Ad

புதன், 31 ஆகஸ்ட், 2022

Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்... எது நார்மல், எது அப்நார்மல்?

பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது?

நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்... ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும்.

periods blood

அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான். பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம்.

blood test

உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல. அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-bleeding-during-periods-which-is-normal-and-which-is-abnormal

வலிகளைப் போக்கும்... கொசுக்களை விரட்டும் நொச்சி...| மூலிகை ரகசியம் - 19

மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் என உள்ளுக்கு சாப்பிடும் உள் மருந்துகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெளி மருந்தாகப் பயன்படும் `புற மருத்துவம்’ குறித்தும் தெரிந்துகொள்வோமா?

ஆவிப்பிடித்தல், ஒற்றடம், பற்று, பூச்சு, தொக்கணம், அட்டைவிடுதல், புகை, கொம்புகட்டல்… எனப் பல்வேறு வெளிப்புற சிகிச்சை முறைகள் புறமருத்துவத்தில் உண்டு. புறமருத்துவத்துக்கு உதவுவதற்காகப் பல்வேறு மூலிகைகள் நம்மிடம் இருக்கின்றன! அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மூலிகை நொச்சி.

நொச்சி

நொச்சி, சிறுமரமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நித்தில், நிர்க்குண்டி, நெர்க்குண்டி, சிந்துவாரம், இந்திரசூரியம் போன்ற வேறு பெயர்கள் நொச்சிக்கு இருக்கின்றன. இதில் வெண்ணொச்சி, நீலநொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. `சிந்து’ என்றால் மலர் என்ற அர்த்தத்தில், இதன் மலரை மையப்படுத்தி `சிந்துவாரம்’ எனும் பெயரும் நொச்சிக்கு உண்டு.

நீர்ப்பாங்கான இடங்களில் நீர்நொச்சியைப் பார்க்கலாம். காடுகளில் கிடைக்கும் கருநொச்சி `காயகற்ப’ மூலிகைகளுள் ஒன்றாக சித்த மருத்துவம் வகைப்படுத்துகிறது. காயகற்ப மருந்து என்றால் கல் போல உடலுக்கு வலிமையைக் கொடுக்கும் மருந்து என்று பொருள்!

நீர்க்கோத்து தலைபாரமாக உணரும்போது ஆவிபிடித்து பாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம். அதாவது, நீரைக் கொதிக்க வைத்து அதில் நொச்சி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை போன்ற மூலிகைகளைக் கலந்து ஆவி பிடித்தாலே பல நோய்களை சிரமமின்றி விரட்ட முடியும். களைப்பினால் உண்டாகும் உடல் வலியைப் போக்கவும் இதன் இலைகளை நீரில் போட்டுக் காய்ச்சி வேது (ஆவி) பிடிக்கலாம். பொதுவாக, குளிர் காலத்தில் வாரம் ஒரு முறை ஆவி பிடித்து, வியர்வையை வெளியேற்றிக்கொள்வது நல்லது.

நொச்சி

மலைவாழ் மக்களும் தாவரங்களும்:

குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகு சேர்த்து குடிநீரிட்டு உட்கொள்ளும் வழக்கத்தை மலைவாழ் மக்களிடம் பார்க்கலாம். சுரத்தைத் தணிக்கும் குணம் நொச்சி இலைகளுக்கு உண்டு. சுரத்தின் தீவிரத்தைக் குறைக்க எண்ணற்ற மூலிகைகள் காடுகளில் இருப்பது, தாவரங்கள் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட மலைவாழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் உரையாடுங்கள்! அவர்களின் அனுபவ அறிவு உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும்.

ஒற்றடம்:

நெடுங்காலமாகப் புழக்கத்திலிருந்து சமீபமாக வழக்கொழிந்துப் போன புறமருத்துவ முறைதான் ஒற்றடம்! ஒற்றடமிட்டு நோய்களைப் போக்குவது பக்கவிளைவில்லா மருத்துவ முறை. வலியும் வீக்கமும் இருக்கும் இடங்களில் ஒற்றடமிட, நொச்சி இலைகளைப் பயன்படுத்தலாம்.

நொச்சி இலைகளை விளக்கெண்ணெய்யில் லேசாக வதக்கி, ஒரு துணியில் முடிந்து வலியும் வீக்கமும் உள்ள பகுதியில் ஒற்றடமிடலாம். உடலில் தோன்றும் வலியை வழியனுப்பி வைக்க ஒற்றடமிடும் புறமருத்துவ முறை சிறப்பான தேர்வு.

தலை முழுக நொச்சித் தைலம்

நல்லெண்ணெய்யோடு நொச்சி இலைகளின் சாறு சேர்த்து தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிக்க (எண்ணெய்க் குளியல்) பீனிச நோய்கள் (சைனஸ் பிரச்னை), ஒற்றைத் தலைவலியின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

இயற்கை கொசு விரட்டி:

கொசுத் தொல்லை அதிகரிக்கும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் நெருப்பிட்டுக் கொளுத்துங்கள்! அதிலிருந்து எழும் மூலிகைப் புகை, கொசுக்களை விரட்டி அடிக்கும்.

கொசுவர்த்தி சுருள் மற்றும் லிக்விடேட்டர்களைத் தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு உபயோகிக்கும்போது நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உருவாகலாம் தோழமைகளே! ஆகவே, மூலிகைகளைக் கொண்டே கொசுக்களை விரட்ட முயற்சி செய்யுங்கள்.

மூலிகை ரகசியம்

மூலிகைத் தலையணை

இது என்ன புதுசா இருக்கே என்று ஆச்சர்யப்பட வேண்டாம். உலர்ந்த நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு மறக்காமல் நொச்சித் தலையணை பற்றிச் சொல்லுங்கள்.

மூலிகைக் குளியல்

நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சி குளிக்க, களைப்பால் உண்டாகும் உடல்வலி மறையும். தாய்மார்களின் சோர்வை நீக்கவும் குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நொச்சிக் குளியல் பயன்படுகிறது.

கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்ட (Larvicidal and insecticidal activity) இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. புராஸ்டாகிலாண்டின் உற்பத்தியைத் தடுப்பதன் (Prostaglandin inhibiton) மூலம் தன்னுடைய வீக்கமுறுக்கி மற்றும் வலிநிவாரணி செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிபினால்கள், ‘Radical scavenging activity’ மூலம் எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இதன் இலைகளை அரைத்து துணியில் தடவி நெற்றியில் பற்றாகப் பயன்படுத்தினாலும் தலைபாரம் குறையும். முறையற்ற மாதவிடாயை சீராக்க நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மூலிகை கலவை பயன்படுகிறது. இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் மறைந்துவிடும். மண்ணீரல், கல்லீரல் வீக்கங்களுக்கும் இதன் இலைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு… அரைத்து சிறிதளவு வாயில் அடக்கிக்கொள்ள, மூச்சிரைப்பு மறையும்.

மூலிகை ரகசியம்

இலக்கியங்களில்…

`கருங்கால் நொச்சிப் பசுந்தழை சூடி இரும்புனம் ஏர்க்கடி கொண்டார்…’ இது நொச்சி பற்றி ‘கார் நாற்பதில்’ கண்ணங்கூத்தனாரின் பதிவு. ஏர்பூட்டும் முதல் உழவின்போது, நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து கழுத்தில் சூடிக்கொள்வார்கள் எனும் பொருளைத் தெரிவிக்கிறது அப்பதிவு. போரின்போது எதிரியின் முற்றுகையைத் தகர்த்தெறிந்த பிறகு, வீரர்கள் சூடிக்கொண்டது நொச்சி மலரை!

தாவரவியல் பெயர்:

Vitex negundo

குடும்பம்:

Lamiaceae

கண்டறிதல்:

சிறுமர வகையைச் சார்ந்தது. கூட்டிலைகள் இதன் சிறப்பு அம்சம். மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். `நீலமணியின் நிறத்தில் நொச்சியின் மலர்’ என்ற குறிப்பின் மூலம், மலரின் நிறத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

தாவரவேதிப் பொருள்கள்:

Luteolin, Vitexicarpin, Ursolic acid, Beta – sitosterol, Nishindine, Iridoid glycoside

நொச்சி… மிகச்சிறந்த வலிநிவாரணி!



source https://www.vikatan.com/health/healthy/medical-uses-of-vitex-negundo

Doctor Vikatan: வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் அல்சரின் அறிகுறிகளா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் வருகிறது. நான் தினமும் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுவேன். அதன் விளைவாக எனக்கு அல்சர் வந்திருக்கும் என்கிறார்கள் வீட்டில். அல்சர் பாதிப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கு 2 மணிநேரத்துக்கொரு முறை சாப்பிட வேண்டும், காரமாகச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வயிற்றுவலி மற்றம் வயிற்று எரிச்சல் அறிகுறிகள் அல்சராக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அல்சர் பாதிப்பு என்பது எண்டோஸ்கோப்பி சோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட வேண்டியது. 'ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்' என்று சொல்வோம். அதாவது நாம் சாப்பிடும் உணவிலுள்ள அமிலம் உணவுக்குழாய்க்குள் போய்விடுவதால் இந்த மாதிரி அறிகுறிகள் வரக்கூடும்.

வயிற்றுவலி வந்தாலே பெரும்பாலானவர்கள் வயிற்றுப்புண்ணாக இருக்கும் என அதை சாதாரணமாகக் கடந்து செல்வார்கள். ஆனால் வயிற்றுவலி என்பது வேறு காரணங்களாலும் வரலாம். உதாரணத்துக்கு பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ, கணையத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோகூட வயிற்றுவலி வரலாம்.

எனவே, இவற்றில் ஒவ்வொரு பிரச்னைக்குமான சிகிச்சைகள் வேறுவேறு. எனவே தொடர்ந்து வயிற்றுவலி இருக்கிறது, சாப்பிட்டதும் வலி வருகிறது, அது முதுகுப் பகுதிக்குப் பரவுகிறது என்றால் அது பித்தப்பை அல்லது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகுங்கள்.

அல்சர் பாதிப்பில் மேல் வயிற்றுவலி இருக்கும். சாப்பிட்டதும் வலி குறையும். மற்றபடி இதிலும் முதுகுப்பகுதிக்கு வலி பரவ வாய்ப்புண்டு. சாப்பிட்டதும் வலி குறைகிற ஓர் அறிகுறியை வைத்துதான் இது அல்சரா, வேறு பிரச்னையா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

முதலில் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் பேரில் எண்டோஸ்கோப்பி சோதனையை மேற்கொண்டு, உங்களுக்கு இருப்பது அல்சர்தானா என்று உறுதிசெய்யுங்கள். அப்படி உறுதியானால் அமிலச் சுரப்பைக் குறைக்கும் 'ஆசிட் சப்ரெஷன்' மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். மருந்துகளைப் போலவே உங்களுடைய உணவுப்பழக்கமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

அல்சர்

காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காரமான, புளிப்பான, மசாலா சேர்த்த உணவுகளையும் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் எல்லாம் உணவுக்குழாயிலுள்ள sphincter எனப்படும் சுருக்குத்தசையைத் தளர்த்தி, லூசாக்கிவிடும். அதனால் அமிலம் எதுக்களித்து வருவது அதிகரிக்கும்.

இவற்றோடு தினமும் நடைப்பயிற்சி, ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல், போதிய தூக்கம் போன்றவையும் பின்பற்றப்படும் பட்சத்தில் வயிற்றுவலி மெள்ள மெள்ள குறையும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/news/healthy/doctor-vikatan-are-stomach-pain-and-stomach-irritation-are-symptoms-of-ulcers

சென்னை மாநகராட்சியில் தொடரும் குற்றச்சாட்டு - ஆணையர் மீதே திமுக கவுன்சிலர் புகார்!

சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அந்தவகையில், சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஜூலை 30 - ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், 'ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் எங்களிடம் எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. தன்னிச்சையாக ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டை திமுக கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், விசிக உறுப்பினர்கள் பதிவு செய்தனர். இதையடுத்து, 'ஒவ்வொரு வார்டிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வின் போது கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என மேயர் பிரியா அறிவுறுத்தினார். ஆனால், மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனச் சர்ச்சை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மன்ற கூட்டம்

இந்தச்சூழலில், ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முந்தினம் நடந்தது. கூட்டத்தில், பள்ளிகளில் பெஞ்சுகள் தட்டுப்பாடு, மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உறுப்பினர்கள் வைத்தனர். கூட்டத்தில், 174-வது வார்டு திமுக கவுன்சிலர் ராதிகா பேசும்போது, "பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் பகுதிகளில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வுக்கு வந்துள்ளார். அவர் ஆய்வுக்கு வந்தது குறித்து எனக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதே பகுதியில் சமூக ஆர்வலர் எனப் பெயரில் உள்ள சிலருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகிறது. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்துத் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

பெண் உறுப்பினர்கள்

அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், "அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால், மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காத போது தான் வருத்தம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும்" என்றார். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "பெசன்ட் நகர் பகுதியில் ஆய்வுக்குச் சென்றபோது மண்டல தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் ஆய்வு செய்யும் போது அவர்களாகவே வந்திருக்கக்கூடும். மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம்" என விளக்கமளித்தார்.

ககன்தீப் சிங் பேடி

மேயர் பிரியா, "அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும் போதும், வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிலை குறித்த தகவல்களையும் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத சம்பவம் மீண்டும் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் மீது திமுக கவுன்சிலர் ஒருவர் அதிருப்தி தெரிவித்தது மன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-councillor-complain-against-corporation-commisionar-gagandeep-singh-bedi

வேலூர்: பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது தண்ணீர் வரத்து குறைந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை பாலாற்றில் தண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. தற்போது அந்த ஏரிகள் பெரும்பகுதி தண்ணீர் வற்றி, நீரின் அளவும் குறைந்துள்ளது. ஒரு சில ஏரிகளில் நீர் முழுவதுமாக வற்றியுள்ளது.

ஏரி

கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் தேக்கப்படும் நீர் பெரும்பாலும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக மட்டுமே சேமிக்கப்படுகிறது.

அப்படி நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக மட்டும் சேமிக்கப்படும் ஏரிகள்தான் வேலூரை அடுத்த கழிஞ்சூர் மற்றும் காட்பாடி ஏரி. கடந்த ஆண்டு பாலாற்று வெள்ளத்தால் இந்த ஏரிகளில் நிரம்பின. இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீரால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது.

ஏரி

தற்போது கழிஞ்சூர் ஏரியில் 50 சதவிகித அளவு மட்டும்தான் தண்ணீர் உள்ளது. இந்த ஏரி திருமணி பாலாற்றில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும்.

தற்போது பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறையினரால் இன்னும் ஏன் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரால் மட்டுமே எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கிறது. ஆகவே தற்போது பாலாற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு விரைவாக ஏரியை நிரப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டோம் " வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வரும் நீரை கொண்டு கழிஞ்சூர் ஏரியை இரண்டு நாள்களில் நிரப்பி விடலாம். ஆனால் பருவ மழை தொடங்கிய பிறகு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் கடந்தாண்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததைப் போல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வடகிழக்கு பருவ மழையை பொறுத்து கழிஞ்சூர் ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிஞ்சூர், காட்பாடி ஏரி கரையோரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த ஏரிகள் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படவிருக்கிறது இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும், இதனால் ஏரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அகற்ற விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, "ஏரி நிரம்பிய பிறகு செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் தான் கடந்த ஆண்டு குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. ஏரி நிரம்பி வழியும் இடத்தில் 30 அடியாக இருக்கும் கால்வாய் போக போக 5 அடியாக குறைந்துள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து உள்ளவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் தான். ஆகவே இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி ஏரிக்கு தண்ணீர் நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/why-vellore-lakes-are-not-filled-with-palaru-water

கார்ட்டூன்

அக்டோபர் 17 - காங்கிரஸ் தலைவர் தேர்தல்!


source https://www.vikatan.com/government-and-politics/politics/cartoon-september-07-2022

01.09.22 வியாழக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | September - 01 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01092022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

‘‘டீசல் இனோவாவின் தயாரிப்பை நிறுத்தவில்லை...!’’ – டொயோட்டா சொல்ல வருவது என்னவென்றால்..?

‘இனிமேல் டீசல் இனோவா கிடையாது’ என்று நமது வலைதளத்தில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, ‘என்னது, டீசல் நின்னுடுச்சா!’ என்று இனோவா டீசலைப் பற்றி ஏகப்பட்ட நலவிசாரிப்புகள்.

இந்த நிலையில் ‘‘இனோவா டீசல் மாடலின் புக்கிங்கைத்தான் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறோம். அதன் தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!’’ என்று ஓர் அறிக்கை அனுப்பியிருக்கிறது டொயோட்டா.

டொயோட்டா இப்படிச் சொன்னாலும், டீசல் வேரியன்ட்டின் மாடலை, தனது வலைதளத்தில் இருந்து நீக்கித்தான் வைத்திருக்கிறது.

இனோவா க்ரிஸ்ட்டாவில் பெட்ரோல்/டீசல் என இரண்டு இன்ஜின் மாடல்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதில் டீசல் இன்ஜின் 2,400 சிசியும், 147bhp பவரும், 360Nm டார்க்கும் கொண்டது. பெட்ரோல் இன்ஜின் இதைவிடச் சக்தி வாய்ந்தது. என்ன இருந்தாலும் டீசல் இனோவாதான் மக்களின் மனம் கவர்ந்த எம்பிவி. 2.4 லிட்டரைவிட பவர்ஃபுல்லான 2,800 சிசி இனோவா டீசல் ஆட்டோமேட்டிக் மாடலும் வந்தது. என்ன இருந்தாலும், மக்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீதுதான் கண்! கூடவே, BS-6 நார்ம்ஸுக்கு அப்டேட் செய்ய முடியாமல், 2.8 லி இனோவா டீசலை 2020–லேயே நிறுத்தியிருந்தது டொயோட்டா.

டொயோட்டா

இரண்டாவது ஜெனரேஷன் மாடலான 2.4 லிட்டர் டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, இதுவரை 1 மில்லியன் மாடல்களுக்கு நெருக்கமாக விற்றுத் தீர்ந்து விட்டது. இது வாடகை மற்றும் பிரைவேட் கார்கள் என எல்லாமே அடக்கம். எனவே, MUV (Multi Utility Vehicle) செக்மென்ட்டில், டொயோட்டா இனோவாதான் மிக முக்கியமான கார். இப்போது வரை ஒரு டொயோட்டா இனோவாகூட பிரேக்டவுன் ஆகி சாலையில் நிற்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தளவு, இனோவா டீசல் இன்ஜின் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட டீசல் இனோவாவின் புக்கிங்கை ஏன் டொயோட்டா திடீரென நிறுத்தியது?

அதிக புக்கிங் ஆனதுதான் இனோவா டீசலின் புக்கிங்கை நிறுத்தக் காரணம். ஏற்கெனவே கார்களுக்கு செமி கண்டக்டர் ஷிப் பற்றாக்குறைதான் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதனால் டீசல் இனோவாவின் வெயிட்டிங் பீரியட் எகிறியது. கடந்த பிப்ரவரி மாதம் புக் செய்த ஒரு வாடிக்கையாளருக்கே இப்போதுதான் இனோவா கைக்குக் கிடைத்திருக்கிறதாம். இப்போதைக்கு இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்குத்தான் அதிகக் காத்திருப்புக் காலம். அதைத் தொடர்ந்து டீசல் இனோவாவின் வெயிட்டிங் பீரியடும் அதிகரிக்க… விழி பிதுங்கியது டொயோட்டா. இதனாலேயே டீசல் இனோவாவின் புக்கிங்கை நிறுத்தி விட்டிருக்கிறதாம். "சத்தியமாக வேறொன்றும் காரணம் இல்லை" என்று அடித்தும் சொல்லியிருக்கிறது டொயோட்டா.

இனோவா க்ரிஸ்ட்டா

‘‘நாங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தடையில்லாத சேவையைக் கொடுக்கவே விரும்புகிறோம். யாரும் காத்திருப்புக் காலத்தில் கஷ்டபடக் கூடாது! அதனால்தான் இந்த இடைக்கால நிறுத்திவைப்பு!’’ என்று டொயோட்டா கிர்லோஸ்கர் சார்பாக அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

அதாவது, இதன் மூலம் டொயோட்டா தெரிவிக்கும் செய்தி என்னன்னா… டீசல் இனோவா, திரும்பவும் கம்பேக் கொடுக்கும் என்பதுதான்.


source https://www.vikatan.com/automobile/car/toyota-stopped-only-taking-orders-for-innova-crysta-diesel-not-production

Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்... எது நார்மல், எது அப்நார்மல்?

பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது?

நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்.... ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும்.

periods blood

அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான். பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம்.

blood test

உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல. அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-bleeding-during-periods-which-is-normal-and-which-is-abnormal

குமரி: போலீஸ் மிரட்டியதாக இளைஞர் விஷம்குடித்து தற்கொலை - இன்ஸ்பெக்டர் மீது புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி மேலரத வீதியை சேர்ந்தவர் வினிஸ். உள்ளூரில் கேபிள் டிவி ஆபரேட்டரகாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழில் ரீதியாக சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2017-ல் பூதப்பாண்டியில் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் தொடர்பு உள்ளதாக அந்த சமயத்தில் வினிஸ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கேபிள் டிவி தொடர்பான பிரச்னை ஒன்றில் வினிஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட வினிஸ் கடந்த 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சாட்சிகளை மிரட்டுவதாக கூறி மற்றொரு வழக்கில் வினிஸை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த வினிஸ் நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த தாய்

இந்நிலையில் ஒருபுறம் பூதப்பாண்டி போலீஸார் மிரட்டுவதாகவும், மற்றொருபுறம் வழக்கறிஞர் மிரட்டுவதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு ஆற்றின் கரையோரமாக விஷம் குடித்து வினிஸ் தற்கொலை செய்துள்ளார். வினிஸ் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினிஸின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வினிஸின் தாய் உஷா மயங்கி விழுந்ததால் அவரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலிஸார் வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்ற முயற்சித்ததால் ஊர் மக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மயங்கிய் வினிஸின் தாய்

பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரியும் காவலர் ஒருவரும் பணியின்போது அசந்து தூங்கும் வீடியோ ஒன்றை வினிஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறபடுகிறது. இதையடுத்து தன்னை காவலர்கள் மிரட்டுவதாக வினிஸ் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் மீது வினிஸின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/complaint-against-police-inspector-in-suicide-case

`இளைய'ராஜாக்களும் இளவரசியும்..! #AppExclusive

ழை தூறிக் கொண்டிருந்த மதிய நேரம்... அழகான வெள்ளைநிற பங்களா. உச்சியில் ஒரு விநாயகர். கழுத்தில் கதம்ப மாலை. உள்ளே நுழைந்தால் எதிரே இன்னொரு விநாயகர். மல்லிகைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்த ஹால். ஓரமாக பியானோ.

Yuvan Shankaraja, Bhavatharani, Karthick Raja

இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வீடு.

``அப்பா ரிக்கார்டிங் போயிருக்காங்க..." மொட்டைத்தலையுடன் கார்த்திக் ராஜாவைப் பார்க்கிறபோது `அன்னக்கிளி' இளையராஜா மாதிரியிருக்கிறார். பேசத் தொடங்கினால் மானரிஸம், அது இதுவென்று அப்படியே அப்பா.``பியானோதான் என்னோட மாஸ்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்" - எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக் கொள்ளத் துவங்கினாராம். அப்பாவோடு ஸ்டூடியோவுக்குப் போகும்போதெல்லாம் கீபோர்டில் விளையாட ஆரம்பித்தது...

``பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" தான் நான் மியூஸிக் பண்ண முதல் பாடல். அது செம ஹிட். அதற்கப்புறம் அப்பாவுக்காக நிறையப் பாடல்கள், ரீ ரிக்கார்டிங் எல்லாம் கம்போஸ் பண்ணியிருக்கேன். பியானோவில்தான் ட்யூன்ஸ் ரெடி பண்ணுவேன். அப்பாவோட ஸ்டைல் இல்லாத புதுசா வரணும்கிறதுல கவனமா இருப்பேன். நான் மியூஸிக் பண்ணதை அப்பா ஃப்ரீயா இருக்கறப்போ போட்டுக் காமிச்சு கரெக்‌ஷன்ஸ் இருந்தா கேட்டுக்குவேன். `அலெக்ஸாண்டர் தி கிரேட்', 'மாணிக்கம்', 'ஆகஸ்ட்-15'...

மூணு படங்களுக்கும் இப்போ மியூஸிக் பண்றேன்..."

அப்பாவுடைய தீவிர ரசிகர் இந்த இளைஞர். ``சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்கள் அமைப்பதில் அப்பாதான் எப்பவும் ராஜா. இப்போ மெலோடியஸ் பாட்டுக்கெல்லாம் இருந்த கிரேஸ் குறைஞ்சு ராப் பாடல்களை ரசிக்கிறாங்க. ரசிகர்களோட டேஸ்ட்டுக்கு வொர்க் பண்ணனும்ங்கிற கமிட்மெண்ட் இருக்கு..." - நிதானமாகத் தெளிவாகப் பேசுகிறார் - கார்த்திக் ராஜா.

"பவா"- இவரா? என்று கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிற ராஜா வீட்டு இளவரசி பவதாரிணி. `ராசய்யா'வின் `மஸ்தானா... மஸ்தானா...' பாடல் பாடியவர். இரண்டு வார்த்தைகளுக்கிடையே கிடைக்கிற இடைவெளிகளில் கூடப் புன்னகை பூக்கிற முகம். அண்ணன் மாதிரி ப்ளஸ் டூவோடு டாட்டா சொல்லி விடாமல் அதற்கப்புறம் கரஸ்பாண்டென்ஸில் படிக்கிறார். "அண்ணன் கார்த்திக், தம்பி யுவன், பெரியப்பா பையன் பாலகிருஷ்ணன் எல்லோரும் உட்கார்ந்து ட்யூன் போட்டு, பாட்டு எழுதி, பாடி ரிக்கார்ட் பண்றதை ஆறேழு வருஷமா சின்ஸியரா பண்ணிட்டிருக்கோம். அப்பா எப்போவாவது `நல்லாயிருக்கு'ன்னு சொல்லிட்டா போதும்... `ஹே'ன்னு ஜாலியாயிடும்."- அப்பாவுக்கு ரொம்ப செல்லம் பவதாரிணி. ``என்னை `பவதா'னு கூப்பிடுவாங்க. `ஏதாவது பாடேன்'னு கர்னாடிக் ஸாங்ஸைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. அப்பா மியூஸிக்ல முதல் ஸாங் பாடுனப்போ பயமா இருந்தது. இப்போ கார்த்திக் அண்ணா படத்திலயும் யுவன் மியூஸிக் பண்ற `அரவிந்தன்'லயும் பாடியிருக்கேன்..." என்ற பவதாரிணி, "நான் பெயிண்ட்டிங் பண்ணுவேன்..." - தயக்கத்தோடு சில படங்களைக் காட்டினார். சாம்பிளுக்கு ஒன்று இங்கே...

Yuvan Shankaraja

குட்டிப்புயல் மாதிரி யுவன்சங்கர். வீட்டில் கடைக்குட்டி. வெஸ்டர்ன் டேஸ்ட் உள்ள யுவன் ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறார்.``படிப்பு வரலே சார்... அதான் ஸ்கூலுக்குப் போவலை. ஆறு வயசு இருக்கறப்பவே `நாம ஒரு மியூஸிக் டைரக்டராவணும்'னு ரொம்ப தீவிரமா இருந்தேன். கீ போர்டுதான் என்னோட ஃபேவரிட். நாள்கணக்கா அதோடயே உட்கார்ந்துக்கிட்டிருப்பேன். ரிக்கார்டிங்குக் கூட ஸ்டூடியோவுக்கு அப்பாவோட அதிகமா நான் போனதில்லை.பாப், ராப்னு வெஸ்டர்ன் மியூஸிக் இவ்ளோ பிடிக்கும். ஸ்பீட் இருக்கணும். `அரவிந்தன்' படத்துக்கு மியூஸிக் பண்ண ஆஃபர் வந்தப்போ யெஸ் சொன்னேன். `ஆல் தி பெஸ்ட்’னு ஒரு ஸாங். அப்புறம் `பொன்னம்மா... பொன்னம்மா'ன்னு ஒரு ஸாங் நானே பாடியிருக்கிறேன். எனக்கு முதல்லயே ஒரு சாலன்ஜ் வந்தது. படம் பண்றதுக்கு முன்னால டிரெய்லர் பண்ணிட்டாங்க. அதுக்கு ரீ ரிக்கார்டிங் பண்ணது எனக்குப் பிடிச்சிருந்தது.ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்ல என்னோட ஃபேவரிட் `காதல் ரோஜாவே' " - படபடவெனப் பேசிவிட்டு பபிள்கம்மில் தீவிரமானார். மூவருக்குமே அப்பாவோடு ரிலாக்ஸ்ட் ஆக அரட்டைக்கச்சேரி நடத்துவதில்தான் குஷி. அந்த நேரங்களில் அப்பா பாடுவாராம். பழைய கதைகளெல்லாம் சொல்வாராம். மற்றபடி திருவண்ணாமலைக்கு பெளர்ணமி நாட்களில் ராஜா செல்லும்போது கார்த்திக், யுவன் மட்டும் கூடவே தொற்றிக் கொள்வதுண்டு.

- நமது நிருபர்

படங்கள்: பொன்ஸீ

(19.11.1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)



source https://cinema.vikatan.com/tamil-cinema/bhavatharini-karthick-raja-and-yuvan-shankar-rajas-interview

`இளைய'ராஜாக்களும் இளவரசியும்..! #AppExclusive

ழை தூறிக் கொண்டிருந்த மதிய நேரம்... அழகான வெள்ளைநிற பங்களா. உச்சியில் ஒரு விநாயகர். கழுத்தில் கதம்ப மாலை. உள்ளே நுழைந்தால் எதிரே இன்னொரு விநாயகர். மல்லிகைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்த ஹால். ஓரமாக பியானோ.

Yuvan Shankaraja, Bhavatharani, Karthick Raja

இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் வீடு.

``அப்பா ரிக்கார்டிங் போயிருக்காங்க..." மொட்டைத்தலையுடன் கார்த்திக் ராஜாவைப் பார்க்கிறபோது `அன்னக்கிளி' இளையராஜா மாதிரியிருக்கிறார். பேசத் தொடங்கினால் மானரிஸம், அது இதுவென்று அப்படியே அப்பா.``பியானோதான் என்னோட மாஸ்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்" - எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக் கொள்ளத் துவங்கினாராம். அப்பாவோடு ஸ்டூடியோவுக்குப் போகும்போதெல்லாம் கீபோர்டில் விளையாட ஆரம்பித்தது...

``பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" தான் நான் மியூஸிக் பண்ண முதல் பாடல். அது செம ஹிட். அதற்கப்புறம் அப்பாவுக்காக நிறையப் பாடல்கள், ரீ ரிக்கார்டிங் எல்லாம் கம்போஸ் பண்ணியிருக்கேன். பியானோவில்தான் ட்யூன்ஸ் ரெடி பண்ணுவேன். அப்பாவோட ஸ்டைல் இல்லாத புதுசா வரணும்கிறதுல கவனமா இருப்பேன். நான் மியூஸிக் பண்ணதை அப்பா ஃப்ரீயா இருக்கறப்போ போட்டுக் காமிச்சு கரெக்‌ஷன்ஸ் இருந்தா கேட்டுக்குவேன். `அலெக்ஸாண்டர் தி கிரேட்', 'மாணிக்கம்', 'ஆகஸ்ட்-15'...

மூணு படங்களுக்கும் இப்போ மியூஸிக் பண்றேன்..."

அப்பாவுடைய தீவிர ரசிகர் இந்த இளைஞர். ``சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்கள் அமைப்பதில் அப்பாதான் எப்பவும் ராஜா. இப்போ மெலோடியஸ் பாட்டுக்கெல்லாம் இருந்த கிரேஸ் குறைஞ்சு ராப் பாடல்களை ரசிக்கிறாங்க. ரசிகர்களோட டேஸ்ட்டுக்கு வொர்க் பண்ணனும்ங்கிற கமிட்மெண்ட் இருக்கு..." - நிதானமாகத் தெளிவாகப் பேசுகிறார் - கார்த்திக் ராஜா.

"பவா"- இவரா? என்று கொஞ்சம் ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிற ராஜா வீட்டு இளவரசி பவதாரிணி. `ராசய்யா'வின் `மஸ்தானா... மஸ்தானா...' பாடல் பாடியவர். இரண்டு வார்த்தைகளுக்கிடையே கிடைக்கிற இடைவெளிகளில் கூடப் புன்னகை பூக்கிற முகம். அண்ணன் மாதிரி ப்ளஸ் டூவோடு டாட்டா சொல்லி விடாமல் அதற்கப்புறம் கரஸ்பாண்டென்ஸில் படிக்கிறார். "அண்ணன் கார்த்திக், தம்பி யுவன், பெரியப்பா பையன் பாலகிருஷ்ணன் எல்லோரும் உட்கார்ந்து ட்யூன் போட்டு, பாட்டு எழுதி, பாடி ரிக்கார்ட் பண்றதை ஆறேழு வருஷமா சின்ஸியரா பண்ணிட்டிருக்கோம். அப்பா எப்போவாவது `நல்லாயிருக்கு'ன்னு சொல்லிட்டா போதும்... `ஹே'ன்னு ஜாலியாயிடும்."- அப்பாவுக்கு ரொம்ப செல்லம் பவதாரிணி. ``என்னை `பவதா'னு கூப்பிடுவாங்க. `ஏதாவது பாடேன்'னு கர்னாடிக் ஸாங்ஸைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. அப்பா மியூஸிக்ல முதல் ஸாங் பாடுனப்போ பயமா இருந்தது. இப்போ கார்த்திக் அண்ணா படத்திலயும் யுவன் மியூஸிக் பண்ற `அரவிந்தன்'லயும் பாடியிருக்கேன்..." என்ற பவதாரிணி, "நான் பெயிண்ட்டிங் பண்ணுவேன்..." - தயக்கத்தோடு சில படங்களைக் காட்டினார். சாம்பிளுக்கு ஒன்று இங்கே...

Yuvan Shankaraja

குட்டிப்புயல் மாதிரி யுவன்சங்கர். வீட்டில் கடைக்குட்டி. வெஸ்டர்ன் டேஸ்ட் உள்ள யுவன் ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறார்.``படிப்பு வரலே சார்... அதான் ஸ்கூலுக்குப் போவலை. ஆறு வயசு இருக்கறப்பவே `நாம ஒரு மியூஸிக் டைரக்டராவணும்'னு ரொம்ப தீவிரமா இருந்தேன். கீ போர்டுதான் என்னோட ஃபேவரிட். நாள்கணக்கா அதோடயே உட்கார்ந்துக்கிட்டிருப்பேன். ரிக்கார்டிங்குக் கூட ஸ்டூடியோவுக்கு அப்பாவோட அதிகமா நான் போனதில்லை.பாப், ராப்னு வெஸ்டர்ன் மியூஸிக் இவ்ளோ பிடிக்கும். ஸ்பீட் இருக்கணும். `அரவிந்தன்' படத்துக்கு மியூஸிக் பண்ண ஆஃபர் வந்தப்போ யெஸ் சொன்னேன். `ஆல் தி பெஸ்ட்’னு ஒரு ஸாங். அப்புறம் `பொன்னம்மா... பொன்னம்மா'ன்னு ஒரு ஸாங் நானே பாடியிருக்கிறேன். எனக்கு முதல்லயே ஒரு சாலன்ஜ் வந்தது. படம் பண்றதுக்கு முன்னால டிரெய்லர் பண்ணிட்டாங்க. அதுக்கு ரீ ரிக்கார்டிங் பண்ணது எனக்குப் பிடிச்சிருந்தது.ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்ல என்னோட ஃபேவரிட் `காதல் ரோஜாவே' " - படபடவெனப் பேசிவிட்டு பபிள்கம்மில் தீவிரமானார். மூவருக்குமே அப்பாவோடு ரிலாக்ஸ்ட் ஆக அரட்டைக்கச்சேரி நடத்துவதில்தான் குஷி. அந்த நேரங்களில் அப்பா பாடுவாராம். பழைய கதைகளெல்லாம் சொல்வாராம். மற்றபடி திருவண்ணாமலைக்கு பெளர்ணமி நாட்களில் ராஜா செல்லும்போது கார்த்திக், யுவன் மட்டும் கூடவே தொற்றிக் கொள்வதுண்டு.

- நமது நிருபர்

படங்கள்: பொன்ஸீ

(19.11.1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)



source https://cinema.vikatan.com/tamil-cinema/bhavatharini-karthick-raja-and-yuvan-shankar-rajas-interview

31.08.22 புதன்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | August - 31 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31082022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 46 - பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘கடைகள்/சூப்பர் மார்க்கெட்டுகள் என ஷாப்பிங் செல்லும்போது தரப்படும் பில்களை என்ன செய்வீர்கள்?'' - ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. கோள்களில் ஒன்று (5)

7. மண்ணால் செய்யப்படும் ஓர் இசைக் கருவி (3)

9. பாட்டு - போகும் ------- தூரமே (2)

16. வறண்ட நிலத் தாவரம் (3)

வலமிருந்து இடம்

2. அறிவியல், இலக்கியம், மருத்துவம், அமைதிக்கு என ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவிலான உயர்ந்த பரிசு (3)

4. இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரரின் பிற்பாதிப் பெயர். இவர் பெயரில் இந்தியில் திரைப்படம் வந்துள்ளது (2)

8. நிலம் உழுவதற்கு இது அவசியம் (2)

10. ஜெர்ரி கதாபாத்திரத்தில் இருப்பது (2)

11. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் நம்மைக் காக்கும் (2)

12. ------- வலையில் புறாக்கள் சிக்கின (3)

14. விலங்குகளைச் சமநிலைப்படுத்த இது உதவுகிறது (2)

18. போர் நடக்கும் இடம் (5)

மேலிருந்து கீழ்

1. வயல்களில் -------கள் தலை சாய்ந்து

நிற்கும் (5)

2. செயல்களுக்கு நல்ல ------- இருக்க

வேண்டும் (4)

7. இதுக்கு கால் உண்டா; கத்திரிக்காய்க்கு வால் உண்டா? (2)

13. மூச்சுவிடுவதை இப்படியும் சொல்லலாம் (4)

15. மைதாவில் பூரணம் வைத்துச் செய்யப்படும்

இனிப்பு (2)

கீழிருந்து மேல்

3. இதிலிருந்து புறப்படும் அம்பு (2)

5. மதுரையில் புகழ்பெற்ற சேலைகள் (4)

6. ஊறுகாய் போட்டுவைக்கும் ஜாடி (4)

12. பயிர்களைக் காக்க தோட்டத்தைச் சுற்றி இதை அமைப்பார்கள் (2)

16. கிருஷ்ணரின் தாய்மாமா (4)

17. நாரதர் ------- நன்மையில் முடியும் (4)

18. மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வாகனம் (5)

புதிர்ப்போட்டி-44 விடைகள்...

1. விஸ்வநாதன் ஆனந்த்

2. ஹங்கேரி

3. கார்ல்சன்

4. கொனேரு ஹம்பி

5. தம்பி

6. அணி

7. அமெரிக்கா

8. சோவியத் ஒன்றியம்

சரியான விடையுடன்... செய்தி/சினிமா/சீரியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நாம் பயன்படுத்தும் தளங்கள் (டிவி சேனல்,ஓடிடி, யூடியூப், மொபைல் ஆப்) இப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் பார்ப்பது எந்தத் தளத்தில்... ஏன்? - `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ந.வைஜெயந்தி, நாகப்பட்டினம்

நாங்கள் செய்தி, சினிமா, சீரியல் போன்ற நிகழ்ச்சிகளை டிவி முன் அமர்ந்து பார்ப்பதுதான் வழக்கம். நாங்கள் வயதானவர்கள். டிவி முன் அமர்ந்து பார்ப்பதுதான் எங்களுக்குத் திருப்தியாக உள்ளது.

2. செ.சுபகீர்த்திகா, தாரமங்கலம்

செய்தி, நகைச்சுவை, குழந்தைகளுக்கு கார்ட்டூன், சினிமா, கல்வி போன்ற அனைத்தும் இருந்தாலும் நான் தேவையானவற்றை மட்டும் பார்த்துவிட்டு மற்ற வேலை களில் கவனம் செலுத்துவேன். இதற்கு டிவி சேனல்தான் சிறந்தது. நேரம், கூடுதல் செலவு மிச்சம்.

3. சந்திரா ராஜசேகரன், திருச்செந்தூர்

டிவி சேனல்களில் சீரியல்களை தினமும் பார்ப்பதுண்டு. திரைப்படங்கள் என்றாலும் டிவி சேனல்களிலேயே பார்த்துவிடுவேன். ஓடிடியிலும் யூடியூபிலும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எனக்குத் தெரியாது.

4. லட்சுமி பாலசுப்ரமணியன், பெங்களூரு-4

செய்தி, சினிமா, சீரியல், தெய்விகம் உள்ளிட்ட நிகழ்ச்சி களை டிவி சேனலில்தான் பார்ப்பேன். ஏனெனில், டிவியில் மட்டும்தான் பெரிதாகக் காண முடிகிறது. கண்ணுக்கும் நல்லது. மற்றவற்றில் அவ்வளவு ஆர்வமில்லை.

5. ஆர்.விசாலி, மன்னார்குடி

தொடர்பு உலகத்தை உள்ளங்கையில் கொண்டுவரும் மொபைல் ஆப்தான் என்னுடைய சாய்ஸ். எதுவாயிருந் தாலும் எங்கேயிருந்தாலும் பார்த்துக்கொள்ள முடிவது இதில்தான். இந்த அவசரகால யுகத்தில் விரும்பும் நிகழ்ச்சிகளை நேரத்துக்குப் பார்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். கையடக்க மொபைல் இருந்தால்போதும் உலக நிகழ்ச்சிகளை உற்று நோக்க உதவும்.

6. ம.சபிதா, தூத்துக்குடி

நான் சினிமா, சீரியல், செய்தி பார்க்க உபயோகிப்பது மொபைல் ஆப்தான். உலகில் ஏதோ ஓர் இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்ல... இதில் வீடியோ, பாடல், காமெடி எனப் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

7. இரா.ஜயலட்சுமி, சென்னை-125

மொபைல் ஆப்... ஏனெனில், இலகுவாக உள்ளது. மேலும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு எந்த சிரமமும் தராமல், நமக்குப் பிடித்தவற்றை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

8. க.சாந்தி, சென்னை-110

என் தேர்வு ஓடிடி தளங்கள்தான். விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், பல மொழிகளில் உள்ள சிறப்புப் படைப்பு களைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் பல மொழிகளையும் கலாசாரத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

9. ஆர்.மேரி, திருச்சி-18

நாங்கள் நிகழ்ச்சிகளை ஓடிடியில் பணம் செலுத்திப் பார்க்கிறோம். காலையில் ஓய்வாக இருக்கும்போதே சீரியல் பார்த்துவிடுவோம். நாங்கள் இருவரும்

60 வயதைக் கடந்தவர்கள் என்பதால், பிடித்தமான ஒன்றிரண்டு சீரியல்தான் பார்ப்போம். சீக்கிரம் எழுந்து பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது.

10. எஸ்.செல்வி, சேலம்-3

இரண்டு பேரும் காலை முதல் இரவு வரை கடையில் இருப்பதால் டிவி பார்க்க நேரம் இருக்காது. செய்திகள், ஒன்றிரண்டு சீரியல்கள், வாரத்துக்கு ஒரு படம் என நேரம் கிடைக்கும்போது அதிக விளம்பரம் இன்றி யூடியூபில் பார்ப்போம். டிவி என்னும் மாயவலையில் சிக்குவதில்லை.

புதிர்ப்போட்டி தந்த புள்ளி விவரங்கள்!

பொதுவாக, ஊடக நுகர்வு என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அதாவது, செவிவழிச் செய்தியாக ஆரம்பமான தகவல் பரிமாற்றம், பின்னர் மலையின் குகைகளில் வரையப்பட்ட கோட்டோவியங்கள் உட்பட பல்வேறு வடிவங்களாக பரிணாமம் பெற்றன. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, செய்தித்தாள்கள்/பருவ இதழ்கள் என்றெல்லாம் உருமாறி, இன்றைக்கு உள்ளங் கையில் இருக்கும் மொபைல் வரை தகவல் களைப் பெறும் வழிமுறைகள் மாறி மாறி வடிவெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா, செய்திகள், சீரியல்கள் உள்ளிட்டவற்றை தொலைக்காட்சி, யூடியூப் தளங்கள், மொபைல் ஆப்கள், ஓடிடி தளங்கள் என்று பல்வேறு மீடியங்கள் மூலமாக மக்கள் நுகர்கிறார்கள். சரி, எந்தெந்த மீடியங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று அவள் விகடன் புதிர்ப் போட்டிப் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம். நீங்கள் பயன்படுத்துவது டி.வி/யூடியூப்/மொபைல் ஆப்/ஓடிடி இவற்றில் எந்தத் தளம் என்பது தான் கேள்வி.

வந்து குவிந்த பதில்களைப் பார்த்தபோது, அதன் சதவிகிதக் கணக்கை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. அதாவது, பெரும்பாலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் அனைத்து மீடியத்தையும் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், இணையதள தொடர்பு என்பது இன்றைக்கு எளிதாகியிருப்பதுதான். அதேபோல, செய்தித்தாள்களை மட்டுமே படிக்கிறோம்; சினிமாவே பார்ப்பதில்லை; குழந்தைகளின் படிப்பை மனதில் கொண்டு, தேவைப்படும்போது மட்டும் ஓடிடி தளத்தில் சினிமா பார்க்கிறோம். கணவன்-மனைவி இருவருமே கடையில் இருப்பதால், தேவைப் படும்போது மட்டும் யூடியூப் பார்க்கிறோம்... இப்படி பல்வேறுவிதமான சுவாரஸ்யமான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களையும் பார்க்க முடிந்தது.

இதைப் பார்க்கும்போது, டி.வி-யின் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட பாதியாகக் குறைய ஆரம்பித்துள்ளது. மீதி பாதியை மற்ற தளங்கள் பங்கு போட்டுக்கொண்டு வளர ஆரம்பித்துள்ளன. இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்த வளர்ச்சியானது, இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதேசமயம், மற்றொரு மீடியமாக ‘பாட்காஸ்ட்’ என்பதும் தனியாக வளர ஆரம்பித்துள்ளது. அதாவது, சினிமா, கதைகள், நாவல்கள், செய்திகள், போட்டிகள் என்று ஆடியோவாகவே கேட்கும் போக்கு மெள்ள வளர்ந்து கொண்டுள்ளது. கண்களுக்கு வேலை கொடுக்காமல், காதுகளுக்கு மட்டும் வேலை கொடுத்தால் போதும். கூடவே, வெவ்வேறு வேலை களையும் செய்துகொண்டே கேட்டுக்கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் ஒலிச்சித்திரம் என்கிற பெயரில் சினிமாவையும், நாடகம் என்கிற பெயரில் இன்றைய சீரியல்களையும், செய்தி, இசைக்கச்சேரி உள்ளிட்டவற்றையும் ஆடியோவாகத்தான் மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், டி.வி என்பது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு முன்பாக. ஆம், ரேடியோ மட்டுமே ஒரே மீடியமாக இருந்தது. வயல்வேலை, நெசவு வேலை, சமையல் வேலை என்று எந்தவிதமான வேலைகளையும் செய்துகொண்டே மக்கள் கேட்டு ரசித்தனர், பயன்பெற்றனர். மீண்டும்... அதே ரேடியோ யுகம் திரும்பிக்கொண்டிருக்கிறது!



source https://www.vikatan.com/news/general-news/puthir-potti-46

`நான் ஒன்னும் வேலைக்காரன் இல்ல’ - மாற்றுத்திறனாளியிடம் கடுகடுத்த சாத்தூர் எம்.எல்.ஏ - நடந்தது என்ன?

சாத்தூர் சட்டமன்ற தொகுதி காயல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பாண்டீஸ்வரி, மாற்றுத்திறனாளி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். பிழைப்புக்காக திருமலைக்குமார் - பாண்டீஸ்வரி இருவரும் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலில் விருத்திக்காக மூன்றுச்சக்கர வாகனம் வாங்க எண்ணிய திருமலைக்குமார், இதற்காக உதவிக்கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல முறை விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.

ஆவண நகல்

இதைத்தொடர்ந்து, கடந்தமாதம் காயில்பட்டிக்கு வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம், மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் தனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், மனுக்கொடுத்து 20 நாள்களுக்கு மேலான நிலையில், மனுவின் நிலைக்குறித்து அறியவும் நினைவூட்டலுக்காகவும் மாற்றுத்திறனாளி திருமலைக்குமார், மதிமுக எம்.எல்.ஏ.ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நகல்

அப்போது பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், "அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் ஒன்னும் உங்க வேலைக்காரன் கிடையாது. இப்பல்லாம் சூழ்நிலையே மாறிப்போச்சு. வேலைக்காரன்கிட்ட பேசுறதுக்கு கூட யோசிச்சு தான் பேசவேண்டியதாயிருக்கு. அதிகாரிங்களாம் நாம சொன்ன உடனே செய்ற ஆளும் கிடையாது. என்னால உங்க கூட இருந்து உதவித்தான் பண்ணமுடியும். நீங்க, இப்படியெல்லாம் அவசரப்படுத்துறதா இருந்தா நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்கோங்க. நான் உங்க ஃபைல்ல எடுத்து வெளியே வச்சிருதேன். நீங்க வேற ஆள் பாத்துகோங்க" என அலட்சியப்படுத்தி பதில் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி திருமலைக்குமாரிடம் பேசினோம், ``மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே மாநில அரசு நலத்திட்டத்தின் மூலமாக பல்வேறு உதவிகள் செய்துவருகிறது‌. அதன்படியே, எனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு விண்ணப்பித்தேன். அரசு மனதுவைத்து மூன்றுச்சக்கர வாகனத்தை வழங்குமெனில் அது என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். இந்த பேருதவியை செய்துதருவார் என நம்பியே எம்.எல்.ஏ.விடம் மனுக் கொடுத்தேன். மனுவின் நிலை என்னவாச்சு எனத்தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது" என்றார்.

சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமனிடம் பேசினோம், "பதவியேற்ற நாள்முதல் தொகுதி மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்து வருகிறேன். பல்வேறு மக்கள் பணிகளுக்கும் சாத்தூர் தொகுதியை முன்னோடியாக திகழச்செய்துள்ளேன். ஆனால் இந்த விவகாரம் என்னை பெரும் சங்கடத்திற்குள்ளாக்குகிறது. மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் விஷயமாக ஏற்கெனவே மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பேசியுள்ளேன். குறைந்தது 70 சதவிகிதம் அளவுக்கு மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு தான் மூன்றுச்சக்கர வண்டி வழங்கமுடியும் என அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.

எம்.எல்.ஏ.ரகுராமன்

திருமலைக்குமார் 60 சதவிகித மாற்றுத்திறன் உடையவர். எனவே, அவருக்கு வழங்கமுடியாது என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். மேலும், மாற்றுத்திறனாளியிடம் செல்போனில் பேசிய விவகாரத்தில், திட்டமிட்டே என்னை கோபப்படுத்தியுள்ளனர். கோபத்தில் இவர் வார்த்தைகளை எப்போது விடுவார்.. எப்போது இவரை மாட்டிவிடலாம் என்று காத்திருந்து போனை ரெக்கார்டு செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதனால், உண்மையான மனதுடன் உதவி என்று போன் செய்பவரின் அழைப்புகளை எடுக்க கூட பயமாக உள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sattur-mla-raguraman-phone-talk-went-controversy

நமக்குள்ளே...

பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்குகளின் தீர்ப்புகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள், பெரும்பாலும் இங்கு பாதிக்கப்பட்டவருக்கான நீதியாக அமைவதில்லை. சில வழக்குகளில், குற்றவாளிகளை ‘என்கவுன்டர்’ செய்யும் காவல்துறை சாகசங்களும், உண்மையான குற்றவாளிகள் வெளிவராமல் போகும் அவநம்பிக்கையையே ஏற்படுத்துவதாக இருக்கும். இந்நிலையில், பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி சமீபத்தில் விடுதலை செய்தது, நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கோர சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில், கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. அவரின் குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரை அக்கும்பல் படுகொலை செய்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், 2008-ல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின் கீழ் தண்டனைக் குறைப்பு வழங்க, குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார்; தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் ஆகஸ்ட் 15 அன்று குஜராத் அரசு, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது. அதற்கு நாடெங்கிலும் இருந்து எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

பில்கிஸ் பானோ, `என் குடும்பத்தையும் என்னையும் சிதைத்து, என் மூன்று வயதுக் குழந்தையை என்னிடமிருந்து பறித்துக்கொண்ட 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசின் முடிவு என்னை மரத்துப்போகச் செய்துள்ளது. நான் நம் நாட்டின் நீதிமன்றங்களை நம்பினேன். இப்போது நான் அனுபவிக்கும் துயரமும், அசைத்துப்போடப்பட்ட என் நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது’ என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

செயற்பாட்டாளர்கள் முதல் போராளிகள் வரை நிரபராதிகள் தண்டனை அனுபவித்து வரும் எத்தனையோ வழக்குகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஊழல், வரி ஏய்ப்பு, கடன் மோசடி செய்த நாட்டின் முதன்மை பணக்காரர்கள் குறித்த வழக்குகள் கோப்புகளாக மட்டுமே தேங்கிக்கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வதை செய்தவர்களின் வழக்கை, `அக்கறையுடன்’ பரிசீலித்து விடுதலை செய்த நீதித்துறையும் அரசும், யாருக்கானவை? வழக்கமாக ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாகும் போது பஞ்சாயத்துகள் முதல் காவல் நிலையங்கள் வரை, ‘பொம்பளை இதுக்கெல்லாம் புகாரை தூக்கிட்டு வரலாமா? போம்மா...’ என்று அனுப்பப்படும் ஆணாதிக்கத்தின் அரச, நீதிமன்ற பிரதிபலிப்பு இது என்பது அவமானம்.

குஜராத் கலவரத்தின்போது, ஒரு சிறுபான்மையின கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தின் குரூர தன்மை, அந்தப் பெண்ணுடலை வெறியுடன் வேட்டையாடிய குற்றவாளிகளின் ஆணாதிக்க நோக்கம் எல்லாம் எந்த மன்னிப்புக்கும் அப்பாற்பட்டது.

`பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்' என்று பெருமை பேசுகிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. ஆனால், குஜராத் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி அரசோ... பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதோடு, அந்தக் குற்றவாளிகளின் கால்களைத் தொட்டுவணங்கும் தொண்டர்களைப் பெருமையோடு பார்க்கிறது.

நாடு முழுக்கக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதைத் தொடர்ந்து, இந்த விடுதலைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். நம் நம்பிக்கை முழுமையாக சிதைக்கப்படாமல், உச்சபட்ச நீதி கிடைக்கும் என்று நம்புவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



source https://www.vikatan.com/news/editorial/namakkulle-editorial-page-13-september-2022

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 30 முதல் செப் 4 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-august-30th-to-september-4th

30.08.22 செவ்வாய்க்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | August - 30 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/30082022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

Motivation Story: `நீ ஜெயிச்சுட்டே டெபி’ - சவாலை வென்று உலகப் புகழ்பெற்ற டெபி ஃபீல்ட்ஸ்!

`நல்ல உணவைச் சாப்பிடுவதற்கு வெள்ளி ஸ்பூன் தேவையில்லை!’ - பால் புருதாம் (Paul Prudhomme), பிரபல அமெரிக்க சமையற்கலைஞர்.

அம்மாவைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து அவருடைய தோழி வந்திருந்தார். வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா, அவரின் இரு கைகளையும் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டார். இருவரும் வரவேற்பறையில் உட்கார்ந்து ``எப்படியிருக்கே?’’ என்கிற விசாரிப்போடு உரையாடலைத் தொடங்கினார்கள். பேச்சில் உலகையே மறந்துபோனார்கள். அவர்களையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த டெபி அவர்களுக்கு அருகே வந்தாள்.

``அம்மா... ஆன்ட்டிக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டு வரட்டுமா?’’

``நீ ஏன் கண்ணு சிரமப்படுறே... அப்புறம் பார்த்துக்கலாம்’’ என்றார் தோழி.

``அட நீ வேற... வீட்டுக்கு யார் வந்தாலும் டெபி கையால சாப்பிடாமப் போக மாட்டாங்க. அது இந்த வீட்டுல ஒரு பழக்கம். நீ போ டெபி... ஆன்ட்டி பாராட்டுற மாதிரி ஏதாவது செஞ்சு எடுத்துக்கிட்டு வா...’’

துள்ளிக் குதித்து சமையலறைப் பக்கம் ஓடினாள் டெபி. அப்போது அந்தச் சிறுமிக்கு 14 வயது. பலருக்கும் சாப்பிடப் பிடிக்கும்; சமைக்கப் பிடிக்காது. சிலருக்கோ சமைக்கப் பிடிக்கும்; தான் சமைத்ததைப் பிறர் ருசித்துச் சாப்பிடுவதை ரசிப்பது மிகவும் பிடிக்கும். இதில், டெபி இரண்டாவது ரகம். ருசி என்பது உணவில் சேர்க்கப்படும் மசாலா, வாசனைப் பொருள்களில், செய்முறையில் இருப்பதில்லை. உணவை மனமார ரசித்துச் செய்பவரின் கரங்களில் இருக்கிறது. இந்த உண்மை அந்தச் சிறுமிக்கு சிறு வயதிலேயே புரிந்திருந்தது.

Mr. Fields Bakery

அன்றைக்குத்தான் ஒரு வார இதழில் ஒரு புது ரெசிப்பியின் செய்முறையைப் படித்திருந்தாள் டெபி. ஆனால், அதையே ஈயடிச்சான் காப்பிபோல அடிக்காமல், அதன் மூலப்பொருள்களை எப்படியெல்லாம் மாற்றியமைக்கலாம், இன்னும் வேறு என்னென்ன உணவுப்பொருள்களையெல்லாம் சேர்க்கலாம் என்பதை ஏற்கெனவே மனதளவில் ஒத்திகை பார்த்துவைத்திருந்தாள். அதன்படி செய்தாள். சுடச்சுட, மணக்க மணக்க அவள் செய்திருந்த புது ரெசிப்பியை அம்மாவுக்கும், அவருடைய தோழிக்கும் இரண்டு தட்டுகளில் கொண்டு வந்து வைத்தாள். ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்த அம்மாவின் தோழி அந்த ருசியில் மயங்கிப்போனார். உடனே எழுந்து எதையும் யோசிக்காமல் டெபியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

``அடடா... அற்புதம் கண்ணு... இப்படி ஒரு ருசியான ஒண்ணை நான் சாப்பிட்டதே இல்லை. நீ நல்லா இருக்கணும்மா... நான் சொல்றேன், எழுதிவெச்சுக்கோ... நீ பெரிய ஆளா வருவே.’’

இந்த வாழ்த்தைக் கேட்ட அம்மாவின் கண்களில் நீர் திரண்டது. அந்த வாழ்த்து பலிக்கவும் செய்தது.

டெபி ஃபீல்ட்ஸ் (Debbie Fields)... இந்தப் பெயர் இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். கலிஃபோர்னியாவில் இருக்கும் ஓக்லாண்டில் பிறந்தார் டெபி. அப்பா சாதாரண வெல்டிங் தொழிலாளி. அம்மா வீட்டு நிர்வாகி. இவர்களுக்குப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளில் கடைக்குட்டி டெபி. பிஸ்கெட், கேக், ரொட்டி... எதுவாகவும் இருக்கட்டும். புதுசு புதுசாக செய்து பார்த்தார் டெபி. `அடடே... நல்லா இருக்கே. இதை எப்படி செஞ்சே?’ என்கிற ஒரு பாராட்டு போதும். அவரின் உச்சி குளிர்ந்துவிடும். பாராட்டுதானே பலரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது?

ஒருநாள் அம்மாவிடம் வந்து ஒரு யோசனையைச் சொன்னார் டெபி.

``அம்மா... நாமளே சொந்தமா ஒரு பேக்கரி ஆரம்பிக்கலாம்மா. நானே ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செய்யறேனே...’’

Mrs.Fields bakery

ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை அம்மா. ``பேக்கரியா... என்ன விளையாடுறியா... ஒரு பேக்கரி வைக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா... அவ்வளவு பணத்துக்கு நாம எங்க போறது... சரி, பேக்கரி நடத்துற அளவுக்கு இப்போ என்ன அனுபவம் உனக்கு இருக்கு... இப்போதான் ஜூனியர் காலேஜை முடிச்சிருக்கே. மேற்கொண்டு படிச்சு நல்ல வேலைக்குப் போற வழியைப் பாரு. அப்புறம் இன்னொண்ணு... நம்ம பரம்பரையில யாருமே வியாபாரம் செஞ்சது கிடையாது. அதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது...’’

இந்த பதிலைக் கேட்டு கூனிக் குறுகிப்போனார் டெபி. ஆனால், அந்தக் கனவு மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டே இருந்தது.

தினம் தினம் புதுப்புது ரெசிப்பிகளை செய்து பார்ப்பது; அதைப் பிறருக்குச் சாப்பிடக் கொடுத்து அவர்களின் பாராட்டைப் பரிசாகப் பெறுவது... என்று டெபியின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் ஒரு திருப்பம் வந்து சேர்ந்தது. 1976-ம் ஆண்டு, தன் 19-வது வயதில் ஃபீல்ட்ஸ் (Randall Keith Fields) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் டெபி. ஃபீல்ட்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். பிறரின் மனதைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் வாய்ந்தவர். அவருக்கு டெபியின் கனவு பிடித்திருந்தது. அதற்கு அவர் தடை போடவே இல்லை.

``பேக்கரி ஆரம்பிக்கப்போறியா... தாராளமா செய். உன்னுடைய முயற்சியிலயோ, வேலையிலயோ நான் தலையிடவே மாட்டேன்.’’

அந்தக் காலத்தில் மனைவியை இப்படி ஊக்கப்படுத்துகிற கணவர்கள் வெகு அரிதானவர்கள். அவரின் உயர்ந்த குணம் டெபிக்கு மேலும் ஊக்கம் கொடுத்தது. தன் திறமையை முன்னிலைப்படுத்தி, ஒரு பேக்கரி தொடங்குவதற்காகக் கடனும், நிதி உதவியும் கேட்டு வங்கி வங்கியாக ஏறி இறங்கினார்.

டெபி ஃபீல்ட்ஸ் |Debbi Fields

``உங்ககிட்ட இன்வெஸ்ட்மென்ட் பண்றதுக்கு எவ்வளவு பணம் இருக்கு, உங்களுக்கு சொத்து ஏதாவது இருக்கா, பெரிய பணக்காரங்க யாராவது உங்களுக்காக ஷ்யூரிட்டி போடுவாங்களா?’’ என்று கேள்விகளை அடுக்கின வங்கிகள். சோர்ந்து போய்விடவில்லை டெபி. அவருக்கும் ஒரு கதவு திறந்தது. ஒரு வங்கி அவரின் திறமையை மதித்து கடன் கொடுத்தது, ஆனால் பல நிபந்தனைகள். எல்லாவற்றுக்கும் ஓகே சொன்னார் டெபி.

1977, ஒரு சுபயோக சுபதினத்தில் அது நடந்தது. கலிஃபோர்னியாவிலிருக்கும் பாலோ ஆல்டோவில் ஒரு பேக்கரிக் கடையைத் திறந்தார் டெபி. கடையின் பெயர் `மிஸஸ் ஃபீல்ட்ஸ் (Mrs. Fields).’ காலை 8 மணிக்குக் கடை திறந்தாகிவிட்டது. 11 மணி. சாலையில் போகும் ஒரு மனிதர்கூட அந்தக் கடையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. டெபியின் கணவர் ஃபீல்ட்ஸ் நொந்துபோனார்.

``இதோ பாரு டெபி... இது என்னமோ எனக்கு வேலைக்காகும்னு தோணலை. ஒண்ணு பண்ணு... இன்னிக்கி ராத்திரிக்குள்ள ரொம்ப வேணாம், 50 டாலருக்கு இந்தக் கடையில வியாபாரம் நடந்துச்சுன்னா, உன் திறமையை நான் ஏத்துக்குறேன். இன்னிக்கு நைட் ஒரு ஹோட்டல்ல உனக்கு பிரமாதமான டின்னர் வாங்கித் தர்றேன். அப்படி இல்லைன்னா, நாளைக்கே கடையை மூடிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போயிடலாம். சரியா..?’’

சொல்லிவிட்டு ஃபீல்ட்ஸ் கிளம்பிப் போய்விட்டார். மதியம் 3 மணி. அதுவரை ஒருவர்கூட கடைக்கு வரவில்லை. `கடைவிரித்தோம்... கொள்வாரில்லை’ என்று நொந்துகொள்ளவில்லை டெபி. வெளியே வந்தார். காத்திருந்தார். நடந்து வந்த ஒரு மனிதரை நிறுத்தினார்.

டெபி ஃபீல்ட்ஸ் |Debbi Fields

``ஐயா... புதுசா கடை தொறந்திருக்கேன். நீங்க பணம் கொடுத்து எதையும் வாங்க வேணாம். நான் செஞ்ச ஒரே ஒரு கேக்கைச் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க போதும்.’’

அந்த மனிதர் ஒரு கணம் யோசித்தார். பிறகு தலையாட்டினார். கடைக்குள் வந்தார். கேக்கைச் சாப்பிட்டார். அசந்துபோனார். காசு கொடுத்து வீட்டுக்கு சில கேக்குகளை பார்சல் வாங்கிக்கொண்டு போனார். இப்படி வாசலில் நின்று பல பேரை அழைத்து வியாபாரம் செய்தார் டெபி. அன்றைக்கு அவர் அழைத்து சாப்பிட்டுப் பார்த்த எல்லோருக்குமே டெபியின் பேக்கரியில் இருந்த எல்லாமே பிடித்துப்போனது. அன்றைக்கு அவருடைய விற்பனை 75 டாலர்.

வெறும் வாய்மொழி விளம்பரம்... கடை விரிந்தது. கிளைகள் பிறந்தன. ஆனால், ருசியிலும் தரத்திலும் மட்டும் டெபி எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. முதல் நாள் உணவையும், ருசியில்லாதவற்றையும் தூக்கி எறிவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் டெபி. இன்றைக்கு `மிஸஸ் ஃபீல்ட்ஸ்’ உலகப் புகழ்பெற்ற உணவகம்.

டெபியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான். ரசனையோடுகூடிய உண்மையான உழைப்பு தருவது `வெற்றி’ என்கிற பரிசைத்தான்!


source https://www.vikatan.com/business/news/motivation-story-about-entrepreneur-debbi-fields