Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

`தொடர் துன்புறுத்தல்..இரவு முழுவதும் டிவி; மனைவியை கழுத்தைநெரித்து கொன்ற கணவன்! - புனேயில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள மாவலில் இருக்கும் சந்திவாடி என்ற கிராமத்தில் வசிப்பவர் யோகேஷ் யாதவ். இவரின் மனைவி சங்குனா ஜாதவ்(20). யோகேஷ் மனைவிக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்ததது. அதுவும் பெண் குழந்தை பிறந்திருந்ததால் யோகேஷ் தனது மனைவி மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. லாரி டிரைவரான யோகேஷ் பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காக அடிக்கடி தனது மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்திருக்கிறாராம். இந்நிலையில் இரவில் யோகேஷ் மனைவி, கணவன் உறங்கிய பிறகு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அவர் டிவி பார்த்துக்கொண்டே அப்படியே உறங்கிவிட்டதாக தெரிகிறது.

கொலை நடந்த வீட்டை பார்வையிடும் போலீஸார்

அதிகாலையில் யோகேஷ் எழுந்து பார்த்த போதும் டிவி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் கடும் கோபமடைந்த யோகேஷ் தனது மனைவியுடன் கடுமையாக சண்டையிட்டதோடு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காலையில் வீடு திறந்து கிடப்பதை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோதுதான் சங்குனா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து யோகேஷ் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், யோகேஷ் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கடந்த 7 மாதங்களாக மனைவியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இரவு முழுவதும் டிவி ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து கோபத்தில் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். அவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/crime/husband-arrested-for-strangling-wife-to-death-while-watching-tv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக