Ad

புதன், 30 நவம்பர், 2022

பிக் பாஸ் 6, நாள் 52: இரண்டாவது முறையாகக் கோபப்பட்ட கதிரவன்; புரொமோ கன்டென்ட் தரும் அசிமின் அழுகை!

இந்த சீசனில் இதுவரை நடந்த எந்தவொரு வார டாஸ்க்கிலும் சுவையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை. மாறாகச் சண்டையும் கத்தலும் மட்டுமே பார்க்கக் கிடைத்தது. அந்த வகையில் ‘செம போர்’ என்கிற பெயரை இந்த சீசன் பெறக்கூடும். கமலின் ஆருடம் பலிக்கக்கூடும்.

அசிமை மறந்து போய் கூட பாராட்ட முடியவில்லை. அடுத்த நிமிடமே தன் சுயரூபத்தைக் காட்டுகிறார். கடந்த வாரத்தில் வாலைச் சற்று சுருட்டி வைத்திருந்தவர், இந்த வாரத்தில் மீண்டும் மிருகத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அவரின் அநாகரிகமான பேச்சை விக்ரமனும் அமுதவாணனும் ஆட்சேபிக்கும் போது ‘அதையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன்’ என்று அசிம் எகத்தாளமாகச் சொல்வதிலிருந்து ஒன்று தெரிகிறது. அசிமும் தனலஷ்மியும் ஆதாரமாக ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தாம் கத்தி சண்டை போடுவதை விசாரணை நாளில் ‘லுலுவாய்க்கு’ கண்டிப்பார்களே ஒழிய, தாங்கள்தான் ‘இந்த சீசனின் கன்டென்ட் சப்ளையர்கள். எனவே வெளியில் அனுப்ப மாட்டார்கள்’ என்று திட்டமிட்டிருக்கிறார்கள் போல.

பிக் பாஸ் 6, நாள் 52

நாள் 52-ல் நடந்தது என்ன?

‘சுமார் ஆக்ஷன் ஆசாமி’ என்று நாம் நினைத்திருந்த ராம், எப்படியோ வெற்றி பெற்று பூவை எடுத்து வந்தார். அதை ‘போக பிஸ்ஸா’ என்னும் ஜேஜாவின் பசிக்கு விருந்தாகப் படைத்தவுடன் அவரும் கற்களை உருவாக்குவதற்கான ரத்தினங்களையும் மண்ணையும் அள்ளி வழங்கினார். (சாமி கூட ‘கவனிச்சாதான்’ ஆசி தரும் போல. பழங்குடி காலத்துல இருந்தே இப்படித்தான் இருந்திருக்கு!).

அடுத்ததாக வீட்டுக்குள் சென்ற விக்ரமன், பூவைப் பறிக்கிறேன் என்று இலையைப் பறித்து விட்டு ஜாலியாக டார்ச்சர் நாற்காலியை நோக்கி நகர்ந்தார். “க்வீன்சி இளவரசி தேர்வில் ஏன் நீங்கக் கையைத் தூக்கலை... ‘நீதான் இளவரசியா இருந்திருக்கணும்'ன்னு அவ கிட்ட சொல்லி ஏன் உசுப்பி விட்டீங்க..?” என்று பழைய கதையை உதறி விக்ரமனைக் கோபப்பட வைக்க முயன்றார் அமுதவாணன்.

தனலஷ்மியின் ‘ஓவர் ஆக்டிங்’ டார்ச்சர்

‘ஒரு ரூபா கொடுத்தா நூறு ரூபாய்க்கு நடிப்பார்’ என்று சில நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கைக் கிண்டல் செய்வார்கள். இந்தச் சமயத்தில் தனலஷ்மி செய்த முயற்சியும் அப்படித்தான் இருந்தது. “அப்படின்னா என் பின்னாடி புறணி பேசியிருக்கீங்களா... ஏன் க்வீன்சியை ஏத்தி விட்டீங்க. பூவை கூட நீங்க எடுத்துட்டு போங்க... இந்த கேமை நிறுத்துங்க” என்றெல்லாம் அவர் விக்ரமனிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது, நில நடுக்கம் வந்தது போல் தொலைக்காட்சிப் பெட்டியே ஆடி அடங்கியது. ஆனால் தனலஷ்மியின் ஓவர் ஆக்டிங் செல்லுபடியாகவில்லை. சிரித்து சமாளித்தே வெற்றி பெற்றார் விக்ரமன்.

பூ ஒன்றைக் கொடுத்து விக்ரமனை ஏலியன்ஸ் வெளியே அனுப்பும் போது ‘டபக்’கென்று யாருக்கும் தெரியாமல் இன்னொரு பூவையும் அவர் லவட்டி விட்டார். (ரொம்ப அப்பாவி ஏலியன்ஸா இருக்காங்க!). வெளியில் சென்ற விக்ரமன், இரண்டு பூக்களையும் உயரத் தூக்கி, ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மான் மாதிரி உற்சாகமாகக் கத்தினார். “இந்தத் திருட்டை போக பிஸ்ஸா ஏற்றுக் கொள்ளாது பாருங்க...” என்று ஏமாற்றத்தில் ஏலியன்ஸ் கத்த, பழங்குடிகளின் தெய்வத்திற்கு ரொம்பப் பசி போலிருக்கிறது. ‘திருட்டுப்பூவாக இருந்தாலும் பரவாயில்லை... கொடுங்கடா” என்று அதையும் வாங்கி ஏப்பம் விட்டது.

பிக் பாஸ் 6, நாள் 52

கலவரத்தில் இரண்டு பட்ட வீடு – பீதியடைந்த போக பிஸ்ஸா

அடுத்ததாகப் பழங்குடிகளின் தரப்பிலிருந்து மைனா திமிறிக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். இந்தச் சமயத்தில் ரச்சிதா வெளியே இருந்ததால் கோபம் கொண்ட அசிம் தானும் உள்ளே புகுந்து பூக்களைத் திருடினார். இதனால் அமுதவாணனுக்கும் அசிமிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது இன்னமும் உக்கிரமாகப் பரவி இரண்டு அணிகளுக்குமான கலவரமாக மாறியது. ஆயிஷா ஒரு பக்கம் கத்த “என் கிட்டயும் சீப்பு இருக்கு... நாங்களும் தலை சீவுவோம்” என்று அதையும் விட ஹைடெஸிபலில் வெறித்தனமாக தனலஷ்மி கத்த... போக பிஸ்ஸாவிற்கே ஒரு கணம் பீதி வந்திருக்கும்.

“என்னை போடான்னு சொல்லுவியா... உன்னை விட வயசுல மூத்தவன்’ என்று தனலஷ்மியிடம் ஏடிகே எகிற ‘நான் போடான்னு சொன்னேனா. சரியா கேட்டீங்களா?” என்று வெறித்தனம் குறையாமல் பதில் சொன்னார் தனலஷ்மி. ஏடிகே விடாமல் மல்லுக்கட்ட, பிறகு தனலஷ்மி ‘ஏ... போ...’ என்று கோபம் குறையாமல் சொன்ன அந்தத் தொனி இருக்கிறதே... ‘போடா’வை விடவும் மரியாதைக் குறைவானதாக இருந்தது. பாவம் ஏடிகே. முதல் ‘போ’வோடு விட்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். வழக்கம்போல் இதற்கும் விக்ரமன் வந்து சமாதானம் செய்து வைத்தார். (இந்த வருடத்தின் அமைதிக்கான ‘நோபல் பரிசை’ இவருக்கு வழங்கி மகிழலாம்!).

அடுத்ததாக ஏலியன்ஸ் தரப்பிலிருந்து ஆயிஷா வெளியே வந்தார். வெளியே வரவழைக்கப்பட்டார் என்றும் சொல்லலாம். ‘சிரிச்சா மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு’ ஆயிஷா நாற்காலியில் அமர ‘உன் டிரஸ்ஸை நான் கிழிச்சேனா..?’ என்று விதம் விதமாக அவரைக் கேள்வி கேட்டு சாஃப்ட்டாக டார்ச்சர் செய்தார் ஏடிகே. ஆயிஷாவின் முகம் மாறவில்லை. ஆனால் பழங்குடிகளோ ‘ஆயிஷா கோபப்பட்டாங்க’ என்று தீர்ப்பு சொல்ல அதை பிக் பாஸ் ஏற்றுக் கொண்டார். நாம் பார்த்தவரை ஆயிஷா ரியாக்ட் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

‘அசிமை லூஸூன்னு சொன்னியா’ – தனலஷ்மியின் விசாரணை

ஒருவழியாக டாஸ்க் தற்காலிக ஓய்விற்கு வந்தது. தனலஷ்மியின் அட்ராசிட்டியைப் பற்றி ராமிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “நீ எப்ப அசிமை லூஸூன்னு சொன்னே?” என்று இன்னொரு பக்கம் ஜனனியை விசாரித்துக் கொண்டிருந்தார் தனலஷ்மி. “அவர்தான் என்னை அண்ணா என்று கூப்பிட வேண்டாம், அசிம் என்று கூப்பிடலாம்ன்னு சொன்னவர்" என்பதை நூற்றுப் பதினாறாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. "அசிம் சார் என்றா கூப்பிட முடியும்?” என்பதும் அம்மணியின் கேள்வி. பதில் மொய் வைக்கும் விதமாக, தான் ஏடிகேவுடன் போட்ட சண்டையை விதம் விதமாக நியாயப்படுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. ‘கோபத்துல ஏய்...ன்னுதானே சொல்லுவாங்க?’ என்று அவர் சொல்ல, ஜனனி அமைதியாக இருந்து தப்பித்தார். இப்படியாகப் பரஸ்பரம் இருவரும் தங்களின் விழுப்புண்களைத் தடவி ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் 6, நாள் 52

இன்னொரு அமைதிப் புறாவான கதிரவன் ‘நான் வேணா ஏடிகே கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?’ என்று தனலஷ்மியிடம் கேட்க “ஒண்ணும் தேவையில்ல. கேமிற்காக டிரஸ்ஸைப் பிடிச்சு இழுக்கலாமா?” என்று வீம்பு காட்டினார் தனலஷ்மி. “காலை நாலரை மணிக்கு யாரா இருந்தாலும் மரண தூக்கம் வரும்... அப்ப தூக்கிடலாம்” என்று மணி போட்ட பிளானை, ஏலியன்ஸ் உற்சாகமாக ஆமோதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மணியே அந்தச் சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தார் என்பதுதான் காமெடி.

அசிமின் ஆக்ரோஷமான ஆட்டமுறை பற்றி கதிரவனுக்கு விமர்சனம் இருந்தது. அதைப் பற்றி அவர் அசிமிடம் வெளிப்படுத்த இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழுந்தது. கௌதம் மேனன் படம் மாதிரி திடீரென்று ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக் கோபப்பட்டார் கதிரவன். இந்த சீசனில் அவர் கோபப்படுவது இது இரண்டாவது முறை. “ஓகே... நீ தனியாவே ஆடு" என்று அசிமிடம் எரிச்சலாகச் சொல்லி விட்டு விலகினார் கதிர். கண்ணாடி கதவின் அருகே ஏலியன்ஸ் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதை ஆட்சேபித்த ஏடிகே, தானும் பதிலுக்குக் குடைகளைச் செருகி கதவுக்குத் தடை ஏற்படுத்தினார். (குடை - தடை... ரைமிங்கா இருக்குல்ல!).

‘எக்ஸ்க்யூஸ்மி... நான் திருட உள்ளே வரலாமா?’ – அசிம் காமெடி

பெரும்பாலும் ரணகளமாகச் சென்று கொண்டிருந்த காட்சிகளின் இடையில் நடந்த இந்தக் காமெடிக் காட்சி பெரிய ஆறுதலை அளித்தது. கண்ணாடிக் கதவைச் சற்று திறந்த அசிம், “எக்ஸ்க்யூஸ்மி... நான் திருட வந்திருக்கேண்டா. மே ஐ கம் இன்?” என்பது போல் மணிகண்டனிடம் கேட்க, அவரோ “நான் தூங்கிட்டப்புறம் வா... இப்ப போ” என்று ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்தார். “எனக்கு பூ வேணும்டா...” என்று அசிம் அடம் பிடிக்க “எத்தனை முழம் வேணும்?” என்று மணிகண்டன் காமெடி செய்ய ரச்சிதாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை. அசிமின் இம்சை தாங்காமல் ‘சரி வா... கேம் ஆடலாம்’ என்று கொட்டாவி அலுப்புடன் சொன்னார் மணிகண்டன்.

பிக் பாஸ் 6, நாள் 52
காலை 06:50 மணி. சண்டை போட்ட களைப்பில் பழங்குடிகள் கார்டன் ஏரியாவில் ‘மரண தூக்கம்’ தூங்கிக் கொண்டிருக்க, அமுதவாணன் சுதாரித்துக் கொண்டார். அவர் மணியை எழுப்ப, அவர் தனலஷ்மியை எழுப்ப, கூட்டுக் கொள்ளைக்குக் கிளம்பினார்கள். வெளியே இருந்த கற்களை நைசாக எடுத்துக் கைமாற்றி வீட்டுக்குள் கொண்டு சென்றார்கள். தான் ஒளித்து வைத்திருந்த அதிசயப்பூக்களை அதற்குரிய ஏரியாவில் கொட்டினார் தனலஷ்மி.

அமுதவாணன் ஒவ்வொன்றாகத் திருட, தனலஷ்மியோ ஹோல்சேலில் கற்களைத் திருடி தடதடவென்று ஓடினார். பழங்குடியினர் எழுந்து கொள்வார்களோ என்று நமக்குத்தான் பதற்றமாக இருந்தது. எடுத்த கற்களை அமுதவாணன் அநாவசியமாக ஒளித்து வைத்து பிறகு மீண்டும் எடுக்கச் செல்ல, மைனா விழித்துக் கொண்டார். பிறகு கையும் களவுமாக அமுதவாணனை நோக்கி குரல் கொடுத்தார். ‘எல்லாமே கை விட்டுப் போயிடுச்சு’ என்பதை உணர்ந்த பழங்குடிகள் மறுபடியும் இழுத்துப் போர்த்தித் தூங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

ஆனால் ஏடிகேவால் அப்படி எளிதாக விட்டு விட முடியவில்லை. “மணிகண்டன்... நீங்க சொன்ன வாக்குறுதி காரணமாத்தானே தூங்கப் போனோம். இது தப்பு மணி... நம்பிக்கையை உடைச்சுட்டீங்க... காலைல சமைக்கணுமேன்னுதான் தூங்கப் போனேன். நான் சமைக்க மாட்டேன். சாப்பிடவும் மாட்டேன்...” என்று கோபம் அடைந்தார். ‘நாங்க சமைக்கணுமா, வேணாமா... எடுத்ததையெல்லாம் கொடுத்துடுங்க’ என்று விக்ரமனும் டீல் பேசினார்.

பிக் பாஸ் 6, நாள் 52
திடீரென்று பாத்ரூம் ஏரியாவில் பெரிய அழுகைக் குரல் கேட்டது. தோல்வி தாங்காமல் ஏடிகேதான் அழுகிறாரோ என்று பார்த்தால், நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை. ஆம், அசிம்தான் அழுது கொண்டிருந்தார். ஏடிகே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசில சிங்கத்தையும் இந்த பிக் பாஸ் வீடு அசிங்கப்படுத்திடுச்சே மக்கா!

பூட்டு சாவி கலவரம் – போக பிஸ்ஸா 2.0

‘இரும்பிலே ஓர் இதயம் முளைக்குதோ’ என்கிற பாடலுடன் நாள் 52 விடிந்தது. கதிரவனிடம் அசிம் உருக்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க, “இப்ப கேம்ல ஃபோகஸ் பண்ணு... சண்டையை அப்புறம் போட்டுக்கலாம்” என்று ஸ்போர்டிவ்வாகச் சொன்னார் கதிரவன். ‘சமைக்க மாட்டோம்’ என்று வீர சபதம் எடுத்தாலும் விக்ரமனும் ஏடிகேவும் கிச்சன் ஏரியாவில் பிசியாக இருந்தார்கள். எதிர் அணியின் உற்சாகமான உரையாடல்களைக் கேட்டு மனம் நொந்தபடியே சமைத்தார்கள். பழங்குடிகளின் ‘டீம் டிஸ்கஷன்’ நடந்தது. ‘அசிமே உள்ளே போய் எப்படியோ தொலையட்டும். நமக்குக் கல்லு கிடைச்சா சரி’ என்று அசிம் மீதிருந்த காண்டு காரணமாக விட்டேற்றியாக ஜனனி பேசிய வசனம் காமெடியாக இருந்தது.

ஏலியன் x பழங்குடி களேபரம் போதாதென்று, ‘Lock & Key’ என்கிற பெயரில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கையும் இடையில் நுழைத்தார் பிக் பாஸ். 'ஒவ்வொருவருக்கும் பூட்டுகள் வழங்கப்படுமாம். அவர் இரண்டு நபர்களைப் பூட்ட வேண்டுமாம். பிறகு வருபவர் மூன்று நபர்களைப் பூட்டி விட்டு தன் விருப்பப்படி ஒருவரை விடுவிக்கலாம்’ என்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இந்த ஆட்டத்தின் விதிகள் இருந்தன.
பிக் பாஸ் 6, நாள் 52

முதலில் அழைக்கப்பட்ட மணிகண்டன், ஆயிஷாவையும் மைனாவும் துரத்திப் பிடித்துப் பூட்டினார். இதன் மூலம் மைனாவிடம் நட்பு பாராட்டாமல், உக்கிரமாக டாஸ்க் ஆடுகிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இருக்கலாம். ‘இருக்குடி உனக்கு மகனே’ என்று மணிகண்டனிடம் சபதம் செய்தார் மைனா. அடுத்தபடியாக வந்த தனலஷ்மி, அதே மைனாவையும் க்வீன்சியையும் துரத்திப் பிடித்துப் பூட்டி, ஆயிஷாவை ரிலீஸ் செய்தார்.

“தனலஷ்மி... மூணாவது பூட்டையும் பூட்டணுமே’ என்று பிக் பாஸ் உசுப்பேற்ற, தனலஷ்மியிடமிருந்து தப்பிப்பதற்காக வீடு சிதறி ஓடியது. இந்தக் களேபரத்தில் ஜனனி தடுக்கி விழுந்தார். (‘ஸ்கூல்ல நான்தான் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்... நான் நெனச்சா..!). பிறகு கையில் கிடைத்த விக்ரமனைப் பூட்டி மகிழ்ந்தார் தனலஷ்மி.

‘போக பிஸ்ஸா’ டாஸ்க்கில் 2.0 என்கிற பெயரில் சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தார் பிக் பாஸ். அதன்படி, ‘டார்ச்சர் நாற்காலியில்’ அமர்பவரை இருவர் மட்டுமே டார்ச்சர் செய்ய வேண்டுமாம். பேச்சு வார்த்தையைத் தவிர ‘வேறு முயற்சிகளிலும்’ ஈடுபடலாம் என்கிற திருத்தம் தனலஷ்மியை உற்சாகம் கொள்ள வைத்தது. ஆக்ரோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தார். (வெஷம்... வெஷம்..!). அசிமுக்குக் கத்தி கத்தி சண்டை போட்டு தொண்டை போய்விட்டது போல. கரகர குரலில் டாஸ்க் விதிகளை வாசித்து முடித்தார்.

‘அசிம் புரொமோ கன்டென்ட் தருகிறார்’ – கிண்டலடித்த வீடு

“ஏலியன்ஸ் பூவை எடுத்து ஒளிச்சு வெச்சது தப்பான விஷயம். ஃபவுல் கேம்” என்று அசிம் ஆரம்பிக்க, இது தொடர்பாக அமுதவாணனுக்கும் அசிமிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கேவலமா பேசாத...’ என்று அசிம் சொன்னது, அமுதவாணனை அதிகமாகக் கோபப்படுத்தியது. அசிமின் அநாகரிகமான பேச்சை இதர போட்டியாளர்களும் ஆட்சேபித்தார்கள். "புரொமோ கண்டென்ட் தராரு” என்று அசிமைப் பற்றி ஷிவினும் தனலஷ்மியும் கிண்டல் செய்தார்கள்.

“மற்றவங்களை அநாகரிகமா பேசினா நான் கேட்கத்தான் செய்வேன்” என்று விக்ரமன் சொல்ல, “நீங்க இதுல வராதீங்க. இதன் விளைவுகளை நான் பார்த்துப்பேன்...” என்று அசிம் எகத்தாளமாகச் சொல்ல “அந்தத் தைரியத்துலதான் ஆடறீங்க” என்று விடாமல் மல்லுக்கட்டினார் விக்ரமன். "கதவை உடைச்சுட்டு வருவேன்னு சொல்றே. நீ என்ன ரவுடியா?” என்று அசிமை நோக்கி அமுதவாணனும் உக்கிரமானார். ‘என்ன வேணுமின்னா பேசுங்கடா’ என்கிற மோடில் அசிம் கூலாக இருந்தார்.

பிக் பாஸ் 6, நாள் 52

‘போக பிஸ்ஸா’ 2.0 மீண்டும் ஆரம்பித்தது. பிடிட்ட அசிமின் முகத்தில் முட்டையை வைத்து உற்சாகமாக ஆம்லேட் போட முயன்றார் தனலஷ்மி. அது வழுக்கி கீழே விழவே ‘முட்டைக்கே உன் மூஞ்சி பிடிக்க மாட்டேங்குது’ என்று வெறுப்பேற்றினார். ‘மைக்கைக் கழற்றிட்டு ஊத்துங்க’ என்று சொன்ன அசிமின் முகத்தில் மெல்லிய கோபம் தெரிந்தது. ‘அவரு சிரிச்சிட்டாரு... ரியாக்ட் செஞ்சாரு... நாங்க ஜெயிச்சுட்டோம்” என்று தனலஷ்மி உற்சாகம் அடைய, அசிம் ஏலியனாக கன்வொ்ட் ஆனதை பிக் பாஸ் உறுதிப்படுத்தினார்.

‘இறைவன் மீது ஆணையாக நான் ரியாக்ட் செய்யவில்லை’ என்று அநாவசியமாக சாமியையெல்லாம் இழுத்து பிறகு சத்தியம் செய்தார் அசிம். கட்டப்பட்டிருந்த தன் கைகளை விடுவிக்க மறுத்த தனலஷ்மியிடம் “நீ வெளியே போ... ஊரே உன் மேல முட்டை அடிக்கும்" என்று அசிம் நக்கலடித்ததோடு இந்த எபிசோட் ஒருவழியாக நிறைந்து தொலைத்தது. சுபம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-6-day-52-highlights-tribal-and-aliens-task-atrocities

Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் கேன்சர்... குழந்தையைக் காப்பாற்ற முடியுமா?

Doctor Vikatan: என் தோழிக்கு வயது 38. திருமணமாகி 10 வருடங்கள் கழித்து இப்போதுதான் கர்ப்பமாகியிருக்கிறாள். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சினைப்பையில் புற்றுநோய் அறிகுறி தெரிவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சினைப்பையை எடுக்க வேண்டி வரலாம் என்றும் சொல்கிறார்களாம். இந்நிலையில் அவள் பல வருடங்கள் கழித்து உருவான கருவை காப்பாற்றுவதா, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இதற்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா...

டெல்பின் சுப்ரியா

கர்ப்பத்தை உறுதி செய்யும் முதல் ஸ்கேனிலோ, அல்லது பத்து வாரங்களில் எடுக்கப்படும் என்டி ஸ்கேனிலோ சிலருக்கு கர்ப்பப்பையின் அருகிலுள்ள சினைப்பையில் (ஓவரீஸ்) கட்டிகள் போன்று இருப்பது சகஜம்தான். அவை சாதாரண நீர்க்கட்டிகளாக இல்லாமல் சந்தேகத்துக்குரியவையாகவும் இருக்கலாம்.

ஒருவேளை அவை புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும்பட்சத்தில், அதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கர்ப்பமா, புற்றுநோய் பாதுகாப்பா என்றால் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முதல் வேலையாக டியூமர் மார்க்கர்ஸ் எனப்படும் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக அந்தக் கட்டியின் தன்மையைக் கண்டறிய எம்ஆர்ஐ செய்ய வேண்டியது அவசியம். இந்த டெஸ்ட்டை கர்ப்பத்தின் 12 முதல் 14 வாரங்கள் முடிந்த நிலையில் செய்வதுதான் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பானது.

ஒருவேளை எம்ஆர்ஐயில் அது புற்றுநோய்க் கட்டிதான் என்பது உறுதியானால், பிரசவம்வரை காத்திருப்பது ஆகாது. கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரான 14 முதல் 28 வார காலத்தை அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு பாதுகாப்பான காலம் என்று சொல்வோம். அந்தக் காலகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சினைப்பையை அகற்றலாம். அதன் பிறகு அதை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சினைப்பையிலும் புற்றுநோய் இருப்பது உறுதியானால், கர்ப்பப்பை, இன்னொரு சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட வேறு சிலவற்றையும் சேர்த்து அகற்ற வேண்டியிருக்கும். இதுதான் சரியான சிகிச்சையாக இருக்கும்.

ஆனால் உங்கள் தோழி விஷயத்தில் அவருடையது மிகவும் பொக்கிஷமான கர்ப்பம் என்பதால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியதும் மிக முக்கியம். எனவே அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதித்துள்ள சினைமுட்டைப் பையை மட்டும் அகற்றிவிட்டு, குழந்தை வளர வளர, கூடவே கீமோதெரபி கொடுக்கும் ஆப்ஷனும் உண்டு.

புற்றுநோய்

கர்ப்ப காலத்தில் கொடுக்கும்படியான பாதுகாப்பான கீமோதெரபி மருந்துகள் உள்ளன. அவற்றை மீதமிருக்கும் கர்ப்ப காலத்தைப் பொறுத்துக் கொடுத்துவிட்டு, 37-38 வாரங்களில் குழந்தையையும் பாதுகாப்பாக டெலிவரி செய்துவிட முடியும்.

இப்படியெல்லாம் செய்வதால் குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா என்றால் அப்படி நிகழ்ந்ததற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இதுவரை இல்லை. வளர்ச்சி தொடர்பான சின்னச் சின்ன பிரச்னைகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை.

பிரசவமானதும் தாய்க்கு ஏற்கெனவே குறிப்பிட்டபடி கர்ப்பப்பை, சினைப்பை, நெறிக்கட்டிகள் உள்ளிட்ட பாகங்களை அகற்ற வேண்டியிருக்கும். குழந்தையையும் காப்பாற்றிவிட முடியும். பாதுகாப்பான சிகிச்சையையும் கொடுக்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு மறுபடி தாய்க்கு ஸ்கேன் செய்து, புற்றுநோய்ப் பரவலின் தீவிரம் எப்படியிருக்கிறது என்று பார்த்து, தேவைப்பட்டால் மறுபடி கீமோதெரபி கொடுக்க வேண்டியிருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-cancer-during-pregnancy-can-we-save-the-baby

ஈரோடு: விசைத்தறி தொழிலாளி கொலை வழக்கு... 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

ஈரோடு, பெரியசேமூர், கல்லாங்கரடு, ஸ்ரீராம் நகர் 8 -வது வீதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( 25). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
செல்வகுமாரின் சித்தப்பா மகனும், செல்வகுமாரின் அண்ணனுமான மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மனைவி லட்சுமிக்கும் (27), பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாகத் தெரிகிறது. இதனை  கண்டித்ததால் லட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

கொலை

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி லட்சுமி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். லட்சுமியை அவரின் கணவர் மணிகண்டனும், செல்வகுமாரும் பல இடங்களில் தேடிய நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி, பக்கத்து வீட்டுக்காரருடன் வசித்து வந்தது தெரிய வந்தது.  
இதையடுத்து மணிகண்டன், செல்வகுமார், நீலாவதி, செல்வகுமாரின் அக்காள் ஆனந்தி ஆகியோர் ஆத்தூருக்குச் சென்று லட்சுமியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது குடும்ப மானத்தை வாங்குகிறாயே என்று கூறி கோபத்தில் லட்சுமியை, செல்வகுமார் தாக்கியதாகத் தெரிகிறது. பின்னர், லட்சுமிக்கு அறிவுரை கூறி கணவருடன் மீண்டும் சேர்த்து வைத்தனர்.

தன்னை தாக்கியதுடன், தனது ஆண் நண்பருடன் இருந்து பிரித்து வைத்ததால் செல்வகுமார் மீது லட்சுமி கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதுகுறித்து லட்சுமி, தன்னுடைய மூத்த சகோதரியான பெரியசேமூர், கல்லாங்கரடு பகுதியைச் சோ்ந்த ஜோதிமணியிடம் (35) கூறியுள்ளார். மேலும், மணிகண்டனுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை செல்வகுமார் தாக்கியதை அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஜோதிமணி, செல்வகுமாரின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து மிரட்டினார். இதனால் செல்வகுமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

ஆயுள் தண்டனை பெற்றவர்கள்

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி மதியம் செல்வகுமார் தனது மகனையும், அக்காள் மகனையும் அழைத்து கொண்டு ஜோதிமணியின் வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஜோதிமணி, அவரின் தங்கை பரமேஸ்வரி (32), தாய் பாப்பம்மாள் (70), தந்தை கண்ணையன் (74) ஆகியோர் செல்வகுமாரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு கைகலப்பாக மாறியது. 

சத்தம் கேட்டு மணிகண்டனின் மனைவி லட்சுமி, அருகில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மேஸ்திரி குமரேசன் (40), ஜோதிமணியின் தம்பி மூர்த்தி (30), மூர்த்தியின் மாம அண்ணாதுரை (40) ஆகியோரும் அங்கு ஓடி வந்து செல்வகுமாரை தாக்கினர்.

ஆயுள் தண்டனை பெற்ற 3 ஆண்கள்

ஜோதிமணி உள்பட 8 பேரும் சேர்ந்து கத்திரிக்கோல், இரும்பு குழாய், கட்டை, கம்பு, செங்கல், கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வகுமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள், கண்ணையன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து ஈரோடு முதலாம் எண் குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

தீர்ப்பு

இந்த கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற போது, குற்றம்சாட்டப்பட்ட கண்ணையன் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி புதன்கிழமை தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் கூடுதல் நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.



source https://www.vikatan.com/news/crime/erode-murder-case7-people-including-4-women-were-sentenced-to-life-imprisonment

கார்ட்டூன்!



source https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-december-07-2022

01.12.22 வியாழக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember - 1 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01122022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 29 நவம்பர், 2022

பொன்னியின் செல்வன் Podcast : பாகம் 5 - அத்தியாயம் 5



source https://cinema.vikatan.com/literature/ponniyin-selvan-part-5-episode-5

``அதிகாரிகள் கேட்ட லஞ்சத்தை நானே மொத்தமா தர்றேன்" - சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு வாதம்

சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஆரம்ப முதலே காரசாரமான விவாதங்களுடன் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது, டெண்டர் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது எழுந்து பேசிய மாநகராட்சியின் 5-வது வார்டு திமுக உறுப்பினர் இந்திராதேவி, ``வீட்டுத்தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு எனது வார்டைச் சேர்ந்தப்பகுதி மக்கள் 11 பேர் மாநகராட்சியில் மனு அளித்துள்ளார்கள். ஆனால் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் எனது வார்டு மக்கள் கேட்டப்போது, `ஒரு மனுவை நிறைவேற்றுவதற்கு 10ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

மாமன்ற கூட்டம்

மக்கள் சேவை செய்வதற்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தால் தான்‌ மாநகராட்சிப் பணி நடக்கும் என்றால், அந்த லஞ்சப் பணம் மொத்தம் 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல், தனது பையிலிருந்து 500 ரூபாய்கட்டாக ஒருலட்சத்து 10 ஆயிரம் பணத்தை எடுத்து மேசை மீது வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, அதை கையிலெடுத்து வந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி, ``இந்த பணத்தை யாரிடம் நான் கொடுக்க என்று சொன்னாலும் கொடுத்துவிடுகிறேன்” என மேயர் சங்கீதா அருகில் நின்ற வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி என்பவரை பார்த்து கேள்வியை முன்வைத்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி வாதத்தை கைவிட்டு அமர்ந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sivakasi-corporation-councilor-raising-question-against-the-officials

தமிழ்நாடு வந்தபோது மோடிக்கு திமுக அரசு சரியான பாதுகாப்பு வழங்கவில்லையா..? | The Imperfect Show



source https://www.vikatan.com/news/politics/the-imperfect-show-dated-29-11-2022

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன... செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை இயங்கி தனியாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தும் செந்தில் பாலாஜியின் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. வரம்பை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவர், விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என்பதைத்தான் சி.வி.சண்முகம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மின் கட்டண உயர்வு, மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து மானியத்தை வெட்டும் முயற்சி போன்றவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன இந்த அரசும் மின்வாரியமும். இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

சு.ரவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொறாமையில் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவர் தி.மு.க அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சி.வி.சண்முகம் எப்படிப் பேசுவார், உளறுவார் என்பதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தொகுதிக்காக எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால்தான், இன்று மத்திய அரசுக்கு பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அந்த அ.தி.மு.க-வினர் ஊழலைப் பற்றிப் பேசுவதைப்போல ஒரு காமெடி உலகத்திலேயே இல்லை. முதல்வர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக, செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே, தி.மு.க-வைக் களங்கப்படுத்த எதிர்க்கட்சியினர் என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-cv-shanmugam-statement-about-senthil-balaji

ஒன் பை டூ

சு.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்த சமயத்தில், இன்றைய முதல்வரே அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இப்போது அவரே தி.மு.க-வுக்கு வந்ததும் புத்தர் ஆகிவிட்டாரா என்ன... செந்தில் பாலாஜி வெளிப்படையாகவும், நேரடியாகவும் லஞ்ச லாவண்யத்திலும் ஊழலிலும் ஈடுபட்டுவருகிறார். அரசு டாஸ்மாக் காலை 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கிவருகிறது என்றால், செந்தில் பாலாஜியின் டாஸ்மாக் இரவு 10 மணி முதல் காலை 12 மணி வரை இயங்கி தனியாக கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்த குற்றச்சாட்டுகள் வெளியில் வந்தும் செந்தில் பாலாஜியின் மீது எந்த விசாரணையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு. வரம்பை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவர், விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என்பதைத்தான் சி.வி.சண்முகம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். மின் கட்டண உயர்வு, மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து மானியத்தை வெட்டும் முயற்சி போன்றவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன இந்த அரசும் மின்வாரியமும். இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

சு.ரவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா

ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``பொறாமையில் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ஒருவர் தி.மு.க அமைச்சரவையில் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சி.வி.சண்முகம் எப்படிப் பேசுவார், உளறுவார் என்பதெல்லாம் மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்பதால் அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. தொகுதிக்காக எந்த நேரத்தில், என்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால்தான், இன்று மத்திய அரசுக்கு பயந்து பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அந்த அ.தி.மு.க-வினர் ஊழலைப் பற்றிப் பேசுவதைப்போல ஒரு காமெடி உலகத்திலேயே இல்லை. முதல்வர் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக, செல்லும் இடமெல்லாம் மக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனவே, தி.மு.க-வைக் களங்கப்படுத்த எதிர்க்கட்சியினர் என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-cv-shanmugam-statement-about-senthil-balaji

30.11.22 புதன்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | November - 30 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/30112022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 28 நவம்பர், 2022

வெளிநாட்டு சாக்லேட் தொண்டையில் சிக்கி இறந்த 9 வயதுச் சிறுவன்; என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சாக்லேட் சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்தீப் சிங்க் என்ற 9 வயதுச் சிறுவன், ஷர்தா உயர்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். அவன் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லேட்கள் வாங்கி வந்துள்ளார். தினமும் இந்த சாக்லேட்களை பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டு வந்திருக்கிறான் சிறுவன்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை சுமார் 10 மணியளவில் சிறுவன் சாக்லேட் சாப்பிட்ட நிலையில், திடீரென தொண்டையில் சாக்லேட் வசமாகச் சிக்கியுள்ளது. விழுங்க முடியாமல் நீண்ட நேரமாக சிறுவன் திணறி வந்துள்ளான்.  

உடனடியாகப் பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

death

சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் குழந்தைகளுக்கு உணவுப் பொருள்களை சாப்பிடக் கொடுக்கும்போது, தொண்டையில் சிக்காத வகையில் அதை சிறு துண்டுகளாக்கிக் கொடுப்பது நல்லது. அதோடு உணவுகளை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று திண்ணும் பழக்கத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.



source https://www.vikatan.com/health/kids/a-9-year-old-boy-died-after-choking-on-chocolate

How To: வீட்டுத்தோட்டச் செடிகளை பராமரிப்பது எப்படி? I How To Take Care Of Home Garden?

வீட்டுத்தோட்ட விவசாயத்தில் நீர் மேலாண்மை, வேர் அழுகல் தவிர்ப்பது, செடிகளுக்கு ரீசார்ஜ் செய்வது எனப் பராமரிப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ்...

நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ்

* பிளாஸ்டிக் பைப் மூலமாக நீர் விடுவது சரியான முறையல்ல. அதை மாற்ற வேண்டும்.

* பூவாளியின் மூலம் நீர் விடும்போது தொட்டி நிறைய நீர் விடுவோம், அதையும் தவிர்க்க வேண்டும்.

* ஒவ்வொரு செடிக்கும், தேவையான நீர் அளவு என்று உள்ளது. அதைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப நீர் விடுவது நல்லது. ஒரு செடி பைக்கு 100 மில்லி நீர் இருந்தால் போதுமானது. பெரிய செடி என்றால் 200 மில்லி நீர் போதும்.

* பைகளில் ஈரப்பதம் இருக்கும்போது நீர் விடக்கூடாது; செடிகளின் வேர் நனையும் வரை நீர் விட்டால் போதுமானது.

* வீட்டுத் தோட்டத்தில் இயற்கை இடுபொருள்களையே இட வேண்டும்.

* தோட்டத்தில் உள்ள பயிர் வளர்கிற பைகளில் மண், தென்னைநார் கழிவுகள் சேர்த்திருப்போம். மழை பெய்யும் நேரங்களில் இந்தத் தொட்டி முழுவதும் நீர் நிரம்பி, கீழ்ப்பகுதி வழியாக அது வெளியேறும்போது, பையில் இருக்கும் சத்துகளும் சேர்த்து வெளியேறும். குறிப்பாக, சாம்பல் சத்து வெளியேறும்போது செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதைத் தவிர்க்க, செடிகளை செறிவூட்ட (recharge) வேண்டும்.

எப்படி?

ஜனவரி 15-க்குப் பிறகு, மழை குறையும் நேரத்தில், 10 லிட்டர் நீரில் 100 மில்லி மீன் அமிலம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை நூறு செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் 100 மில்லி எடுத்து ஒவ்வொரு செடியிலும் வேர்ப் பகுதியில் படுமாறு விடவும்.

வீட்டுத் தோட்டம்

* அதேபோல 100 கிராம் வேகவைக்காத நிலக்கடலை பருப்பை 2 லிட்டர் நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து பின் கடலையை நசுக்கி ஊறின நீரில் கலக்கவும். இதனுடன் 1 லிட்டர் அரிசி வடிகட்டின நீர் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதில் 250 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் சேர்க்கவும். அதில் 100 மில்லி எடுத்து ஒவ்வொரு செடிக்கும் தெளிக்கவும்.

* அடுப்புச் சாம்பலை இரண்டு இலந்தைப்பழ அளவுக்குச் செடிகள் மீது தூவிவிடவும். தோராயமாக 30 கிராம் அளவுக்கு. சாம்பல் கிடைக்காதவர்கள் பொட்டாஷ் பாக்டீரியாவை வாங்கி, 100 கிராம் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 100 மில்லி அளவுக்கு ஒவ்வொரு செடிக்கும் தெளிக்கலாம்.

* இவற்றை எல்லாம் மழை நின்ற பின் செய்ய வேண்டும். இதையும் மீறி வேர் அழுகல் நோய் வந்துவிட்டால், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு தூளை, வேர்ப்பகுதியில் தூவிவிடவும்.

* சில இடங்களில் வேர்ப்புழு தாக்குதல் இருக்கும். இதற்கு 10 லிட்டர் நீரில் 50 மில்லி பேச்சிலோ மைசிஸ் திரவத்தைச் சேர்த்துக் கலந்து தெளிக்கலாம்.

* விதைத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். பழைய விதைகளை வாங்காமல், புதிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். 6 மாதத்துக்கு மேலான விதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விதைக்கும் முன்பு, விதை நேர்த்தி செய்வது மிக முக்கியம். சூடோமோனாஸ், அசோஸ் பைரில்லம் போன்றவற்றை சேர்த்து விதைத்தால், வேர் சம்பந்தமான நோய்களில் இருந்து செடிகள் தாக்குப்பிடிக்கும்.

* ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் மஞ்சள்தூள் சேர்த்து, ஒன்றரை மணி நேரம் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் அதில் 10 பல் பூண்டை நசுக்கி சேர்த்து, நன்றாக ஆறவைத்து, அதில் ஒரு லிட்டர் நீரை சேர்த்துக் கரைத்து, 100 மில்லி அளவுக்கு செடிக்கு விடவும். வேர் அழுகல் மாறும்.

* செடிகளின் வளர்ச்சிக்கு தேமோர் கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு, தேமோர் கரைசலில் 5 கிராம் பால் பெருங்கடம் கலந்து தெளிக்க, பூக்களின் வளர்ச்சி, செடியின் வளர்ச்சி அதிகமாகும்.

மாடித்தோட்டம்

* இவை எதுவுமே இல்லாதவர்கள், 50 மில்லி பசும்பாலில் 1 லிட்டர் நீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம்.

* பெரியா பேசியானா, வெர்டிசீனிய லகனியா ஆகியவற்றை 1 லிட்டர் நீருக்கு 50 மில்லி கலந்து தெளிக்க, மாவுப்பூச்சி மட்டுப்படும்.

இந்த இயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டத்தில் விவசாயம் செய்ய... செடிகள் செழிப்பாக இருக்கும்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/how-to-take-care-of-home-garden

பாட்னா: 25 பேர்; 3 நாள்கள்... கம்பெனி அதிகாரிகள் என்று கூறி செல்போன் டவரையே திருடிய கும்பல்!

பீகாரில் இதற்கு முன்பு இரும்பு பாலத்தை அரசு ஊழியர்கள் என்று சொல்லி கேஸ்கட்டர் வைத்து வெட்டி எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதே போன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைத்து ரயில் எஞ்சினையே திருடிச்சென்றனர். தற்போது செல்போன் கம்பெனி அதிகாரிகள் என்று கூறி செல்போன் டவரையே திருடிச்சென்றுவிட்டனர். பாட்னாவில் உள்ள ராஜ்புதன காலனியில் வசிக்கும் லாலன் சிங் என்பவரின் வீட்டில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. லாலன் சிங் வீட்டிற்கு சிலர் வந்து, நாங்கள் செல்போன் கம்பெனியிலிருந்து வந்திருப்பதாகவும், இந்த செல்போன் டவரால் கம்பெனிக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். அதோடு இந்த செல்போன் டவரை நாங்கள் பிரித்து எடுத்துச் செல்லப்போவதாகவும் தெரிவித்தனர்.

லாலல் சிங்கும் எந்தக்கேள்வியும் கேட்காமல் பிரித்து எடுத்துச்செல்லும்படி கூறிவிட்டார்.

25 பேர் கொண்ட கும்பல் மூன்று நாள்கள் வேலை செய்து கேஸ் கட்டர் மூலம் ஒவ்வொரு பகுதியாக வெட்டி எடுத்தனர். பின்னர் லாரியில் அனைத்தையும் ஏற்றிச்சென்றுவிட்டனர். திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு ரூ.19 லட்சமாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாலன் சிங் வீட்டில் இந்த செல்போன் டவர் வைக்கப்பட்டது. செல்போன் டவர் திருடப்பட்டதால் அப்பகுதியில் மொபைல் போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து செல்போன் டவர் பராமரிப்பு பணிகளுக்காக கம்பெனி ஊழியர்கள் வந்து பார்த்தபோதுதான் டவரையே காணவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/a-gang-stole-a-cell-phone-tower-in-patna-claiming-to-be-officials

சிவமயம்

வணக்கம். வாழிய நலம்!இயங்கிக் கொண்டேயிருக்கும் மனதை ஈசனின் திருவடிகள் நோக்கித் திருப்புங்கள். `மனமெனும் மகாசக்தியை கட்டுப்படுத்தவில்லை என்றால், தாங்கொணா துயரத்தில் சிக்கிப் பிறவிகள் நீண்டுகொண்டே போகும்' என்பதே சைவம் கூறும் நீதி.

னதோடு பேசுங்கள். அதுவே மனதை ஆளும் எளிய வழி. மனம் உங்கள் வசமானால் சிவமும் வசமாகும். இதையே திருமூல நாயனார்,

`சிவ பெருமான் என்றுநான் அழைத்து ஏத்தத்

தவ பெருமான் என்றுதான் வந்து நின்றான்

அவ பெருமான் என்னை ஆள் உடைநாதன்

பவ பெருமானைப் பணிந்து நின்றேனே!' - என்கிறார்.

`திருமுறைகளைப் படிக்கவோ, கேட்கவோ, அதைப் புரிந்து கொள்ளவோ, தினமும் பாராயணம் செய்யவோ எனக்கு நேரமில்லை... என்ன செய்யலாம்' என்று ஒரு கேள்வி.

மற்ற எது எதற்கோ நேரம் இருக்கும்போது, இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா? மனம் இருந்தால் எதையும் செய்ய முடியும். ஆக, உங்களுக்கு விருப்பம் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது! மூச்சுவிட என்று தனியாக நேரம் ஒதுக்கு கிறோமா என்ன? மூச்சைப் போல எந்நேரமும் ஐந்தெழுத்து ஓதி வாருங்கள். நிச்சயம் நிறைய நேரம் கிடைத்து மனம் அமைதியாகித் தினமும் ஒவ்வொரு பாடலாகப் படிக்க ஆரம்பிப்பீர்கள். படிக்கப் படிக்கப் பொருளையும் உணர்ந்து அதில் லயித்து, பதிகங்களை வாய்விட்டுப் பாடவும் ஆரம்பிப்பீர்கள். இது சத்தியம். இப்படித்தான் பலரும் இன்று முற்றோதல் செய்யும் அளவுக்கு தேறியுள்ளார்கள்.

நிற்க, திருமுறைகள் படிப்பது மட்டுமே அடியார்களின் அடையாளம் கிடையாது. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் சிவனருள் பெற முடியாதா என்ன! ஒரு கதை.

எந்நேரமும் செல்வம் தேடி அலைந்துகொண்டிருக்கும் செல்வந்தன் ஒருவனுக்குத் திடீரென ஒரு ஞானோதயம். ஒரு குருவிடம் வந்தான். ``சாமி எனக்குத் திருமுறைகளைக் கற்க ஆசை. ஆனால் பாருங்கள் அதற்கான நேரம் என்னிடம் இருப்பதில்லை. எனவே, நான் கரம் தூக்கி வணங்குகிறேன்... கரங்கள் வலித்து நான் அவற்றைக் கீழே இறக்குவதற்குள், எனக்கு எளிமையாக திருமுறைகளை விளக்கிவிடுங்கள்!'' என்றான்.

குருவுக்கு வந்ததே கோபம். ``மண்டூகமே, 18,303 பாடல்கள் கொண்ட திருமுறைகளைப் படிக்கவும் பொருள் உணர்ந்து கொள்ளவுமே ஓர் ஆயுள் போதாதே. நான் 60 ஆண்டுகளாகப் படித்தும் முழுவதும் உணர முடியாத அருமறைகளை உனக்குக் கை வலிப்பதற்குள் நான் சொல்லித் தர வேண்டுமா, ஓடிப்போ'' என்று விரட்டிவிட்டார்.

செல்வந்தன் சோகத்தோடு திரும்பினான். உண்மையில் அவனுக்குத் திருமுறைகளைப் படிக்க ஆசைதான். ஆனால் அவனுக்குப் பொருள் விளக்கிச் சொல்ல குருவும், அதற்கான நேரமும் இல்லை என்பதே உண்மை. என்ன செய்ய ஆசையெனும் சூழலில் சிக்கிக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் மீளவா முடியும்.

மீண்டும் வேறொரு குருவிடம் சென்றான். அதே விஷயத்தைச் சொல்லி, திருமுறைகளை விளக்கக் கேட்டான். அந்தக் குரு சிரித்தவாறே, ``அத்தனை நேரம் எல்லாம் தேவையில்லை. நீ கரம் தூக்குவதற்குள் உனக்கு சைவத்தின் அத்தனை விஷயங் களையும் விளக்கிவிட முடியும்'' என்றார். அவன் ஆச்சர்யத் தோடு கரங்களைக் குவிக்க முற்பட, ``அன்பே சிவம்'' என்றார் குரு. அவன் வியந்தான்; உண்மையை உணர்ந்து மகிழ்ந்தான்.

ஆம்! சைவத்தின் அடிப்படையே சகலரையும் அன்பு செய்வதுதான். அன்போடு வாழுங்கள். அதில் ஆண்டவனை உணரலாம் என்று விரித்து உரைக்கவே திருமுறைகளும் சைவ சித்தாந்தங்களும் தோன்றின. வாழ்வின் இறுதியில் செல்வம், அதிகாரம், கல்வி, பதவி, உறவு என அனைத்தும் விலகி விட்டா லும், நீங்கள் உயிர்கள்மீது வைத்த அன்பு, உங்களை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். `அன்பினில் விளைந்த ஆரமுதே!' என்றுதானே மாணிக்கவாசகர் இறைவனை அழைக்கிறார்.

.இறைவனிடமும் சகல உயிர்களிடமும் அன்பு கொள்ளுங்கள். அன்பைத் தடுக்கும் ஆணவத்தை ஒழியுங்கள். அன்பாலே நிறைந்து இருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்!கார்த்திகை விரதம்!

இந்தப் பூமியில் சகல ஜீவராசிகளும் நிலைபெற்று இருக்க புவி ஈர்ப்பு சக்தி உதவுகிறது என்றால், எல்லா உயிர்களும் அமைதி யோடு வாழ அன்பு எனும் ஈர்ப்பு சக்தியே உதவுகிறது. அதுவும் ஈசனோடு நீங்கள் கொள்ளும் அன்பு முக்திக்கும் மேலான பேரின்பத்தை அளிக்கும். அன்பு கொண்ட கண்ணப்பனை நோக்கி ஈசன் ஓடோடி வரவில்லையா?! பிரம்மனும் மாலவனும் காண முடியாத திருவடிகள், இளையான்குடி மாறநாயனார் வீட்டை நோக்கி வரவில்லையா? இதெல்லாம் எதற்காக, அவர்களின் அன்புக்காகத்தானே!

நீங்கள் உண்ட உணவை வேறொருவர் செரிமானம் செய்ய முடியுமா? அதைப் போன்றதே வினைப்பயன். நீங்கள் விதைத்ததை நீங்களே அறுக்க வேண்டும். வினைப் பயன் நன்மையாக அமைந்திட, அன்பாகவே மாறுங்கள். இறைவனும் வசப்படுவான்.

`சித்தமும் செல்லா சேட்சியன் காண்க; பத்தி வலையில் படுவோன் காண்க!' என்கிறது திருவாசகம். `சித்தத்தாலும் எட்ட முடியாத ஈசன், உங்களின் பக்தி என்ற அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வான்' என்ற மாணிக்கவாசகரின் வாக்கு பொய்க்குமா என்ன!

`காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய

ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய

ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்; தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே!'

- என்கிறார் மாணிக்கவாசகர்.

`காலம் உள்ளபோதே இறைவனிடம் அன்பு கொள்ளுங் கள். நாம் எல்லோரும் சிறப்பாக வாழும் பொருட்டு தான் நஞ்சை உண்டு அருளிய தியாகேசனிடம் அன்பு கொள்ளுங்கள். அதற்கு ஈடாக இறை இன்பம் எனும் மூலப்பண்டாரத்தை நமக்கு வழங்கிவிடுவான். அன்பில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதோ உங்கள் அன்புக்கு ஈடாக மூல பண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே' என்று எல்லோரையும் அழைக்கிறார் மணிவாசகர்.

இறைவன் மீது மட்டுமல்ல, எல்லா உயிர்களின் மீதும் அன்பு வையுங்கள் என்று உரக்கச் சொல்வதே சைவத்தின் நோக்கம். `நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே' இல்லையா! பக்கத் தில் பசித்தவன் இருக்க நீ ஆண்டவனுக்குப் படைப் பது நியாயமா?

அன்றும், இன்றும், என்றும் இந்த உலகத்தை அழகாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது அன்பு ஒன்றே. தேன் கூட்டில் எல்லா பக்கமும் இனிப்பு இருப்பதைப் போல திருமுறைகளின் எல்லா பாடல்களிலும் அன்பே நிறைந்துள்ளது. தனியாகப் பிறந்தோம்; தனியாகப் போகப் போகிறோம்; இடையில் இருக்கும் வாழ்வில் அன்பானத் திருக்கூட்டத்தில் இணைந்து இன்பமாக வாழுங்கள்.

சிவபெருமான்



அன்பைத் தடுக்கும் ஆணவத்தை ஒழியுங்கள். அன்பாலே நிறைந்து இருங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும். பிறகென்ன தானாகவே திருமுறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துவிடும். சிவாயநம!

- பேசுவோம்..

கார்த்திகை விரதம்

திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதற்கான பலன்கள் குறித்து தேவி புராணம் விவரிக்கிறது. மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக சிவ லிங்கம் ஒன்றை உடைத்து விட்டாள் அம்பிகை. இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, கார்த்திகை தீபம் ஏற்றி, விரதம் இருந்து வழிபட்டு பலன் அடைந்தாளாம்.

விரதம் இருப்பவர்கள் முதல் நாள் - பரணி அன்று இரவு தொடங்கி மறுநாள் முழுக்க உண்ணாநோன்பு இருந்து இறை வழிபாடு செய்யவேண்டும். மாலையில் மகாதீபம் ஏற்றிய பிறகு வீட்டிலும் விளக்கேற்றி வழிபட்டு, தானங்கள் செய்வது விசேஷம். கார்த்திகை விரதத்தைப் பன்னிரண்டு வருடங்கள் தவறாமல் கடைப்பிடித்த நாரதர், சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றாராம்.

அதேபோல், கார்த்திகை மாதம் சுத்த பஞ்சமி திருநாள்... மகா விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் சேர்ந்த புண்ணிய நாளாகும். இந்தத் திருநாளில் காவிரியிலும் புனித தீர்த்தங்களிலும் நீராடி, திருமாலையும் திருமகளையும் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் சேரும்.

-வி.சீனிவாசன், திருச்சி-13



source https://www.vikatan.com/spiritual/gods/sivamayam

இந்த வார ராசிபலன் - நவம்பர் 29 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-november-29th-to-december-4th

ஜெயில்... மதில்... திகில்: அத்தியாயம் 4 - சிறைச்சாலை எப்படி இயங்குகிறது?



source https://www.vikatan.com/government-and-politics/jail-mathil-thigil-episode-4-2

ஞாயிறு, 27 நவம்பர், 2022

Doctor Vikatan: தொடைப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. என்னுடைய தொடைப்பகுதியும் அந்தரங்கப் பகுதியும் மிகவும் கருத்துப் போயிருக்கின்றன. இந்தப் பகுதி சருமத்தை நிறம் மாற்ற பிரத்யேக சிகிச்சைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது குறித்து விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை பலருக்கும் தொடைப்பகுதி சற்று பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அதன் காரணமாகத் தொடைகள் ஒன்றோடு ஒன்று உரசும். பருமனான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். தொடைகள் உரசி, உரசி அந்த இடம் கருத்துப்போகும்.

இதைத் தவிர்க்க முதல் வேலையாக காற்றோட்டமான, தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக்கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.

பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின் சருமமானது அதைவிட ஒன்றிரண்டு ஷேடு இன்னும் டார்க்காகவோ இருக்கக்கூடும்.

தொடை

இந்தக் கருமையைப் போக்குவதற்காக க்ரீமோ, ப்ளீச்சோ, சிகிச்சையோ செய்வதன் மூலம் அந்தப் பகுதி சருமத்துக்கு மேலும் பாதிப்பையே நாம் ஏற்படுத்துகிறோம். அந்தரங்க உறுப்புகளில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்வதும், அந்த இடத்து ரோமங்களை ட்ரிம் செய்துவிடுவதும், சுத்தமான உள்ளாடைகளை அணிவதும்தான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

எனவே, தேவையற்ற தகவல்களை நம்பி அந்தரங்கப் பகுதியின் சரும நிறத்தை மாற்ற நினைப்பது தேவையற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-possible-to-get-rid-of-dark-spots-on-thighs

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்... தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தின் பின்னணி என்ன?!

சமீபகாலமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், கொலிஜியம் என்ற முறை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கென சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை நவம்பர் 22-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள்வரை இருக்க முடியும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஒருவர்கூட, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி வழங்கப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு” என்று சுட்டிக்காட்டியது.

அருண் கோயல்

மேலும், 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இந்த வழக்கு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ரானார். `தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த நவம்பர் 21-ம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற விவகாரத்தைக் கிளப்பினார்.

அப்போது, தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரின் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ``தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர், தலையாட்டுபவராக இருக்கக் கூடாது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, பா.ஜ.க தலைமையில் தற்போது மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், எட்டு ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தேர்தல்களின்போது தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கக்கூடிய ஒருவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தால், தங்கள் பிடிக்குள் இருக்க மாட்டார் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய வயதில் தேர்தல் ஆணையர்களை ஆட்சியாளர்கள் நியமிக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்திருப்பதை, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகக் கருத முடியாது. காரணம், மிகவும் ஆணித்தரமான கேள்விகளையே உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களும் நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை தங்கள் வசதிக்கு வளைத்துக்கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஒரு காலத்தில் சிம்மசொப்பணமாக விளங்கியவர் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். அவர், முழுமையாக ஆறு ஆண்டுகாலம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தார். உச்ச நீதிமன்றம் தங்கள் தலையில் கொட்டிய பிறகாவது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் வகையில் உரிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-supreme-court-questions-the-union-government-on-election-commissioner-appointment

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறாள். அவள் வாரத்துக்கு இரண்டு முறை பார்லியை உணவில் சேர்த்துக்கொள்கிறாள். பார்லி என்பது எல்லோருக்குமான உணவா? அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? எடையைக் குறைக்க உதவுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

நிறைய மருத்துவப் பலன்களைக் கொண்டது பார்லி. இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலமில்லாதபோது நார்ச்சத்து குறைவான, செரிமானத்துக்கு சிரமமில்லாத பார்லி கஞ்சியை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

சளி சவ்வுப் படலத்தில் புண்கள் இருந்தால் அவற்றை ஆற்றக்கூடியது பார்லி. அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் புரோபியானிக் அமிலம், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் இதயநோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்கு பதில் பார்லி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

உடலிலுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி. அதனால்தான் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் உள்ள நியாசின் எனும் வைட்டமின் பி சத்தானது மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியது. அந்த வயதில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியது.

மாதிரிப் படம்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் எக்ளாம்சியா எனும் பாதிப்புக்கும் பார்லி கஞ்சி பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கு ரத்தத்தில் புரதச்சத்து அதிகரித்து, கை, கால்கள் வீங்கும். அதைக் குணமாக்க பார்லி தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

பார்லியை வேகவைத்து அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். காலை தொடங்கி மதியம் வரை குடிக்கலாம். அது சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். அடிக்கடி சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் இது சிறந்த சிகிச்சை. எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் நிச்சயம் உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-can-barley-help-you-lose-weight

Motivation Story: தினம் ரூ.3 கோடி நன்கொடை;`இன்ஜினீயர் டு உலக பணக்காரர்' HCL ஷிவ் நாடார் வளர்ந்த கதை

`நமக்கு என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு வாழ்கிறோம். ஆனால், நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறோம்.’ - வின்ஸ்டன் சர்ச்சில்

அது, 1994-ம் ஆண்டு. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான ஷிவ் நாடார், தன் பெயரில் ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தார். தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினார். ஹெச்.சி.எல் நிறுவனம் லாபத்தில் கொழித்துக்கொண்டிருந்த நேரம் அது. `இந்த நேரத்தில் இவர் ஏன் அறக்கட்டளையைத் தொடங்கி சமூக சேவையில் ஈடுபட வேண்டும்?’ என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்கு பதிலும் சொன்னார் ஷிவ் நாடார்.

``எங்கள் குடும்பம் பெரும் கோடீஸ்வரக் குடும்பமல்ல. அப்பா நீதிபதியாக இருந்தார். அப்போதெல்லாம் என் அம்மாவிடம் வீட்டுச் செலவுக்கு உண்டான பணம் மட்டுமே இருக்கும். அந்தச் சூழலிலும் பிறருக்கு உதவி செய்வதை அவர் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார். அதைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஹெச்.சி.எல் நிறுவனத்தைத் தொடங்கி, அதுவும் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்போது என் அம்மா, `நீ மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டிய நேரம் இதுதானே?’ என்று கேட்டார். அதனால்தான் இந்த அறக்கட்டளையை உருவாக்கினேன்’’ என்றார் ஷிவ் நாடார்.

ஷிவ் நாடார்!

இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஷிவ் நாடார் வளர்ந்தது தற்செயலானது அல்ல. எந்தத் தொழிலில் இறங்கினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்கிற அவருடைய தீர்க்கதரிசனம்தான் அவருடைய வளர்ச்சிக்குக் காரணம். கிடைக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டு, அந்த வருமானத்தில் கொஞ்சம் சேமித்துவைத்து, காலத்தை ஓட்டுகிறவர்கள் ஒரு ரகம். `நாம் ஒருவரிடம் வேலை பார்க்கிறோமே... நாம் பலருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தால் என்ன?’ என நினைத்து அதை லட்சியமாக்கிக்கொள்பவர்கள் மற்றொரு ரகம். ஷிவ் நாடார், இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மூலைப்பொழி கிராமத்தில், 1945-ம் ஆண்டு பிறந்தார் ஷிவ் நாடார். அப்பா சிவசுப்ரமணிய நாடார் ஒரு நீதிபதி. ஆரம்பக்கல்வியை அரசுப் பள்ளிகளில்தான் படித்தார் ஷிவ் நாடார். திருச்சி, செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தவர், தன் பள்ளி இறுதிப் படிப்புவரை அங்கேதான் பயின்றார். பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி படிப்பை முடித்தார். அதன் பிறகு, கோயம்பத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கல்லூரியில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். அந்த இன்ஜினீயரிங் படிப்பு அவருக்குள் எதிர்காலத்துக்கான பல விதைகளை விதைத்தது.

ஷிவ் நாடார் 

ஆரம்பத்திலிருந்தே `ஏதோ ஒரு வேலை, இதில் ஸ்திரமாக நின்று பணியாற்றுவோம்' என நினைக்கவேயில்லை ஷிவ் நாடார். `இன்னும் இன்னும்... இதைவிட பெஸ்ட்டா என்ன கிடைக்கும்?’ என்று தேடிக்கொண்டே இருந்தார். அந்த இலக்கை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது அவர் வாழ்க்கை. 1967... முதல் வேலை. புனேவில் இருக்கும் பிரபல வால்சந்த் குழுமத்தின் (Walchand Group) `கூப்பர் இன்ஜினீயரிங் கம்பெனி’ அவரை அழைத்துக்கொண்டது. ஆனாலும், அந்த வேலையில் அவரால் ஒட்ட முடியவில்லை. `இந்த வேலை பார்ப்பதற்குத்தானா இவ்வளவு தூரம் வந்தோம்?’ என்கிற எண்ணத்தை அவரால் தடுக்க முடியவில்லை. அப்போது மற்றோர் அழைப்பு. அன்றைக்கு இந்தியாவிலேயே நான்காவது பெரிய நிறுவனமாக இருந்த டி.சி.எம் (Delhi Cloth & General Mills - DCM)-ல் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சேர்ந்துகொண்டார்.

ஒரு நாளைக்கு 10-லிருந்து 12 மணி நேரம் வேலை. கடுமையாக உழைத்தாலும் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்வது, அதையும் நீண்ட நேரம் செய்வதைப்போல அலுப்பான காரியம் எதுவுமில்லை.

ஒருநாள் தனக்கு நெருக்கமான, உடன் பணியாற்றும் சில நண்பர்களை அழைத்தார். ``உங்களோட கொஞ்சம் பேசணும். ஆபீஸ் கேன்டீனுக்கு வர்றீங்களா?’’ என்றார். மொத்தம் ஆறு அல்லது ஏழு பேர்தான் கேன்டீனில் கூடியிருந்தார்கள். நண்பர்களோடு பேசிப் பார்த்ததில், அவர்கள் அனைவருக்குமே, தாங்கள் பார்க்கும் வேலை அலுப்பைத் தருவதாக இருப்பதைப் புரிந்துகொண்டார் ஷிவ் நாடார். ``இந்த வேலையை விடணும்... வேற ஏதாவது செய்யணும்’’ என்று இறுதி முடிவை அன்றைக்கு எடுத்த ஷிவ் நாடார், அதை நண்பர்களிடமும் சொன்னார். அவர்களும் அவருடைய முடிவை ஏற்றுக்கொண்டார்கள். அது மிகப்பெரிய இலக்கை அடைவதற்காக, ஷிவ் நாடார் எடுத்துவைத்த முதல் அடி.

1975. வேலையை விட்டார். அவர் நண்பர்களும் உடன் இணைந்தார்கள். புதிய தொழிலைத் தொடங்கினார். `மைக்ரோ காம்ப்’... இதுதான் அந்த நிறுவனத்தின் பெயர். அப்போது அவருடன் தொழில் கூட்டாளிகளாக இணைந்தவர்கள் அஜய் சௌத்ரி, அர்ஜுன் மல்ஹோத்ரா, சுபாஷ் அரோரா, யோகேஷ் வைத்யா, எஸ்.ராமன், மகேந்திர பிரதாப், டி.எஸ்.பூரி ஆகியோர். நிறுவனத்தின் முக்கிய வேலை, இந்தியச் சந்தைகளில் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்பனை செய்வது. தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துகொண்டிருந்தது.

ஹெச். சி.எல் நிறுவனம்
குளக்கரையில் கொக்கு வெகு நேரம் காத்திருக்கும். தனக்குத் தோதாக குளத்தின் மேற்பரப்பில் ஒரு மீன் வருகிறதா என பார்த்துக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு மீன் வந்ததும், லபக்கென்று அள்ளிக்கொண்டு போய்விடும். சாதுர்யமான தொழில்முனைவோரும் அப்படித்தான்.

மிக நிதானமாக, பொறுமையாகத் தங்களுக்கான வாய்ப்பு எப்போது வரும் எனக் காத்திருப்பார்கள். வாய்ப்பு வாசல் கதவை தட்டுவதற்கு முன்பே திறந்துவிடுவார்கள். ஷிவ் நாடார் இந்த விஷயத்தில் வெகு கவனமாக இருந்தார். அவருக்கான வாய்ப்பும் வந்தது.

இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிமுகமாகி, அதைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கியிருந்த காலம் அது. அந்த நேரத்தில், இங்கே மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருந்தது ஐ.பி.எம் (IBM) நிறுவனம். ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக ஐ.பி.எம் இந்தியாவைவிட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை. இந்தியாவில் கம்ப்யூட்டருக்கான தேவை அதிகம் இருப்பதைப் புரிந்துகொண்டார் ஷிவ் நாடார். இதுதான் தான் களமிறங்கவேண்டிய இடம் என்பதும் அவருக்குப் புரிந்தது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேச அரசாங்கம், ஐடி தொழிலை ஊக்குவிக்க முன்வந்திருந்தது.

ஹெச். சி.எல் நிறுவனம்

1976. `ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் - ஹெச்.சி.எல்’ (HCL) ஷிவ் நாடாரின் முன்னெடுப்பில் உருவானது. அந்த நிறுவனத்தை உருவாக்க அவர் போட்ட முதலீடு 1,87,000 ரூபாய். ஒரு பெரும் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்த இந்த முதலீடு போதுமா என்றால் நிச்சயம் போதாது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு மேலும் உதவ முன்வந்தது. `26 சதவிகித பங்கைத் தர வேண்டும்’ என்கிற நிபந்தனையோடு, 20 லட்ச ரூபாயை ஷிவ் நாடாருக்குக் கொடுத்தது. அதற்குப் பிறகு ஹெச்.சி.எல் அடைந்தது `கிடுகிடு’ உயரம். உத்தரப்பிரதேச அரசு, ஒரு கருத்தையும் சொன்னது... `நிறுவனத்தின் பெயரை `உத்தரப்பிரதேஷ் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ (Uttar Pradesh Computers Limited - UPCL) என்று மாற்றலாமே...’ ஆனால், அந்தக் கோரிக்கையைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை ஷிவ் நாடார். தேசிய அளவில் `ஹெச்.சி.எல்’ என்கிற பெயர்தான் ரீச் ஆகும், அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்கிற முடிவோடு இருந்தார். உத்தரப்பிரதேச அரசாங்கமும் அதற்குப் பிறகு பெயர் மாற்றம் குறித்து வற்புறுத்தவில்லை.

அன்றைக்கு இந்தியாவில் ஐ.பி.எம் நிறுவனத்தின் கம்ப்யூட்டரான `ஐ.பி.எம் 1401’- ஐ பயன்படுத்தப் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதற்கு மிகப்பெரிய டேட்டா சென்ட்டரும், ஏ.சி-யும் மிக அவசியமாக இருந்தன. அந்த நேரத்தில்தான் ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல் தன் முதல் பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியது.

அது 1978-ம் ஆண்டு. அந்த கம்ப்யூட்டரின் பெயர் `HCL 8C.' நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்தத் தோதாக இருந்தது அந்த கம்ப்யூட்டர். ஐ.பி.எம் தன் கம்ப்யூட்டரை ஒரு வருடத்துக்கு 5,00,000 ரூபாய்க்கு லீஸுக்கு விட்டிருந்தது. ஹெச்.சி.எல் நிறுவனமோ 3,00,000 ரூபாய்க்குக் கொடுத்தது. ஏ.சி-யும் பயன்படுத்தத் தேவையில்லை என்கிற சூழல். அன்றைய தேதியில், அது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழ்ந்த மிகப்பெரும் புரட்சி. இந்தியாவில் மட்டுமல்ல... வெளிநாடுகளுக்கும் தன் ஹெச்.சி.எல் நிறுவனத்தை விரிவுபடுத்த முனைந்தார் ஷிவ் நாடார். சிங்கப்பூரில் ஹெச்.சி.எல் கால்பதித்தது. முதல் வருடத்திலேயே 10 லட்ச ரூபாய் வருமானத்தையும் ஈட்டி, அத்தனை பேரையும் ஆச்சர்யப்படவைத்தது.

ஒரு பக்கம் ஐடி துறையில் வேலை குவிந்துகிடக்கிறது. இந்தியாவிலோ அதற்குப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லை. அப்படிப்பட்ட தேர்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதற்காகவே, 1996-ல் தன் தந்தையின் நினைவாக `எஸ்.எஸ்.என் இன்ஜினீயரிங் காலேஜ்’-ஐ தொடங்கினார் ஷிவ் நாடார். என்.ஐ.ஐ.டி-யும் அவரால் உருவாக்கப்பட்டதுதான். தன் அறக்கட்டளை மூலமாக ஷிவ் நாடார் செய்த கொடை அபாரமானது. 2008-ம் ஆண்டு மார்ச்சில் அவருடைய தொண்டு நிறுவனம், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வித்யாகியான் பள்ளிகளைத் தொடங்கியது. அதன் நோக்கம், உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் 200 பேருக்கு இலவசக் கல்வி கொடுப்பது. இந்தச் சாதனை மட்டுமல்ல, அவருடைய ஹெச்.சி.எல் நிறுவனம், போயிங் விமானங்களுக்கு சாஃப்ட்வேர் தயாரித்துக்கொடுத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் `நம்பர் ஒன்’ என்ற இடத்தையும் பெற்றது ஹெச்.சி.எல் நிறுவனம். இதுமட்டுமல்ல, பாதுகாப்புத்துறை, வங்கித்துறை, இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தை, மோட்டார் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள், சுரங்கத்துறை, போக்குவரத்து, மருத்துவம்... என ஹெச்.சி.எல் தடம் பதிக்காத துறையே இல்லை.

முன்னாள் பிரதமர் மன்மேமோகன் சிங் உடன் ஷிவ் நாடார்

தகவல் தொழில்நுட்பத்துறையில் அவருடைய மகத்தான பங்களிப்புக்காக 2008-ம் ஆண்டு, பத்மபூஷண் விருது பெற்றார் ஷிவ் நாடார். `இந்தியா டுடே’ பத்திரிகை, இந்தியாவில் செல்வாக்குமிக்க மனிதர்களில் 16-வது இடத்தை அவருக்குக் கொடுத்து கௌரவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. தன் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளித்து, அவர்களுக்கு விடுமுறை கொடுத்து சுற்றுலாவுக்கு அனுப்பிவைப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் ஷிவ் நாடார். 2020-ம் ஆண்டு, ஹெச்.சி.எல் தலைவர் பதவியிலிருந்து விலகி, தன் மகள் ரோஷினி நாடாரை அந்தப் பதவியில் அமரவைத்து அழகுபார்த்தார் ஷிவ் நாடார். ஆனாலும், தன் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

பணம் ஒரு கட்டத்தில் அதீதமாகச் சேர்கிறதா... அதை பிறருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இல்லாதார் வாழ்க்கையை இனிதாக்க வேண்டும் என்கிற லட்சியம் கொண்டவர் ஷிவ் நாடார். இந்த ஆண்டு, இந்திய அளவில் அதிக அளவில் நன்கொடை வழங்கிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஷிவ் நாடார். 2022-ம் ஆண்டு நிதியாண்டில் அவர் கல்விப் பணிகளுக்காக வழங்கிய நன்கொடை 1,161 கோடி ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாய்!

பணத்தைப் பெருக்குவதால் அல்ல... அதையும் உபயோகமான வழியில் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதாலேயே மனிதர்கள் கவனிக்கப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள். ஷிவ் நாடார் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்!


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/motivation-story-the-life-of-shiv-nadar