Ad

புதன், 30 ஜூன், 2021

Tamil News Today: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம்! - திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50ஆக விலையேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அதன் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு, கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையம் தமிழகத்தில் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தத்து. அதன்படி கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மைய கட்டடம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் திறந்து வைக்கிறார்.

ஸ்டாலின் - வெள்ளை அறிக்கை

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ரங்கராஜன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக