அமிதாப் பச்சனுக்கு கொரோனா!
பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அவரின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சானுக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தன்னுடன் கடந்த 10 நாள்களில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுவதாகப் பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
— Amitabh Bachchan (@SrBachchan) July 11, 2020
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சான் ஆகியோர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளில் மும்பை மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் 8.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 551 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,621 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: காற்று மூலம் கொரோனா பரவுமா? ஆய்வுகள் சொல்வதென்ன?
கொரோனா - உலக நிலவரம்!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,42,036 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 74,78,180 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,67,649 ஆக உயர்ந்துள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/12-07-2020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக