
மிரட்டும் மேகங்களோடும் சீறும் கடல் அலைகடலோடும் வலை இழுக்கும் மீனவர்கள் ...

ஆணுக்கு சளைத்தவள் இல்லை எமது மீனவப்பெண்கள்!
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்....
மிதவைகளின் துணையுடன் மீன் பிடித்து வரும் கடலோடிகள்!
தாலாட்டும் கடலில், தாய்மடியில் உறங்கும் மீனவர்கள்!

கிடைத்த குறைந்தளவு மீன்களை சுமந்து செல்லும் கரைவலை மீனவர்கள்!
கரைதிரும்பிய மீனவர்கள், வலையிலிருந்து மீன்களை பிரித்தெடுக்கும் பணியில்!
சுறுசுறுப்பில் எறும்பை மிஞ்சும் பாம்பன் பகுதி மீனவர்கள்!
மீன்களை வெயிலில் உலரவைத்து விற்பனை செய்ய தயாராகும் நெய்தல் நிலத்துப் பெண்கள்!

இதுமட்டுமே அல்ல எங்கள் வாழ்க்கை ... புயல் மழையால் படகுகள் உடையும்போது எங்கள் மனசும் நொறுங்கிப்போகும்!
ஒவ்வொருநாளும் சூரிய அஸ்தமனத்தை நோக்கியே எங்கள் வாழ்வு பயணிக்கிறது!
source https://www.vikatan.com/ampstories/news/general-news/life-of-fisherman-in-visual-story
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக