Ad

திங்கள், 30 நவம்பர், 2020

இடஒதுக்கீடு போராட்டம்: பெருங்களத்தூரில் பா.ம.க-வினர் தடுத்து நிறுத்தம்; போக்குவரத்து பாதிப்பு #NowAtVikatan

வலுபெற்றது புயல் சின்னம்!

மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் சின்னம் தற்போது வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு போராட்டம்: பா.ம.க-வினர் தடுத்து நிறுத்தம்!

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பா.ம.க-வினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாரை கண்டித்து பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பா.ம.க வினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னையின் பல பகுதிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/general-news/01-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக