Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

மதுரை: தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வாளர்களை நியமனம் செய்யும் முயற்சி நிறுத்தம்!

தெற்கு ரயில்வேயில் பணிக்கு தேர்வானவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது, வடகிழக்கு ரயில்வேயை சேர்ந்த 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சு.வெங்கடேசன்

இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் நேரடியாக போராட்டத்தில் இறங்குவோம் என்று கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் அவருடைய கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டு கோராக்பூரில் பெற்ற தேர்வாளவர் பட்டியலை திருப்பி அனுப்பியுள்ளது.

தெற்கு ரயில்வே

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சு.வெங்கடேசனிடம் பேசினேன், "எனது கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே, கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை கடந்த 28-ம் தேதி திருப்பி அனுப்பியுள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும், என் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: ரயில்வே பணிகளில் மீண்டும் வடமாநில ஆதிக்கமா? நடந்ததும் நடப்பதும்

அதேநேரம் தெற்கு ரயில்வேயில் உள்ள 51 காலி பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள சென்னை ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

சு.வெங்கடேசன்

ஏற்கனவே ரயில்வே தேர்வு வாரியத்தின் சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களை 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது.

எனவே, சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த 51 காலிப்பணியிடங்களில் நிரப்பிட வேண்டும். தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சர் இதில் தலையிட்டு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/appointment-regulated-in-southern-railway-after-heavy-opposition-from-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக