Ad

சனி, 31 ஜூலை, 2021

"உரிய காரணங்களுக்காக மனு செய்தால் நளினி முருகனுக்கு பரோல்"- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

"கொரோனா‌ காலத்தில் ஆக்சிஜன் ‌தேவையைக் கருத்தில்கொண்டு துவங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 200 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் உற்பத்தி செய்ய முடியும். நீதிமன்றப் பணியாளர்களின் தேர்வு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது.

Also Read: நளினி, முருகன் பரோலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு - காரணம் என்ன?

சட்ட அமைச்சர் ரகுபதி

உயர் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட உரிய காரணங்களின் அடிப்படையில்தான் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் நளினி முருகனின் உறவினர்கள் உரிய காரணங்களின் அடிப்படையில் மனு செய்தால் அவர்களுக்கும் பரோல் வழங்கத் தமிழக அரசு பரிசீலனை செய்யும். உச்சநீதிமன்றத்தின் கிளையைத் தென் மாநிலங்களில் அமைப்போம் என்று ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறோம். அனைத்து வசதிகளுடன் கூடிய உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/if-petitioned-for-valid-reasons-nailini-will-get-parol-says-law-minister-raghupathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக