Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

`இந்தியாவில் 31 லட்சத்தைக் கடந்த தொற்று பாதிப்பு!’ - கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,06,349 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 836 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,38,036 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் தேர்வு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மாலை, இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அந்த தகவலை மறுத்தார். இன்றைய கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா - ராகுல்

சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் எனவும், அவர்கள் மறுக்கும் பட்சத்தில் ராகுல், பிரியங்கா ஆகியோரில் ஒருவரை தலைவராக கொண்டு வருவது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அக்குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால், உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் சில கோரிக்கை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி குறித்த கருத்துகளால், இன்றைய செயற்குழுக் கூட்டம், அதிக கவனம் பெற்று இருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/24-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக