Ad

வியாழன், 30 நவம்பர், 2023

December Month Rasi Palan | டிசம்பர் மாத ராசி பலன்கள்... பரிகாரங்கள் | ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்

டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதையும் அவர்களுக்கான பரிகாரங்களையும் கணித்துச் சொல்கிறார் பாரதி ஶ்ரீதர்.



source https://www.vikatan.com/spiritual/astrology/december-month-rasi-palan

நட்சத்திரப் பலன்கள்: டிசம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-december-1st-to-7th

செவ்வாய், 28 நவம்பர், 2023

கனவு -139 | மூங்கில் சானிடேசன் பொருள்கள் டு மாங்கொட்டை பாடி பட்டர் | வேலூர் - வளமும் வாய்ப்பும்

சிவப்பு காராமணி என்பது புரதம், நார்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு சத்தான உணவுப் பொருள். எளிதில் செரிமானம் அடையக்கூடியது என்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று. இவற்றுடன் கேரட், பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றைத் தேவையான அளவுக்குச் சேர்த்து பேபி செரியலைத் தயாரிக்கலாம். சிவப்பு காராமணியை நன்கு கழுவி, சுத்தம் செய்து, காயவைத்து, வறுத்து, அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு, காயவைத்து அரைக்கப்பட்ட பீன்ஸ், கேரட் போன்றவற்றையும் முந்திரி, பாதாமின் அரைத்த கலவையையும் ஒன்றாகச் சேர்த்து இந்தப் புராடக்டை உருவாக்கலாம் என்பதால் இதற்கான தொழிற்சாலையை வேலூர் மாவட்டத்தில் அமைக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 35,000 ஏக்கர் பரப்பளவில் சிவப்பு காராமணி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 700 கிலோ வீதம் ஆண்டொன்றுக்கு 24,500 டன் விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து 100 டன் மட்டும் எடுத்தக்கொண்டு பேபி செரியல் தயாரிக்கலாம். ஒரு 300 கிராம் எடைகொண்ட பேபி செரியல் பாக்கெட் (பீன்ஸ், கேரட் உள்ளிட்டபிற பொருள்களைச் சேர்த்து) தயாரிக்க 120 கிராம் சிகப்பு காராமணி தேவைப்படும் எனில் 100 டன்னிலிருந்து, ஒரு கிலோ எடையுள்ள 8,30,000 பாக்கெட்டுகள் உருவாக்கலாம். ஒரு பாக்கெட்டின் விலையை 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME - Micro, Small and Medium Enterprises) :

வேலூர் மாவட்டத்தில் ஓய்வறைகளுக்கான (Rest Room) சானிடேசன் வேர் எனும் பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைக்கலாம்.

மூங்கில் ஈரப்பதத்தை தனக்குள் அதிகளவில் தக்க வைத்துக் கொள்ளாது என்பதால் அதில் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தப் பண்புகளைப் பயன்படுத்தி மூங்கிலிலிருந்து ஓய்வறைப் பயன்பாட்டு பொருள்களான கதவுகள், Stand, Handle, சின்க் (Sink) போன்றவற்றை உருவாக்கலாம். இவ்வகையான பொருள்களை உருவாக்குவதற்கான மூங்கில்களை சரியான பதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றை இயந்திரங்களைப் பயன்படுத்தி சீராக்கி, சாண்டிங் இயந்திரம் (Sanding machine) மூலமாக மூங்கிலை மென்மையாக்க வேண்டும். பின்னர் அவற்றில் டிரில்லிங் (Drilling), பிசின் (adhesive) பசை (glue), கிளாம்ப் (Clamp) போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், பொருட்களைத் தேவைக்கேற்ப தயாரிக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் ஆதாங்கை என்ற ஊரில் சுமார் 46,000 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் காடு, பரந்து விரிந்துள்ளது. இங்குள்ள மூங்கிலைப் பயன்படுத்தி, பொருள்களைத் தயாரிக்கும்போது உபரியாக வெளியேறும் மூங்கில் கழிவுகளைப் பயன்படுத்தி மலர்க்குவளை, பேனா ஸ்டாண்டு, கூடை, அணிகலன்கள் போன்றவற்றை உருவாக்கி, ஒவ்வொன்றுக்கும் உரிய விலையை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

வேலூர் மாவட்டத்தில் மேங்கோ பாடி பட்டர் (Mango Body Butter) புராடக்டுக்கான தொழிற்சாலையை நிறுவலாம்.

பாடி பட்டர் என்பது க்ரீமி மாய்ஸ்சரைசர் (Creamy moisturizer). இது, ஷியா வெண்ணெய் (Shea Butter), கொக்கோ வெண்ணெய் (cocoa butter) போன்றவற்றைப் பயன்படுத்தியே பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இதன் விலை அதிகம் என்பதால் அனைவராலும் பயன்படுத்த இயலாது. இதற்கு மாற்றாக, மாங்கொட்டையிலிருந்து எண்ணெய்யைப் பிரித்தெடுத்து, அதோடு தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு, லாவெண்டர் ஆயில், கற்றாழை உள்ளிட்டவற்றைத் தேவையான அளவுக்குச் சேர்த்து மேங்கோ பாடி பட்டர் உருவாக்கலாம்.

மாங்கொட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளதால் அது தோல் பராமரிப்புக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மேங்கோ பாடி பட்டர் கெட்டியானதாகவும் அதிக செறிவூட்டப்பட்டதாகவும் (Highly concentrated) இருப்பதால் வறண்ட, சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை உற்பத்தி செய்வதும் எளிது என்பதோடு குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதலாம்.

வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் மாம்பழக் கூழ் உற்பத்தி நிலையங்களிலிருந்து மாம்பழக் கொட்டையை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து, மேங்கோ பாடி பட்டரை உருவாக்க முடியும். 200 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் விலையை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வளம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)



source https://www.vikatan.com/business/economy/kanavu-series-by-suresh-sambandam-vellore-139

மயிலாடுதுறை: `என்ன செய்தார் எம்.பி., எஸ்.ராமலிங்கம்?’ - உங்கள் கருத்து என்ன?!

மயிலாடுதுறை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ராமலிங்கத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...

எஸ்.ராமலிங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த சர்வேயில் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/DJJaJ8QAvmVkC8Cf7?appredirect=website



source https://www.vikatan.com/government-and-politics/politics/mayiladuthurai-mp-ramalingam-report-card-public-opinion

`தமிழகத்தில் ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடிவருகிறார்கள்' என்ற நிர்மலா சீதாராமனின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“அர்த்தமில்லாத குற்றச்சாட்டு. பரம்பரை பரம்பரையாக இருந்த அறங்காவலர்கள், கோயில் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்ததால்தான் அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. தளபதி ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மட்டுமே 5,500 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 1,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்திருக்கின்றன. உலோகச்சிலை, கற்சிலை எனப் பல சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் அரசாக தி.மு.க திகழ்ந்துகொண்டிருக்கிறது. மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க-வுக்கு, மக்கள் தி.மு.க-வைப் புகழ்வது பிடிக்கவில்லை. அதனால்தான் திட்டமிட்டு தி.மு.க-வின் மீது காழ்ப்புணர்ச்சியோடு ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி’ என்கிற பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது. அதிலும் பா.ஜ.க-வுக்குப் பெரும் தோல்வி மட்டுமே எஞ்சும். கோயில் சொத்துகளைக் கொள்ளையடிப்பது பா.ஜ.க-வுக்குக் கைவந்த கலை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கையே சொல்லியிருக்கிறது. இதில் நிர்மலா சீதாராமன் தி.மு.க-வைக் குறை சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. குற்றம் சொல்லும் மத்திய அமைச்சர், எங்கு குற்றம் நடக்கிறது என்று இடம், பொருளோடு சொல்ல முடியுமா... தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு எதிரான ஓர் எண்ணத்தை ‘பக்தி’ என்ற பெயரில் பகல் வேஷம் போடும் பா.ஜ.க-வால் ஒருபோதும் ஏற்படுத்திவிட முடியாது.”

பழ.செல்வகுமார், ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்... இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் அதிகம் வரும்போது கட்டணத்தைக் குறைத்து, மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். ஆனால், இந்தத் தி.மு.க அரசு அறநிலையத்துறையை வைத்து கட்டணத்தை உயர்த்தி, மக்களின் பணத்தை உறிஞ்சுகிறது. கடந்த ஆண்டு மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ‘அழகர் ஆற்றில் இறங்கும்’ நிகழ்ச்சியில் தகுந்த முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யவில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் எதுவும் செய்யவில்லை. அதன் விளைவு, இரண்டு பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்வளவு ஏன்... சமீபத்தில்கூட திருவண்ணாமலைத் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கிப் பலர் பாதிக்கப்பட்டனர். முன்னாள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ‘3.7 சதவிகித ஆக்கிரமிப்பு நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக’ கூறுகிறார். அவருக்கு என்ன பதில் சொல்லும் அறநிலையத்துறை... புனரமைக்கப்பட்ட கோயில்களை, சொத்துகளைப் பற்றி வக்கணையாக வாய்கிழியப் பேசும் தி.மு.க அரசுக்கு, இன்னும் மீட்கப்படாத கோயில் சொத்துகள் குறித்தும், புனரமைக்கவேண்டிய கோயில்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வக்கிருக்கிறதா?”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-nirmala-sitharaman-comments-about-temples

திங்கள், 27 நவம்பர், 2023

இந்த வார ராசிபலன்: நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-november-28th-to-december-3rd