Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

Tamil News Today: சுழற்சி முறையில் வகுப்புகள்! - தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. நடுவில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டன. தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

அதன்படி, பள்ளிகளில் 9, 10, 11 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக பள்ளி, கல்லூரிகளில் செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தை போன்று இன்று புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட உள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-09-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக