Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

'இந்தாங்க எவிடென்ஸ்!' - கணவரோடு திருமணம் தாண்டிய உறவு; பெண் காவலரின் உடையுடன் வந்த மனைவி

தனது கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரை தகுந்த ஆதாரத்தோடு மாட்டிவிட நினைத்த பெண், அந்த பெண் காவலரின் காக்கி உடுப்பை எடுத்து வந்து, கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கௌசல்யா உடையோடு வனிதா

Also Read: கரூர்:`கந்துவட்டி கொடுமை தாங்க முடியலை' - செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்

கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்தி, இவரது மனைவி வனிதா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு, 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கார்த்தி, கரூர் செங்குந்தபுரம் பகுதியில் செல்போன் விற்பனை, ரீசார்ஜ் கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கரூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் கௌசல்யா என்பவருடன் கார்த்தி திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது.

Also Read: குழந்தை மீது கொடூரத் தாக்குதல்; திருமணம் தாண்டிய உறவே காரணம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

இதனை வனிதா பலமுறை கண்டித்தும், இருவருக்கும் உறவு தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமான வனிதா, 'எனது கணவர் நடத்தும் கடையில் கௌசல்யா, எனது கணவரோடு இருந்தபோது, கௌசல்யாவின் உடையை எடுத்து வந்துவிட்டேன். இந்தாங்க ஆதாரம். கௌசல்யா மீது நடவடிக்கை எடுங்க' என்று கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார். 'விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எஸ்.பி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, "நானும், என் கணவரும் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டோம். என்மீது அவ்வளவு உயிரா இருப்பார். இந்த நிலையில்தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்னோட கணவர் கடையில் ரீசார்ஜ் பண்ண வந்த கௌசல்யாவுக்கும், என் கணவருக்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அந்த விசயம் எனக்கும் தெரிந்தது. என் கணவரை கண்டித்தேன். ஆனால், கௌசல்யாதான் என் கணவரை மயக்கி வைத்திருக்கிறார்னு தெரியவந்தது.

அதனால், ஒருவருஷத்துக்கு முன்னாடியே கௌசல்யாகிட்ட, 'என் கணவரை என்கிட்ட கொடுத்திரு'னு சொன்னேன். ஆனால், அதுக்கு கௌசல்யா மறுத்துட்டாங்க. அதனால், எஸ்.பி அலுவலகம் வரை புகார் கொடுத்தேன். 'இனி, கார்த்திக்கோடு உள்ள தொடர்பை துண்டிச்சுக்கிறேன்'னு கௌசல்யா சொன்னதால், அவரை கண்டிச்சு விட்டாங்க. ஆனால், கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் இரண்டு பேருக்கும் இடையில் உறவு வளர்ந்தது. கௌசல்யாவுக்கும் திருமணமாகி, குழந்தை இருக்கு. இந்த நிலையில், என்னை எங்க அம்மா வீட்டுக்கு அடிச்சு துரத்திட்டாங்க.

Also Read: நிறுத்தப்பட்ட திருமணம்; முகநூலில் ஆபாச போட்டோ; விசிக முன்னாள் பிரமுகர் கைது!

என் கணவரும், கௌசல்யாவும் என் கணவரோட கடையில் இரவில் தங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால், கௌசல்யாவை ஆதாரத்தோட மாட்டிவிடுவதற்காக, என்னோட கணவர் கடைக்குப் போனேன். அப்போ, கடைக்குள் கௌசல்யாவின் காக்கி உடை இருந்தது. அதை எடுத்துகிட்டு வந்துட்டேன். உடனே, கௌசல்யா என் வீட்டுக்கு வந்து, 'என் உடையை ஒழுங்கா கொடுத்திரு'னு கேட்டாங்க. நான் மறுத்துட்டு, 'என் கணவரை விட்டிரு. நான் உன் உடையை தர்றேன்'னு சொன்னேன். இதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்தது.

பேட்டியளிக்கும் வனிதா

கோபத்துல கௌசல்யா, 'ஒரு போலீஸூகிட்டே உன்னோட வேலையை காட்டுறியா?'னு என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க. என் கணவரும், என்னோட அம்மா முன்னாடி என்னை அடித்தார். அதனால், அவங்க உடையை எடுத்துட்டுப் போய் அன்னைக்கே தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனா, அவங்க நடவடிக்கை எடுக்கலை. அதனால்தான், இன்னைக்கு கௌசல்யாவோட உடையோடு வந்து, மாவட்ட எஸ்.பிகிட்ட புகார் கொடுத்திருக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறதாக சொல்லியிருக்காங்க. கௌசல்யா மீது நடவடிக்கை எடுத்து, என் கணவரை மீட்டுத் தரலன்னா, இங்கே வந்து குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்குவோம்" என்றார் அழுதபடி.

தனது கணவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெண் காவலரின் உடையோடு வந்து பெண் ஒருவர் எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/karur-women-complaint-against-lady-police-in-relationship-with-his-husband

டேவிட் மலான் | உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன்... ஆனாலும் தன்னை நிரூபிக்க போராட்டம் ஏன்?!

இன்றைய தேதிக்கு டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயிலோ அல்லது மிஸ்டர் 360° ஜோஸ் பட்லரோ அல்ல. மாறாக இந்த சிறப்புக்கு உரியவர் T20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற தகுதியை மட்டுமே தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்ட டேவிட் மலான். இதற்கு முன்னால் 'யார் இந்த டேவிட் மலான்?' என்று கூகுளில் தான் தேடிக் கொண்டிருந்தோம். கிடைத்த தகவல்கள் ஒன்றும் அத்தனை சுவாரசியமானவை அல்ல.

டேவிட் மலான் பிறந்தது தென்னாப்பிரிக்காவில். 11 வருட கவுன்ட்டி கிரிக்கெட்டில் களைத்துப் போனவருக்கு 29-வது வயதில் வருகிறது சர்வதேச கிரிக்கெட் அழைப்பு. 15 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு மலான் மீண்டும் அணிக்கு வெளியே. பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதம் மட்டும் தான் ஒரே ஆறுதல். 29 வயதில் தொடங்கிய மலானின் டெஸ்ட் கரியர் 30 வயதிலேயே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிற நிலைமை.

டேவிட் மலான்

நிரந்தர இடமில்லாத நம்பர் 1 பேட்ஸ்மேன்!

அப்போது டி20 கிரிக்கெட் தான் மலானுக்கு கை கொடுத்தது. தாய் நாடான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அறிமுக டி20 போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது. 20 போட்டிகளுக்குள் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்கிற உச்சம். தடால் புடால் டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 45 ரன்கள் சராசரி. 140-க்கும் நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட். இப்படி ஓவர் நைட்டில் மலான் உச்சத்துக்கு சென்றாலும் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை.

மலான் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் அவர் இங்கிலாந்தின் நிரந்தர லெவனில் இடம்பெற்று விட முடியாது. உலகில் எங்காவது இது போன்ற ஒரு கொடுமை நடக்குமா? இங்கிலாந்து அணியில் நடக்கும். காரணம் கேப்டன் இயான் மார்கன் தலைமையிலான அணியின் செய் அல்லது செத்து மடி அணுகுமுறை. டேவிட் மலானின் ஆட்டம் எந்தப் புள்ளியில் இங்கிலாந்து பாணியில் இருந்து விலகுகிறது ? அதற்கு முன்பாக டி20 பேட்டிங்கின் அடிப்படைகளை பார்த்து விடலாம்.

டி20: பேட்ஸ்மேனுக்கு சொர்க்கமா?

T20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரிதான். ஆனால் கொஞ்சம் பிசகினாலும் மீளவே முடியாத நரகத்தில் அவர்களை தள்ளிவிடும்.ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல் பந்தில் இருந்தே பேட்ஸ்மேன் அடித்தாடியாக வேண்டும். கொஞ்சம் செட்டில் ஆன பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் பவுண்டரி அடித்தவுடன் சிங்கிள் எடுப்பது ஸ்மார்ட் கிரிக்கெட். ஆனால் டி20-ல் அடுத்தடுத்த பந்துகளையும் பவுண்டரிகளாக மாற்றினால் தான் கைதட்டல் கிடைக்கும்.

இங்கு பேட்ஸ்மேனின் விக்கெட்டுக்கு மரியாதை என்பதே கிடையாது. தனிப்பட்ட நபர்களின் ஆசாபாசங்களை விட அணியின் நலனுக்குத்தான் முன்னுரிமை. எந்நேரமும் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு தற்கொலை படைபோல. அணிக்காக இத்தனை தியாகங்கள் புரியும் அவர்களுக்கு ஏதேனும் தனிச் சலுகைகள் உண்டா? ஒன்றும் கிடையாது! தொடர்ந்து இரண்டு போட்டிகள் சொதப்பினால் அணியில் இடம் காலி. உண்மையில் மற்ற எந்த ஃபார்மட்களை விடவும் டீம் ஸ்பிரிட் அதிகமுள்ள ஃபார்மட் டி20 தான். அதனால்தான் பேட்ஸ்மேன் கொஞ்சம் சுயநலமாக ஆடினாலும் உடனே மாட்டிக் கொள்கிறான். சுயநலம் என்று சொன்னதும் உடனே மலான் நினைவுக்கு வருகிறார்.

டேவிட் மலான்

சதம் அடித்த மலான்; தண்டனை கொடுத்த மார்கன்!

நவம்பர் 8, 2019. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் நான்காவது போட்டி. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்கிறார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்ட்டோ ஆட்டமிழக்க களத்துக்கு வருகிறார் மலான். சான்ட்னர் ஓவரின் எஞ்சிய பந்துகளில் நான்கை ஏப்பம் விட்டவர் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்கிறார். ஐந்தாவது ஓவரின் முடிவில் மலான் எடுத்தது 10 பந்துகளில் 10 ரன்கள். 10 ஓவரின் முடிவில் 20 பந்துகளில் 24 ரன்கள். அதுவரை பதுங்கிக் கொண்டிருந்தவர் அலாரம் வைத்து எழுந்தது போல சரியாக 11-வது ஓவரில் பாயத் தொடங்குகிறார்.

சான்ட்னர் பந்தில் லாங் ஆனுக்கு மேல் சிக்ஸர்; சவுதி பந்தில் கவர் திசையில் புல்லட் வேகத்தில் பவுண்டரி. 15 ஓவர் முடிவில் 35 பந்துகளில் 59 ரன்கள். மறுபுறம் மார்கன் மாத்து மாத்தென்று மாத்திக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் 18-வது ஓவரின் கடைசி பந்தில் சதத்தை எட்டுகிறார் மலான். அதுவும் ட்ரென்ட் போல்ட் பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு. நடு நடுவில் ரிவர்ஸ் ஸ்வீப், ramp ஷாட் போன்ற வஸ்துக்களையும் மலான் ஆடிக் காட்டத் தவறவில்லை. ஆரம்பத்தில் அமைதி. இறுதியில் ஆக்ரோஷம். இதுதான் டேவிட் மலான் ஸ்டைல். ஆனால் சுவாரஸ்யமே இனிமேல் தான். சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய மலானுக்கு மார்கன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மூன்று போட்டிகளுக்கு அணியில் இடமறுப்பு. காரணம் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட்டுக்கு பயந்து சிங்கிள் ஓடாமல் விட்டதற்கு. மார்கனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை... சுயநலம்.

டேவிட் மலான்: நானே ஹீரோ… நானே வில்லன்!

டேவிட் மலானை ஒருவிதத்தில் கிறிஸ் கெயிலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். சர்க்கரைப் பொங்கலும் வடைகறியும் என்று நினைக்காதீர்கள். காரணம் இருக்கிறது. பொதுவாக கெயில் 30 அல்லது 35 பந்துகள் எடுத்து கொஞ்சம் செட்டில் ஆன பின்பு சரவெடியை ஆரம்பிப்பார். அதுபோல மலானும் 12-வது ஓவர் வரை வெறுமனே தடவிக் கொண்டிருப்பார். அதற்குப் பின்னர் மெதுவாக வேகமெடுத்து 150 ஸ்ட்ரைக் ரேட்டில் இன்னிங்சை முடித்துவிடுவார். ரிஸ்க் குறைவு; ரிவார்ட் அதிகம். சரி இதிலென்ன இங்கிலாந்து நிர்வாகத்துக்கும் கேப்டன் மார்கனுக்கும் பிரச்னை? நாணயத்திற்கு இரு பக்கம் போல மலான் ஸ்டைல் ஆட்டத்துக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது அணிக்கு மிகவும் ஆபத்தானது.

20 பந்துகளில் அவர் 20 ரன்கள் எடுத்து பிறகு அடுத்த 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் ஒருவேளை 20 ரன்களுடன் அவர் ஆட்டமிழந்து விட்டால் அணியின் நிலைமை என்னாவது? அணியின் மொத்த ரிசோர்ஸ் ஆன 120 பந்துகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் வீண்.

டேவிட் மலான்

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. பவர் ப்ளேவில் பதம் பார்க்க ராய் பட்லர் ஜோடி. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை வாரிச் சுருட்ட பேர்ஸ்டோ. இறுதிக் கட்டத்தில் பேயாட்டம் ஆட மார்கன். தற்போது புதுவரவாக அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் வேறு. இவர்களைத் தவிர ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற ஆல் ரவுண்டர்களுக்கும் பஞ்சமில்லை. 11-வது பேட்ஸ்மேன் ஆதில் ரஷீத் வரை முதல்தர கிரிக்கெட்டில் 5 சதங்கள் குவித்தவர். 120 பந்துகளுக்கு எத்தனை பேர் போட்டி என்று பாருங்கள். தலை சுற்றிப் போய்விடும் போல. இங்கு மலானுக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்த டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதும் மலானுக்கு ஒரு பாதகமான அம்சம். தென்னாப்பிரிக்காவில் பிறந்த மலானுக்கு சுழற்பந்து வீச்சு என்றால் எட்டிக்காய்.

லீக் போட்டிகளில் சுமார்; இங்கிலாந்து அணியில் சூப்பர்!

சரி மலானுக்கு சாதகமான அம்சம் என எதுவுமே கிடையாதா? நிச்சயம் இருக்கிறது. அது அவருடைய அனுபவம். PSL, BBL, BPL, T20 Blast, MSL போன்ற உலகின் முக்கிய டி20 தொடர்களில் விளையாடிய அனுபவமுள்ளவர் மலான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடவுள்ளார். அழுத்தம் மிகுந்த ஃபார்மட்டான டி20-ல் பதற்றமில்லாமல் ஆடுவதற்கு இந்த அனுபவம் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவசியம். தற்போதைய இங்கிலாந்து டி20 பேட்டிங் வரிசையில் பட்லருக்கு அடுத்து false shot percentage குறைவாக உள்ள பேட்ஸ்மேன் மலான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று இங்கிலாந்தின் அசகாய சூரர்கள் அடங்கிய பேட்டிங் வரிசையே இங்கிலாந்துக்கு சில நேரங்களில் ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

5 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழ்நிலையில் ஒருபக்கம் நங்கூரமிட்டு நிற்க ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் வேண்டும். அந்த இடத்துக்கு மலான் உடன் போட்டியிட ஜோ ரூட் மாதிரியான ஒரு சில வீரர்களே இங்கிலாந்தில் உள்ளனர். Big occasion player என்ற இன்னொரு அம்சமும் மலானுக்கு சாதகமாக உள்ளது. சாதாரண டி20 லீக் போட்டிகளில் அவருடைய சராசரி 30, ஸ்ட்ரைக் ரேட் 130. அதுவே இங்கிலாந்துக்கு ஆடும் போது அவருடைய சராசரி 43, ஸ்ட்ரைக் ரேட் 140. ஒருவேளை அனுபவம், Big occasion player போன்ற அம்சங்களை இங்கிலாந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் மலான் இடம்பெற வாய்ப்புள்ளது.

டேவிட் மலான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரீ என்ட்ரி ; தாக்குப் பிடிப்பாரா?

டி20 கிரிக்கெட்டில் மலானின் இடம் குறித்த விவாதங்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க டெஸ்ட் அணியில் கதவு அவருக்கு மீண்டும் திறந்துள்ளது. இதை அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். 29 வயதில் கிடைத்து 30 வயதில் கிட்டத்தட்ட முடிந்து போன ஒரு வாய்ப்பு மீண்டும் 33வது வயதில் தேடி வந்தால் அது அதிர்ஷ்டம் தானே? கிடைத்த வாய்ப்பை அவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். லீட்ஸ் டெஸ்டில் ஜோ ரூட்டின் மாஸ்டர் கிளாஸ் சதத்தின் நடுவே அவருடைய அழகான இன்னிங்ஸ் போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு மூன்றாம் வரிசையில் ஒரு நல்ல இன்னிங்ஸை பார்க்க முடிந்தது. என்னவொரு சரளமான பேட்டிங். மலான் ஒரு டச் பிளேயர். கால் நகர்த்தல் எல்லாம் அவ்வளவாக இருக்காது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் அதை பெளண்டரியாக மாற்றிவிடுவார். தென்னாபிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் பிட்ச்சில் கொஞ்சம் வேகத்துடன் பவுன்ஸ் கிடைக்குமா என எதிர்பார்ப்பார். ஆசிய வீரர்களை Flat track பேட்ஸ்மேன் என சொல்வோமே அதுபோல மலான் ஒரு Bouncy track பேட்ஸ்மேன். 2017-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் மலான் கிட்டத்தட்ட 400 ரன்களை குவிக்க காரணமும் இதுதான். ஆனால் அதுவே இங்கிலாந்தின் பசுமையான ஆடுகளங்களில் அவருக்கு வில்லனாக வந்து நிற்கிறது.

Full, short லென்த்களில் வீசப்படும் பந்துகள் மலானுக்கு ஒரு பிரச்னையே அல்ல. ஆனால் corridor of uncertainty என சொல்லப்படும் good லென்த் பந்துகளில் அவருக்கு பலவீனம் உண்டு. 33 வயதான நிலையில் அவருடைய கரியர் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் தங்களுடைய 30-களில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து சாதித்த மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட நிறைய ஜாம்பவான்கள் மலானுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். சிறுவயதில் தந்தை சொன்ன ஒரு அறிவுரையை மலான் இன்றைக்கும் நினைவில் வைத்திருக்கிறார். "தகுதி குறைவு காரணமாக நீ கிரிக்கெட்டில் தோற்றுப் போனால் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் போதிய முயற்சி எடுக்காமல் தோற்றுப் போனாய் என்று இருக்கவே கூடாது."



source https://sports.vikatan.com/cricket/worlds-number-one-t20-batsman-dawid-malan-career-highlights

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்! - முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பன்னீர்செல்வம்

கடந்த சில நாள்களாவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பெருங்குடி தனியார் மருத்துவமனைக்குச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஓ.பி.எஸுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலினும் மருத்துவமனை வந்து ஓ.பி.எஸுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலெட்சுமியின் உடல், ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு இன்று மதியம் 2 மணிக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/death/ops-wife-died-because-of-heart-attack-this-morning

Innovation & Design Thinking for Mobility Engineers



source https://www.vikatan.com/events/announcements/online-introductory-workshop-2

''திமுக-வோடு ஓ.பி.எஸ்-ஸுக்கு 'டீலா, நோ டீலா'?'' - கேள்வி எழுப்புகிறார் கே.சி.பழனிசாமி

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம், உட்கட்சித் தகராறுகள் என தொடர்ச்சியாக அதிமுக-வுக்கு இது சோதனை காலம்! இதற்கிடையே, அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களும் கட்சியின் ரகசியங்களை எல்லாம் பொதுவெளியில் கொட்டி, குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொடநாடு விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்களைக் கூறிவரும் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பேசினேன்....

''கொடநாடு கொலை - கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் சசிகலா - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மூவரும் இருப்பதாக எப்படிச் சொல்கிறீர்கள்?''

''எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது 2017 பிப்ரவரி மாதம். கொடநாடு சம்பவம் நடைபெற்றது 2017 ஏப்ரல் மாதம். ஆக, அந்த காலகட்டத்தில் சசிகலாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்திருக்கிறார். எனவே, சசிகலாவுக்குத் தெரியாமலோ அல்லது அவர் ஒப்புதல் இல்லாமலோ கொடநாடு சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை!

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு வழக்கில், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை முறையாக விசாரணை நடத்தி செய்யப்படவில்லை. ஏனெனில், கொடநாடு எஸ்டேட்டில் மானேஜராக இருந்துவரும் நடராஜன், உரிமையாளர்களில் ஒருவரான சசிகலா ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்திலேயே ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவில் கொலை - கொள்ளைச் சம்பவம் நடக்கிறது என்றால், அதுபற்றி நூற்றுக்கு நூற்றி இருபத்தைந்து சதவிகிதம் முழுமையான அளவில் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இந்த சம்பவத்தில் வெறும் 40% விசாரணை மட்டுமே நடத்தி முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆக, யாரையோ காப்பாற்றுவதற்காக காவல்துறை விசாரணை முடக்கப்பட்டிருக்கிறது என்ற ஆதங்கம் அதிமுக-வின் ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் எழுந்துள்ளது. அந்தத் தொண்டர்களில் ஒருவனாகத்தான் நான் இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என குரல் எழுப்பி வருகிறேன். மேலும் ஜெ. மர்ம மரணத்தில் இருக்கும் உண்மையையும் தமிழக அரசு விரைவில் வெளியே கொண்டுவரவேண்டும்.''

''சசிகலாவின் சொந்த எஸ்டேட்டில், சசிகலாவே ஏன் கொள்ளையடிக்க திட்டமிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறதே?''

''நல்ல கேள்வி.... கொடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் சசிகலாவும் ஒருவர். ஆனால், 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சசிகலா, தனக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் நடைபெற்ற கொலை - கொள்ளை சம்பவத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரவேண்டும் என்று ஏன் ஒரு பேட்டிகூட கொடுக்கவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா?

கொடநாடு எஸ்டேட் பங்களா

இந்த சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்பவர்கள், 'கொடநாடு எஸ்டேட்டில்தான் பல கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. 2016-ல் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்ததும் அந்தப் பணத்தையெல்லாம் வெளிக்கொண்டுவர வேண்டியத் தேவை ஏற்பட்டது' என்கிறார்கள். மேலும், 'சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஏற்கெனவே ஜெயலலிதா நடவடிக்கையின் பலனாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களும் அந்த எஸ்டேட்டில்தான் இருந்தன. அதை மீட்பதற்காக சசிகலாவின் உறவுகளே இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தினார்கள்' என்றும் இன்னொரு தரப்பில் சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில், சசிகலாவோடு முரண்டு பிடித்து நின்ற ஓ.பன்னீர்செல்வத்தை வழிக்குக் கொண்டுவருவதற்காக சசிகலா - எடப்பாடி தரப்பே இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியிருந்திருக்கலாம். அதனால்தான் ஆவணங்களைக் காட்டி மிரட்டியே ஓ.பி.எஸ்-ஸையும் வழிக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஆக, சசிகலா - எடப்பாடி - ஓ.பி.எஸ் என மூவருக்குள்ளுமே இந்த விவகாரத்தில் டீலிங் இருக்கிறது.

சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர், எடப்பாடி மற்றும் தங்கமணி, வேலுமணி போன்ற அவரது டீம் மற்றும் ஓ.பி.எஸ்-ஸைச் சார்ந்தவர்கள் என இந்த மூன்று அணியினருமே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எல்லோருமே ஒன்றுசேர்ந்துதான் இந்த சம்பவத்தை மூடி மறைக்கிறார்கள்!''

''கடந்த ஆண்டு நீங்கள் சிறையில் இருந்தபோது, கொடநாடு வழக்குக் குற்றவாளியான சயான் உங்களிடம் என்ன ரகசியம் சொன்னார்?''

''கொடநாடு விவகாரத்தில், நான் தவறு செய்தது உண்மை. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இந்தத் தவறுகளை எல்லாம் நான் செய்தேன். எனவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கின்ற வரையிலும் என்னை சிறையிலிருந்து வெளியே வரவிடமாட்டார் என்றார்.''

சயான்

''முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஏற்கெனவே கூறியிருந்தீர்கள். ஆனால், ரெய்டு நடத்தப்பட்டு விட்டதே?''

''புதிதாக பொறுப்பேற்றுள்ள 'திமுக அரசு நேர்மையாக செயல்படும்' என அறிவித்துத்தான் வேலுமணி மீது ரெய்டு நடத்தியதாக சொல்கிறார்கள். அப்படியென்றால், கடந்த ஆட்சியின்போது ஊழல் செய்ததாக சொல்லப்படும் ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் தி.மு.க அரசிலும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுவது ஏன்?

உதாரணமாக, வேலுமணியின் பொருளாதார வலதுகரமான ஒப்பந்ததாரர் வடவள்ளி சந்திரசேகருக்கு, அண்மையில்கூட ஒப்பந்தப் பணிகளுக்காக 150 கோடி ரூபாய் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறதே... அதற்கு என்ன காரணம்? ஆக, வேலுமணி மீதான் ரெய்டு என்பதே கண்துடைப்பானதுதான்! ரெய்டு வருவதற்கு முன்பே, வேலுமணிக்கு தகவல் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆக, தமிழக அரசு இந்தவிஷயத்தை சரிவர கையாளவில்லையா? அல்லது வேலுமணியோடு கூட்டா?''

Also Read: `மன உளைச்சலுடன்தான் சென்றார்; இப்போது ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளார்!'- வீராங்கனை சமீஹா பர்வினின் தாய்

''தி.மு.க அரசு திட்டமிட்டுப் பழிவாங்குகிறது என அ.தி.மு.க தலைவர்கள் கொதிக்கின்றனர். ஆனால், நீங்கள் தி.மு.க மீதே சந்தேகம் எழுப்புகிறீர்களே...?''

''அடுத்தடுத்து அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்றால், கடந்த ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏன் இன்னும் ரெய்டு நடக்கவில்லை? அப்படியென்றால், தமிழக அரசுக்கு விவரம் தெரியவில்லையா? குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டியதில் முறைகேடு என்று செய்தி வருகிறது. உடனே, சட்டசபையில் கருணாநிதியையும் துரைமுருகனையும் வானளாவப் புகழ்ந்து பேசுகிறார் ஓ.பி.எஸ். அப்படியென்றால் இவர்களுக்கிடையே 'டீலா நோ டீலா' என்றுதானே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது!

ஓ.பி.எஸ்.

கஜானாவில் பணமே இல்லை என்று சொல்லித்தான் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால், இப்போது கருணாநிதி நினைவிடம் கட்டுவதற்கு 39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறார்கள். சட்டசபையில் இருக்கிற அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், 'நிதி நெருக்கடி இருக்கும் சூழலில், அடுத்த பட்ஜெட்டில்கூட இதை அறிவிக்கலாமே... அல்லது உங்கள் கட்சி சார்பிலேயேகூட நினைவிடம் கட்டலாம்தானே' என்ற அளவில்கூட விமர்சிக்காமல் வெறுமனே பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் புளியந்தோப்பு கட்டட விவகாரம்தானே இருக்கமுடியும்!''

Also Read: மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை… பாராலிம்பிக்ஸில் தொடரும் பதக்க வேட்டை!

''ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அவை நாகரிகத்தோடு செயல்பட்டு வருவதைக்கூட குற்றச்சாட்டாக மாற்றுகிறீர்களே?''

''அவை நாகரிகம் என்றால், குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகைநாடி மிக்கவும் கொண்டிருக்கவேண்டும். உதாரணமாக துரைமுருகனைப் பாராட்டுவது என்றால்கூட, துரைமுருகன் சட்டசபை உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் 50 வருடங்கள் ஆகிறது. சட்டசபை உறுப்பினராக 40 ஆண்டுகள் மட்டுமேதான் ஆகியிருக்கிறது. அடுத்து எம்.ஜி.ஆரின் உதவித் தொகையால் படித்து முன்னேறியவர் துரைமுருகன். ஆக, அவரது கல்விக்கும் அறிவுக்கும் காரணமானவர் எம்.ஜி.ஆர்.

கருணாநிதி - துரைமுருகன்

ஆனாலும் கருணாநிதியின் அரசியலைப் பின்பற்றித்தான் துரைமுருகன் வந்திருக்கிறார். கடந்தகாலத்தில் சட்டசபையிலேயே எங்கள் கட்சித் தலைவரை அநாகரிகமான முறையில் நடத்தியவர் துரைமுருகன். இந்தக் குறைகள் எல்லாம் இருந்தாலும்கூட தொடர்ந்து திராவிடக் கட்சியிலேயே பயணித்துவருபவர் என்பதால், நாங்களும் உங்களைப் பாராட்டுகிறோம் என்றுதான் ஓ.பி.எஸ் சொல்லியிருக்க வேண்டும். இந்த உண்மையை எல்லாம் சொல்லாமல் இருந்ததுதான் தவறு!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/kc-palanisamy-raises-the-question-against-eps-ops-and-the-dmk-government

'நாய் சேகர்' டைட்டில் வடிவேலுவுக்கு கிடைக்குமா... சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு மாறுமா?

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்காமல் போனதற்கு நடிகர் வடிவேலு மீது ரெட் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தில் நடித்து முடிக்காமல் வேறெந்த படத்திலும் நடிக்கக் கூடாது, அப்படி நடித்தால் குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வழங்கிவிட்டு பிறகு நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனால், வடிவேலுவும் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

இதற்கிடையே 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பாளர் ஷங்கருக்கு லைகா நிறுவனம் 5 கோடி கொடுத்து வடிவேலுவைத் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது. அதனால், அந்தப் பிரச்னை நீங்கி வடிவேலு மீது போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. உடனே, வடிவேலுவை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம், ''அடுத்தப் படம் லைகா நிறுவனத்துக்கு நடிக்கிறேன். சுராஜ் இயக்குகிறார், படத்திற்குப் பெயர் 'நாய் சேகர்' '' என்று கூறியிருந்தார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வடிவேலு

இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் 'நாய் சேகர்' படத்தின் டைட்டிலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆம்! அந்தப் படத்தின் டைட்டில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜாவிடம் இருந்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்துக்கு இந்தப் பெயர்தான் வைத்திருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக 'குக்கு வித் கோமாளி' பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநர் கிஷோர் இந்தக் கதை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அணுகும்போதே இந்தத் தலைப்போடுதான் அணுகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் நாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதால் அவர் மீதிருந்த நட்பில் அந்தத் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டார் ஞானவேல் ராஜா. அவர்களும் இந்தத் தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வடிவேலு நடித்து புகழ்பெற்ற பல கதாபாத்திரங்களில் 'நாய் சேகர்' முக்கியமானது. அந்த தார்மீக உரிமையில் இந்தத் தலைப்பு நமக்கு கிடைக்கும் என்று வடிவேலு நினைக்கிறார். அதே சமயம், பத்திரிகையாளரிடம் பேசும்போது ''முதலமைச்சர் ஸ்டாலின் வரவால் தமிழக மக்களுக்கு நல்ல காலம் விடிந்திருக்கிறது. அந்த மக்களுள் நானும் ஒருவன்' என்றிருக்கிறார்.

சதீஷ் - பவித்ரா லட்சுமி

அதனால், ஆளுங்கட்சி ஆதரவு வடிவேலுவுக்கு இருப்பதால் இந்தத் தலைப்பை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது லைகா நிறுவனம். ஏஜிஎஸ் நிறுவனமோ முறையாக பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதனால், நம்மிடம்தான் தலைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. ஆக, 'நாய் சேகர்' என்ற தலைப்பு வடிவேலுவுக்கா சதீஷுக்கா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். வடிவேலுவின் ரீ என்ட்ரி அதிரடியாகவே இருக்கிறது!



source https://cinema.vikatan.com/tamil-cinema/will-vadivelu-get-naai-sekar-title-for-his-relaunch-movie

சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13

எஸ்.பி.ஐ போன்ற வங்கிகள் தெரியும்; பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற என்.பி.எஃப்.சி (Non Banking Financial Companies) தெரியும்; அது என்ன எம்.என்.பி.சி (Miscellaneous Non Banking Companies)?

நம் ஊர்களில் சாதாரணமாக இயங்கும் சிட் ஃபண்டுகளைத்தான் எம்.என்.பி.சி என்கிறார்கள். வங்கிகள் சென்றடையாத சிறு ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை ஒன்றாகத் தருகின்றன இந்த சிட் ஃபண்டுகள்.

ஒரு சீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அத்தனை மாதங்களுக்கு சீட்டு ஆரம்பிக்கப்படும். உதாரணமாக, ரூ. 50,000 சீட்டு எனில், 50 உறுப்பினர்கள், 50 மாதங்கள் ரூ.1,000 கட்டி வரவேண்டும். பொதுவாக, ஒரு நடத்துநர் இருப்பார்.

Money (Representational Image)

Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12

முதல் மாதம் ஒருவர் சீட்டை ரூ. 45,000-க்கு ஏலம் எடுத்தால், மீதி இருக்கும் ரூ.5,000 குழு உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். 5% அளவு கமிஷனை சீட்டு எடுத்தவர், நடத்துநருக்குத் தரவேண்டும். இது ஏலச்சீட்டு எனப்படும். குலுக்கல் முறையிலும் இது நடத்தப்படுகிறது.

இவை, சிட் ஃபண்ட்ஸ் ஆக்ட் 1982-ன்கீழ் முறைப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலும் கர்நாடகாவிலும் மாநில அரசே சிட்ஃபண்ட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றன. மார்கதரிசி, ஶ்ரீராம் குரூப், முத்தூட், பாலுசேரி போன்ற தனியார் நிறுவனங்களும் இதில் பெயர்பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள மாடல் சிட் கார்ப்பரேஷன் ரூ.1 கோடி வரை உள்ள சீட்டுகளை கம்பெனிகளுக்காக நடத்துகிறது. அதிக மதிப்புள்ள சீட்டுகளில் பணம் எடுக்கும்போது, தங்கம், நிலம் என்று எதையாவது அடமானமாக வைக்கவேண்டி இருக்கும்.

அரசிடம் முறைப்படி பதிவு செய்திருக்கும் சிட்ஃபண்டுகள், முறைப்படி பதிவு செய்யாமல் நடத்தப்படும் சிட்ஃபண்டுகள் தவிர, உறவினர்/ நண்பர்கள் எனப் பத்து பேர் சேர்ந்தால், வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிப்பது போல உடனே ஒரு சீட்டுக் குழு ஆரம்பிப்பதும் நடக்கிறது.

நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. மாதம் ஒரு முறை மதிய நேரங்களில் சந்தித்து விளையாட்டுகள், உரையாடல்களுடன் கிட்டி பார்ட்டிகள் நடத்தும் சில பெண்கள் சீட்டுக் குழுவையும் நடத்துகின்றனர். விளையாட்டாகவே பணம் சேர உதவும் வழி இது. டிஜிட்டலைசேஷனின் வருகைக்குப்பின் ஆன்லைனிலும் சீட்டுக் குழு நடத்தப்படுகிறது.

மக்கள் உணராத ஒரு விஷயம் என்னவென்றால், சிட் ஃபண்டுகள் தரும் வட்டி வருமானம் 6.3% மாத்திரமே. ஏனெனில், நடத்துநருக்குத் தரவேண்டிய கமிஷன் 6 சதவிகிதத்தை விழுங்கிவிடுகிறது.

பணம்

Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11

சிட் ஃபண்ட், கடன் பெறுவதற்கு நல்ல வழி என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், இங்கு கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டால், சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது. கிரெடிட் ஹிஸ்டரி சரி இல்லாததால், வேறு இடங்களில் கடன் கிடைக்காமல் சீட்டு சேருபவர்களும் உண்டு. அவர்கள் ஒழுங்காகக் கடைசி வரை சீட்டுக் கட்டுவார்களா என்பது சந்தேகமே.

தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர் வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், சீட்டுப் பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? சிலர், சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகிவிட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீது பாயும்.

நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக்கடைகளே காட்டிவிட்டன. சாரதா ஸ்கேம் (வெஸ்ட் பெங்கால்), ரோஸ் வேலி ஸ்கேம் (ஒடிசா) போன்ற பிரமாண்டமான பொன்சி திட்டங்களால் ரெஜிஸ்டர்ட் சிட் ஃபண்டுகள் மீதுகூட சந்தேக நிழல் விழுகிறது.

அப்படியானால் சீட்டுக் குழுக்களால் என்ன நன்மை என்று கேட்கிறீர்களா?

மாதந்தோறும் ஒரு தொகையைச் சேமிக்கும் ஒழுக்கத்தை இது கற்றுத் தருகிறது. சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூபாய் ஐம்பது, நூறு என்று வசூலித்து அவர்கள் மொத்தமாக சேமிக்க உதவும் சீட்டுக் குழுக்களும் உள்ளன.

Money (Representational Image)

Also Read: வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

இதனால் அந்த வியாபாரிகள் தினம்தோறும் வங்கிகளுக்கு சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது. இங்குள்ள வருமானத்துக்கு டி.டி.எஸ் (Tax Deducted at Source) பிடிக்கப்படுவதில்லை என்பதும் சிலருக்கு இனிக்கிறது.

அவசரத்துக்கு உதவுவதில், ஓரளவு அதிக வருமானம் தருவதில், முறையாக நடத்தப்படும் சிட்ஃபண்டுகள் முன்னணியில் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆகவே சிட்ஃபண்டை விரும்புபவர்கள் பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் தரமான கம்பெனிகளில் மட்டும் சீட்டு சேர்வது உத்தமம்.

(மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்)



source https://www.vikatan.com/business/finance/are-chit-funds-really-good-for-investment

Covid Questions: மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்; பிள்ளைகளுக்கு எந்த மாஸ்க் ஏற்றது?

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது எந்த வகை மாஸ்க் அணியச் சொல்ல வேண்டும்? எது கோவிட் தொற்றிலிருந்து அவர்களை முழுமையாகப் பாதுகாக்கும்?

- சீதா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.

``குழந்தையின் முகத்துக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய, இரண்டு அல்லது அதற்கு மேலான அடுக்குகள் (லேயர்கள்) உள்ள துணியாலான, சுவாசிப்பதற்கு வசதியான அனைத்துவகை மாஸ்க்குகளுமே சிறந்த பாதுகாப்பைத் தரும். N95 மற்றும் KN95 வகை மாஸ்க்குகளும் பாதுகாப்பைத் தரும்.

எந்தவகை முகக்கவசமானாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்தினால்தான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணியலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வகுப்பறையிலும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைக்குத் தேர்ந்தெடுக்கும் முகக்கவசம் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Also Read: Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?

அது மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும்படி இருக்க வேண்டும். துவைத்து, மீண்டும் பயன்படுத்த ஏதுவாக, துணியால் ஆனதாக இருப்பது சிறந்தது. மூக்குத் தண்டுப் பகுதியில் கிளிப் இருப்பது சிறப்பு. இது முகக்கவசம் மூக்கிலிருந்து நழுவுவதைத் தடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளுக்கும் வசதியாக இருக்கும்.

பேசும்போது, இருமும்போது, தும்மும்போதெல்லாம் மாஸ்க்கை கீழே இறக்கிவிடக் கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்கும்போது அதைத் தொடுவது, இழுத்துவிடுவது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்றும் பழக்க வேண்டும்.

Kid (Representational Image)

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஓரளவு வளர்ந்த பிள்ளைகளுக்கு இவை புரியும். சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பே வீட்டிலிருக்கும் நேரத்தில் மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியத்தை, அதைச் சரியாக அணியும் முறையை, அணிந்திருக்கும்போது செய்யக் கூடாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அப்போதுதான் பள்ளிக்கூடம் உள்ளிட்ட வெளியிடங்களிலும் அவர்கள் அதைச் சரியாகப் பின்பற்றுவார்கள். நோய்த்தொற்றிலிருந்து விலகி இருப்பார்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/which-type-of-masks-provide-more-safety-to-school-going-children

குழந்தை மீது கொடூரத் தாக்குதல்; திருமணம் தாண்டிய உறவே காரணம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

இளம்பெண் ஒருவர், தன் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காண்போரின் மனதையும் பதைபதைக்கச் செய்தது. பெற்ற குழந்தையைத் தாக்கிய அந்தப் பெண் நேற்று (29.08.2021) இரவு தனிப்படை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று விசாரணை முடிவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Also Read: பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்த தாய் ; வழக்கு பதிவு செய்த காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (37). இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவழகன் வேலை செய்துவந்ததால், சென்னையில் வசித்துவந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதன்முறையாக கொரோனா பரவிய காலத்தில் செஞ்சி அருகேயுள்ள தனது கிராமத்துக்கே வந்து வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

வைரலான வீடியோ காட்சி

திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன், மனைவி இருவரிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், 23-ம் தேதி தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 2 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறார் ராணி. புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை தந்தை வடிவழகன் கவனிப்பில் இருக்கிறான். அப்போது, தம்பதிக்குள் நடந்த சண்டையின் முடிவில், ராணியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்திருக்கிறார் வடிவழகன். இருவரும் விவாகரத்து செய்துகொள்ளும் முயற்சியும் நடந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு, விவாகரத்து பெறுவதற்கான பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக ஆந்திரா, ராம்பள்ளியிலுள்ள ராணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் வடிவழகன். அப்போது தனக்குச் சொந்தமான பொருள்களைக் கேட்டு வாங்கும்போது, செல்போனையும் வாங்கிவந்திருக்கிறார் அவர். வீட்டுக்கு வந்து செல்போனைப் பார்த்தபோது, அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். குழந்தையைத் தாக்கிய தாயின் மீது 323, 325, 355, 308, ஜே.ஜே சட்டம் உட்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவி, மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவுறுத்தலின்பேரில் தனிபடைப்படை அமைக்கப்பட்டு, ராணியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளியிலுள்ள கோழிப்பண்ணையில் இருந்த ராணியை அங்குள்ள காவல்துறையினரின் உதவியோடு கைதுசெய்த விழுப்புரம் போலீஸார், நேற்று (29.08.2021) இரவு சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

Also Read: மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!

ராணியைக் கைது செய்து அழைத்து வரும் காவல்துறை

இது தொடர்பாக டி.எஸ்.பி இளங்கோவனிடம் பேசினோம். "ராணிக்கும், அவரின் கணவர் வடிவழகனுக்கும் ஏறத்தாழ 15 வயது வித்தியாசம். திருமணம் செய்துகொண்டு இவர்கள் சென்னையில் வசித்துவந்தபோது இந்தப் பெண்ணுக்கும், பிரேம்குமார் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பிரேம்குமார் ராணியிடம், அவருடைய கணவருடன் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறியிருக்கிறார். அப்படி வந்த பிறகு பிரேம்குமார், ராணியின் அம்மாவிடம் ராணியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் வீடியோ காலில் பேசும்போது ராணியின் பெரிய பையன் ரணியைப் போலவே அழகாக இருப்பதால், அவனைத் தனக்குப் பிடித்திருக்கிறது எனக் கூறியுள்ளார். அதேசமயம், சின்னப் பையன் அவனது அப்பாபோலவே இருக்கிறான். அதனால் சின்னப் பையனைத் தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறா. எனவே அவனை அடித்து தனக்கு வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் 'உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்' எனக் கூறியுள்ளார். அதனால், இந்தப் பெண்ணும் அந்தக் குழந்தையை அடித்து அதை வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார்.

40 நாள்களுக்கு முன்பாக, கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவழகனே அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஆந்திர மாநிலம், ராம்பள்ளியிலுள்ள தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். இருவரும் விவாகரத்து பெறும் நிலைக்குச் சென்றுள்ளனர். அதனால் மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கச் சென்றிருக்கிறார் வடிவழகன். அப்போது இவருடைய பொருள்களைக் கேட்டு வாங்கி வரும்போது, அந்தப் பெண் வைத்திருந்த போனையும் வாங்கி வந்திருக்கிறார். அப்போதுதான் இந்த வீடியோ பற்றித் தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தத் தகவல்கள் அனைத்தும், அந்தப் பெண்ணை விசாரித்தபோது தெரியவந்தது. அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என உறுதி செய்வதற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவர் மூலம் சோதித்தபோது `அவர் நலமாக இருக்கிறார்' என மருத்துவர் உறுதிசெய்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் அந்தப் பெண்ணை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் 15 நாள்கள் காவலில் வைத்திருக்கிறோம்.

குழந்தையை தாக்கிய தாய் ராணி

அந்தப் பெண் கூறிய தகவலின்படி, பிரேம்குமாரைப் பிடிப்பதற்கு ஒரு காவல் குழு சென்னை விரைந்துள்ளது. அவனது இரு போன் நம்பர்களிலும் முயன்றபோது 'ஸ்விட்ச் ஆஃப்' என வருகிறது. அந்த நபரைப் பிடித்து விசாரிக்கும்போது மேலும் தகவல்கள் தெரியவரும்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/the-mother-who-brutally-assaulted-her-child-has-been-arrested-and-jailed

`அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அன்று..!’ - சி.வி.சண்முகம் சவால்

கடந்த அதிமுக ஆட்சியின் போது, வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தில் இருந்த பழைய தாலுகா அலுவலகத்திற்கு வண்ணம் தீட்டி ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் புதியதாக துவங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த பல்கலைக்கழகம் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்படத்துவங்கியது. 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இப்பல்கலைக்கழகம் இணைக்கப்படும்' என கடந்த ஜூலை மாதம் பொன்முடி அறிவித்ததை தொடர்ந்து பிரச்னை பூதாகரமானது. அதிமுக-வினர் இந்த முயற்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கினர்.

Also Read: `பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகமா?’ - ஜெயலலிதா பல்கலை விவகாரத்தில் பொன்முடி காட்டம்

இந்நிலையில், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா குறித்த பேச்சு சட்டமன்றத்தில் எழுந்த போதே, அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டமன்றத்திற்கு முன்பாக ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஓ.பி.எஸ் உடன் எம்.எல்.ஏ-க்களும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் சி.வி.சண்முகம்

அதேபோல, பல்கலை., இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகமும், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டார். எதிர்ப்புகள் பலமாக இருந்த போதும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதா சட்டமன்றத்தில் நேற்று (31.08.2021) மதியம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாலையில் விடுவிக்கப்பட்ட சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த போது, "விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாட்கள் கோரிக்கையை அம்மாவிடம் கொண்டு சென்றிருந்தோம். அவரும் அதற்காக முயற்சி எடுத்துவந்தார். அவரின் மறைவைத் தொடர்ந்து முதல்வராக இருந்த எடப்பாடியார் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் பேரில், அவரும் இசைவு தந்தார். விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கான சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இங்கு தற்போது அமைச்சராக இருக்கும் பொன்முடி கூறும் வார்த்தை, "சட்டத்தை கொண்டுவந்தார்கள், துணைவேந்தரை நியமித்தார்கள். அதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை" என்று சொல்கிறார். இதையே திருப்பி திருப்பி சொல்கிறார். ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சி.வி.சண்முகம்

ஆனால் உண்மை என்ன? எங்கள் ஆட்சியில், பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 4 மாதங்கள் கழித்து, பிப்ரவரி 25-ம் தேதி தான் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அடுத்த 24 மணி நேரத்திலேயே துணைவேந்தரை நியமித்து, பல்கலைக்கழகத்தை விழுப்புரம் நகரத்திலேயே தொடங்கி வைத்துவிட்டோம்.

Also Read: `` ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

அன்று மாலை 5 மணிக்கே தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவிக்கிறது. அதனால் எங்களால் எந்த மேல் நடவடிக்கையும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஏதோ... பல்கலைக்கழகம் ஆரம்பித்து, ஒரு வருடமாக நிதி ஒதுக்காமல் இருப்பதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை இந்த மக்களுக்கு ஏற்படுத்த நினைக்கிறார் பொன்முடி. பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையம் பத்து தினங்கள் தாமதமாக தேர்தல் தேதியை அறிவித்திருந்தால், எங்கள் ஆட்சி அதுவரை நீடித்திருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது. இவர்களின் தயவும் எங்களுக்கு தேவையில்லை. அதே போல, இந்த பல்கலைக்கழகமும் செயல்பாட்டுக்கு வந்திருக்கும். பொன்முடி சவால் விடுகிறார்..! நானும் சவால்விடுகிறேன். விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது என உறுதியான போதே நிர்வாக கட்டடம் கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் கட்டுவதற்கும் செங்காடு கிராமத்தில் 70 ஏக்கர் அளவில் இடத்தை தேர்வு செய்திருந்தோம். அதற்கான தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தான் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடந்தால் என்ன... இது ஒரு தொடர் நடவடிக்கை. அதை எந்த அரசு செய்தால் என்ன..! மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவது ஆளுகின்ற அரசுக்கு உண்டு.

Also Read: உள்ளாட்சி ஆயுதம்; சூடாகும் ஜெ. பல்கலைக்கழக விவகாரம்; காய்நகர்த்தும் அதிமுக!

அப்படிப்பார்த்தால், கடந்த திமுக ஆட்சியில் கூட தான் திருவெண்ணெய்நல்லூரில் அறிவியல் கல்லூரி ஆரம்பித்தீர்கள். அதற்கு கூடத்தான் கட்டடம், நிதி, ஆசிரியர் என எதுவுமே இல்லாமல் இருந்தது. அம்மா ஆட்சியில் நிறைவேற்றி தரவில்லையா..! ஆனால், இன்று பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் தலைமையிலான அரசு, மக்கள் விரோத அரசாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசால் முடியவில்லை, அந்த எண்ணமில்லை, மனமும் இல்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி

இன்று அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடியிருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தை நம்பியிருந்த மாணவர்களின் படிப்பில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் 'டைட்டில் பார்க்' அமைக்கப்படும் என்று நிதி ஒதுக்கி நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், அதை பாண்டிச்சேரிக்கு அருகில் இன்று கொண்டுச்சென்று, வேலையில்லா பட்டதாரிகளின் வாழ்க்கையிலும் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்கள். இந்த விழுப்புரம் மாவட்டத்தின் மீதும், மக்களின் மீதும் அவர்களுக்கு என்ன கோபம், விரோதம் என்றே தெரியவில்லை. இந்த திமுக ஆட்சிக்கும், பொன்முடிக்கும் நான் சவால் விடுகிறேன். எத்தனை நாட்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருப்பீர்கள். மீண்டும் தேர்தல் வரும். அதில் அம்மா அரசு வெற்றி பெறும். அன்று அம்மாவின் பெயரிலேயே மீண்டும் இந்த பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக கொண்டுவரப்படும்" என்றார் ஆவேசமாக.

இந்த பல்கலைக்கழக விவகாரத்தை வைத்தே, 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாம் அ.தி.மு.க தரப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-will-come-to-power-again-the-university-in-the-name-of-jayalalithaa-will-be-reopened-cvshanmugam

AKS - 7 | சென்னைக்கு வந்ததும் காயத்ரியின் மாற்றங்களை வரவேற்கலாம்தான்… ஆனால்?

கல்லூரி வரை வீட்டிலிருந்தே சென்றுவரும் பெண்களுக்கு திடீரென 21 - 22 வயதுக்கு மேல் வேறு ஊரில் வேலைக்கு செல்லும் சுதந்திரம் வெளி உலகைக் காண மிகப்பெரிய வாசலை திறந்து வைக்கிறது. இதில் அவர்களுக்கு நல்ல விஷயங்களும் நடக்கலாம், ஆபத்துகளும் வரலாம். ஆனாலும் இந்த வெளியுலக அனுபவம் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பு அவசியம்.

தஞ்சையில் கிராமத்தில் வளர்ந்த, எல்லாவற்றுக்கும் தன் வீட்டினரை சார்ந்திருக்கும் காயத்ரியும், தேனி போன்ற நகரத்தில் அன்பான நடுத்தரக் குடும்பத்திலிருந்து பாண்டியனும், பெங்களூருவின் மெட்ரோ வாழ்க்கைமுறையில் அதீத சுதந்திரமும், தனிமையுமாக வாழ்ந்த சிவாவும் ஒரே நாளில் சென்னைக்கு வருகிறார்கள்.

கூட்டுக் குடும்பத்தில் எல்லோருடைய கருத்துக்கும் மதிப்பளித்து, எல்லோருக்கும் பணிந்து போகப் பழக்கப்பட்ட காயத்ரியும், தன்னுடைய நலன், வசதி என்று தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சிவாவும் டாக்ஸியில் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழலில் சந்திக்கிறார்கள்.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரிக்கு ஒரே டாக்சியில் முன் அறிமுகமில்லாத ஆண்களுடன் பயணம் செய்வது ஆரம்பத்தில் அசௌகரியமாக இருந்தாலும் புனிதா புக் செய்ததால் வேறு வழியின்றி காரில் ஏறிக்கொள்கிறாள். சிவா அருகிலிருக்கும் காயத்ரியின் மேல் கால்படுவது போல் கால் மேல் கால் போட்டு உட்காருகிறான். காயத்ரிக்கு அது தொந்தரவாக இருக்கிறது என்று அவனிடம் சொல்லும்போது அவன் கோபப்டுகிறான். தூங்கிக்கொண்டிருந்த அவன் நண்பன் பரத் தலையிட்டு சண்டையை சமாதானம் செய்கிறான்.

பொது இடங்களில் சத்தமாக பேசுபவர்கள், நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்பவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள் என்பது போல் திரைப்படங்களில் நகைச்சுவைக்காக காட்சி அமைக்கிறார்கள். நிஜத்தில் கிராமத்துக்காரர்கள் நகரத்துக்கு வரும்போது நகரத்தின் பிரமாண்டத்தையும், படித்த மக்களையும் பார்த்து பயந்து பணிவாக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால், பொது இடங்கள் மற்றும் பயணங்களில் உடன் பயணிப்பவர்கள் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய இஷ்டப்படி தங்கள் உரிமைக்கு மீறி இடத்தை எடுத்துக்கொள்வது, பொது இடங்களில் புகைப்பிடிப்பது போன்ற காரியங்களை மற்றவர்களை பற்றி எந்த அக்கறையும், நாகரீகமும் இன்றி செய்பவர்கள் பெரும்பாலும் நகரத்தை சேர்ந்த படித்தவர்களாக இருக்கிறார்கள்.

புகைப்பிடிக்க ஆசைப்படும் சிவா சிகரெட்டை எடுத்ததும் மருத்துவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனால், உடனடியாக அதை நிறுத்த முடியாததால் சிகரெட்டை மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். காயத்ரி கோபப்பட்டு அவனிடம் பேசிவிட்டு, ஓட்டுநரிடம் அவன் சிகரெட் பிடிக்கிறான் என்று புகார் சொல்கிறாள்.

புதிதாக பெரு நகரத்துக்கு வரும் இளம்பெண்கள் காயத்ரியை போல தைரியமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றாலும் அவசரப்பட்டு ஒன்றை தவறாக புரிந்துகொண்டு முடிவு எடுப்பவர்களாகவும் பல சமயங்களில் இருந்து விடுகிறார்கள்.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

ஆணும், பெண்ணும் ஒரே டாக்ஸியில் அல்லது பெண்கள் தனியாக டாக்ஸியில் செல்வதே இன்னும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கும் கிராமங்களும், சிறுநகரங்களும் இருக்கின்றன. அங்கிருந்து வரும் பெண்கள் அறிமுகமில்லாத ஆண்களுடன் செல்லும்போது அதீத எச்சரிக்கை உணர்வுக்கு உள்ளாகிறார்கள். அதனால் பல சமயங்களில் ஆண்கள் தவறாக நடக்கக்கூடும் என்று இவர்களாக கற்பனை செய்துகொண்டு அவர்கள் தவறு செய்வதற்கு முன்னமே புகாரோ, தண்டனையோ கொடுத்துவிடுகிறார்கள்.

ஊரில் எல்லாவற்றுக்கும் பயந்து பணிந்து போகும் காயத்ரி, சென்னை வந்ததும், எல்லோரிடமும் சகஜமாக பேசுவது, கோபப்படுவது, தனியாக கால் டாக்ஸியில் வீட்டுக்கு செல்வது போன்ற உடனடி மாற்றங்களை காண மகிழ்ச்சியாக இருக்கின்றது.

காயத்ரி ஓட்டுனரிடம் சிவா புகைப் பிடிப்பதாக புகார் சொன்னதும், சிவா கோபத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி விடுகிறான். பாதி வழியில் காரிலிருந்து இறங்கிய சிவாவிடம் ஏன் இறங்கி விட்டாய் என பரத் கேட்கிறான். ‘’அந்த பெண்ணை அடித்தே இருப்பேன், ஆனால் டாக்டர் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் என்ன தோன்றுகிறதோ அதற்கு Opposite ஆக நடந்துகொள்ளச் சொன்னது நினைவு வந்ததால் இறங்கிவிட்டேன்'’ என சிவா சொல்வான். சிவா டாக்டர் சொல்வதை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறான் என்று பரத் மகிழ்ச்சியடைகிறான்.

மருத்துவரின் ஞாபகம் வந்ததால் சிகரெட்டை புகைக்காமல் முகர்ந்து பார்த்து வைத்து விடுவதும், காயத்ரி மேல் கோபம் வந்ததும் காரை விட்டு இறங்கி விடுவதும் சிவா சிறிது சிறிதாக ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறான் என்று நம்பிக்கை வருகிறது. சிவாவை போல சிறுவயதில் இருந்து குடும்ப சூழ்நிலையால் தனிமையில் வளர்பவர்களுக்கு கொஞ்சம் கவுன்சிலிங்கும், அன்பும் கிடைத்தால் யாரும் கோபத்தை விட்டு மாறத் தொடங்குவார்கள். அவர்கள் முழுமையாக மாறும்வரை உடனிருந்து பக்குவமாக பேச பரத்தை போன்றவர்கள் வேண்டும். அப்படியான உறவுகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பரத்தின் அக்கறையும், சிவாவின் மாற்றமும் பாசிட்டிவ் எண்ணத்தை அளிக்கிறது.

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

வீட்டுக்கு வரும் காயத்ரி, அவ்வளவு பெரிய வீட்டின் பிரமாண்டம், தனி பெட்ரூம், மெத்தை எல்லாவற்றையும் கண்டு குதூகலமாகி, கண்ணாடியில் பார்த்து ’சிட்டி கேர்ள்’ ஆகிவிட்டதாக மகிழ்ச்சியில் தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.

இந்த உணர்வு சென்னை போன்ற பெருநகரத்தை பார்த்து மட்டும் வந்தது அல்ல. கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி, வெளி உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், குறைவான காலமே ஆனாலும் தனக்கு தேவையானவற்றை தானே பார்த்துக்கொள்ளும் மிகச்சிறிய சுதந்திரத்தின் மகிழ்ச்சி அது.

பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு சிந்தித்து முடிவெடுக்க உதவுகிறது. மேலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பலவிதமான மக்களை பார்த்து பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவர்கள் வீட்டில் உள்ளவர்களை மிக எளிதாக அனுசரித்து போகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெண்களின் வருமானம் ஈட்டுதல், அவர்களது சுதந்திரம் முதலியவை சமூகத்துக்கு பிரச்சனையாக இருப்பதால், வேலைக்கு செல்லும் பெண்கள் குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டார்கள் எனும் பிம்பம் போலியாக கட்டமைக்கப்படுகிறது

AKS - 7 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரியும் சிவாவும் வீட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். காயத்ரியின் அறைக்குள் தவறுதலாக வந்துவிட்ட சிவாவை பார்த்து பயந்து செக்யூரிட்டியை அழைக்கிறாள் காயத்ரி. பரத் அவர்களை சமாதானப்படுத்தி சிவாவை வேறு அறைக்கு அழைத்து செல்கிறான். சிவா அறையை விட்டு வெளியேறியதும் காயத்ரி வேகமாக கதவை அடைக்கிறாள்.

அவர்கள் ஆண்கள் என்பதாலேயே அவர்களுடன் இருக்க அஞ்சுவது போல அவள் கதவை சாத்தும் வேகம் இருக்கிறது. அறிமுகமில்லாத எந்த ஆணாக இருந்தாலும் அவர்களை உடனடியாக சந்தேகம் கொள்ளலாம், அவர்களை சந்தேகப்படுகிறோம் என்பதை அவர்களிடமே காட்டிக் கொள்ளலாம் என்கிற உரிமையை பெண்கள் எளிதாக ஆண்களிடம் எடுத்துக் கொள்கிறார்கள். இது ஆண்களை காயப்படுத்தலாம் என்கிற விஷயத்தை பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லா ஆண்களும் ஒன்று என்று பொதுமைப்படுத்த தேவையில்லை.

’’ஒரு ஆணை கண்டதும் அல்லது அவனிடம் உரையாடும்போது அடிக்கடி உடையை சரி செய்துகொள்வது, அந்த ஆணின் கண்ணியத்தை நேரடியாக அவமானப்படுத்தும் செயல்’’ என்று பள்ளியில் அடிக்கடி உடையை சரி செய்துகொள்ளும் பழக்கம் பதின்வயதில் தொடங்கியபோது எங்கள் வகுப்பாசிரியை சொல்வார்.

காயத்ரி முகத்தில் அறைந்தாற்போல் கதவை மூடிக்கொள்வது சிவாவை காயப்படுத்துகிறது. பரத் அவனை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான். மேலோட்டமாக பார்த்தால் பெண்பிள்ளை அப்படித்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் பார்க்கும் ஆண்களை எல்லாம் அவ்வாறு சந்தேகப்படத் தேவை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெகு நேரமாக கேன்டீனில் பாண்டியனுக்காக காத்திருக்கும் கவிதாவை கேன்டீன் ஊழியர் விசாரிக்கிறார். உடனே தப்பிப்பதற்காக புனிதாவின் பெயரை சொல்லிவிடுகிறாள் கவிதா. அதை பக்கத்து இருக்கையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் புனிதா, எழுந்து வந்து பேசுகிறாள். அவளது பெயரை பயன்படுத்தியதற்காக புனிதாவுக்கு லேசாக கோபம் வருவதற்குள் அங்கு வரும் பாண்டியன், கவிதாவை அறிமுகப்படுத்தி வைக்கிறான். மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். பாண்டியன் கவிதாவுக்கு ஊட்டி விடுவதும், பாண்டியன் நீர் அருந்திய கிளாஸில் கவிதா நீர் அருந்துவதையும் பார்க்கும் புனிதா ஆச்சரியப்பட்டு, “நீங்கள் இருவரும் லவ்வர்ஸா?” எனக் கேட்கிறாள். பாண்டியன் திருதிருவென்று முழிக்கும் அதே சமயம், கவிதா குறும்பாக சிரிப்பதோடு முடிகிறது ஏழாவது எபிசோட் முடிவடைகிறது. அவர்கள் காதலர்களாக இருக்கக்கூடும் எனும் ஊகத்தில் கொஞ்சம் குழப்பத்தை ஊற்றியிருக்கிறது இன்றைய எபிசோட்!

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-7-review

Tamil News Today: சுழற்சி முறையில் வகுப்புகள்! - தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. நடுவில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

அதன்படி, பள்ளிகளில் 9, 10, 11 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக பள்ளி, கல்லூரிகளில் செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தை போன்று இன்று புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட உள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-09-2021-just-in-live-updates

``சுடுகாட்ல ஒருமாசம் தங்கி உளவு பார்த்திருக்கேன்!" - டிடெக்டிவ் யாஸ்மின் | Detective Yasmin



source https://www.vikatan.com/social-affairs/women/lady-detective-yasmin-shares-her-detective-experiences

AKS - 6 | சுந்தரின் அட்வைஸும், கவிதாவின் காத்திருப்பும்... சென்னையில் முதல் நாள் எப்படி இருந்தது?

இரண்டு மாதங்கள் வேலை பார்க்க குடும்பத்தில் அனுமதி பெற்று ஒரு வழியாக காயத்ரி சென்னை கிளம்புகிறாள். அவளை வழியனுப்ப அழைத்துச் செல்லும் சுந்தர் அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு வருகிறான். எரிச்சலுடன் கேட்டுக்கொண்டு வரும் காயத்ரி அவனின் அறிவுரைகளில் இருந்து தப்பிப்பாளா?

தேனியில் இருந்து சென்னை வரும் பாண்டியனும் அவனது தோழி கவிதாவும் பாண்டியனுக்கு வேலை கிடைத்திருக்கும் அலுவலகத்துக்கு வருகிறார்கள். பாண்டியனின் முதல் நாள் வேலை எப்படி இருக்கிறது?

இதுதான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ சீரிஸின் 6வது எபிசோட் சுருக்கம்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

முந்தைய எபிசோடில் சீக்கிரமே தூங்கி, அதிகாலையிலேயே எழுவது பற்றி சொல்லிக் கொண்டிருந்த சுந்தர், காயத்ரியிடம் டீ காபி குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தச் சொல்கிறான்.

டீ, காபிக்கு பதிலாக வெஜிடபிள் சூப் குடிக்க வேண்டும், பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், காலை 4.30 மணிக்கு எழுந்து ஜாக்கிங் செல்ல வேண்டும், இரவு பத்து மணிக்கு தூங்கிவிட வேண்டுமென இரண்டு மாதங்கள் சென்னை செல்லும் காயத்ரிக்கு இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் போய் அய்யன் வள்ளுவனை துணைக்கழைத்து வந்து சுந்தர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறான். அவனது அறிவுரைகள் காயத்ரிக்கு முதலில் போரடிக்க ஆரம்பித்து பின் எரிச்சல் ஆகிறது. சுந்தர் சொல்வது எல்லாம் நல்ல விஷயங்கள்தான் என்று எடுத்துக் கொண்டாலும்கூட காயத்ரியை அவனது உடைமையாக எண்ணியே இவற்றையெல்லாம் சொல்கிறான்.

திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கு அல்லது மனைவிக்கு அவர்கள் கேட்காமலேயே பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கும் சேர்த்து ஆண்களே சிந்திப்பது, முடிவுகள் எடுப்பது எல்லாம் காதல் என்றும், மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வது என்றும் சமூகம் கற்பிதம் வைத்திருக்கிறது. மிக பத்திரமாக தங்கம், வைரத்தை பார்த்துக் கொள்வதற்கு இணையாக ஒரு விலை உயர்ந்த பொருளாக பெண்களை நடத்துவதுதான் அது. அந்த உறவில் பெண்களுக்கு மூச்சுவிடும் சுதந்திரம் கூட இருக்காது.

சுந்தரிடம் இருந்து கிட்டத்தட்ட தப்பித்துச் செல்வது போல் பேருந்தை கண்டதும் ஓடும் காயத்ரியின் முகத்தில் அந்த உணர்வை துல்லியமாக காணலாம்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

காரிலிருந்து காயத்ரியின் பெட்டியை எடுத்து வரும் சுந்தரிடம் அவற்றை தானே எடுத்துக் கொள்வதாக சொல்கிறாள். அதற்கு சுந்தர், “எப்படியும் இரண்டு மாதங்கள் கழித்து நீ எங்க வீட்டிலிருந்து ஆர்டர் போடத்தான் போற, அதை நான் இப்போ இருந்தே பழகிக்கிறேன்” என்பான். அவன் அப்படி பேசியது பிடிக்காமல் அவள் முகம் சுளிக்கிறாள்.

இந்த நுட்பத்தை பல ஆண்களும் சகஜமாக பயன்படுத்துவார்கள். வீட்டில் எல்லாவித கட்டுப்பாடுகளையும் தனது கையில் வைத்திருப்பார்கள். ஆனால் மனைவி ’ஆர்டர்’ போடுவதை தான் செய்வதை போல வெளியில் சொல்லிக் கொள்வார்கள். ஆரம்பத்தில் பெண்கள்கூட வீட்டின் மொத்த கன்ட்ரோலும் தனது கையில் இருப்பதாக ஏமாந்து போய் விடுவார்கள். இது மனைவியை எதிர்த்து பேச விடாமல் வைத்துக் கொள்வதற்கான ஆண்களின் டெக்னிக்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டு இறுதியாக, “எல்லாம் உன் மேல் உள்ள Affectionதான்” என்று கூறுவார்கள். அதையேதான் சுந்தரும் எபிசோடின் இறுதியில் சொல்கிறான்.

சோர்வாக இருக்கும் காயத்ரியிடம் அதன் காரணத்தை கேட்பான் சுந்தர். குடும்பத்தை பிரிந்து முதல்முறையாக செல்வதால் வருத்தமாக இருப்பதாக கூறுவாள். அதை மிக ஈஸியாக ''ஓகே.... ஓகே... அவங்கள நாங்க பார்த்துக்கறோம்''’ என்று கடந்துவிடும் சுந்தர், தான் காயத்ரியை பிரிந்து இருக்கப்போவதுதான் மிக கடினமானது என அவளிடம் சொல்வான். காயத்ரியின் உணர்வுகளை சரியாக உள்வாங்கி அதைபற்றி பேசாமல் தன்னை பற்றி மற்றுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரிக்கு பரிசுப் பொருளுடன் ஐ லவ் யூ சொல்லும் சுந்தருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிப்பாள் காயத்ரி. சுந்தருக்கு என்ன பதில் சொல்வது என்று முழிப்பது, எப்படி தப்பிப்பது என்று தவிப்பது, பேருந்தை கண்டவுடன் தப்பித்தோம் என எஸ்கேப் ஆவது என காயத்ரியின் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மிக அருமை.

பயணத்தின் இடையில் அழைக்கும் சுந்தர் பேருந்து ஹைவேஸில் நிற்கிறதா எனக் கேட்பான். அதிர்ச்சியாகும் காயத்ரியிடம் மொபைல் ஆப்பில் ட்ராக் செய்தேன் என்பான். தனக்கு நிச்சியக்கப்பட்ட பெண்ணாகவே இருந்தாலும், அவளை இவ்வளவு தூரம் ஃபாலோ செய்வது நிச்சயமாக அன்பு இல்லை. ஒருவகையில் தெரிந்தே செய்யும் ஸ்டாக்கிங்.

ஃபிரஷ் ஜூஸ் குடி, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், சரியான நேரத்திற்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என மீண்டும் இரண்டாம் கட்ட அட்வைஸ் மழையை பொழிய தொடங்குகிறான் சுந்தர். அவன் எப்போது அழைப்பை துண்டிப்பான் என்கிற நிலையிலேயே இருக்கிறாள் காயத்ரி. சுந்தரின் அறிவுரையில் அந்த காட்சி முடிவதற்குள் நாமும் 4 கிளாஸ் தண்ணீர் குடித்தால்தான் அடுத்த காட்சிக்கு போகமுடியும் என்று தோன்றிவிட செய்கிறது சுந்தரின் எக்ஷ்ப்ரஷன்ஸும், டயலாக் டெலிவரியும்.

சுந்தரின் டாக்ஸிக் அட்வைஸிலிருந்து காயத்ரியை போலவே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து பாண்டியன் - கவிதாவின் சாஃப்ட்வேர் கம்பெனியில் லேண்ட் ஆனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

முதன்முறையாக சென்னைக்கு வரும் கவிதா, சென்னையின் பிரமாண்டத்தை வியந்து பேசுகிறாள். சென்னையின் உயரமான கட்டடங்களை பார்த்து கவிதாவுக்கு கழுத்து சுளுக்கிக்கொள்கிறது.

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை என்றதும் ஃபார்மல் சட்டை, டக்-இன் செய்து வந்திருக்கும் பாண்டியனிடம் அங்கு எல்லோரும் டி-ஷர்ட், ஜீன்ஸில் இருப்பதை காட்டி கேலி செய்கிறாள் கவிதா. கம்பெனியில் டி-ஷர்ட் அணியலாம் என்று தனது அப்பாவுக்குத் தெரிய வந்தால் ஊரில் மளிகைப் பொருட்கள் விளம்பரத்துக்கு இலவசமாக வந்த டீ-ஷர்ட்களை பார்சலில் அனுப்பி விடுவார் என்று பயப்படுகிறான் பாண்டியன்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனின் அப்பாவை போல தகப்பன்கள் இருக்கிறார்கள். தாங்களே விளம்பரத்துக்கு வரும் டீஷர்ட்களை அணிந்து கொள்வார்கள். இதை கண்டதும், அப்பா, குடும்பத்துக்காகத்தானே இவற்றை செய்கிறார்கள் என ரொமான்டிஸைஸ் செய்து நியாயப்படுத்த தேவையில்லை. வருமானம் மிகக் குறைவான குடும்பங்களில் சிக்கனமாக இருப்பது வேறு. நல்ல வருமானம் இருந்தும் எதையும் அனுபவிக்காமல் பிள்ளைகளுக்கு மட்டுமே சேர்த்து வைப்பது தவறு. தான் மளிகைக்கடை டீஷர்ட் அணிந்து கொண்டு மகனுக்கு ஆயிரத்து 1500 ரூபாயில் பிராண்டட் டீ-ஷர்ட் வாங்கிக் கொடுக்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.

இதுபோன்றவர்களின் பிரச்னை என்னவென்றால் தங்கள் மனைவியும் தங்களை போலவே சிக்கனமாக(?!) இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மனைவியின் அடிப்படை ஆசைகளைக் கூட குடும்பச் சிக்கனம் என்கிற பெயரில் விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பார்கள். இப்படியெல்லாம் பணம் சேர்த்துக் வைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். தங்களின் பிள்ளைகளின் மேல் இருக்கும் அக்கறை தங்கள் மனைவியின் மேல் இவர்களுக்கு இருப்பதில்லை.

இது எளிமையோ, நல்ல வளர்ப்போ அல்ல. பெற்றோர்கள் தனக்காக முதலில் சிந்திக்க வேண்டும், பிறகு சுற்றியிருப்பவர்களின் மீது அன்போடு நடந்து, பிள்ளைகளுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனுக்காக அலுவலகக் கேன்டீனில் உணவுகளை ஆர்டர் செய்து வைத்துக்கொண்டு அவனை விட்டுவிட்டு சாப்பிட மனமில்லாமல் காத்திருக்கிறாள் கவிதா. வேலையில் சேர்வதற்கான நடைமுறைகள் செய்து கொண்டிருக்கும் பாண்டியனை செல்போனில் அழைத்து தொந்தரவு செய்கிறாள். எந்த நேரமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் இருவரின் இடையில் இந்த சிறிய அன்பின் தருணங்கள் அழகாக இருக்கிறது.

சென்னை வந்து சேரும் காயத்ரிக்கும், புதிதாக வேலையில் சேரும் பாண்டியனுக்கும் சென்னை வைத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன?

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-daily-series-episode-6-review

Eye Makeup-ல இவ்ளோ விஷயம் இருக்கா? | Makeup With Actress Priyanka Sivanya | Paavam Ganesan Yamuna



source https://www.vikatan.com/health/beauty/serial-actress-priyanka-sivanya-shares-her-eye-makeup-tips

நீரை மிச்சப்படுத்தும் கருவியும் அதன் தொழில்நுட்பமும்! | Pasumai Vikatan



source https://www.vikatan.com/news/agriculture/new-technology-to-conserve-water-in-agriculture

ஓசூர் திமுக எம்.எல்.ஏ மகன் உயிரிழப்பு: 'நள்ளிரவு 2 மணி; தூக்கி வீசப்பட்ட ஆடி கார்; பயங்கர விபத்து!'

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், ஓசூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் பிரகாஷ். இவருடைய 24 வயதான மகன் கருணாசாகரும் அவருடைய நண்பர்கள் 7 பேரும் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு ஓசூருக்கு காரில் திரும்பியுள்ளனர். சுமார் 2 மணியளவில் கார் பெங்களூரு கோரமங்கலா அருகே வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை மீறிய கார் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் , மகன் கருணாசாகர்

Also Read: கள்ளக்குறிச்சி: கார் - பேருந்து மோதி கோர விபத்து... சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் பலியான சோகம்!

இதில், காரிலிருந்த கருணாசாகர் உள்ளிட்ட ஏழு பேரும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். காரில் கருணாசாகர் உட்பட நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் இருந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கையில், அதிவேகமாக வந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பிலும், மரத்திலும் மோதி தூக்கிவீசப்பட்டது தெரிகிறது.

அதிவேகமாகக் காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், காரில் இருந்தவர்கள் யாரும் சீட் பெல்ட் அணியாததால், ஏர்பேக் திறக்காமல் போயிருக்கிறது. இந்த விபத்து குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது... காரை ஓட்டியது யார் என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

நொறுங்கிக்கிடக்கும் ஆடி கார்

எம்.எல்.ஏ பிரகாஷின் மனைவி சிவம்மா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்தான் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள்ளாக, சாலை விபத்தில் மகனையும் பறிகொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ். இது அவரையும், அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/hosur-mlas-son-died-in-an-accident-at-bengaluru

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: விவசாயிகளிடம் 'ஸ்கோர்' செய்த கட்சிகள் எவை?

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 'புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம், நாடு முழுக்கப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவைக் கொடுத்திருக்கும் அதேவேளையில், தமிழக எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

விவசாய உற்பத்தி-வர்த்தகம், விலை உறுதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்தான மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு இயற்றியது. இதையடுத்து, 'இந்தப் புதிய சட்டங்கள், முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்' எனக் கூறி நாடு முழுக்க விவசாயிகள் போராடத் தொடங்கினர்.

தமிழக சட்டசபைக் கூட்டம்

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு வருடம் தாண்டியும் தீவிரமாகப் போராடிவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இந்த வேளையில், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் இவ்வளவு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவருவது இதுவே முதன்முறை! இது 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்ற பெருமையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்கிடையே, 'புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்' என்ற கோரிக்கையோடு விவசாய சங்கங்கள் மத்திய பா.ஜ.க அரசுடன் நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. 'சட்டத்தில் திருத்தங்கள் வேண்டுமானால் மேற்கொள்ள முடியுமே தவிர, ஒருபோதும் வாபஸ் பெற முடியாது' என்ற நிலைப்பாட்டில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருந்துவருகிறது.

தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, கடந்த வாரம் (28-8-2021) புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதில், 'முற்று முழுதாக வேளாண்மைத் தொழிலையே அழிக்கிற, மாநில அரசுகளின் உரிமைகளில் அத்துமீறி தலையிடுகிற இந்தப் புதிய சட்டங்களை ஒன்றிய அரசு நீக்க வேண்டும்!' என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளித்திருக்கிறது. அதேசமயம், தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்துவருகிற எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது. மாநில பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும், இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க., இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

வேளாண் பணி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, 'நான்தான் உண்மையான விவசாயி!' என்று ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததோடு, பத்திரிகை - தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் கொடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கேள்விகள் பல தொடுத்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி! இந்தச் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பதை முன்வைத்து, 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விவசாயி வேடம் கலைந்துவிட்டது' என தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா, 'தீர்மானத்துக்கு ஆதரவு - எதிர்ப்பு' விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை விவசாயிகள் எப்படிப் பார்க்கின்றனர் என்றக் கேள்விகளோடு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலரிடம் கருத்து கேட்டோம்.

'தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர்' பி.ஆர்.பாண்டியன்

''இந்தியாவிலேயே வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்டை சமர்ப்பித்து, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. அடுத்தகட்டமாக, இந்திய விவசாயிகள் அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுகிற வகையில், 'புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்' கொண்டுவந்து ஒட்டுமொத்த விவசாயிகளின் மனதிலும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.

விவசாய மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு வருகிறபோதே, அதற்கு ஆதரவாக வாக்களித்து, மசோதாவை வெற்றிபெற வைத்ததில் தமிழ்நாட்டிலுள்ள அ.தி.மு.க-வுக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, இந்திய விவசாயிகள் அனைவரது கோபத்துக்கும் ஆளாகி, தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொருவரும் தலைகுனிவுக்கு உள்ளானோம். தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் தமிழக விவசாயிகளின் தலையை நிமிரச் செய்திருக்கிறது.

Also Read: டெல்லி: மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்; ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ்!

பி.ஆர்.பாண்டியன்

தீர்மானத்துக்கு எதிராக தமிழக பா.ஜ.க வெளிநடப்பு செய்திருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்த காரணத்தால், கூட்டணியில் இருந்தாலும்கூட தீர்மானத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை பா.ம.க எடுத்துள்ளது.

அதேசமயம், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்திருப்பது, அந்தக் கட்சி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை பொய்த்துபோகச் செய்துவிட்டது. மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அ.தி.மு.க தலைவர்கள் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையையும் வெறுப்பாக மாற்ற வழிவகை செய்துவிட்டது. இந்தத் தவறுகளுக்கெல்லாம் காரணம் அ.தி.மு.க-வை வழிநடத்திவரும் இன்றைய தலைவர்கள்தான். தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து, அ.தி.மு.க என்ற கட்சியையே மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டதாகவே கருதுகிறேன்!''

'தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்க'த்தின் தேசிய அமைப்பாளரும், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான ஆறுபாதி கல்யாணம்.

''மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாங்கள் போராடியதில்லை. ஏனெனில், இந்தப் புதிய சட்டங்களே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சட்டத்தில் சில குறிப்பிட்ட திருத்தங்களைச் செய்து அமல்படுத்தலாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஆறுபாதி கல்யாணம்

ஆனால், இன்றைய அரசியல் சூழலில், புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என எல்லோருமே இங்கே அரசியல்தான் செய்துகொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றிய அக்கறை எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரையில் எந்த அரசாலும் கொடுக்க முடியவில்லை. புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்று இன்றைக்கு இங்கே போராடுகிறார்கள். தாராளமயக் கொள்கை எப்போது இந்தியாவுக்குள் வந்ததோ, அப்போதே இங்கே அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டன!''

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க' மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்

''புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு, விவசாயிகளிடையே நாடு தழுவிய ஒற்றுமை நிலவிவருகிறது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட விவசாயிகள் தங்கள் உயிரையும் பணயம்வைத்து வருடம் ஒன்றைக் கடந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டக் களத்திலேயே சுமர் 390 பேர் வரையிலும் இறந்திருக்கிறார்கள். ஆனாலும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு பொய்ச் செய்திகளை பரப்பிவருகிறது.

சுந்தர விமலநாதன்

முதலில், 'டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்கள்தான்; அவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை' என்றார்கள். பின்னர், 'அப்பாவி விவசாயிகள்தான் போராடிவருகின்றனர்' என்றனர். அதன் பின்னர், 'பாகிஸ்தான், காலிஸ்தான் தீவிரவாதிகள்' என்றனர். இப்படிப் போராட்டக்காரர்களை சிறுமைப்படுத்தும் செயலைத்தான் மத்திய பா.ஜ.க அரசு செய்தது. ஆனால், தி.மு.க தலைமையிலான தமிழக அரசோ, வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து வரலாறு படைத்தபோதே, 'இது டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு சமர்ப்பணம்' என்று பெருமைப்படுத்தியது. அதை உறுதி செய்வதுபோல், இப்போது வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானமும் கொண்டுவந்திருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, `விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யச்சொல்லி கேட்போம்’ என்று பிரசாரம் செய்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்றைக்கு சட்டசபையில் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், வெளிநடப்பு செய்திருக்கிறது அ.தி.மு.க. ஆக, இவர்களது இரட்டைநிலையை மக்கள் அனைவரும் புரிந்துகொண்டுவிட்டனர்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-tamil-nadu-assemblys-resolution-on-centre-governments-agriculture-laws

`சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தோம்!’ - தூக்கிட்டு தம்பதி தற்கொலை; கலங்கவைத்த கடிதம்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை கூட்ரோட்டிலுள்ள போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி என்கிற வரதராஜ். வயது 35. இவரின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால், அணைக்கட்டு அருகேயுள்ள வசந்தநடை, கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா (வயது 23) என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் வரதராஜ். அணைக்கட்டுக்கு அருகிலுள்ள பெரிய ஊனை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இரண்டாவது மனைவியுடன் புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். அணைக்கட்டு காவல் நிலையம் அருகிலேயே அரிசி, மாட்டுத்தீவனக் கடைவைத்து தொழிலிலும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டார். இதன் மூலம் மாதாந்திர ஏலச்சீட்டும் நடத்திவந்த வரதராஜுக்கு, கொரோனா காலம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

வரதராஜ்

கடன் வாங்கியவர்களும், சீட்டுப் பணம் எடுத்தவர்களும் திருப்பித் தராமல் இழுத்தடித்துவந்துள்ளனர். இன்னொரு பக்கம் குழந்தையில்லையே என்ற மனவேதனை வரதாஜையும் அவர் மனைவியையும் வாட்டி வதைத்திருக்கிற்து. இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரதராஜ் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் மனைவி ஆஷா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த வரதராஜ், மனைவி தூக்கில் சடலமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, மனைவியின் சடலம் தொங்கிய அதே புடவையில் தனது கழுத்தையும் சுற்றிக்கொண்டு தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று பகல் முழுவதும் இருவரும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். வீட்டுக் கதவைத் தட்டியும் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. உள்ளிருந்து சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அணைக்கட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, படுக்கை அறையில் வரதராஜும், அவரின் மனைவியும் தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

ஆஷா

உடல்கள் தொங்கிய இடத்தில், உருக்கமாக எழுதியிருந்த ஆறு பக்கங்கள்கொண்ட கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்தக் கடிதத்தில், `எங்கள் இறப்புக்கு யாரும் காரணமில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தோம். மனைவி இறந்துவிட்டதால் நானும் தற்கொலை செய்துகொள்கிறேன். நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறேன். வட்டிக்குப் பலருக்கும் பணம் கொடுத்திருக்கிறேன். சீட்டு நடத்திவருகிறேன். எனக்கு எட்டுப் பேரிடமிருந்து ரூ.5.28 லட்சம் பணம் வர வேண்டும்’’ என்று எழுதியிருந்தார் வரதராஜ். மேலும் அந்தக் கடிதத்தில் கடன் கொடுத்தவர்கள், கடன் வாங்கியவர்கள், ஏலச்சீட்டு எடுத்தவர்கள், அரிசிக் கடையில் கடன் வைத்தவர்கள் யார் யார் போன்ற விவரங்களைப் பெயர், விலாசம், செல் நம்பருடன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/husband-and-wife-suicide-after-debt-issue-in-vellore

1/9/2021 | இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார்கள் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Today's Horoscope | rasi palan

#DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan



source https://www.vikatan.com/spiritual/astrology/192021-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

கேரள மாணவர்கள் தினசரி வந்து செல்ல தடை! - கோவை மாவட்டத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, நாளை செப்டம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா வைரஸ்

Also Read: கோவை: விபத்தில் சேதமடைந்த போலீஸ் வேன்... 40 ஆண்டுகளுக்குப் பிறகு வின்டேஜ் லுக்குடன் மறுபிறப்பு!

“கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இயங்கும் நகை கடை மற்றும் துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ராமர் வீதி, சாரமேடு, ரைஸ்மில் சாலை, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஹோப் காலேஜ், காளப்பட்டி, டி.பி ரோடு, சரவணம்பட்டி , கணபதி பேருந்து நிலையம், காந்திமா நகர், ஆவாரம்பாளையம், ராஜவீதி, பெரியகடைவீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி,

கோவை ஊரடங்கு

தாமஸ் வீதி, சுக்ரவார் பேட்டை, கடைவீதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பூங்காக்கள், மால்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்கள், அடுமனைகள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் 50 சதவிகித வாடிக்கையளர்களுடன் சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.

கோவை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 ,10 ,11 மற்றும் 12-ம் வகுப்புகள், கல்லூரி வகுப்புகள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்படும்.

அதேநேரத்தில், கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி வரும் மாணவ மாணவியர் தினசரி வந்து செல்ல அனுமதி இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அனைத்து விடுதிகளும் மற்றும் பணிபுரியும் விடுதிகள் ஆகியோர் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரிசோதனை

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், அங்கிருந்து வரும் மாணவ-மாணவிகள் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதுடன், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்று இருப்பதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: கேரளாவில் எகிறும் பாதிப்புகள்; தமிழகத்தில் கொரோனா இப்போது, இனி..?



source https://www.vikatan.com/news/tamilnadu/corona-restrictions-for-coimbatore-district

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, தடுப்பூசி போட்டு கொள்ளலாமா? |Doubt of Common Man

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் வேலுச்சாமி என்ற வாசகர், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் கால் வலி இருந்து கொண்டே இருக்கிறது. நான் இப்போது தடுப்பூசி போடலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்களை இயல்பான வாழ்க்கையை வாழ விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா என்னும் பெருந்தொற்று. கொரோனாவுடன், கொரோனாவை எதிர்த்து நாம் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். எனினும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தான அச்சமும், சந்தேகங்களும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அதேபோன்று கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிக் கிட்டத்தட்ட அரை வருடம் முடிவடைந்த நிலையிலும், கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. இதேபோன்று கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகம் நமது வாசகர் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

வாசகரின் சந்தேகத்திற்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். "கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது என்றால் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கால்வலி இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும், கால்வலிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. முக்கியமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது என்றாலே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதலே சிறந்தது" என்றார்.

Corona Vaccine - Representational Image

கொரோனா குறித்து இது போன்று சந்தேகங்கள் இருப்பின் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

கொரோனா வந்தபின் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மிகவும் முக்கியம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man


source https://www.vikatan.com/health/healthy/doubt-of-common-man-i-got-affected-for-covid-before-3-months-can-i-get-vaccination-now