Ad

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

`அடிவாங்கியபோது உதவிக்கு வராத மனைவி'- கோபத்தில் கணவன் செய்த கொடூரம்!

மும்பை விராரில் வசிப்பவர் ஜெகதீஷ். இவரது மனைவி சுஷ்மிதா. ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வரும் ஜெகதீஷ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் மனைவி இல்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரரின் துணி ஜெகதீஷ் வீட்டிற்கு அருகில் உலர வைக்கப்பட்டு இருந்தது. இதனால் கோபமான ஜெகதீஷ் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து, ``ஏன் எனது வீட்டிற்கு அருகில் துணியை காயவைத்திருக்கிறாய்!" என்று கேட்டுத் தகராறு செய்தார். இந்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் ஜெகதீஷை அடித்துவிட்டார். ஜெகதீஷ் உதவிக்கு தனது மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வரவில்லை. அவரது மனைவி, தனது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார். இதனால் கோபத்தில் ஜெகதீஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சண்டையிட்டதோடு அவரது தலையை பிடித்து சுவற்றில் முட்ட வைத்ததோடு வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து மனைவியை பல முறை குத்தினார்.

சித்தரிப்பு படம்

Also Read: குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

இதனை தடுக்க வந்த மாமியாரையும் தாக்கினார். ஜெகதீஷ் மனைவி தனது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. இதனை ஜெகதீஷின் மூன்று குழந்தைகள் நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் ஜெகதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுஷ்மிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை தேடி வருகின்றனர். ஜெகதீஷ் மீது கொலை, கொலை முயற்சி என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/police-are-searching-for-the-husband-who-killed-his-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக