Ad

திங்கள், 28 பிப்ரவரி, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/video-for-tamilnadu-cm-stalin-birthday

''பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்'' - சொல்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரையிலாக தொடர் வெற்றியைப் பெற்று, 'வலிமை'யை நிரூபித்து வருகிறது தி.மு.க கூட்டணி!

இந்தச் சூழலில், ''மு.க. ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டனர்'' என அச்சாரம் போட்டிருக்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனின்.

அவரிடம் பேசினேன்....

மோடி

''அகில இந்திய அரசியலில், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியைக் கட்டமைக்கிற முயற்சியில் தி.மு.க ஈடுபடுமா?''

''பா.ஜ.க பேசிவருகிற இந்துத்துவா என்பது, சமூக நீதிக்கு எதிரானது. அதனால்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், 'பா.ஜ.க அரசு தொடர்வது, நாட்டின் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து' என்றே நாங்கள் நம்புகிறோம். ஆகவேதான் நாடுதழுவிய அளவில் சமூக நீதிக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். இதுவே, பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிதான்.''

''மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி தவிர்த்த கூட்டணிக்கு முயன்றுவரும் வேளையில், தேசிய அளவிலான தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் இடம் எத்தகையதாக இருக்கும்?''

''காங்கிரஸ் கட்சியை நாங்கள் எதிர்க்கவில்லையே... எனவே அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் இருக்கும். ஏனெனில், தேசிய அளவில் இருப்புகொண்ட மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்ததொரு கூட்டணியை உருவாக்கினால், அது மூன்றாவது அணியாகிவிடும். இது பா.ஜ.க-வுக்கு எதிரான அணியை பிளவுப்படுத்தத்தான் உதவும்.''

ராகுல்காந்தி

''அப்படியென்றால், தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானே பிரதமர் வேட்பாளராகவும் இருக்கமுடியும்?''

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களோடு நிற்கிறார்; ஆனால், பிரதமர் மோடி மக்களிடமிருந்து விலகி நிற்கிறார். ஆக, இந்த ஒப்பீட்டு அடிப்படையிலேயே, 'மு.க.ஸ்டாலின் பிரதமரானால், நாடு செழிக்கும்' என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்தகாலத்தில், பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்டபோது, 'எனது உயரம் எனக்குத் தெரியும்' என்று பதிலளித்தார். இதுபோல், பிரதமர் பதவி குறித்த கேள்விக்கு நமது முதல்வர்தான் பதில் அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளும் கூடிப்பேசித்தான் முடிவெடுக்க முடியும். மற்றபடி 'மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர்' என்றப் பேச்செல்லாம் இப்போது எழவில்லை.''

''கோவையில், பணப் பட்டுவாடா நடைபெற்றிருப்பதால்தானே, 'கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது?''

''பணப்பட்டுவாடா நடைபெற்றிருக்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டின் பேரில்தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 'பணப்பட்டுவாடா செய்தது யார்' என்பதையெல்லாம் முன்கூட்டியே நாம் சொல்லிவிட முடியாது. நீதிமன்றத்துக்கும் இது தெரிந்தேயிருக்கிறது. எனவே 'தப்பு செய்தவர்கள் யார்' என்பதையும் நீதிமன்றமே சொல்லட்டும்.''

சென்னை உயர் நீதிமன்றம்

''கோவை மாநகராட்சியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சான்றிதழில்கூட, 'தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளதே?''

''ஆமாம்.... பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பதாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், 'வெற்றிச் சான்றிதழை இறுதிப்பட்டியலாக வைத்துக்கொள்ள வேண்டாம்' என்ற முன்னெச்சரிக்கையோடு தேர்தல் ஆணையம் இந்த வாசகத்தைப் பிரிண்ட் செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம்தானே அறிவித்திருக்கிறது!''

''நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ‘தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பா.ஜ.க பெற்று விட்டது' என அண்ணாமலை சொல்கிறாரே?''

(சிரிக்கிறார்) ''பல இடங்களிலும் பா.ஜ.க டெபாசிட் இழந்திருக்கிறது. பின் எப்படி மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்கிறார்கள்? பா.ஜ.க-வின் கோட்டை என்று அவர்களே சொல்லிவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்கூட இப்போது சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைக்கவில்லை. தனிப்பட்ட வகையில் உள்ளூர் மக்களின் அபிமானம் பெற்றவர்கள் யாரேனும் பா.ஜ.க சார்பில் நின்று வெற்றி பெற்றிருப்பார்களே தவிர.... சொல்லிக்கொள்கிற அளவுக்கு அவர்கள் எங்கேயும் வெற்றி பெறவில்லை.

ஒருவேளை, 'தி.மு.க 100 மார்க் வாங்கிவிட்டது. அ.தி.மு.க 50 மார்க், பா.ஜ.க 5 மார்க் வாங்கியிருக்கிறது. எனவே, மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க-தான்' என்று சொல்லிக்கொள்கிறாரோ என்னவோ!''

அண்ணாமலை

'' 'அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணைந்து நின்றால், கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றிபெற முடியாது' என்றும் அண்ணாமலை சொல்கிறாரே?''

''அது அவரது கற்பனை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் சேர்ந்து வாங்கியிருக்கும் ஓட்டுகளைவிடவும் அதிக எண்ணிக்கையில் தி.மு.க ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது.''

''பா.ஜ.க-வுக்கு கிடைத்திருக்கும் கணிசமான வாக்குகள் தி.மு.க-வை எரிச்சல்படுத்தியுள்ளது என்கிறார்களே....?''

''மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் தொழில் வீழ்ச்சி, வாழ்வாதாரம் பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு, வேலைவாய்ப்பின்மை என மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு மூன்றாவது இடம், கணிசமான வாக்குகள் என்றெல்லாம் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.''

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

''முதல்வரேகூட, 'சில இடங்களில் கட்சியை மனதில் வைத்து ஓட்டு போடுவார்கள். சில இடங்களில் வேட்பாளரை மனதில் வைத்து வாக்களிப்பார்கள்' என்றுதானே பா.ஜ.க வெற்றியைப் பற்றிச் சொல்கிறார்?''

''அதைத்தான் நானும் சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் என்பது உள்ளூர் மக்களுடன் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, உள்ளூர் நட்பின் அடிப்படையில்கூட வாக்குகள் கிடைக்கலாம். அதை கட்சிக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.''

''உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது உள்ளூர் மக்கள் சார்ந்தது என்ற உங்கள் கருத்து, தி.மு.க-வுக்கும் பொருந்தும்தானே?''

''ஆமாம்... தி.மு.க-வுக்கும் பொருந்தக்கூடியதுதான். அதேசமயம், தனி மனித தொடர்புகளையும் தாண்டி இவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க-வுக்கு மக்கள் கொடுக்கிறார்கள் என்றால், விஷயம் இருக்க வேண்டும் இல்லையா? அதைத்தான் 'தி.மு.க தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்' என்று நான் சொல்கிறேன்.''

''உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுவரையை சரி செய்வதற்கான வாய்ப்பையே உச்ச நீதிமன்றம் எங்களுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, 'பத்து மாதங்களுக்குள்ளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும்' என்ற உத்தரவைத்தான் உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்தது. எனவே தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், மறைமுகத் தேர்தலை மாற்றியமைத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த நேரிட்டால், நீதிமன்றம் பிறப்பித்த காலகட்டத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது. எனவே, பழைய நடைமுறையையே தொடரவேண்டியதாயிற்று.''

திருமாவளவன்

''அப்படியெல்லாம் இல்லை. கடந்த காலத்தில், திருவொற்றியூர் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர்தான் இருந்தார். ஆனாலும்கூட கூட்டணி தர்மத்துக்காக அவரையே நகராட்சித் தலைவராக தி.மு.க தேர்ந்தெடுத்தது. கோவில்பட்டியிலும்கூட இதேபோன்று நடைபெற்றுள்ளது. கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான உறுப்பினர்களே இருந்தபோதும் காங்கிரஸிலிருந்தே மேயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

எனவே, தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கூட்டணிக் கட்சிகளிடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்போதுதான் இதுகுறித்தெல்லாம் முடிவெடுக்கப்படும்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/prime-ministerial-candidate-mk-stalin-have-to-answer-says-tks-ilangovan

மகா சிவராத்திரி ஏன் உயர்ந்தது? - நான்கு கால பூஜை முறைகளும் வழிபட வேண்டிய மூர்த்திகளின் மகிமையும்!

சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. 'மாசிக்கயிறு பாசிபடியும்' என்பது பழமொழி. இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவது சிறப்பு. காரணம் அமிர்தமான கங்கை இந்த மாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிறைந்திருப்பதாகக் கூறுவார்கள். மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. சிவராத்திரி என்பது தேய்பிறை சதுர்தசி திதி நாளையே குறிக்கும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. இதன் காரணம் என்ன என்று சென்னை காளிகாம்பாள் கோயில் ஷண்முக சிவாசார்யரிடம் கேட்டோம்.

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி உயர்ந்தது... ஏன் தெரியுமா?

"மாசி மாதம், மாசுகளை நீக்கி சிவத்தன்மையை வெளிப்படுத்தும் தன்மையுடையது. தேய்பிறை சதுர்தசி திதியானது `மகாநிசி' காலத்தில் அதாவது அமாவாசைக்கு முன்னர் வரக்கூடிய இரவு 11.36 முதல் 12.24 வரை சதுர்தசி திதி இருப்பின் அன்றே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு, மகா சிவராத்திரி நாளை (மார்ச் 1) செவ்வாய்கிழமை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இந்த நாளின் அதிகாலை 3.16 மணிக்கு தொடங்கி சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணி வரை இருக்கிறது. எனவே நாளையே மகாசிவராத்திரி. சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரி இயல்பிலேயே மகாசிவராத்திரி என்று கூறப்படுகிறது.

உமையம்மை சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன. மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவனின்பால் மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

மகா சிவராத்திரி - முதல் கால பூஜை
'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்று பொதுவான அர்த்தம் கூறினாலும் 'ராத்ரம்' என்பதற்கு 'அறிவு' என்னும் பொருளும் உண்டு என்பர். சிவராத்திரியானது இந்த உலகின் தலைவனான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது என்கின்றன சாஸ்திரங்கள்.

இதில் மற்றுமொறு சிறப்பும் உண்டு. மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். எனவே தவறாமல் மகாசிவராத்திரி நாளில் நாம் வழிபாடுகள் செய்து பலன்பெறலாம்" என்றார்.

நலம் தரும் நான்கு கால பூஜை...

மகாசிவராத்திரி நன்னாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாலை சிவபூஜை செய்வதற்கு முன்பாகவோ ஆலயம் சென்று தரிசனம் செய்வதற்கு முன்பாகவோ மீண்டும் நீராட வேண்டும். பின்பு இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜைகள் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

மழலைச் செல்வம் வேண்டுவோர் வணங்க வேண்டிய முதற்காலம்

மாலை 6.27 முதல் கால பூஜை தொடங்கும். இந்தக் காலத்தில் சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தானாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று. சச்சிதானந்தம் என்பதை சத்து - இறைவன்; சித்து - இறைவி; ஆனந்தம் - முருகன் எனலாம். இந்த மூன்று இயல்புகளின் அழகிய வடிவே சோமாஸ்கந்தம் என்று தத்துவ நூல்கள் விளக்குகின்றன.

மகா சிவராத்திரி இரண்டாம் கால பூஜை

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. நமது நாட்டில் வேறெங்கும் இந்த வடிவம் காணப்படுவதில்லை. சிவன் - சக்தி - முருகன் ஆகிய வழிபாட்டை ஒருங்கிணைத்து பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இல்லறம் நல்லறமாக விளங்க விரும்புகிறவர்கள், மழலை வரம் எதிர்பார்த்துக்காத்திருப்பவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய காலம் முதற்காலம்.

கல்விச் செல்வம் அருளும் இரண்டாம் கால தட்சிணாமூர்த்தித் திருக்கோலம்

இரண்டாம் கால பூஜைகள் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை நடைபெறும். இந்த பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது.

கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும் ஞானாசாரியத் திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம். ‘தட்சிணம்’ என்பதற்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஸ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

மகா சிவராத்திரி - மூன்றாம் கால பூஜை

ஆலமர் செல்வனாக -ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக உபதேசிக்கும் ஞான வடிவம் இது. இந்தத் திருவுருவை மகாசிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

ஶ்ரீலிங்கோத்பவர் மூன்றாம் கால பூஜை - இரவு 12.00

‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர் திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவபெருமான் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில், லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம், முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

மகா சிவராத்திரி - நான்காம் கால பூஜை

ஸ்ரீரிஷபாரூடர் நான்காம் கால பூஜை - இரவு 4.00

சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர். சிவபெருமான், தன் அடியார்களுக்கு ரிஷப வாகனராகத் திருக்கோலம் காட்டி ஆட்கொண்டு அருளியதை பெரிய புராணத்தில் பல அடியார்களின் வரலாற்றின் மூலம் அறிய முடியும். ‘உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய நேரிடுமே!’ என்று அஞ்சிய தரும தேவதை, என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைத் தஞ்சமடைய... சிவபெருமான் அதன் மீது ஏறிக் கொண்டு, அருள்புரிந்த நிலையே ரிஷப வாகனராகக் காட்சி கொடுத்தார். இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டுப் பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் சௌபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை



source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-of-maha-shivarathri-and-the-complete-guidance-for-worshipping

நள்ளிரவில் சி.வி.சண்முகத்தை கைது செய்ய நடவடிக்கையா?! - குவிந்த தொண்டர்கள்... நடந்தது என்ன?

அண்மை மாதங்களாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (28.02.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முக்கிய தலைவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நள்ளிரவில் குவிந்த அதிமுப தொண்டர்கள்

அதன்படி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி பேசியிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது, ``கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைது செய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுக-வினர் பயப்பட மாட்டோம்.

அடுத்த குறியாக, சி.வி.சண்முகம் தான் கைது செய்யப்படுவார்... என்று செய்திகள் உலாவியதை பார்த்தேன். பண்ணிக்கோ...! இந்த கைதுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். இரவு 3 மணிக்கு வருவது, விடியல் காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம்." என்று காட்டமாகவும் விரிவாகவும் பேசியிருந்தார் அவர்.

இராதாகிருஷ்ணன்

இந்நிலையில், சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டலாம் என நேற்று இரவு 10 மணிக்கு மேல் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் ஒன்று வெளியானது. இந்த தகவலை கொண்டு திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் நள்ளிரவில் அடுத்தடுத்து சிறிது நேரத்திலேயே 200க்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்த தீபம்குமார், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரசு ஒப்பந்த பணி செய்த தீபம் குமாரை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏமாற்றியதாலே தற்கொலை செய்து கொண்டதாக, தீபம் குமாரின் சகோதரர் திண்டிவனம் காவல் நிலையத்தில் அளித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கைது செய்யலாம் என்ற கருத்துக்களும் வட்டமடித்தன.

சி.வி.சண்முகம் இல்லம்

இந்த பதற்றமான சூழலில் சி.வி.சண்முகத்தின் சகோதரர் இராதாகிருஷ்ணன், அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு வந்த சி.வி.சண்முகம், "ஒன்றுமில்லை கலைந்து செல்லுங்கள். வந்தால்... இப்போதெல்லாம் வரமாட்டார்கள்" என்று கூறி கூட்டத்தை கலைந்து செல்லும்படி கூறினார். அதன் தொடர்ச்சியாக கூட்டம் மெல்ல மெல்ல கலைந்து சென்றது. நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் விழுப்புரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/stirred-by-the-rumor-that-cvshanmugam-may-be-arrested

இந்த வார ராசிபலன்: மார்ச் 1 முதல் மார்ச் 6 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astrology-predictions-for-the-period-of-march-1st-to-6th

இன்றைய ராசி பலன் | 01/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam

12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/01032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

காதலித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்! - கடிதம், புகைப்படங்களுடன் ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் 'லவ் பேர்ட்ஸ்' பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியிலும் ஆர்வமாகச் செயல்பட்டுவரும் அவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

விஜய்ரூபன் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். அவர்களது காதல் வெளியே தெரிந்ததும் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால் பெண்ணின் தந்தையை நேரில் சந்தித்த விஜய்ரூபன், அவரின் மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜய்ரூபனுக்கு நிரந்தர வருமானத்துக்குரிய தொழில் இல்லாததால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டார்.

விஜயரூபன் தொடர்ந்து தன் மகளின் பின்னால் சுற்றுவதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். காதல் மற்றும் தேர்தல் தோல்வி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்வியால் விஜய்ரூபன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

களக்காடு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நடக்க இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர், தாங்கள் காதலித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை நடையிலான கடிதத்தின் நகல் ஆகியவற்றை போஸ்டராக அச்சடித்து களக்காடு நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார்.

காதலித்த பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் வீட்டைச் சுற்றிலும் அதிகமான எண்ணிக்கையில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். அதைப் பார்த்த மணமகன் வீட்டினர் அதிர்ச்சியடைந்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விஜய்ரூபனை தேடியுள்ளார். அதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/a-poster-to-defame-a-family-girl-was-pasted-on-wall-in-kalakad

Doctor Vikatan: பித்தப்பை புண்ணுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை; தூக்கம், உடல் எடை அதிகரிக்குமா?

என் வயது 27. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுவலி, நெஞ்சுவலி இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழலிலும் பித்தப்பையிலும் புண் இருப்பதாகச் சொல்லி மாத்திரை சாப்பிடச் சொன்னார் மருத்துவர். அந்த மாத்திரை சாப்பிட்டால் எனக்கு தூக்கம் வருகிறது. தற்போது எனக்கு உடல் எடை அதிகரித்துவிட்டது. என்னால் என் வேலைகளைக்கூட செய்ய முடியவில்லை. எப்போதும் உடல்வலி, கால்வலி இருந்துகொண்டே இருக்கிறது. களைப்பு, சோர்வும் இருக்கிறது. உடல் எடை குறைய என்ன செய்வது?

- கஜா (விகடன் இணையத்திலிருந்து)

அறுவைசிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ.

``நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றிய தகவல்கள் இல்லை. அது தெரிந்தால்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதிக தூக்கம், அதிகரித்த உடல் எடை, களைப்பு, சோர்வு, உடல்வலி, கால்வலி என அனைத்துக்கும் அந்த மருந்துகளுடன் ஏதேனும் தொடர்புண்டா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தவிர, உடல் எடையைக் குறைப்பது என்பது பொதுவான ஆலோசனைகளால் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை.

உங்களுடைய பி.எம்.ஐ (உயரத்துக்கேற்ற எடை இருக்கிறீர்களா என்ற பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கு), உங்கள் வாழ்க்கைமுறை, உடலியக்கம், உணவுப் பழக்கம் என அனைத்தையும் ஆராய்ந்துதான் உங்களுக்கேற்ற சரியான, பிரத்யேக எடைக்குறைப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்க முடியும்.

Tablets (Representational Image)

எனவே, நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரங்கள், உங்கள் ஹெல்த் ரிப்போர்ட் என எல்லாவற்றுடனும் உடல் பருமன் சிகிச்சைக்கான மருத்துவரை அணுகி, அவரது பரிசோதனைக்குப் பிறகு அவர் பரிந்துரைக்கும் விஷயங்களைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/will-tablets-taken-for-gall-bladder-ulcer-lead-to-increase-in-body-weight

ரமேஷ் பவாரின் மனைவி கார் மீது மோதிய கார்! - குடிபோதையில் இருந்த வினோத் காம்ப்ளி கைது!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியும் அவரின் மனைவியும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. தற்போது குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளி நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து குடிபோதையில் காரை வெளியில் எடுத்தார். அந்நேரம் கார் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான ரமேஷ் பவாரின் மனைவி கார் மீது மோதிக்கொண்டது. அதோடு கட்டடத்தின் கேட் மீதும் இடித்துக்கொண்டது.

வினோத் காம்ப்ளி

இச்சம்பவத்தை தொடர்ந்து கட்டடத்தின் வாட்ச்மென் மற்றும் அதில் குடியிருக்கும் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரின் மனைவி தேஜஸ்வி உட்பட சிலருடன் வினோத் காம்ப்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு வேகமாக காரை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டு சென்றார். தேஜஸ்வி இது குறித்து வினோத் காம்ப்ளி மீது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த வினோத் காம்ப்ளியின் காரை மடக்கி அவரை கைது செய்தனர்.

அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் காம்ப்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 100 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வினோத் காம்ப்ளியிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மோசடிப் பேர்வழிகள், வங்கி அதிகாரிகள் என்று கூறி ரூ.1.14 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினோத் காம்ப்ளியும், அவரின் மனைவி ஆண்ட்ரியா ஹவிட்டும் சேர்ந்து மால் ஒன்றில் பாடகர் அங்கிட் திவாரியின் தந்தை ராஜ்குமார் திவாரியை அடித்து உதைத்தனர். காம்ப்ளியின் மனைவி தனது செருப்பை எடுத்து காட்டி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த காம்ப்ளி, மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்து உதைத்ததாகவும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக தன்னை காட்டிக்கொள்ளும் வினோத் காம்ப்ளி மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/cricketer-vinod-kambli-arrested-for-drunken-driving

``யுத்தம் முடிந்த பின் வருகிறேன்!” - இந்தியா திரும்ப மறுக்கும் மாணவி சொன்ன நெகிழ்ச்சி காரணம்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவில் இருந்தபடி களநிலவரத்தை வீடியோ மூலமாக விவரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், உக்ரேனிய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

உக்ரைன் இந்திய மாணவர்கள்

மேலும், உக்ரைனில் சிக்கியிருக்கும் 20,000 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை முயன்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவம் பயில உக்ரைன் நாடு சென்ற ஹரியானாவைச் சேர்ந்த மாணவி இந்தியா திரும்ப மறுத்துள்ளார்.

இது குறித்து வெளியான தகவலில், மருத்துவம் பயிலச் சென்ற மாணவிக்கு, கல்லூரியில் தங்கும் விடுதி கிடைக்கவில்லை. அதனால் வெளியே தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். தற்போது போர் சூழல் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் யுத்தகளத்துக்குச் சென்றுவிட்டார்.

முன்னாள் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ

அதனால், அவரின் மனைவியும், மூன்று குழந்தைகளும் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அந்த குழந்தைகளை விட்டு வர மனமில்லை. எனவே யுத்தம் முடிந்த பின் இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் தாய் எவ்வளவு முயன்றும் அவர் வர மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த மாணவியின் குடும்ப நண்பர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/indian-student-wants-to-stay-back-in-ukraine-till-end-of-war-to-look-after-landlords-family

"எளிமையே பெருமை" - பாபு ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை உணர்த்தும் 5 பாடங்கள் - நினைவு தினப் பகிர்வு!

ஒருபோதும் ஒருதலைப்பட்சம் கூடாது

1950-ல் இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட அன்று ராஷ்டிரபதி பவனில் அவர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது. "இந்தியா ஒரு போதும் தனது எந்தக் கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. கட்டாயப்படுத்துவதும் இல்லை. தெய்வ நம்பிக்கை உள்ளவர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர், இறைவனைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர் ஆகிய அனைவருக்கும் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதுதான் இந்தியாவின் அணுகுமுறை".

ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், பூலாபாய் தேசாய்

உயரப் பறக்கும் அதே நேரம் மண்ணில் கால் பதிக்க வேண்டும்

என்னதான் வாழ்க்கையில் பல உயரங்களை அடைந்தாலும் நம் மண்ணின் பெருமையை மறக்கக்கூடாது. மக்களை விலக்கி வைக்கக்கூடாது. ராஷ்டிரபதி பவனில் ராஜேந்திர பிரசாத்துக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்துள்ளனர். ஆனால் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனவுடன், "ஆண்டுக்கு ஒருமுறை ராஷ்டிரபதி பவன் வளாகத்திலுள்ள பிரமாண்டமான முகலாயத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும்" என்றார்.

எளிமையே பெருமை

சிறப்புகளை அடைய அடைய தலைக்கனம் அதிகமாக வாய்ப்பு உண்டு. அப்படி நேராமல் பார்த்துக் கொண்டால்தான் அந்த சிறப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்விச் சிறப்புகள் நாடறிந்தவை. எனினும் அவருக்கு முன்பாகக் குடியரசுத் தலைவராக விளங்கிய ராஜேந்திர பிரசாத்தும் கல்வியில் சிறப்புப் பெற்றவர்தான். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர் (அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் ஓரிருவருக்குதான் முதல் வகுப்புத் தேர்ச்சி வழங்கப்படும்). ஒரு தேர்வில் ராஜேந்திர பிரசாதின் விடைத்தாளில், "தேர்வாளரை விட இந்த மாணவன் மேம்பட்ட அறிவுள்ளவனாக இருக்கிறான்" என்று எழுதியிருந்தார் ஒரு தேர்வாளர்.

குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் / மற்றொரு படம்: தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்கும் தலைவர்கள்

பிறருக்கு உபதேசம் செய்வதை நாமும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ராஜேந்திர பிரசாத். காந்தியின் சீடர். ஒரு முறை ‘மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களை நம் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டும்’ என்று காந்தி உரை நிகழ்த்த, அதைக்கேட்ட ராஜேந்திரபிரசாத் தன் மகனை அவன் படித்துக் கொண்டிருந்த மேற்கத்தியக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேறச் செய்து அவனை வித்யா பீடத்தில் சேர்த்தார். இது மரபு சார்ந்த இந்திய வழிக் கல்விக்கூடம்.

ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி மற்றும் நேரு. இந்தக் குடியரசு தின நிகழ்ச்சிகள் முழுவதுமாகவே நேரு மிக உற்சாகமாக காணப்பட்டதாக நம் செய்தியாளர் பதிவு செய்திருக்கிறார்.

சுய பரிசோதனை ஞானத்தை ஊட்டும்

கால ஓட்டத்தில் வேகமான உலகில் நாம் அடுத்து அடுத்து என்று காரியங்களில் ஈடுபடுகிறோம். நடு நடுவே கொஞ்சம் நின்று நம்மை உணர்ந்து நிலைநிறுத்திக் கொண்டால் அது தெளிவான பாதையைக் காட்டும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலகட்டத்தில் ராஜேந்திர பிரசாதின் உடல்நலம் கெட்டது. அவர் நினைத்திருந்தால் டெல்லியிலேயே தங்கியிருந்து உடல் நலத்துக்கான பலவித நவீன சிகிச்சைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் பீகாரில் உள்ள தன்னுடைய எளிய வீட்டுக்குச் சென்றுவிட்டார். "நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அங்கேயே திரும்புவதுதான் நல்லது" என்று இதைப் பற்றி குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/five-lessons-to-learn-from-babu-rajendra-prasad-life

`நீட் தேர்வை விட ஆபத்தா?!’ - கலை, அறிவியல் கல்லூரிகளில் தேசிய கல்விக் கொள்கை... ஒரு பார்வை!

கல்வி முறையில் தேசிய அளவில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தேர்வு முறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

கல்லூரி மாணவர்கள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பிஎஸ்.சி., பி.காம் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களில் தேர்ச்சிபெறாத மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டுக்கு செல்லலாம். அதேபோல, இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சிபெறவில்லையென்றால், மூன்றாம் ஆண்டுக்கு சென்றுவிடலாம். தோல்வியடைந்த பாடங்களை அங்கு போய் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். தற்போது இருக்கக்கூடிய இந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தகுதி அவசியம் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் சோதனை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பில் சேருவதற்கான அடிப்படைத் தகுதியாக தற்போது இருக்கிறது. இந்த நிலையில், நுழைவுத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின் படி முதலாம் ஆண்டில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கொண்டுவரப்படும் இந்த விதிமுறைகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முந்தைய அ.தி.மு.க அரசு, தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிற இந்த மாற்றங்களை ஆதரிக்கவில்லை. ‘இது, கிராமப்புற மாணவர்களை கடுமையாகப் பாதிக்கும்’ என்று அன்றைய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கே.பி.அன்பழகன்

தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க-வும், எதிர்க் கட்சியாக இருந்தபோதே தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு நிலையிலேயே தற்போதும் தொடர்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல் 18.02.2022 அன்று தமிழக அரசுக்கு கிடைத்தது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்” என்று பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல வழிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நடைமுறையில் இந்த மாற்றங்களின் மாணவர்களின் கல்வியையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் நலன்களை இது பாதிக்கும் என்று கல்வியாளர்களில் ஒரு தரப்பினர் கவலையுடன் கூறுகிறார்கள்.

இது குறித்து கல்வியாளர் ந.மணியிடம் பேசினோம்.

“கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் பெரும்பாலான மாணவர்களின் கல்வித் தரம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பது யதார்த்த நிலை. குறிப்பாக, சுயநிதி அடிப்படையில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வந்த பிறகு, மாணவர்களின் கல்வித் தரம் மேலும் குறைந்திருக்கிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால், அந்த கல்லூரியின் நன்மதிப்பு குறையும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அதனால், அதன் மாணவர் சேர்க்கை குறையும். அதன் காரணமாக, கல்லூரியின் வருமானம் குறையும். எனவே, தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவில்லையென்றாலும், எப்படியாவது தேர்ச்சி பெறவைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்படும் மாற்றங்களை சுயநிதி கல்லூரிகள் விரும்பமாட்டார்கள். சுய நிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தேர்வு முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறைகளில் இருக்கும் பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தளவில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய மாணவர்களும்தான் படிக்கிறார்கள். முதலாம் ஆண்டு செமஸ்டர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியர் பேப்பர்கள் இருந்தால், எப்படியாவது இரண்டாம் ஆண்டில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள். அதேபோல இரண்டாம் ஆண்டு அரியர் பேப்பர்களை மூன்றாம் ஆண்டில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்.

எப்படியாவது சிரமப்பட்டு பட்டம் பெற்றுவிடுகிறார்கள். அல்லது, மூன்று ஆண்டுகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அரியர் பேப்பர்களை பிறகு எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகிறார்கள். அதன் பிறகு, ரயில்வே, வங்கி, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கடுமையாக படிக்கிறார்கள். அந்த முயற்சியில் பலர் வெற்றிபெறுகிறார்கள். மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு அவர்கள் போய்விடுகிறார்கள்.

இந்த வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது என்பது கவலைக்குறிய அம்சமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான், இரண்டாம் ஆண்டுக்கு செல்ல முடியும். இல்லையென்றால், முதலாம் ஆண்டைத் தாண்ட முடியாது. அதேபோல, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டுடன் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறவும் தேசிய கல்விக்கொள்கை வழிவகை செய்கிறது. மூன்று ஆண்டு படிப்பை நிறைவு செய்யாமல், முதலாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு, அல்லது இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஸ்டாலின், ரவி

ஆனால், இந்த சான்றிதழால் அந்த மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு எந்த பயனும் இல்லை. முதலாம் ஆண்டை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்கள், விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்கலாம் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படியெல்லாம் யாரும் மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில், நீட் தேர்வைவிட இது ஆபத்தான ஒன்று” என்கிறார் கல்வியாளர் ந.மணி.

மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. அந்த அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தினார். அதற்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால், தேசிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது கேள்விக்குறியாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/will-national-education-policy-affect-arts-and-science-college-students

உக்ரைன்: `அவன் இல்லாம, நான் வரமாட்டேன்!' - தனது நாய் இல்லாமல் நாடு திரும்ப மறுக்கும் இந்திய மாணவர்

போர் தீவிரம் அடைந்துள்ள உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இந்தியாவிற்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் சிலர் உக்ரைன் எல்லையில் சிக்கிக்கொண்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் தன்னுடன் ஆசையாக வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்திய மாணவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு செல்வதால் ரிஷப்பும் இந்தியா செல்ல விரும்புகிறார். ஆனால் தன்னுடன் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து செல்லவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

நாடு திரும்பிய இந்திய மாணவர்கள்

நாய் இல்லாமல் வாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டதற்கு அப்படி வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ``எனது வளர்ப்பு நாயை இந்தியாவுக்கு கொண்டு செல்ல என்ன ஆவணங்கள் தேவையோ சொல்லுங்கள், ஏற்பாடு செய்கிறேன்” என்று ரிஷப் கூறிக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து ரிஷப் கூறுகையில், ``எனது வளர்ப்பு நாயை என்னுடன் அழைத்து செல்ல அனைத்து ஆவணங்களையும் தயார் செய்கிறேன். ஆனால் புதிது புதிதாக ஆவணங்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை. டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியபோது, அந்த அதிகாரி கண்டபடி திட்டிவிட்டு உதவி செய்ய மறுத்துவிட்டார்.

வளர்ப்பு நாயுடன் ரிஷப்

அரசு எனக்கு சட்டப்படி தேவையான ஆவணங்களை வழங்கி இருந்தால், நான் இந்நேரம் இந்தியாவில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதோடு தனது நாயுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது கீவ்-ல் இருக்கும் பதுங்கு குழியில் ரிஷப் தனது வளர்ப்பு நாயுடன் பதுங்கி இருக்கிறார். அடிக்கடி வெடிகுண்டு சத்தம் கேட்பதால் தனது வளர்ப்பு நாய் அடிக்கடி அழுதுகொண்டே இருப்பதாக ரிஷப் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அரசு எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ரிஷப்பிற்கு தனக்கு வளர்ப்பு நாய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/india/student-refusing-to-return-from-ukraine-without-a-pet-dog

இன்றைய ராசி பலன் | 28/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/28022022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 26 பிப்ரவரி, 2022

யூரோ டூர் - 27: ஐரோப்பிய ஒன்றியம் உருவான கதையும், அதனால் உறுப்பு நாடுகள் அடைந்த வளர்ச்சியும்!

சோவியத் வீழ்ச்சியில் துளிர்த்த கிழக்கு ஐரோப்பா

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி கிழக்கு ஐரோப்பாவில் பெரும் புவிசார் அரசியல் எழுச்சியின் முக்கிய காலகட்டமாக வரலாற்றில் பதியப்பட்டது. சிதைந்த சோவியத் சாம்பலிலிருந்து 15 புதிய நாடுகள் முளைத்தன.

பால்டிக் நாடுகளான லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா தமது சுயாட்சியை முதலில் அடைந்தன. அதைத்தொடர்ந்து மக்கள் வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்காகப் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்ததன் மூலம் உக்ரைன் அடுத்ததாக வெளியேறியது. இது சோவியத் ஒன்றியத்திற்கு மரண அடியாக இருந்தது. ஏனெனில் உக்ரைனின் வெளியேற்றம் சோவியத் எனும் ஆலவிருட்சத்தை வேரோடு அசைத்துப் பார்த்தது.

சோவியத் யூனியன்

பல பால்டிக் நாடுகள் சோவியத் சரிவை அடுத்து கம்யூனிசத்தை கைவிட்டு மேற்குலகோடு இணைந்து ஐரோப்பிய சமூக அங்கத்துவத்தை பெறுவதில் அக்கறை காட்டின. 1991-ல் முடிவுக்கு வந்த வார்சா உடன்படிக்கையைத் தொடர்ந்து நேட்டோவில் உறுப்பினராக இணைந்து கொள்ளவும் இவை ஆர்வம் கொண்டன. அதில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நேட்டோவில் இணைந்து கொண்டன. ஜோர்ஜியா, பெலரஸ், உக்ரைன் போன்ற சில முந்தைய சோவியத்தின் நாடுகள் மட்டும் மிஞ்சியுள்ள நிலையில், நேட்டோவில் இணைவதற்கான உக்ரைனின் முடிவுக்கு ரஷ்யா கடும் எதிர்பை தெரிவித்து வந்தது. அந்தப் பதற்றம் கடைசியில் யுத்தமாக இன்று வெடித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் வெடித்துள்ள ஒரு பெரிய போரின் முடிவு என்னவாகும் என்ற கேள்வி முழு உலகையுமே சூழ்ந்துள்ளது. கிழக்கு நோக்கி தன் எல்லையை விரிவுபடுத்த மாட்டோம் என நேட்டோ வழங்கிய வாக்குறுதியை மீறி தற்போது தனது எல்லையில் உட்புக முயல்வதைக் கடுமையாகத் கண்டிக்கும் ரஷ்யா, அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதி, காட்டமாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சரி, நிகழ்காலத்தை விடுத்து, வரலாற்றின் பக்கமே போவோம். சோவியத் ஒன்றியத்தின் எட்டாவது மற்றும் இறுதித் தலைவருமான Mikhail Sergeyevich Gorbachev-ன் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தம் புதிய சுயாட்சியை அறிவித்தன.

கம்யூனிசத்திற்குப் பிறகான ஐரோப்பா

என்னதான் சோவியத் வீழ்ந்தாலும் கம்யூனிசத்திலிருந்து விலகுவது ஒரே இரவில் நடக்கவில்லை. 1989 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரங்கள் பெரும்பாலும் தேக்கநிலையிலேயே இருந்தன. பல பகுதிகளில் உள்ள சந்தைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் சரக்குகளைப் பராமரிக்கவும் மறுசீரமைக்கவும் போராடியதால், பொருள்கள் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருந்தன. IMF மற்றும் உலக வங்கி போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பாவில் பொருளாதார மாற்றத்திற்கான பல விதிமுறைகளை வகுத்தன. ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பியப் பொருளாதாரத்தை உறுதியாகப் பேணவும், வர்த்தக சந்தைப்படுத்தல் சமநிலையை உருவாக்கவும், ஐரோப்பியர்களிடையே கட்டுப்பாடுகள் இல்லாத போக்குவரத்து முறைகளை உருவாக்கவும் பல சர்வதேச நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நிலக்கரி மற்றும் எஃகு தொழிற்சாலைகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1951இல் பாரிஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகள் தங்கள் நிலக்கரி மற்றும் எஃகு தொழில்களை பொதுவான நிர்வாகத்தின் கீழ் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் எந்த ஒரு நாடும் கடந்த காலத்தைப் போல மற்ற நாடுகளுக்கு எதிராகப் போர் ஆயுதங்களை உருவாக்க முடியாது என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் உருவான ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் (European Coal and Steel Community) இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) உருவாக்க வழிவகுத்தது.

European Union and European Economic Area (EEA)

ஐரோப்பாவில் பல புதிய நாடுகள் முளைத்ததைத் தொடர்ந்து நாடுகளுக்கு இடையே மற்றுமொரு ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நிறுவனம் நிறுவப்பட்டது. அமைதியான, ஒன்றுபட்ட மற்றும் வளமான ஐரோப்பாவைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நவம்பர் 1, 1993, மாஸ்ட்ரிக்ட், நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட European Union, 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாக பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியத்தில் தன் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இன்று செயல்படுகிறது.

உண்மையில் பார்க்கப்போனால் ஹிட்லர் கண்ட கனவும் இதுதான். ஒன்றிணைந்த ஐரோப்பா, அதில் ஒற்றை நாணயம், ஒரே சட்டம், எல்லைகள் இல்லா வர்த்தகம் என ஹிட்லர் விரும்பியதும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு அமைப்பைத்தான். ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி சர்வாதிகாரத்தின் அடர்ந்த கூறுகளைக் கொண்டிருந்தது. பொதுவாக ஐரோப்பா என்று நோக்காமல் அனைத்தையும் ஜெர்மனியை மையமாக வைத்தே அவர் சிந்தித்தது தவறாகிப் போனது. ஹோலோகாஸ்ட், யூதப் படுகொலைகள், சோவியத் மீதான தாக்குதல் போன்ற சில விஷயங்களை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் இன்று வரலாறு விதமாக மாறியிருக்கும். நாம் பார்க்கும் ஐரோப்பாவும் வேறு உருவம் பெற்றிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பாவில் யூரோப்பியன் யூனியன் செயற்பாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் ஐரோப்பிய ஒன்றியம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஐரோப்பாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெருமளவில் உதவுகிறது. இது தன் உறுப்பு நாடுகளின் பொதுவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நிர்வகிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய வலைதளத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களாக, ஐரோப்பியக் குடியுரிமையை நிறுவுதல், சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், ஐரோப்பியப் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் உலகில் ஐரோப்பாவின் பங்கை வலியுறுத்துதல் போன்றன வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பொதுவான ஒரு ஐரோப்பிய நாணயத்தை இது அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் ஸ்காண்டிநேவியா நாடுகள் மட்டும் இணைந்து கொள்ளவில்லை.

ஐரோப்பிய யூனியனில் 447.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் முக்கிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. எந்தவொரு உறுப்பு நாடுகளும் அதன் சொந்த அரசியலமைப்பு தேவைகளுக்கு ஏற்ப யூனியனில் இருந்து விலகவோ வெளியேறவோ முடிவு செய்யலாம். ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் எந்தவொரு நாட்டின் குடிமகனும் வேலை அனுமதியோ அல்லது விசாவோ இல்லாமல் அதன் 27 உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வாழவும் வேலை செய்யவும் முடியும். அதே வழியில், ஓர் உறுப்பு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேறு எந்த உறுப்பு நாட்டிலும் எந்த சிறப்பு அனுமதிகளோ அல்லது கூடுதல் வரிகளோ இல்லாமல் விற்கப்படலாம்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை ஐரோப்பியச் சுதந்திர வர்த்தகப் பகுதி (EFTA) நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்காக 1994ல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். EEA 31 நாடுகளைக் கொண்டுள்ளது. அதில் 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனும் அடங்கும்.
யூரோ கரன்ஸி

ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அமைப்பாக உருவானதில் வர்த்தக ரீதியாக மிகப்பெரும் நன்மை அடைந்தது ஜெர்மனியும் பிரான்ஸுமே. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பது ஏனைய சிறிய நாடுகளுக்குக் கூட பெரியளவில் வரப்பிரசாதமாகவே போனது. European பாஸ்போர்ட், வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் இலவசக் கல்வி, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, குழந்தைப் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள், கட்டுப்பாடு இல்லாத வர்த்தகம், எந்த ஐரோப்பிய நாட்டிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வேலை செய்யலாம் போன்ற பல காரணங்களினால் தற்போது அங்கத்துவம் பெறாத ஐரோப்பிய நாடுகளும் EU-வில் அங்கம் வகிக்க முட்டி மோதுகின்றன. அதேவேளை UK போன்ற நாடுகள் EU-விலிருந்து விலகவும் இதுவே காரணம். அது பற்றி நாம் மற்றுமொரு அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். இந்தப் பணக்கார நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பது தமக்கு பெரும் சுமை எனக் கருதக் காரணம் அவர்களின் தனிநபர் வருமானத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய அங்கத்துவக் கட்டணம் மற்றும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளது என்பதுதான். இதுவே நார்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளை அதிருப்தி அடையவும் செய்துள்ளன.

யூகோஸ்லாவியாவின் பிளவு

ஐரோப்பாவின் தெற்கு ஸ்லாவிக் மக்களுக்கு பால்கன் தீபகற்பத்தில் தமக்கான ஒரே மாநிலம் இருப்பது நல்ல யோசனையாக ஒரு காலத்தில் தோன்றியது. விளைவு, முதல் உலகப்போருக்குப் பின்னர் தெற்கு ஸ்லாவ்களின் நிலம் என்ற பொருள் தரும் யூகோஸ்லாவியா ஆறு முக்கிய ஸ்லாவிக் நாடுகளை ஒன்றாக இணைத்து உருவானது. இந்த மக்கள் Servo-Croatian எனும் ஒரு பொதுவான மொழியைப் பேசினாலும் வெவ்வேறு வரலாறுகள், வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் தமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருந்தனர். முதலாம் உலகப் போருக்குப் பிறகு, யூகோஸ்லாவியா எனும் பெரும் தேசம் சோவியத்தின் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பலமாகக் கட்டுண்டிருந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு இந்தக் குடியரசும் வீழ்ந்தது.

சோவியத்தின் ஓர் அங்கமாக இல்லாவிட்டாலும் தீவிர கம்யூனிஸ்ட் தேசமாக இருந்த யூகோஸ்லாவியா சோசலிச பெடரல் குடியரசு ஜூன் 25, 1991 - ஏப்ரல் 28, 1992 வரையிலான காலப்பகுதிக்குள் ஐந்து மாநிலங்களாக உடைந்தது.
யூகோஸ்லாவியா

இன-தேசியவாதத்தின் எழுச்சி, தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் செர்பிய விரிவாக்கங்களால் உடைந்த யூகோஸ்லாவியா எனும் பரந்த தேசத்தின் துண்டுகளிலிருந்து போஸ்னியா, ஹெர்சகோவினா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லோவேனியா, மற்றும் யூகோஸ்லாவியா ஃபெடரல் குடியரசு (பின்னர் செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ என அழைக்கப்பட்டது) எனும் ஐந்து புதிய தேசங்கள் மலர்ந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில்லா பயணத்தின் ஆரம்பம்

ஜூன் 14, 1985ல் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் பொதுவான எல்லைகளில் சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக ஒழிப்பது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் எல்லையில் உள்ள லக்சம்பேர்க்கின் ஷெங்கன் எனும் ஒரு சிறிய நகரத்தில் இது கையெழுத்திடப்பட்டதால் அதன் நினைவாக இந்த ஒப்பந்தம் ஷெங்கன் ஒப்பந்தம் (Schengen Agreement) எனப் பெயரிடப்பட்டது.

ஜூன் 19, 1990 அன்று, ஐரோப்பா முழுவதும் ஷெங்கன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் முக்கிய விஷயங்களாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொதுவான எல்லைச் சோதனைகள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான பொதுவான பகுதிகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன.

இதன் ஏனைய முக்கிய அம்சங்களாக EU அல்லாத குடிமக்கள் ஷெங்கன் பகுதிக்குள் நுழைவது மற்றும் குறுகிய காலம் தங்குவது தொடர்பான விதிகளை நிர்ணயித்தல், புகலிட விவகாரங்கள் (எந்த உறுப்பு நாட்டிலும் புகலிடத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படலாம்) தொடர்பான தீர்மானம், எல்லை தாண்டிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போலீஸ் ஒத்துழைப்பு, மற்றும் நீதித்துறை விஷயங்களில் ஷெங்கன் நாடுகளிடையே ஒத்துழைப்பு போன்றவை முடிவு செய்யப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பியச் சமூகம் இதன் மூலம் கணிசமான நன்மையைப் பெற்றது. மார்ச் 1995-இல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகியவை ஏற்கெனவே இருந்த ஐந்து உறுப்பினர்களுடன் புதிதாக இணைந்தன. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்றவை இதில் இணைந்தன. 2007-ம் ஆண்டில், செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக ஷெங்கன் பகுதி விரிவடைந்தது. 2008-ல் சுவிட்சர்லாந்தையும் 2011-ல் லிச்சென்ஸ்டைனையும் சேர்த்ததன் மூலம் இப்பகுதி தற்போது மொத்தம் 26 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பாவின் வெற்றிகரமான ஒற்றை அங்கமாக மாறியது.

ஷெங்கன் பகுதியானது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வசிக்க, வேலை செய்ய மற்றும் உள் எல்லைகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஐரோப்பியர்கள் ஒரு ஷெங்கன் நாட்டிலிருந்து மற்றொரு ஷெங்கன் நாட்டில் பணி நிமித்தமாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஷெங்கன் உள் எல்லைகளைக் கடக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஷெங்கன் பகுதிக்குள் 1.25 பில்லியன் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது ஐரோப்பியச் சுற்றுலாத் துறைக்கும் பெருமளவில் லாபம் சேர்க்கிறது.

அது மட்டுமல்ல, ஷெங்கன் பகுதி அதன் பங்கேற்பு மாநிலங்களுக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார நன்மைகளையும் கொண்டு வருகிறது. அது நிறுவப்பட்டதிலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் காலப்போக்கில் அதிகரித்து ஐரோப்பிய வணிகங்களின் வளர்ச்சியை எளிதாக்கியது. உதாரணத்துக்குக் கடந்த காலங்களில் லாரிகள் குறிப்பிட்ட ஷெங்கன் எல்லைகளைக் கடக்கப் பல மணிநேரம் ஆனது. ஆனால், இப்போது அது சில மணித்துளிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இது ஐரோப்பா முழுவதும் பொருள்களை நகர்த்துவதை மிகவும் எளிதாகவும், விரைவாகவும், மலிவாகவும் ஆக்கியது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பாவில் வணிகம் துளிர்க்கத் தொடங்கியது. இன்று நாம் நமது அன்றாட வாழக்கையில் ஒரு அங்கமாகிப் போன சில பிரம்மாண்டமான பிராண்ட்கள் இந்தக் காலகட்டத்தில்தான் பிறந்தன. பனிப் போரின் பின்னர் ஐரோப்பாவில் முளைத்து இன்று உலகளாவிய ரீதியில் ஆலவிருட்சமாய் விரிந்து வேர்விட்டு, சக்கை போடு போடும் ஐரோப்பிய கம்பெனிகள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-27-the-formation-of-the-european-union-and-how-it-benefitted-the-nations