Ad

செவ்வாய், 31 மே, 2022

``தமிழ்நாட்டை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில், தி.மு.க மாவட்ட செயற்குழுக் கூட்டம், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரசாரம் செய்தது குறித்து கேட்கிறீர்கள். சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக உடன்படிக்கை ஏற்பட்ட பின், அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

ஆனால், குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி, மக்களிடம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 6 முதல் 7 நாள்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைகூறும் இயக்கங்கள், தாங்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் விநியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை எல்லாம் மறந்து, மறைத்து பேசி வருகின்றனர். பொய் பிரசாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/senthil-balaji-talks-about-coal-stock-in-tamilnadu

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஓய்வுபெற்ற 25,000 அரசு ஊழியர்கள் - அதிகரித்த காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றனர். கடந்த 2020-ல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓய்வுபெறுபவர்களின் வயது உயர்த்தப்பட்டதால் புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தடைபட்டது. அரசின் இந்த முடிவு அப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

தமிழக அரசு

அப்படி வயது நீட்டிப்பால் 2020-ல் ஓய்வுபெற வேண்டியவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அவர்களுக்கு 60 வயதாகிவிட்டதால் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் என 25,000 பேர் நேற்று ஒரே நாளில் ஓய்வுபெற்றார்கள்.

ஏற்கனவே தமிழக அரசு அலுவலகங்களில் 1,50,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 25,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்கள்

கடந்த ஆட்சியில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க நிதி இல்லாததால்தான் வயது நீட்டிப்பு அளித்து எடப்பாடி பழனிசாமி தப்பித்துக் கொண்டார் என்றும் அரசு ஊழியர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்



source https://www.vikatan.com/news/tamilnadu/25000-government-employees-retirement-in-one-day

``அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நாங்கள் நல்லது செய்கிறோம்" - முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக மே 30-ம் தேதி மதியம் திருச்சி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வின் மூத்த முன்னோடியும், கழக வெளியீட்டுச் செயலாளருமான திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், அங்கு நடைபெற்று வரும் நீர் ஆதாரப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர், விமான நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தூர்வாரும் பணிகளை பார்வையிடும் முதல்வர்

அப்போது அவர் பேசுகையில், ``சட்டமன்றத் தேர்லுக்கு முன்பு இதே திருச்சியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 7 உறுதிமொழிகளை அறிவித்தேன். அதில் ``மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!” என்ற வாக்குறுதி எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான் 2 நாள்களாக டெல்டா பகுதியில் ஒரு மின்னல் வேக சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது. அதேபோல, இந்தாண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்ட வரலாறு இதுவரையில் கிடையாது. அந்த வரலாற்றுச் சாதனை இந்தாண்டு நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய நிதிநிலையைப் பற்றி உங்களுக்கே தெரியும். ஆனாலும், உழவர் பெருமக்களுக்கான உதவிகளைச் செய்வதில் என்றைக்கும் தி.மு.க., அரசு பின் வாங்கியது கிடையாது” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு, அரசினுடைய முக்கியமான விஷயங்கள் வெளியாவதற்கு முன்பே அண்ணாமலைக்கு எப்படி தகவல் போகிறது என பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ``நானும் ஒரு ஆள் இருக்கிறேன் என்று மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க., அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கலவரம், சாதி, மத சண்டைகள், துப்பாக்கிச் சூடுகள், கூட்டு வன்முறைகள் போன்ற எந்த சம்பவமும் நடக்காத ஒரு ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்ற காரணத்தினால் தான், பல்வேறு முதலீடுகள் தேடி வரக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு இது ஒரு சாட்சி” என்றவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம்” என சுருக்கமான பதிலோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-mk-stalin-press-meet-in-trichy-regarding-agriculture-and-annamalai

`இவ்வளவு சம்பளமா?' - உலகின் அதிக சம்பளம் பெறும் சிஇஓ-க்கள் யார் யார் தெரியுமா?

உலகின் அதிக சம்பளம் பெறும் சிஇஓ-க்கள் பட்டியலை Fortune வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெக், பயோடெக் நிறுவனங்களின் சிஇஓ-க்கள்தான் அதிகம். அவர்கள் யார் யாரெனப் பார்ப்போம்.

டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். 2021 ஆண்டில் மட்டும் ஸ்டாக் ஆப்ஷன் உட்பட இவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் 23.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.1.82 இலட்சம் கோடி.

ஆப்பிளின் சிஇஓ டிம் குக் அடுத்த இடத்தில் இருக்கிறார். 770.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இவருக்கு வழங்கப்பட்ட ஊதியம். இந்திய மதிப்பில் ரூ.6000 கோடி.

டெக் நிறுவனமான NVIDIA-வின் இணை இயக்குநர் மற்றும் தலைமை அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) 2021-ல் 561 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் புதிய பொழுதுபோக்குத் தளமாக உருவாகி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings) 453.5 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.

Regeneron Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ Leonard Schleifer 452.9 மில்லியன் டாலர் ஊதியமாக பெற்றிருக்கிறார். இந்த நிறுவனம் கோவிட்க்கு எதிரான எதிர்ப்புத்திறன் மிக்க மருந்துகளை உற்பத்தி செய்தது.

மென்பொருள் தயாரிக்கும் Salesforce நிறுவனத்தின் தலைவர் Marc Benioff, 2021-ம் ஆண்டில் 439.4 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.

7வது இடத்தில் இந்தியரான சத்ய நாதெல்லா இடம்பெற்றிருக்கிறார். மைக்ரோசாப்ஃட்டின் தலைமை பொறுப்பு வகிக்கும் இவருக்கு ஊதியமாக அளிக்கப்பட்டது 309.4 மில்லியன் அமெரிக்க டாலர்.

வீடியோ கேம் தயாரிப்பு நிறுவமான Activision Blizzard-ன் தலைவர் Robert A.Kotick 2021-ல் 296.7 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியமாக பெற்றிருக்கிறார்.

மென்பொருள் உட்கட்டுமான பொருள்கள் தயாரிக்கும் Broadcom நிறுவனத்தின் தலைவர் Hock E. Tan இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற ஊதியம் 288 மில்லியன் டாலர்.

மென்பொருள் தயரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் Oracle நிறுவனத்தின் சிஇஓ Safra A.Catz பத்தாவது இடத்தில் இருக்கிறார். 2021-ல் 239.5 மில்லியன் டாலர் ஊதியமாகப் பெற்றுள்ளார்.



source https://www.vikatan.com/ampstories/news/international/top-10-most-highly-compensated-ceos-fortune-list

Singer KK: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகர் கே.கே-வின் டாப் 15 பாடல்கள்! | #RIPKK | Visual Story

பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த KK-வுக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். KK என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்தின் வயது 53.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் இதோ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' பாடல் இன்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பு. இந்தப் பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

யுவன் - கே.கே - நா.முத்துக்குமார் காம்போவின் ஆகச்சிறந்த பாடல். ஸ்மார்ட்போன் இல்லாத காலத்தில், 'மன்மதன்' படத்தின் இந்த 'காதல் வளர்தேன்' பாடல்தான் பலரின் காலர் டியூனே! லவ் பெயிலியர் என்றால் இந்தப் பாடல்தான் ரிப்பீட்டு!

தாய் - மகன் உறவின் பாசப் பிணைப்பையும் பெருமைகளையும் சொல்லும் 'நீயே நீயே' பாடல் இடம்பெற்ற படம் 'எம்.குமரன் - சன் ஆஃப் மகாலட்சுமி'. வாலியின் வரிகளில் கே.கே.வின் குரலில் இன்றுமே பலமுறை கேட்கத்தூண்டும் வசீகரமான பாடல்.

நாயகனின் குற்றவுணர்வை கே.கே தன் குரலால் வெளிக்கொண்டு வந்திருப்பார். யுவன் - நா.மு - கே.கே. காம்போவின் மற்றொரு ஹிட்டான இந்த 'வார்த்தை ஒண்ணு...' பாடல் இடம்பெற்ற படம் 'தாமிரபரணி'!

ஹாரிஸ் ஜெயராஜின் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று 'காதலிக்கும் ஆசையில்லை'. கே.கே-வுடன் இணைந்து சின்மயி, டிம்மி, மஹதி ஆகியோர் பாடியிருப்பார்கள். பக்கா ரிங்டோன் மெட்டீரியல் இந்த 'செல்லமே' பாடல்!

'கில்லி' படத்தின் 'அப்படிப்போடு' பாடலை தமிழகமே கொண்டாடியது. வித்யாசாகரின் துள்ளல் இசை, விஜய், த்ரிஷா நடனம் தாண்டி, கே.கே, அனுராதா ஸ்ரீராமின் மேஜிக்கும் இதன் வெற்றிக்குக் காரணம்.

'7G ரெயின்போ காலனி' படத்தில் 'நினைத்து நினைத்து' பாடலின் இரண்டு வெர்ஷன்கள் இருந்தாலும், கே.கே-வின் வெர்ஷனில் கூடுதலாக சோகம் இழையோடும். அவரின் குரல் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு வலு சேர்த்திருக்கும்.

'காக்க காக்க' படத்தின் 'உயிரின் உயிரே' பாடலின் தொடக்கத்தில் ஹாரிஸின் இசை நம் உடம்பில் அதிர்வுகளை உண்டாக்கினால், பின்னர் வரும் கே.கே.வின் குரல் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கும்.

மென்சோகமும் மெலடியும் தாண்டி குத்துப்பாடல்களும் கே.கே.வின் ஸ்பெஷல்தான். அதற்கான சான்று, 'சாமி' படத்தின் இந்த ரகளையான டான்ஸ் பாடல் 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு...'

'Feel My Love' - 'குட்டி' படத்தில் தனுஷ், ஸ்ரேயாவின் பின்னால் காதலைச் சொல்லிக்கொண்டே ஓட, ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் தங்களை கே.கே-வாக பாவித்து, தங்களின் காதலை நினைத்து இந்தப் பாடலைக் கேட்டனர்/பாடினர்.

'கண்ட நாள் முதல்' படத்தின் 'பனித்துளி' பாடலுக்கு மானசீகமாக ஹார்ட்டின் விடாதவர்களே இருக்கமுடியாது. யுவன் இசையில், கே.கே-வுடன் இணைந்து ஸ்ரேயா கோஷலும், தன்வி ஷாவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

'மெலடி கிங்' வித்யாசாகரின் ஹிட் லிஸ்ட்டில் மறக்காமல் இடம்பிடிக்கும் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது' பாடல், 'உயிரோடு உயிராக' படத்தில் இடம்பெற்றிருக்கும். கே.கே-வுடன் ஸ்ரீனிவாஸ், ஹரிணி இணைந்து பாடியிருப்பார்கள்.

வித்யாசாகர் இசையில் 'ஆதி' படத்தில் சுஜாதா மோகனுடன் இணைந்து கே.கே பாடிய தத்துவப் பாடல் 'லேலக்கு லேலக்கு லேலா'. இப்போது கேட்டாலும் தோல்விகளைக் கடந்து செல்லும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

'தாஸ்' படம் யுவனின் ஆல்பமாக பெரும் ஹிட்டடித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் கே.கே மற்றும் சாதனா சர்கம் பாடிய 'சக்கப்போடு போட்டாலே...'.

ஆல்பமாக பெரும் ஹிட்டடித்த '12B' படத்தில் ஹாரிஸ் இசையில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது' பாடலையும், 'லவ் பண்ணு' ('ஒரு புன்னகைப் பூவே') பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.



source https://cinema.vikatan.com/ampstories/music/top-15-tamil-songs-of-90s-kids-favourite-singer-kk

Singer KK: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகர் கே.கே-வின் டாப் 15 பாடல்கள்! | #RIPKK | Visual Story

பிரபல பாடகர் KK மாரடைப்பால் காலமானார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த KK-வுக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். KK என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்தின் வயது 53.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள் இதோ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' பாடல் இன்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பு. இந்தப் பாடலை கே.கே, ஃபெபி மணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

யுவன் - கே.கே - நா.முத்துக்குமார் காம்போவின் ஆகச்சிறந்த பாடல். ஸ்மார்ட்போன் இல்லாத காலத்தில், 'மன்மதன்' படத்தின் இந்த 'காதல் வளர்தேன்' பாடல்தான் பலரின் காலர் டியூனே! லவ் பெயிலியர் என்றால் இந்தப் பாடல்தான் ரிப்பீட்டு!

தாய் - மகன் உறவின் பாசப் பிணைப்பையும் பெருமைகளையும் சொல்லும் 'நீயே நீயே' பாடல் இடம்பெற்ற படம் 'எம்.குமரன் - சன் ஆஃப் மகாலட்சுமி'. வாலியின் வரிகளில் கே.கே.வின் குரலில் இன்றுமே பலமுறை கேட்கத்தூண்டும் வசீகரமான பாடல்.

நாயகனின் குற்றவுணர்வை கே.கே தன் குரலால் வெளிக்கொண்டு வந்திருப்பார். யுவன் - நா.மு - கே.கே. காம்போவின் மற்றொரு ஹிட்டான இந்த 'வார்த்தை ஒண்ணு...' பாடல் இடம்பெற்ற படம் 'தாமிரபரணி'!

ஹாரிஸ் ஜெயராஜின் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று 'காதலிக்கும் ஆசையில்லை'. கே.கே-வுடன் இணைந்து சின்மயி, டிம்மி, மஹதி ஆகியோர் பாடியிருப்பார்கள். பக்கா ரிங்டோன் மெட்டீரியல் இந்த 'செல்லமே' பாடல்!

'கில்லி' படத்தின் 'அப்படிப்போடு' பாடலை தமிழகமே கொண்டாடியது. வித்யாசாகரின் துள்ளல் இசை, விஜய், த்ரிஷா நடனம் தாண்டி, கே.கே, அனுராதா ஸ்ரீராமின் மேஜிக்கும் இதன் வெற்றிக்குக் காரணம்.

'7G ரெயின்போ காலனி' படத்தில் 'நினைத்து நினைத்து' பாடலின் இரண்டு வெர்ஷன்கள் இருந்தாலும், கே.கே-வின் வெர்ஷனில் கூடுதலாக சோகம் இழையோடும். அவரின் குரல் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு வலு சேர்த்திருக்கும்.

'காக்க காக்க' படத்தின் 'உயிரின் உயிரே' பாடலின் தொடக்கத்தில் ஹாரிஸின் இசை நம் உடம்பில் அதிர்வுகளை உண்டாக்கினால், பின்னர் வரும் கே.கே.வின் குரல் உள்ளத்தில் அதிர்வுகளை உண்டாக்கும்.

மென்சோகமும் மெலடியும் தாண்டி குத்துப்பாடல்களும் கே.கே.வின் ஸ்பெஷல்தான். அதற்கான சான்று, 'சாமி' படத்தின் இந்த ரகளையான டான்ஸ் பாடல் 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு...'

'Feel My Love' - 'குட்டி' படத்தில் தனுஷ், ஸ்ரேயாவின் பின்னால் காதலைச் சொல்லிக்கொண்டே ஓட, ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் தங்களை கே.கே-வாக பாவித்து, தங்களின் காதலை நினைத்து இந்தப் பாடலைக் கேட்டனர்/பாடினர்.

'கண்ட நாள் முதல்' படத்தின் 'பனித்துளி' பாடலுக்கு மானசீகமாக ஹார்ட்டின் விடாதவர்களே இருக்கமுடியாது. யுவன் இசையில், கே.கே-வுடன் இணைந்து ஸ்ரேயா கோஷலும், தன்வி ஷாவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

'மெலடி கிங்' வித்யாசாகரின் ஹிட் லிஸ்ட்டில் மறக்காமல் இடம்பிடிக்கும் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது' பாடல், 'உயிரோடு உயிராக' படத்தில் இடம்பெற்றிருக்கும். கே.கே-வுடன் ஸ்ரீனிவாஸ், ஹரிணி இணைந்து பாடியிருப்பார்கள்.

வித்யாசாகர் இசையில் 'ஆதி' படத்தில் சுஜாதா மோகனுடன் இணைந்து கே.கே பாடிய தத்துவப் பாடல் 'லேலக்கு லேலக்கு லேலா'. இப்போது கேட்டாலும் தோல்விகளைக் கடந்து செல்லும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

'தாஸ்' படம் யுவனின் ஆல்பமாக பெரும் ஹிட்டடித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த பாடல் கே.கே மற்றும் சாதனா சர்கம் பாடிய 'சக்கப்போடு போட்டாலே...'.

ஆல்பமாக பெரும் ஹிட்டடித்த '12B' படத்தில் ஹாரிஸ் இசையில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிக்குது' பாடலையும், 'லவ் பண்ணு' ('ஒரு புன்னகைப் பூவே') பாடலையும் கே.கே-வே பாடியிருப்பார்.



source https://cinema.vikatan.com/ampstories/music/top-15-tamil-songs-of-90s-kids-favourite-singer-kk