Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்த தாய் ; வழக்கு பதிவு செய்த காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தையைக் கொடூரமாக தாக்கும் நான்கு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், கராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும், இவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 4 மற்றும் 2 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி கணவன் மனைவி இருவரிடையே சண்டை, சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரண்டு வயது மகனைக் கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாக பதிவுசெய்து வைத்துள்ளார் ராணி. பலத்த காயமடைந்த அக்குழந்தை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது தந்தை வடிவழகன் கவனிப்பில் உள்ளான். பெற்ற குழந்தையின்மீது கொடூரத் தாக்குதலை நடத்திய தாய் ராணி, ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

Also Read: வாட்டிய வறுமை; குழந்தைகளை விற்ற தாய்! - புரோக்கர்கள் உட்பட 7 பேர் தலைமறைவு!

வைரலான வீடியோ காட்சி

இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களான நிலையில், பெற்ற குழந்தையின் மீது தாயே கொடூரமான தாக்குதலை நடத்தும் இந்த வீடியோ இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் இந்த கொடூர செயலுக்கு தங்களது ஆதங்கமான பதிவுகளையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினோம். "அந்தப் பெண்ணின் மீது 323, 325, 355, 308, ஜே.ஜே ஆக்ட் உட்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/police-filed-a-case-against-the-mother-who-beaten-her-child

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக