Ad

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்...கோயில்கள் திறப்பு! #NowAtVikatan

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்...கோயில்கள் திறப்பு!

கோயில் திறப்பு

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்துகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் பேருந்து சேவை தொடங்கியது. அதேபோல், தமிழகம் முழுவதும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

Also Read: `பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,91,167-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65,288-ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read: ``தீபாவளிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்!" மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்



source https://www.vikatan.com/news/general-news/01-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக