Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

11 வயது சிறுமியிடம் அத்துமீறல்; 45 வயது நபர் போக்சோவில் கைது! - வேலூரில் அதிர்ச்சி

வேலூர் மாநகரத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறாள். இச்சிறுமி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த மக்கான் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 45 வயதுடைய இளங்கோவன் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அவரின் தந்தையையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார் இளங்கோவன். இந்தச் சம்பவம் குறித்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இளங்கோவனை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

சிறார் வதை

‘‘பாலியல் வன்முறை செய்திகளில்லாத நாளே கிடையாது. குழந்தைகளிடம் அத்துமீறும் கொடூரர்கள், ‘வெளியில் சொன்னால் அப்பா, அம்மாவைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டிவிடுகிறார்கள். குழந்தைகள் அச்சமடைவதால், பாலியல் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்றவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் சொல்லித்தர வேண்டும். பெற்றோரைத் தவிர மற்றவர்களை அவசியம் இல்லாமல் அருகில் நெருங்கவிடக்கூடாது’’ என்கிறது, காவல்துறை.



source https://www.vikatan.com/social-affairs/crime/11-year-old-girl-sexually-harassed-45-year-old-arrested-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக