Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கரூர்: அம்மா கிளினிக்கைத் திறந்த அமைச்சர்... சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் காயம்!

கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்த அம்மா மினி கிளினிக்கின் வராண்டா கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுமிகளுக்குக் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியாகவே, ஸ்டாலின், கமல்ஹாசன், செந்தில் பாலாஜி என பலரும் இந்த சம்பவத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

அம்மா கிளினிக் திறப்பு விழா

கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக, பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி

நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, நேற்று மாலை கரூர் தொழிற்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தையும் திறந்து வைத்தார்.

இடிந்து விழுந்த சுவர்

தொடர்ந்து, அம்மா சமுதாயக் கூடத்துக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, தோகைமலை அருகே உள்ள கொசூர் பகுதியில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்தார். அவர் திறந்து வைத்த சில நிமிடங்களில் கிளினிக் பகுதியில் உள்ள வராண்டாவின் கைப்பிடிச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த சுவர் இடிந்த சம்பவத்தில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டடத்தில் அதிகாரிகள் அவசர அவசரமாக அம்மா மினி கிளிக்கைத் திறக்க ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் கனமழையில் ஊறிபோய் டேமேஜ் ஆகியிருந்த அந்த வராண்டா கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. அமைச்சர், அம்மா மினி கிளினிக்கை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகள் மக்களைத் திரட்டியிருந்தனர். அதில், குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். அமைச்சர் கிளினிக்கை திறந்தபோது, அங்கே நின்றிருந்த அ.தி.மு.கவினர் அந்த சுவற்றில் அழுத்தம் கொடுத்ததால், அந்த சுவர் இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

இடிந்து விழுந்த சுவர்

அப்போது, அந்த சுவற்றின் மீது இரண்டு சிறுமிகள் விழுந்ததால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். `மாறாக, இடிந்து விழுந்த சுவற்றுக்கு அடியில் சிறுமிகள் மாட்டியிருந்தால், நிலைமை விபரீதமாகியிருக்கும்' என்று சொல்கிறார்கள், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் சிலர். அதோடு, `தேர்தல் வருவதாக் மக்களை ஏமாற்ற, இப்படி பழைய கட்டடங்களில் அம்மா கிளினிக்கை அவசரகதியில் திறந்து, மக்களின் உயிரோடு விளையாடுறாங்க, இந்த அரசும், மாவட்ட அமைச்சர்களும்' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Also Read: திமுக-வின் `ஸ்லீப்பர் செல்கள்’ திட்டம் முதல்`அம்மா மினி கிளினிக்’ மெகா குளறுபடிவரை கழுகார் அப்டேட்ஸ்

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், `அமைச்சர் திறந்து வைக்கும்போதே, மினி கிளினிக்கும் இடிந்து விழுந்துள்ளது. இதுதான், இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் லட்சணம்' என்று கூறியதோடு, சுவர் இடிந்து விழுவது சம்பந்தமான இரண்டு வீடியோக்களை மக்களிடம் போட்டு காட்ட வைத்தார். இன்னொருபக்கம், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில்,`கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி கிளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?' என்று கடுமையாகச் சாடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இடிந்து விழுந்த சுவர்

அதேபோல், தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, `அ.தி.மு.க ஊழல் ஆட்சியின் மற்றொரு சான்று. அ.தி.மு.க ஊழல் ஆட்சியில் கரூர் குளித்தலையில், மினி கிளினிக் திறந்து வைக்கும்போதே, இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் படுகாயம்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில், #AdmkFails என்ற ஹேஷ்டேக்கோடு பதிவிட்டுள்ளார். `



source https://www.vikatan.com/government-and-politics/controversy/2-children-injured-in-karur-amma-mini-clinic-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக