Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

சென்னை: `100 சவரன் நகையும் வேணும்’ - திருமணமாகி ஓராண்டுக்குள் பட்டதாரிப் பெண் தற்கொலை

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வரும் சென்னை காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த நிரேஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணமான இரண்டு மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், பிரியங்கா தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 29-ம் பிரியங்கா தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்ஜினீயர் நிரேஷ்குமார்

இதுகுறித்து தகவலறிந்ததும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் பிரியங்காவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரியங்கா, மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரியங்காவின் கணவர் நிரேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``திருமணத்தின்போது பிரியங்காவுக்கு 140 சவரன் நகை போடுவதாக பெண் வீட்டினர் கூறியுள்ளனர். ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. பேசியபடி மீதி 100 சவரன் நகை போட்டால் மட்டுமே சேர்ந்து வாழலாம் என நிரேஷ்குமாரும் அவரது பெற்றோரும் பிரியங்காவிடம் கூறியதாகத் தகவல் கிடைத்துள்ளது.

தற்கொலை

Also Read: சென்னை: சரத்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த இன்ஜினீயர்! - ஷாக்கிங் ஆடியோ

அப்போது, பிரியங்காவின் பெற்றோர் நிரேஷ்குமாரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால், நிரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனால், பிரியங்கா மனம் உடைந்து தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரியங்காவின் பெற்றோர் அளித்த புகாரில் நிரேஷ்குமாரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு கைது செய்துள்ளோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது. தற்கொலை செய்த பிரியங்காவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். இந்தச் சம்பவம் சிந்தாரிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-woman-commits-over-dowry-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக