Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

Tamil News Today: மீண்டும் 40,000-ஐ கடந்த ஒருநாள் பாதிப்பு! - இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 40,000-க்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது,

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 640. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,22,022-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,06,63,147 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 3,99,436 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 41,678 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 44,61,56,659 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

நள்ளிரவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து! -

உத்தரப்பிரதேச மாநிலம் பரபாங்கி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பேருந்துடன் அதிவேகமான வந்த லாரி மோதியத்தில் 18 பேர் பலியாகினர். 19-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி பேசுகையில், லக்னோ - அயோத்தி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நள்ளிரசில் பேருந்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்து சரி பார்த்து கொண்டிருக்கிறார்.

விபத்து குறித்து காவல்துறை அதிகாரி

பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம், விரைவில் சரிசெய்து விடுவோம், நீங்கள் பேருந்திலே ஓய்வெடுங்கள் எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதிவேகமாக வந்த லாரி, பேருந்து பின்பக்கமாக மீது மோதி விபத்து ஏற்பட்டது என்றார். விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-28-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக