாரும் கல்லறையை உடைக்கவில்லை. இது இயற்கையான விபத்துதான்’ என்று அவர்கள் விளக்கமளித்தனர். அய்யா பென்னிகுவிக்கின் கல்லறை மிகப் பாதுகாப்பாக இருக்கிறது.

Also Read: `பென்னிகுவிக் பிறந்தநாளுக்கு பொங்கல்வைத்துக் கொண்டாடிய மக்கள்!

கல்லறையை மீண்டும் புதுப்பிக்க இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 ரூபாய் தேவைப்படும் எனத் தெரிகிறது. `அதற்கான முழுச் செலவையும் நானே ஏற்கிறேன். கல்லறையை மீண்டும் புனரமைக்க அனுமதி தாருங்கள்’ என செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறேன். பாதிரியார் தரப்பிடம் பேசிவிட்டுக் கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நம் தமிழ் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். தென்மாவட்டங்களின் குலதெய்வமாகப் போற்றப்படும் பென்னிகுவிக்கின் கல்லறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும்’’ என்றார்.

பென்னிகுவிக் கல்லறை

ஜான் பென்னிகுவிக் கல்லறையின் மீது, `ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு’ என்கிற திருக்குறள் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, `ஏழைகளுக்குக் கொடுக்கும் கொடையும், அதனால் கிடைக்கும் புகழும் தவிர ஒரு மனிதருக்கு பயன் தரக்கூடியது வேறெதுவும் இல்லை’ என்பதுதான் இக்குறளின் பொருள். இதற்கேற்ப வாழ்ந்து மறைந்திருக்கிறார் பென்னிகுவிக். அவர் நினைவிடம் எங்கிருந்தாலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



source https://www.vikatan.com/news/politics/does-john-pennycuick-cemetery-damaged-by-unidentified-persons

தங்க கடன் பத்திர விற்பனை ஆரம்பம்... குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கத்தில் முதலீடு செய்வது மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற முதலீடு தங்க கடன் பத்திரம் (Sovereign Gold Bond). இதன் ஆறாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, நேற்று (ஆகஸ்ட் 31, 2020) தொடங்கியுள்ளது. இதில் செப்டம்பர் 6 வரை முதலீடு செய்யலாம்.

கிராம் ரூ. 5,117

இதில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறைந்த அளவாக, ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ.5,117 (24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை) இருந்தால் போதும். இதில் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) தனிநபர் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் உங்கள் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம்

தங்க நகையாக வாங்கும் போது உள்ள கொடுக்கும் செய்கூலி, சேதாரம் இதில் இல்லை. இதில், தங்கமாக தரமாட்டார்கள். விற்கும் போது பணமாக தருவார்கள். அதனைக் கொண்டு நீங்கள்தான் தேவைப்பட்டால் நகையாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமாக கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்தத் தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத்தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும். முதலீட்டை 8 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம்.

தங்கம்

ஐந்தாண்டுகள் `லாக்இன்' காலம் இருக்கிறது. இது கடந்த பிறகு, பணம் தேவைப்படும்பட்சத்தில் எப்போது வேண்டுமானலும் விற்று பணமாக்கிக் கொள்ள முடியும். மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

ஆன்லைன் மூலம் முதலீடு

கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக இந்தத் தங்க கடன் பத்திரங்களை கொடுக்கலாம்.

ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது கிராம் ஒன்றுக்கு விலையில் ரூ. 50 தள்ளுபடி கிடைக்கும். ஆன்லைன் மூலம் இந்த கோல்டு பாண்டை வாங்க டீமேட் என்கிற மின்னணு கணக்கு தேவை.

இந்தத் தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாகத் தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்



source https://www.vikatan.com/business/investment/sovereign-gold-bonds-open-for-subscription-details

இந்த வார ராசிபலன்... செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-for-the-period-of-september-1st-to-6th

வீட்டுக்குள்ளேயே விகடன்

வீட்டுக்குள்ளேயே விகடன்


source https://www.vikatan.com/news/announcements/vikatan-at-your-home-23

MOTOR VIKATAN : Jointly presents... Career Opportunities in Car Designing

Car Designing


source https://www.vikatan.com/news/announcements/online-workshop

ஹலோ வாசகர்களே...

ஹலோ வாசகர்களே


source https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-188

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சுவர் கட்டும் குன்னூர் நகராட்சி... எப்படி சாத்தியமானது? (படங்களில்)

பிளாஸ்டிக் கழிவுகள்

மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து எடுக்கும் பணியாளர்கள்.

கம்ப்ரஸ் இயந்திரம்

கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.

Plastic Reuse

கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.

Plastic building

கம்ப்ரஸ் செய்வதற்காக இயந்திரத்தில் நிரப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.

Compressed plastic

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.

பிளாஸ்டிக்

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, உறுதியான பொதியாக மாற்றி, கம்பியைக் கொண்டு கட்டும் பணியாளர்கள்.

பிளாஸ்டிக் பொதிகள்

கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு, உறுதியான பொதியாக மாற்றி, கம்பியைக் கொண்டு கட்டும் பணியாளர்கள்.

மறுபயன்பாடு

உறுதியான பொதியாக கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு.

இறுதி வடிவம்

உறுதியான பொதியாக கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு.

பிளாஸ்டிக் சுவர்

சோதனை முயற்சியாகக் கட்டப்பட்டுள்ள சுவர்.



source https://www.vikatan.com/news/album/coonoor-municipality-construct-walls-from-plastic-waste-photos

``சிலருக்கு வெற்றி தலைக்கேறி விடுகிறது..!'' - ரெய்னா குறித்து ஸ்ரீனிவாசன்

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் சர்ச்சைகளால் சூழப்பட்டிருக்கிறது. அனைத்து அணிகளும் பயிற்சிகளை தொடங்கியிருக்கின்றன. ஆனால், சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதால் மொத்த அணியும் ஹோட்டல் அறைகளில் முடங்கியிருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த ஷாக் பத்தாது என 'ரெய்னா இந்த சீசனில் பங்கேற்க மாட்டார்' என்ற அடுத்த அதிர்ச்சி செய்தியும் வெளிவந்தது. முதலில் தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா வெளியேறியதாக சிஎஸ்கே தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்போது பின்னணியில் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த விரிவான கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: ``தோனி மட்டும் ஸ்பெஷலா?'' கோபத்தால் கரியரையே முடித்துக்கொண்ட ரெய்னா! #SureshRaina #CSK

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா பிரச்னை குறித்து பிரபல ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு (Outlook) பேட்டி அளித்திருக்கிறார்.
தோனி, ஸ்ரீனிவாசன்

"அந்த காலத்து நடிகர்கள் போல 'தான் ஒரு பெரிய நட்சத்திரம்' என அதிக பந்தா காட்டுகின்றனர் சில கிரிக்கெட் வீரர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றுமே ஒரு குடும்பம் போல ஒன்றாகவே இருந்திருக்கிறது. மூத்த வீரர்கள், இளைய வீர்ர்கள் என அனைவருமே ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்படுவது எப்படி எனக் கற்றுக்கொண்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரையில் யாருக்காவது தயக்கம் இருந்தாலோ, திருப்தி இல்லையென்றாலோ விலகிவிடுங்கள் என்றுதான் சொல்லுவேன். நான் யாரையும் எதையும் செய்ய வற்புறுத்துவதில்லை. சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது... அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது" என்று ரெய்னா வெளியேறியது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஸ்ரீனிவாசனின் இந்தப் பேட்டி கிரிக்கெட் உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Suresh Raina
கொரோனா பிரச்னை குறித்தும் ரெய்னா வெளியேறியது குறித்தும் தோனியுடன் பேசியதாகவும் அவர் எப்போதும் போல இதையும் கூலாக கையாண்டு வருவதாகவும் மொத்த அணியும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

"தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலைப்பட ஒன்றுமில்லை என எனக்கு உறுதியளித்துள்ளார் தோனி. இந்த பின்னடைவுகளுக்கு நடுவே வீரர்களுடன் ஜூம் கால் ஒன்றில் அவர் பேசியிருக்கிறார். யாருக்குத் தொற்று இருக்கிறது, இல்லை எனத் தெரியாது என்பதால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவருமே இளம் வீரர்கள் என்பதால் விரைவில் குணமாகிவிடுவார்கள் என்றும் என்னிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தோனி."

Dhoni

மேலும் பேசுகையில் ரெய்னா வெளியேறியது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

"சிஎஸ்கேவில் சிறந்த வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இளம் வீரர்களில் ஒருவரான ருத்துராஜ் கேய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேன். இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. இந்த சீசனில் அவர் பெரிய ஸ்டாராக உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."

"இன்னும் சீசன் தொடங்கவே இல்லை. அதற்குள்ளாகவே விலகிவிட்டார் ரெய்னா. பணம் உட்பட எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பது ரெய்னாவுக்கு சீக்கிரம் புரியும்." என்றும் கூறியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஆடுவதற்காக ஒரு சீசனுக்கு 11 கோடி ரூபாய் ரெய்னா பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://sports.vikatan.com/cricket/csk-owner-n-srinivasan-opens-up-on-raina-controversy