Ad

புதன், 29 செப்டம்பர், 2021

மாணவிக்கு ஆபாச மெசேஜ்! - கோவை பேரூர் தமிழ்க் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி இயங்கிவருகிறது. தமிழ்ப் படிப்புக்கு நீண்ட பாரம்பர்யத்தைக்கொண்டது. அங்கு முனைவர் கா. திருநாவுக்கரசு என்பவர் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார்.

திருநாவுக்கரசு

Also Read: பெண் நிருபருக்கு ஆபாச மெசேஜ்; ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீஸ்!

இவர் அந்தக் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாகப் பேசுவதாக புகார் எழுந்துவந்தது. இந்தநிலையில், திருநாவுக்கரசு மாணவி ஒருவருக்கு இரவு நேரத்தில் ஆபாசமாகப் பேசிய உரையாடல்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரவு 9:30 மணிக்கு மேல் அந்த மாணவிக்கு டெலிகிராம் ஆப்பில் மெசேஜ் செய்யத் தொடங்கும் திருநாவுக்கரசு, "வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என்கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்கப் பழகிக்கோ.

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி

தனியா இருக்க போர் அடிக்கலையா... வீட்ல அம்மா இருக்காங்க. இல்லாதப்போ சொல்றன் நீ வா. நாம ரெண்டு பேரும் தனியா இருக்கலாம்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றிவிட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு இதேபோல `நீயும் போட்டோ எடுத்து அனுப்பு’ என்று கூறுகிறார். இது குறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

ஆபாச உரையாடல்

இதையடுத்து, திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகதிடமும், உயர்கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்திவருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆபாச உரையாடல்

இந்தநிலையில், திருநாவுக்கரசுமீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/perur-tamil-college-professor-suspend-in-sexual-abuse-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக