Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

பெட்ரோல் பங்க் காதல்; 17 வயது சிறுவனைத் திருமணம் செய்த 19 வயது பெண் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது பெண் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்த பெட்ரோல் பங்குக்கு, 17 வயது சிறுவன் பெட்ரோல் போடுவதற்காக அடிக்கடி வந்துள்ளார். அப்போது, இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்

Also Read: `சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!’- கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்ஸோ நீதிமன்றம்

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்படி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த காதல் விவகாரம் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் போலீஸார் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். சிறுவனுக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், 19 பெண், சிறுவனை சந்தித்துள்ளார். அப்போது, ‘நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். வீடு திரும்பிய சிறுவன் இந்தத் தகவலை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைது

அந்தப் புகாரின் அடிப்படையில், சிறுவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ததற்காக போலீஸார் அந்தப் பெண் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.



source https://www.vikatan.com/news/crime/19-years-old-young-woman-arrested-under-pocso-act-in-pollachi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக