Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிவகங்கை: ஹாக்கி பயிற்சி; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - போக்சோவில் பயிற்சியாளர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு பெண்கள் ஹாக்கி கிளப் என்ற அமைப்பு செயல்படுகிறது. கடந்த சில வருடங்களாக செயல்படும் இந்த கிளப்பில், ஏராளமான பெண்கள் ஹாக்கி பயிற்சி பெற்று பல இடங்களில் பரிசுகளும் பெற்றுவருகின்றனர். இதில் பயிற்சியாளராக உள்ள சங்கர் தி.மு.க விலும் பொறுப்பு வகித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை

மேலும் சங்கரின் தந்தை ரைஸ்மில் நடத்தும் தொழில் அதிபர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பள்ளத்தூரை சேர்ந்த பயிற்சியாளர் சங்கர் தன்னிடம் பயிற்சி பெரும் சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோர்களிடம் நடந்த விஷயங்களை தெரிவித்ததை தொடர்ந்து, பயிற்சியாளர் சங்கர் மற்றும் அவரின் உதவியாளர் கண்ணன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் புகாரை பதிவு செய்த காரைக்குடி காவல்துறையினர், சங்கர் மற்றும் அவரது உதவியாளர் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

பயிற்சியாளர் சங்கர்

இது குறித்து காரைக்குடி டி.எஸ்.பி அருண், ``பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரின் புகாரை தொடர்ந்து குற்றவாளிகள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மேலும் இவர்கள் மீது வேறு எதுவும் குற்றச்சாட்டுகள் உள்ளதா என்பதையும் விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் பேசியவர்கள், சங்கர் அடிக்கடி அவர் அறைக்கு வர சொல்லி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாகவும், இதனை வெளியில் சொன்னால் உயிரோடு விடமாட்டேன் என்று மிரட்டியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சங்கரிடம் பயிற்சிபெறும் வேறு சில மாணவிகள், ``எங்கள் பயிற்சியாளர் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு திட்ட மிட்டு புகார் அளித்துள்ளதாக” காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/sivaganga-hockey-coach-arrested-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக