Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

சென்னை: தம்பிக்காக அண்ணன் போட்ட சபதம்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கொலை!

சென்னை போரூர் அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள புதருக்குள் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா(20) எனத் தெரியவந்தது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வினோத், லோகேஷ் போரூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த ஆண்டு திருடிய செல்போன்களை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராகேஷ் என்பவரை வசந்தகுமார் கொலை செய்தார். அந்த வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்த வசந்தகுமாரை ராகேஷின் கூட்டாளிகள் 2019 ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கொலை செய்தனர். வசந்தகுமாரின் அண்ணன் வினோத், தம்பியை கொலை செய்தவர்களை தீர்த்துக் கட்ட சபதமிட்டார். பழிக்குப்பழிவாங்க ஜெயசூர்யாவை கொலை செய்ய வினோத் காத்திருந்தார்.

கொலை

Also Read: சென்னை: சாவு வீட்டில் கஞ்சா போதை, தகராறு! - கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஐ.சி.எஃப் ரெளடி

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜெயசூர்யாவை வினோத் மற்றும் அவரின் கூட்டாளி லோகேஷ் மதுஅருந்த அழைத்துச் சென்றனர். பின்னர், ஜெயசூர்யாவின் கை, கால்களை கட்டி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர். பின்னர் வினோத்தும் லோகேஷிம் காவல் நிலையத்தில் சரண்அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெயசூர்யாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-youth-murdered-in-revenge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக