Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

சூர்யாவுக்காக 'ஜெய் பீம்' டைட்டிலை மகிழ்ச்சியோடு கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித் !

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்'. இன்னொன்று, தன்னுடைய 2டி நிறுவன தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவான 'ஜெய் பீம்'. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.

ஜெய் பீம்

படத்தில் 30 - 40 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், பழங்குடி மக்களுக்கு ஆதரவாக வாதாடும் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். இந்தப் படத்திற்கான தலைப்புக்கிற்கு மூன்று பெயர்களை ஆப்ஷன்களாக வைத்திருக்கிறார்கள். ஆனால், கடைசியாக அவர்கள் முடிவு செய்யப்பட்ட தலைப்பு, 'ஜெய் பீம்'. இந்தத் தலைப்பில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பேசுபொருள். இந்தத் தலைப்பை பதிவு செய்ய சென்றபோது, இதே தலைப்பை இயக்குநர் பா.இரஞ்சித் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

உடனே, தயாரிப்பு தரப்பு ரஞ்சித்திடம் கேட்க, ''இந்தத் தலைப்பு சூர்யா போல நடிகர்கள் படத்திற்கு வரும்பட்சத்தில் இன்னும் வீரியமாக இருக்கும். எனவே, தலைப்பை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்'' என சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியோடு பகிந்திருந்தார் இயக்குநர் பா.இரஞ்சித்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-paranjith-gave-his-jai-bheem-title-to-suriya

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக