Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

வேலூர்: அடிக்கடி சண்டை... விவாகரத்து முடிவு! - கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (22), கட்டட மேஸ்திரி. இவர் தனது தாய்மாமன் மகள் சுப்புலட்சுமியை (19), கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன நாள்முதல் தம்பதி இடையே கருத்து-வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று மாலை யுவராஜிக்கும் சுப்புலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சுப்புலட்சுமியின் சடலம்

ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி, கணவனை, செருப்பால் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற யுவராஜ், இரும்பு கம்பியால் மனைவியை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி சுருண்டு விழுந்துள்ளார்.

அலறல் சத்தம்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து சுப்புலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, மாமனார் கொடுத்தப் புகாரின்பேரில், பேரணாம்பட்டு போலீஸார் கொலை வழக்குப்பதிந்து யுவராஜை கைதுசெய்துள்ளனர்.

யுவராஜ்

விசாரணையில், சாதாரணமாக சின்னச் சின்ன விஷயத்துக்கே யுவராஜ் அடிக்கடி சண்டைப் போட்டதாகவும், அதனால் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று தாய் வீட்டுக்கே செல்லும் முடிவில் சுப்புலட்சுமி இருந்ததாகவும் தெரிகிறது. மகள்படும் துன்பத்தைப் பார்த்து சுப்புலட்சுமியின் தந்தையும் யுவராஜை கண்டித்துள்ளார். இதன் நீட்சியாகத்தான் கொலை நடந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது’’ என்கிறார்கள் பேரணாம்பட்டு போலீஸார்.



source https://www.vikatan.com/news/crime/husband-arrested-for-killing-wife-vellore-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக