Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சிவகங்கை : வாள், கத்தியுடன் வீடியோ.. மக்களை அச்சுறுத்திய வாலிபர்கள் கைது!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மதகுபட்டி ஆகிய ஊர்களில் வாளுடன் இருப்பதுபோல் வீடியோ வெளியிட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாள் கத்தியுடன் வாலிபர்

கடந்த காலங்களில் வாள், பட்டாகத்தி மூலம் கேக் வெட்டி, குற்றப் பின்னணி உள்ளவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடிய சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளால் அதுபோன்ற சம்பவங்கள் ஓரளவுக்கு குறைந்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாளால் கேக் வெட்டல்

தேவகோட்டையில் முகமது அபுபக்கர் சித்திக் என்ற வாலிபர் தன் பிறந்த நாளில் வாளால் கேக் வெட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து எஸ்.பி உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய தேவகோட்டை நகர் காவல் நிலையத்தினர், வாளால் கேக் வெட்டிய முகமது அபுபக்கர் சித்திக், அவர் நண்பர்கள் ஐயப்பன், சூர்யா, முகமது ஆசிக் பொது மக்களை அச்சுறுத்திய வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.

Also Read: நாலா பக்கமும் கத்தி.. உடைக்கப் பார்க்கும் கூட்டணி! - என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?

இதுபோல் மதகுபட்டியில் ஏற்கனவே ஒரு வழக்கில் பிணையில் வந்த வாலிபர்கள் பிரேம்நாத், சங்கரலிங்கம், ராகுல் ஆகியோர் வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்த குற்றத்தில், அவர்கள் மூவரையும் மதகுப்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்கள்.

வாளுடன் வாலிபர்

இனி இதுபோல் வாள், கத்தியுடன் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து பொது மக்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை எஸ்.பி.செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/atrocities-of-youths-with-sword-knife-arrested-in-sivagangai-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக