Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை: `நாளை முதல் பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்!’ - மத்திய அரசு #NowAtVikatan

புதிய கல்விக் கொள்கை - ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்! 

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டு மக்களின் கருத்துகள் மத்திய அரசால் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை முதல் 31ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பான தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 30 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

கோவிட்-19

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,44,941 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 912 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,706 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,80,567 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா உலக அப்டேட்ஸ்!

கொரோனா - உலகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,33,80,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 1,59,06,479 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8.07 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உச்சகட்ட பாதிப்பு பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

ஞாயிறு ஊரடங்கு

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதனால், மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் செயல்பட முடியாது. அவசர தேவைகள் இன்றி மக்கள் சாலையில் செல்லவும் அனுமதி கிடையாது. இதனால் சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/23-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக