Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

"பை... பை... மஹா!" - `நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலிருந்து விலகுகிறாரா ரச்சிதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'நாம் இருவர் நமக்கு இருவர்'. இந்தத் தொடரில் நாயகியாக நடிப்பவர், ரச்சிதா. தற்போது அவர் அந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ரச்சிதா, அந்தத் தொடர் யூனிட்டில் சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாயின.

ரச்சிதா

ஆனால், ரச்சிதாவும், சேனல் தரப்பும் அதுகுறித்த எந்த விளக்கத்தையும் கூறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சில வதந்திகளுக்காக நான் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இருந்து விலகியதாக சொல்ல முடியாது. போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதுனால எந்த பயனும் இல்ல. 'நாம் இருவர் நமக்கு இருவர்' விட்டு போறேன்... போறேன்னு சொல்லி சொல்லி என்னை நீங்களே போக வைச்சிடுவீங்க போலயே!

Also Read: ''நல்லவளை கெட்டவளா மாத்துறாங்க?'' - 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து வெளியேறிய ரச்சிதா?

நமக்கு அடி ஒண்ணும் புதுசில்லையே... பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு! சப்போர்ட் பண்ண நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடந்தாலும் பார்த்துக்கலாம்!" எனப் பதிவிட்டிருந்தார்.

ரச்சிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்தச் சூழலில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா. 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மஹா. அந்தப் பெயரைக் குறிப்பிட்டு "பை மஹா" என அதிகாரபூர்வமாக தொடரில் இருந்து விலகுவது குறித்து பதிவு செய்திருக்கிறார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அம்மன்' தொடரில் அம்மனாக ரச்சிதா நடித்துவருகிறார்.


source https://cinema.vikatan.com/television/actress-rachitha-quits-from-naam-iruvar-namakku-iruvar-serial

தமிழ்நாடு நாள்: `நவம்பர் 1-ம் தேதியா.. ஜூலை 18-ம் தேதியா?!' - விகடன் #உங்கள்கருத்து முடிவுகள் என்ன?

'தமிழ்நாடு நாள்' இனி ஜூலை 18-ம் தேதி தான் கொண்டாடப்படும். அதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக 2019 முதல் மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அப்போதைய திமுக அரசு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியை இனி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப் போவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஸ்டாலின்

இது தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``2019-ம் ஆண்டு முதல் முந்தைய அதிமுக அரசால் நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஜூலை 18-ம் தேதியைத் தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்தனர். அதனடிப்படையில், மாநிலத்தில் இனி ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

`தமிழ்நாடு நாள்' தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாளை தான் பிறந்த நாளாகக் கொண்டாடவேண்டுமே தவிர ஒரு கருப்பையில்‌ குழந்தை உருவாகிய நாளை குழந்தையின் பிறந்த நாளாக எடுத்துக்‌கொள்ள முடியாது என்றும், இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியிருக்கின்றனர்.

ராமதாஸ் - ஓ.பி.எஸ்

இந்த நிலையில், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், அரசியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் முரண்பட்டு நிற்கும் இந்த `தமிழ்நாடு நாள்' விவகாரம் தொடர்பாக நாம் விகடனின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் `#உங்கள் கருத்து' பகுதியில் வாசகர்களிடம், 'வலுக்கும் விவாதம்... தமிழ்நாடு நாள் என்றைக்குக் கொண்டாடப்பட வேண்டும்?' என்ற தலைப்பில் கேள்வியை முன்வைத்திருந்தோம்.

இந்த கேள்விக்கு `நவம்பர் 1-ம் தேதி’, `ஜூலை 18-ம் தேதி’, `ஜனவரி 14-ம் தேதி’, `கருத்து இல்லை’ என 4 சாய்ஸ்களையும் அளித்திருந்தோம். நேற்றைய தினம் பதிவிடப்பட்ட விகடனின் 'உங்கள் கருத்து'க்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் `தமிழ்நாடு நாள்' தொடர்பான தங்களின் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர். அதன் முடிவுகள் கீழே...

விகடன் உங்கள் கருத்து

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிடப்பட்ட கேள்வியில், ஜூலை 18-ம் தேதி அன்று தான் கொண்டாட வேண்டும் என்று 43 சதவிகிதம் வாசகர்களும், நவம்பர் 1-ம் தேதியைத் தான் கொண்டாட வேண்டும் என்று 48 சதவிகிதம் வாசகர்களும், ஜனவரி 14-ம் தேதி அன்று தான் கொண்டாட வேண்டும் என்று 3 சதவிகிதம் வாசகர்களும், கருத்து இல்லை என்று 7 சதவிகிதம் வாசகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-results-regarding-tamilnadu-day-controversy

பிக் பாஸ் - 29: துண்டு செய்தியான சின்னப்பொண்ணு எவிக்ஷன்... போட்டியாளர்கள் யார் யாருக்கு என்ன பட்டம்?

நேற்றைய எபிசோடில் புதிதாக எதுவுமே நிகழவில்லை என்பதுதான் உண்மை. ‘சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டார்’ என்பது மட்டுமே ஒரு சிறிய புதிய செய்தி. இதுவும் முன்பே கசிந்து விட்டதால் ஒரு சலனமும் ஏற்படவில்லை. இன்னமும் கேட்டால் ‘சின்னப்பொண்ணு இன்னமுமா கிளம்பவில்லை?” என்பதுதான் பலரின் மைண்ட்வாய்ஸாக இருந்தது.

பிக் பாஸ் வரலாற்றின்படி அதன் போட்டியாளர்களில் ‘அம்மா’ கேரக்டர்தான் முதலில் பலி தரப்படுவது பொதுவான வழக்கம். அம்மா என்றாலே தியாகம்தானே? அதன்படி சின்னப்பொண்ணு முதல் வாரத்திலேயே சென்றிருக்க வேண்டும். "இன்னாடா அவார்டா தர்றாங்க?” என்பது போல் நாடியா சாங்க் அமைதியான பார்வையில் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்ததால் முதலில் அனுப்பப்பட்டார். அடுத்த வாரம் அபிஷேக். இதற்கு காரணமே தேவையில்லை. அவருடைய பெயர் மட்டுமே போதும். ஆனால் அபிஷேக் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான சுவாரஸ்யம் குறைந்துவிட்டதை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பிக் பாஸ் - 29 | சின்னப்பொண்ணு எவிக்ஷன்

“நான் யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது என்று அமைதியாக இருப்பேன். அதை ‘குழப்பம்’ன்னு சொல்லிடறாங்க போல. மத்தபடி என் வேலையை கரெக்ட்டாதான் செய்வேன்” என்று முகமூடி டாஸ்க்கின் விளக்கத்தில் சொன்னார் சின்னப்பொண்ணு. மனதைப் புண்படுத்தாத ஆசாமிகளால் பிக் பாஸிற்கு என்ன லாபம்? ஆகவே சின்னப்பொண்ணு இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே அதிர்ஷ்டம்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் சின்னப்பொண்ணு அம்மா பாடல் பாடிய காட்சிகள் அனைத்தையும் ஒரு முறை ரீவைண்ட் செய்து பாருங்கள். ஆஹா... இத்தனை அருமையான குரல்வளம் கொண்ட பாடகர்கள் மிகக்குறைவு. மேல்ஸ்தாயியில் கூட மிகச் செளகரியமாக பயணம் செய்யும் அற்புதமான குரல் வளத்தைக் கொண்டிருக்கிறார் சின்னப்பொண்ணு.. இந்த வகையில் இவரை ‘பெரிய பொண்ணு’ என்று சொல்லலாம்.

பிக் பாஸ் - 29

அவர் கிளம்பும் சமயத்தில் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலை பாடியபோது மிக அற்புதமான பகுதியாக இருந்தது. குறிப்பாக ‘மாயமாய் போவாளோ’ என்கிற பகுதிக்கு அவர் தந்த வித்தியாசம் அட்டகாசம். ஒத்திகையில் ரஹ்மான் இதையெல்லாம் மேம்படுத்தி சொல்லித்தரும் காட்சி மனதில் கற்பனையாக ஓடுகிறது. இத்தனை அற்புதமான பாடகியை தமிழ் சினிமா இனிமேலாவது மேலதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேறென்ன? "கன்ஃபெஷன் ரூமில் சிலர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி சொன்னீர்கள். அது யாரென்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது ‘உங்க பிரைவஸி’" என்று சொன்ன கமல், அதே சடங்கை இன்னொரு விதமாக சபையில் செய்யச் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? பிக்பாஸ் நிகழ்ச்சியில் Privacy என்பதற்கு மதிப்பே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.
பிக் பாஸ் - 29

"கன்பெஷன் ரூமிற்கு வாங்க” என்று முதலில் அழைக்கப்பட்ட போதெல்லாம் பாய்ந்து சென்ற அக்ஷரா, இப்போதோ "சார்... என்னை கடைசில கூப்பிடுங்க. எனக்கு கேம் புரியட்டும்” என்று டபாய்த்தார். “அப்ப தாமரைய கூப்பிடலாமா?” என்று டைமிங்காக கமல் அடித்த வசனம் நன்று. இந்த டாஸ்க் முடிந்ததும் அக்ஷரா வீட்டின் மூலைக்குச் சென்று ‘மூசுமூசுவென்று நிச்சயம் அழப்போகிறார்’ என்று முன்பே நினைத்தேன். அப்படியே ஆயிற்று. நான் கூடுதலாக எதிர்பார்த்தபடி அக்ஷரா அழும் காட்சியை ‘அவார்டு படக்காட்சி’ மாதிரி சில நிமிடங்களுக்கு மெளனமாகக் காட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். இப்படி அடிக்கடி மனம் புண்படும் அக்ஷரா ‘நான்சென்ஸ்’ என்று மற்றவர்களைச் சுருக்கென்று சொல்லும் முன்பாக தானும் சற்று யோசிக்க வேண்டும்.

“ஆங்கிலத்தில் பேசாதீர்கள்" என்று அறிவுறுத்தும் பிக்பாஸ், இது போன்ற குறிப்புகளை தமிழில் எழுதி வைத்திருக்கலாம். இதற்கான அர்த்தத்தை கமல் ஏற்கெனவே சொல்லிவிட்டாலும் தாமரை, சின்னப்பொண்ணு, இமான் போன்றவர்கள் ஆங்கில வார்த்தைகள் புரியாமல் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க சங்கடமாக இருந்தது. தேர்தல் சமயங்களில் கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றவர்கள் உதவியுடன் வாக்களிப்பதைப் போன்ற நிலைமை. அழைத்துச் செல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் அவர்களின் மனதை மாற்றிவிடலாம் அல்லது ஏமாற்றிவிடலாம்.

பிக் பாஸ் - 29

ஒரு தமிழ் நிகழ்ச்சியில் தமிழிற்குத்தான் முதன்மை இடம் தர வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேசுவதற்கே ததிங்கினத்தோம் போடும் பலர் இருக்கிறார்கள். எனவே ஆங்கிலம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் எழுதி வைக்கலாம். ‘படிக்கவே தெரியாதவர்கள்’ என்றால் அது வேறு பிரச்னை. (தமிழ் வெறியனாக இதைச் சொல்லவில்லை. மொழி மீது கொண்ட பிரியத்தால் சொல்கிறேன் – கமல் குரலில் வாசித்துக் கொள்ளவும்).

ஒரு பிள்ளைப் பூச்சியை ‘டைனோசர்’ அளவிற்கு வர்ணிக்கும் கெட்ட பழக்கத்தை இமான் இன்னமும் விடவில்லை. ‘தலைக்கனம்’ என்கிற பட்டத்தை இசைக்கு அவர் தந்தது அநியாயம். ‘பாரபட்சம்’ ‘புண்படுத்துதல்’ ஆகிய இரண்டு பட்டங்களையும் பாவனிக்கு தந்து மகிழ்ந்தார் தாமரை.

கசகசவென்று நடந்த இந்தச் சடங்கில் சிலர் துணிச்சலாக இறங்கி அடித்தார்கள். பலர் வழக்கம் போல் பூசி மெழுகினார்கள். ‘கொடுக்க ஆள் இல்லை’ என்று சொல்லி இமானுக்கு ராஜூ தந்தது முறையானதல்ல. ‘Escape from Work’ என்று இமானுக்கு அவர் தந்த பட்டம் மிகப் பொருத்தமானதுதான். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் மழுப்பினார். ஏன் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவைப்பூச்சில் மறைத்துவிட முடியாது. பலர் பட்டத்தை வாங்கிக் கொண்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் மெளனமாக அமர்ந்திருக்க “இது நியாயமே இல்லை” என்று வாதாட சிலர் முன்வந்தார்கள்.

பிக் பாஸ் - 29

‘வேலை செய்வதிலிருந்து தப்பித்தல்’ பட்டத்தை இசை தனக்குத் தந்ததை அக்ஷரா ஒப்புக் கொள்ளவில்லை. “அவளுக்கு நான் நிறைய சமைச்சுக் கொடுத்திருக்கேன். நான்சென்ஸ்..." என்று பின்னர் முனகினார். ‘போலி’ என்று அக்ஷராவிற்கு நிரூப் தந்த பட்டம் சர்ச்சையானது. "இதற்காக நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்" என்று அக்ஷரா சொன்னதும் அதற்கான விளக்கத்தை சபையிலேயே அளிக்கச் சொல்லி அடம்பிடித்தார் நிரூப். ‘பிறகு சொல்கிறேன்’ என்று அக்ஷரா சொன்னாலும் அவர் ஏற்கவில்லை. பின்னர் பார்த்தால் ‘பலப்பம் திருடிட்டான்... பென்சில் எடுத்துட்டான்’ என்று எல்லாமே எல்கேஜி காரணங்களாக இருந்தன. ‘நண்பர்கள் என்பதால் மதுமிதா ஆதரவு தருகிறார்’ என்கிற வருணின் குற்றச்சாட்டில் ஒரளவிற்கு உண்மை இருந்தது.

பிக் பாஸ் - 29

இந்த விளக்கத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது சிபி சொன்னதுதான். தனது நெருங்கிய நண்பராக இருந்தாலும் வருணின் மீது விமர்சனம் வைக்க அவர் தவறவில்லை. “'என்னப்பா... சத்தமே காணோம்?' என்று வருணிடம் யாராவது விசாரித்துவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் எதற்காவது உரத்த குரலில் பேசி ‘நானும் இருக்கிறேன்’ என்று நிரூபிக்க முயல்வார்” என்று சிபி சொன்ன விளக்கத்தை நேற்றைய கட்டுரையில்தான் நானும் எழுதியிருந்தேன். சிபியும் அதை வழிமொழிந்தது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

"இந்த வீட்டில் எல்லோரும் எனக்கு க்ளோஸ்" என்றார் பாவனி. (ஆஹான்!). இது நமக்கே புதிய செய்திதான். தாமரைக்கும் இவருக்கும் நிகழ்ந்த ஒரு சிறிய புரிதலின்மை சம்பவத்தை இருவரும் பரஸ்பரம் விளக்கிக் கொண்டார்கள். “இது உங்களையே உங்களுக்குப் புரிய வைக்கும் முயற்சிதான். வெளில இருக்கறவங்களுக்காக இல்ல” என்று ஹின்ட் கொடுத்தார் கமல்.
பிக் பாஸ் - 29

இது போன்ற டாஸ்க்கை நம் வீடுகளில் கூட முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது. சிலர் அற்பமான காரணங்களை முன்னிட்டு வாரக்கணக்கில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். பிறகு விசாரித்துப் பார்த்தால் அது தவறான புரிதலால் என்பதாக இருக்கும். அதை உடனே தெளிவுப்படுத்திக் கொள்ள ஈகோ இடம் தராமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பார்கள். பரஸ்பரம் விளக்கப்பட்டவுடன் ‘ச்சே.. இதுக்குப் போயா அப்படிக் கோபப்பட்டோம்” என்று தோன்றிவிடும். எனில் அத்தனை நாள்களும் கோபமாக இருந்தது வீண்தானே?!

‘குழப்பமான மனநிலையில் இருக்கிறார்’ என்று சுருதிக்கு வருண் பட்டம் அளித்தார். விசாரணை இடைவேளையில் வருணை அழைத்த சுருதி, தனக்கு ஏன் அந்தப் பட்டம் பொருத்தமில்லை என்பதைக் கூறி விளக்கம் சொன்னவுடன் இருவரும் ஒருமாதிரியாக சமாதானம் அடைந்து சென்றனர். அவ்வளவுதான் மேட்டர். தாமரையும் இதைக் கடைப்பிடித்தால் பிரச்னை முடிந்து விடும். ராஜூ தனக்கு ‘Fake’ என்று பட்டம் தந்ததற்கு “அந்த காயின் மேட்டர்ல என்ன ஆச்சுன்னா...“ என்று மறுபடியும் விளக்கம் தர ஆரம்பித்தார் பாவனி. "அடிப்பாவி... மத்தவங்களே மறந்து போனா கூட இவ விடமாட்டா போலிருக்கே?!” என்று சுருதியின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும். “இந்த வாரத்தோட இதை மறந்துடுவேன்” என்று ராஜூ சொன்னது நன்று.

பிக் பாஸ் - 29
புழுக்கமான அறைக்குள் மெல்லிய காற்று நுழைந்து ஆசுவாசத்தை ஏற்படுத்துவதைப் போல், இமான், ராஜூ, இசை, பிரியங்கா ஆகியோர் திரைப்படப்பாடலின் மெட்டில் கிண்டலான வரிகளை இட்டுக்கட்டி பாடும் பகுதிகள் பார்ப்பதற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றன.

ஓர் இடைவேளைக்குப் பின்னர் திரும்பி வந்த கமல் 'ஆடை சுதந்திரம்' என்கிற தலைப்பில் வகுப்பெடுக்க ஆரம்பித்தார். அது தாமரையின் புரிதலின்மையால் வந்த சர்ச்சை. மேலும் கிராமத்து மக்கள், நவநாகரிக ஆடைகளை பிரமிப்புடனும் முகச்சுளிப்புடனும் பார்ப்பது இயல்பானது. ‘நான் சினிமாலதான் இப்படி துணி போட்டு பார்த்திருக்கேன்’ என்று தாமரை சொன்னது ஒரு கிராமத்துப் பெண்மணியின் பிரதிநிதித்துவ குரல். என்றாலும் ‘பெண் சுதந்திரம்’ பற்றி நிகழ்ச்சியில் பதிவு செய்ய வேண்டும் அல்லவா? எனவே இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் கமல். “ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அடக்கம்தான். அது கதை முடிந்த பிறகு செய்யப்படும் ‘அடக்கம்’" என்று கமல் சொன்னது சிறப்பு.

மணிரத்னம் படங்களில் வரும் சைடு கேரக்டர் மாதிரியே உலவிக் கொண்டிருக்கும் அபின்ய்யை அழைத்த கமல், "உங்ககிட்ட இருந்து இன்னமும் நெறய எதிர்பார்க்கறேன்” என்றதும் 'கண்டிப்பா சார். நான் காண்பிச்சது வெறும் டிரைய்லர்தான். இனிதான் மெயின் பிக்சர் ஆரம்பம்’ என்பது போன்ற முகபாவத்தைக் காட்டினார் அபினய். எனில் அவர் பாவனியுடன் இனி ஓவர் டைமில் ரகசியம் பேசப் போகிறார் என்று பொருள்.

பிக் பாஸ் - 29

எவிக்ஷன் பட்டியலில் இருந்த ஏழு நபர்களையும் தனியறைக்கு அழைத்தார் கமல். முடிவுகள் அங்கு அறிவிக்கப்படுமாம். இதுவும் ‘பருத்தி மூட்டை குடோன்’ சமாச்சாரம்தான். சபையிலேயே சொல்லியிருக்கலாம். என்றாலும் நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம் வேண்டாமா? பிறகு ஒவ்வொருவரைப் பற்றியும் மறைமுகமான வரிகளால் வர்ணணை செய்ய அவர்களாகப் புரிந்து கொண்டு ‘நன்றி சார்’ என்று சொல்லி வெளியேறினார்கள். ஒவ்வொருவராக வெளியே வந்ததும் ஏதோ உலக சாதனை புரிந்துவிட்ட வரவேற்பு இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பிக் பாஸ் - 29

கடைசியில் வெளியே வந்த அபினய்யும் வருணும் ‘இந்தியா ஒன்டே மேட்ச்சில்’ தோற்றுவிட்ட சோகத்துடன் வெளியே வர, பாவம். இந்த வரவேற்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சின்னப்பொண்ணு எலிமினேஷன் என்கிற விஷயத்தை அப்போதுதான் வீடு புரிந்து கொண்டது. 'என்ன இப்ப? எப்பவோ நடக்க வேண்டிய விஷயம் இது’ என்பதுபோல் மெளனத்துடன் இருந்த அவர்கள், சின்னப்பொண்ணுவும் வெளியே வந்தவுடன், “ஆத்தா... போறியே ஆத்தா…” என்று ஆளாளுக்கு திடீரென்று கண்கலங்கத் துவங்கினார்கள். தனது வெளியேற்றத்தை மிக இயல்பாக ஏற்றுக் கொண்டார் சின்னப்பொண்ணு. மனதளவில் அவர் எப்போதோ தயாராகிவிட்டார் போலிருக்கிறது. என்றாலும் மற்றவர்கள் கட்டிப்பிடித்து அழும்போது ஏதாவது ரியாக்ஷன் தந்தாகணுமே? எனவே அவரும் கலங்கி இந்தச் சடங்கை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

தென்றல் வெண்பா ஆயிரம்

புத்தகப் பரிந்துரை பகுதியில் இந்த வாரம் கமல் பரிந்துரை செய்த நூல் ‘தென்றல் வெண்பா ஆயிரம்’. கவியரசு கண்ணதாசன் ‘தென்றல்’ என்கிற இதழிற்கு ஆசிரியராக இருந்த சமயத்தில் வெண்பா போட்டி ஒன்றை அறிவித்தார். கண்ணதாசன் ஈற்றடியை எடுத்துக் கொடுக்க பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்கள் இதில் ஆர்வமாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களில் இருந்து கூட பலர் ஆர்வமாக வெண்பாக்களை அனுப்பிக் குவித்தார்கள். அத்தனை தமிழ் ஆர்வமும் உணர்வும் இருந்த சமயம் இது. அந்த வெண்பாக்களில் இருந்து ஆயிரம் செய்யுள்களைத் தேர்வு செய்த தொகுப்புதான் இந்த நூல். (இப்போது இந்தப் போட்டியை அறிவித்தால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரும் வெண்பா கேரக்டரைப் பற்றித்தான் ஏராளமான கமெண்ட்டுகள் வரும் என்று தோன்றுகிறது).

Also Read: பிக் பாஸ் - 28 | தாமரை - சுருதி விவகாரத்தை கமல் அணுகிய விதம் சரியா? ராஜூ இப்படிப் பண்ணலாமா?

சின்னப்பொண்ணு அம்மா வெளியில் சென்ற அடுத்த நிமிடமே, அடுத்த வாரம் யாரைப் பலி கொடுக்கலாம் என்கிற உக்கிரமான உரையாடல் ஆங்காங்கே நடைபெற்றது. “சும்மா இருந்து காலத்தை இப்படியே ஓட்டிடலாம். நாமினேஷன்ல இருந்து தப்பிச்சுடலாம். அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கு. ஆனா வெளில இருக்கறவன் துப்பறானான்னு தெரியாது” என்று வருணிடம் அக்ஷரா சொல்லிக் கொண்டிருக்க “என்னடா... அண்ணனை பார்த்து அப்படி பொசுக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்ட?!” என்கிற வடிவேலு மாதிரி நொந்து போனார் வருண். “தாமரையை நாங்க இதுவரை நாமினேட் பண்ணதேயில்ல. அவங்களை பிடிக்கும். ஆனா…” என்று சுருதியும் பாவனியும் மதுமிதாவிடம் வாக்குமூலம் தந்து கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் - 29

“நீ நாமினேட் பண்ணா பண்ணிக்க... மக்கள் என்னைக் காப்பாத்துவாங்க” என்று இசையிடம் ‘பாட்சா’ ரேஞ்சிற்கு கெத்தாக சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. (நான் தனியாள் இல்லைடா. என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. இது அன்பால சேர்ந்த கூட்டம்!). பூனை தன் குட்டியை கவ்விச் செல்வது போல ‘நாணயத்தை’ எங்கே ஒளித்து வைக்கலாம் என்று பாவனியும் சுருதியும் குசுகுசுவென்று விடியும்வரை ரகசியம் பேசிக் கொண்டிருந்ததோடு எபிசோடு நிறைந்தது. இசையும் இனி தன் நாணயத்தைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆக... நாமினேஷன் சடங்கு, நாணயம் திருடும் திருவிழா என்று இரண்டு முக்கியமான விஷயங்கள் அடுத்த வாரத்தில் இருக்கும். என்னவென்று பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-29-chinna-ponnu-gets-evicted-and-the-contestants-gave-nicknames-to-each-other

சசிந்திரன்: ``ஆச்சர்யங்களின் பூமியில் ஓர் அதிசயத் தமிழன்” | இவர்கள் | பகுதி - 7

``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' போன்ற தமிழிலக்கிய முதுமொழிகள் மூலமாக தமிழர்கள் காலங்காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு கடல் வழியாகவும், தரைவழியாகவும் பயணித்துச் சென்று அப்பகுதி மக்களுடன் இயைந்து ஒப்புரவுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பயணங்களும், புலம்பெயர்தலும் தமிழர் வாழ்வின் முக்கிய அம்சங்கள். ஆமைகளின் வழித்தடங்களைப் பின்பற்றி கடல் பயணங்களை தமிழர்கள் மேற்கொண்டனர் என்று தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. பர்மாவின் கடற்பகுதிகளில் மூழ்கிய தேக்குமரங்கள் தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துவிடுமாம். சிங்களம், கடாரம், சாவகம், என்று அழைக்கப்படும் தற்கால கிழக்காசியத் தீவுகளுக்கு சோழ பாண்டிய அரசகுல மக்கள் வணிக ரீதியாகவும், திருமண பந்தகள் மூலமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பயணித்தை நாம் வாசித்திருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவுக்கு அருகிலிருக்கும் பசிஃபிக் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான இந்நாடு, இயற்கை வளங்கள் நிரம்பியது. 800-க்கும் அதிகமான மொழிகளை பேசக்கூடிய பழங்குடி மக்கள் வாழும் இந்த தேசம் சில காலத்திற்கு முன்பு வரையிலும் வெளி உலகத்தால் அதிகம் தவறாக புரிந்ந்துகொள்ளப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து மனித இனம் மேற்கொண்ட முதல் இடம்பெயர்தலில் பாப்புவா நியு கினிக்கு மனிதர்கள் சென்றடைந்தனர். இன்றளவும் தமது பழக்க வழக்கங்களையும் இன அடையாளங்களையும் துறக்காமல் அவர்கள் வாழந்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்களுக்கும் இவர்களுக்குமான அடையாள ஒற்றுமைகள் அனேகம். டி.என்.ஏ வின் அடிப்படையில் பார்த்தோமானால் கன்னியாகுமரி மக்களின் டி.என்.ஏ வகை இந்தத் தீவு மக்களின் டி.என்.ஏ வோடு பொருந்திப் போகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் மொழியிலும் அனேகம் தமிழ் சொற்களை நாம் காணமுடிகிறது. இங்கிருக்கும் ஒரு தீவைச் சேர்ந்த மக்கள், மாலை நேரங்களில் நெற்றியில் சுண்ணாம்பால் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்கிறார்கள். வெற்றிலை பாக்கு வைத்துதான் எல்லா சுபகாரியங்களையும் பேசுகிறார்கள். ஒருவிதத்தில் சத்தியம் செய்து கொடுப்பதுபோல் இதனை மதிக்கிறார்கள். தமிழர்களிடமிருக்கும் கூத்துக் கலையைப் போல் இவர்களிடமும் வேறொரு வடிவத்தில் இருக்கிறது. இப்படி தமிழ் மக்களின் வாழ்வோடு ஏராளமான ஒற்றுமைகள் இந்தத் தீவு மக்களுக்கு இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன்புவரை இங்கு தமிழர்கள் யாரும் வாழ்ந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம்.

இவர்கள் - சசிந்திரன்

சிவகாசியில் எளிய குடும்பத்தில் ஒரு தம்பி தங்கையோடு பிறந்த சசிந்திரனின் அப்பா பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். சிவகாசியில் பள்ளிக் கல்வியை படித்தபின் 1996-ம் வருடம் பெரியகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் பி.எஸ்.ஸி அக்ரி முடித்த நேரத்தில் அவரது தந்தையார் தவறிவிடுகிறார். நெருக்கடியிலிருக்கும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு அவர்மீது விழ, பட்டம் முடித்த சான்றிதழைக்கூட வாங்காமல் வேலை தேடத் துவங்குகிறார். மலேசியாவில் கே.எஃப்.சி உணவகத்தில் ரீடைல் மேனஜராக அவருக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வருட காலம் அங்கு வேலை செய்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாய் உலகம் முழுவதிலும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைகிறது.

இந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கானோரில் சசிந்திரனும் ஒருவர்.

மலேசியாவிலிருந்தபடியே அருகிலிருக்கும் சிங்கப்பூரில் வேலை தேடத் துவங்குகிறார். வெள்ளிக்கிழமை இரவு கோலாலம்பூரிலிருந்து பேருந்தில் சிங்கப்பூர் செல்பவர் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் வேலை தேடிவிட்டு மீண்டும் கோலாலம்பூர் திரும்பிவிடுவார். நிறைய முறை அலைந்தும் வேலை கிடைப்பதாக இல்லை. கிடைத்த வேலையெல்லாம் மனம் தளராமல் செய்தார். அச்சமயம் அவருக்குப் பழக்கமான ஒரு துணிக்கடைக்காரர் புதிய சட்டைகளைக் கொடுத்து விற்கச் சொல்கிறார். அதனை விற்றால், சிறிய தொகை கமிஷனாக கிடைக்குமென்பதால் தயங்காமல் அந்த வேலையைச் செய்து தனது பயணச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படியானதொரு சூழலில்தான் தூரத்திலிருக்கும் ஒரு புதிய நாட்டில் வேலை வாயுப்பு குறித்த ஒரு விளம்பரம் அவர் கண்ணில் படுகிறது.

இவர்கள் - சசிந்திரன்

1999-ம் வருடம் பப்புவா நியூகினியின் நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்திலிருந்த பல்பொருள் அங்காடியில் மாதம் 900 கினா சம்பளத்தில் மேலாளராக வேலைக்குச் சேர்கிறார். இந்தியர்களை அரிதாகவே பார்க்க சாத்தியமுள்ள அந்நாட்டில் அவர் எதிர்கொண்ட இடர்கள் ஏராளம். கிறிஸ்தவ நாடான அங்கு அசவைமே பிரதானமான உணவு. சசிந்திரன் சைவ உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கும் சசிந்திரனுக்கு சசிந்திரனுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. அதைவிடவும் பிரச்னையாக இருந்தது மொழி. ஆங்கிலமும் ஜெர்மனும் கலந்த அந்த நாட்டின் தேசிய மொழியான பிஜினை வேகமாகக் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார். மிகுந்த போராட்டங்களுக்கு நடுவே ஆறேழு மாதங்களில் அந்த வாழ்க்கைக்கு அவர் தன்னை தகவமைத்துக் கொள்ளத் துவங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக முதலாளி கடையை விற்க போவதாகச் சொல்கிறார்.

சசிந்திரன் அதிர்ச்சியடைந்தபோதும் மனம் தளராமல் வேறு வேலைகளுக்கு முயற்சி செய்யத் துவங்குகிறார். இரண்டு மூன்று மாதங்கள் அலைந்து நாற்பதுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கான நேர்முகத் தேர்விற்குச் சென்றுவந்தவருக்கு எங்குமே சாதகமான பதில் கிடைத்திருக்கவில்லை. கடையின் முதலாளி மலேசியாவைச் சேர்ந்தவர், கடையை அவர் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்ள ஒருவருமில்லாத சூழலில் அந்நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துமாறு சசிந்திரனிடம் கேட்கிறார்.

முதலாளியோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சரூபாய் அவருக்குக் கொடுக்க வேண்டும், கூடுதலாக ஐந்து லட்ச ரூபாய் இருந்தால்தான் கடையை நடத்த முடியும். தன் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய உறுதியில் தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறார். கல்லூரி காலத்தில் அறிமுகமாகி காதலித்த சுபாவை 2000ம் வருடத்தில் திருமணம் செய்துகொள்வதாக முன்பே பேசியிருந்தார்கள். அப்போதைய சூழலில் தொழிலை ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையிருந்ததால் திருமணத்திற்கு கூடுதலாக ஒரு வருடம் அவகாசம் கேட்பவர், கொஞ்சம் பணத்தைத் திரட்டிக் கொண்டு பப்புவா நியூகினிக்குத் திரும்புகிறார். முதல் சில மாதங்கள் கடையில் அவர் எதிர்பார்த்த வியாபாரம் இருக்கவில்லை, அவர் சோர்ந்துவிடவில்லை. அவரது நம்பிக்கைக்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் வியாபாரத்தில் மாற்றம் தெரிகிறது.

ஒரு வருடத்திற்குள் முதலாளிக்குத் தரவேண்டிய கடன் தொகையை முழுமையாகக் கொடுத்துவிட்டு கடையை தனதாக்கிக் கொள்கிறார். 2001 ம் வருடம் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வாக்களித்தபடியெ திருமணம் செய்துகொண்டு தன் மனைவி சுபாவையும் பப்புவா நியூகினிக்கு அழைத்துச் செல்கிறார். தமிழ்மொழியின் மீது தீவிர பற்றுக் கொண்டவரும், ஏராளமான ஆய்வுகளைச செய்துவருபவருமான சுபாவுக்கு அங்கு சென்ற முதல் சில மாதங்களில் தாய்மொழியை மறந்துவிடுவமோ என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. அவரது தோழிகள் அனேகம் பேர் அமெரிக்கா ஐரோப்பாவில் வசித்திருக்கிறார்கள். அவர்களிடம் அலைபேசி வழியாக தொடர்புகொள்ளவும் முடியாது, அந்தக் காலகட்டத்தில் அந்நாட்டில் மொபைல் பரவலாகியிருக்கவில்லை.

சில மாதங்களுக்குப்பின் அவரும் உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்ளத் துவங்கி கணவருக்கு உதவியாக வேலைகளையும் பார்க்கிறார்.

2004 வருடம் செப்டம்பர் 17ம் தேதி இரவு, அவரது மனைவியும் குழந்தையும் வீட்டிலிருக்க, வேலைமுடிந்து சசீந்திரன் திரும்பி வருகிறார், காரிலிருந்து இறங்கிய அதேநேரம், வீட்டைச் சுற்றிப் பதுங்கியிருந்த பத்து இருபதுபேர் அடங்கிய கும்பல் திமுதிமுவென அவரைச் சூழ்ந்து தாக்கத் துவங்குகிறார்கள். அந்த அசாதாரண சூழலில் சுபா தன் குழந்தையக் காக்கும் பொருட்டு விரைந்து எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு காவல்துறைக்கு ஃபோன் செய்கிறார். காவல்துறை அங்கு வந்து சேர்ந்தபோது வெட்டுப்பட்டு சசிந்திரன் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார். வலதுகை மணிக்கட்டில் மூன்று நரம்புகளில் ஆழமான வெட்டு. அங்கு சரியான மருத்துவ வசதிகள் இல்லை, அந்தக் காலகட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள்தான் விமான சேவை. சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டுமென்றால்கூட நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்படியே விட்டால் கையை இழக்க நேரிடும் என்ற சூழலில் அங்கிருந்த ஒரு ராணுவ மருத்துவர் அவரது கைக்கு சிகிச்சை அளித்து சரி செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவிட்டது. தொடர்ந்து அந்த நாட்டில் இருப்பதற்கான விருப்பமில்லாமல் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசாவுக்கு முயற்சிக்கிறார்கள்.

Also Read: மாற்றத்தை விதைக்கும் `மகாலட்சுமி டீச்சர்’ | இவர்கள் | பகுதி - 6

2005ம் வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கான விசா கிடைத்துவிட, அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டிற்கு வருகிறார். அச்சமயத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் சிறிய அறுவை சிகிச்சை ஒன்று நடக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்கையில் எதிர்பாராதவிதமாய் சிங்கப்பூர் விமானநிலையத்தில் சிறுநீரக சிகிச்சைக்காக மருத்துவர் கொடுத்தனுப்பிய மருந்து காணாமல் போகிறது. மருந்து காணாமல் போனதைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபோது எல்லோருக்குமே ஆச்சர்யம். சிங்கப்பூரில் அப்படி நடக்க சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முடியாத சூழல் உருவாக, பப்புவா நியூகினிக்கே திரும்புகிறார்கள். ஆஸ்திரேலியா அவர்களுக்கு அருகாமையிலிருந்த நாடு என்பதால் சிகிச்சைக்கு இந்தியா வருவதை விடவும் அங்கு செல்வதுதான் எளிது, ஆனால் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எளிதில் அங்கு செல்ல முடியாது, ஆனால் பப்புவா நியூகினி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன் அரைவல் விசா என்ற நடைமுறை இருந்ததால் சசிந்திரன் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு அந்நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார். தற்செயலோ இயற்கையின் விருப்பமோ அவர்களுக்கும் அந்த தேசத்திற்குமான பிணைப்பு முடியவில்லை.

2007 ம் வருடத்திற்குப்பின் சொந்தமாக நிலம் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதால் அவர்களால் தொழிலை சிரமமின்றி நடத்த முடிந்தது. இதற்கு நடுவே சிங்கப்பூரில் தலைமைத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு தன்னை வளர்த்துக் கொண்ட சசிந்திரன், பப்புவா நியூகினியில் உள்ள இளைஞர்களுக்கு அந்த திறன் சார்ந்த வகுப்பை எடுக்கிறார். ஒரு தொழிலதிபர் என்பதையும் மீறி அவர் மீதான பார்வை மக்களிடம் மாறத் துவங்குகிறது. உள்ளூர் மொழியையும் மக்களையும் புரிந்துகொள்ளத் துவங்கியபின் போக்குவரத்து வசதிகள் இல்லாத தொலைதூர கிராமங்களுக்கு இவர்களே வாகனங்களின் மூலமாய் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகிக்கத் துவங்குகிறார்கள். அம்மாதிரியான தருணங்களில் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழும் மக்களின் வறுமை அவர்களைத் தொந்தரவுச் செய்கிறது. இயற்கை வளமும் கனிம வளமும் நிறைந்த அந்நாட்டு மக்கள் கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் பின்தங்கியிருப்பதையறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான விதைகளை விதைக்க முடிவு செய்கிறார்.

இவர்கள் - சசிந்திரன்

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரியிலிருந்து சசிந்திரன் மாதிரியானவர்கள் வேறுபட்டவர்கள். தனது லாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கேத் திருப்பித் தரும் நோக்கத்தோடு கிராமங்களில் கல்விக்கூடங்களைக் கட்டிக் கொடுக்கிறார். ஏராளமான கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்க, யாருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளை செய்யத் துவங்குகிறார். மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர அச்சமயத்தில் அங்கிருக்கும் ஒரு பழங்குடி கிராமத்து மக்கள் அவரை தங்கள் இனக்குழுவில் ஒருவராக தத்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு பழங்குடி சமூகத்தில் இப்படியானதொரு நிகழ்வு அசாதாரணமானது.

2012 ம் வருட தேர்தலின் போது, உள்ளூர் மக்களின் வேண்டுகோளை ஏற்று நியூவெஸ்ட் பிரிட்டன் கவர்னர் பதவிக்குப் போட்டியிட்டவர் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உறுதியாக நம்பும் சசிந்திரன் கவர்னரானபின் ஐநூறுக்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டிக் கொடுத்திருப்பதோடு ஏராளமான பள்ளிக்கூடங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுற்ற உள்ளூர் அரசியல்வாதிகளில் சிலர் அவருக்கு எதிராக விஷமமான செய்திகளை பரப்பி சதி செயல்களை செய்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால் மக்கள் அவரைத் தங்களில் ஒருவராக மதிக்கிறார்கள். இதன் காரணமாகவே 2017 ம் வருட தேர்தலிலும் வென்றதோடு அந்நாட்டின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராகவும் இருந்துவருகிறார்.

’எந்த நிலையிலும் மனிதன் தன் வாழ்வை முழுமையாய் வாழ்வதுதான் பிரதானமானது’ என ஆல்ஃபெர் காம்யூ குறிப்பிடுவார். ஒரு மனிதனின் வாழ்வு தனக்காகவன்றி தான் வாழும் சமூகத்திற்கானதாய் பரிணாமம் பெறும்போதுதான் முழுமையடைகிறது. பிழைக்கச் சென்ற தேசத்தில் தன் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால் சசிந்திரன் ஒரு தொழிலதிபராக யாருக்கும் தெரியாமல் போயிருப்பார். பப்புவா நியூகினி மக்களிடம் அவர் கொண்ட அன்பின் காரணமாய் இப்போது அவர் மட்டுமல்ல, அவரது நிலத்தைச் சேர்ந்த நாமும் அநாட்டு மக்களால் மதிக்கப்படுகிறவர்களாகிறோம். வறட்சியும் வறுமையும் நிரம்பிய தென் மாவட்டங்களில் பிறந்து வளரும் இளைஞர்களுக்கு இயல்பிலேயே போராட்ட குணங்கள் அதிகம். நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டும் சுமந்துகொண்டு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவர்களால் எதிர்நீச்சல் போட்டு வெற்றிகாண முடியும். திரு சசீந்திரன் அவர்களின் வாழ்க்கைப் பயணமும் இதுபோல் சவால்களும் சாதனைகளும் நிறைந்ததுதான்.

(இவர்கள்... தொடர்வார்கள்)

Also Read: வி.கே.டி.பாலன்: `நம்பிக்கை மனிதர்’ | இவர்கள் | பகுதி - 5



source https://www.vikatan.com/news/general-news/story-about-social-worker-sasiendran-ivargal-part-7

விகடனின் கோலாகல தீபாவளி சிறப்புச் சலுகைகள்

உங்களுக்கான சிறப்பு விற்பனை இது. நல்ல வாய்ப்புகள் வாழ்க்கையில் சில நேரங்களில் தான் நம்மை தேடி வரும்., அப்படித்தான் வாசிப்பு தளத்திலும்..!! இதோ உங்கள் விகடன் உங்களுக்காக பல பயன்தரு அதிரடி திட்டங்களை, offer களை நாளும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த தீபாவளி OFFER

உண்மையை உரக்கச் சொல்லும் நேர்மையான இதழியலுக்கான உழைப்பும் செலவும் மிகப்பெரிது.

எனினும், நீங்கள் விகடன் டிஜிட்டலில் நாள் ஒன்றுக்கு ரூ.2.80-க்கும் குறைந்த சப்ஸ்கிரிப்ஷனில் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன் என அனைத்து விகடன் இ-இதழ்கள் / ப்ரீமியம் கன்டென்ட், 2006 முதல் இன்று வரையிலான 15 ஆண்டு கால பொக்கிஷங்களால் பயன்பெறலாம்

வாசகர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் நல்ல நாட்களிளெல்லாம் அவற்றின் பெயரால் பல பயன்தரு சலுகைகளை அள்ளி வழங்குகிறது விகடன். இதன் அடர்த்தியான நோக்கம் வாசிப்பிற்கான நல்ல சூழலை உருவாக்கி சமூகத்தை அதில் எப்பாடு பட்டேனும் பங்குபெற செய்து, தன்னால் இயன்ற கடமையை செய்வதேயாகும்.

அப்படி ஒரு பெருவாய்ப்பாக உருவாக்கப்பட்டது தான், DIWALI OFFER. தொடர்ச்சியான தேடலுடன் கூடிய வாசிப்பு பழக்கத்தை எந்த ஒரு சமூகம் தன்னகத்தே கொண்டுள்ளதோ, பின்பற்றுகிறதோ அதுவே வாழும், வளரும். பிறருக்கு பயனுள்ளதாய் விளங்கும். விகடனில் வாசியுங்கள், விளக்காய் வழிகாட்டுங்கள். விரையுங்கள்

இந்தச் சிறப்பு DIWALI OFFER சலுகையுடனான சந்தா தொகை, விகடன் இ-இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியலுக்கு நீங்கள் அளிக்கும் கரம்!

இதோ உங்களுக்காக மூன்று சிறப்புச் சலுகைகள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.999 ரூபாய்க்கு பெறுங்கள்! (1 வருட சந்தாவுடன் தீபாவளி மலர் + 1 மாத சந்தா இலவசம்)

* Save ரூ.999 > ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1999 ரூபாய்க்கு பெறுங்கள்! (2 வருட சந்தாவுடன் தீபாவளி மலர் + 1 மாத சந்தா இலவசம்)

* Save ரூ.11000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்! (கூடுதலாக தீபாவளி மலர் இலவசம்)

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!



source https://www.vikatan.com/news/announcements/vikatan-diwali-special-offer

மோடி போகாத டாக்ஸி… ராகுல் போன டாக்ஸி! | FactCheck

ஒரு டாக்ஸியில் பிரதமர் நரேந்திர மோடி சென்று இறங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் நேற்று வைரல் ஆனது. உண்மையில் அது டாக்ஸியா? ஃபேக்ட் செக்கிங் செய்யும் இணையதளங்கள் இதை மறுத்துள்ளன.

மோடி பயணம் செய்த கார்

ஜி20 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி சென்றிருக்கிறார் மோடி. அக்டோபர் 30-ம் தேதி சனிக்கிழமை அவர் வாடிகன் சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். இந்த சந்திப்புக்காக ஃபோக்ஸ்வாகன் பஸாத் கார் ஒன்றில் மோடி பயணம் செய்தார். மோடி காரிலிருந்து இறங்குவது, போப்புடன் சந்திப்பை முடித்துவிட்டு மீண்டும் காரில் ஏறுவது என இரண்டு புகைப்படங்கள் வெளியாகின.

இந்தக் காரின் உச்சியில் டாக்ஸி என மஞ்சள் நிற போர்டு இருப்பது மாதிரியும், காரின் பின்பக்கத்தில் டாக்ஸி நிறுவன விளம்பர வாசகம் இருப்பது மாதிரியும் புகைப்படங்கள் அக்டோபர் 31-ம் தேதி ட்விட்டரில் வைரல் ஆகின. ‘அரசுமுறைப் பயணமாகப் போனவருக்கு டாக்ஸி கொடுத்து மட்டம் தட்டி விட்டார்கள்’ என்று பலரும் இதை வைத்து கிண்டல் செய்தனர். ‘மோடி இத்தாலியில் மகிழ்ச்சியாக டாக்ஸியில் பயணம் செய்தார்’ என்று ஒருவர் கிண்டல் செய்ய, ‘4,500 கோடி ரூபாய் விமானத்தில் வந்தவரை 450 ரூபாய் டாக்ஸியில ஏற வச்சிட்டீங்களேடா’ என்று இன்னொருவர் நக்கல் செய்தார். ‘‘அடுத்த முறை மோடி அமெரிக்கா போகும்போது, ‘ஓலா பிடிச்சு ஒயிட் ஹவுஸ் வந்துடுங்க’ என்று ஜோ பைடன் சொல்லிவிடுவார் போல’’ என்று வேறொருவர் கலாய்த்தார்.

Fake: மோடி டாக்ஸி படம்

ஆனால், உண்மையில் மோடி பயணம் செய்தது டாக்ஸி இல்லை. அங்கிருக்கும் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த காரில்தான் பயணம் செய்தார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட படங்களில் இதுபோன்ற ‘டாக்ஸி’ பலகை இல்லை. யாரோ போட்டோஷாப் செய்து இதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள். இத்தாலி டாக்ஸிக்களில் கறுப்பு நிற போர்டில் வெள்ளை எழுத்துகளில்தான் டாக்ஸி என எழுதியிருக்கும். வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில்தான் டாக்ஸிக்கள் இருக்கும். மோடி பயணம் செய்தது கறுப்பு நிறக் கார்.

இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், போப்புடனான மோடியின் சந்திப்பு மகிழ்ச்சியாகவே அமைந்தது. சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே மோடிக்கு நேரம் கொடுத்திருந்தார் போப். ஆனால், ஒரு மணி நேரம் இருவரும் உரையாடினர். 2013-ம் ஆண்டு போப் பதவியேற்றார் பிரான்சிஸ். அதன்பின் அவரைச் சந்திக்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். வாடிகனுக்கு இதற்குமுன் போன இந்தியப் பிரதமர் வாஜ்பாய். 2000 ஜூனில் வாடிகன் சென்ற அவர், அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பாலை சந்தித்தார்.

Modi

ஆசியாவிலேயே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இங்கு கடைசியாக வாஜ்பாய் ஆட்சியில் 1999-ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் வந்திருந்தார். மோடி இப்போது விரைவிலேயே இந்தியா வருமாறு போப் பிரான்சிஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை போப் ஏற்றுக்கொண்டுள்ளார். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவா மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மோடி - போப் சந்திப்பைவிட, இந்த டாக்ஸி விவகாரமே பெரும் பரபரப்பு ஏற்படுத்திவிட்டது.

அதே சனிக்கிழமை இன்னொரு டாக்ஸி சம்பவமும் நடந்தது. கோவா தேர்தலுக்கு முன்னோட்டமாக அந்த மாநிலத்துக்குப் போன காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவாவில் ‘பைலட்’ எனப்படும் டூவீலர் டாக்ஸிக்கள் புகழ்பெற்றவை. சுரங்கத் தொழில் நின்றுபோனதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இப்படி டூவீலர் டாக்ஸியில் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து போனார் ராகுல். ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதனால் இந்தப் பயணம் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.

ராகுல் காந்தி - டூவிலட் டாக்ஸியில்...
மோடி டாக்ஸியில் பயணம் செய்யாமலே வைரல் ஆனார்… ராகுல் டாக்ஸியில் போயும் வைரல் ஆகவில்லை!


source https://www.vikatan.com/news/international/did-modi-travel-in-taxi-facts-says-no

சசிகலா: 3 நாள்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு; முக்கியஸ்தரின் மறைமுக ஆதரவு?! -பரபரக்கும் அதிமுக

சசிகலாவை முன் வைத்து அதிமுகவுக்குள் நடைபெற்று வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், தஞ்சாவூரில் தங்கியிருந்த படி சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் வீட்டிலிருந்தபடியே இன்று மதியத்திலிருந்து மூன்று நாள்கள் தனது ஆதரவாளர்களை சந்திப்பதுடன் அவர்களுடன் போட்டோ எடுத்து கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிமுக-வில் பரபரப்பை கூட்டியுள்ளது.

சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் நடைபெற்ற தினகரன் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த சசிகலா, அருளானந்த நகர் அருகே பரிசுத்தம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான இல்லத்தில் தங்கியிருந்தபடி தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

28ம் தேதி தஞ்சாவூரிலிருந்து மதுரை சென்றவர் அங்கிருந்தப்படி 29-ம் தேதி கமுதி,பசும்பொன்னிற்கு சென்று தேவர் சமாதியில் மரியாதை செய்து விட்டு மீண்டும் தஞ்சாவூர் திரும்பினார்.

சுற்றுப்பயணத்தில் சசிகலா

இது குறித்து சசிகலா தரப்பில் சிலரிடம் பேசினோம், ``அதிமுகவில் தனக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டிருந்தாலும் நிதானமாகவே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா பயன்படுத்திய காரினை தொடர்ந்து பிரசாரம் வாகனத்தையும் தனது சுற்றுப் பயணத்தில் பயன்படுத்த தொடங்க இருக்கிறார். ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவான கருத்தை கூறிய பிறகு முன்னாள் அமைச்சர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் பேசியதாக தெரிகிறது. அவங்ககிட்ட எதையும் கொஞ்சம் பொறுமையாகவே செய்ய வேண்டும் நான் சொல்கிற வரை காத்திருங்கனு கூறியதாக தெரிகிறது.

Also Read: `100 பவுன்சர்கள் முதல் ஓபிஎஸ் தம்பியின் எதிர்பாரா என்ட்ரி வரை!'- தினகரன் வீட்டு விசேஷ ஹைலைட்ஸ்.

அதிமுகவில் சோழ மண்டலத் தளபதி என அழைக்கப்படும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில் தனது சம்மந்தி தவமணி மூலம் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டி வருவதாக வெளியான தகவல் சசிகலாவை உற்சாகம் கொள்ள வைத்துள்ளதாம். மதுரையிலிருந்து பசும்பொன் சென்ற போது மானாமதுரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலை ஒரத்தில் நின்ற ஆதரவாளர்கள் சால்வை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

தொண்டர் படை

அதே போல் 132 இடங்களில் சசிகலாவின் வாகனத்தை மறித்து மரியாதை செய்ததும் சசிகலாவுக்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்துள்ளது. இந்த சூழலில் தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சசிகலாவின் உதவியாளர் கார்த்தி பலருக்கு போன் செய்து 1-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. நீங்க வர வேண்டும் இடத்தை பின்னர் சொல்கிறேன் என சில தினங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

Also Read: ``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்

ஆனால் தற்போது ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டாம். ஆதரவாளர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை மட்டும் செய்யுங்க என சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா ரொம்பவே நிதானமாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. மதியம் வீட்டிலிருந்தபடியே தனது ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா போட்டோவும் எடுத்து கொள்கிறார். இதையடுத்து 2 மற்றும் 5ம் தேதியும் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாட்டை இளவரசி மகன் விவேக், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜூ உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இதற்காக ஜெயா டிவி லைவ் வாகனம் மற்றும் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தொண்டர் படை தயார் நிலையில் உள்ளது. தீபாவளி அன்றும், அதற்கு முதல் நாளும் தொண்டர்களை சந்திக்க வில்லை. 5-ம் தேதிக்கு பிறகு சென்னை புறப்படும் சசிகலா சில நாள்களுக்கு பிறகு பயணங்களை திட்டமிட்டு கொண்டு மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அப்போதிலிருந்து சசிகலா வேகம் காட்டுவார்” என தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-plans-to-meet-the-supporters-and-take-photos-with-them

முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39

நூறு மனிதர்கள் இருந்தால் நூற்றிப் பத்துக் கருத்துகள் இருக்கும் என்பார்கள். ஏனெனில், நம் ஒவ்வொருவருக்குமான குறிக்கோள்கள் வேறு; கையிலிருக்கும் பணவசதி வேறு; ரிஸ்க் எடுக்கும் தைரியம் வேறு; முதலீட்டுக்காலம் வேறு. ஆனால், அனைவருக்கும் அவரவர் தேவைக்குத் தகுந்தபடி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம் அல்லவா?

ஈக்விட்டி ஃபண்ட்ஸ், ரிஸ்க் எடுக்கத் துணிபவர்களுக்கும்,

கடன் ஃபண்ட்ஸ் பாதுகாப்பை விரும்புபவர்களுக்கும் உதவுகின்றன என்று பார்த்தோம்.

இவை தவிர உள்ள ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் ஓரளவு ஈக்விட்டியிலும், மீதியைக் கடனிலும் முதலீடு செய்கின்றன. கன்சர்வேடிவ் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 10% முதல் 25% வரை பங்குச் சந்தையிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

Investment (Representational Image)

Also Read: `எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38

பேலன்ஸ்ட் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 40% முதல் 60% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றது.

அக்ரெஸிவ் ஹைப்ரிட் ஃபண்ட்ஸ் 65% முதல் 80% வரை பங்குகளில் முதலீடு செய்கிறது.

டைனமிக் அசெட் அலோகேஷன் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக்கொள்கின்றன.

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதுவும் ஒரு வகையான ஹைப்ரிட் ஃபண்ட் ஸ்கீம்தான். ஒரு சந்தைக்கும் இன்னொரு சந்தைக்கும் நடுவில் பங்கு விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை இது பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு பங்கை கேஷ் மார்க்கெட்டில் வாங்கி, ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டில் விற்றல் ,என்.எஸ்.இ-யில் ரூ.500/-க்கு வாங்கி பி.எஸ்.இ-யில் ரூ. 500.35-க்கு விற்றல் என்று கழுகுப் பார்வை தேவைப்படும் ஒரு சிக்கலான சமாசாரம். அதனால் இதில் வாங்கல், விற்றல் அதிகம் நடைபெறும்.

வாங்கலும், விற்றலும் ஒரே சமயத்தில் நடைபெறுவதால், ரிஸ்க் அதிகமில்லை. வாங்கி சில நாள்களில் பங்கின் விலை இறங்கிவிடுமோ என்ற பயம் இல்லை. மேலும், ஒரு பகுதி பணத்தைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாலும் ரிஸ்க் குறைகிறது. வரி விதிப்பைப் பொறுத்தவரை ஈக்விட்டி ஃபண்டுக்கான வரி விதிப்பு முறை இதற்கும் பொருந்தும். சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் தோன்றும்போது இவை நன்கு செயல்பட்டு லாபம் ஈட்டும்.

ஆனால், ஒரு சிறிய அளவு லாபத்துக்காகப் பெரிய அளவு பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது கமிஷன், கட்டணங்கள் என்று லாபத்தில் ஒரு பகுதியை இழக்க நேர்கிறது; செலவு விகிதம் எகிறுகிறது என்பது இதில் உள்ள முக்கியமான நெகட்டிவ் பாயின்ட்.

Investment

Also Read: மனைவிக்காக வாரன் பஃபெட் தேர்வு செய்த இண்டெக்ஸ் ஃபண்டுகள்; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - 37

மல்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட்ஸ் தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், கடன் பத்திரங்கள் போன்ற பல முதலீட்டு வகைகளில் ஏதாவது மூன்றைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10% அளவு முதலீடு செய்கின்றன. ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் குறைந்த பட்சம் 65% பங்குச் சந்தையிலும், குறைந்த பட்சம் 10% கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

இவை தவிர உள்ள சொல்யூஷன் ஓரியன்டெட் ஸ்கீம்களில் ரிடையர்மென்ட் ஃபண்டில் லாக் இன் பீரியட் - ஐந்து வருடங்கள் அல்லது ரிடையர்மென்ட் வயது - இவற்றில் எது குறைவோ அது. சில்ட்ரன்ஸ் ஃபண்டில் லாக் இன் பீரியட் ஐந்து வருடங்கள் அல்லது சிறாரின் பதினெட்டு வயது வரை - இவற்றில் எது குறைவோ அது.

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது. வித விதமான மலர்களைக் கொண்டு ஒரு பூங்கொத்து செய்வது போல் ஏற்கெனவே சந்தையிலிருக்கும் நல்ல மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்வதே ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ். இதனால் நாம் எதிர்பார்க்கும் பல்வகைப்படுத்துதல் (Diversification), பல ஃபண்ட் மேனேஜர்களின் திறமையான வழிநடத்துதல் போன்றவை நமக்குக் கிடைத்து விடுகின்றன.

ஃபண்ட் மேனேஜரின் குறிக்கோள் அதிக வருமானம் என்றால் என்.ஏ.வி. (Net Asset Value) அதிகமுள்ள ஃபண்டுகளைத் தேர்வு செய்வார். அல்லது பாதுகாப்புதான் குறிக்கோள் என்றால் குறைந்த ரிஸ்க், குறைந்த என்.ஏ.வி கொண்ட ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வார்.

Stock Market

Also Read: ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36

ஃபாரின் ஃபண்டுகளைக்கூட தேர்வு செய்யும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் உள்ளன. மற்ற மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களைவிட ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸில் செலவு விகிதம் அதிகம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

கடந்த பல அத்தியாயங்களாக மியூச்சுவல் ஃபண்டின் வெவ்வேறு முகங்களைப் பார்த்து வந்தோம். ஆயிரக்கணக்கான ஸ்கீம்கள் இருக்கும் நிலையில் நமக்கேற்ற ஒரு சில ஃபண்டுகளைத் தேடிப்பிடிக்க பொறுமை வேண்டும். கூடியவரை நம் முதலீடுகளை அதிகம் சிக்கலாக்கிக் கொள்ளாமல் நமக்குப் புரியக்கூடிய எளிய ஸ்கீம்களில் இறங்குவது நல்லது. நமக்கேற்ற நிதி ஆலோசகர் ஒருவரைக் கண்டறிந்து ஆலோசனை பெறுவது அதை விட நல்லது.

- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்



source https://www.vikatan.com/business/investment/an-introduction-to-hybrid-mutual-funds-and-how-it-works

Doctor Vikatan: நீரிழிவால் குறையும் உடல் எடை; எப்படி சரி செய்வது?

சர்க்கரைநோயின் தாக்கத்தால் உடல் எடை வேகமாகக் குறைகிறது. உடல் எடை அதிகரிக்க ஆலோசனைகள் சொல்லவும்.

- சுந்தர பாண்டியன் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``சர்க்கரைநோய் இல்லாத மற்றவர்களைப் போலவே சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைய பல காரணங்கள் இருக்கலாம். எனவே உடல் எடை குறைவதற்கு உங்களுக்கு இருக்கும் நீரிழிவு பாதிப்புதான் காரணமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேறு சில காரணங்களாலும் உடல் எடை குறையலாம்.

அவை:

- மன அழுத்தம், மனச்சோர்வு

- மிகை தைராய்டு

- புற்றுநோய்

- ஹெச்ஐவி பாதிப்பு

- சத்துகளை உட்கிரகிப்பதில் உள்ள கோளாறு

- காசநோய்

- உணவை விழுங்குவதில் உள்ள பிரச்னை

- மனநோய்கள்

- புகை மற்றும் போதைப் பழக்கங்கள்

சிலர் அடிக்கடி உடல் எடையை செக் செய்வார்கள். அரை கிலோ, ஒரு கிலோ குறைந்தாலே எடை குறைந்துவிட்டதாகப் புலம்புவார்கள். இதை உடல்நல பாதிப்பாகக் கருத முடியாது. குறுகிய காலத்தில் நான்கைந்து கிலோவுக்கும் அதிகமாக எடை குறைந்தால்தான் அது பற்றிக் கவலைப்பட வேண்டும். அதாவது 6 மாதங்களுக்குள் மொத்த எடையில் 5 சதவிகிதம் குறைந்தால்தான் அது குறித்து யோசிக்க வேண்டும்.

Also Read: Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?

சர்க்கரைநோயாலும் உடல் எடை குறையலாம். ஆனாலும் அது டைப் 1 டயாபடீஸ் எனப்படும் முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் ஏற்படும். இவர்களது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரப்பு இருக்காது. டைப் 2 வகை நீரிழிவாளர்களுக்கும் பீட்டா செல்கள் தொடர்ந்து நலிவடைவதால் இன்சுலின் சுரப்பு பெருமளவு குறைந்து உடல் எடை குறையலாம்.

இன்சுலின் இல்லாத காரணத்தாலும் அதன் சுரப்பு குறைவதாலும் உடல் செல்களால் ரத்த குளுக்கோஸை பயன்படுத்த முடியாது. எனவே இதைச் சரிசெய்ய உடலிலுள்ள புரதமும் கொழுப்பும் கரைய ஆரம்பிக்கும். இதன் மூலம் தேவையான சக்தியைத் தர உடல் முயற்சி செய்யும். இதன் காரணமாக இவர்களுக்கு உடல் எடை குறையும். ஆக... இவர்களுக்கு இன்சுலின் தேவைப்படும். இவர்கள் உட்கொள்ளும் உணவின் கலோரியை உடல் எடைக்கும் செய்யும் வேலைக்கும் ஏற்ப முறைப்படுத்த வேண்டும். புரதச் சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், ரத்தச் சர்க்கரை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தாக்காமலும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் வயது, உயரம், பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற எடையைத் தக்கவைத்துக்கொள்ள முயல வேண்டும்.

Diabetes

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?

ஒல்லியாக இருப்பவர்களும், பருமனாக இருப்பவர்களும் அடுத்தவரைப் பார்த்து எடை கூடவோ இளைக்கவோ ஆசைப்பட்டு தவறான விஷயங்களைப் பின்பற்ற நினைக்கக்கூடாது. பி.எம்.ஐ எனப்படும் உடல்நிறைக் குறியீட்டின்படி உயரத்துக்கேற்ற சரியான எடையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளைப் பின்பற்ற வேண்டும்.

உடல் எடையில் திடீரென அசாதாரண மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-stop-the-weight-loss-that-occur-due-to-diabetes

IND v NZ: பேரழிவிற்குக் காரணமான அந்த ஒரு முடிவு... இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு?!

மீண்டும் ஒரு மோசமான தோல்வி. நியூசிலாந்துக்கு எதிராக ஐ.சி.சி தொடரில் இந்திய அணி மீண்டும் சொதப்பியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது மூன்றாவது முறை. 2019 உலகக்கோப்பையை போல, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை போல, இந்த டி20 உலகக்கோப்பையிலும் வென்றே ஆக வேண்டிய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தோற்றிருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. 111 ரன்களை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 15 ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டது. இந்திய அணி போட்டியே அளிக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்கான காரணம் என்ன?

டாஸிலேயே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனே டாஸை வென்று சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இந்த டி20 உலகக்கோப்பையில் துபாய் மைதானத்தில் இந்த போட்டிக்கு முன்பு வரை 6 போட்டிகள் நடந்திருக்கின்றன. அந்த 6 போட்டிகளிலும் ஸ்கோரை சேஸ் செய்த அணியே வென்றிருக்கிறது.

6 போட்டிகளில் 5 போட்டிகளில் டாஸை வென்ற கேப்டன்கள் சேஸிங்கைத் தேர்வு செய்து போட்டியை வென்றிருக்கின்றனர். ஒரே ஒரு போட்டியில் டாஸை வென்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பேட்டிங்கைத் தேர்வு செய்திருப்பார். பாகிஸ்தானுக்கு எதிராக அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றிருக்கும். ஆக, துபாய் மைதானத்தில் சேஸ் செய்யும் அணிகளுக்கு 100% வாய்ப்பு இருந்தது. டாஸில் இந்தியா தோற்று முதல் பேட்டிங்கை செய்ய வேண்டும் என்ற போதே இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியிலும் கோலி டாஸை தோற்றிருந்தார். இந்தியா முதலில் பேட் செய்திருந்தது. போட்டியை தோற்றிருந்தது. டாஸ் இங்கே ரொம்பவே முக்கியம். ஆனால், டாஸ் தோல்விக்கு கோலியையோ இந்திய அணியையோ துளி கூட குறை சொல்ல முடியாது. இங்கே சில முடிவுகளும், போராட்டமே இல்லாமல் தோற்கும் இந்திய அணியின் அணுகுமுறையும்தான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

நேற்றைய போட்டியில் ப்ளேயிங் லெவனில் இந்திய அணி இரண்டு மாற்றங்கள் செய்திருந்தது.

Ishan Kishan
காயமுற்ற சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இஷன் கிஷன் உள்ளே வந்திருந்தார். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் உள்ளே வந்திருந்தார். இந்த இரண்டு மாற்றங்களுமே எதிர்பார்த்ததுதான். பல முன்னாள் வீரர்களும் இந்திய அணி இந்த மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இந்த மாற்றத்திற்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட குழப்பத்தைத்தான் சகித்துக் கொள்ளவே முடியாது.

இஷன் கிஷன் அணிக்குள் வருகிறார் என்றவுடன் அவரை ஓப்பனராக இறக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். இதற்கு வலுவான பின்னணியும் இருக்கிறது. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் இஷன் கிஷன் மிடில் ஆர்டரில் இறங்கி வரிசையாக பல போட்டிகளிலும் சொதப்பியிருந்தார். அப்போது அவருக்கு ஒரு இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் போது இஷன் கிஷனை ரோஹித் ஓப்பனராக்கியிருப்பார். ஓப்பனரானவுடன் இஷன் கிஷன் அடித்து வெளுத்து நல்ல ஃபார்மிற்குத் திரும்பியிருப்பார். ஆக, இஷன் கிஷனுக்கு ஓப்பனிங் இறங்குவதில் ஒரு சௌகரியம் இருந்தது. மேலும், ஐ.பி.எல் நடைபெறும் போதே உன்னை ஓப்பனிங் ஆப்சனாகவே பார்க்கிறோம் என கோலியும் இஷன் கிஷனுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தார். இதுபோக, இஷன் கிஷன் இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்டை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற கணக்குகளும் ஓடியிருக்கும். இரண்டு பேரும் ஒரே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் சரிதான், ஆனால்...

இஷன் கிஷனை ஓப்பனிங் இறக்குவதற்காக டாப் ஆர்டரில் நடந்த குளறுபடி இருக்கிறதே அதுதான் இங்கே பிரச்னை.
ரோஹித் சர்மா

இஷன் கிஷனுக்காக ஓப்பனரான ரோஹித் நம்பர் 3 இல் இறக்கப்பட்டார். கோலி தனது இடத்தை விட்டுக் கொடுத்து நம்பர் 4 க்கு சென்றார். ஓப்பனிங்கில் புதிய கூட்டணியாக ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி களமிறங்கியது. இந்த மூன்று முடிவுகளுமே இதற்கு முன் நிரூபிக்கப்படாதவை அல்லது தவறென நிரூபிக்கப்பட்டவை. ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி பெரிதாக முயன்று பார்க்காத கூட்டணி.

இதற்கு முன் இங்கிலாந்து சீரிஸில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி ஓப்பனிங் இறங்கியிருந்தது. அந்தப் போட்டியில் ராகுல் டக் அவுட் ஆகியிருப்பார்.

ராகுல்-இஷன் கிஷன் கூட்டணி என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கும் என்பதற்கு தரவுகளே இல்லை. ரோஹித் சர்மா ஓப்பனிங் இல்லாமல் ஆர்டரை இறக்கிக் கொண்டு நம்பர் 3&4 இல் கடைசியாக எப்போது வந்தார் என்றே ஞாபகம் இல்லை. இந்திய அணிக்காக 100 க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ரோஹித் சர்மா மூன்றே மூன்று போட்டிகளில் மட்டுமே நம்பர் 3 இல் இறங்கியிருக்கிறார். 7 போட்டிகளில் மட்டுமே நம்பர் 4 இல் இறங்கியிருக்கிறார். அதுவும் வெகு சமீபத்தில் இல்லை.

டி20 போட்டிகளை பொறுத்தவரைக்கும் ஓப்பனிங் அல்லது நம்பர் 3 இதுதான் கோலியின் ஆஸ்தான இடம். அதைவிட்டு கோலி நம்பர் 4 இல் இறங்கியிருந்தார். கடந்த போட்டியில் ஒட்டுமொத்த அணியும் சொதப்பியபோது நம்பர் 3 இல் இறங்கியிருந்த கோலி மட்டுமே நின்று ஆடியிருந்தார். மற்ற வீரர்களுக்காக கோலி தனது ஆர்டரை மாற்றிக்கொள்ளும் போது பெரும்பாலான சமயங்களில் சொதபியிருக்கவே செய்கிறார். நேற்றும் சொதப்பினார். வென்றே ஆக வேண்டிய போட்டியில் அதுவும் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக இப்படி அதிகம் நிரூபிக்கப்படாத ஆப்சன்களோடு களமிறங்கியது பெரும் பின்னடைவாகிப் போனது.

ராகுல் - இஷன் கிஷன் கூட்டணி மூன்று ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. ட்ரென்ட் போல்டை சாமர்த்தியமாக எதிர்கொள்வார் என அனுப்பப்பட்ட இஷன் கிஷன் அவரின் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார். ரோஹித் சர்மா ட்ரென்ட் போல்டின் ஒரே ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டார். அந்த ஒரு பந்திலும் மில்னே கேட்ச் ட்ராப் செய்திருந்தார். ட்ரென்ட் போல்டுக்காக ரோஹித்தை கோலி நம்பர் 3 ஆக்கியிருந்தால் கோலியின் அடிப்படை போர்க்குணத்தின் மீதே கேள்வி எழுகிறது.

போல்ட் - கோலி

என ட்ரென்ட் போல்ட் போட்டிக்கு முன்பான ப்ரஸ் மீட்டில் பேசியிருப்பார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கோலி,

என பேசியிருந்தார். ரோஹித்தை நம்பர் 3 க்கு இறக்கியதில் என்ன அட்டாக்கிங் மனோபாவத்தை இந்திய அணி வெளிக்காட்டியது? போல்டுக்கு எதிராக சீனியர் பேட்ஸ்மேனை பதுக்கி வைத்து இந்திய அணி டிஃபன்ஸிவ்வாக மட்டுமே யோசித்திருந்தது. இது கோலியின் குணாதிசயமே கிடையாதே! மேலும், அவருக்கு சரி வராத ஒரு இடத்தில் இறக்கி சொதப்பவும் வைத்திருந்தது.

கோலி 5.5 வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்திரிந்தார். 10.1 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். மொத்தம் 26 பந்துகள். இந்த 26 பந்துகளில் கோலி மட்டுமே 17 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். காரணம், ஸ்பின்னர்கள். பவர்ப்ளே முடிந்தவுடன் இரண்டு எண்ட்டில் இருந்துமே இஷ் சோதி, சாண்ட்னர் என ஸ்பின்னர்களை வைத்து வில்லியம்சன் அட்டாக் செய்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலியின் அணுகுமுறை சமீபமாக சுமாராகவே இருக்கிறது.

Also Read: "காரியம் துணை" எனக் களத்தில் பேசும் கேமியோ நாயகன்... பினிஷர் ஆசிஃப் அலியின் சக்சஸ் ஸ்டோரி!

விராட் கோலி

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த பேட்ஸ்மேன்களில் கோலியும் ஒருவர். இப்படியான நிலையில் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொண்டதாலயே கோலியால் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட ஆடியிருக்க முடியவில்லை. கடைசியில் லெக் ஸ்பின்னரான இஷ் சோதியிடமே வீழ்ந்திருந்தார். ஒருவேளை கோலி நம்பர் 3 இல் இறங்கியிருந்தால் இரண்டு எண்ட்டில் இருந்தும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்காது.

இஷன் கிஷனுக்காக பேட்டிங் ஆர்டரில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களே இந்திய அணிக்கு பேரழிவாக அமைந்தது. உலகக்கோப்பையில் முக்கியமான போட்டியில் இப்படியான ஏற்கெனவே நிரூபிக்கப்படாத மாற்றங்களைச் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. Do or die போட்டியில் இப்படி மாற்றங்கள் செய்வதே பாவம். ஆனாலும், அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட மாற்றங்களாக இருந்திருந்தால் பாதிப்பையாவது கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம். ரோஹித் சர்மா-இஷன் கிஷன் ஓப்பனிங், நம்பர் 3 இல் கோலி, நம்பர் 4 இல் ராகுல் என இறக்கப்பட்டிருந்தால் சேதாரம் குறைந்திருக்கக்கூடும். ஏனெனில் மூன்றுமே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டவை. ரோஹித் - இஷன் கிஷன் கூட்டணி ஐ.பி.எல் இல் ஓப்பனிங் இறங்கிய அனுபவம் இருக்கிறது. நம்பர் 3 கோலி ஆட்சி செய்யும் இடம். இந்திய அணிக்காக நம்பர் 4 இல் ராகுல் ஏற்கெனவே கலக்கியிருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் வெற்றிகரமாக கேப்டன்சி செய்திருக்கும் தோனியின் அனுபவத்திற்காகவே அவர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இப்படியான முக்கியமான போட்டிகளில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அணிக்கு உதவுவதற்காகவே தோனி வரவழைக்கப்பட்டார். ஆனால்,

ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்
ஆலோசகர் தோனி, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி என மூவரும் இணைந்து செய்த மாற்றங்கள் எதுவுமே இந்திய அணிக்கு நல்ல பலனை தரவில்லை என்பதே உண்மை.

பேட்டிங்கில் இவ்வளவு குழப்பமும் சொதப்பலும் அரங்கேறிய பிறகு பந்துவீச்சை பற்றி பேசி பலனில்லை. ஆனாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு துளி கூட தடுமாற்றத்தை கொடுக்கவே இல்லை. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டையுமே பும்ரா மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

Also Read: IND v NZ: ஏறக்குறைய `நாக் அவுட்'... இந்தியா அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்க என்ன செய்யவேண்டும்?

கோலி-வில்லியம்சன்

நியுசிலாந்து அணி ரொம்பவே எளிதாக 15 வது ஓவரிலேயே டார்கெட்டை சேஸ் செய்துவிட்டது. இந்தியாவின் ரன்ரேட்டும் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது. இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக சாத்தியமில்லை என சொல்ல முடியாது. இந்தியா அடுத்து வரும் போட்டிகளில் பெரிதாக வெல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை அப்செட் செய்ய வேண்டும்... அதன்பிறகு இந்தியா நமீபியாவை... என எக்கச்சக்க சிக்கலான கணக்குகள் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்தியாவிற்கு ஒரு வாய்ப்புண்டு.



source https://sports.vikatan.com/cricket/indias-semi-final-chances-are-bleak-after-their-defeat-against-newzealand

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: ``அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்..!" - திருமாவளவன் காட்டம்

கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கூட்டியிருந்தது. இந்நிலையில், 'சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலை தடுப்பதற்கு என ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.

Also Read: கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன?

அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. தமிழக உயர் நீதிமன்றமும் அப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றது. ஆனாலும், ராஜஸ்தான் மாநிலத்தை தவிர்த்து வேறு எங்கும் இதுவரையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஒன்றிய அரசு அப்படி சட்டத்தை இயற்ற போவதாக கூறி கொண்டு நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளது.

கண்ணகி - முருகேசன்

ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளும் பி.ஜே.பி தலைமையிலான அரசாக இருந்தாலும் சரி... சாதி, மதங்களின் பெயரால் கொடூரமான முறையில் அரங்கேற்றப்படுகின்ற சாதிய படுகொலைகளை தடுப்பதற்கான சட்டங்களை கொண்டு வருவதற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை. அதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றிய அரசு விரும்பினால், அவசர சட்டங்களை கொண்டுவந்து நாடாளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெற்றுக்கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தாலும் தங்களின் பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்வார்கள். சிஏஏ திருத்தச்சட்டம், முத்தலாக் போன்ற பல சட்டங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை தரவேண்டும் என்று கேட்டபோது உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் சொன்ன பதில், "தமிழகத்தில் அப்படி எந்த ஆணவ கொலைகளும் நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதி அல்லது மத மறுப்புத் திருமணங்கள் நடக்கும் போது தற்கொலைகள் தான் நிகழ்கின்றன அல்லது சந்தேகத்திற்கு இடமான வழக்கு பதிவு செய்யும் வகையிலான மரணங்கள் மட்டுமே தான் நிகழ்கின்றன" என்று அன்றைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை தந்ததை அறிவோம். தமிழகத்தில் நடக்கும் கொடூரமான ஆணவ படுகொலைகளை மூடி மறைப்பதற்கு ஏன் இவர்கள் முயற்சிக்கிறார்கள்? ஏன் அதை தடுப்பதற்கு சட்டங்களை கொண்டு வரவில்லை? யார் தடுக்கிறார்கள்? ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்? என்பது தான் கேள்வி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், சாதியவாதிகளின் வாக்கு வங்கிக்கு அச்சப்பட்டு, தங்களுக்கு எதிராக போய்விடுமோ என்ற பயத்திற்கு உள்ளாகி இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்களை கொண்டுவர தயங்குகிறார்கள்.

Also Read: கண்ணகி முருகேசன் கொலை வழக்கு: `உங்க கதையை முடிச்சிடறோம்!’ - முருகேசனின் பெற்றோர் மீது தாக்குதல்

இப்படி ஒரு சூழலில் தான் கண்ணகி - முருகேசன் ஆணவ படுகொலை தொடர்பாக தீர்ப்பு வெளியாகியது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் வேண்டும் என்று அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

கூட்ட அரங்கு

'தமிழக அரசே அதை நிறைவேற்று' என்று உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. 'மோடி அரசே அதற்கான சட்டத்தை கொண்டுவா..! சாதி, மத மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கும் அந்த வழக்குகளை நடத்தும் காவல்துறை, நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்கு' என்ற கோரிக்கைகள் அடங்கிய விவாதங்கள் தான் தற்போது தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இங்கு ஒரு சிலரின் தனிப்பட்ட அணுகுமுறையின் காரணமாக கண்ணகி - முருகேசன் வழக்கின் தீர்ப்பை பற்றி யாரும் பேசவே முடியாத ஒரு நிலை, ஒரு தேக்கம், ஒரு தயக்கம் ஏற்பட்டுவிட்டது.

மக்கள் கண்காணிப்பகம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து, அந்த தேக்கத்தை உடைத்து பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில் தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆணவ கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். 'சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அவர்களை படுகொலை செய்ய வேண்டும். தர்மபுரியை எரித்தது போல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதி மீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் என பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது'. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுக்களை பிரித்துக் கொள்ள முடியும்.

தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பை விதைத்து, பிற சாதி மக்களை சாதி அடிப்படையிலேயே ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற சுயநலம். அது தான் சோசியல் இன்ஜினியரிங்.

Also Read: உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்! - முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.க-வினரா?

தர்மபுரி தொகுதியில் தன் பிள்ளையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றால், தன் சமூக வாக்குகளுடன் சேர்த்து பிற சமூகத்தின் ஓட்டுகளும் வேண்டும் என்பதற்காக இப்படியான ஒரு அரசியல் செய்து அன்று ஓட்டை வாங்கினார்கள், அதுதான் சோசியல் இன்ஜினியரிங். அடுத்த தேர்தலில் அது எடுபடவில்லை. 'திவ்யா-இளவரசன் திருமணத்தில் இந்த வன்முறை நடக்கவில்லை, நம்மால் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்' என்று மக்கள் புரிந்து கொண்டார்கள்.

கூட்ட அரங்கம்

நான் அரசியலுக்கு வந்த காலம் முதல் பார்க்கிறேன், பாஜக தமிழகத்தில் காலூன்ற படாத பாடுபடுகிறது. சமூகநீதி சிந்தனையாளர்கள் இங்கு அதிகம் உள்ளனர். அதனால்தான் இங்கு பாஜக-வின் திட்டம் எடுபடவில்லை. அதிமுகவை வைத்து 4 இடங்களை பிடித்துவிட்டார்கள். அதிமுக-வையே அழிக்க பார்த்தார்கள். பாம்பின் வாயில் தவளையை போல இன்றும் பாஜக பிடியிலே அதிமுக சிக்கியிருக்கிறது. பாமக-விலிருந்து பிரிந்து பலர் பாஜக நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளை 'சுவாகா' செய்வதுதான் பாஜகவின் தந்திரம். விசிக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக இங்கு கூடுதலாக கொட்டமடித்து இருக்கும். சாதிக் கலப்பு ஏற்படக்கூடாது என்பது சனாதனத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று. அதன்படி நடப்பதுதான் ஆணவக்கொலை. இந்த 21ம் நூற்றாண்டிலும் அது காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

கண்ணகி- முருகேசன் ஆணவ படுகொலை நடந்த சமயத்தில், அதை தற்கொலை என்று பூசி முழுக பார்த்தார்கள். ஆனால், இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி சென்னையிலேயே பத்திரிகையாளர்கள் முன்பு போட்டுடைத்த இயக்கம் தான் விசிக. அவர்களை சமரசமாக விடாமல் தடுத்த இயக்கம் விசிக. அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்... அதனை தற்கொலை வழக்காக மாற்றி, ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்கள். 2000-மாவது ஆண்டுகளில் அன்புமணி என்ற நபர் எங்கிருந்தார் என்றே தெரியாது. அவரிடம் நான் பேசியதாகவும், "அவர் பெரிய தொகையை தருவார் அதை வாங்கிக்கோங்க" என்று நான் சொன்னதாகவும் கூறி எதிராக திருப்பப்பார்த்தார்கள்.

Also Read: ``இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம்"- பாஜக தலைவர் அண்ணாமலை!

போலிகளை அம்பலப்படுத்தும் இயக்கமாகவும், சமூகநீதி பாதுகாப்பு அரணாகவும் விசிக இருக்கிறது. அதனால் விசிக குறிவைக்கப்பட்டிருக்கிறது. பல வழிகளில் பலர் ஊடுருவல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற இணைந்து குரல் கொடுப்போம். கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக முதல்வரிடம் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavans-speech-at-villupuram-regarding-caste-killings

Tamil News Today: 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு! - தொடர் கனமழையால் 6 மாவட்டங்களில் விடுமுறை!

தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம்

தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக, வேலூர், நெல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-11-2021-just-in-live-updates

டாஸ்மாக்: ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டது எப்படி?! - அதிர்ச்சிப் பின்னணி

தமிழகத்தில் மட்டும் 5,300-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழகத்தின் வார நாள்களில் மட்டும் 65-70 கோடி ரூபாய் மதிப்புக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே வார இறுதி நாள்களில் 90-100 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிக்கிறது. மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் மட்டும் மது விற்பனை 120-150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய மூன்று தினங்களில் மட்டும் 626 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்தது.

டாஸ்மாக் கடை

கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் திமுக தலைமையிலான ஆட்சியிலும் சரி, கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு வருமானம்தான் காரணம் என்று பேச்சு. உண்மையில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பதுதான் பொதுப் பார்வையாகவும் இருக்கிறது.

டாஸ்மாக் மது விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது, செலவு எவ்வளவு, லாபம், நஷ்டம் எவ்வளவு... போன்ற விவரங்களை 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியாகத் தெரிந்துகொள்ள விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல்களைச் சேகரித்தோம். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அலுவலகத்திலிருந்து, நமக்குக் கிடைத்த தகவல் நம் எண்ணத்துக்குத் தலைகீழான ஒன்றாகத்தான் இருந்தது. கிடைக்கப்பெற்ற ஆர்.டி.ஐ தகவலைக் கீழே உள்ள படத்தில் காணலாம்...

டாஸ்மாக் மது விற்பனை RTI தகவல்

நமக்கு வந்திருந்த விவரங்களில் 2009-10 முதல் 2018-19 நிதியாண்டுவரை, 10 வருடங்களில் கிடைத்த வருமானம் 2,65,225.71 கோடி ரூபாய், செலவு 2,65,336.54 ‬ கோடி ரூபாய் என்ற தகவல் கிடைத்திருந்தது. இதில், 2012-13 நிதியாண்டில் மட்டும் 103.64 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018-19 நிதியாண்டில் 37,026.48 கோடி ரூபாய் வருமானமும், 37,010.41 கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டிருந்ததாகவும். அந்த ஆண்டில் 16.07 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பழநியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் நஷ்ட விவரங்களைக் கேட்டிருந்தார். அந்தத் தகவலில் 2019-20 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையில் 71.93 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தமாக 312.43 கோடி ரூபாய் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிவஞானம் RTI தகவல்

ஆண்டுக்கு 35,000 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கும். இந்த நஷ்டத்துக்குக் காரணம், மது உற்பத்தி ஆலைகளிடம் கொள்முதல் செய்வது, டாஸ்மாக் பணியாளர்களின் சம்பளம், கடை வாடகை, பராமரிப்பு, போக்குவரத்து, விநியோகம் போன்ற காரணங்கள் போக, முக்கியமாக மது விற்பனையில் அரசுக்கு ஒரு பெரும் தொகை வரியாகவும் செலுத்தப்படுகிறதாம். இது போன்ற காரணங்களால்தான், டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறப்படுகிறது.

Also Read: டாஸ்மாக்: ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5, ரூ.10 விலை - என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

வரியாகச் செலுத்தும் பெரும் தொகை அரசுக்குத்தான் வந்தடைகிறது என்பதால், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும், மது விற்பனையில் அரசு பல்லாயிரம் கோடிகளுக்கு அதிகமாக வருவாய் ஈட்டிவருகிறதாம்.

டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநிலத் தலைவர் நா.பெரியசாமியிடம் பேசினோம். `` மது விற்பனையில் வரும் லாபத்தில் இரண்டு சதவிகிதம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கும். விற்பனை வரி, கலால் வரி போன்ற வரிகளெல்லாம் சேர்த்து மீதமுள்ள 98 சதவிகித லாபமும் அரசுக்குத்தான் செல்கிறது. இந்த காரணத்தாதான், ஒரு சில ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

நா.பெரியசாமி

மேலும், ``மது விற்பனை தனியாரிடம் இருந்த நேரத்தில், தனியார் மது விற்பனையாளர்களுக்கு 34 சதவிகிதம் வரை லாபம் கிடைத்தது. அந்த லாபத்திலிருந்து அவர்கள் விற்பனை வரி, வருமான வரி போன்றவற்றைச் செலுத்துவார்கள். டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனை ஆரம்பித்தது முதல் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிடைக்கும் லாபத்தில் இரண்டு சதவிகித லாபம் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கிடைக்கிறது" என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tasmac-liquor-sell-in-rs31243-crore-loss-what-is-the-reason

`தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி உருவான வரலாறு' - சிறப்புப் பகிர்வு!

``தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்" என்ற கோரிக்கை தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகாவைப் போல, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி ஒன்றை அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். இந்த நேரத்தில், தமிழ்நாட்டுக் கொடி பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாகப் பரிணமித்து வந்த வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்!

மூவேந்தர்களின் கொடி

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடிகள் உருவான காலமும், அவை கடந்து வந்த வரலாற்றுப்பாதையும்:

* அகண்ட தமிழ்நாடானது மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று நாடுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அவற்றுள் சேரநாட்டின் கொடியாக வில் அம்பும், சோழநாட்டின் கொடியாகப் பாயும் புலியும், பாண்டிய நாட்டின் கொடியாக இரட்டை மீன்களும் தனித்தனியே தமிழர் கொடிகளாகப் பறந்தன. அதன்பின்னர், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், வெள்ளையர்கள் உள்ளிட்ட அந்நிய நாட்டு மன்னர்களின் ஆட்சிகளால், தமிழ் மன்னர்களான மூவேந்தர்களின் கொடிகள் பல நூற்றாண்டுகளாகத் தனது இடைக்கால வரலாற்றை இழந்தது. ஆனால், மீண்டும் 20-ம் நூற்றாண்டில் தனது வரலாற்றை எழுதத்தொடங்கியது.

* 1938-ம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்திமொழியைக் கட்டாயமாக்கினார். அதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிரமான இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். அந்தப் போராட்டத்தில், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களான வில், புலி, மீன் கொடிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட, ஒற்றைக்கொடியே `தமிழ்க்கொடி'யாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1938- மொழிப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

குறிப்பாக, 1939-ம் ஆண்டிலும் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில், 14 வயது சிறுவனாகக் கலந்துகொண்ட கருணாநிதி, இந்தத் தமிழ்க்கொடியைத்தான் கையில் ஏந்திச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.பா. ஆதித்தனார்

* 1942-ம் ஆண்டில் `தமிழ் ராச்சியக் கட்சி'யைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் `தமிழப்பேரரசு' என்ற நூலை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு இலச்சினையாக மூவேந்தர்களின் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் 1957-ம் ஆண்டு தனது கட்சியை `நாம் தமிழர்' இயக்கமாகப் பெயர்மாற்றி 1958-ல் `சுதந்தரத் தமிழ்நாடு' மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிலும் மூவேந்தர்கள் கொடி பயன்படுத்தப்பட்டதாக மூத்த அரசியல் ஆர்வலர்கள் பலராலும் கூறப்படுகிறது.

* 1946-ம் ஆண்டில் `தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி தொடங்கினார். தனது இயக்கத்தின் கொடியாக ஒன்றிணைந்த மூவேந்தர்களின் கொடியையே பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள் என்றிருந்த சென்னை மாநகராட்சிக் கொடியை மாற்றியமைத்து, மூவேந்தர்களின் 'வில், புலி, மீன்' சின்னங்கள் அடங்கிய கொடியை, சென்னை மாநகராட்சியின் புதிய கொடியாக ம.பொ.சி பறக்கவிட்டார்.

ம.பொ.சி. வடிவமைத்த சென்னை மாநகராட்சிக் கொடி

* 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில், கோவை விவசாயக் கல்லூரி மாணவர் ராமசாமி தலைமையில் அதிக அளவில் மாணவர்கள் அணிதிரண்டனர். பேரணியாகக் கோவை வ.உ.சி. மைதானத்துக்குச்சென்ற அவர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த, தமிழ்நாடு வரைபடம் அடங்கிய ஒரு கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' மைதானத்தில் ஏற்றினார்கள். பின்னர், `தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டு தங்களின் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

1970-களில் கருணாநிதி அறிமுகப்படுத்தியக் கொடி

* 1970-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, `மத்தியில் கூட்டாட்சி...மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி வேண்டும் எனப் பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து கோரிக்கை முன்வைத்தார். அப்போது, டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தான் வடிவமைத்து வைத்திருந்த தமிழ்நாட்டின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

Also Read: ``ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்

கொடியுடன் கருணாநிதி

அந்தக்கொடியின் வலது மேற்புறத்தில் இந்தியத்தேசியக் கொடியும், இடது கீழ்ப்பகுதியில் தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தது. பின்னர், இந்த கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

* 1980-களில் `சாதி ஒழிப்பே...தமிழ்நாடு விடுதலை' எனக்கூறி ஆயுத வழியில் போராடிய தமிழரசனின் `தமிழ்நாடு விடுதலைப் படை' அமைப்பு சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் ஐந்து நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாகப் பறக்கவிட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை கொடி

* 1990-களின் பிற்பகுதியில், தமிழ்நாடு விடுதலைப் படை பயன்படுத்திவந்த தமிழ்நாட்டுக் கொடியில், ஏறுதழுவுதல் இலச்சினையையும் சேர்த்து, தமிழ்நாட்டுக்கொடியாக வீரப்பனால் காட்டுக்குள் பறக்கவிடப்பட்டது.

கொடியுடன் வீரப்பன்

* 2010-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் `தமிழர் இறையாண்மை மாநாட்டை' நடத்தினார். அந்த மாநாட்டில் சிவப்பும், மஞ்சளும், நீலமும், நட்சத்திரமும் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொடியை, `தமிழ்நாட்டுக் கொடியாக' அறிவித்து, திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் கைகளால் வெளியிட்டார்.

தொல்.திருமாவளவனால் `தமிழர் இறையாண்மை மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்க்கொடி

* 2016-ம் ஆண்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உருவாக்கிய `நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவு' ஏட்டில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் அடங்கியகொடி தமிழ்நாட்டின் கொடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நீலநிறம் கொண்ட அந்தக் கொடியில் `வெல்க தமிழ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. அதன்பின்னர், ஜல்லிக்கட்டுப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட போராட்டங்களில் இந்தக்கொடி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

* 2018-ம் ஆண்டு `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் சார்பில், சிவப்புநிறக்கொடியின் நடுவே மஞ்சள் நிறப் பின்புலத்தில் மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த கொடி `தமிழ்நாட்டுக் கொடியாக' வெளியிடப்பட்டது.

சீமானின் நாம் தமிழர் கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக்கொடி

* 2019-ம் ஆண்டு, தமிழ் உணர்வாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு, நவம்பர் 1-ம் தேதியை `தமிழ்நாடு' நாளாக அறிவித்தது. மேலும், அந்த நாளை அரசு விழாவாகவும் அறிவித்து அரசாணையும் வெளியிட்டது.

தமிழ்நாடு நாள் விழா அழைப்பிதழ்

* அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு' சார்பில் `வெள்ளைக்கொடியில் சிவப்பு தமிழ்நாடு வரைபடம்' அடங்கிய கொடி ஒன்று தமிழ்நாட்டுக்கொடியாக வடிவமைக்கப்பட்டது. அதை, பொழிலன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர், நவம்பர் 1-ம் நாள் அந்தக்கொடி ஏற்றப்பட்டு தமிழ்நாடு நாளும் கொண்டாடப்பட்டது. அதேபோல், நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகள் மூவேந்தர் கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாக அந்த நாளில் ஏற்றிக் கொண்டாடினர்.

தமிழ்நாடு நாள் விழா - நாம் தமிழர் கட்சி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அரசுகள் தங்களுக்கென தனித்தனியே கொடிகளை அடையாளப்படுத்தி, ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல, ``தமிழ்நாட்டுக்கும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியை அரசே வடிவமைத்து, வெளியிடவேண்டும்" என பெரியாரிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-the-discussion-on-tamilnadu-flag