Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

`முதுமலையில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்!'- உற்சாகமான யானைகள் #NowAtVikatan

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி!

யானைகள்
யானைகள்
யானைகள்

விநாயகர் சதுர்த்தி விழா முதுமலையில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலைச் சுற்றி வலம் வந்தும், கால்களை உயர்த்தியும் யானைகள் விநாயகரை வணங்கின. யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டது.

- சதீஸ் ராமசாமி, படங்கள்: கே.அருண்

Also Read: விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறையா... அரசுத் தரப்பில் சொல்வது என்ன?

இந்தியாவில் கொரோனா - அப்டேட்ஸ்!

கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 29,75,701 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 55,794 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,22,578 ஆகவும் உயர்ந்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/22-08-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக