Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

உ.பி-யில் பஞ்சாயத்துத் தலைவரான பாகிஸ்தான் பெண்! - புகாரால் வெளியான அதிர்ச்சித் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில், 65 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக இருந்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான், கராச்சியைச் சேர்ந்த பானோ பேகம் (Bano Begum), கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். தன் உறவினர்களோடு அங்கு வசித்து வந்த பானோ பேகம், அதே ஊரைச் சேர்ந்த அக்தர் அலி (Akhtar Ali) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, நீண்ட கால விசாவில் ஈட்டா பகுதியிலேயே தங்கியிருந்த பானோ, பலமுறை இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.

பானோ பேகம், இந்தியாவில் நீண்டகால விசா மூலம் தங்கியிருந்தநிலையில், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியிருக்கிறார். அந்த ஆவணங்களைக் கொண்டு, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஈட்டா மாவட்டத்திலுள்ள கௌடவ் (Guadau) கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் பானோ பேகம். கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஷெஹ்னாஸ் பேகம் (Shehnaz Begum) கடந்த ஜனவரி 9-ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து கிராமக் குழுவின் பரிந்துரையின் பேரில் பானோ பேகம் அந்த கிராமப் பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி வகிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றும் சர்ச்சை வெடித்துள்ளது. பானோ பேகம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அதே கிராமத்தில் வசிக்கும் குவைதன் கான் (Quwaidan Khan) என்பவர் அளித்த புகாரையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pakistani-national-bano-begum-becomes-panchayat-head-in-ups-etah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக