Ad

சனி, 28 நவம்பர், 2020

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை! #NowAtVikatan

ரஜினி நாளை ஆலோசனை!

ரஜினி

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினி நாளை ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. அரசியல் பிரவேசம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை!

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையி நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் என முக்கியப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பனையூர் அலுவலகத்தில் இயக்கப் பொறுப்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினி நாளை ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'தைப் பொங்கலுக்குப் பிறகு தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!



source https://www.vikatan.com/news/general-news/29-11-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக