Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

கடுப்பான கமல், மாறிய எவிக்‌ஷன், தள்ளிப்போன அஸீம் என்ட்ரி... பிக் பாஸ் அப்டேட்ஸ்!

50 நாட்களைக் கடந்துவிட்ட பிக்பாஸில் திடீர் திருப்பங்கள் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

ஒளிபரப்பு தொடங்கிய முதல் வாரம் மட்டும் எவிக்‌ஷன் இல்லை.மறுவாரத்திலிருந்து எவிக்‌ஷன் ப்ராசஸ் தொடங்கி ரேகா, சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் வெளியெறினர். இன்னொருபுறம் புதிய போட்டியாளர்களாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனாவும் அவரைத் தொடர்ந்து மிர்ச்சி சுச்சியும் ஷோவுக்குள் வந்தார்கள். இவர்களில் மிர்ச்சி சுச்சி கடந்த வார எவிக்‌ஷனில் ஷோவிலிருந்து வெளியேறினார்.

இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் ஆரி, பாலா, சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம், சம்யுக்தா ஆகியோர் இருந்தனர். இவர்களில் ஆரி, பாலா ஆகியோருக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஓட்டு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக சம்யுக்தா வெளியேற விரும்புவதாகவும் அதனால் அவர்தான் எலிமினேட் ஆவார் என்றும் ஒரு தகவல் நேற்று முதல் பரவியது.

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நேற்று நடந்தது. ஷூட்டிங்கில் கலந்து கொள்ள செட்டுக்கு வந்தது முதலே கமல் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்கிறார்கள். புயல், மழைக் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் சேனலுக்கும் கமலுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதுவே அதிருப்திக்கான காரணம் என்றும் சொல்கிறார்கள்.

சம்யுக்தா

அதேபோல் முதலில் நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியேறப்போவதாகச் சொன்னார்கள். ஏனெனில் வாக்குகள் அடிப்படையில் சம்யுக்தாவைவிட ரமேஷ் 4 லட்சம் வாக்குகள் குறைவாகவே வாங்கியிருந்தாராம். அவர்தான் வெளியேற வேண்டியவராம்.

ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் சம்யுக்தா பேசிய ''வளர்ப்பு சரியில்லை'' போன்ற சர்ச்சையான பேச்சுக்களால் அதிருப்தியடைந்த கமலின் அழுத்தம் காரணமாக சம்யுக்தா வெளியேற்றப்பட்டாராம்.

சம்யுக்தாவின் எவிக்‌ஷன் எபிசோடு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.

இன்னொருபுறம் அஸீமின் என்ட்ரியும் தள்ளிப்போகிறதாம்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/samyuktha-evicted-from-bigg-boss-tamil-season-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக