Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

`ஸ்டேஷனுக்கு வராமலேயே புகார் அளிக்கலாம்!' - நீலகிரி காவல்துறையின் புதிய செயலி

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு வெளியில் செல்ல முடியால் உள்ளனர். கொரோனா காலத்தில் குற்றச் சம்பவங்கள் சற்று அதிகரித்தாலும், புகார் அளிக்க மக்கள் காவல் நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புது அப்ளிகேஷனை

தொலைதூரத்தில் உள்ள மக்கள், காவல் நிலையம் அல்லது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்துக்குச் செல்ல வேண்டுமானால் பணம் மற்றும் நேரவிரயம் ஏற்படுகிறது.

மேலும், பலர் உரிய நேரத்திற்கு புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் நீலகிரி காவல்துறை சிறப்பு செயலியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் துவக்கி வைத்தார்.

புது அப்ளிகேஷனை அறிமுகப்படுத்திய நீலகிரி காவல்துறை.

`Nilgiris District Poilce’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து நம்மிடம் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்,`` நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், தேவாலா போன்ற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக புகார் அளிப்பதற்காக மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வருகின்றனர். தூரத்தில் இருந்து வருவதால் நேர விரயம், தாமதம், வீண் அலைச்சல் போன்ற பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும், தற்போது கொரோனா தொற்று உள்ளதால் பயணம் செய்து வந்து புகார் அளிப்பதில் சிக்கல் உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு நீலகிரி மாவட்ட காவல்துறைக்கென தனியாக பிரத்யேக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read: நீலகிரி: `அரசுப் பள்ளிகளை இழக்கக் கூடாது!' - மகளை மலைக்கிராமப் பள்ளியில் சேர்த்த கல்வி அலுவலர்

பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி நேரடியாக வராமல் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். மேலும், வருங்காலங்களில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுலபமாக தங்களது புகார்களை இந்த செயலி மூலம் அளிக்க முடியும்.

புது அப்ளிகேஷனை அறிமுகப்படுத்திய நீலகிரி காவல்துறை.

செயலி மூலம் பெறப்படும் புகார்களை நேரடியாக இதற்கென நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள் சிறப்புப் பிரிவுகள் உட்பட அனைத்து விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்களும் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்டு செல்ல வேண்டிய சுற்றுலாத் தளங்களின் விவரங்கள், தாங்கள் இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையம், பஸ் நிலையம், வாகன நிறுத்துமிடங்கள், வாட்டர் ஏ.டி.எம் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்"என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/nilgiri-district-police-introduce-new-mobile-app

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக