Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

தேனி: `தனி நபர் பயன்படுத்திய உழவர் உற்பத்தியாளர் குழு டிராக்டர்!’ - கொதித்த விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, விளைபொருள்கள் உற்பத்தியினை பெருக்க வழிவகை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, உழவர் உற்பத்தியாளர் குழு எண் 3-ல், ஸ்ரீரெங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து கிராம விவசாயிகள் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவிற்கு 2018-ம் ஆண்டு வேளாண்துறை சார்பில் டிராக்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், குழுவில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் டிராக்டர் வழங்கப்பட்டது தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டும் விவசாயிகள், ஒரு தனி நபர் தலைமையிலான 10 பேர் மட்டுமே அந்த டிராக்டரை கடந்த 2 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்ததை தற்போது கண்டுபிடுத்துள்ளனர்.

டிராக்டர்

Also Read: தேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா!’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி, ``2016-ம் ஆண்டு குழு ஆரம்பிக்கப்பட்டது. குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் டிராக்டர் வழங்கியுள்ளது அரசு. ஆனால், ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், அதனை குழுவில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், தன்னுடைய பயன்பாட்டிற்கும், தன்னுடைய உறவினர்களின் பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளார். இதனைக் கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது, ’இது என்னுடைய டிராக்டர், இதில் என்னுடைய பெயரும், குல தெய்வத்தில் பெயரை எழுதி வைத்திருக்கிறேன் பாருங்கள்’ என்று கதை விட்டார்.

டிராக்டரின் பதிவு எண்ணை வைத்து நாங்கள் நடத்திய விசாரணையில், அது குழுவிற்குச் சொந்தமான டிராக்டர் எனத் தெரியவந்தது. இதுவரை டிராக்டரை 1,692 மணி நேரங்கள் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். அந்த டிராக்டரை மீட்க வேண்டும், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

டிராக்டர்

வேளாண்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``அந்த நபர் டிராக்டரை பயன்படுத்திய மணி நேரத்திற்கான பணத்தை கட்டுவதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பணம், குழுவிற்குச் சென்றுவிடும். மேலும், குழு உறுப்பினர்கள் அனைவரும் டிராக்டரைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

Also Read: தேனி: `4 மாதத்துக்குப் பிறகு உயர்ந்த வெல்லம் விலை!’ - ஓணம் குஷியில் விவசாயிகள்



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/one-man-privately-used-farmer-producer-group-tractor-in-theni-created-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக