![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/d2522fbd-1146-4492-9e56-8aac0b37cb48/vikatan_2020_08_82275d91_cf90_44eb_a5be_606e58266835_IMG_20200812_WA0023.jpg)
தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நிலச்சரிவில் சிக்கியது மூணாறு இராஜமலை தேயிலை தோட்டம்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/cb3b5358-ba3c-4ac3-8e77-9351f73943cb/a1.jpg)
பெரிய பெரிய பாறைகளால், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில், 25 வீடுகளில் வசித்த 83 பேர் சிக்கினர்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/25f0d3b9-aa64-4f65-8001-b6c0d2d58e9a/a2.jpg)
தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/ec8ea508-0637-4227-bb89-516ac50f27f8/a4.jpg)
இறந்தவர்களின் உடல்களை மீட்க டிராக்டரில் செல்லும் கேரள மாநகராட்சி ஊழியர்கள்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/b3d94058-ca02-4290-90dc-0006e7e95cfc/a5.jpg)
மீட்பு பணியில் பேரிடர் மேலாண்மை துறையினருடன் இணைந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்ட பணியாளர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/e60f8164-55a6-4d95-bb35-b2f153d08123/a6.jpg)
நிலச்சரிவு நடந்த இடத்தில் பல வீடுகள் இருந்ததற்கு சாட்சியாக , ஒரே ஒரு வீடு மட்டும் மீதம் உள்ளது!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/9880d36e-9c6d-436d-a73e-d4f5fb242cc8/a7.jpg)
இந்த நிலச்சரிவில் பலியான 71 பேரில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/5110f45d-0590-4884-970b-1588d7eb5da5/a8.jpg)
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீட்பு குழுவினரில் ஒருவர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் காட்சி!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/ff3fc927-5484-4ab4-bfa6-2869accc0e99/a9.jpg)
20 நாள்களுக்கு மேல் நடைபெற்ற மீட்புப் பணியில், நிலச்சரிவில் மண்ணில் புதைந்த உடல்களை இயந்திரம் மூலம் குழி தோண்டி தேடும் மீட்பு படையினர்!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/58b5d4d0-6a41-439b-87ae-90b03e5c0e91/a10.jpg)
கடும் பனியிலும் , மழையிலும் அருகில் இருப்பவர்கள் கூட தெரியாமல் இருக்கும் நிலையிலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது!
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/0dab3df0-39d1-45a8-92e5-e0a1ef96e244/a3.jpg)
83 தொழிலாளர்கள் வாழ்ந்த இடம், மண்ணும் பாறையுமாக தரைமட்டமாக கிடக்கிறது!
source https://www.vikatan.com/ampstories/news/india/kerala-munnar-rajamala-landslide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக