Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

கடதல பனஷனல ஏன இததன கழபபஙகள?

ஓய்வு பெற்றபிறகு அதிகமாக பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக நீட்டித்திருக்கிறது தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு (EPFO). கூடுதல் பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் வருகிற 11-ம் தேதிக்குள் விண்ணப்பதை சமர்ப்பித்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் நிலவும் குழப்பமான நடைமுறைகளைப் பார்த்தால், கடைசி தேதியானது இன்னொரு முறைகூட நீட்டிக்கப்படுமோ என்கிற கேள்விதான் பிறக்கிறது!

தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பென்ஷன் பெறுகின்றனர். இவர்கள் அதிகமாக பென்ஷன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தபின், இந்தக் கூடுதல் பென்ஷன் பெறும் திட்டத்தை தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரும்போதே, இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கூடுதல் பென்ஷனுக்கான பணம் எப்படிக் கிடைக்கும், எந்தப் பணத்தில் இருந்து எடுத்துத் தரப்படும், தற்போது கிடைக்கும் பென்ஷன் பணத்தைவிட எவ்வளவு அதிக பணம் கூடுதல் பென்ஷனாகக் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை.

இதனால், கூடுதலாக எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கணக்கை சொல்கின்றனர். சிலர், நமது பி.எஃப் பணத்தில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே கூடுதல் பென்ஷனாகத் தரப்போவதாகச் சொல்கிறார்கள். இதனால், ஓய்வு பெற்றபிறகு நமக்குக் கிடைக்கும் பி.எஃப் பணம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படியானால், பி.எஃப் தொகை குறைவதை ஊழியர்கள் எப்படி சரிக்கட்டுவார்கள்? இன்னும் சிலர், கூடுதல் பென்ஷன் பெற கணிசமான தொகையை பி.எஃப் கணக்கில் கட்ட வேண்டும். அந்தப் பணத்தில் இருந்து கூடுதல் பென்ஷன் தரப்படும் என்கிறார்கள். ஆக, நம் பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே திரும்பத் தருவதுதான் கூடுதல் பென்ஷனா?

இப்படி பல கேள்விகள் இருக்க, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்லி, பி.எஃப் சந்தாதாரர்கள் தெளிவான முடிவை எடுக்க உதவி செய்யாமல், கடைசி தேதியை மட்டும் தள்ளிவைத்துக்கொண்டே போவது சரியான விஷயமா? இந்தத் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதகங்கள் பற்றித் தெரியாமலேயே இதுவரை 16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்களை எல்லாம் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எப்போது பரிசீலனை செய்யும், கூடுதல் பென்ஷன் எப்போது தர ஆரம்பிக்கும் என்கிற கேள்விகளுக்கும் இப்போது விடை இல்லை!

பென்ஷன் என்பது ஓய்வு பெற்ற மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். ஓய்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் பென்ஷன் தர விரும்பினால், அதைப் பற்றி நன்கு யோசித்து, விவாதித்து, முன்கூட்டியே எடுத்துச் சொல்லி, மக்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதுதான் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு செய்யும் வேலையாக இருக்கும். அதை விட்டுவிட்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதால் என்ன பயன்?

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/confused-in-hike-pension-plan

வடட நயகள - பயசசல - 71

கொடிமரத்தை வெட்ட வந்த மாடசாமியை, அவனின் ஆட்கள் அரிவாள்களால் வெட்டியும், கொத்தியும் கீழே சரித்தனர். மாடசாமி ரெத்தவிளாறாகப் பன்றியின் மேல் பொத்தென விழுந்தார். அப்போதும் அவர்மீது அரிவாள் வெட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. சில கொத்துகள் கை தவறி, கீழே கிடந்த பன்றியின்மீதும் விழுந்தன. அந்த இடங்களில் சதை பிய்ந்து ரெத்தம் பீறிட்டது. பன்றியின் வாய் கட்டப்பட்டிருந்தாலும் அது வலி பொறுக்க மாட்டாமல் ‘ங்ம்...ங்ம்...ங்ம்...’ என உறுமித் திணறியது.

மாடசாமியிடமிருந்து இப்போது எந்த அனத்தலும் இல்லை. அவரின் கண்கள் இமைக்க மாட்டாமல் கொடிமரத்தையே பார்த்தபடி சொருகி நின்றன. தன் மகனைக் கொன்றவனைத் தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்கிற விசனத்தோடு அவர் உயிர் முடிச்சு அறுபட்டிருந்தது.

“ச்சே... மகென் வருவான்னு பார்த்தா இந்தக் கிழட்டுத் தாயோலி வந்துருக்கான். மவனைத் தப்ப வெச்சுட்டு, அப்பன் தலையைக் கொடுத்துருக்கான்போல. சர்தான்... தம்பியப்போல அப்பனும் நம்ம கையாலதான் செத்தான்னு அவனுக்குத் தெரியுறதுக்குள்ள நாமளே அவனை முடிச்சுவிட்டுறணும்டே!”

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 71

அருகில் கிடந்த மூட்டை தூக்கும் கொக்கியால் மாடசாமியின் உடலைக் கொத்தி, பன்றியின் மேலிருந்து இழுத்துப்போட்டான் கொடிமரம். “கெழட்டு நாயி சாகும்போது பன்னியவும் துணைக்குக் கூட்டிட்டுப் போயிருக்கு. ரெண்டையும் ஒண்ணா சேத்து வாட்டி, மஞ்சத் தடவிட்டு நாளைக்கி கறியோட கறியா கூறுபோட்டு கலந்துவிடு. சாராயம் குடிக்கிறவனுகளுக்கும், கொஞ்சத்தைத் தெரு நாய்களுக்கும் அள்ளிப் போடு.” உடன் இருந்தவர்களுக்கு உத்தரவிட்டான் கொடிமரம்.

அவர்கள் இரண்டு உடல்களையும் நெருப்புக்கூட்டி தீயில் வாட்டத் தொடங்கினார்கள். பிறகு மாடசாமியின் உடைகளை ஓலைக் கிடுகுகளோடு சேர்த்து எரித்தார்கள். மனுஷக்கறியின் நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. தோல் உதிர்ந்த சடலத்தைக் கூறுபோட்டு பன்றிக்கறியோடு கலந்து பெரிய சட்டியில் வேகவைத்தார்கள். “முத்துன உடம்பு... நல்லா வேகவிடுங்கடா” என்றான் கொடிமரம். பொழுது விடிவதற்குள் எல்லாமும் தடம் தெரியாமல் ஆனது. கோவில்பட்டிக்குப் போன சிவன்காளைக்கு இரவெல்லாம் துளி உறக்கமில்லை.

திருவிழா முடிந்த அடுத்த நாள் என்பதால் சாராயம் குடிக்க ஆத்துமேடு கருவக் காட்டுக்குள் அவ்வளவு கூட்டம். கேட்பவருக்கெல்லாம் இலையில் கறியை அள்ளிக் குமித்துவைத்தார்கள். காலையிலேயே காளி அங்கு வந்துவிட்டான். வந்ததிலிருந்தே பதற்றமாக இருந்தான். கொடிமரம் ஒரு பெரிய நாட்டுக் கருவேலத்தின் நிழலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் ஆட்கள் கறியைத் தராசில் எடைபோட்டு விற்றுக்கொண்டிருந்தனர். காளி, இரவில் அங்கு சிவன் வந்தானா எனத் தடயங்களைத் தேடினான். எதுவுமில்லை.

காளிக்குத் தன் ஆட்களிடம் எப்படி கேட்பதெனத் தெரியவில்லை. கறி விற்பவர்களின் அருகில் வந்து நின்றதும், “வாடா காளி... இங்க உக்காரு” என்று கோணிச் சாக்கில் உட்கார அழைத்தார்கள். அங்கிருந்த எல்லோரின் கண்களிலும் இரண்டு நாள் தூக்கம் அப்படியே தேங்கியிருந்தது. கண்ணுக்குக் கீழே ரெப்பைகள் வீங்கியிருந்தன.

“நைட்டு யாரும் தூங்கலபோலயே...” காளி மெல்லப் பேச்சுக் கொடுத்தான். யாரும் மறுவார்த்தை பேசவில்லை. தராசில் கறி நிறுப்பவன் அன்று எல்லோருக்கும் கூடுதல் கறியை அள்ளிப்போட்டான். கிலோவுக்குக் கால் கிலோவாவது ஓசியில் போட்டார்கள். காளிக்கு அது மேலும் சந்தேகத்தைக் கூட்டியது. யாவாரம் சற்று ஓய்ந்த நேரத்தில், “நேத்து நைட்டு ஏதும் நடந்துச்சா..?” என்று தன் நண்பர்களிடம் நேரடியாகவே கேட்டான்.

“ஏதும் நடந்துச்சான்னா புரியல..?” அவர்களும் அவனை வம்பு செய்தார்கள். “டே இசக்கி... சும்மா என்னத்தையாவது விளையாடாத...” என்றான் காளி. “சரி, நான் ஒண்ணு மட்டும் சொல்லுதேன். உனக்காகத்தான் இந்தச் சலுகை. உன் சொந்தகாரனுவ யாரும் இருந்தா, இன்னிக்கி நம்ம கறியைச் சாப்பிட வேண்டாம்னு மட்டும் சொல்லு. இன்னிக்கி மட்டும் வீட்டுக்குக் கறி எடுத்துட்டுப் போகாத...” இசக்கி அப்படிச் சொன்னதும் “ஏன்..?” எனப் பதற்றமானான் காளி. அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

“சொல்லுதோம்ல...”

“நான் வர்றப்பவே பாத்தேன், முனியண்ணே தெருநாய்க்கெல்லாம் கறி போட்டுக்கிட்டு இருந்தாரு.”

“ஆமா அதையும் பாத்துட்டியா... அதாம் சொல்லுதோம். நாய்க்கி பன்னிக்கறி போட்டாலே வெறி ஏறி, பைத்தியம் பிடிக்கும். இதுல மனுஷக் கறியும் சேத்து கலந்துவிட்டா அவ்வளவுதான். பாரு கொஞ்ச நாள்ல தூத்துக்குடில இருக்குற எல்லாத் தெருநாயும் எவனைக் கடிக்கலாம்னு திரியும். நைட்டு படத்துக்குப் போனா பாத்துப் போடே...” காளிக்கு என்னவோ செய்தது.

திரும்பிப் பார்க்கையில் காளியின் விருந்தாளியாக வந்த மாமாவும், அவரின் சேக்காளிகளும் சாராயம் வாங்கிக் குடித்தபடியே, கறியை நக்கிக்கொண்டிருந்தார்கள். “அங்க என்னடே பாக்குதே... யாரு சொந்தக்காரனுவலா... விடு... போகட்டும். முக்காவாசி சாப்பிட்டுட்டானுவ. இப்போம் என்னத்தை யாவது சொல்லித் தொலைக்காத...” காளிக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. போய் வாந்தி எடுத்துவிட்டு வந்தான்.

“என்னடே மாப்ள... நேத்து அடிச்ச சரக்கு சேரலையா... பித்த உடம்புடே உனக்கு...” காளியின் மாமா கிண்டலாகச் சிரித்தார். இசக்கியிடம் நேரடியாகவே கேட்டான் காளி, “யாரு... பம்பாய்க்காரனா..?”

“இல்லடே அவம் அப்பன். அந்தக் கருவாட்டு யாவாரி கிழவன். அண்ணனைப்போட வந்தான். வேற வழி... சோலிய முடிச்சாச்சு.”

“அப்போம் சிவன் எங்க போனாம்?”

“அது தெரியலடே... ஆனா இன்னிக்கி அவம் வந்தான்னா இன்னிக்குத் தூக்கமும் போச்சு...” அவர்கள் அலுத்துக்கொண்டார்கள். கொஞ்ச தூரத்தில் கொடிமரம் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு நடந்து வந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 71

ஞானவேல் சரக்கடித்தபடியே ஒரு கப்பலின் நுனியில் நின்று, தன் போலீஸ் அதிகாரி நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“ஏண்டா... என்ன ஆச்சு, நீ இவ்வளவுல்லாம் குடிக்க மாட்டியே ஞானவேல்... ஏதும் பிரச்னையா..?”

“ஆமாண்டா... ரெண்டு நாளா தூக்கமே இல்ல... பாக்கக் கூடாத ஒண்ணைப் பாத்துத் தொலைச்சுட்டேன்.”

“என்னத்தடா பாத்த?”

“ஒரு தே**யா குடும்பம் என் மகனை வளைச்சுப் போட்டுருச்சுடா...”

“என்ன லவ்வா... இதெல்லாம் வயசுப் பசங்களுக்கு வாரதுதான... ஏன் நீயும் நானும் பண்ணலையா?”

“ஏய்... இது வேறடா... இது அரிப்பு... வெறும் அரிப்பு. இல்லாட்டி தன்னைவிட ரெண்டு வயசு சின்னப் பையனை இப்படி ஆக்கிவெப்பாளா... சொல்லு...”

“அப்போ கவலையை விடு... முடிச்சுட்டு கழட்டி விட்டுட்டு வந்துடுவான். உன் பையன் உன்னைவிட விவரமானவன்டா...”

“நான்சென்ஸ் மாதிரி பேசாத... இது எனக்கென்னமோ அப்படித் தோணலை... திட்டம் போட்டுத்தான் வளைச்சுப் போட்ருக்காளுங்க. என் மகனும், அந்த முண்டையோட தம்பியும் தோஸ்த்ஸ். நான் அந்தப் பயலுக்கு வேலைக்குல்லாம் ரெகமெண்ட் பண்ண இருந்தேன். ஆனா, அந்தப் பொட்டச்சி உடம்பைக் காட்டி என் பிள்ளைய...”

“டேய் டேய்... விடு. ஒரு ஹையர் அஃபீஷியல் நீ. இதெல்லாம் ஒரு விஷயமா, இங்க என் சீனியர் ஆபீஸர் ஒருத்தர் இருக்காரு. ரிட்டயர்டு ஆனவர். ஸ்ட்ரோக்னால கை கால் வரலை. ஆனா மூளை பயங்கர ஷார்ப். பேரு பெரேரா... வா அவரைப் போய்ப் பார்ப்போம்.

“இப்படியேவா?”

“அவரே இப்போம் ஃபுல்லாத்தான் இருப்பாரு. வா போலாம்.”

பிளசரில் போகும்போதே இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். “அந்த வல்லநாடு ரௌடி கேஸ், தாழையூத்துல எம்.எல்.ஏ மேல குண்டுபோட்ட கேஸ்... எல்லாத்தையும் பெரேராதான் டீல் பண்ணாரு. ஒரு சின்ன எரர்கூட இருக்காது. நீயே பார்க்கத்தானே போற.”

சொன்னதுபோலவே அவர் வீட்டுக்குப் போகும்போது குடித்துக்கொண்டுதானிருந்தார். ஞானவேல் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பெரேரா, இரண்டே நிமிடங்களில் ஒரு வழியைச் சொன்னார்.

“அந்த லேடி ரோசம்மா மேல பெரிய கேஸாப் போடுங்க. முடிஞ்சா திருவிழாவுக்கு வந்தவங் களுக்கு கஞ்சா வித்த அக்யூஸ்ட்டா அவளை நிக்க வெச்சு பேப்பர்ல போட்டோ நியூஸ் கொடுங்க. ஈஸ்ட் ஸ்டேஷன்ல நான் பேசுறேன். உங்க மகன் விஷயமும் இதுல முடியும். பர்லாந்து குரூப்பும் டிஸ்ட்டர்ப் ஆகும்.”

“பர்லாந்து குரூப் எப்படிங்க..?”

“பெரிய பர்லாந்து ரைட் ஹேண்ட் சமுத்திரம்தானே அந்த லேடியை வெச்சுருக்கான்... அவ அவமானப்பட்டு உள்ள போனா எல்லாம் நடக்கும். நான் சொல்றேன்ல... என் சர்வீஸ்லதான் இந்த குரூப்பை என்னால எதுவும் செய்ய முடியல... ஏற்கெனவே எங்க பர்சனல் கணக்கும் தீர்க்கப்படாம இருக்கு. நான் சொல்ற மாதிரி செய்யுங்க. எல்லாரோட ஆட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவரலாம்.”

பெரேராவிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்பும்போது பெரேரா, “வி வில் மீட் அகெய்ன்... இந்த மொத்த கேங்கையும் தடம் தெரியாம ஆக்கிடலாம்” என்றபடி புகைப்பானைப் பற்றவைத்தார்.

சிவன்காளைக்கு அடுத்த நாள்தான் பம்பாய் ரயில். கோவில்பட்டியிலிருந்து புறப்பட இன்னும் நேரமிருந்தது. அவன் தன் அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று பயந்து கொண்டேயிருந்தான். எதற்கும் ஒரு எட்டு தூத்துக்குடிக்குப் போய் தன் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்று அவனுக்குத் தோன்றியது!

(பகை வளரும்...)



source https://www.vikatan.com/literature/story/vettai-naaigal-series-by-naran-71

இனறய ரசபலன 01.07.23 | Horoscope | Today RasiPalan | சனககழம | July 01| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01072023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

வியாழன், 29 ஜூன், 2023

Doctor Vikatan: ரததததல இரமபசசதத அதகமகம... அபபட ஆவத பரசனககரயத?

Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதைத்தானே அனீமியா என்கிறோம்.... அதுதான் பிரச்னைக்குரியது என கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிப்பதும் பிரச்னைதான் என்கிறாள் என் தோழி, அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

ரத்த வெள்ளை அணுக்களில் உள்ள புரதத்தையே ஹீமோகுளோபின் என்கிறோம். ஹீமோகுளோபின் என்பது வயதுக்கேற்ப மாறும். தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஃபீட்டல் ஹீமோகுளோபின் இருக்கும். பிறந்ததும் அது அடல்ட் ஹீமோகுளோபினாக மாறும். அதுதான் நிரந்தரம்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இது 12 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11 அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆண்களுக்கு 13 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஆண்களைப் பொறுத்தவரை இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமில்லை. மாதவிலக்கின் போது மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு ரத்த இழப்பு ஏற்படுவதால் பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை அதிகம்.

ஒரு மில்லி ரத்தத்தில் ஒரு மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கும். தலசீமியா பாதிப்பில் மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும். மஜ்ஜை பாதிப்பால் வரும் ஏபிளாஸ்டிக் அனீமியாவுக்கும் (Aplastic anemia) ரத்தம் ஏற்ற வேண்டிய தேவைப்படலாம். எலும்புகளுக்குள் உள்ள மஜ்ஜையிலிருந்துதான் தினமும் ரத்தமானது ஃபேக்டரி போல உற்பத்தியாகி வருகிறது. ஃபேக்டரி உற்பத்தியில் பிரச்னை வரும்போது மஜ்ஜை பாதிக்கப்படுகிறது. அதை 'போன் மாரோ ஃபெயிலியர்'  அதைத்தான் 'ஏபிளாஸ்டிக் அனீமியா' என்கிறோம். புற்றுநோயைவிடவும் ஆபத்தான நோய் இது. இந்த பாதிப்பில் அவசரமாக மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் இரும்புச்சத்து மிகுதி (அயர்ன் ஓவர்லோடு) ஏற்படும். இது ரத்தத்தை பாதிக்கிற பிரச்னையல்ல.

ரத்தசோகை

நாளமில்லா சுரப்பிகளான கல்லீரல், கணையம்,பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்ற உறுப்புகளை பாதிக்கும். எனவே நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். ரத்தத்தில் இரும்புச்சத்து மிகுதியாவதும் ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம்தான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-it-harmful-if-there-is-too-much-iron-in-the-blood

இன வணடம!' கணவனககக வலகய பரயஙக; சத ரமன ஹரயனன சசகமர பட நடக!

ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் `சீதாராமன்'. சன் டிவியில் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த ஹிட் தொடரான `ரோஜா' சீரியலில் நடித்த பிரியங்காவை அதிக சம்பளம்  கொடுத்து இந்தத் தொடரின் கதாநாயகியாகக் கமிட் செய்தார்கள்.

சீரியலின்  புரோமோவே மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டது. பிரியங்கா தவிர, ரேஷ்மா, சாக்‌ஷி சிவா, வினோதினி உள்ளிட்ட மேலும் சிலரும் நடிக்க,. டி.ஆர்.பி.யிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கிய சூழலில், தொடரிலிருந்து ஹீரோயின் பிரியங்கா வெளியேறினார்.

இது தொடர்பாக `நீ நடிச்சது போதும்..!'- ஹிட் சீரியலிலிருந்து கண்ணீருடன் வெளியேறும் பிரியங்கா?!காரணம் என்ன? என்கிற தலைப்பில் ஏற்கெனவே முன்கூட்டியே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

பிரியங்கா

பிரியங்காவுக்கு சீரியலில் நடிக்க வேண்டுமென்பதுதான் விருப்பமென்றும், ஆனால் அவரது கணவருக்கு பிரியங்கா தொடர்ந்து நடிப்பதில் உடன்பாடில்லை.. 'நான் நல்லா சம்பாதிக்கிறேன். அதனால நீ நடிச்சது போதும்' என அவர் சொன்னதை பிரியங்காவால் மீற முடியவில்லை எனவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

நாம் குறிப்பிட்டதைப் போலவே சில தினங்களுக்கு முன் சீரியலிலிருந்து வெளியேறினார் பிரியங்கா.

சீரியல் விறுவிறுப்படையத் தொடங்கியிருந்த நெரத்தில் பிரியங்கா வெளியேறியதால் அப்போதிலிருந்தே அடுத்த சீதாவாக யார் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு சீரியலின் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது.

ஆனாலும் சில தினங்கள் சீதாவுக்கான சீன்கள் இல்லாமலே சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இன்னொரு பக்கம் பிரியங்காவின் இடத்துக்கு ஆர்ட்டிஸ்ட் தேடும் படலுமும் சேனலில் நடந்து கொண்டெ இருந்தது.

சீரியல் சினிமா நடிகைகள் பலரது பெயர்கள் பரிசீலனையில் அடிபட்டு வந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ரீபிரியங்கா அடுத்த சீதாவாகத் தேர்வாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

’பிரியங்காவுக்குப் பதில் ஸ்ரீபிரியங்காவா எப்புட்றா?’ என்கிறீர்களா, இதே சந்தேகத்தை நாமும் கேட்டோம்.

ஸ்ரீ பிரியங்கா

‘சீரியல்கள்ல ’இவருக்குப் பதில் இவர்’னு மாற்றம் நடக்கிற போது பொதுவா ஒரு விஷயத்துல கவனம் செலுத்துவாங்க. அதாவது ஏற்கெனவே நடிச்சிட்டிருந்த நடிகர் நடிகைகளின் சாயல் ஓரளவு பொருந்திப்போகிற மாதிரி இருக்கிற ஆர்ட்டிஸ்டுகளைத்தான் தேடுவாங்க. அப்படி சில மாற்றங்கள் கூட நடந்திருக்கு.. சீரியல் ரசிகர்களைச் சமாதானப்படுத்தும் ஒரு உத்தி இது, ‘பிரியங்கா’வை மாதிரியே ஆர்ட்டிஸ்ட் கிடைக்கலையோ என்னவோ, அவங்க பெயரைக் கொண்ட ஆர்ட்டிஸ்டா செலக்ட் செய்திருக்காங்க’ என்கிறார்கள்.

இந்த ஸ்ரீபிரியங்கா சினிமாவில் நடித்தவர். ’மிக மிக அவசரம்’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’  உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். ‘மகளிர் காவலர்களின் பிரச்னைகளைப் பேசிய ‘மிக மிக அவசரம்’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியான போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை மகளிர் காவலர்கள் பார்க்க ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.

இவர் சீதா கேரக்டருக்கு ரொம்பவே பொருந்திப் போவார் என்கிறார்கள். ஸ்ரீபிரியங்கா இன்னும் ஓரிரு தினங்களில் சீரியலின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.



source https://cinema.vikatan.com/television/actress-sripriyanka-replaced-roja-priyanka-in-seetharaman-serial

நமககல: லஞச ஒழபபததற சதன; எஸ.ஐ வடடல சககய ஆவணஙகள?!

நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூபதி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், 'ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை' என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, உதவி ஆய்வாளர் பூபதி விசாரணை நடத்தினார்.

சோதனை நடந்த பூபதி வீடு

அப்போது, வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஜெயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கஞ்சா வியாபாரிகளிடமும் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்று, அவர்களுக்கு அடைக்கலம் தந்ததாகவும் இவர்மீது அதிரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் இவர்மீது, தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு, உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே இருக்கும் மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள பூபதியின் மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில், பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது.

மரக்கன்று நடும் எஸ்.ஐ பூபதி

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பூபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்துவதும், நடவடிக்கை எடுப்பதும் இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியிருப்பது, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/vigilance-raid-in-sub-inspector-related-places-in-namakkal

சநதல பலஜய நககம அதகரம ஆளநரகக இலல!" - சடடததற அமசசர ரகபத

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ``ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழக முதலமைச்சரின் விருப்பம். ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான விளக்கங்களை தருவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்று 2024 தேர்தலுக்கு பிறகு தான் தெரியும். அந்த அளவிற்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

நாங்கள் சொல்லும் விதிமுறைகளின்படி தான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சரவையில் ஒருவரை நீக்குவதற்கு அவருக்கு உரிமை இருக்கா என்றால் கிடையாது. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும் வைத்துக் கொள்ளாததும் முதல்வரின் விருப்பமே, தவிர அது ஆளுநரின் விருப்பம் அல்ல.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள் ஒவ்வொருத்தரையும் விலக்கி கொண்டு போகிறேன் என்று சொன்னால்... அப்படி செய்ய முடியுமா, முடியாது. இது ஜனநாயக நாடு, ஆளுநரின் சர்வாதிகார நாடு இல்லை.

அ.தி.மு.க போன்ற பா.ஜ.க-வுக்கு அடிமைகளாக இருக்கும் கட்சியினர் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்து மிரட்டி பணிய வைக்க செய்யும். அவர்களின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை இருக்குமே தவிர காவல்துறையாகவோ பாதுகாப்பு துறையாகவோ இருக்காது.

அமலாக்கத்துறை வழக்குகளின் நிலைமைகளை நாட்டு மக்கள் இன்று நன்றாக கவனித்து வருகின்றனர். அமலாக்கத் துறைக்காக நாங்கள் பயப்படப் போவது கிடையாது. நீதிமன்றம் இருக்கிறது இன்னும் ஜனநாயகம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி இருக்கின்றது என்ற நம்பிக்கையோடு தான் மக்கள் இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறையை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களை கை வைக்காது. ஐந்தாண்டுகள் மட்டுமல்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை தான்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது சில ஆவணங்களைத் தூக்கி வெளியே எறிந்தார்கள். அன்றைக்கு ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார். ஆவணத்தை வெளியே வீசுவதும், அப்படி வீசும் போது ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடும் வீடியோயும் வைரலானது. அதையே சாட்சியமாக வைத்து அப்போது விஜயபாஸ்கரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால்,நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதை 2024ல் மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/governor-has-no-right-to-fire-senthil-balaji-law-minister-raghupathi

நடசததரப பலனகள: ஜன 30 மதல ஜல 6 வர #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-june-30th-to-july-6th

இனறய ரசபலன 30.6.23 | Horoscope | Today RasiPalan | வளளககழம | June 30 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/30062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

புதன், 28 ஜூன், 2023

ர.300 கட மசட; பஙக லன வஙகத தரவதக 63 பர ஏமறறய தரபபர சவககமர கத!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். சிவகுமார் தன்னுடைய அண்ணன் விஜயகுமார், அண்ணன் மகன் ராகுல் பாலாஜி, பல்லடத்தைச் சேர்ந்த தமிழரசன், பிரவீணா ஆகியோரை வைத்துக்கொண்டு நிலம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் தேவைப்படுவோரின் விவரங்களை இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக்கொண்டு, அவர்களைச் சந்தித்து சொத்துகள்மீது கடன் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். மேலும், கூடுதலாக வங்கியில் கடன் பெற்று அதை தனது ஸ்பின்னிங் மில் தொழிலில் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்று கூறி 60-க்கும் மேற்பட்டோரிடம் சிவக்குமார் கும்பல் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

சிவக்குமார்

இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார் உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். இதையறிந்த சிவக்குமார், விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீணா ஆகியோர் தலைமறைவான நிலையில், தமிழரசன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, பிரவீணாவை பல்லடம் போலீஸார் அண்மையில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிவக்குமார் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பல்லடத்தில் பதுங்கியிருந்த சிவக்குமாரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். "சிவக்குமார் தனது செல்போனை ஆஃப் செய்து வைத்திருந்ததால், அவரைப் பிடிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. மேலும், அவர் வெளிமாநிலங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார். பல்லடத்திலுள்ள ஒரு வீட்டில் சிவக்குமார் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்று அவரைக் கைதுசெய்தோம். சிவக்குமாரின் அண்ணன் விஜயகுமார், அவர் மகன் ராகுல் பாலாஜி ஆகியோரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

குமரேசன்

இது குறித்து சிவக்குமாரிடம் ஏமாந்த கோவை எஸ்.பி காலனியைச் சேர்ந்த குமரேசன் நம்மிடம் பேசுகையில், ``ஃபைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய வங்கியில் கடன் கேட்டு 2017-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தேன். நண்பர் ஒருவர் மூலம் சிவக்குமார் அவருடைய தொழில் பாட்னர்கள் என்று கூறி தமிழரசன், பிரவீணா ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. `இவ்வளவு பெரிய சொத்தை வெறும் ரூ.25 லட்சத்துக்கு ஏன் அடமானம் வைக்கிறீர்கள்... நான் தாராபுரம், பல்லடம் பகுதிகளில் ஸ்பின்னிங் மில், கோழிப்பண்ணை, ஃபர்னிச்சர் கடை வைத்திருக்கிறேன். உங்கள் நிலத்தின்மீது வங்கியில் கூடுதலாகக் கடன் பெற்று, அதை என்னுடைய ஸ்பின்னிங் தொழிலில் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும்' என்றார் சிவக்குமார்.

இதையடுத்து தமிழரசனும், நானும் ஸ்பின்னிங் மில்லில் தொழில் பாட்னர்கள் என்பதுபோல் டாக்குமென்ட்டுகளை தயார் செய்தார் சிவக்குமார். இதற்காக கோவையிலுள்ள என்னுடைய 10 சென்ட் நிலப்பத்திரத்தை சிவக்குமாரிடம் கொடுத்தேன். அதில், 2,400 சதுர அடியை மட்டும் ஈரோட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைத்து, தொழிலுக்காக நானும், தமிழரசனும் இணைந்து தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் ரூ.2 கோடி கடன் பெறப்பட்டது. `கடன் தொகை நம் கையில் வர ஆறு மாதங்களாகும். அதுவரை ஸ்பின்னிங் மில் தொழிலிலிருந்து மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் லாபம் தருகிறேன்' என்று சிவக்குமார் கூறினார். முதல் மூன்று மாதங்கள் லாபத்தைத் தராமல் இழுத்தடித்த நிலையில்தான், வங்கியிலிருந்து வட்டி கட்டுமாறு எனக்கு நோட்டீஸ் வந்தது. வங்கியில் விசாரிக்கையில், தமிழரசன் வரவு செலவை கையாளுவது போன்று டாக்குமென்ட் தயாரித்திருப்பது தெரியவந்தது.

ஏமாற்றப்பட்டவர்கள்

மேலும், கடன் தொகையான ரூ.2 கோடியையும் 10 நாள்களுக்குள் சிவக்குமார் தன்னுடைய அண்ணன் விஜயகுமார், அவர் மகன் ராகுல் பாலாஜி, பிரவீணா ஆகியோர் பெயருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, `தொழிலுக்காகப் பணத்தை அவர்கள் பெயருக்கு மாற்றியிருக்கிறேன். விரைவில் பணம் வந்துவிடும்' என்று கூறினார்.

அத்துடன் கொரோனா காலத்தில் நஷ்டமான தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.40 லட்சம் கடனைப் பெற்றிருக்கிறார். 2,400 சதுர அடி போக மீதமுள்ள எனது நிலத்தை வெள்ளகோயிலைச் சேர்ந்த தாமு என்பவரிடம் அடமானமாக வைத்து சிவக்குமார் ரூ.15 லட்சம் பெற்றிருக்கிறார். அவரை நம்பி பல கோடி மதிப்புள்ள எனது சொத்தை இழந்துவிட்டு, இன்று ரூ.2.5 கோடி கடனாளியாகவும் இருக்கிறேன். என்னைப்போன்று 63 பேரிடம், `தொழில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்கிறேன்' என்று கூறி அவர்களின் சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சிவக்குமார் கும்பல் மோசடி செய்திருக்கிறது. கைதுசெய்யப்பட்டிருக்கும் பிரவீணாவை தொழில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, அவரது வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ரூ.35 லட்சத்தை சிவக்குமார் பெற்றிருக்கிறார்.

பிரவீணா

ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை திருப்பிக் கேட்ட பிரவீணாவை தன்னுடனே வைத்துக் கொண்டார் சிவக்குமார். பிரவீணா உடுமலையில் ஸ்பின்னிங் மில் நடத்துவதுபோல், ஜி.எஸ்.டி எடுத்து பலருடன் தொழில் பார்ட்னராகவும் டாக்குமென்ட்டுகளைத் தயாரித்திருக்கிறார். நான் அளித்த புகாரில் போலீஸார் கைதுசெய்துவிடக் கூடாது என்று தன்னை சிவக்குமார் கடத்தியதாக பிரவீணா வீடியோ வெளியிட்டு நாடகம் நடத்தினார். அதன் பின், பிரவீணா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிரவீணா, சிவகுமாருடன் இணைந்து எனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்துசெய்தது. இதையடுத்து, அவரை பல்லடம் போலீஸார் கைதுசெய்தனர்" என்றனர்.



source https://www.vikatan.com/crime/rs-300-crore-fraud-case-police-arrested-tiruppur-sivakumar

தரசச: தபபகக மனயல கடததபபடட தழலதபர; ஏரகடடல மடட பலஸர - நடநதத எனன?

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருக்கிறது. ராமராஜன் ஜவுளித் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஜூன் 25-ம் திருச்சி உறையூரில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்கச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ராமராஜன் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். அவரது மனைவி ஹேமலதா போன் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்திருக்கிறது.

பல இடங்களில் விசாரித்தும் ராமராஜனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் ஹேமலதாவுக்கு போன் செய்த ராஜேஸ் என்பவர் 'உங்க வீட்டுக்காரர் என்கிட்ட ஏழரை லட்ச ரூபாய் கடன் வாங்கிட்டு திருப்பிக் கொடுக்கலை. அதனால அவரை கடத்தி வச்சிருக்கோம். பணத்தைக் கொடுத்துட்டு அவரை கூட்டிட்டு போங்க. இல்லைன்னா அவரை கொன்னு போட்ருவோம்' என்றிருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹேமலதா, கண்ணீரோடு மணிகண்டம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.

அதையடுத்து திருச்சி டி.எஸ்.பி அறிவழகன் தலைமையிலான தனிப்படை களத்தில் இறங்கி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. ராமராஜனின் செல்போன் சிக்னல், ராமராஜன் கடைசியாக பேசிய நபர்களின் கால் ஹிஸ்டரி, ஹேமலதாவுக்கு போன் செய்த ராஜேஸின் நம்பர் ஆகியவற்றை வைத்து விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி, சேலம், ஏர்காடு என பல இடங்களில் கடத்தல் கும்பல் சுற்றி அலைந்தது தெரிந்திருக்கிறது. அதையடுத்து ஏர்காட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ராமராஜனை கடத்தல் கும்பல் அடைத்து வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்திருக்கிறது.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்

அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் ராமராஜனை உயிரோடு மீட்டனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர் முஸ்தபா, ராஜேஸ், கீர்த்தி, இருதயராஜ், மணிகண்டன், வசந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைதுசெய்து திருச்சிக்கு அழைத்துவந்து தனிப்படை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில், கூலிப்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ராமராஜனைக் கடத்தியது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். ``சென்னை ஆவடி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த கீர்த்தி என்பவரிடம், ராமராஜன் ஏழரை லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லி வாங்கிய கடனை ராமராஜன் திரும்பச் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.

கடத்தப்பட்ட ராமராஜன்

இதில் கோபமடைந்த கீர்த்தி, ராமராஜனிடமிருந்து எப்படியாவது பணத்தை வாங்கியாக வேண்டுமென, அவரது நண்பரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த முஸ்தபாவிடம் கூறியிருக்கிறார். அவர் தனக்குத் தெரிந்த கூலிப்படையினரை வைத்து இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேறியிருக்கிறார். கடத்தலின் போது பயன்படுத்திய துப்பாக்கியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது' என்றனர்.



source https://www.vikatan.com/crime/police-arrested-a-gang-who-kidnapped-a-businessman-in-trichy

கரடடன

யாரை நோக்கிப் பாயும் தோட்டா..?


source https://www.vikatan.com/government-and-politics/politics/cartoon-july-02-2023

இனறய ரசபலன 29.6.23 | Horoscope | Today RasiPalan | வயழககழம | June 29 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/29062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 27 ஜூன், 2023

மதவத சகதகளடமரநத நடடக ககக ரகல கநத எநத தயகததயம சயவர"- மணககம தகர

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது ரெட்டியபட்டி கிராமம். இங்கிருக்கும் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சுகந்தி. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செவிலியராக பணியாற்றி வரும் இவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு கைகளினால் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நைட்டிங்கேல் விருதினை சமீபத்தில் பெற்றார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி.

இதனை அறிந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் சுகத்தியை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக ரெட்டியப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த மாணிக்கம் தாகூர் எம்.பி‌. செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ``மதவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறார். தமிழகத்தில், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும்.

நிழற்குடை

பாட்னாவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெறவிருக்கும் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/rahul-gandhi-ready-to-sacrifice-anything-for-rescue-the-country-from-religious-minded-says-manickam-tagore-mp

ஒன ப ட

ரா.அர்ஜூனமூர்த்தி, மாநிலப் பொறுப்பாளர், பா.ஜ.க

``திரையுலகம் என்பது பொதுமக்கள் நேரடியாகவும் அதிகமாகவும் அணுகக்கூடிய ஒரு துறை, அவ்வளவுதான். எல்லாத் துறைகளில் பயணிப்பவர்களுக்கும் உண்டான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் நிச்சயம் உண்டு. திரைத்துறையினருக்கும் சமுதாய நோக்கம் இருக்கலாம். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மிகச் சிறப்பான முறையில் அவர்கள் வசமிருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் முதல்வர்களானார்கள். திரைத்துறையினரின் அரசியல் வருகையை இதுபோல கடுமையாக விமர்சிப்பது ஏற்புடையதல்ல. உதயநிதி ஸ்டாலின்கூட அங்கிருந்து வந்தவர்தானே... அவருக்கு இருக்கும் அதே உரிமை எல்லோருக்கும் இருக்கிறதுதானே... கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ஒருவரின் ஜனநாயக உரிமையை யாரும் கேள்விக்குள்ளாக்குவது சரியானதல்ல. மக்களுக்கு நல்லது நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர் களத்துக்கு வந்து மக்களைச் சந்திக்கட்டும். அவரை ஏற்பதா, புறக்கணிப்பதா என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும். ஜனநாயகத்தில் வாக்குரிமை இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியலில் ஈடுபடவும் உரிமை உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது!’’ஒன் பை டூ

ஆளுர் ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.க

``எந்தவொரு தனிப்பட்ட நடிகரின்மீதான வெறுப்பினாலோ அல்லது நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்கிற தொனியிலோ இந்தக் கருத்து சொல்லப்படவில்லை. அதேநேரம், அரசியல் கட்சித் தலைவர்கள் களத்தில் நின்று போராடி, மக்களைச் சந்தித்து, வழக்குகளில் சிக்கி, நாட்டின் அனைத்துப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தி, 30, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவத்துடன் பயணப்படுகிறார்கள். அவ்வாறான சூழலில் ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என அறிவிக்கவே செய்யாத ஒருவரைத் தொடர்ந்து பேசுபொருளாக முன்வைப்பது துயரமானது. கடந்த பல ஆண்டுகளாக திரு.ரஜினிகாந்த் அவர்களை மையப்படுத்தி ஊடகங்கள் தீவிரமான விவாதங்களை நடத்தின. ஆனால், அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தபோது முட்டாளாக்கப்பட்டது யார்... எவ்வளவு நேர விரயம்... அதனால்தான் திரைப் புகழை மட்டுமே வைத்து ஒருவரைப் பேசுபொருளாக்குவது அபத்தம். அதை வைத்தே மற்ற அரசியல் விவகாரங்களை மடைமாற்றுவது தவிர்க்கப்பட வேண்டியது. எங்கள் கட்சித் தலைவரின் இந்தக் கருத்தை விஜய் ரசிகர்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அதில் நியாயமும் உண்மையும் இருக்கின்றன!’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-thol-thirumavalavan-talks-about-actors-politics

இனறய ரசபலன 28.6.23 | Horoscope | Today RasiPalan | பதனகழம | June 28 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/28062023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 26 ஜூன், 2023

இநதக கரணததலதன தமழ சனம இயககநரகள எனன நடகக கபபட மடடஙகறஙக" - மநதர

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த இவர் நடிகர் அருண் விஜய் நடித்த  'பிரியம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து விஜய்யுடன் 'லவ் டுடே' அஜித்துடன் 'ரெட்டை ஜடை வயசு' பிரபுவுடன் 'தேடினேன் வந்தது' என வரிசையாக இவருக்குப் படங்கள் கமிட் ஆகின. அதன் பிறகு இவரை கவர்ச்சி நடிகையாகவே பார்க்கத் தொடங்கியது கோடம்பாக்கம். ஆனாலும் முன்னணி ஹீரோக்கள் சிலரே இவரைத் தங்களது படங்களுக்கு சிபாரிசு செய்ய ஆசைப்பட்டதாகக்கூட அப்போது செய்திகள் வெளியாகின.

ஆனால் என்ன நடந்ததோ, சுமார் 15 படங்களே நடித்திருந்த நிலையில், தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.தெலுங்குத் திரையுலத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாகச் சொல்லப்பட்டது.இந்நிலையில் விளம்பரப் படத்தின் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

எப்படி இருக்கீங்க?

மந்த்ரா

''ரொம்பவே நல்லா இருக்கேன். அன்பான கணவர், அறிவான ஒரு மகள். இவங்களுடன் வாழ்க்கை எப்பவும் போல ஹேப்பியா போயிட்டிருக்கு.  தெலுங்குல 'மா' சேனல்ல சீரியல் ஒண்ணு பண்ணிட்டிருக்கேன். அந்த சீரியலுக்கு அங்க நல்ல வரவேற்பு. அங்க சில படங்களும் பண்ணிட்டிருக்கேன். ஃபேமிலி, ஆக்டிங் ரெண்டும் எப்படியோ சமமா பேலன்ஸ் பண்ணி போயிட்டிருக்கு''

தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வந்தீங்க. அந்த நாள் ஞாபகங்கள் நினைவுல இருக்கா?

மந்த்ரா

''ஓ. நல்லா இருக்கே. ஒண்ணு ரெண்டு ஸ்வீட் மெமரீஸ் என்னைக்கும் மறக்க முடியாது. விஜய் சார் நடிச்ச 'லவ் டுடே' படத்துல வாய்ப்பு வந்தது. நடிச்சேன். விஜய் சார் ஃப்ரண்டு கேரக்டர். படம் முடிஞ்சு ப்ரிவியூ பார்க்க ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் போயிருந்தோம். நானும் என் அப்பாவுடன் போயிருந்தேன். படம் முடிஞ்சு அப்பாவுடன் காரில் வீட்டுக்குப் போயிட்டிருக்கிறப்ப என்னால அழுகையைக் கட்டுப்படுத்த முடியலை. நான் அழறதைப் பார்த்த அப்பா, 'க்ளைமேக்ஸ் பார்த்து அழறயா'னு கேட்டார்.'போங்கபா, ஹீரோயினாகணும்னு ஆசைப்பட்டேன். இனி இந்த மாதிரி ஃப்ரண்ட் கேரக்டர்தான் அமையும் போல'னு சொல்லி அழுதேன்.ஆனா அடுத்த சில நாள் எதிர்பாரத ஒரு செகண்ட்ல டைரக்டர் கே. பாலச்சந்தர் சார் ஆபீஸ்ல இருந்து ஃபோன். போனா, 'அந்தக் கேரக்டரை நல்லாப் பண்ணியிருந்த. அதான் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லலாம்னு கூப்பிட்டேன்'னு சொன்னார். அந்த செகண்ட் எனக்கு ஆஸ்கர் விருது வாங்கின மாதிரி ஒரு சந்தோஷம்''

அக்கா, அண்ணி.. இப்படி நிறைய கேரக்டர்கள் இருக்கே. தமிழில் யாரும் நடிக்க கூப்பிடலையா?

மந்த்ரா

''நான் கூட நினைச்சுப் பார்த்திருக்கேன். ஏன் நம்மைக் கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு. எவ்ளோ தூரத்துல இருந்தாலும் ஷூட்டிங்னு வந்துட்டா நான் பக்காவா தயாராகிடுவேன். நான் நடிச்ச படங்களின் இயக்குநர்கள்கிட்டயே நீங்க இதுபத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். என்னைக் கூப்பிடாததற்கு ஒரு முக்கியக் காரணமா எனக்குத் தோணுவது, நான் சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இல்லாததுதான்னு நினைக்கிறேன். அதென்னவோ அந்தப்பக்கம் என்னால நேரம் ஒதுக்க முடியலை. சில ஃப்ரண்ட்ஸ் கூட, 'ரீல்ஸ்'லாம் ஏன் போட மாட்டேங்குறன்னு கேக்கறாங்க. இந்தப் பிரச்னையைச் சரி செய்ய முடியுதான்னு பார்க்கலாம். அதேநேரம் தமிழ் சினிமாவுல எந்த கேரக்டர் வந்தாலும் இப்பவும் நடிக்க ரொம்பவே ஆர்வமாகவே இருக்கேன்''.

பொண்ணு என்ன பண்றாங்க?

மந்த்ரா

மகள் பேரு ரிதிமா.  இன்னும் ஸ்கூல் படிப்பு முடிக்கலை. ஆனா இப்பவே எனக்கும் சேர்த்து எல்லா ஏரியாவுலயும் ஆக்டிவா இருக்காங்க. தனக்குன்னு தனியா யூ டியூப் சேனல் வச்சிருக்கா. ஆக்டிங்கிற்குத் தேவையான அத்தனை விஷயங்கள்லயும் அவளுக்கு ஆர்வம் அதிகம். ரெண்டு மூணு வருஷம் போனா அவளே ஹீரோயினா வந்தாலும் வந்துடுவான்னு நினைக்கிறேன்'' 



source https://cinema.vikatan.com/kollywood/actress-manthra-shares-about-her-career-and-personal-life