Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் ஆகியோரிடம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். அடுத்ததாக என்.ஐ.ஏ திருவனந்தபுரத்தில் வைத்து ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர். அடுத்ததாக கடந்த திங்கள்கிழமை கொச்சிக்கு அழைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அன்று விசாரணை முடிவடையாததால் மறுநாளும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும், சிவசங்கரன் பணிபுரிந்த திருவனந்தபுரம் தலைமைச் செயலக நார்த் ப்ளாக்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்யும் படலத்தில் இறங்கியுள்ளன. ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் தங்கம் கடத்தலில் யு.ஏ.இ துணைத் தூதருக்கு பங்கு கொடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிவசங்கரனின் ஆகியோர் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

திருவனந்தபுரத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் ஸ்வப்னா கணக்கு வைத்துள்ளது கண்டறியப்பட்டது. அந்த வங்கிகளுக்கு கடந்த வாரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவை அழைத்துச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வங்கி லாக்கர்களை திறந்து பார்த்தபோது அதில் 1.05 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 123 சவரன் அதாவது சுமார் ஒரு கிலோ தங்க நகைகளும் லாக்கரில் இருந்து எடுக்கப்பட்டன.

Also Read: பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

பணம் மற்றும் நகை குறித்து ஸ்வப்னா சுரேஷிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது யு.ஏ.இ தூதரக அதிகாரியுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் தனது பங்காகக் கிடைத்த தொகைதான் இந்தப் பணம் எனவும் ஸ்வப்னா தெரிவித்திருக்கிறார். மேலும், முதல் திருமணத்தின்போது தனக்கு ஐந்து கிலோ நகைகள் போடப்பட்டதாகவும். வீடு வைக்கும் பணிக்காக அந்த நகைகளை விற்பனை செய்ததாகவும், மீதி நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஸ்வப்னா கூறியிருக்கிறார்.

ஸ்வப்னா சுரேஷ்

இதை நம்பாத அதிகாரிகள் பணத்தை வங்கிக்கணக்கில் போடாமல் லாக்கரில் வைத்தது ஏன் என்பதுபோன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் சார்ட்டர்ட் அக்கவுன்டன்டிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதிக சிவசங்கரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஸ்வப்னாவின் வங்கி லாக்கர் திறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கேரளா: `தங்கம் கடத்தலில் துணை தூதருக்கு பங்கு!’ - விசாரணையில் அதிரவைத்த ஸ்வப்னா



source https://www.vikatan.com/government-and-politics/crime/swapna-suresh-locker-open-regarding-the-gold-smuggling-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக